Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மறுத்ததேன்....?

Featured Replies

vennilabk2.jpg

மறுத்ததேன்....?

பலமுறை தொலைவில் பார்த்தேன்

பார்வைகளால் ரசித்தேன்

ஆர்வத்தில் தொடர்ந்தேன்

தினம் உன்னையே சிந்தித்தேன்

காதலை வளர்த்தேன்

ஆதலால் சிலிர்த்தேன்

ஆசையோடு இருந்தேன்

திசை எங்கும் நடந்தேன்

கற்பனையில் மிதந்தேன்

பற்பல கவிதைகள் வடித்தேன்

வானளவு உயரந்தேன்

கானம் பாடி திரிந்தேன்

கனவுகளில் உன்னோடு பறந்தேன்

நினைவுகளை எனக்குள் சுமந்தேன்

ஊன் சுவைதனை மறந்தேன்

உறக்கத்தையும் துறந்தேன்

உன் உருவை வரைந்தேன்

கண்களுக்குள் காத்தேன்

வெட்கத்தில் சிவந்தேன்

துக்கத்திலும் சிரித்தேன்

இன்றுனை சந்தித்தேன்

தெத்திப்பல் தெரிய சிரித்தேன்

காதல்மனசை திறந்தேன்

அன்பே நீ மறுத்ததேன்

என்னையும் வெறுத்ததேன்..?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை அழகு

காதல் வயப்பட்டால் என்ன என்ன தோன்றுமொ அதைஎல்லாம் எழுதியிருக்கிறீங்கள்.

காதலை தெரிவிக்காமலே கற்பனையில் மிதந்து , பின்னர் மறுக்கப்பட்டால் அதன் வேதனை சொல்லில் அடங்கா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வெண்ணிலா...

உங்கள் கவியின் கேள்விக்கு உங்கள் கவியே பதிலை மறைத்திருக்கின்றதோ...

"இன்றுனை சந்தித்தேன்

தெத்திப்பல் தெரிய சிரித்தேன்"

- நீங்கள் ரசித்த ரசிகன் உங்கள் அழகைத் மட்டும் தான் ரசிக்க வந்து ஏமாந்து போனாரோ...

இன்றுனை சந்தித்தேன்

தெத்திப்பல் தெரிய சிரித்தேன்

காதல்மனசை திறந்தேன்

அன்பே நீ மறுத்ததேன்

என்னையும் வெறுத்ததேன்..?

கவலைக்குறிய விடயம்,

ஆனான் கூறிய விதம் மிகவும் அழகு வெண்ணிலா!!

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மறந்ததேன்.?

இவ்வளவு செய்தும் எதிர் தரப்பில் இருந்து நல்ல பதில்

வராததால் ஒரு தலை காதல் போல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை படித்தேன்

சுவைத்தேன்

திகைத்தேன்

பயந்தேன்

உன் கவிதை ஒரு" தேன்"

அட..நிலா அக்காவின் கவிதை..தை..ம்ம் வானிலாவை மறுக்கவோ இல்லாதுவிடில் வெறுக்கவோ முடியுமா என்ன..?? சில வேளை வானிலாவின் அழகை தள்ளி நின்று ரசிக்க நினைத்தானோ..னோ.. :D

என்ன நிலா..லா அக்கா...?? <_<

மறுத்ததேன்..ன் விடை தெரியாத கேள்வியை கவியில் கண்டேன்...காதலையும் கூடவே கண்டேன் கவியில் அக்கா..கா வாழ்த்துக்கள்..ள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுனை சந்தித்தேன்

தெத்திப்பல் தெரிய சிரித்தேன்

காதல்மனசை திறந்தேன்

இதை முதலே செய்திருந்தால் மேல செய்ததெல்லாம் செய்ய வேன்டி வந்திருக்கது. அதிலும் இன்பம் இருக்குத்தான்.ஆனால் அது மட்டும் கானும் என்றால் செய்யலாம். அதுக்கு மேல வேனும் என்றால் கவி வரைந்து கனாக்கான முன் காதலைச்சொல்வது மேல் <_<

  • தொடங்கியவர்

உங்கள் கவிதை அழகு

காதல் வயப்பட்டால் என்ன என்ன தோன்றுமொ அதைஎல்லாம் எழுதியிருக்கிறீங்கள்.

காதலை தெரிவிக்காமலே கற்பனையில் மிதந்து , பின்னர் மறுக்கப்பட்டால் அதன் வேதனை சொல்லில் அடங்கா

நன்றிகள் கறுப்பி அக்கா.

ஓ காதலை தெரிவித்து அது மறுக்கப்பட்டால் வேதனை வருமா? இன்னமும் அனுபவிக்கவில்லை................. அனுபவிக்க வேண்டி வராது என நினைக்கின்றேன். ம்ம்ம்ம் பார்ப்பம் அபப்டி ஒரு நிலை வந்தால் அதையும் கவிதையாக்குவம் :lol:

வணக்கம் வெண்ணிலா...

உங்கள் கவியின் கேள்விக்கு உங்கள் கவியே பதிலை மறைத்திருக்கின்றதோ...

"இன்றுனை சந்தித்தேன்

தெத்திப்பல் தெரிய சிரித்தேன்"

- நீங்கள் ரசித்த ரசிகன் உங்கள் அழகைத் மட்டும் தான் ரசிக்க வந்து ஏமாந்து போனாரோ...

வணக்கம் சாரணி

தெத்திப் பல் என்பது அதுவும் ஒரு தனி அழகு தெரியாதா?? அழகான தெத்திப்பல் தெரியாதா?

அச்சோ நிலாவுக்கு தெத்திப்பல் இல்லைப்பா :D கவிதையில் வந்த தெத்திப்பல்லால் தான் காதலன் காதலை மறுத்தான் என்று திடமாகவும் சொல்ல முடியாது தானே :o

கவலைக்குறிய விடயம்,

ஆனான் கூறிய விதம் மிகவும் அழகு வெண்ணிலா!!

வாழ்த்துக்கள்

:( நன்றிகள் இனியவள்.

மறந்ததேன்.?

இவ்வளவு செய்தும் எதிர் தரப்பில் இருந்து நல்ல பதில்

வராததால் ஒரு தலை காதல் போல் இருக்கிறது.

:huh::lol::o இப்படி தானே இப்ப எல்லாம் நிறைய இருக்குது. ஆன்ரி ஆனாலும் காதலை பெண்கள் தெரிவிக்கும் போது ஆண்கள் மறுப்பார்களோ என்னமோ <_<

  • தொடங்கியவர்

கவிதை படித்தேன்

சுவைத்தேன்

திகைத்தேன்

பயந்தேன்

உன் கவிதை ஒரு" தேன்"

:rolleyes::( மாமா மாமா மாமா உங்களுக்கு விளங்குது உது தேன் என்று. ஆனால் விளங்க கூடியவர்களுக்கு மட்டும் ஏன் மாமா விளங்குதில்லை................ :(:( நன்றி மாமா :rolleyes:

  • தொடங்கியவர்

அட..நிலா அக்காவின் கவிதை..தை..ம்ம் வானிலாவை மறுக்கவோ இல்லாதுவிடில் வெறுக்கவோ முடியுமா என்ன..?? சில வேளை வானிலாவின் அழகை தள்ளி நின்று ரசிக்க நினைத்தானோ..னோ.. :D

என்ன நிலா..லா அக்கா...?? :rolleyes:

மறுத்ததேன்..ன் விடை தெரியாத கேள்வியை கவியில் கண்டேன்...காதலையும் கூடவே கண்டேன் கவியில் அக்கா..கா வாழ்த்துக்கள்..ள்.. :)

அப்ப நான் வரட்டா!!

ஆஹா..! ஜம்மு வாங்கோ எப்படி சுகம்?

அட அட அட மறுக்கவோ வெறுக்கவோ முடியுமா என கேட்பது அந்த வானிலவினையோ சொல்லுறியள்...? எந்த நிலாவை சொல்லுறியளோ.................. ம்ம் கடவுளுக்கு தான் வெளிச்சம்.

மறுத்தான் என்பதை அக்கா சும்மா சொல்லுறா ஆனால் அக்காவின் காதல் சக்சஸ் என்று விளங்கி தான் வாழ்த்து சொல்லிட்டு சிரிக்கிற போல இருக்குது. பேபிக்கு அக்காவின் கவிதையில் பொய் தெரியுதுபோல (அக்காவுக்கு தெத்திப்பல் இல்லை என்பது ) :rolleyes::(

இன்றுனை சந்தித்தேன்

தெத்திப்பல் தெரிய சிரித்தேன்

காதல்மனசை திறந்தேன்

இதை முதலே செய்திருந்தால் மேல செய்ததெல்லாம் செய்ய வேன்டி வந்திருக்கது. அதிலும் இன்பம் இருக்குத்தான்.ஆனால் அது மட்டும் கானும் என்றால் செய்யலாம். அதுக்கு மேல வேனும் என்றால் கவி வரைந்து கனாக்கான முன் காதலைச்சொல்வது மேல் :D

:( சஜீவன் அண்ணா நீங்கள் சொல்வது சரிதான்.

ஆனாலும் காதலை தெரிவிக்கையில் உடனே ஏற்றால் அதிலும் சுவாரசியம் இருக்காது தானே :( ......... நன்றீகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா கவிதையில் காதல் ரசம் சொட்டுகிறது கவிதை அழகு. வாழ்த்துக்கள் :D

உங்கள் காதலை யாராவது மறுத்தால் எனக்கும் ஜம்முக்கும் சொல்லுங்கோ ரெண்டுபேரும் போய் அவருக்கு ரெண்டு போட்டாவது ஓம் என்று சொல்லவைக்கிறோம் என்ன :):lol: ?

ஆஹா..! ஜம்மு வாங்கோ எப்படி சுகம்?

அட அட அட மறுக்கவோ வெறுக்கவோ முடியுமா என கேட்பது அந்த வானிலவினையோ சொல்லுறியள்...? எந்த நிலாவை சொல்லுறியளோ.................. ம்ம் கடவுளுக்கு தான் வெளிச்சம்.

மறுத்தான் என்பதை அக்கா சும்மா சொல்லுறா ஆனால் அக்காவின் காதல் சக்சஸ் என்று விளங்கி தான் வாழ்த்து சொல்லிட்டு சிரிக்கிற போல இருக்குது. பேபிக்கு அக்காவின் கவிதையில் பொய் தெரியுதுபோல (அக்காவுக்கு தெத்திப்பல் இல்லை என்பது )

ம்ம்..நான் நலமே..!!..தாங்கள் நிலா..லா அக்கா..கா..?? :( ..அச்சோ நான் வானிலாவை தான் சொன்னான் ஏன் எண்டா எண்ட நண்பிகள் ஒருத்திக்கும் "நிலா" எண்டு பேர் இல்ல.. :)

உது எப்படி இருக்கு..?? :lol:

ம்ம்..அக்கா..கா கவிதைக்கும் பொய் தானே அழகு..கு அந்த வகையில் இந்த கவிதையின் பொய்யையும் ரசித்தேன் அல்லோ நிலா..லா அக்கா..கா..!! :D

அப்ப நான் வரட்டா!!

உங்கள் காதலை யாராவது மறுத்தால் எனக்கும் ஜம்முக்கும் சொல்லுங்கோ ரெண்டுபேரும் போய் அவருக்கு ரெண்டு போட்டாவது ஓம் என்று சொல்லவைக்கிறோம் என்ன ?

இல்ல..ல சித்தப்பு..பு போட்டு வருவது காதல் இல்ல..ல அல்லோ..லோ ஆனபடியா நான் வரல்ல..ல இந்த விளையாட்டிற்கு சித்தப்பு.. :D

காதல்..ல் தானா வரணும் வந்தாலும் ஏன் எண்டு கேட்க ஏலா..வராட்டியும் ஏன் எண்டு கேட்க ஏலா..அல்லோ சித்தப்பு எப்பிரல் மாசத்திற்கு பிறகு எல்லாம் விளங்கும் சித்தபுவிற்கு.. :D

இப்பவே மகனின்ட வாழ்த்துக்கள்..ள்..!! :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்ல..ல சித்தப்பு..பு போட்டு வருவது காதல் இல்ல..ல அல்லோ..லோ ஆனபடியா நான் வரல்ல..ல இந்த விளையாட்டிற்கு சித்தப்பு.. :D

காதல்..ல் தானா வரணும் வந்தாலும் ஏன் எண்டு கேட்க ஏலா..வராட்டியும் ஏன் எண்டு கேட்க ஏலா..அல்லோ சித்தப்பு எப்பிரல் மாசத்திற்கு பிறகு எல்லாம் விளங்கும் சித்தபுவிற்கு.. :lol:

இப்பவே மகனின்ட வாழ்த்துக்கள்..ள்..!! :(

அப்ப நான் வரட்டா!!

அது சரியப்பா ஆனால் எங்கட வெண்ணிலா கவலைப்பட்டால் மனம் தாங்குமா :D ? அதுவும் கோகுலத்தின் ராதையல்லவா :D . அவவின் சந்தோசத்துக்காவது செய்யணும் நீங்களும் கட்டாயம் வரணும் (என்னால தனிய அடி வாங்கேலாது அல்லோ :D ) நாம அடிச்சு ஓம் என்று சொல்ல வைத்தாலும் அப்புறம் கொஞ்ச நாளால அந்த பையனும் நிஜமாவே வெண்ணிலாவை காதலிக்க தொடங்கிடுவார் அல்லோ(ஏனேன்றால் வெண்ணிலா ரொம்ப நல்ல பிள்ளையல்லோ கருணாநிதி கூட வெண்ணிலாவை பத்தி சொன்னவர் மறந்திட்டிங்களா :) ?) ஏப்பிரல் ஐயோ வேண்டாம் அதை நினைக்கவே பயமாயிருக்கு :( . நன்றி வாழ்த்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்னா இருக்கே வெண்ணிலா

உங்களுக்கும் ஏதாவது தோல்வியோ வெண்ணிலாஅக்கே :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரி! உங்கள் கவிதை மிகவும் அழகு!!

தங்கமலை ரகசியம் படத்தில் ஜமுனா அட இவரல்ல அவர். அவர் நடிகை.நடிகை.. அப்படியே ஆடி அசைந்து வந்து ஒரு குன்றின்மீது இருந்து ஒய்யாரமாய்ச் சாய்ந்து அப்படியே அண்ணாந்து நிலவைப் பார்த்து தன் தெற்றிப்பல் தெரிய மோகனமாய்ப் புண்ணகைத்து 'அமுதைப் பொழியும் நிலவே" என்று பாட அந்தப் பல், தெற்றிப்பல் அட...அட...அட..!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலாவிற்கு

காதலின் உணர்வுகளை அழகாக இனிய தமிழில் வடித்ததற்கு வாழ்த்துகள்

இளங்கவி

Edited by ilankavi

  • தொடங்கியவர்

வெண்ணிலா கவிதையில் காதல் ரசம் சொட்டுகிறது கவிதை அழகு. வாழ்த்துக்கள் :lol:

உங்கள் காதலை யாராவது மறுத்தால் எனக்கும் ஜம்முக்கும் சொல்லுங்கோ ரெண்டுபேரும் போய் அவருக்கு ரெண்டு போட்டாவது ஓம் என்று சொல்லவைக்கிறோம் என்ன :wub::( ?

:D நன்றிகள் சுப்பண்ணை...

என் காதலி யாருமே மறுக்கவில்லை. அதுக்காக நீங்களிருவரும் போக போறியளோ.? நன்னாவா இருக்கும்? ஹீஹீ இருப்பினும் நன்றிகள். ஆனால் காதல் தோற்கவில்லை. :lol:

  • தொடங்கியவர்

ம்ம்..நான் நலமே..!!..தாங்கள் நிலா..லா அக்கா..கா..?? :lol: ..அச்சோ நான் வானிலாவை தான் சொன்னான் ஏன் எண்டா எண்ட நண்பிகள் ஒருத்திக்கும் "நிலா" எண்டு பேர் இல்ல.. :D

உது எப்படி இருக்கு..?? :lol:

ம்ம்..அக்கா..கா கவிதைக்கும் பொய் தானே அழகு..கு அந்த வகையில் இந்த கவிதையின் பொய்யையும் ரசித்தேன் அல்லோ நிலா..லா அக்கா..கா..!! ^_^

அப்ப நான் வரட்டா!!

ஓ நிலா என்று யாருமே இல்லையோ. அப்பாடா இப்பதான் நிம்மதி :wub: இல்லை உங்களுக்கு இருக்கும் நண்பிகள் எல்லோரது பெயரும் இரண்டு எழுத்தில் இருப்பதனால் நிலா என்றும் இரண்டு எழுத்தில் யாராவது இருக்குமோ என்று ஒரு நினைப்பு :(

பொய் ரசித்தியளோ அப்ப சரி தான்ன்..

  • தொடங்கியவர்

அது சரியப்பா ஆனால் எங்கட வெண்ணிலா கவலைப்பட்டால் மனம் தாங்குமா :( ? அதுவும் கோகுலத்தின் ராதையல்லவா :D . அவவின் சந்தோசத்துக்காவது செய்யணும் நீங்களும் கட்டாயம் வரணும் (என்னால தனிய அடி வாங்கேலாது அல்லோ :( ) நாம அடிச்சு ஓம் என்று சொல்ல வைத்தாலும் அப்புறம் கொஞ்ச நாளால அந்த பையனும் நிஜமாவே வெண்ணிலாவை காதலிக்க தொடங்கிடுவார் அல்லோ(ஏனேன்றால் வெண்ணிலா ரொம்ப நல்ல பிள்ளையல்லோ கருணாநிதி கூட வெண்ணிலாவை பத்தி சொன்னவர் மறந்திட்டிங்களா :wub: ?) ஏப்பிரல் ஐயோ வேண்டாம் அதை நினைக்கவே பயமாயிருக்கு :D . நன்றி வாழ்த்துக்கு

:lol::lol: அச்சோ முடியலை என்னாலை இந்த பெரிய ஐஸ் :) தம்பிக்கு தெரியுய்ம் நிலாக்காவின் காதல் பற்ரியும் காதலன் பற்றியும். சும்மா இருங்கோ சுப்பண்ணை நீங்க. ^_^:)

  • தொடங்கியவர்

கவிதை நன்னா இருக்கே வெண்ணிலா

உங்களுக்கும் ஏதாவது தோல்வியோ வெண்ணிலாஅக்கே :wub:

நன்றிகள்

இல்லையே ஏன் இப்படி கேட்கிறீங்க முனிவா :lol:

வணக்கம் சகோதரி! உங்கள் கவிதை மிகவும் அழகு!!

தங்கமலை ரகசியம் படத்தில் ஜமுனா அட இவரல்ல அவர். அவர் நடிகை.நடிகை.. அப்படியே ஆடி அசைந்து வந்து ஒரு குன்றின்மீது இருந்து ஒய்யாரமாய்ச் சாய்ந்து அப்படியே அண்ணாந்து நிலவைப் பார்த்து தன் தெற்றிப்பல் தெரிய மோகனமாய்ப் புண்ணகைத்து 'அமுதைப் பொழியும் நிலவே" என்று பாட அந்தப் பல், தெற்றிப்பல் அட...அட...அட..!!!!

:lol: நன்றிகள் சுவி பெரியப்பா

நல்லாகத்தான் தங்கமலை படம் பார்த்திருக்கிறியள் போல. எங்கை கனநாளாக காணல்லை

வெண்ணிலாவிற்கு

காதலின் உணர்வுகளை அழகாக இனிய தமிழில் வடித்ததற்கு வாழ்த்துகள்

இளங்கவி

நன்றிகள் இளங்கவி.

என்ன இளங்கவி சுகமோ? கனநாளாக காணவே இல்லை. அக்கினிக்குஞ்சுக்கு பின்னர் ஆளையே காணக்கிடைக்கலை. சுகமோ? :D:(

வெண்ணிலா...

கவிதை படித்தேன்.

நானும் சுவைத்தேன்..

யாவும் தேன்..இறுதியிரண்டு

வரிகளும்தான் வலிப்பதேன்..

வாட்டுவதேன்..அதை வரித்ததேன்..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கறுப்பி அக்கா.

ஓ காதலை தெரிவித்து அது மறுக்கப்பட்டால் வேதனை வருமா? இன்னமும் அனுபவிக்கவில்லை................. அனுபவிக்க வேண்டி வராது என நினைக்கின்றேன். ம்ம்ம்ம் பார்ப்பம் அபப்டி ஒரு நிலை வந்தால் அதையும் கவிதையாக்குவம் :rolleyes:

இந்தக் கதைதானே வேணாங்கிறது..! :D

:unsure::( மாமா மாமா மாமா உங்களுக்கு விளங்குது உது தேன் என்று. ஆனால் விளங்க கூடியவர்களுக்கு மட்டும் ஏன் மாமா விளங்குதில்லை................ :o:o நன்றி மாமா :rolleyes:

கவலைப்படாதேங்கோ.. எல்லாம் கைகூடும். கல்யாணத்துக்குப் பிறகு ஆளை வ‌ச்சு மிதி மிதி எண்டு மிதிக்கலாம். அதோட அப்பிடியே பிளேட்டைத் திருப்பிப் போட்டு நீங்கதானே என்னக் காதலிச்சீங்க எண்டு ஒரு குண்டையும் தூக்கிப் போட்டுடலாம்..! :rolleyes::D

  • தொடங்கியவர்

வெண்ணிலா...

கவிதை படித்தேன்.

நானும் சுவைத்தேன்..

யாவும் தேன்..இறுதியிரண்டு

வரிகளும்தான் வலிப்பதேன்..

வாட்டுவதேன்..அதை வரித்ததேன்..

:rolleyes: வணக்கம் விகடகவி

கவிதையின் இறுதி இரண்டு வரிகளும் வலித்ததேன்? மறுத்ததாலா வெறுத்ததாலா? சிலவேளை முத்துப்பல் தெரிய சிரித்திருப்பின் இப்படி தேனாக இருந்திருக்காது அப்படிதானே விகடகவி :rolleyes::rolleyes:

தேனை சுவைத்தமைக்கு நன்றிகள் :unsure:

  • தொடங்கியவர்

இந்தக் கதைதானே வேணாங்கிறது..! :o

கவலைப்படாதேங்கோ.. எல்லாம் கைகூடும். கல்யாணத்துக்குப் பிறகு ஆளை வ‌ச்சு மிதி மிதி எண்டு மிதிக்கலாம். அதோட அப்பிடியே பிளேட்டைத் திருப்பிப் போட்டு நீங்கதானே என்னக் காதலிச்சீங்க எண்டு ஒரு குண்டையும் தூக்கிப் போட்டுடலாம்..! :rolleyes::o

:rolleyes::rolleyes: எந்தக்கதை வேணாங்கிறது டங்குவார்.......

பிளேட்டை எல்லாம் திருப்பி போடுறவா நிலா இல்லையுங்கோ எல்லாமே நியாயத்தின்படிதான். தப்பு செய்தால் மிதிக்கிறதில் ஏது தயக்கம்? :unsure::(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.