Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒபமாவும் கறுப்பன் தானே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் பூசை முடிந்தவுடன் சந்நிதானத்தை ஒரு வலம் வந்து விட்டு நேரடியாக பிரசாதம் வழங்கும் இடத்திற்கு சென்று விட்டான் சுரேஷ்.இவன் அங்கு செல்லும் முன்னே பலர் முன் கூட்டியே வரிசையில் பிரசாதம் பெறுவதிற்காக நின்றதனால்,கடசியில் போய் நின்று கொண்டான்.ஒரு சில நிமிடங்களிள் பக்தர்கள் அதிகமாகவே சுரேசிற்கு பின்னாலும் வந்து சேர்ந்து விட்டார்கள்.

"அட என்ன சுரேஷ் கனகாலம் காணவில்லை எப்படி சுகம்" என்று ஒரு கதையை போட்டபடியே வரிசையில் நடுவில் புகுந்து கொண்ட கந்தர்.தனக்கு பின்னால் ஏனையோர் நிற்கிறார்களே என்ற எந்தவித கவலையும் இன்றி பத்தும் பலதும் அலச வெளிகிட்டார்.

ஆமை வேகத்தில் தான் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. ஓமந்தையில் இருந்து ஒபாமா வரை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் கந்தர்.ஒமந்தையில செஞ்சிலுவை சங்கம் விட்டிட்டு போயிட்டுதாம் பெடியங்கள் என்ன செய்ய போறாங்களோ தெரியவில்லை,பெடியங்கள் உள்ள இழுத்திட்டு நல்ல செம்மையா கொடுக்க போறாங்கள் போல தான் இருக்கிறது என்றவர்,பிரசாதம் வழங்கும் இடம் வரவே தம்பி இரண்டு பிளேட் தாரும் மனிசிக்கு கால் ஏலாது அது தான் நான் எடுக்கிறன் என்றவர் பிரசாதம் போடுவரிடம் தம்பிக்கு கடலையும்,வடையும் இரண்டு இரண்டு போடுங்கோ அவளும் பொங்கலையும் போட வேண்டாம் எனக்கு "சுகர்" பிரசாதத்தை பெற்று கொண்டு சுரேசிடம் தொடர்ந்து தனது அலசலை ஆரம்பித்தார்.

என்னடப்பா கிரிகட்டில இந்தியாவிடம் அடி வாங்கிறாங்கள் போல ஆஸி,நான் இந்தியாவிண்ட பக்கம் தான் அவங்க எங்களிண்ட ஆட்கள்,தெற்காசியகாரன் தானே எங்கண்ட நிறம் தானே அவங்களும்.தம்பி சுரேஷ் அமெரிக்காவிலும் எங்களிண்ட ஆள் தான் ஜனாதிபதியா வந்திட்டான் எனி எங்களுக்கு நல்லம் என்று தான் நினைக்கிறேன்,என்றவறை பார்த்த சுரேஷ் "ஒபமா எங்களின்ட ஆளோ" என்று ஆச்சரியமா கேட்டான்.

பின்ன அவனும் கறுப்பன் தானே அது போக சிறுபான்மை இனத்தவன் அமெரிக்க வெள்ளையன் சரியான "றேசிஸ்ட்" நான் போன கிழமை தான் வந்தனான் நியுயோர்க்,கலிபோர்னியா போய் அங்கிருந்து பிறகு கனடாவிற்கும் போயிற்று தான் வந்தனான் அதனால் அமெரிக்ககாரனை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.

இன்றைக்கு நான் கோவிலிற்கு வந்த முக்கிய காரணம் கனடாவில என்ற சிநேகிதனின்ட மகன் கணணி துறையில கொன்சல்டனா இருக்கிறான் அவன் இன்டநெட் சட்டில எங்களிண்ட சிட்னியில இருக்கின்ற தமிழ் பெட்டையை கொழுவி போட்டான்.தகப்பன் படத்தை காட்டினவர் கொஞ்சம் கறுப்பா தான் இருந்தது அது தான் இங்க வந்தனான் அந்த பெட்டையை ஒருக்கா பார்க்க.

பெட்டையை நேரில கண்டனான் படத்தில பார்த்ததை விட கறுப்பா இருக்குது எனக்கு அவளவாக பிடிக்கவில்லை அது தான் என்ற நண்பனுக்கு போனில சொல்ல வேண்டும் இந்த பெட்டையிண்ட நிறம் உண்ட மகனின்ட நிறத்திற்கு சரி வராது என்று.நான் சொல்லுறதை சொல்லி போடுவன் எனி மிச்சம் அவையின்ட இஷ்டம்.தம்பி சரி நீர் இரும் பிறகு சந்திபோம் அப்ப நான் வரட்டே என்று விடைபெற்றார் கந்தர்.

வாங்கிய பிரசாதத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டடினான் சுரேஷ்.

அருமையான யதார்த்தமான நிகழ்வில அமைஞ்ச கதை புத்தன். ரெண்டு விசயங்கள்:

1. இந்த இடையுக்க வந்து பூருகின்ற பழக்கம். இது எங்கட ஆக்கள் மத்தியில மாத்திரம் இல்லை. எல்லா இனத்த்வர்களிலையும் இந்த விளையாட்டு இருக்கிது. வங்கியில, பெரிய கடைகளில நீண்ட வரிசையில நிக்கேக்க யாருக்கோ கையக்காட்டிக்கொண்டு இடையில நைசாபுகுந்து நோகாமல் அலுவலை முடிச்சுக்கொண்டு போவாங்கள் குறுக்காலபோனதுகள். ஆத்திரமாய் வரும். நாங்களும் இந்தப்பழக்கத்தை பழகிக்கொண்டால் சார்ஸ் டார்வின் சொன்ன போட்டியான உலகத்தில "தப்பிப் பிழைத்தல்" இயல்பை விருத்தி செய்யலாம்.

2. உந்த கலியாணம் செய்யுறதுக்கு ஓகே பண்ணி கெளரவ கையெழுத்து போடுற வெங்காயங்கள். இந்தக்காலத்தில பெடி, பெட்டை ரெண்டுபேருக்கும் ஆளை ஆள் பிடிக்கிறது இல்லை முக்கியம். அவையுண்ட நண்பர்கள், உறவினர்கள், தெருவால போய் வாற ஆக்கள் ஓகே சொன்னால்தான் கலியாணம் கட்ட முடியும். இல்லாட்டிக்கு காதலை இடையில கைவிட்டுப்போட்டு காசிக்கு போகவேண்டியதுதான். அவனவன் உள்ளத்தை, உயிரை உருக்கி ஒருவனை இல்லாட்டிக்கு ஒருத்தியை மனதார விரும்பி அவளுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுறது. ஆனால் அந்த ஆசைகளை தங்கள வீட்டோ (Veto) அதிகாரம் மூலம் சிறிதும் ஈவு இரக்கம் இல்லாமல் தூக்கி எறிகிற மிருகப்பிறப்புக்கள் சில. காதலிச்சவனுக்கு கறுப்பு ஓகே எண்டாலும்.. அவனச்சுத்தி இருக்கிற அரசாங்க அதிகாரிகள் சொட்டை பிடிக்காமல் இருந்தால்தான் மேளம், தாளம். இல்லாட்டிக்கு சங்கு தான் மிச்சம் ஊஊஊஊ..

தவிர.. கலியாணம செய்து இருக்கிற ஆக்களையும் பிரிச்சு வைக்கிற கூட்டம் வேற.. வழக்கறிஞர்.. அவர் இவர் மண்ணாங்கட்டி எண்டு இன்னொருபக்கத்தால வேற அதிகாரிகள். "உங்களுக்கு விவாகரத்து தேவையா?" இங்கே வாருங்கள் எண்டு இப்பிடி கனடாவில சந்தையில கூவி மீன் விக்கிறமாதிரி ஆக்களை கூப்பிட்டு வழக்கறிஞர்மார் விவாகரத்து எடுத்துக்குடுத்து காசு உழைக்கிறாங்கள். இறுக்கமாக பிணைஞ்சு இருக்கிற உறவுகளை பிரிக்கிறதில், ரெண்டு உண்மையான அன்பு உள்ளங்களை பிரிச்சு வேடிக்கை பார்க்கிறதில, உறவுகளை வெட்டி மகிழுறதில கைதேர்ந்தவர்கள் எங்கட ஆக்கள். நாசமாப்போக!

கதையுக்கு பாராட்டுக்கள் புத்தன்!

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

புத்து கதை சொன்ன விதம் நன்றாகஉள்ளது.எப்பதான் எங்கடை சனம் உள்ளத்தில் உள்ளதை உதட்டால் கதைச்சிருக்கு :lol:

கதை நன்றாக இருக்கின்றது புத்தன். நம்முடையவர்களின் மனப்போக்கை அப்படியே வெளிக்காட்டியிருக்கின்றீர்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நம்மட ஆக்களை திருத்த முடியாது என்பது பூருவதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். :):lol:

தொடரட்டும் வாழ்த்துக்கள்

கறுப்பு ஒபாமா எங்கடை ஆள்,

கறுத்த தமிழ்ப்பெட்டை வேற்றுகிரக ஜந்து...

கறுப்பு என்றாலும் அழகாகத்தான் இருக்கு (உங்கட கதை).

(சிட்ணி முருகன் கோயில்ல பிரசாத வரிசையில நின்று ரொம்பதான் நொந்து போனீங்கள் போல....நீங்கள் நிற்கிற வரிசையில, நானும் எப்பவாவது உங்களுக்கு முன்னுக்கு நுழைஞ்சிருப்பனோ.... :lol::) ).

:D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்து! தமிழன்ரை செலுட்டு புத்தியை மிச்சசொச்சம் வைக்காமல் அப்புடியே வாந்தி எடுத்திருக்கிறியள் நல்ல விசயம்.

"அட என்ன சுரேஷ் கனகாலம் காணவில்லை எப்படி சுகம்" என்று ஒரு கதையை போட்டபடியே வரிசையில் நடுவில் புகுந்து கொண்ட கந்தர்.தனக்கு பின்னால் ஏனையோர் நிற்கிறார்களே என்ற எந்தவித கவலையும் இன்றி பத்தும் பலதும் அலச வெளிகிட்டார்.

அதிலையும் இப்புடியான ஜென்மங்களை சுட்டுப்போட்டாலும் திருந்தாதுவள்

சிறந்த ஆக்கம் புத்தன், விடுதலை போரின் பக்க விளைவாக பல மாறுதல்கள் நடந்து தான் உள்ளன. பெண் விடுதலை, சீதன ஒழிப்பு, சாதி விடுதலை என்பன சில. இன்னும் சாத்திரம், சகுனம் என பல படிகள் உள்ளன, இதையும் எழுதலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை பாராட்டுக்கள். என்றாலும் கதையில வார கந்தர் சத்தியமாக நான் இல்லை. கதை வாசிக்கிற ஆக்கள் என்னைத் தப்ப நினைக்கக்கூடாது.

நல்லாயிருக்கு .. :o

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கு ஓர் சின்ன திருத்தம் .கடலையும் வடையும் இரண்டு இரண்டாய் போடும்.......... அவளும்பொங்கலும் ...........எனக்கு சுகர் .?.... அவலும் பொங்கலும் ....என்று திருத்தி .....வாசிப்பார்கள் தானே . நன்றி .

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முரளி.

சகிவன்.

மதன்.

முனிவர்.

மல்லிகைவாசம்.

குமாரசுவாமி.

அகூதா.

கந்தப்பு.

சின்னகுட்டி.

நிலாமதி

ஆகியோருக்கு நன்றிகள். :D

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி.

சகிவன்.

மதன்.

முனிவர்.

மல்லிகைவாசம்.

குமாரசுவாமி.

அகூதா.

கந்தப்பு.

சின்னகுட்டி.

நிலாமதி

ஆகியோருக்கு நன்றிகள். :D

உந்த பெயர் வரிசைக்கிரமத்தை பாக்கேக்கை ஊரிலை பாணுக்கு கியூவிலை நிண்ட ஞாபகந்தான் வருது. :D

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் இயல்பா மிக யதார்த்தமா எழுதி இருக்கிறீர்கள். எங்கள் சமூகத்திற்குள் பேதங்கள் இல்லை என்று வாய்ச்சவடால் அடிக்கும் பெரியமனிதர்களிடமே பல சாபக்கேடுகள் ஒட்டிக்கொண்டு இருப்பதை கண்கூடாக பல சந்தர்ப்பங்களில் காண நேர்கிறது. அறிவிற்கும், வாழும் இயல்பிற்கும் ஒட்டுதல் இல்லாமல் இந்தக் கதையின் கந்தர்போல்... நிறையவே நம்மவர்கள் புலமெங்கும் பரந்திருக்கிறார்கள். புத்தன் உங்கள் கைச் சாட்டைக்கு மதிப்பு அதிகம். வாழ்த்துகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.