Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவை மிக விரைவில் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா

Featured Replies

முல்லைத்தீவை மிக விரைவில் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா

[வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 07:01 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து முல்லைத்தீவையும் மிக விரைவில் கைப்பற்றுவோம் என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கிளிநொச்சி நகர் படையினரால் கைப்பற்றப்பட்ட செய்தியை தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்த பின்னர் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

கிளிநொச்சியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலேயே ஆனையிறவு உள்ளது. ஐந்து கிலோமீற்றர் தொலைவில் முல்லைத்தீவு உள்ளது. எனவே மிக இலகுவாக கைப்பற்றி விடுவோம் என்று தெரிவித்த தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைவதுதான் அவர்களுக்கு உள்ள ஒரே வழி என்றும் கூறினார்.

கடந்த இரு மாதங்களில் 1,500 விடுதலைப் புலிகள் படையினரால் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதினம்

அதற்குப் பின்பு கைப்பற்ற இடமில்லையே. இதுதான் வெற்றியின் இறுதிப் புள்ளியா?

  • கருத்துக்கள உறவுகள்

அதற்குப் பின்பு கைப்பற்ற இடமில்லையே. இதுதான் வெற்றியின் இறுதிப் புள்ளியா?

தமிழினத்தின் வெற்றிப் புள்ளியாக மாறும். மனங்களில் உறுதியோடு பயணிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலேயே ஆனையிறவு உள்ளது. ஐந்து கிலோமீற்றர் தொலைவில் முல்லைத்தீவு உள்ளது. எனவே மிக இலகுவாக கைப்பற்றி விடுவோம் என்று தெரிவித்த தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைவதுதான் அவர்களுக்கு உள்ள ஒரே வழி என்றும் கூறினார்.

இது ரத்வத்தையின் டயலாக். ரத்வத்தை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ரத்வத்தையின் டயலாக். ரத்வத்தை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.

அவர்தான் முல்லைத்தீவைப் பறிகொடுத்தவரும்..!

யாழ்ப்பாணம் தமிழர்களின் கைவிட்டுப் போனபோது.. முல்லைத்தீவு.. அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனையிறவும் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. பின் கிளிநொச்சியும் அவர்களின் கட்டிப்பாட்டில் தான் இருந்தது.

96 இல் தொடங்கிய ஓயாத அலை.. 2001 இல் நிற்கும் வரை.. மீண்டவை இன்று திரும்ப போகின்றன.மீண்டும்.. மீளும்... நாட்களை நாம் தான் எமது பங்களிப்புக்களால்.. முன்னெடுக்கும் சர்வதேச அளவிலான பிரச்சாரங்களால்.. விரைவு படுத்தி.. நிரந்தரமாக மீட்க வேண்டும். :lol:

Edited by nedukkalapoovan

மிக விரைவிலை யுத்தத்தை முடிக்க வேண்டும் என்பது இலங்கை அரசின் முன் உள்ள கட்டாயம்... அதுக்கு நிறைய காரணங்கள் உள்ளன.. அதை சீராக எவ்வளவு விலை கொடுத்தேனும் செய்ய இலங்கை அரசு தயாராக இருக்கிறது கொடுக்கிறது...

புலிகளின் அலுவலகங்களில் இருந்த மேசை கதிரையை கூட கைப்பற்றாமல் இவ்வளவு பிரதேசத்தையும் இலங்கை படைகள் கைப்பற்றியமை என்பதுதான் யுத்தம் முடிந்துவிட போவதில்லை என்பதை கூறுகிறது... யுத்தம் இன்னும் 5 தொடக்கம் 10 வருடங்களுக்கு தொடரலாம்... தாக்கு பிடிக்கப்பது மட்டுமே இலங்கை படைகளை தோல்வி அடைய செய்யும் வளி என ஆகிவிட்டது... இல்லாவிட்டால் குறைந்தது 7 நாடுகளுடன் போரிடும் நிலை புலிகளுக்கு ஏற்படும்...

சரத்பொன்சேகராவுக்கு முதலில் கணக்கு படிப்பிக்க வேண்டும்

தமிழினத்தின் வெற்றிப் புள்ளியாக மாறும். மனங்களில் உறுதியோடு பயணிப்போம்.

"இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், nபரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

மாவீரர்தின உரையிலிருந்து.

இன்று நடப்பவைகளை எதிர்பார்த்துத்தான் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மிக விரைவிலை யுத்தத்தை முடிக்க வேண்டும் என்பது இலங்கை அரசின் முன் உள்ள கட்டாயம்... அதுக்கு நிறைய காரணங்கள் உள்ளன.. அதை சீராக எவ்வளவு விலை கொடுத்தேனும் செய்ய இலங்கை அரசு தயாராக இருக்கிறது கொடுக்கிறது...

புலிகளின் அலுவலகங்களில் இருந்த மேசை கதிரையை கூட கைப்பற்றாமல் இவ்வளவு பிரதேசத்தையும் இலங்கை படைகள் கைப்பற்றியமை என்பதுதான் யுத்தம் முடிந்துவிட போவதில்லை என்பதை கூறுகிறது... யுத்தம் இன்னும் 5 தொடக்கம் 10 வருடங்களுக்கு தொடரலாம்... தாக்கு பிடிக்கப்பது மட்டுமே இலங்கை படைகளை தோல்வி அடைய செய்யும் வளி என ஆகிவிட்டது... இல்லாவிட்டால் குறைந்தது 7 நாடுகளுடன் போரிடும் நிலை புலிகளுக்கு ஏற்படும்...

இதுதன் புலிகளை பாரிய எதிர்ச்சமர் புரியவிடாமல் முடிந்தளவு இளப்புக்களை ஏற்ப்படுத்தி பின்வாங்க வைக்கிறது. சில சமயங்களில் நில இழப்புக்களை தவிக்கமுடியாது, அவ்வாறில்லாமல் தவிர்க்க முற்ப்பட்டு மீட்கமுடியாத தூரத்துக்கு விடுதலைப்போரை தலைவர் விரும்பமாட்டார். எனவே இந்த வல்வளைப்புகளெல்லாம் போராட்டத்தை ஒரு புதிய பரினாமத்துக்குள் தள்ளியுள்ளதே தவிர முடிவல்ல இது ஒரு புதிய தொடக்கம்.

Edited by Sooravali

முல்லைத்தீவை மிக விரைவில் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா

ஒரு புறம் புலிகளை சீண்டுவதற்கும் மறுபுறம் சிங்கள மக்களை பிரமிப்பில் ஆழ்த்தி தனது எதிர் கால அரசியல் கனவுக்கு தூபம் போடும் அறிக்கைகளே.

  • கருத்துக்கள உறவுகள்

"இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், nபரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

மாவீரர்தின உரையிலிருந்து.

இன்று நடப்பவைகளை எதிர்பார்த்துத்தான் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.

இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

மாவீரர்தின உரையிலிருந்து.

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல்-பாதுகாப்பு அமைச்சகம்

1/3/2009 1:23:08 PM - முல்லைத்தீவுப்பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினரின் மிக் 24 ரக ஹெலிகப்டர்கள் இன்று காலை 6:15 மற்றும் 10.30 மணியளவில் வான் தாக்குதல்கள் நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல ஆய்வாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் இன் உளவுத் தகவல்கள்!

ஆனையிறவு, முகமாலை, கிளாலி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், வற்றாப்பளை போன்ற பகுதிகளில் இருந்து புலிகள் தமது ஆளணி, படைக்கலங்களை பின் நகர்த்தத் தொடங்கிவிட்டார்களாம். எனவே தைப்பொங்கலுக்கு முன்னர் இந்த இடங்கள் சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுமாம்..

ஆனந்த சங்கரி ஐயா யாழ்ப்பாணத்தில நின்று டக்ளஸுடன் சண்டை பிடிப்பதை விட்டுவிட்டு கிளிநொச்சி வந்து மாம்பழம் புடுங்கி விறாந்தையிலிருந்து சாப்பிடப் போகிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல ஆய்வாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் இன் உளவுத் தகவல்கள்!

ஆனையிறவு, முகமாலை, கிளாலி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், வற்றாப்பளை போன்ற பகுதிகளில் இருந்து புலிகள் தமது ஆளணி, படைக்கலங்களை பின் நகர்த்தத் தொடங்கிவிட்டார்களாம். எனவே தைப்பொங்கலுக்கு முன்னர் இந்த இடங்கள் சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுமாம்..

ஆனந்த சங்கரி ஐயா யாழ்ப்பாணத்தில நின்று டக்ளஸுடன் சண்டை பிடிப்பதை விட்டுவிட்டு கிளிநொச்சி வந்து மாம்பழம் புடுங்கி விறாந்தையிலிருந்து சாப்பிடப் போகிறாராம்.

அரசும் சொல்கிறது.. ஆனையிறவு இன்னும் சொற்ப நேரத்தில் தங்கள் கை வந்து சேரும் என்றும்.. முல்லைத்தீவை நோக்கி படைகள் விரைவாக நகர்கின்றன என்றும்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் வான்வழித் தாக்குதல் - படைத்தரப்பு அறிவிப்பு

சனி, 03 ஜனவரி 2009, 17:29 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்]

முல்லைத்தீவில் தமது வான் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:10 மணியளவில் முல்லைத்தீவு குடாக்கடல் பிரதேசத்தில் மிகையொலி வானூர்திகள் மூலம் தாக்குதல் இடம்பெற்றதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக எம்.ஐ.24 ரக உலங்கு வானூர்திகள் பிற்பகல் 1:15 அளவில் பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சிறீலங்கா வான்படைப் பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்றைய தாக்குதலால் ஏற்பட்ட சேத விபரங்களை இதுவரை சுயாதீனமாக அறிய முடியவில்லை.

pathivu

கைப்பற்றப்பட்ட கிளிநொச்சியில் ஓரு காகம் கூட இல்லை அப்படியான ஒரு சூன்யப்பிரதேசத்தை மட்டும் கைப்பற்றி தனது மனக்கவலையை தீர்த்துக்கொண்டது. . பாவம் முல்லைத்தீவு அதை விட ஏமாற்றமாகத்தான் இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.