Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூயாவுடனான ஒலியுரையாடல்

Featured Replies

அலுப்புத்தட்டாத ஓர் உரையாடல் நன்றாய் இருக்கிறது.

வாழ்த்துகள்.

நன்றி.. :lol:

நல்லதொரு முயற்சி சயந்தன். தூய்ஸ்சின் குரல் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் குரலில் ஏதும் மாற்றமா? எனக்கு வேறுபாடு உள்ளது போலத் தோன்றுகின்றது!

அப்படியா தூய்ஸ்? தூர இருந்து பேசுற போல இருக்கா?

தூயாவின் தமிழ் ஆர்வம் பிரமிக்க வைக்கின்றது. புலம் பெயர்ந்த மக்களுக்கு அவர் உதாரணமாக திகழ்வார் என்பதில் ஐயமில்லை. சயந்தன் மட்டும் பேட்டி காண்பதில் சளைத்தவரா என்ன? இருவரின் முயற்சிக்கும் நன்றி. அடுத்தது ஜம்முவா?

யம்மு இல்லை. ஒரே குடும்பத்தில் இருந்து இருவரை தொடர்ந்து பேட்டி கண்டால் பிரச்சனை வருமே...கிகிகி

நல்ல முயற்சி பாராட்டுக்கள்

நன்றி :lol:

முதன் முறையாக யாழ் களத்தில் , உள்ள சயந்தன் , தூயா இருவரின் குரலை

அதுகும் ஒரே நாளில் கேட்டது மிக்க மகிழ்ச்சி .

கேட்டுமா மகிழ்ச்சியா இருக்கிங்க சிறி? கிகிகி

  • Replies 63
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தூயா..........

தூயாவின் ஸ்பெசல் சமையல்.. அது கூட சிறப்பானதே..!

நெடுக்ஸ், அதை சயந்தன் அண்ணா வெட்டிவிட்டார்...பொறாமை அவருக்கு நான் நல்லா சமைக்கிறேன்னு..என்னன்னு கேளுங்க

தூயாவின் எழுத்தில் மட்டுமல்ல கதையிலும் தமிழின் முதிர்ச்சி தெரிகிறது. அடுத்ததாய் நெடுக்கு சொன்னமாதிரி சமையல் பற்றியும் கேட்டிருந்தால் சிலநேரம் தூயா மாட்டுப்பட்டிருப்பார்.அல்லத
  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி.. நான் யாழ்ப்பாணத்து தமிழை கஸ்டப்பட்டு கதைச்சு இருந்தாலும் தமிழ்நாட்டு தமிழில போட்டு உங்கள் ஒருத்தரையும் வாட்டி எடுக்க இல்லைத்தானே?

யாழ்ப்பாணத்தையே காணவில்லை ......யாழ்ப்பாணதமிழிற்க்கு எங்க போறது :lol:

தூயா தனது சமையல் குறிப்புகள் குறித்து பரபரப்புத் தகவல்களை வெளியிட்டிருந்தார். அவை தனியாக யாழ்களத்திற்கென பிரத்தியேகமாக வரும் :lol:

எனக்கு உடனடியாக "டோட்டல் இமேஜை டமேஜ் பண்ண ஆசையா" என்பதை மொழி பெயர்த்து தருவீர்களா? அண்ணாச்சி வந்தால் கஸ்டமாகிடும். ;)

உண்மையில் யாழின் தொண்டு என்பது தூயாவை மட்டுமல்ல தெரியாத எத்தனை தமிழ்தெரியாத தமிழர்களை தமிழர்களாக்குகிறது என்பது 100வீதம் உண்மை

இதை அனைவரும் ஒத்துக்கொள்வார்கள் என நினைக்கின்றேன்..

நல்ல முயற்சி பாராட்டுக்கள்

:lol:

வாழ்த்துக்கள் தூயா..........

மிக்க நன்றி புத்து :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒலியுரையாடலை இப்பொழுது தான் கேட்டேன். பேட்டி இடையில் துண்டிக்கப்பட்டிருக்கிறது. முழுமையாகக் கேட்க முடியவில்லை.

சயந்தனுக்கு நல்ல கம்பீரமான குரல். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

தூயாவின் உச்சரிப்பில் தமிழ் நாட்டு வாடை வீசுகிறது. சயந்தன் தூயாவை ஒரு பாட்டுப் பாடக் கேட்டிருக்கலாம். இனிமையாகப் பாடுவார் போலக் கிடக்கிறது. நானும் என் ஈழமும் பகுதி வேறு மொழிகளில் வருவது மிகவும் வரவேற்கக்கூடியவிடயம். அவர் படிக்கும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு எமது பிரச்சனை பற்றித் தெரியப்படுத்தியவிடயம் பாராட்டக்கூடிய விடயம். நாங்களும் எங்களுடன் பழகும் வேற்று நாட்டவர்களுக்கு எமது பிரச்சனைகளைச் சொல்ல வேண்டும். நான் என்னுடன் வேலை செய்யும் 3 அவுஸ்திரெலியர்களுக்கு ஒரளவு இலங்கைப் பிரச்சனையை விளங்கப்படுத்திவிட்டேன்.

பாராட்டுக்கள் கேள்வி கேட்ட சயந்தனுக்கும், பதில் சொன்ன தூயாவுக்கும்

தூயாவின் உச்சரிப்பில் தமிழ் நாட்டு வாடை வீசுகிறது. சயந்தன் தூயாவை ஒரு பாட்டுப் பாடக் கேட்டிருக்கலாம். இனிமையாகப் பாடுவார் போலக் கிடக்கிறது.

கந்தப்பு, இப்படித்தான் உனக்கு எழுத வரும்னு சொல்லி சொல்லி நானும் எழுத ஆரம்பிச்சேன். அதுக்கே நாடு தாங்கலை. இதில பாட்டு வேறா? வேணாம்.....பாவம் சனங்க..கிகிகி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேட்டி இடையில் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

அவ்வளவும்தான் கந்தப்பு :lol:

அவ்வளவும்தான் கந்தப்பு :lol:

ஆமாம் இறுதியில் நன்றி வணக்கம் வெட்டுப்பட்டுவிட்டதாக சயந்தன் அண்ணா சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்ச்சி.இருவருக்கும்பாராட

நல்ல முயற்ச்சி

ஒலிப்பதிவு கேட்டுமுடிக்குமட்டும் நெஞ்சு படக்படக் என்று

இருந்தது.

தூயா அதிகம் பாவிக்கும் சொல்லான "ஏன் இந்தகொலைவெறி"

சயந்தனிடம் கேட்டுவிடுவாவோ என்று பயந்தேன் அப்படி ஒண்டும் நடக்கவில்லையா?

அல்லது சயந்தன் சென்சார் பன்னீட்டீங்களா? கீ கீ கீ :lol:

நல்லதொரு முயற்ச்சி.இருவருக்கும்பாராட

நல்ல முயற்சி சயந்தன். வாழ்த்துகள். தூயாவின் குரல் இனிமை, அவரது குணம் போலவே. அவரது தமிழ் எந்த தமிழ் என்று சொல்லமுடியவில்லை என்று அன்பர்கள் சொல்வது உண்மை தான், ஆனால் அதுக்கு அவசியம் இல்லையே. அவரது தமிழ் சரளமாக பாய்கிறதே.

அருமையான முதல் பதிவு ஒரு அட்டகாசமான பதிவாளருடன் ஆரம்பித்துள்ளது. தொடரட்டும்.

எனக்கு தூயாவின் தமிழ் ரொம்ப பிடிச்சிருக்கு!!!

நானும் சிறுவயதில் தமிழகத்தில் தான் படித்தேன் (10 வயது வரை).

கொஞ்சம் இப்படித்தான் தமிழ் பேசுவேன்!!!

Edited by vettri-vel

தூயா புலம் பெயர் நாட்டில் தமிழ் படித்து, தமிழ் பேச எழுதி பழகி, அவர் தற்போது எழுதும் கதைக்களில் நல்ல ஒரு முதிர்ச்சி தெரிகிறது. இந்தளவுக்கு அவரால் செய்ய முடிந்திருப்பது அவரின் இடை விடாத முயற்சியும், அவரின் ஆர்வத்தையும் காட்டுகிறது. இந்த நிலையில் அவர் பேசும் தமிழ் யாழ்ப்பாண வழக்கில் இல்லை என்று கேட்பது எந்தளவுக்கு பொருத்தம்? பேசும் தமிழ் என்பது அன்றாடம் பார்க்கும், கற்கும் இடங்களில் இருந்து வருகிறது. யாழ்ப்பணதிலேயே வாழாத ஒருவரிடம் எப்படி யாழ்ப்பாண தமிழை எதிர்பார்க்க முடியும். இது எப்படி இருக்கிறது என்றால் ஈழத்தில் ஆங்கிலம் கற்று பேசும் ஒருவரிடம் நீங்கள் ஏன் கனேடிய/ இங்கிலாந்து உச்சரிப்பில் ஆங்கிலம் பேசவில்லை என்று கேட்பது போன்றது. அவருக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர்/ அயல் வீட்டவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்று எங்கொ சொன்ன நினைவு. தூயா தான் அதை உறுதிப்படுத்த வேண்டும்.

Edited by KULAKADDAN

தூயா புலம்பெயர் சூழலில் தமிழைப் படிப்பது, படிப்பிப்பது, விரும்பிப் படிக்க வைப்பது எவ்வளவு கடினம் என்பதை நடைமுறையில் அனுபவித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.அந்த வகையில் என்றுமே என்னை வியப்பில் ஆழ்த்துபவர் நீங்கள்.

உங்கள் குரல் தான் ,உங்கள் எழுதுக்களில் இருந்து மாறுப்பட்டு இருக்கிறது.சிலவேளை ஒருவரின் எழுதுக்களில் இருந்து இவர் இப்படி இருப்பார் என்னும் ஒரு வகை பிம்பம் ஏற்படுவதனால் இருக்கலாம்.உங்களின் எழுத்தின் வயதை விட இளமையானதாக குரல் இருப்பதைப் போல் பிரம்மை.

தூயாவின் குரலைக் கேட்க வைத்த சயந்தனுக்கு நன்றிகள்.

அடுத்தது யார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தது யார்?

அடுத்து தூயா சயந்தனை பேட்டி காணுவா.. :lol:

தூயாவின் பேட்டி இனிமையாக இருக்கின்றது. புலத்தில் எம் தமிழ் இளைய தலைமுறை தன் அடையாளங்களை தேடிக் கொள்ளும் ஓர் அவாவைக் கொண்ட ஒரு சமூகமாக மாறப் போவதன் முதல் ஆரம்ப குறிகளை கொண்டதாக தூயாவை காண முடிகின்றது, மகிழ்சியாகவும் பெருமையடைய கூடியதாக இருக்கின்றது. தன் இனத்தின் மீதான அழிவுகளையும் அதன் தாக்கத்தினையும் உணர்வுபூர்வமாக உணர்ந்து கொண்ட ஒரு புலம் பெயர் இளம் தலைமுறையின் பிரதிநிதியாக தூயா இருக்கின்றார்

குரலும், அதனை வெளிப்படுத்தும் மொழியும் அவவின் கருத்துகளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றது

------------

முரளி...,

யாழ்பாணத் தமிழ் நடை மட்டும் தான் தமிழ் நடையா? அதுதான் முழு இலங்கை தமிழ் மக்களின் ஏகோபித்த மொழி நடையாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்றீர்களா? இதுவும் ஒரு பிரதேச வாதம்தான். புரிந்து கொள்ளுங்கள்.

-நிழலி-

Edited by NIZHALI

நல்ல முயற்சி சயந்தன். வாழ்த்துகள். தூயாவின் குரல் இனிமை, அவரது குணம் போலவே. அவரது தமிழ் எந்த தமிழ் என்று சொல்லமுடியவில்லை என்று அன்பர்கள் சொல்வது உண்மை தான், ஆனால் அதுக்கு அவசியம் இல்லையே. அவரது தமிழ் சரளமாக பாய்கிறதே.

அருமையான முதல் பதிவு ஒரு அட்டகாசமான பதிவாளருடன் ஆரம்பித்துள்ளது. தொடரட்டும்.

Eas உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன். முதலாவதாக என்னை பேட்டி கண்டு ஒத்திகை பார்த்திருக்கார். அது தான் உண்மை :lol:

எனக்கு தூயாவின் தமிழ் ரொம்ப பிடிச்சிருக்கு!!!

நானும் சிறுவயதில் தமிழகத்தில் தான் படித்தேன் (10 வயது வரை).

கொஞ்சம் இப்படித்தான் தமிழ் பேசுவேன்!!!

:D என்னை போல ஒருவரை காண்பதில் சந்தோசம்...ஆனால் நான் இந்தியாவில் வசித்ததில்லை...இரு தடவை சுற்றுலாவிற்கு சென்றுள்ளேன். அவ்வளவே :o

அவருக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர்/ அயல் வீட்டவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்று எங்கொ சொன்ன நினைவு. தூயா தான் அதை உறுதிப்படுத்த வேண்டும்.

எப்படி குளம்ஸ் நினைவில வச்சிருக்கிங்க...இதை நான் சில வருடங்களுக்கு முன்னர் யாழில் சொல்லியிருந்தேன்..:o

உங்கள் குரல் தான் ,உங்கள் எழுதுக்களில் இருந்து மாறுப்பட்டு இருக்கிறது.

அதனால் தானாக்கும் நான் இது நாள் வரை பேசவேயில்லை..கிகிகிகி

எழுதுவது அதிகம் நான் பேசுவதை விட..

அடுத்து தூயா சயந்தனை பேட்டி காணுவா.. :)

சயந்தன் அண்ணா யாரை பேட்டி எடுப்பார் என தெரியலை

ஆனால்

அவரை பேட்டி கண்டு பழி வாங்கலாம் என எனக்கு யோசனை உண்டு தான்.. :lol:

Edited by தூயா

குரலும், அதனை வெளிப்படுத்தும் மொழியும் அவவின் கருத்துகளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றது

-நிழலி-

மிக்க நன்றி நிழலி. உங்கள் வலைப்பூ பார்த்தேன். நன்றாக உள்ளது. திரட்டிகளிலும் இணையுங்கள்.

அட அண்ணாமாருக்கு கோவம் வந்திட்டுது போல. தூயா சிறுவயதில தாயகத்தில இருந்து இருக்கிறா. பழைய நினைவுகள் எல்லாம் அவவுக்குஅப்பிடியே இருக்கிது, தவிர அவாவின் பல ஆக்கங்களை பார்த்தபின்னர் யாழ்ப்பாணத்தமிழ் கதையில இருக்கும் எண்டு நினைச்சு இருந்தன். இஞ்ச எனக்கு தெரிஞ்ச கனடாவில பிறந்த பிள்ளைகளிடையே கூட பேசுற வழக்கில தமிழ்நாட்டு தாக்கம் இருக்கிறது குறைவு. ஏன் எண்டால் அவளையளோட வீட்டில அம்மா, அப்பா மற்றது சொந்தக்காரர் ஊர் மொழி வழக்கில இருக்கிறதால - கதைக்கிறதால அவர்களால எழுதமுடியாவிட்டாலும் பேச்சில அவ்வளவு வித்தியாசம் தெரியாது. அதான் நான் அப்படி கேட்டதன் காரணம். அண்ணாமார் கோவிச்சால் அந்தக்கருத்தை வாபஸ் வாங்கிகொள்ளுறன்.

மற்றது காவடி அண்ணை கேட்ட வேற்றுக்கிரக விசயம். அது பாருங்கோ நான் பிறக்கேக்க சில சிக்கல்களோட பிறந்தது. பிறந்ததில இருந்து இதுவரை ஏழு தரம் சத்திரசிகிச்சைக்கு போய் வந்தாச்சு. இன்னும் ஒண்டு ரெண்டு மிச்சம் இருக்கிது. அதாலதான் அப்பிடி பாருங்கோ. சிகிச்சைகள் முடிஞ்சபின்னர் இன்னும் தெளிவாக கதைக்ககூடியதாய் இருக்கும்.

தமிழ்நாட்டு பாணியில எழுதிபோட்டு அதே பாணியில கதைச்சு இருந்தால் வித்தியாசம் தெரியாது. யாழ்ப்பாணத்து கதை மாதிரி எழுதிப்போட்டு பிறகு தமிழ்நாட்டு பாணியில கதைச்சால் நாம இப்படி கேட்கலாம் தானே அண்ணைமார்? எண்ட நண்பர் ஒருத்தர் தமிழ்நாட்டில போய் இருந்தார் ஒரு கொஞ்சக்காலம். பிறகு அவரோட போனில கதைக்கேக்க... கதை இழுபட்டு வந்திச்சிது. ஏண்டா இழுக்கிறாய் எண்டு சொல்ல.. பிறகு அவர் வழமைமாதிரி கதைச்சார்.

எப்பிடி கதைக்கிறது எண்டுறது அவரவர் விருப்பம்... இஞ்ச ஆ..பேட்டி எண்டு போடேக்க நாங்கள் அப்பிடி சொன்னம் பாருங்கோ எங்கட கருத்தை. சரி அப்ப காவடி அண்ணை நிறைய விசயங்கள் பலதும் பத்தும் தெரிஞ்சவர் போல இருக்கிது. அடுத்ததா சயந்தன் தயவுசெய்து ஒருக்கால் காவடி அண்ணையை பேட்டி கண்டுபோடுங்கோ. யாழ் கவிமணி, யாழ் பாக்கோ... கவிஞர் காவடி அவர்களின் குரலை கேட்ட ஆர்வமாய் இருக்கிது. :lol:

அட அண்ணாமாருக்கு கோவம் வந்திட்டுது போல. தூயா சிறுவயதில தாயகத்தில இருந்து இருக்கிறா. பழைய நினைவுகள் எல்லாம் அவவுக்குஅப்பிடியே இருக்கிது, தவிர அவாவின் பல ஆக்கங்களை பார்த்தபின்னர் யாழ்ப்பாணத்தமிழ் கதையில இருக்கும் எண்டு நினைச்சு இருந்தன். இஞ்ச எனக்கு தெரிஞ்ச கனடாவில பிறந்த பிள்ளைகளிடையே கூட பேசுற வழக்கில தமிழ்நாட்டு தாக்கம் இருக்கிறது குறைவு. ஏன் எண்டால் அவளையளோட வீட்டில அம்மா, அப்பா மற்றது சொந்தக்காரர் ஊர் மொழி வழக்கில இருக்கிறதால - கதைக்கிறதால அவர்களால எழுதமுடியாவிட்டாலும் பேச்சில அவ்வளவு வித்தியாசம் தெரியாது. அதான் நான் அப்படி கேட்டதன் காரணம். அண்ணாமார் கோவிச்சால் அந்தக்கருத்தை வாபஸ் வாங்கிகொள்ளுறன்.

மற்றது காவடி அண்ணை கேட்ட வேற்றுக்கிரக விசயம். அது பாருங்கோ நான் பிறக்கேக்க சில சிக்கல்களோட பிறந்தது. பிறந்ததில இருந்து இதுவரை ஏழு தரம் சத்திரசிகிச்சைக்கு போய் வந்தாச்சு. இன்னும் ஒண்டு ரெண்டு மிச்சம் இருக்கிது. அதாலதான் அப்பிடி பாருங்கோ. சிகிச்சைகள் முடிஞ்சபின்னர் இன்னும் தெளிவாக கதைக்ககூடியதாய் இருக்கும்.

தமிழ்நாட்டு பாணியில எழுதிபோட்டு அதே பாணியில கதைச்சு இருந்தால் வித்தியாசம் தெரியாது. யாழ்ப்பாணத்து கதை மாதிரி எழுதிப்போட்டு பிறகு தமிழ்நாட்டு பாணியில கதைச்சால் நாம இப்படி கேட்கலாம் தானே அண்ணைமார்? எண்ட நண்பர் ஒருத்தர் தமிழ்நாட்டில போய் இருந்தார் ஒரு கொஞ்சக்காலம். பிறகு அவரோட போனில கதைக்கேக்க... கதை இழுபட்டு வந்திச்சிது. ஏண்டா இழுக்கிறாய் எண்டு சொல்ல.. பிறகு அவர் வழமைமாதிரி கதைச்சார்.

எப்பிடி கதைக்கிறது எண்டுறது அவரவர் விருப்பம்... இஞ்ச ஆ..பேட்டி எண்டு போடேக்க நாங்கள் அப்பிடி சொன்னம் பாருங்கோ எங்கட கருத்தை. சரி அப்ப காவடி அண்ணை நிறைய விசயங்கள் பலதும் பத்தும் தெரிஞ்சவர் போல இருக்கிது. அடுத்ததா சயந்தன் தயவுசெய்து ஒருக்கால் காவடி அண்ணையை பேட்டி கண்டுபோடுங்கோ. யாழ் கவிமணி, யாழ் பாக்கோ... கவிஞர் காவடி அவர்களின் குரலை கேட்ட ஆர்வமாய் இருக்கிது. :lol:

இவ்வளவு நியாயப்பாடுகளும் நான் கேட்ட பின் தான் வருகின்றது போல. ஏன் 'யாழ்பாணத் தமிழில்' கதைக்கவில்லை எனும் கேள்வியை போடும் போது இவற்றில் மிகச் சிலவற்றை குறித்து இருக்கலாம். முதலில் எல்லாம் தெரிந்த வித்தகர் மாதிரி கேள்வி, குறை கேட்பது... பின் யாரேனும் கேள்வி கேட்டால் "நான் இப்படி சொன்னதன் காரணம் இவை தான்" என பெரும் விபரக் கொத்து தாரது. முதலில் தெளிவாக உங்களின் கருத்தினை எழுத பழகுங்கள் பின் உங்களின் நக்கல்களை அல்லது பிரதேச வாததினை முன் வையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இதில முரளியை ஏன் சண்டைக்கு இழுக்கிறீங்க.

தூயாவின் ஆக்கங்கள் யாழ்ப்பாணத்தை.. அல்லது வட தமிழீழத்தை மையப்படுத்தியே அதிகம் வந்திருக்கின்றன. அந்த வகையில் அவரின் பேச்சு நடையும் வட தமிழீழத்தை மையப்படுத்தியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது சாதாரணம். முரளியும் அதை எதிர்பார்த்திருப்பார். ஆனால் நிஜத்தில் மாறுபாடு இருக்கிறது எனும் போது சுட்டிக்காட்டினார். அதற்கு பிரதேசவாதம் அதுஇதென்று ஏன் பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் பிரயோகித்து ஊதிப் பெருப்பிக்கிறியள்..! :o

நான் ஒரு சிலரைக் கண்டிருக்கிறேன்.. பிறந்து வளர்ந்து.. சாதாரணம் வரை ஊரில் தமிழில் படித்துவிட்டு.. இடையில் வெளிநாடு போக தமிழ்நாட்டில் ஓரிரு வருடங்கள் தங்கி விட்டவர்களே.. சென்னைத்தமிழில்.. நடிகைகளின் கொன்னைத் தமிழில்.. பேசுவதுதான் நாகரிகம் என்று நினைக்கின்றதை. :lol:

நிச்சயம் தூயா அந்த வகையில்.. இதை நாகரிகம் என்று கருதிக் கைக் கொண்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதுமட்டுமன்றி புலம்பெயர் நாடுகளில் சிறுபராயத்தினரை அடையும் பேச்சுத் தமிழில்.. சினிமா.. நாடகங்கள்.. சிறுசஞ்சிகைகள் பெரும்பாலும் தமிழகம் சார்ந்தவையாக.. தமிழக மொழிநடையில் வருவதால்.. அதன் செல்வாக்கு அவர்களிடம் ஒரு கவர்ச்சிகரமாக உள்வாங்கப்படுவதும் உண்டு. ஏன் எம்மில் பலருமே.. சினிமாவில் வரும்.. பல சொற்களை எடுத்துப் பேசுவதில்லையா. வந்திட்டாய்யா வந்திட்டான்.. என்று இப்போ என்னைச் சொல்லனும் போல தோன்றுமே பலருக்கு அப்படி..!

எனக்கு இன்றும் கூட ஆனந்தவிகடன்.. குமுதத்தில் வரும் கதைகளைப் படித்து விளங்க முடிவதில்லை. அதனால் வாசிப்பதும் இல்லை. ஏன் இந்திய நாவல்களை நான் வாசிப்பதில்லை. காரணம்.. அவர்களின் பேச்சு நடையோடு எழுத்தும் இருப்பதால்.. அது எளிதில் விளங்காது. அதில் கையாளப்படும் சொற்கள் பல தமிழுமற்ற.. ஆங்கிலமும் அற்ற தன்மையில் இருக்கின்றன..! அவர்கள் இயல்ப்பு என்று அப்படி எழுதுகிறார்கள். அவற்றை வாங்கிப் படிக்கும் தூயா போன்றவர்கள் என்ன செய்வார். :D

இவற்றை எல்லாம் கடந்து பிறமொழி ஆதிக்க சூழலில் தமிழ் மொழியில் உறவாட நினைக்கும் தூயாவை.. மீண்டும் பாராட்டுகிறேன். காரணம் என் கண் முன்னாலேயே பல தலைக்கணம் பிடித்த எனது உறவினர்கள்.. தமது பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதை ஆர்வமாகக் கொள்ளாது.. வீட்டில் தாமும் ஆங்கிலத்தில் உரையாடி.. தமிழையே மறந்து வாழும் சூழலை அவதானித்திருக்கிறேன். அதற்கு அவர்கள் கூறும் காரணம்.. பிள்ளைகளின் ஆங்கிலம் தரமாக.. வெள்ளைக்காரனுக்கு நிகராக இருக்கும் என்று. :lol:

ஆனால் நான் அவதானித்த வகையில்.. புகலிடத்தில் பிறந்து வளர்ந்த வேற்றுநாட்டு பின்புலம் உள்ளவர்களின் பிள்ளைகளின் ஆங்கிலம் என்பது அந்தந்த நாட்டு சுதேசிகளின் ஆங்கிலத்தில் இருந்து மாறுபட்டே இருக்கிறது. குறிப்பாக பேச்சு நடை.. சொற் கையாடல் என்று பலவற்றில் வேறுபாடு இருக்கிறது. ஆனால் மொழியின் காத்திரம் என்பது பெரிதாக மாறுபடவில்லை. அதுதான் முக்கியம்.

தூயாவின் உச்சரிப்பு மாறுபட்டதாக தாய் தமிழக சகோதர வழக்கில் இருக்கலாம். ஆனால் காத்திரம் என்பது போதிய அளவுக்கு இருக்கிறது. தமிழில் பாண்டித்தியம் பெற்ற ஊர்காரர்கள் சிலருடன் கைத்தாலே தமிழ் புரிவதில்லை. அவ்வளவு வேகமாகக் கதைப்பார்கள் அல்லது.. சொற்களை விழுங்கி வசனத்தை முறித்து உடைத்துப் பேசுவார்கள். ஆனால் தூயாவின் பேச்சில் ஒரு ஒழுங்கு.. நிதானம் இருக்கிறது. மொழி உச்சரிப்பு.. இதில் பெரிதாக கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. நாங்க பேசுற ஆங்கிலத்தை வெள்ளைக்காரன் சகிச்சுக் கிட்டு வாழவில்லையா..??! :o

Edited by nedukkalapoovan

ஆனந்தவிகடன்.. குமுதத்தில

நெடுக்ஸ்

இவற்றை நான் படிப்பதில்லை..

சரித்திர நாவல்கள் படிப்பது தான் எனக்கு பிடிக்கும்..:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

இவற்றை நான் படிப்பதில்லை..

சரித்திர நாவல்கள் படிப்பது தான் எனக்கு பிடிக்கும்..:lol:

அவற்றை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றில்லை. அவற்றில் வரும் செய்திகளை.. பிற சிறு ஆக்கங்களை படிக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

சரித்திர நாவல்கள் அநேகம் பெரிய கட்டுப் புத்தகங்களா இருப்பதால்.. அதெல்லாம் எனக்கு வாசிக்கப்பிடிப்பதில்லை. ஆனால் மொழி வளத்துக்கு அவற்றை வாசிப்பது மிக நன்று.

எனக்கு எதையும் பெரிய கட்டா பார்த்திட்டா படிக்க விருப்பம் வாறதில்லை. ஆனால் பொன்னியின் செல்வனை எனது பாடசாலைக் காலத்தில் கல்கி போன்ற இதழ்களில் வாசித்திருக்கிறேன். மேலும் சில இலக்கிய நாவல்களை.. சரித்திர நாவல்களை மேலோட்டமாக வாசித்திருக்கிறேன். அவற்றின் தமிழ் நடை அழகுதான்..! :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.