Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுளுடன் ஒரு சுவாரஸ்யமான நேர்காணல்

Featured Replies

கடவுளுடன் ஒரு சுவாரஸ்யமான நேர்காணல் - காயத்ரி

நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விதமான, வித்தியாசமான பல்துறை வித்தகர்களி‎ன் நேர்காணல்களைக் கண்டிருக்கிறோம். மனிதன் - கடவுளின் இடையே அப்படி ஒரு நேர்காணல் நடந்தால் எப்படியிருக்கும்? கடவுளிடம் இதைக் கேட்கவேண்டும், அதைக் கேட்கவேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் உண்டுதானே?

மனித‎ன் : மனிதனின் சிறு சிறு குறைபாடுகள் யாவை?

கடவுள் : எளிதான விஷயங்களை கடினமாக்கிக் கொள்ளுவதே.

மனிதன்: மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி?

கடவுள்: மிகவும் எளிய வழிகள் - எதையும் எதிர்பார்க்காதீர்கள்; உங்களிடம் உள்ள அன்பை, மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; குழந்தைகளாக வாழ்ந்திடுங்கள்; உண்மையே பேசிடுங்கள்; உண்மையே பேசுவதால் எதையும் நினைவில் கொள்ளத் தேவையில்லை.

மனிதன்: பிரச்சினைகள் ஏன் ஏற்படுகி‎ன்றன?

கடவுள்: திறமைகளை விட மனிதனின் தேவைகள் அதிகரிப்பதும், அவைகளை நிறைவேற்ற முயல்வதே பிரச்சினைகள் ஏற்படக்காரணம்.

மனிதன்: பிரச்சினைகளில் ஒரு முடிவுக்கு வர முடியாதபோது என்ன செய்ய வேண்டும்?

கடவுள்: காரணங்களை ஆராயாமல், உன்னுடைய உள்ளம் சொல்வதைக்கேட்டு நடந்திடு.

மனிதன்: தோல்வியினால் வெறுப்பு, மனஅழுத்தம் போன்ற உணர்வுகள் ஏற்படும் போது என்ன செய்வது?

கடவுள்: நடக்க இயலாத போது பறக்க இயலும் என்பதை நினைவில் கொள்.

மனிதன்: என்னுள்ளே பல வகையான எண்ணங்கள் தோன்றுகி‎ன்றன. எதனை செய்வது? எதனை விடுவது?

கடவுள்: அனைத்தையும் கேட்கப் பழகு. கேட்பதென்பது நீ எண்ணுவது போல் எளிதல்ல. எதனையும் ஆராயாமல் முடிவு செய்யக் கூடாது. உன்னுடைய காரணங்கள், புரிதலில் இடையிடாமல் பார்த்துக்கொள். நீ முழுமையாக அறியாத எதைப் பற்றியும் விமர்சிக்காதே. உன்னைச் சுற்றி ஏற்பட்டுள்ள தடைகளை உடைத்தெறிந்து வெளியே வா. உன் மூளைக்கு ஓய்வு கொடு. தோன்றும் எண்ணங்களை அமைதியாக கேட்கப் பழகு. விளக்கங்கள் தோன்றும். ஆழ்ந்த உண்மையை அறிவாய்.

மனிதன்: மற்றவர்களிடம் நிலையான அன்பு கொள்வதெளிதா?

கடவுள்: உண்மையை அடித்தளமாகக் கொண்டு மற்றவர்களிடம் அன்பு கொள். பொய், ஏமாற்று வேலை உறவுகளை உடைத்தெறிந்துவிடும். உண்மை வெளிவரும்போது உறவுகள் காற்றில் கரைந்து காணாமல் போய்விடும். செய்யும் தவறை ஒப்புக் கொள்வதன் மூலம் நிச்சயமாக மன்னிப்பைப் பெற முடியும். உறவுகளும் உறுதி பெறுவதைக் காண்பாய்.

மனிதன்: அன்பு கொள்வதில் விதிகள் தேவையா?

கடவுள்: அனைவரிடமும் உள்ள குணாதிசயம் இது. உதாரணமாக குழந்தைகள் வளரும்போது அவர்களிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறீர்கள். நன்றாக படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் இப்படிப் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. அவைகளை அவர்கள் பூர்த்தி செய்யும்போது பாராட்டுகிறீர்கள். செய்யாத போது கண்டிக்கிறீர்கள். அன்பை மறுக்கிறீர்கள். ஆசிரியர்களிடமும் இதனையே காணலாம். மேலதிகாரிகள், வாழ்க்கைத் துணைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. நிராகரிப்பு, வெறுப்பு போன்றவைகளே மிஞ்சுகின்றன, விதிகள் மீறப்படும்போது.

ஆனால் விதிமுறைகள் நிறைந்த அன்பின் வாழ்நாளின் நீளம் குறைவு. ஏற்படும் அனுபவங்கள் மூலம் இதை உணர்கிறீர்கள் அல்லவா? பெற்றோர்கள், நண்பர்கள், குழந்தைகள், வாழ்க்கைத் துணைகள் போன்ற அனைவரிடமும் அளவற்ற, நிபந்தனையில்லா அன்பு கொள். அதுவே அமைதியான வாழ்விற்கு வழிவகுக்கும்.

நன்றி

நிலாச்சாரல்

நன்றிங்கோ நன்றி உங்க இணைப்பிற்கு :):)

உண்மையே பேசிடுங்கள்; உண்மையே பேசுவதால் எதையும் நினைவில் கொள்ளத் தேவையில்லை - சத்தியமான உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

இப்புடியே வாழ்ந்தீங்க என்றால் மணி பாடு கொண்டாட்டம் தான்.

  • தொடங்கியவர்

நன்றிங்கோ நன்றி உங்க இணைப்பிற்கு :):D

உண்மையே பேசிடுங்கள்; உண்மையே பேசுவதால் எதையும் நினைவில் கொள்ளத் தேவையில்லை - சத்தியமான உண்மை

ஆகா வசம்பண்ணா அதுதான் உண்மை எண்டு சொன்னாச்சே அது என்ன பிறகு சத்தியமான உண்மை???

இப்புடியே வாழ்ந்தீங்க என்றால் மணி பாடு கொண்டாட்டம் தான்.

:):) ம்ம்ம் முடிந்தளவு வாழ்கிறேன்.

சிலது கஷ்டம் இல்லையா??? :)

ரசிகை! கடவுள் பழங்காலத்து ஆள்.. அப்பிடித்தான் அலம்புவார்.. அதைக் கேட்டு வாழ்ந்தால்.. இந்தக் காலத்தில தலையில மிளகாய் அரைச்சு சட்டினி போட்டுடுவாங்க.. சொல்லிட்டேன் கவனம்!! :) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் இணைப்பிற்கு நன்றி :)

நல்ல இணைப்பு. நன்றி ரசிகை. :)

அது சரி இந்த கடவுளை நான் பார்க்கலாமா? :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இணைப்பு. நன்றி ரசிகை. :)

அது சரி இந்த கடவுளை நான் பார்க்கலாமா? :)

:) இப்ப பார்க்க முயற்சி செய்ய வேண்டாம் ...65..70 வயதுக்கு பிறகு முயற்சி செய்து பாருங்கோ... :)

Edited by putthan

ஆஹா காயத்ரி கடவுளோட நேர்காணல் எல்லாம் செய்திருக்கிறா :)

கடவுள் எப்படி இருந்தவராம்? ஆமா இந்த பேட்டி கொடுத்த கடவுள் ஆண் கடவுளா பெண் கடவுளா?

பெண் கடவுள் என நினைக்கிறேன் அன்பை பற்றி எல்லாம் வடிவா பேட்டி அளித்திருக்கிறா :)

  • கருத்துக்கள உறவுகள்

அடடா! இந்தக் கேள்விளையெல்லாம் பிரகாஷ்ராஜ் ரொம்ப சுலபமாய்ச் சமாளிச்சுப் போடுவார்!!!

இனைப்புக்கு நன்றி சகோதரி!!!

ம்ம்..எண்ணட்ட மட்டும் இந்த கடவுள் வாறாறே இல்லை..இல்லாட்டிக்கு எப்படி எல்லாம் கேள்வி கேட்க ஆயத்தமா இருக்கிறன்..ன் பாருங்கோ..கோ..!!.. :D

அது எல்லாம் சரி ரசிகை..கை அக்கா..கா..!!

கடவுள் எண்டா யார்..ர்..??..ஏன் அவருக்கு "கடவுள்" எண்ட பேர் வந்தது எண்டு உங்களுக்கு தெரியுமோ..மோ :) இது தான் எண்ட சந்தேகம்..ம் இந்த கேள்விக்கு நீங்க விடையை சொன்னா நீங்க கடவுள் ஆகிடுவியள் சொல்லிட்டன்..ன் ஆனபடியா கண்டிப்பா சொல்லனும்..ம்.. :(

ம்ம்..கடவுளோட செய்த நேர்காணல் நன்றாக தான் இருக்கு இணைப்பிறகு..கு நன்றி.. :D ஆனா உவையற்றை எல்லாம் கேட்க தான் நன்னா இருக்கும் செய்ய நினைத்தா பெறகு..கு வாழ்க்கையில சுவாரசியமே இல்லாம போயிடும் என்னை விடுங்கோ :) உங்கள மாதிரி எனக்கு வயசு போன பெறகு..கு..

உங்க கூட்டணியில சேர்ந்து கொள்ளுறன்..ன்..(கடவுளை உங்களை காப்பாத்துவராக..).. :D

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா கண்ணுக்கு தெரியாதமட்டும் தான் காற்றுக்கும் வலிமை கடவுளுக்கு வலிமை..இது தான் வாழ்க்கை..கை.." :D

அப்ப நான் வரட்டா!!

ஆஹா காயத்ரி கடவுளோட நேர்காணல் எல்லாம் செய்திருக்கிறா :D

:unsure::D

அப்ப நான் வரட்டா!!

:blink: இப்ப பார்க்க முயற்சி செய்ய வேண்டாம் ...65..70 வயதுக்கு பிறகு முயற்சி செய்து பாருங்கோ... :lol:

ஓ... அப்ப தான் கடவுளை காணக்கூடிய பக்குவம் வரும்... என்ன...? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.