Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இவனும் எழுதுவான்...

Featured Replies

இவனும் எழுதுவான்...

ஈழ..

வரைபடம் வற்றியதில்

வயிற்றைக் கலக்குகின்றதாம்...

வான்புலி யாவும்

முடங்கிப்போயிற்றாம்

கடல்புலி எங்கோ காணாமல்

போனதுவாம்..

இராணுவத்துக்கே வெற்றி

வெற்றியாம்...

சொல்வார் சொல்லட்டும்

தமிழா...

நடப்பு...இதய

நமைச்சலா உனக்கு

தோல்வி என்ற

சொல் துவள வைக்கிறதா

உன்னை

நீ

என்ன ஆற்றாமை கொண்டு

அழப்பிறந்தவனா?

உன் எதிரி

பலம் மிக்கவன்தான்..

உலகத்தை திரட்டி நிற்கிறான்

அதற்காக

மண்டிபோட்டு மடிந்து போவாயா?

அறு பதிலிறுக்காமல்

மக்கிப் போவாயா?

அப்படியானால் நீ

தமிழனல்ல..

தமிழன் இருக்கிறான்

வீரத்தமிழன்..

அவன் பதிலிறுப்பான்

வரலாறுகள் பார்

ரசியாவில் சிதைந்த கிட்லர்

படைகள் சிதைந்த

விதம் கேட்டுப்பார்...

இப்போதே

ஏக்கமேன் உனக்கு?

எழுதப்படும்

புதிய வரலாறு

எழுதப்படும்

கணப்பொழுதில்

காற்றாகி வந்து

கடற்புலிகள்

எழுதுவார்கள்

நொடிப்பொழுதில்

வெடி கொண்டு வந்து

கரும்புலிகள்

எழுதுவார்கள்

வானிருளும் நேரத்தில்

சூரியனைத் தொட்டெழுப்பி

வான்புலிகள்

எழுதுவார்கள்

மாற்றான் எண்ணங்களை

மாற்றியமைத்து

மரைன் புலிகள்

எழுதுவார்கள்

எல்லாளன் எழுவான்...

ஈழவிடியலின் விளக்கவுரை

எழுதுவான்..

எம்மீழ வரலாற்றின்

எரிகின்ற அத்தியாயங்கள்

விடிகின்ற மகிழ்வுரைகள்

யாவிலும் நின்று

இவனும் எழுதுவான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சொல் கொண்டு 'வெல்" என்னும் படைப்பாளிக்குரிய பலம் உங்கள் எழுத்தில் தொனிக்கிறது கவி(தம்பி) அண்ணா.

"கணப்பொழுதில்

காற்றாகி வந்து

கடற்புலிகள்

எழுதுவார்கள்

நொடிப்பொழுதில்

வெடி கொண்டு வந்து

கரும்புலிகள்

எழுதுவார்கள்

வானிருளும் நேரத்தில்

சூரியனைத் தொட்டெழுப்பி

வான்புலிகள்

எழுதுவார்கள்

மாற்றான் எண்ணங்களை

மாற்றியமைத்து

மறப் புலிகள்

எழுதுவார்கள்

விழ முன்னரே விழுந்து விட்டதாய் 'வெற்றியை இதுவரை காணாதவன் கொக்கரிக்கலாம் ஆனால் சரித்திரம் படைத்த தமிழ் மறவர்களை நாமே எப்படிக்குறை கூறலாம்?!!! களம் நின்றாடுகின்றவர்களே "புலம்பெயர் மக்களே சோராதீர்கள் என்கின்றனர்'நாமோ சோர்ந்து போய் சோககீதம் பாடுகின்றோம் வெட்கக்கேடாய் இருக்கிறது வேதனைக்கெல்லாம் வலிக்கிறது என்னும் புலம்பல்கள்.

"வரலாறு என்பதே தோல்வி என்னும் படிக்கட்டுகளால் கட்டப்பட்ட வெற்றிச்சரித்திரம் தான்".....

புரிந்து கொள்ளுங்கள் புலம்பெயர் உறவுகளே!!.

நெறிப்படுத்தும் வரிகளுக்கு நன்றி கவி(அண்ணா)தம்பி

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா விகடகவி சொன்னீர்கள் சிலவார்த்தைகள் உங்கள் பொன்வாயால்

வான்புலி யாவும்

முடங்கிப்போயிற்றாம்

கடல்புலி எங்கோ காணாமல்

போனதுவாம்..

இராணுவத்துக்கே வெற்றி

வெற்றியாம்...

சொல்வார் சொல்லட்டும்

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை பொதுவாக எனக்கு கவிதை பிடிக்காது.ஆனால் உங்கள் கவிதை ஆழமான வரிகளை கொண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தெம்பு தரும் கவிதை வரிகள். தந்தமைக்கு நன்றி விகடகவி.

அருமையான எண்ணப்பகிர்வு கவிஞர். இந்த ஆரம்ப கவிவரி பல விசயங்களை சொல்லிது:

ஈழ..

வரைபடம் வற்றியதில்

வயிற்றைக் கலக்குகின்றதாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி

எல்லோரின் மனங்களிலே நம்பிக்கையெனும் விதை தூவும் அருமையான விரிகள்... தொடருங்கள் உங்களைப் போன்றோரின் இந்த வரிகள் தான் சோர்ந்திருக்கும் எங்கள் தமிழினத்துக்கு இப்பொழுது தேவையான ஊட்டச் சத்து ஆகும்.. தொடர வாழ்த்துக்கள்...

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

இவனும் எழுதுவான்...

நமைச்சலா உனக்கு

தோல்வி என்ற

சொல் துவள வைக்கிறதா

உன்னை

நீ

என்ன ஆற்றாமை கொண்டு

அழப்பிறந்தவனா?

உன் எதிரி

பலம் மிக்கவன்தான்..

உலகத்தை திரட்டி நிற்கிறான்

அதற்காக

மண்டிபோட்டு மடிந்து போவாயா?

அறு பதிலிறுக்காமல்

மக்கிப் போவாயா?

அப்படியானால் நீ

தமிழனல்ல..

எல்லாளன் எழுவான்...

ஈழவிடியலின் விளக்கவுரை

எழுதுவான்..

எம்மீழ வரலாற்றின்

எரிகின்ற அத்தியாயங்கள்

விடிகின்ற மகிழ்வுரைகள்

யாவிலும் நின்று

இவனும் எழுதுவான்..

மக்கிப் போவாயா தமிழா ………………

சரிவுகளில் பாய்கின்ற நதிதானே

புதிய வேகத்தோடு பாய்கிறது………..

எட்டுக் கோடி தமிழர்களே இருக்கும் திசையெங்கும் புயலாகட்டும் !

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விகட கவி .....நீண்ட நாட்களாக காணவில்லை. உங்கள் கவி மழைகளில் நனைபவர்களில் இவளும் ஒருத்தி . காத்திருப்போம் நல்ல செய்திக்காக .........நிலாமதி.

  • தொடங்கியவர்

எல்லோருக்கும் நன்றி.

நம்புங்கள்...இது தூரப்புள்ளியல்ல.. கண்ணை மறைக்கும் காட்டாறு... அடித்துச்செல்லும் அற்பர்களை...

வெற்றி நிச்சயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள,

ஏனையவர்களுக்கு,

தெம்பு தந்து ஆறுதல் படுத்தும் நிலையில் தான் நீங்கள் எல்லோரும் இருக்கின்றீர்கள்?

  • தொடங்கியவர்

நன்றி ஈழத்தோழா.....

  • கருத்துக்கள உறவுகள்

இவனும் எழுதுவான், இவனைவிட எவன் இவ்விதம் எழுதுவான்!

நன்றி கவிஞரே தொடருங்கள். வாழ்த்துகள்!!!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நன்றி சுவி..

சத்தியத்திற்கு சோதனை வரும்..சத்தியம் தோப்பதில்லை...

இழக்கப்படுகின்ற ஒவ்வொரு உயிரும் இலக்கை இருட்டுவதாக நினைத்து நாங்கள் சோரக்கூடாது.எங்களில் பலர் இன்றைய நிலையைக் கண்டு மனம் பிரள்ந்து தவறாக பேசக்கேட்கும் மனம் வலிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் எழுவான்...

ஈழவிடியலின் விளக்கவுரை

எழுதுவான்..

.

எல்லாளனின் வருகையை எதிர்பார்த்திருக்கிறோம். நிச்சயம் அது நம்புவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதோர் கவிதை இழத்தைப்பற்றி அருமையாக இனி கட்டாயம் நமது போராளிகளின் வெற்றிகளையும் எழுதுவீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நம்புங்கள்...இது தூரப்புள்ளியல்ல.. கண்ணை மறைக்கும் காட்டாறு...

நாங்களும் அதையே நினைக்கிறோம்.

Edited by theeya

  • தொடங்கியவர்

எல்லோருக்கும் நன்றி.

மனதுக்கு தெம்பூட்டும் கவிதை தந்த 'விகடகவி'க்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.