Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆபிரிக்கா சென்று திருமணம் செய்ய புறப்பட்ட ஜேர்மனிய 6 வயது காதலனும் 7 வயது காதலியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்கா சென்று திருமணம் செய்ய புறப்பட்ட ஜேர்மனிய 6 வயது காதலனும் 7 வயது காதலியும்

வீரகேசரி நாளேடு 1/6/2009 8:42:28 PM - சின்னஞ் சிறு காதலர்களான 6 வயது சிறுவனும் 7 வயதுடைய சிறுமியும் திருமண பந்தத்தில் இணைய ஆபிரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பொழுது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட விசித்திர சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. மிகா , அனா லெனா என்ற இந்த சின்னஞ்சிறு ஜோடி, வெப்பமான ஆபிரிக்க காலநிலையில் திருமணம் செய்து கொள்ளவென நீச்சல் உடைகள், குளிர் கண்ணாடிகள் மிதவை என்பன சகிதம் விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு சாட்சியாக அனா லெனாவின் 5 வயது சகோதரியையும் தம்முடன் அழைத்துச் சென்றனர். அண்மையில் மேற்படி சின்னஞ்சிறு காதலர்களின் குடும்பத்தினர் புதுவருட தினத்தை ஒன்றாக கொண்டாடிய சமயமே மிகா இந்த திருமணத்துக்கான யோசனையை முன்வைத்துள்ளான்.

""பெற்றோர் புதுவருட கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ள வேளை, சிறுவர்கள் தமது எதிர்கால வாழ்க்கைக்கான திட்டத்தை தீட்டியுள்ளனர்'' என பொலிஸ் பேச்சாளர் ஹொல்ஜொ யுரேக்ஸ்கோ "ஏ.எவ்.பி.' செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இரவு பெற்றோர் உறங்கச் சென்றதும், தமது திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் சிறுவர்கள் களம் இறங்கினர்.

அவசர அவசரமாக தமக்கு தேவையான வெப்ப கால ஆடைகள் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு அவர்கள் புறப்பட்டனர். ஹனோவரின் புறநகர்ப் பகுதியிலமைந்த தமது வீட்டிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் வரை சென்ற சிறுவர்கள் அங்கிருந்து மின்சார வண்டியில் ஏறி ஹனோவர் புகையிரத நிலையத்தை வந்தனர்.

சிறுவர்கள் மூவரும் புகையிரத நிலையத்தில் ஹனோவர் விமான நிலையத்துக்கு செல்லும் புகையிரதத்தின் வருகைக்காக காத்திருந்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்த காவல் அதிகாரியொருவர் சிறுவர்களின் விசித்திர நடவடிக்கையால் சந்தேகப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பணமும் விமானப் பயணச்சீட்டுகளும் இல்லாத நிலையில் வயது வந்தவர்கள் எவரதும் துணையும் இன்றி காணப்பட்ட இந்த சிறுவர்களிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டதையடுத்து, இந்த அதிர்ச்சி தரும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

ஆபிரிக்காவின் வெப்பமான காலநிலையில் திருமணம் செய்துகொள்ள விரும்பியே அந்நாட்டுக்கு பயணம் செய்ய முடிவெடுத்ததாக சின்னஞ்சிறு காதலர்கள் தெரிவித்து பொலிஸ் உத்தியோகத்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்கள். இதையடுத்து ஹனோவர் பொலிஸ் தலைமையகத்தில் விசேட தடுப்பு முகாமில் இந்த பிஞ்சிலே பழுத்த காதலர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். விடயத்தை கேள்விப்பட்டு பதறிப் போய் வந்த பெற்றோர், சிறுவர்களை விடுவித்து அழைத்துச் சென்றுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அட பிஞ்சில முத்தினதுகள். :unsure: பெற்றாருக்கு இவ்வளவு கவனமா ?

கவனயீனமா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதி நிலா பாவம் அதுகள் ஆசையில இப்படி நடந்திற்றகள் விடுங்

இவைதான் ஆக்கள்.:D:D

dn070109e1140220cniva6.jpg

காதலி அன்னா (நடுவில்) காதலியின் தங்கை அன்னா பெல் உடன் மிக்கா (வலது).

6 வயது காதலியுடன் ஊரைவிட்டு ஓடிய 7 வயது காதலன்

சாட்சிக்கு காதலியின் தங்கை

ஜெர்மனியில் தனது 6 வயது காதலியுடன் ஊரைவிட்டு விட்டு ஓட முயன்ற சிறுவனின் காதல் கதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலன் மிக்காவின் வயது 7, காதலி அன்னாவின் வயது 6 என்பது தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம். அடுத்தடுத்த வீடுகளில் வசிந்து வந்த இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாகதான் இருப்பார்கள். சிறியவர்கள் என்பதால் யாரும் தவறாக நினைக்கவில்லை. நல்ல நண்பர்கள் என்று நினைத்தனர். ஆனால், மிக்காவும், அன்னாவும் காதலித்து வந்துள்ளனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

புத்தாண்டை கொண்டாட மிக்கா, அன்னாவின் குடும்பத்தினர் இத்தாலி நாட்டுக்கு ஒன்றாக சென்றனர். அப்போது, அந்த சிறுசுகள் மனதில் ஊரைவிட்டு ஆப்ரிக்காவுக்கு ஓடிப்போகும் திட்டம் உருவானது. சினிமாவில் இப்படி ஓடிப்போய் திருமணம் செய்து கொள்பவர்கள், சாட்சிக்கு ஆள் அழைத்துச் செல்வதை பார்த்து அன்னாவின் 5 வயது தங்கையையும் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.

வீடு திரும்பியதும், தங்களுக்கு தேவையான பொருட்களை சேகரிக்க தொடங்கினர். கடந்த 2ம் நள்ளிரவு வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது துணிமணிகளை எடுத்துக் கொண்டு 3 பொடிசுகளும் புறப்பட்டனர்.

டிராமில் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்ற அவர்கள் அங்கிருந்து விமான நிலையத்துக்கு ரயிலில் செல்ல காத்திருந்தனர். 3 சிறுசுகள் மட்டும் தனியாக நிற்பதை பார்த்து போலீஸ்காரர் ஒருவர் செல்லமாக விசாரித்தார். அந்த விசாரணையில்தான் இந்த குட்டி காதல் கதை வெளியானது. அவர்களுக்கு சாக்லெட் வாங்கிக் கொடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அவர்களது காதல் கதையை கேட்டு போலீஸ் நிலையத்தில் இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். பெற்றோர்களுக்கு தகவல் தரப்பட்டது. தங்கள் குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், எந்த நேரத்திலும் இந்த பொடிசுகள் மீண்டும் வீட்டைவிட்டு ஓடும் வாய்ப்பு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சின்னஞ்சிறு வயதிலேயே இப்படி வீட்டை விட்டு ஓடிப்போக அவர்கள் முடிவு செய்தது ஜெர்மனி அம்மாக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

குழந்தைகளுக்கு கவுன்சலிங் கொடுக்க பள்ளியில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அம்மாக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

:D:lol::(

dinakaran

Edited by vasisutha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இதை போய் பெரிசாய் கதைக்கிறியள்.

நாங்கள் ஊரிலை விளையாடாத குரும்பட்டி விளையாட்டே?

இல்லாட்டி மண்ணிலை புக்கை செய்து விளையாடேல்லையே?எல்லாத்துக்கும் ஒரு சோடி வைச்சுக்கொண்டுதானே விளையாடினாங்கள். :(:D

நாங்கள் விளையாடாடின அப்பாஅம்மா விளையாட்டுக்களை இப்ப உங்கை ஒருத்தராலையும் விளையாடேலாது கண்டியளோ :D

..... நாங்கள் விளையாடாடின அப்பாஅம்மா விளையாட்டுக்களை இப்ப உங்கை ஒருத்தராலையும் விளையாடேலாது கண்டியளோ :D

அப்ப அம்மாவா விளையாடினவா இப்ப எப்பிடி இருக்கிறா.....? :(

Edited by சாணக்கியன்

நம்பினால் நம்புங்கள்

அப்போது எனக்கு வயது ஆறு ........

முதலாம் வகுப்பு, வகுப்பு ரீச்சர், அப்பரின் ஒன்று விட்ட சோதரி.

பென்சில் பிடிக்கேலை, புத்தகம் சரியாக பிரிக்கேலை, என்னோட வகுப்பில் இருந்த ஒன்றுக்கு, இன்னொன்றை பிடித்து விட்டது!! அதைத்தான் தான் கல்யானம் செய்ய்வேன் என்று ஒற்றைக்காலில் .... ஆறுவயதில்

நானும் என் பங்கிற்கு .... வெடிங்காட் அடித்தேன் ..... (ரட்டைறூள் கொப்பியின் பின்பக்கத்தில் மாப்புளை "*****" , பொம்புளை "****", அத்துடன் தோழன், தோழியும் எழுதிப்போட்டன்)

அடுத்தநாள் காதல் மன்னவனும் ஆத்தைக்காரியின் தாலிக்கொடியுடன் வாறன் என்றார் .............. நாங்களும் ஏதோ உலகத்தில்....

.. ஆனால் அந்நல்முகூர்த்தம் நடப்பதற்கு முன்னம் என் மாமியார் ரட்டைறூள் கொப்பியை பாத்திட்டு ........... நடத்திய யாகம்....... இன்னும் மறக்கவில்லை!!!!!! :rolleyes:

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்..............ஒவ்வொருவருக்குள்ளும

் ஒவ்வொரு அனுபவம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அம்மாவா விளையாடினவா இப்ப எப்பிடி இருக்கிறா.....? :mellow:

கனடாவில் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் :(

கனடாவில் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் :(

:mellow:ஏதோ பெடிச்சிக்கு நல்ல காலம் இருந்திருக்கு. :blink: இல்லையேல் நினைக்கவே கண்ணைக் கட்டுது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் :lol:

அடடா உங்க ஆளும் கனடாதானா :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மிக்காவை பார்க்க அப்பாவியாய் கிடக்கு. இவள் ஆனாவும் தங்கச்சியும் தான் சேர்ந்து மடக்கிட்டாளவை போல. :icon_idea::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<_<ஏதோ பெடிச்சிக்கு நல்ல காலம் இருந்திருக்கு. :lol: இல்லையேல் நினைக்கவே கண்ணைக் கட்டுது. :)

ஏன் எனக்கென்ன குறை? நல்ல விசாவோடை தானே இருக்கிறன் :D

அடடா உங்க ஆளும் கனடாதானா :D

எல்லாம் ஒரேகுட்டையிலை ஊறின மட்டையளாய்த்தான் கிடக்கு :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எனக்கென்ன குறை? நல்ல விசாவோடை தானே இருக்கிறன் :wub:

எல்லாம் ஒரேகுட்டையிலை ஊறின மட்டையளாய்த்தான் கிடக்கு <_<

தெரியாமல் தான் கேக்குறன் ,விசாவுக்கும் , குசாவிற்கும் என்ன சம்பந்தம் ? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் தான் கேக்குறன் ,விசாவுக்கும் , குசாவிற்கும் என்ன சம்பந்தம் ? <_<

:D

  • கருத்துக்கள உறவுகள்

மிக்காவை பார்க்க அப்பாவியாய் கிடக்கு. இவள் ஆனாவும் தங்கச்சியும் தான் சேர்ந்து மடக்கிட்டாளவை போல. :D:D

:lol::o:lol::) :) :(:D :D

என்னப்பா இதை போய் பெரிசாய் கதைக்கிறியள்.

நாங்கள் ஊரிலை விளையாடாத குரும்பட்டி விளையாட்டே?

இல்லாட்டி மண்ணிலை புக்கை செய்து விளையாடேல்லையே?எல்லாத்துக்கும் ஒரு சோடி வைச்சுக்கொண்டுதானே விளையாடினாங்கள். :lol: :lol:

நாங்கள் விளையாடாடின அப்பாஅம்மா விளையாட்டுக்களை இப்ப உங்கை ஒருத்தராலையும் விளையாடேலாது கண்டியளோ :o

கு சா பழசுவளை ஞாபகப்படுத்திறது போல இருக்கே !!! வம்பர் வேற களத்த்தில நிக்கிறார் :)

கு சா பழசுவளை ஞாபகப்படுத்திறது போல இருக்கே !!! வம்பர் வேற களத்த்தில நிக்கிறார் :)

என்ன சின்னா

கு.சா எழுதியதைப் பார்த்ததும் மலரும் நினைவுகள் வந்து வாட்டி எடுக்குதோ??

:lol: எனக்கு உந்த மண் வீடு கட்டி விளையாடின காலத்தை விட, விடலைப் பருவத்தில் பலரோடு சேர்ந்து விளையாடின ஜாடி விளையாட்டுத் தான் பல விடயங்களுக்காக மறக்க முடியாத மலரும் நினைவுகள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம் அவங்கட ரேஞ்சுக்கு விமானம், நாடு விட்டு நாடு என பெரிய லெவலில சிந்திக்கிறாங்கள், நம்மட லெவலுக்கு குரும்பட்டியும், அக்கம் பக்கத்து வேலிப் பொட்டும்தான்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.