Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியை பிரிந்தார் யுவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியை பிரிந்தார் யுவன்

.

Monday, 11 February, 2008 12:37 PM

.

சென்னை,பிப்.11: பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், அவரது மனைவி சந்திரன் சுஜையாவும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து பெற்றனர்.

இசையமைப்பாளர் இரண்டாவது மகன் யுவன் ஷங்கர் ராஜா (வயது28). "பூவெல்லாம் கேட்டுப் பார்' படம் மூலம் தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், குறுகிய காலத்திலேயே பிரபலமான இசைய மைப்பாளராக உருவெடுத்தார்.

.

கடந்த 2002ம் ஆண்டு லண்ட னில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் லண்டன் வாழ் தமிழரான சந்திரன் சுஜையா என்பவரை யுவன் ஷங்கர் ராஜா சந்தித்தார். இப்பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

கடந்த 3.9.2003 அன்று லண்டனில் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். இவ்விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து கடந்த 21.3.2005 அன்று சென்னை ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் இருவருக்கும் முறைப் படி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை எதுவும் கிடையாது.

இரண்டு வருட காலம் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ந் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை குடும்ப நல முதன்மை நீதிபதி தேவதாஸ் முன்பு நடைபெற்று வந்தது. தம்பதிகள் இருவரும் சேர்ந்து வாழ சந்தர்ப்பம் தரும் வகையில் 6 மாத காலத்துக்கு வழக்கு விசாரணையை நீதிபதி தேவதாஸ் ஒத்திவைத்தார்.

இந்த காலகெடுவானது கடந்த வெள்ளிக்கிழமையோடு முடிவ டைந்தது. இதைத்தொடர்ந்து இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. யுவன் ஷங்கர் ராஜாவும், அவரது மனைவி சந்திரன் சுஜையாவும் தத்தமது வழக்கறிஞர்களுடன் இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் கேட்டுக் கொண்டதற் கிணங்க, நீதிபதி தேவதாஸ் இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.

malaisudar.com

காசு, புகழ் இருக்கிது இன்னொண்ட பாத்துக்கொள்ள வேண்டியதுதான். இல்லாட்டி அப்பர்தான் மவனுக்கு ஏதாவது செட்பண்ணி வச்சு இருக்கிறாரோ.. யார் அறிவார்

சிலது குழந்தை இல்லாதது தான் பிரிவுக்கு காரணமோ..

  • கருத்துக்கள உறவுகள்

காசு, புகழ் இருக்கிது இன்னொண்ட பாத்துக்கொள்ள வேண்டியதுதான். இல்லாட்டி அப்பர்தான் மவனுக்கு ஏதாவது செட்பண்ணி வச்சு இருக்கிறாரோ.. யார் அறிவார்

சிலது குழந்தை இல்லாதது தான் பிரிவுக்கு காரணமோ..

திரையுலகப் பிரபல்யங்கள் எல்லாம்.. திருமணமான கையோடேயே விவாகரத்தும் வாங்கி பிரபல்யம் ஆகிடுறாங்களே.. இதன் ரகசியம் தான் என்ன..! இப்ப இதுதான் கோடம்பாக்கத்து ரெண்ட் போல..! :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

விவாகரத்துக்கு அப்ளை பண்ணிவிட்டுத்தான் திருமணம் செய்கிறார்கள்போல கிடக்கு!!! :wub::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன களம் களையைக்காணம்? இன்ந்த தலைப்பு ஒரு எட்டுப்பக்கம் தாண்டவேண்டாமா?

மனிசி இலங்கைப் பெட்டையாம் உண்மையே?

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில பிறந்து வளர்ந்த பிள்ளையளோட இந்தியாவுல-தமிழ்நாட்டில அல்லது இலங்கையில பிறந்து வளர்ந்த பெடியள் குடும்பம் நடத்துறது கொஞ்சம் கஸ்ரம் பாருங்கோ.

இப்பிரிவிற்கு முக்கிய காரணம் சிம்பு அப்பப்போ தாய்லாந்துக்கு யுவனை அழைத்துச் சென்று எப்படியெல்லாம் மஜா பண்ணலாம் என்று அனுபவிக்க வைத்தாராம். அதனால் யுவனுக்கு சுஜா புளித்துப் போய் விட்டதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன களம் களையைக்காணம்? இன்ந்த தலைப்பு ஒரு எட்டுப்பக்கம் தாண்டவேண்டாமா?

மனிசி இலங்கைப் பெட்டையாம் உண்மையே?

இலங்கை வலிகாமம் வடக்கு. சன்ரைஸ் வானொலி கானக்குயில் போட்டியில் வெற்றி பெற்றவர்.

இப்பிரிவிற்கு முக்கிய காரணம் சிம்பு அப்பப்போ தாய்லாந்துக்கு யுவனை அழைத்துச் சென்று எப்படியெல்லாம் மஜா பண்ணலாம் என்று அனுபவிக்க வைத்தாராம். அதனால் யுவனுக்கு சுஜா புளித்துப் போய் விட்டதாம்.

மஜா பண்ணுறது எண்டால் என்ன? :lol::o:(

பிரியிறது பிறகு சேருறது உது எல்லாம் அரசியலில சகஜமப்பா :o ....சொல்லி போட்டேன் அவையின்ட குடும்ப சண்டைக்குள்ள யாழ்கள மெம்பர்ஸ் போக வேண்டாம் கடைசியில நீங்க தான் முட்டாளாக வேண்டி வரும் உது என்ட அட்வைஸ் வசபண்ணா நான் சொல்லுறது சரி தானே.. :(

அப்ப நான் வரட்டா!!

மஜா பண்ணுறது எண்டால் என்ன? :lol::o:lol:

குருவே அது எல்லாம் பெரியவா சமாச்சாரம் நமக்கு வேண்டாம் குருவே நாங்க நல்ல பிள்ளைகள் அல்லோ... :huh:

அப்ப நான் வரட்டா!!

Sri lankan girls only fancy guys from india!

  • கருத்துக்கள உறவுகள்

Sri lankan girls only fancy guys from india!

ஏன் லண்டனில பிறந்த குமரிகளுக்கு புதிசா ஏதேனும் முளைக்கிறதோ..???!

வந்திட்டாங்கையா.. பியூட்டு பார்ல கதியயென்று கிடக்கிற லண்டன் குமரிகளைப் பற்றி அளந்துவிட...! அவைக்கு ஆண்களைக் கலியாணம் கட்டிக் கொடுக்காம... பியூட்டி பாரைக் கட்டிக் கொடுங்க...! அப்படியே ஒரு பப்பும்.. ஒரு கிளப்பும் பக்கத்தில வைச்சிடுங்க..! அதுகள் அதிலையே வேலையும் செய்து அதிலையே குடிச்சிட்டு அதிலையே சோடிச்சிட்டு வாழுங்கள்..! ஜந்துக் கூட்டம்.. போல..!

எனக்குத் தெரிய எத்தனையோ அண்ணாமார் வெள்ளைக்காரிகளைக் கட்டிட்டு சந்தோசமா குடும்பம் நடத்தினம் தானே..! அதிலும் சில வெள்ளைப் பிள்ளையள் நம்ம கலாசாரத்த மதிச்சு வாழக் கூட விரும்பி வாழுதுகள். அதுகளும் மனிசர் தானே..! :o:lol:

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான் ஒரு கலாச்சார மாற்றத்தினால் விளையும் பாதிப்பின் ஒரு சான்று.

சொகுசும் வேணும் கலாச்சாரமும் பறிபோகக் கூடாது, அதுவும் கலாச்சாரத்தின் கண்களான பெண்கள் பறிபோகக்கூடாது என்று அக்கரைக்குப் போய் நின்று கொண்டு இக்கரையை பார்த்து கொட்டாவிவிடுவதால் பயனில்லை!

பிடிக்கவில்லையா வந்துவிடுங்கள் இந்தப்பக்கம்! முடியவில்லையா கலந்துவிடுங்கள் இரண்டற!

ஈருலோக (Alloy) வாழ்க்கை ஒரு வாழ்கையே அல்ல அது யாகம் அல்லது தியாகம்!

இந்தத் தியாகம் அல்லது யாகம் எதற்காக அல்லது யாருக்காக?

வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ கிடைக்காதவனுக்குத்தான் தெரியும் அதன் அருமை!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் ஒரு கலாச்சார மாற்றத்தினால் விளையும் பாதிப்பின் ஒரு சான்று.

சொகுசும் வேணும் கலாச்சாரமும் பறிபோகக் கூடாது, அதுவும் கலாச்சாரத்தின் கண்களான பெண்கள் பறிபோகக்கூடாது என்று அக்கரைக்குப் போய் நின்று கொண்டு இக்கரையை பார்த்து கொட்டாவிவிடுவதால் பயனில்லை!

பிடிக்கவில்லையா வந்துவிடுங்கள் இந்தப்பக்கம்! முடியவில்லையா கலந்துவிடுங்கள் இரண்டற!

ஈருலோக (Alloy) வாழ்க்கை ஒரு வாழ்கையே அல்ல அது யாகம் அல்லது தியாகம்!

இந்தத் தியாகம் அல்லது யாகம் எதற்காக அல்லது யாருக்காக?

வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ கிடைக்காதவனுக்குத்தான் தெரியும் அதன் அருமை!

நான் கலாசாரம் பற்றிப் பேசவில்லை மேற்குலகம் கட்டுண்டு கிடக்கும் மாயைப் பற்றிப் பேசுறேன்..! அதே மாயையோடு கொழும்பிலும் வாழ்கிறார்கள்.. அதையும் கண்டிருக்கிறேன்..!

ஆனால் மேற்கில் கூட மாயை இனங்கண்டு விலகி நடக்கிற மக்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த மண்ணுக்குரிய மக்களிலேயே..! ஆனால் காணததைக் கண்ட...புலம்பெயர்....???!

மேற்கில் விழுந்தடிச்சு இரண்டறக் கலக்க ஒன்றும் அற்புதமா இல்லையே..! எல்லாம் எல்லா இடமும் உள்ளதுதான் அங்கும் இருக்கு..! :D:lol:

யுவனுக்குப் பெண்ணின் போக்குப் பிடிச்சிருக்காது விட்டிருப்பார். இல்ல பெண்ணுக்கு யுவனின் போக்குப் பிடிச்சிருக்காது விட்டிருப்பாள். அது அவை இருவருக்குள்ள உள்ள புரிந்துணர்வுக் குறைபாட்டின் விளைவு.

அதற்கும் லண்டனில பிறந்திட்டா.. ஏதோ மனிசரில்ல.. அவை எல்லாம் அற்புதமான பிறவிகள்.. இல்ல அதிச மனிதர்கள் என்றாப் போல அளந்து கட்டிறதை வரும் காலத்தில கைவிடுங்க என்றதை சுட்டிக்காட்டத்தான் அதை எழுதினேன்..!

பிறப்பு எப்படி இருப்பினும் வாழும் சூழல் எப்படி இருப்பினும் அன்பும் மனித நேயமும் புரிந்துணர்வும்.. ஆதி தொண்டு இன்று வரை ஒன்றுதான்..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.