Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்.... இது பொன்னையாவின் நேரம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

மானிப்பாய்ச் சாத்திரியிடம் நேரம் கணித்து உள்நுழைந்திருக்கின்றேன். அது நல்ல நேரமா, கெட்ட நேரமா என்பதை உங்களின் வரவேற்பில் தான் இருக்குது.

பொன்னையா யார் என்று நினைப்பீர்கள்? மானிப்பாய்ப் பக்கம் வந்து கேட்டுப் பார்த்தீர்கள் என்றால்...... ஊரே கூக்காட்டும். அப்படிப் பிரபல்யம் :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பொன்னையா!வாரும் எப்பிடி ஊரிலை பெடிச்சியள் எல்லாரும் சுகமோ?

வந்தவுடனை எல்லாரோடையும் கண்டபடி வாயை குடுக்காதையும்

ஏனெண்டால் கொஞ்சப்பேர் வில்லங்கமான பிரச்சனையிலை

இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கினம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

மானிப்பாய்ச் சாத்திரியிடம் நேரம் கணித்து உள்நுழைந்திருக்கின்றேன். அது நல்ல நேரமா, கெட்ட நேரமா என்பதை உங்களின் வரவேற்பில் தான் இருக்குது.

பொன்னையா யார் என்று நினைப்பீர்கள்? மானிப்பாய்ப் பக்கம் வந்து கேட்டுப் பார்த்தீர்கள் என்றால்...... ஊரே கூக்காட்டும். அப்படிப் பிரபல்யம் :lol::D

வணக்கம் வாங்கோ வாங்கோ .

அது யாருங்க மானிப்பாய் சாத்திரி . யாழ்களத்தில் எழுதும் சாத்திரியா?

இந்த மானிப்பாய் ஊர் எல்லாம் எமக்கு தெரியாதுங்க.

வணக்கம் பொன்னையாண்ணை,

மானிப்பாய் சாத்திரியிட்டை நேரத்தை கணிச்சாலும் (சாத்திரி மப்பில எதையாவதை சும்மா உளறியிருக்கும்), காண்டம் வாசிக்கிறவையிட்டையும் ஒருக்கா பாருங்கோ,

முக்கியமா யாழ்களத்துக்குள்ள நுளையிறதால ஏதும் பாதிப்புக்கள் இருக்குதோ எண்டதை உறுதிப்படுத்துங்கோ.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள்

அது யாருங்க மானிப்பாய் சாத்திரி . யாழ்களத்தில் எழுதும் சாத்திரியா?

யாழ்களத்தில் எழுதுகின்றவரும், மானிப்பாயா? எனக்குச் சாத்திரம் சொன்னவர், ஒரு 75 வயது வரும். முதுகு கூனல், பல்லு முன்பக்கம் எப்போதும் சிரிக்கின்ற மாதிரி நீட்டு. அவர் தானோ இவர்??

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பொன்னையா அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களச் சாத்திரியும் மானிப்பாய் தான்.

வணக்கம் பொன்னையா.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

வணக்கம், வாங்கோ பொன்னையா,

நீங்கள் மானிப்பாயிலுள்ள பொன்னுத்துரை சாத்திரியாரிட்டையே சாத்திரம் கேட்டனீங்கள். அவர் இப்ப படு பிஸி என்று கேள்விப்பட்டன். எப்படி உங்களுக்கு மட்டும் சாத்திரம் பார்த்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பொன்னையா புத்தனின்ட சரணங்கள்,அது சரி ஊரில எந்த பொன்னையா எத்தனையோ பொன்னையாமார்கள் இருக்கீனம் அது தான் குழப்பமா இருக்கு :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரினதும் வரவேற்புக்கும் மிக்க நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

மானிப்பாய்ச் சாத்திரியிடம் நேரம் கணித்து உள்நுழைந்திருக்கின்றேன். அது நல்ல நேரமா, கெட்ட நேரமா என்பதை உங்களின் வரவேற்பில் தான் இருக்குது.

பொன்னையா யார் என்று நினைப்பீர்கள்? மானிப்பாய்ப் பக்கம் வந்து கேட்டுப் பார்த்தீர்கள் என்றால்...... ஊரே கூக்காட்டும். அப்படிப் பிரபல்யம் :lol::wub:

வணக்கம் வாரங்கொ பொன்னையாண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்புக்கு நன்றி சாந்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ பொன்னையா அண்ணை உங்கள் வரவு நல்வரவாகட்டும் :)

வரேக்கை மருதடியில போய் பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைச்சிட்டு தானே வந்தனீங்கள்

Edited by இன்னிசை

பொன்னி தாத்தா வெறி சாறி பொன்னையா மாமா உங்களின் வரவு நல்வரவாகட்டும் :D அது சரி ஏன் உங்களின்ட பெயரை கேட்டா ஊரே "கூ" காட்டும் எனக்கு அது தான் டவுட்டா இருக்கு :) ஒருக்கா விளங்கபடுத்தி விடுங்கோ :) ...அது சரி மானிப்பாய் என்று ஒரு ஊரு இருக்கே நான் இன்றைக்கு தான் கேள்விபடுறேன் மாமா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

வணக்கம் வாங்க

என்னய்யா இது பொன்னையா நேரம்? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்புக்கு நன்றி சாந்தி

பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்லும் மர்மம் என்னவோ? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்ற ஆதிவாசி, இன்னிசை, யமுனாவிற்கு மிக்க நன்றிகள்

பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்லும் மர்மம் என்னவோ? :(

சோழியன் குடுமி சும்மா ஆடாது. ஆனால் இதில் புரிவதற்கு எதுவுமில்லை. முதலில் நிறையப் பேர்கள் வரவேற்றார்கள் நன்றி சொன்னேன். பிற்பாடு இவர் வரவேற்றார். அதனால் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னேன். அவ்வளவு தான்.

உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடையும் எம்மை... மகிழவைப்பீர் என நம்புகிறோம்

வருக வருக

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி மானிப்பாய் என்று ஒரு ஊரு இருக்கே நான் இன்றைக்கு தான் கேள்விபடுறேன் மாமா!! :)

அப்ப நான் வரட்டா!!

ஐயோ ஐயோ ஐயோ

மானிப்பாய் என்ற ஊர் கேள்விப்படடேல்லயாமெண்டு யமுனா சொன்னா ஒஸ்ரேலியாவே அழப்போகுதே.

எங்கடை ஊரிலை ஒருவர் சவூதிக்குப்போய் வந்திருந்தவர் 1987ம் ஆண்டு. கொவ்வைக்கொடியைப் பாத்து எங்கடை ஆச்சியிட்டை கேட்டவர் 'எண ஆச்சி உதென்ன கொடியணை" ஆச்சி நல்லதொரு தேவாரம் பாடிவிட்டவா. அதுதான் ஞாபகம் வருது யமுனான்ரை கேள்வியை பாக்க.

எதுக்கும் எங்கடை யாழ்கள உறுப்பினர் சாத்திரியண்ணையைக் கூப்பிட்டு மானிப்பாயின் புகழை ஓங்கச் செய்ய வேணும். :lol:

நேரம் பொன்னானது தான் ஐயா!

"நல்ல நேரம் கெட்ட நேரம் என்பதெல்லாம் நம் முன்னோர் வந்த மூடக்கருத்துக்களை தவிர வேறொன்றுமில்லை" நாம் பிரயோசனப்படுத்தும் ஒவ்வொரு நிமிடமும் பொன்னானதே. என்பது எனது கருத்து.Time is Gold

பொன் + ஐயா என்பது ஒரு அழகிய தமிழ் பெயர்.

எனவே ஐயா!

உங்கள் பொன்னான நேரத்தை (மாணிப்பாய் சென்று வீணடிக்காது) களத்திற்கு இறங்குங்கள்.

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி அக்கராயன்

வரவேற்புக் நன்றி. நல்ல நேரம், கூடாத நேரம் என்பது மனத் திருப்திக்காகச் சொல்வது. அதற்காக முன்னோர்களை மூடர்கள் எனக் குறை சொல்ல வேண்டாமே. நாம் இப்போது செய்கின்ற சரியெனப்படுகின்றபடி செய்கின்ற செயலை நாளைய சமுதாயமும் அவ்வாறு சொல்லமாட்டாது என்பது என்ன நிச்சயம்.

என்னுமொரு விடயம். எனக்குத் தமிழில் அழகாக இயலுமானவரை கதைக்கின்றது தான் பிடிக்கும். எல்லா விடயத்திலும் அது முடியாது என்பது உண்மை தான். ஆனால் தேவையில்லாமல் ஆங்கில, பிறமொழி இடைச்செருகல்கள் எதற்காக??

ஃஃநல்ல நேரம்இ கூடாத நேரம் என்பது மனத் திருப்திக்காகச் சொல்வது. அதற்காக முன்னோர்களை மூடர்கள் எனக் குறை சொல்ல வேண்டாமே.ஃஃ

நான் முன்னோர்களை மூடர்கள் என்று கூறவில்லை அண்ணா.

முன்னோர் (வழி) வந்த மூடக்கருத்துக்கள் என்றே குறிப்பிட்டுள்ளேன்.

சேர் ஐசக் நியுட்டன் சூரியனில் ஏழு நிற ஒளிக்கற்றைகள் இருக்கின்றன என்று கண்டுப்பிடித்து கூறுவதற்கு முன்பேஇ சூரிய பகவானுக்கு எழு நிறங்கள் என்றும் ஏழு நிறத்தில் ஏழு குதிரைகளை என்றும் குறிப்பிட்ட நம் மூதாதையர்களை எவ்வாறு அப்படி கூறுவது?

ஆனால் வழிவழியாக தொடரும் சோதிடம் போன்ற மூடக்கருத்துக்களை குறிப்பிடாமலும் முடியாது. இன்னமும் எம்மவர்கள் சிலரிடம் புதைந்துக் கிடக்கும் மூடக்கருத்துக்கள் களைந்து எறியப்படவேண்டியதே.

தவிர வளர்க்கப்பட வேண்டியது அல்ல.

//என்னுமொரு விடயம். எனக்குத் தமிழில் அழகாக இயலுமானவரை கதைக்கின்றது தான் பிடிக்கும்.// இந்த கூற்று வரவேற்கத்தக்க ஒன்றாகும். உங்கள் தமிழ் பற்றுக்கு வாழ்த்துக்கள்.

ஐயோ ஐயோ ஐயோ

மானிப்பாய் என்ற ஊர் கேள்விப்படடேல்லயாமெண்டு யமுனா சொன்னா ஒஸ்ரேலியாவே அழப்போகுதே.

எங்கடை ஊரிலை ஒருவர் சவூதிக்குப்போய் வந்திருந்தவர் 1987ம் ஆண்டு. கொவ்வைக்கொடியைப் பாத்து எங்கடை ஆச்சியிட்டை கேட்டவர் 'எண ஆச்சி உதென்ன கொடியணை" ஆச்சி நல்லதொரு தேவாரம் பாடிவிட்டவா. அதுதான் ஞாபகம் வருது யமுனான்ரை கேள்வியை பாக்க.

எதுக்கும் எங்கடை யாழ்கள உறுப்பினர் சாத்திரியண்ணையைக் கூப்பிட்டு மானிப்பாயின் புகழை ஓங்கச் செய்ய வேணும். :)

என்ன சாந்தி அக்கா மறுபடி ஜயோ...ஜயோ என்கிறீங்க பயமா இருக்கு :( ....அட சாந்தி அக்காவிற்கு மாட்டர் தெரிந்து போச்சோ அது சரி நீங்களும் அந்த ஏரியாவோ.. :) .

தங்களின் ஆச்சி பாடின தேவாரத்தை எங்களிற்காக ஒருக்கா பாடி காட்டுங்கோவேன் சாந்தி அக்கா :lol: ...பட் அக்சுவலா நான் வந்து வெஸ்மீட் (அவுஸ்ரெலியா) சில்ரன்ஸ் கொஸ்பிட்டலில 267 வோர்ட்டில அல்லோ பிறந்தனான் அடுத்த வோர்ட்டில நம்ம சுண்டல் அண்ணா பிறந்தவர் என்ன சுண்டல் அண்ணா!! :lol:

சாத்திரி அங்கிள் வந்து இங்கிலன்ட் கொஸ்பிட்டலில் அல்லவா பிறந்தவர் என்ன சாத்திரி அங்கிள் அவருக்கு எப்படி மானிப்பாயை பற்றி எல்லாம் தெரியும் சாந்தி அக்கா... :lol:

சுதுமலை அம்மன்,மானிப்பாய் அந்தோனியர் எல்லாரும் ஜம்மு பேபியை மன்னிப்பீனம் தானே !! :lol:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.