Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதவை பூட்டாமல் பறந்த விமானம்-அவசரமாக தரையிறங்கியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: டெல்லியிலிருந்து மும்பைக்கு பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கதவுகள் சரியாத பூட்டப்படாததால் அந்த விமானம் அவசரமாக மீண்டும் டெல்லியில் தரையிறங்கியது.

இதையடுத்து அந்த விமானத்தின் இரு சிப்பந்திகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதில் மத்திய அமைச்சர் சரத்பவாரும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியிலிருந்து நேற்று மாலை இந்த விமானம் மும்பை கிளம்பியது. போயிங்௭37 ரக விமானமான இந்த விமானம் 5,000 மீட்டர் உயரத்தை அடைந்த நிலையில், விமான சிப்பந்திகள் கதவு சரியாக பூட்டப்படாமல் திறந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.

அந்தக் கதவு வழியாக விமானத்திலிருந்து அழுத்தப்பட்ட காற்று வெளியேறியது மட்டுமல்லாமல், வெளியிலிருந்தும் காற்று புகுந்தது பெரும் சத்தம் கிளம்பியது. மேலும் அந்த கதவு வழியாக வெளிப் பகுதியையும் பார்க்க முடிந்தது.

இதையடுத்து உடனடியாக விமானிக்கு அவர்கள் தகவல் தந்தனர்.

இதைத் தொடர்ந்து விமானத்தை உடனடியாக டெல்லிக்குத் திருப்பினர் விமானிகள். மேலும் 8,000 அடி உயரத்துக்கு விமானத்தை கொண்டு சென்ற விமானிகள் விமான எரிபொருளை வெளியேற்றினர்.

பின்னர் டெல்லியில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்கியது.

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், விமானத்தின் கதவுகளை இரு சிப்பந்திகள் சரியாக பூட்டாதது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதற்குக் காரணம், சரத் பவாரின் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் தான் விமானத்துறை அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதில் மத்திய அமைச்சர் சரத்பவாரும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இது சீனா,பாகிஸ்தான்,சிறிலங்கா தீவிரவாதிகளின் நடவடிக்கையாக இருக்கலாம் :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நாசமறுப்பு இப்படியும் நடக்குதே இனிமல் நாங்கள் விமானத்தில ஏறும் போது அந்த பொம்பிளையை கூப்பிட்டு கதவை பூட்டிட்டியே மோனே என்று கேட்கனும் போல இருக்கு ( இல்லாவிட்டால் நல்ல உயரத்துக்கு கொண்டு போட்டு மேல இருந்து எல்லாரையும் கவிட்டுகொட்டிப்போடுவாங்கள் போல இருக்கு)

  • கருத்துக்கள உறவுகள்

அட நாசமறுப்பு இப்படியும் நடக்குதே இனிமல் நாங்கள் விமானத்தில ஏறும் போது அந்த பொம்பிளையை கூப்பிட்டு கதவை பூட்டிட்டியே மோனே என்று கேட்கனும் போல இருக்கு ( இல்லாவிட்டால் நல்ல உயரத்துக்கு கொண்டு போட்டு மேல இருந்து எல்லாரையும் கவிட்டுகொட்டிப்போடுவாங்கள் போல இருக்கு)

நான் நினைக்கிறேன் இது பழைய விமானம் என்று. தற்போதைய விமானங்களில் கதவு பூட்டப்பட்டதா விமானம் புறப்பட பூரண தயார் நிலையா என்பதை விமானி அறிந்து கொள்ளலாம். :icon_idea:

ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது மிகப் பெரிய ஓட்டை ஏற்பட்டது. இருப்பினும் இதில் பயணம் செய்த 350 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆஸ்திரேலியாவிலிருந்து லண்டனுக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்த குவாண்டாஸ் விமானத்தின் வலது இறக்கைக்குக் கீழ் பகுதியில் மிகப் பெரிய ஓட்டை ஏற்பட்டது. இதனால் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் அவசரகால கதவு வழியாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளில் சிலர் மட்டும் வாந்தி எடுத்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தின் வலது பகுதியில் 3 மீட்டர் சுற்றளவுக்கு மிகப் பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளதாக மணிலா சர்வதேச விமான நிலைய துணை மேலாளர் ஆக்டவியோ லினா தெரிவித்தார். சில பயணிகள் வாந்தி எடுத்தபோதிலும், அனைத்து பயணிகளும் பீதியுடன் காணப்பட்டதாக அவர் கூறினார். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது மிகப் பெரிய வெடிச் சத்தம் கேட்டதாகவும், உடனே பிராணவாயு (ஆக்சிஜன்) முகமூடிகள் வந்ததாகவும் சில பயணிகள் உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். பயணிகள் அனைவரும் மணிலாவில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் பழுது பார்க்க அனுப்பப்பட்டதாக விமான நிலைய பொது மேலாளர் அல்ஃபோன்úஸô குஸி தெரிவித்தார். விமானம் 20 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது ஓட்டை ஏற்பட்டதாகவும் அப்படியே 6 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு கீழிறங்கியதாகவும் சில பயணிகள் கூறியதாக ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் ஹெரால்டு சன் ஆன்லைன் இணையதள செய்தி தெரிவிக்கிறது. ஹாங்காங் விமான நிலையத்தை சென்றடைய ஒரு மணி நேரம் முன்னதாக இந்த விபத்து ஏற்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுட்டது ஒரு மொள்ளைமாரித்தளத்தில் . . .

டெல்லியிலிருந்து மும்பைக்கு பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கதவுகள் சரியாத பூட்டப்படாததால் அந்த விமானம் அவசரமாக மீண்டும் டெல்லியில் தரையிறங்கியது

உண்மையிலேயே எனக்கொரு சந்தேகமுங்கோ.

பெரியவா சீ நெடுக் அண்ணா "தொழினுட்ப அறிவியல் உங்களுக்கு நல்லாக தெரியும் என நினைக்கிறேன். சரி யாராவது சொல்லுங்கோ

விமானத்தின் கதவு பூட்டப்படவில்லை என அறிந்ததும் ஏன் தரையிறக்கப்பட்டது? பறந்துகொண்டிருக்கும்போதே கதவு பூட்ட முடியாதோ? :icon_idea:

அபப்டி பூட்டினால் என்ன நடக்கும்? பூட்டுப்படாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே எனக்கொரு சந்தேகமுங்கோ.

பெரியவா சீ நெடுக் அண்ணா "தொழினுட்ப அறிவியல் உங்களுக்கு நல்லாக தெரியும் என நினைக்கிறேன். சரி யாராவது சொல்லுங்கோ

விமானத்தின் கதவு பூட்டப்படவில்லை என அறிந்ததும் ஏன் தரையிறக்கப்பட்டது? பறந்துகொண்டிருக்கும்போதே கதவு பூட்ட முடியாதோ? :icon_idea:

அபப்டி பூட்டினால் என்ன நடக்கும்? பூட்டுப்படாதோ?

நான் நினைக்கிறேன் விமானத்துள் காற்றழுத்தத்தை தொடர்ந்து சீராக வளிமண்டல காற்றழுத்ததுக்கு ஏற்றவாறு பரிகரிப்பதில் இருக்கும் இடர்பாடுகள் கருதி.. கதவை நடுவானில் வைத்து மூட முடியாதிருக்கலாம்.

வழமையாக மூடிய விமானத்துள் காற்றழுத்தம் விமானம் வானில் பறக்கும் போது குறிப்பிட்ட உயரத்தில் வளிமண்டத்தில் இருக்கும் காற்றழுத்தத்தை விட அதிகமாக இருக்கும். கதவு திறக்கப்பட்ட நிலையில் விமானத்துள் காற்றழுத்தம் குறைக்கப்பட்டு விடும். விமானத்துள் காற்றழுத்தம் குறைக்கப்பட்ட நிலையில் கதவை மூடிக் கொள்ளுதல்.. மீண்டும் வளிமண்டல காற்றழுத்தம் உயர்வாக இருக்கும் பகுதிக்குள் காற்றழுத்தம் குறைந்த விமானத்தைக் கொண்டு வருவது..ஆபத்தானதாக அமையலாம். அதனால் கதவைத் திறந்த நிலையில் விமானத்தை தரையிறக்குவதே காற்றழுத்த வேறுபாடுகளால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளைக் குறைக்க உதவும்..! :)

வழமையாக மூடிய விமானத்துள் காற்றழுத்தம் விமானம் வானில் பறக்கும் போது குறிப்பிட்ட உயரத்தில் வளிமண்டத்தில் இருக்கும் காற்றழுத்தத்தை விட அதிகமாக இருக்கும். கதவு திறக்கப்பட்ட நிலையில் விமானத்துள் காற்றழுத்தம் குறைக்கப்பட்டு விடும். விமானத்துள் காற்றழுத்தம் குறைக்கப்பட்ட நிலையில் கதவை மூடிக் கொள்ளுதல்.. மீண்டும் வளிமண்டல காற்றழுத்தம் உயர்வாக இருக்கும் பகுதிக்குள் காற்றழுத்தம் குறைந்த விமானத்தைக் கொண்டு வருவது..ஆபத்தானதாக அமையலாம். அதனால் கதவைத் திறந்த நிலையில் விமானத்தை தரையிறக்குவதே காற்றழுத்த வேறுபாடுகளால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளைக் குறைக்க உதவும்..! :rolleyes:

அது மட்டும் அல்ல! வேகமாக பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானத்தில் கதவு திறந்திருக்குமானால், காற்று உள் வருகின்ற வேகத்தினாலும், அந்த காற்று மிக குறைந்த வெப்பநிலையுடன் உள்வருவதாலும் (சில வேளைகளில் minus degree) மனிதர்கள் எவரும் பக்கத்தில் சென்று கதவை இழுத்து மூடி விடமுடியாது! உபகரணங்களும் காற்று அழுத்தத்தின் காரணமாக செயற்படாமல் போக கூடும்!

Edited by vettri-vel

நான் நினைக்கிறேன் இது பழைய விமானம் என்று. தற்போதைய விமானங்களில் கதவு பூட்டப்பட்டதா விமானம் புறப்பட பூரண தயார் நிலையா என்பதை விமானி அறிந்து கொள்ளலாம். :mellow:

நான் நினைக்கிறன் விமானின்ர கணணி பழசா இருக்குமெண்டு.

இதுக்கு பேசாம பழய தறாங்கொன்றையே போட்டிருக்கலாம்.

விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் நெடுக் தாத்தா & வெற்றிவேல் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருஷம் பழைய காரிலயே கதவு திறந்திருந்தால் எச்சரிக்கை விளக்கெரியுது. அப்பிடியெண்டால் இது எப்ப செய்த விமானமோ? அல்லது திருத்தப் பஞ்சிப் பட்டு நாங்கள் சின்னக் கோளாறுகளோட கார் ஒடுற மாதிரி விமானங்களையும் ஓட்டிகினம் போல பாரத மக்கள்! :wub:

ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது மிகப் பெரிய ஓட்டை ஏற்பட்டது. இருப்பினும் இதில் பயணம் செய்த 350 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆஸ்திரேலியாவிலிருந்து லண்டனுக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்த குவாண்டாஸ் விமானத்தின் வலது இறக்கைக்குக் கீழ் பகுதியில் மிகப் பெரிய ஓட்டை ஏற்பட்டது. இதனால் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் அவசரகால கதவு வழியாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளில் சிலர் மட்டும் வாந்தி எடுத்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தின் வலது பகுதியில் 3 மீட்டர் சுற்றளவுக்கு மிகப் பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளதாக மணிலா சர்வதேச விமான நிலைய துணை மேலாளர் ஆக்டவியோ லினா தெரிவித்தார். சில பயணிகள் வாந்தி எடுத்தபோதிலும், அனைத்து பயணிகளும் பீதியுடன் காணப்பட்டதாக அவர் கூறினார். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது மிகப் பெரிய வெடிச் சத்தம் கேட்டதாகவும், உடனே பிராணவாயு (ஆக்சிஜன்) முகமூடிகள் வந்ததாகவும் சில பயணிகள் உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். பயணிகள் அனைவரும் மணிலாவில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் பழுது பார்க்க அனுப்பப்பட்டதாக விமான நிலைய பொது மேலாளர் அல்ஃபோன்úஸô குஸி தெரிவித்தார். விமானம் 20 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது ஓட்டை ஏற்பட்டதாகவும் அப்படியே 6 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு கீழிறங்கியதாகவும் சில பயணிகள் கூறியதாக ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் ஹெரால்டு சன் ஆன்லைன் இணையதள செய்தி தெரிவிக்கிறது. ஹாங்காங் விமான நிலையத்தை சென்றடைய ஒரு மணி நேரம் முன்னதாக இந்த விபத்து ஏற்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுட்டது ஒரு மொள்ளைமாரித்தளத்தில் . . .

இந்த செய்தி உண்மை தான்.

http://www.independent.co.uk/news/world/au...don-877145.html

http://www.smh.com.au/news/travel/qantas-i...7097148491.html

  • கருத்துக்கள உறவுகள்

குவாண்டஸ் விமானம் இப்பொழுது அடிக்கடி 4 மணித்தியாலம் பிந்தி பறக்க ஆரம்பிக்கிறது.மாலை 5 மணிக்கு சிங்கப்பூருக்கு பயணிக்கும் பயணிகள் 4 மணித்தியாலம் விமான நிலையத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு இரவு 9மணிக்கே பறக்கிறது. அண்மையில் கனடா செல்ல சிட்னி விமான நிலையத்துக்கு காலை 6 மணிக்கு வந்த பயணி, விமானம் 4 மணித்தியாலத்தின் பின் பறக்கும் எனச் சொல்லிச் சொல்லி அவர் அன்று மதியம், மாலை, இரவு என்று விமான நிலையத்தில் இருந்து இரவு விமானத்தில் ஏற்றப்பட்டு, மறுபடியும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, மறு நாள் காலை தான் விமானம் பறந்ததாம். குவாண்டஸ் விமானத்தின் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதும், குவாண்டஸ் விமானத்தின் தாமதத்துக்கு ஒரு காரணமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.