Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்புப் பூனைகளுடன் சிறிலங்கா செல்லும் இந்தியப் பிரதமர்

Featured Replies

கறுப்புப் பூனைகளுடன் சிறிலங்கா செல்லும் இந்தியப் பிரதமர்

[ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 05:30 மு.ப ஈழம்] [பி.கெளரி]

சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது பாதுகாப்புக்கு கறுப்புப் பூனைப் படையை அழைத்துச் செல்லவுள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் உயர்மட்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சார்க் மாநாட்டை முன்னிட்டு சிறிலங்காவுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது பாதுகாப்புக்கு என சிறப்பாக அமைக்கப்பட்ட கறுப்புப் பூனை படையினரை அழைத்துச் செல்லவுள்ளார்.

சிறிலங்காவில் மன்மோகன் சிங் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவருக்கான பாதுகாப்பை இந்தப் படைப்பிரிவு வழங்கும்.

அதி சிறப்புப் பயிற்சி பெற்ற இந்தப் படையினர் மன்மோகன் சிங்குக்கான பாதுகாப்புக்களை வழங்குவதுடன் அவரின் பாதுகாப்புக்கு என இந்திய அரசு குண்டு துளைக்காத வாகனம் மற்றும் உலங்குவானூர்தி என்பனவற்றையும் சிறிலங்காவுக்கு அனுப்பவுள்ளது.

இவை தவிர சிறிலங்காவின் கடற்பரப்பில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு கடற்படை அதிகாரிகளை நியமிக்கவும் இந்திய அரசு தீர்மானித்துள்ளது.

பிரதமருக்கு பாதுகாப்பை வழங்கும் கறுப்பு பூனைப் படை தமது சிறப்பு ஆயுதங்களையும், வாகனங்களையும் தம்முடன் எடுத்துச் செல்வார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை மேற்கொள்ள சிறிலங்கா சென்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கடற்படையைச் சேர்ந்த ஒருவர் தாக்கியதனை இந்தியா கருத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லும் ஆப்கானிஸ்தான் பிரதமர் ஹமீட் கார்சை தனக்கு என பிரத்தியேக பாதுகாப்புப் பிரிவை அழைத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதினம்

கொடுத்துவச்ச பூனைகள்! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தங்களால் பயிற்ச்சி அளிக்கப்படும் இலங்கை பாதுகாப்பு படையை நம்ப தயார் இல்லை......ஒரு இந்திய பிரதமருக்கு இலங்கை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று நினைக்கும் இந்தியா ,எப்படி ஈழத்தமிழர்கள் ஒண்றுபட்ட இலங்கயில் வாழலாம் என்று நினைக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
:wub: ஏனென்றால் சிங்களவனோடு ஒன்றுபட்ட இலங்கையில் வாழப்போவது தமிழந்தானே, இந்தியர்கள் இல்லையே! அதனால்த்தான் ஒன்றுபட்ட இலங்கை என்று பாட்டுப்பாடிக்கொண்டு இருக்கிறாங்கள். அதுமட்டுமல்லாமல் அப்படி ஒண்டுபட்ட இலங்கைக்க இருந்தாத்தானே தனது உதவியும் சேர்த்து தமிழனைப் பூண்டோடு அழிக்கலாம் என்ற ஆசையும் இந்தியாவுக்கு இருக்கு.

ஒரு பிரதமரின் அயல்நாட்டு பயணத்திற்கு, மக்களின் வரிப்பணத்தை இவ்வளவு பெரும் தொகையாக வீண்விரயம் செய்வதை விட பேசாமல் இந்திய பிரதமர் தனது வருகையை தவிர்த்து விடலாம் அல்லது மாநாட்டை இந்தியாவிலேயே நடத்திவிடலாம்.

ஆனால் இவ்வளவு ஏற்பாட்டையும் இந்தியா தனது பிரதமரின் இலங்கை விஜத்திற்காக மட்டுமே செய்கிறது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி. இந்தியாவின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அரசியல் அரிச்சுவடி படிக்கும் ஒரு ஈழத்தமிழன் கூட அறிவான்.

இந்திய பிரதமரின் பாதுகாப்புக்கு 3000 இந்திய படையினர் என்ற போர்வையில், சிங்கள இராணுவத்திற்கு போர் பயிற்சியும், ஆலோசனையும் வழங்க ஒரு விசேட படைப்பிரிவு அனுப்பப்படுவதாகவே நான் சந்தேகிக்கிறேன்.

அந்த படையினரில் ஒருபகுதியினர் இப்போதே கொழும்பு வந்து சேர்ந்திருப்பது இதை மேலும் உறுதி செய்கிறது.

இந்தியா இன்று ஈழத்தமிழர்கள் சம்பந்தமாக எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளும், நீண்டகால அடிப்படையில் இந்திய நலன்களுக்கு பெரும் குந்தகம் விளைவிக்கும் என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

தமிழீழ தனியரசை அங்கீகரித்து அதனுடன் தோழமை நாடாக அணிசேர்வதே இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிர்காலத்தில் நன்மை சேர்க்கும். அரசியல் காழ்ப்புணர்வுகளையும், கடந்து போன சம்பவங்களையும் மறந்துவிட்டு தூரநோக்கோடு ஆராய்பவர்கள் எவருக்கும் இந்த உண்மை தெளிவாகும்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இன்று ஈழத்தமிழர் சார்ந்து இன்று எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளும், நீண்டகால அடிப்படையில் இந்திய நலன்களுக்கு பெரும் குந்தகம் விளைவிக்கும் என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

வெற்றிவேல்,

இதன் அர்த்தம் புரியவில்லையே ??

இந்தியா இன்று ஈழத்தமிழர் சார்ந்து இன்று எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளும், நீண்டகால அடிப்படையில் இந்திய நலன்களுக்கு பெரும் குந்தகம் விளைவிக்கும் என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

வெற்றிவேல்,

இதன் அர்த்தம் புரியவில்லையே ??

ம்ம்! வாசிக்கும் போது குழப்பமாக இருக்கும் என்பதால் "சார்ந்து" என்னும் சொல்லை "ஈழத்தமிழர் சம்பந்தமாக" என்று மாற்றிவிட்டேன். இப்போது வாசியுங்கள். புரியும்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்
:wub: இப்ப புரியுது. நன்றி.

இவைள் வேற விசயமா இதை சாட்டி வாறினம்

இந்தியாவின் சிறப்பு படையினர் 1500 பேர் கொழும்பை வந்தடைந்தனர்.

சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்பிற்கு இந்தியாவின் சிறப்பு படையினர் 3000 பேர் வரவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.

அதன்படி முதல்கட்டமாக கொழும்பிற்கு இந்தியாவின் 1500 பேர் அடங்கிய சிறப்பு பாதுகாப்பு படையினர் கொழும்பு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறீலங்காவிற்கு ஒகஸ்ட் மாதமளவில் செல்லவிருக்கும் நிலையில் அவரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான ஒரு நடவடிக்கையினை இந்தியா மேற்கொண்டுள்ளது.

இவர்கள் சிறீலங்கா படையினருடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் எனவும் தெரியவருகிறது. சிலவாரங்களுக்கு முன்னர் இந்தியாவின் உயர்மட்டக்குழுவினர் சிறீலங்கா சென்றபோதும் இது தொடர்பாக ஆராயபட்டு இம்முடிவிற்கு வந்தமையும் தெரிந்ததே.

இதேவேளை சிறீலங்கா அரசாங்கம் இம் மாநாட்டிற்கென பெருமளவு பணத்தை வீண்விரயம் செய்வதாகவும் எதிர்கட்சிகள் உட்பட மக்கள் விசனம் அடைந்துள்ளமை அறிந்ததே.

http://www.pathivu.com/

இந்த சார்க் மாநாட்டுக்கு 225 கோடி ரூபாய்க்கள் செலவாம். அதில் 75% மான பணம் பாதுகாப்புக்காம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இந்திய பிரதமருக்கு மூவாயிரம் பாதுகாப்பு படை தேவைபடுகிறது ஆகவே முப்பது இலச்சம் ஈழதமிழர்களுக்கு பத்தாயிரம் புலிகள் பாதுகாப்பு அளிப்பதில் தப்பில்லை இதை எப்போது உலகம் அறியுமோ தெரியவில்லை.

வந்தவங்கள் போகும்போது எண்ணிப்பாக்கவேணும்..

அது சரி போனாத்தானே எண்ணுறதுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இம் முறை சிறிலங்காவில் 87ம் ஆண்டு ஆடிய ஆட்டத்தை இந்தியா நடத்துமாக இருந்தால் அது வெறுமனே இலங்கைக்குள் மட்டும் முடிந்து விடும் என இந்தியா நினைக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அச்சச்சோ கறுப்பு பூனையோ குறுக்கால போனா சகுனம் பிழைச்சிடுமே

அதுசரி வந்தவை திரும்பி போவினமாமே :D:lol:

வரலாறு திரும்புதப்பா

பாவம் முதல் ஒருக்கா வந்தவர் பின் மண்டையில வாங்கி கட்டினார்

இவர் என்னத்திலயோ

கடவுளே தயவுசெஞ்சு இவங்களை காப்பாத்திடாதையப்பா :D

பி.குறிப்பு: தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய காலம் :D

எதுவுமே நடக்காது. அமைதியாக நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எதுவுமே நடக்காது. அமைதியாக நடக்கும்.

அதுசரி அமைதியாக நடப்பதற்கு எதற்கு இத்தனை எடுபிடி????

எனக்கு ஒருசந்தேகம்

எத்தனை நாடுகள் பங்குபற்றுகின்றன???

அத்தனைபேரும் இப்படி கொண்டுவந்து குவித்தால்......????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்புப் பூனைகளுடன் சிறிலங்கா செல்லும் இந்தியப் பிரதமர்

என்னமா பிலிம் காட்டுறாங்கப்பா நம்ம சினிமா கதாநாயகன்களே தோத்துடுவாங்க :D

இந்தியா பயங்கரமாக குழம்பி போ இருக்கிறது........

பயங்கரவாதம் என்ற சொல்லை வைத்து ரஸ்யா செசேனியாவை அடக்கிவிட்டது இந்தியா காஸ்மிரின் பேய்ரைல் பாகிஸ்தானை அடக்கி விட்டது இலங்கக புலிகளை அடக்க முற்படுகிரது ஆனால் அமெரிக்கா மட்டும் இன்னும் தலிபானையும் ஈராக்கிலுக் கஸ்ட படுகிறது...............

ஆக மொத்தம்??????????????????????????????????????

ஆக மொத்தம்??????????????????????????????????????

எல்லாம் பம்மாத்துதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.