Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரணாப் முகர்ஜியை இப்போதும் அனுப்ப தயார்; ஆனால் இலங்கை அரசு விரும்பவில்லை: டி.ஆர். பாலு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி

பிரணாப் முகர்ஜியை இப்போதும் அனுப்ப தயார்; ஆனால் இலங்கை அரசு விரும்பவில்லை: டி.ஆர். பாலு

[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 12:31.43 PM GMT +05:30 ]

பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப நாங்கள் இப்போதும் தயாராகவே உள்ளோம். ஆனால் அதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை.

இலங்கை அரசு விரும்பாமல் நமது அமைச்சரை அங்கு அனுப்ப முடியாது என்று மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்னொருவர் வீட்டுக்கு விருந்தாளியாகச் செல்ல நாம் விரும்பினால், நம்மை வரவேற்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அவர்களே விரும்பாவிட்டால், நாம் எப்படி அவர்கள் வீட்டுக்குச் செல்ல முடியும்? தற்போது இலங்கை அரசும் அப்படித்தான் உள்ளது.

எனவே இலங்கை அரசு விரும்பாமல் நமது அமைச்சரை அங்கு அனுப்ப முடியாது. பிரணாப் முகர்ஜி நிச்சயம் இலங்கை செல்வார். ஆனால் எப்போது செல்வார் என்பதைக் கூற இயலாது என்றார் டி.ஆர். பாலு.

நன்றி - தமிழ்வின்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கிளிநொச்சியின் ஆக்கிரமிப்போடு, ஓர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதே நோக்கமென்பது சின்னப் பிள்ளைக்கும் தெரிந்த விடயம். ஆனால் என்ன தாமதம். என்ன மகிந்த உங்களுக்கும் பெப்பேவா! பொறுத்திருங்கள். இன்னும் கணதியான காட்சிகள் விரியும். ஆனால் என்ன செய்வது நாங்கள் எம்மைப் பாதுகாக்க வேண்டியுள்ளதல்லவா?

[

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் (கிளி )நொச்சியாரெ ..........உங்கள் பதிவு நீ..............ளமாக இருக்கு .கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுவீங்களா ?.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் (கிளி )நொச்சியாரெ ..........உங்கள் பதிவு நீ..............ளமாக இருக்கு .கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுவீங்களா ?.

நன்றி நிலாமதி அக்கா அவர்களே !

இந்த நரிகளை நம்பி கொண்டு இருந்தால் ஒன்றும் நடவாது.....

சிங்களவருக்கு ஆயுதமும்,எட்டப்பர் வேலை பார்க்கிறது தமிழருக்கு பிடிக்க வில்லை

அப்ப அதயும் நிறுத்துங்க.

அறிக்க விடுறாங்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அப்போ இலங்கை அரசின்ரை விருப்பமில்லாமல் ஒண்டும் செய்ய மாட்டன் எண்டுறியள்.. இனியும் இவங்கள் எங்களுக்காக ஏதும் செய்வாங்களெண்டு எதிர் பார்க்க முடியுமா?

பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப நாங்கள் இப்போதும் தயாராகவே உள்ளோம். ஆனால் அதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை.

இலங்கை அரசு விரும்பாமல் நமது அமைச்சரை அங்கு அனுப்ப முடியாது என்று மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அறுவாங்கள் இன்னும் விருந்துண்ணத்தான் வாராங்கள்

விருந்துண்டு இரத்தினக்கற்களையும் பரிசாகப் பெற்றுச் செல்லவே

பார்த்தசாரதி காலம் முதல் இதைத்தனே செய்கிறார்கள்

நீங்கள் விருந்துண்ண தழிழன் குருதியா ???

அட பாவிங்களா

அப்ப உங்க வந்து சாப்பிடத்தான் போக சொன்னவையா?

  • கருத்துக்கள உறவுகள்

முகார்சியை அனுப்புறம் என்று சொல்லும்போது சொல்லியிருக்கலாமே

அவர்கள் அனுமதித்தால் அனுப்பிறம் என்று............???

அதுசரி கருணாநிதி என்றொருவர் தானே அறிக்கை விட்டவர்

முகர்சி போறார் என்று.

அவரைக்கண்டனீங்களோ யாராவது............???

நல்ல ருசியுள்ள "அல்வா" காத்திருக்கிறது. கிண்டி முடிக்கும்போதுதான் கூப்பிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ அப்ப 1987 இல் விமானத்தில் கொண்டு வந்து சாப்பாடு போடச் சொல்லி இலங்கை அரசு சொல்லித்தான் இந்திய அரசு செய்ததா? அப்ப இலங்கை அரசு அழைத்தால் போய் பிடரியில அடியும் வாங்கிக் கொண்டு வருவியள். அது சரி இந்தக் கருத்து கலைஞரின் கருத்தா? அல்லது இந்திய மத்திய அமைச்சரின் கருத்தா? நல்லாத்தான் காது குத்துகிறீர்கள்.ஈழத்தமிழன் யாரையும் நம்பி பிரயோசனம் இ;ல்லை என்று மறை முகமாகச் சொன்னதற்கு நன்றிகள்.

ஓகோ அப்ப 1987 இல் விமானத்தில் கொண்டு வந்து சாப்பாடு போடச் சொல்லி இலங்கை அரசு சொல்லித்தான் இந்திய அரசு செய்ததா? அப்ப இலங்கை அரசு அழைத்தால் போய் பிடரியில அடியும் வாங்கிக் கொண்டு வருவியள். அது சரி இந்தக் கருத்து கலைஞரின் கருத்தா? அல்லது இந்திய மத்திய அமைச்சரின் கருத்தா? நல்லாத்தான் காது குத்துகிறீர்கள்.ஈழத்தமிழன் யாரையும் நம்பி பிரயோசனம் இ;ல்லை என்று மறை முகமாகச் சொன்னதற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்து மக்களின் சுயமரியாதையுடன் விளையாடுகின்றனர்

நல்லதற்கல்ல.............

இவர் போறது எப்ப எண்டு யாராலயும் சொல்லமுடியாது.

ஏனெண்டால் எப்போ விடுதலைப்புலிகள் தங்கள் வலிந்த தாக்குதலை தொடங்கி சிங்கள் ராணுவத்தின் முதுகெலும்பை முறிக்க ஆரம்பிக்கிறார்களோ, அப்போதுதான் இவர் ஓடி வருவார், போர்நிறுத்தம் செய்யுங்கள், பேசு்சுவார்த்தைக்கு வாருங்கள் எண்டு சொல்லி ராணுவத்தை காப்பாற்றுறதுக்கு....

அதுக்கு கூட நேரம் கொடுக்கமாட்டார்கள். மின்னல் என்று கேள்விப்பட்டுத்தான் இருப்பார் பாhக்கவேண்டும் என்றால் சற்றுப்பொறுக்கவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக உறவுகளின் உணர்ச்சிகளுக்கும் மதிப்புக் கொடுக்காமல் இலங்கைத் தமிழர்களின் உயிர்களுக்கும் மதிப்புக் கொடுக்காமல் எங்கள் உயிர்களுடன் விளையாடும் இவர்களுக்கு நம் தலைவர் விரைவில் வைப்பார் நல்ல பெரிய ஆப் .....பு..! :D:(

அது உள்ளேயும் போக முடியாம வெளியேயும் இழுக்க முடியாம ஓடுவாங்கள் அப்ப இருக்கு இவங்களுக்கு வேடிக்கை... :lol::D

இளங்கவி

தெருவோடு போவோர் வருவோரை நம்பித்தான் இன்று தமிழனுக்கு இந்த நிலை. இனியாவது உலகத்தமிழருக்குப் இந்த தரம் கெட்ட அரசியல் புரிந்தால் சரி. என்றும் தம் கையை நம்பாமல் பிறரை நம்பிக் கொண்டு எம் இலட்சியம் வெல்லும் என எதிர்பார்த்துக் கொண்டு கனவு காண்பதனை இனிமேலாவது ஈழத் தமிழினம் விட்டுவிடுமாயின் எமது இலட்சியம் நிச்சயமாய் நிறைவேறும். தமது அரசியலுக்கு எதையும் எதையும் விற்று வயிறுவளர்ப்பவர்களை நம்பி இனியாவது மோசம் போகமல் இருக்கவேண்டும் என்பதே அவா. இப்போதாவது கோமாளிகள் யார் என்பதனைப் புரிந்து கொள்வோம்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திற்கு அகிம்சையை போதித்தது என்று சொல்லிக்கொள்ளும் இந்தியா , ஈழத்தமிழரை வைத்து நெடுகவும் நகைச்சுவை பண்ணுவது நல்லதல்ல .

உலகத்திற்கு அகிம்சையை போதித்தது என்று சொல்லிக்கொள்ளும் இந்தியா , ஈழத்தமிழரை வைத்து நெடுகவும் நகைச்சுவை பண்ணுவது நல்லதல்ல .

காந்தி இந்தியாவில் பிறந்ததற்காக இந்தியாவில பிறந்த ஒவ்வொருவரையும் காந்தியாக பார்ப்பது நம்முடைய தவறே அன்றி வேறொன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா சொன்னது சரி என்று நிருபிக்கிறார்கள்.தமிழகத்தம

காந்தி இந்தியாவில் பிறந்ததற்காக இந்தியாவில பிறந்த ஒவ்வொருவரையும் காந்தியாக பார்ப்பது நம்முடைய தவறே அன்றி வேறொன்றுமில்லை.

தாங்கள் காந்திகள் மட்டும் அல்ல... வெள்ளை காறன் கூட கிடையாது என்பதை இராசீவை ஆதரித்தவர்கள் திலீபன் அண்ணா, அன்னை பூபதியை கொலை செய்தபின் குறிப்பாலை உணர்த்தினார்களே முருகா...

அதை புரிந்து கொள்ளாமல் விட்டது எங்கட தவறு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.