Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்றிகள் பலகோடி சொந்தங்களே

Featured Replies

தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் கழகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த தொடருந்து மறியல் போராட்டம் தமிழ்நாடு காவல்துறையால் தடைசெய்யப்பட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள அணிதிரண்டோர் அனைவரும் கைது செய்யப்பட்டதால் இன்று சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே அறிவித்திருந்தபடி இன்று செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே தொடருந்து மறியல் போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திராவிடர் கழகத்தினர் சென்னை - வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் திடலில் குவிந்தனர்.

இவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் போன்ற அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வந்திருந்தனர்.

பெரியார் திடலிலிருந்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் போராட்டத்தில் பங்கேற்க வந்தோர் அணிவகுத்து, ஈ.வெ.கி.சம்பத் வீதி வழியாக உரிமை முழக்கமிட்டுச் சென்றனர். அவர்களை வழிமறித்த காவல்துறையினர் கைது செய்தனர்.

கி.வீரமணி, தொல். திருமாவளவன், பாவலர் அறிவுமதி, இயக்குநர் சீமான், அன்பு தென்னரசன், பேராசிரியர் தெய்வநாயகம், வா.மு. சேதுராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன் தொடர்ந்து அணி அணியாக போராட்டத்தில் ஈடுபட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்ட்டோரில் திராவிடர் கழக பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு, செயலவைத் தலைவர் இராஜகிரி கோ.தங்கராசு, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்களான துரை. சந்திரசேகரன், இரா. குணசேகரன், டொக்டர் பிறைநுதல் செல்வி, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், மாநில மாணவர் அணி அமைப்பாளர்கள் கா.எழிலரசன், றஞ்சித்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் க.திருமகள், மாநில மகளிர் அணி அமைப்பாளர் தஞ்சை கலைச்செல்வி, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் கலைவாணி ஆகியோரும் அடங்குவர்.

காவல்துறை கொண்டு வந்த வாகனங்கள் போதாமையால் திருப்பித் திருப்பி வாகனங்களைக் கொண்டு வந்து ஏற்றிச் செல்லப்பட்டவர்கள் கண்ணப்பர் திடலில் ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். மண்டபம் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டோர் நிரம்பி வழிந்தனர்.

போராட்டம் தொடங்குவதற்கு முன்னர் பெரியார் திடலுக்கு வெளியே அமைக்கப்பட்ட பந்தலில் சிறைக்குச் செல்லக் கூடியிருந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? என்பதை விளக்கித் தலைவர்கள் உரையாற்றினர்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

தமிழ்நாட்டிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள இலங்கையில் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிந்து அங்குள்ள தமிழர்களை அழிக்கின்றனர். அவர்களின் வாழ்வுரிமையை அழிக்கின்றனர்.

பொதுமக்கள் என்று சொல்லக்கூடிய அப்பாவி மக்கள் காடுகளில் ஓடி ஒளிந்தாலும் அங்கும் சிங்கள இராணுவப் படை குண்டுவீசி அழிக்கின்றது. இலங்கையில் நடைபெறுகின்ற இதுபோன்ற இனப் படுகொலை உலகில் வேறு எந்த நாட்டிலும் நடந்திருக்காது.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டு வருகின்றது. உலக சமாதான நாள், உலக ஒற்றுமை நாள் என்று பேசுகின்றார்களே தவிர, உலக அரங்கில் அதற்கு அர்த்தமற்ற சூழ்நிலைதான் விளங்குகின்றது.

சற்று நேரத்திற்கு முன்புகூட இலங்கையிலிருந்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், என்னைச் சந்தித்து இலங்கையில் எத்தகைய இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கின்றது என்பது தொடர்பில் கூறினார்.

இரண்டாவதாக, தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்கின்ற தமிழக கடற்றொழிலாளர்களை சிங்கள கடற்படையினர் காக்கை, குருவியை சுட்டுத் தள்ளுவதைப்போல சுடுகின்றனர். இது அன்றாடம் நடந்து வருகின்ற ஒரு தொடர்கதை போன்ற செய்தியாகி விட்டது.

மூன்றாவதாக, ஒரிசா-கர்நாடகம் போன்ற பல மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட

தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றி சொல்வதோடு இப் போராட்டங்கள் டில்லியில் நடத்தினால்தான் இனி ஏதாவது சிங்கின் மண்டையில் ஏறும் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் என்ற வார்த்தை போதாது உங்களுக்கு என் உறவுகளே.........

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களே தமது சொந்தங்களின் துயரை மறந்து மறைத்து வாழ முனைய நினைக்கும் நிலையில்.. தமிழக மக்களில் ஒரு பகுதி மக்களின் எழுச்சி.. தமிழீழ தாயக மக்களுக்கு நிச்சயம்.. ஒரு உந்து சக்தியாக அமையும்..! உங்கள் ஆதரவு பல தளங்களிலும் இன்னும் பெருகவும் விரிவாகவும் வேண்டிக் கொள்கின்றோம்.. ஈழத்தமிழனாய்..!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பல தமிழக உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

சரியான காலத்தில் தமிழக உறவுகள் காணும் இந்த எழுச்சி நிச்சயம் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும். இப்போராட்டம் மேலும் பல்கிப் பெருக வேண்டும். தமிழன் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்க வேண்டும்..!

தமிழக உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!!

நன்றிகள் என்ற வார்த்தை போதாது உங்களுக்கு என் உறவுகளே.........
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எப்படித்தான் கத்தினாலும் கருணாநிதியின் காதில் விழவே விழாது.

நன்றிகள் பல....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி தமிழக மக்களே.

  • கருத்துக்கள உறவுகள்

இப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக உறவுகளுக்கும் ,

இப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னின்று நடாத்திய தமிழ் ஆர்வலர்களுக்கும் ,

நன்றிகள் பல கோடி உரித்தாகட்டும் .

வணக்கம்

தமிழக உறவுகளுக்கு எமது நன்றிகள்.

நன்றி திருமாவளவன் அவர்கட்கு

போராட்டத்தில் கலந்து கொண்ட கிரித்துவ முன்னணிப்பாதிரியாருக்கும் முசிலிம் லீக்கின் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் நன்றிகள்.

இங்கு என்னமோ நடப்பது போலவும் இருக்கு. இல்லாத போலவும் இருக்கும்.

ஒன்றும் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

:) சமுத்திரத்தின் அந்தப்பக்கம் இருக்கும் எமது உறவுகளின் இந்த உணர்வெழுச்சி எமக்கு இன்று இன்றி அமையாதது.

நன்றி சொந்தங்களே!!! சொல்வதற்கு வார்த்தைகளில்லை !!!!!!

யாழ்க்கள நண்பர்களுக்கு! தயவுசெய்து இந்த எழுச்சிக்கு சாதி, மத , அரசியல் மூலம் பூச வேண்டாமே ?!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ ஆதரவாளர் அனைவருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தமிழக உறவுகளுக்கும் நன்றிகள்

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • தொடங்கியவர்

நண்பர்களே எமக்காக போராடுபவர்கள் யாரென நமக்கு தெரியும்

ஆனாலும் பிராமண திராவிட என இங்கு சண்டை பிடிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள் எமக்காக குரல் கொடுப்பவர்கள் என மறந்தும் விமர்சிக்க பலர் உண்டு ஆகவே அவர்களை கொச்சைப்பாடுத்துவதை தவிர்க்கும் முகமாக இந்த பிரச்சினையை விட்டுவிடவூம்

தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி ஈழத் தமிழருக்காகக் குரல்கொடுக்கும் அனைவருக்கும் பலகோடி நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.