Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னைச் சுற்றிப் பெண்கள்

Featured Replies

என்னைச் சுற்றிப் பெண்கள்

அம்மா

உயிர் உலுக்கி

உலகுக்குள் கொண்டு வந்தாள்..

ஊனை உருக்கிப்பருகத்தந்தாள்..

என்னைச் செதுக்கித்

தமிழனாய் செய்தாள்!..

தங்கை

எனக்காக அழுவாள்..

என்னையும் அழவைப்பாள்..

என் எச்சம் அருந்தியவள்..

ஆருயிர் நண்பியாயும்

அழகிய உறவாயும்

வந்த...என்

தாய்வீட்டுக் கடமை.

நண்பி

அவசரமாய் வரும்

ஆறுதல் வார்த்தைக்கு

சொந்தக்காரி..என் வெற்றிக்கு

குதூகலிக்கும் முதல் நலன்விரும்பி..

கல்யாணமான பின்தான் காணாமல்

போய்விட்டாள்!!

காதலி

வற்றாத தமிழ்

வார்த்தைககடலில்

குதித்தாள்;..கரைந்து போகாத

என் காதலை

கவிதையாய் கண்டெடுத்தாள்..

தான் மட்டும் படித்து

பெரும் சுயநலவாதியானாள்!!

மச்சாள்

அனுமதி இல்லாமல்

என்அறைக்குள் நுழையும்

அழகிய திமிர்..சின்ன

சூறாவளி..அப்பப்போது

என் சட்டையையும்

அணிந்துகொள்ளும்!.

மனைவி

எழுத இதழ் தந்தாள்..

கோர்க்க விரல் தந்தாள்..

மூச்சுக்காற்றில் பாட்டுத் தந்தாள்

இளைப்பாற இடம் தந்தாள்..

இவள் என்னைக் குழந்தையாயும் தந்து

தந்தவர்கள் பட்டியலில்..தாய்க்குப்

பின் தரமாய் நிற்கிறாள்!!

அத்தை

உபசரிப்பில் கூட

உபத்திரபவம் தரக்கூடாதென்று

நினைத்து..மெதுவாக

பேசும் இன்னொரு அம்மா!..

சித்தி

தொலைதூரத்தில்

வாழ்ந்து..சுகம்

விசாரித்துக்கொண்டிருந்தாலு

  • கருத்துக்கள உறவுகள்

மகள்

பிறந்ததும்

பிஞ்சுப்பாதங்களால்

முகத்தில் மிதித்தாள்

இதத்தில் செத்தேன்..

வளர்கையில்

பிஞ்சு விரல்களால்

கன்னம் கிழித்தாள்

சுகத்தில் செத்தேன்..

பருவத்தில் காதல் மோகத்தில்

இதயத்தில் மிதித்தாள்..

நிஜமாய் செத்தேன்!!

நெஞ்சை தொடும் வரிகள்.நன்றி விகட கவி உங்கள் வரிகளுக்கு.

என்னைச் சுற்றிப் பெண்கள்

அம்மா

உயிர் உலுக்கி

உலகுக்குள் கொண்டு வந்தாள்..

ஊனை உருக்கிப்பருகத்தந்தாள்..

என்னைச் செதுக்கித்

தமிழனாய் செய்தாள்!..

தங்கை

எனக்காக அழுவாள்..

என்னையும் அழவைப்பாள்..

என் எச்சம் அருந்தியவள்..

ஆருயிர் நண்பியாயும்

அழகிய உறவாயும்

வந்த...என்

தாய்வீட்டுக் கடமை.

நண்பி

அவசரமாய் வரும்

ஆறுதல் வார்த்தைக்கு

சொந்தக்காரி..என் வெற்றிக்கு

குதூகலிக்கும் முதல் நலன்விரும்பி..

கல்யாணமான பின்தான் காணாமல்

போய்விட்டாள்!!

காதலி

வற்றாத தமிழ்

வார்த்தைககடலில்

குதித்தாள்;..கரைந்து போகாத

என் காதலை

கவிதையாய் கண்டெடுத்தாள்..

தான் மட்டும் படித்து

பெரும் சுயநலவாதியானாள்!!

மச்சாள்

அனுமதி இல்லாமல்

என்அறைக்குள் நுழையும்

அழகிய திமிர்..சின்ன

சூறாவளி..அப்பப்போது

என் சட்டையையும்

அணிந்துகொள்ளும்!.

மனைவி

எழுத இதழ் தந்தாள்..

கோர்க்க விரல் தந்தாள்..

மூச்சுக்காற்றில் பாட்டுத் தந்தாள்

இளைப்பாற இடம் தந்தாள்..

இவள் என்னைக் குழந்தையாயும் தந்து

தந்தவர்கள் பட்டியலில்..தாய்க்குப்

பின் தரமாய் நிற்கிறாள்!!

அத்தை

உபசரிப்பில் கூட

உபத்திரபவம் தரக்கூடாதென்று

நினைத்து..மெதுவாக

பேசும் இன்னொரு அம்மா!..

சித்தி

தொலைதூரத்தில்

வாழ்ந்து..சுகம்

விசாரித்துக்கொண்டிருந்தாலு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பைப் பார்த்திட்டு.. அசந்து போனன். " என்னைச் சுற்றி வைப்பாட்டி எனக்கெதற்கு ஒரு பொண்டாட்டி" என்ற பாட்டத்தான் எழுதிட்டாங்கையோ என்று பதறிப் போனன். நல்ல காலம்.. அப்படி ஒன்றும் நடக்கல்ல..! :lol:

  • தொடங்கியவர்

நன்றி...

இந்தத் தலைப்பைப் பார்த்திட்டு.. அசந்து போனன். " என்னைச் சுற்றி வைப்பாட்டி எனக்கெதற்கு ஒரு பொண்டாட்டி" என்ற பாட்டத்தான் எழுதிட்டாங்கையோ என்று பதறிப் போனன். நல்ல காலம்.. அப்படி ஒன்றும் நடக்கல்ல..!

அதுதான் நானும் பார்த்தேன் என்ன இதுக்கு நெடுக்கண்ணா கருத்து எழுதியிருக்கார்னு...

நாங்களாவது மாறுறாவது :D

  • தொடங்கியவர்

நன்றி...

இந்தத் தலைப்பைப் பார்த்திட்டு.. அசந்து போனன். " என்னைச் சுற்றி வைப்பாட்டி எனக்கெதற்கு ஒரு பொண்டாட்டி" என்ற பாட்டத்தான் எழுதிட்டாங்கையோ என்று பதறிப் போனன். நல்ல காலம்.. அப்படி ஒன்றும் நடக்கல்ல..!

அதுதான் நானும் பார்த்தேன் என்ன இதுக்கு நெடுக்கண்ணா கருத்து எழுதியிருக்கார்னு...

நாங்களாவது மாறுறாவது :D

  • தொடங்கியவர்

மாப்பு நீங்க நம்ம ஜம்முவை சொல்லலையே...

ஆனாலும் பேரில திருவிளையாடல் செய்யிறதில நீங்கதான் முதல்வர் :D

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைச் சுற்றிய பெண்களைப்பத்தி அழகாய் சொல்லியிருக்கிறிங்க .

கவிதை அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பைப் பார்த்திட்டு.. அசந்து போனன். " என்னைச் சுற்றி வைப்பாட்டி எனக்கெதற்கு ஒரு பொண்டாட்டி" என்ற பாட்டத்தான் எழுதிட்டாங்கையோ என்று பதறிப் போனன். நல்ல காலம்.. அப்படி ஒன்றும் நடக்கல்ல..! :D

பெண்கள் எண்டாலே பதறுவது ஏனோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை சுற்றியுள்ள பெண்களை பற்றிய கவிதை அழகு.

வாழ்த்துக்கள் விகடகவி :D

கவியின் கவிதை அழகு :D

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வரிதான் எழுதினீக

ஆனா நானுறு வரியாட்டம் எழுதினீக.

அட ஆத்தாடி இந்த கூத்தை கேட்டீகளா

உங்க மொட்டை மண்டையிலை பேன்பாத்த

சோதி "அக்காளை" விட்டுப்புட்டிகளே

நாலு வரி அவாளபற்றியும் எழுதினா

என்ன குறைஞ்சா போயிடுவீக?

ஜஸ்ட்டு மிஸ்ஸிங்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எண்டாலே பதறுவது ஏனோ

யாழ்ல நீங்க இருக்கீங்க.. பிள்ள வெண்ணிலா இருக்குது.. பிள்ள இன்னிசை இருக்குது.. பிள்ள கனிஸ்டா இருக்குது.. பிள்ள கவரிமான் இருக்குது.. பிள்ள அனிதா இருக்குது.. இருக்கவே இருக்குது.. தூயா பொம்மி.. இவங்களை எல்லாம் கண்டு பதறுறனா.. இல்லையே..! அவுட் சைட்டில.. மோசமான பெண்களும் இருக்காங்க இல்லையா.. மோசமான ஆண்கள் இருக்கிறது போல. அதுதான்..! :lol:

நாலு வரிதான் எழுதினீக

ஆனா நானுறு வரியாட்டம் எழுதினீக.

அட ஆத்தாடி இந்த கூத்தை கேட்டீகளா

உங்க மொட்டை மண்டையிலை பேன்பாத்த

சோதி "அக்காளை" விட்டுப்புட்டிகளே

நாலு வரி அவாளபற்றியும் எழுதினா

என்ன குறைஞ்சா போயிடுவீக?

ஜஸ்ட்டு மிஸ்ஸிங்கு.

ஜா.. ஜா.. அக்காவை.. மிஸ் பண்ண விட்டதை.. லேசா எடுக்கப்படாது. ஏனுன்னா.. காதலிக்கு இடம் கொடுக்க முடிஞ்சவருக்கு.. கூடப் பிறந்த அக்காக்கு மறந்து போச்சுது..! :D

எனக்கு அக்கா தங்கைச்சின்னா ரெம்ப பிரியம். பட் நேக்குத்தான் இல்லையே..! அதுக்கா அண்ணாக்களில பிரியம் இல்லைன்னு இல்ல..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா: என்னை பெற்று ஆளாக்க எத்தனையோ கனவு கண்டவள்

அக்காள்: நான் கனவிலிருந்து விடுபட என்னை தட்டி எழுப்பியவள்

தங்கை: என் கனவின் உறக்கத்தையே கெடுத்தவள்

நண்பி: என் கனவை நனவாக்க கைகொடுத்தவள்

காதலி: என்னை கனவுலகில் வாழவைத்து விட்டுச் சென்றவள்

மச்சாள்: என் இளமையை கனவாக்கியவள்

மனைவி: நான் கனவில் கண்டதை என்முன்னே கொண்டுவந்தவள்

அத்தை: என் கனவைப் பற்றி புரிந்து கொள்ளாதவள்

சித்தி: என் கனவில் என்றுமே வராதவள்

பாட்டி: நான் கனவு காணும்வரை காத்திருக்காதவள்

மகள்: என் கனவுக்கு உயிர்கொடுத்தவள்

மருமகள்: என் கனவை பொய்யாக்கியவள்

பேத்தி: என்னை பகற்கனவு காண வைத்தவள்

  • தொடங்கியவர்

எல்லோருக்கும் நன்றிகள்...

வணங்காமுடி....உங்கள் கனவும் பெண்களும் அழகு..

அப்புறமா ஒரு சந்தேகம் மொட்டை மண்டையிலுமா பேன் இருக்கும்...வழுக்கி விழுந்துராது? :D

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதைகள் கவிஞரே! மேலும் பக்கத்து வீட்டுப் பெண்களைப் பற்றி எழுதவில்லையே!

அசாதரணமாக வீடு வரும் சமயங்களில் அதற்காகவே காத்திருந்து ஓடிவந்து அண்ணா அன்ரி வெளில போயிட்டா. அதுதான் சாவி தந்துட்டுப் போனவ என்று சொல்வதுடன் நிற்காமல் நீங்கள் முகம் கழுவிட்டு வாங்கோ நான் சாப்பாடு போட்டு வைக்கிறன் என்று கூறும் இரட்டைவால் குருவியை விட்டுட்டீங்கள். :D:)

  • தொடங்கியவர்

நிறைய பேர் இருக்கினம்...சுவி.. சொல்ல விரும்பத்தான் உண்மையை மட்டும் சொல்லோணும் எண்டால் வில்லங்கமாப் போய்விடும்...எதுக்கு..போடவேணும

ெண்டால் இன்னுமொரு பெரிய பட்டியல் இருக்கு...

பக்கத்துவீட்டு பெண்

எதிர்வீட்டு பெண்

சகமாணவி

கணக்கு ஆசிரியை..

இப்பிடி நிறைய....

ஆகா, கவியில் புது லிஸ்ட் சுவாரசியமா இருக்கே ;)

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் விகடகவி,

சும்மா நகைச்சுவைக்காகதான் அப்படி எழுதினேன்.

உண்மையில் மொட்டை மண்டையுமில்லை பேனுமில்லை.

அட..நான் தலப்ப பார்த்து ஆயர் பாடியில கண்ணண் இருந்த கெட்டபில மாமா இருப்பார் என்று போட்டு வந்தா :D ...(சரி..சரி அத விடுவோம் என்ன)..மாமாவை சுற்றி உள்ள பெண்களாள் மாமா அழகு அதனால் உதிர்த்த கவி பேரழகு (பெண்ணழகு)..வாழ்த்துக்கள் மாமா.. :(

அட..மாமா ஒருவா சொன்னவா பெண்ணா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் என்று பெண்ணா இருந்து பார்த்தா தான் தெரியும் என்று சொல்ல :wub: ..(சோ...நாமளும் உங்க இருந்து பார்த்தனான் :lol: )...அச்சோ பெண்ணா இருக்கிறது கஷ்டமே இல்ல நன்னா இருக்கு மாமா..(சா..பெண்ணா பிறகல்ல என்று பீலிங்கா இருக்கு மாமா நீங்க வேற :( )...

மாம்ஸ் எல்லாரையும் பற்றியும் சொன்னீங்க ஆனா உங்க வீட்டிற்கு பக்கத்தில இருக்கிற மாமியை பற்றி சொல்லவே இல்ல பாருங்கோ :lol: ..(உது நன்னா இல்ல சொல்லிட்டன் :D )..

மாமா இப்படி வேற சொல்லீனம் என்ன நினைக்கிறியள்..

"பெண் இல்லாத

ஊரிலே புதிதாய்

பூ பூப்பதில்லை"...

நிசமாவோ மாமா... :)

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை -

"என்னை சுற்றி இருக்கும்

எல்லா பெண்களுக்கும் சமன்

என் அன்னை" :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி நீங்க "என்னைச்சுற்றி ஆண்கள்" அப்பிடீன்னு ஒரு கவிதையை புனைஞ்சு தருவீங்கண்ணு பாத்தா

முடிவிலை இப்படியா மோசம் பண்ணுவாக.

விகடகவியை சுற்றி இருக்கும் பெண்கள் யாவரும் அவரவர் உறவுமுறைகளுக்கேற்ப அழகாக இருகிறாங்க. ஏன் அக்காவை விட்டிட்டீங்க கவி?

வணங்காமுடியுன் கனவுப்பெண்களும் அழகு

  • தொடங்கியவர்

அக்கா..எனக்காக வழக்காடுவாள்...

என்னோடு வாயாடுவாள்..

என் அழுக்கு உடைகளை

தோய்த்துவிட்டு..ஆயிரம்

முறை சொல்லி..அன்பை

மட்டும் உரிமையாய்

கேட்பவள்..

ஓகேவா வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி கவிஞனுக்குத்தான் எவ்வளவு மெல்லிய உணர்வு.

என்னைச் சுற்றி எத்தனையே பெண்கள் என்ற தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். கவிதைகளை வாசித்ததும் உதட்டோரம் புன்னகைப் பூக்கள் மலர்கின்றன. வாழ்த்துகள் விகடகவி :D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விகடகவி உங்கள் நறுக்கென்ற கவிதை வரிகளுக்குள் நொறுங்குண்டு போய்விட்டேன் பாராட்டுக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.