Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளகப் பாதுகாவல் பயிற்சியைப் பெற்ற ஒரு தொகுதியினர் வெளியேறினர்

Featured Replies

உள்ளகப் பாதுகாவல் பயிற்சியைப் பெற்ற ஒரு தொகுதியினர் வெளியேறினர்

[ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 03:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

லெப். கேணல் சூட் பயிற்சிப் பாசறையில் உள்ளகப் பாதுகாவல் பயிற்சியைப் பெற்ற ஒரு தொகுதியினர் நேற்று சனிக்கிழமை வெளியேறி உள்ளனர்.

இந்நிகழ்வு ஜேந்தன் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்சுடரினை பொறுப்பாளர்களில் ஒருவரான நளன் ஏற்ற, தமிழீழ தேசியக் கொடியினை பயிற்சி ஆசிரியர் ஆழியன் ஏற்றினார்.

லெப். கேணல் சூட்டின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை முல்லைத்தீவு மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்பழகன் ஏற்ற, மலர்மாலையினை பொறுப்பாளர்களில் ஒருவரான நிலவன், பொறுப்பாளர்களில் ஒருவரான கண்ணப்பன், பொறுப்பாளர்களில் ஒருவரான செழியன் ஆகியோர் சூட்டினர்.

மலர்வணக்கத்தினை பொறுப்பாளர்களில் ஒருவரான சீலன் தொடக்கி வைத்ததைத் தொடர்ந்து பயிற்சியின் முதன்மை குறித்த கருத்துரைகளை முல்லைத்தீவு மாவட்ட தமிழீழ நிர்வாக சேவைப் பொறுப்பாளர் சர்வன், கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்பழகன், சிறப்புப் பொறுப்பாளர்களில் ஒருவரான தயாபரன், திருமலை ஆகியோர் ஆற்றினர்.

சிறப்புரையினை பொறுப்பாளர்களில் ஒருவரான நளன் ஆற்றினார்.

தொடர்ந்து பயிற்சியின் போது நடாத்தப்பட்ட போட்டிகளிலும், பொது அறிவுத்தேர்விலும் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் இத இத தான் எதிர்பார்த்தேன்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று முன்தினமும் ஒரு அணி வெளியேறியிருப்பதாக ஒரு செய்தி வெளி வந்திருந்தது. பேச்சைவிடச் செயலே பலன் தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊடுருவல்களை தடுப்பத்ற்க்கு இதுதான் ஒரே வழி.......

இது பொதுமக்கள் படைப்பிரிவா...??

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று முன்தினமும் ஒரு அணி வெளியேறியிருப்பதாக ஒரு செய்தி வெளி வந்திருந்தது. பேச்சைவிடச் செயலே பலன் தரும்.

புலிகள் இதைக் கருத்தில் கொண்டு பேச்சைக் குறைத்து செயலைக் கூட்ட வேணும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங்குவார்

தேசியத்தலைவர் அவர்கள் பேச்சை விடச் செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதால் தான் அதைச் சொன்னேன். மேலும் புலம்பெயர் வீரப் புதல்வர்கள் கண்ணீர் விடுவதை இதைப் படித்து குறை;ததுக் கொள்வார்கள் என நம்புகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார்

தேசியத்தலைவர் அவர்கள் பேச்சை விடச் செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதால் தான் அதைச் சொன்னேன். மேலும் புலம்பெயர் வீரப் புதல்வர்கள் கண்ணீர் விடுவதை இதைப் படித்து குறை;ததுக் கொள்வார்கள் என நம்புகின்றேன்

விளக்கத்துக்கு நன்றிகள் பொன்னையா...!

வெற்றிகள் கண்டு கூத்தாடுவதும், பின்னடைவுகள் அல்லது பின்வாங்கல்களைக் கண்டு துவண்டுவிடுவதும் நம்மவர் பெரும்பாலோரின் இயல்பாக இருக்கிறது. ஒரு காலத்தில் (1997~99) நானும் அப்படித்தான். அப்போது பெற்ற அறிவினால் இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். இப்படிப் பட்ட ஒரு தலைவன் நம் காலத்தில் இருந்தும் நாங்கள் சிங்களவனின் பரப்புரையினால் சோர்வடைந்து மனமுடைந்து இன்றும் கருத்தெழுதிக் கொண்டிருக்கிறோம். சிங்களவனின் முழுமுதல் நோக்கமே புலிகளைக் களத்தில் முறியடிக்கும் முன்னர் புலத்தமிழரின் பலத்தை பரப்புரையின் மூலம் முறியடித்தல். அதில் கணிசமான வெற்றியிம் பெற்றுவிட்டார்கள்போலத் தெரிகிறது. :rolleyes:

நான் நினைப்பது இதைத்தான். நம்மிடையே எந்த இனத்துக்கும் வாய்க்காத ஒரு தலைவர் இருக்கிறார். அவர் தன் காலத்தில் சாதித்தது என்னவென்று எல்லோருக்கும் தெரியும். ராணுவ வியூகங்களில் அவர் எப்பேர்ப்பட்டவர் என்பதும் தெரியும். பிறகேன் கலக்கங்களும், அழுகுரல்களும்? அங்கே உள்ள நிலை யாருக்காவது தெரியுமா? புலிகளின் திட்டங்க்களும்தாஅன் தெரியுமா? இப்படியெல்லாம் புலத்தமிழர் யோசிக்கிறார்கள் என்றால் புலிகளின் மனநிலை என்னவாக இருக்கும். நாம் நினைப்பது என்னவென்று அவர்களுக்குத் தெரியுமா என்று யாரும் கேட்க வேண்டாம். என் உறவினர் ஒருவர் தலைவரை அடிக்கடி சந்திப்பவர். அவர் கூறியது இது.

நாம் இங்கே அழுது புலம்புவது ஒரு மறைமுக அழுத்தத்தைப் புலிகளுக்குப் பிரையோகிக்கவே செய்யும். நாம் மிக அவதானமாக இருக்க வேண்டிய காலத்தில் உள்ளோம்.. அந்த வகையில் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

நாம் இங்கே அழுது புலம்புவது ஒரு மறைமுக அழுத்தத்தைப் புலிகளுக்குப் பிரையோகிக்கவே செய்யும். நாம் மிக அவதானமாக இருக்க வேண்டிய காலத்தில் உள்ளோம்.

சரியாக சொன்னீர்கள். பதறிய காரியம் சிதறிவிடும்!

இன்று புலம்பெயர் தமிழர்கள் செய்ய வேண்டியது சிறு சிறு பின்னடைவுகளுக்கெல்லாம்

அழுது ஒப்பாரி வைத்து புலிகளுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்காமல் இருப்பது தான்!!

புலிகளின் இராணுவ வியூகத்திலும் போரிடும் வல்லமையிலும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

புலம்பெயர் தமிழர்கள் இன்று முன்னெடுக்க வேண்டியது தேசியத்திற்கான சர்வதேச பரப்புரைகளும், இடம்பெயர்ந்த மக்களுக்கான நிதியுதவியும் மட்டுமே!!!

இராணுவ ஆலோசனைகள் வழங்கவும், திட்டமிடல்கள் செய்யவும் புலிகளிடம் மிகச்சிறந்த அனுபவமும் பயிற்சியும் பெற்ற பல தளபதிகள் உண்டு என்பதை சில புலம்பெயர் மேதாவிகள் மறந்து விடக்கூடாது

Edited by vettri-vel

அகதிகள் எனும் பதத்தை தவிருங்கள் வெற்றிவேல்... புலம்பெயர்ந்தவர் வேண்டுமானால் அகதிகளாக இருக்கலாம்.. எதுவுமே இல்லாத கேட்க கூட நாதி இல்லாதவர்களைத்தான் அகதி என்பார்கள்..

தாயகத்தின் இடம்பெயர்வுகள் மட்டும்தான் நிகழும், அவர்கள் தங்குமிடம் கூட இடைதங்கல் முகாம்... அகதி முகாம் அல்ல..

Edited by தயா

அகதிகள் எனும் பதத்தை தவிருங்கள் வெற்றிவேல்... புலம்பெயர்ந்தவர் வேண்டுமானால் அகதிகளாக இருக்கலாம்.. எதுவுமே இல்லாத கேட்க கூட நாதி இல்லாதவர்களைத்தான் அகதி என்பார்கள்..

தாயகத்தின் இடம்பெயர்வுகள் மட்டும்தான் நிகழும், அவர்கள் தங்குமிடம் கூட இடைதங்கல் முகாம்... அகதி முகாம் அல்ல..

அந்த சொல் திருத்தப்பட்டுள்ளது தயா! திருத்தியமைக்கு நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இங்கே அழுது புலம்புவது ஒரு மறைமுக அழுத்தத்தைப் புலிகளுக்குப் பிரையோகிக்கவே செய்யும். நாம் மிக அவதானமாக இருக்க வேண்டிய காலத்தில் உள்ளோம்.. அந்த வகையில் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

இது எனக்கு என்று நினைக்கின்றேன்

அழுது புலம்புவதாக யார் சொன்னது

எல்லோரும் ஒரேமாதிரி இல்லை

ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி

அதைத்தான் நான் சொன்னேன்

தடுமாற்றம் என்றுகூட குறிப்பிடவில்லை

ஒருவருக்கொருவர் தெம்பாக இருப்போம் என்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்

இது எனக்கு என்று நினைக்கின்றேன்

அழுது புலம்புவதாக யார் சொன்னது

எல்லோரும் ஒரேமாதிரி இல்லை

ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி

அதைத்தான் நான் சொன்னேன்

தடுமாற்றம் என்றுகூட குறிப்பிடவில்லை

ஒருவருக்கொருவர் தெம்பாக இருப்போம் என்றேன்...

குகதாசன்,

நான் எழுதியது ஒரு பொதுவான கருத்து. உங்களை மட்டும் குறித்து வைக்கப்பட்ட கருத்தல்ல. உங்களை என் கருத்து பாதித்திருந்தால் அதற்கு மனம் வருந்துகிறேன்.

மற்றும்படி, தற்போதுள்ள நிலையில் ராணுவம் முன்னேறுகிறான். புலிகள் களமாடுகிறார்கள். எம்மாலான பங்கை இங்கிருந்து செய்வோம். மீதமுள்ளது அவர்கள் கையில். ஆனால் முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் எனக்கு இம்மியளவும் சந்தேகமில்லை.

நான் ஒரு சிங்களவரால் நடத்தப்படும் ஆங்கிலக் கருத்துக்களத்துக்கு முன்னர் அடிக்கடி செல்வதுண்டு. இப்போதெல்லாம் அங்கு செல்வதேயில்லை. என்னைப்போன்ற, உங்களைப்போன்ற லட்சக்கணக்கான தமிழர்களின் மனோபலம் சிதைவது எதிரிக்கு மேலும் பலத்தைக் கொண்டுவரும். அதையே அந்தக் களங்கள் மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கின்றன. இங்கே கருத்தெழுதுபவர்கள் பலர் அங்கே செல்பவர்கள் போலுள்ளது. அங்கே சிங்களவனின் நையாண்டிகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் இங்கே வந்து கொட்டுகிறார்கள் போல உள்ளது. இதை நான் உங்களைக் குறித்துச் சொல்லவில்லை. பொதுவாகத்தான் சொல்கிறேன். எனக்கும் அப்படிப்பட்ட உணர்வுகள் தோன்றின. ஆனால் அவர்களின் சூட்சுமம் புரிந்து அக்களங்களைத் தவிர்த்து வருகிறேன்.. ஆனால் மீண்டும் அங்கு செல்லும் காலம் விரைவில் வரும். :rolleyes:

Edited by Danguvaar

நான் ஒரு சிங்களவரால் நடத்தப்படும் ஆங்கிலக் கருத்துக்களத்துக்கு முன்னர் அடிக்கடி செல்வதுண்டு. இப்போதெல்லாம் அங்கு செல்வதேயில்லை. என்னைப்போன்ற, உங்களைப்போன்ற லட்சக்கணக்கான தமிழர்களின் மனோபலம் சிதைவது எதிரிக்கு மேலும் பலத்தைக் கொண்டுவரும்.

நானும் அந்த தளத்திற்கு போயிருக்கிறன் , அங்கு சிலர் நையாண்டி செய்வதை தொழிலாகவே செய்கிறார்கள். சிலரை சாதாரண மக்கள் போல் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

நானும் பலதும்பத்தும் படிப்பேன்

ஆனால் எமக்கு எதுதேவை.........எதுதேவையில்லை என்பது எனக்கு நன்கு தெரியும்

எனவே பதட்டம்.........தடுமாற்றம்.......விலக

சேற்றிலை காலைவைத்தால் குளத்திலை கழுவிவிட்டு போகவேண்டும். இதுதான் வாழ்க்கை. பல தளங்களிற்கு போவதில் தப்பே இல்லை. நானும் எல்லா செய்தி தளங்களிற்கும் போவேன் வாசிப்பேன். இறுதியில் எல்லாவற்றையும் அலசி முடிவெடுப்பேன். அதுவே எனது இறுதி முடிவாகவும் ஈழத்தின் உண்மை முடிவாகவும் இருக்கும்.

புலிகள் விட்டுக்கொடுக்கின்றார்கள் என்றால் அதற்கு ஆயிரம் இருக்கும். அவர்களிற்கு தெரியாததா எமக்குத் தெரியப்போகின்றது. எம்மைவிட எத்தனைமடங்கு அனுபவம் உள்ளவர்கள் நாம் உண்டு உடுத்து உறங்கி வாழும் சாதாரண மானிடர்கள் அவர்கள் தெய்வப்பிறவிகள் உயிரை துச்சமென மதிக்கும் வல்லமை கொண்டவர்கள். ஆகவே அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நாம் ஊக்கம் கொடுக்கவேண்டும். அப்போதுதான் எமக்கான ஈழம் விரைவில் அமையும். அந்த மாவீரர்களின் கனவுகளும் நிஜமாகும்.

வெறும் நடிப்புக்காக மாவீரர்தினத்திற்கு வந்து மலர்மாலை இட்டுச்செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எந்த நேரத்திலும் அவர்களின் கனவை வீரத்தை மதிக்கவும ஊக்கம் கொடுக்கவும் இருக்கவேண்டும். . .நாம்தான் அவர்களின் பலம். தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில்தான் களத்தில் ஆயிரக்கணக்கான போராளிகள் போராடுகின்றார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு நாம் எந்தவித்திலும் களங்கம் ஏற்படுத்தக்கூடாது.

இந்த யாழ் களத்தில் தற்போது போர் என்பது கிளித்தட்டு விளையாட் டுமாதிரி ஆகிவிட்டது. புலிகளை போற்றுவது போல் பலர் தூற்றுவதை கண்கூடாக பார்த்தவண்ணம்தான் இருக்கின்றேன். . . 35 போராளிகளின் உடல்களை கைப்பற்றிய இராணுவம் அதில பல்லவனையும் மற்றும் பலரையும் சாகடித்தததாக கங்கணம்கட்டி கூறிக்கொண்டிருக்கின்றுது. பல்லவனின் உடலை காட்டி இவர்தான் பல்லவன் என்று காட்ட முடியுமா ? சும்மா யாரோ பிடித்த பொடியளை சாக்காட்டிப்போட்டு சாள்ஸ் அன்ரனி பொறுப்பானவர்களை அழித்துவிட்டோம் என்று சிங்கள மூடர்களை ஏமாற்றலாம். தமிழர்களை ஏமாற்ற முடியாது. புலிகள் என்றுமே பொய் சொல்வதில்லை. மாவீரர்களிற்கு அவர்கள் என்றும் மதிப்பும் மரியாதையும் அளிப்பவர்கள். அப்படி ஏதாவது நடந்திருந்தால் மறைக்காமல் கட்டாயம் சொல்லுவார்கள். அதுவரை பொறுத்திருங்கள். . .

வதந்திகளை பரப்பாதீர்கள். போர் இது இறுதிப்போர். தலைவர் அங்கு எவ்வளவு நம்பிக்கையுடனும் துடிப்புடனும் இருக்கின்றார் என்பது எமக்கெல்லாம் தெரியும் அந்த நம்பிக்கைக்கு களங்கம் வேண்டாம். நாம் கரம் கொடுப்போம் எமது எழுத்துக்கள் யாவும் சிங்கள தேசத்தை தோற்றோடச்செய்யட்டும். .

எழுதுங்கள் எம் விடியலின் ரேகைகளை எழுதுங்கள். .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் விட்டுக்கொடுக்கின்றார்கள் என்றால் அதற்கு ஆயிரம் இருக்கும். அவர்களிற்கு தெரியாததா எமக்குத் தெரியப்போகின்றது. எம்மைவிட எத்தனைமடங்கு அனுபவம் உள்ளவர்கள் நாம் உண்டு உடுத்து உறங்கி வாழும் சாதாரண மானிடர்கள் அவர்கள் தெய்வப்பிறவிகள் உயிரை துச்சமென மதிக்கும் வல்லமை கொண்டவர்கள். ஆகவே அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நாம் ஊக்கம் கொடுக்கவேண்டும். அப்போதுதான் எமக்கான ஈழம் விரைவில் அமையும். அந்த மாவீரர்களின் கனவுகளும் நிஜமாகும்.

பரணி எழுதினீர்கள் ஆயிரத்தில் ஒரு வார்த்தை. என்னில் புலிகள் மீது அசையாத நம்பிக்கை உண்டு. மிகவும் இக்கட்டான பல கால கட்டங்களில் அவர்களிடம் பழகியுள்ளேன், பங்காளியாக கூட இருந்துள்ளேன். பதகளிப்பு இல்லாமல் மிகவும் சாமர்த்தியமாக முடிவு எடுப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே என்பதை கண்டு கொண்டேன்.

வாழ்த்துக்கள் போராளிகளுக்கு

உண்மையான் ஈழ முழக்கம் இப்ப இப்பத்தான் வருது... நம்பிக்கைதான் வாழ்க்கை...

தலைவர் எதை நம்பி செயற்படுகிறாரோ அதுக்கு பக்கதுணையாக நிக்கவேணும்..

எங்கள் பிறப்பின் குறைந்தபட்ச்சக்கடமையது...

நீங்கள் நம்பிக்கை இல்லாமல் இருந்து எழுதினா வந்துடுவாங்கள் மென்மையெது பெண்மையெதெண்டு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.