Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழருக்காகச் சிறைசென்ற அறிவழகன் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழருக்காகச் சிறைசென்ற அறிவழகன் காலமானார்

01-03-2009

ஈழத் தமிழர்களுக்காகச் சிறை சென்றவர், இலங்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதை நினைத்துப் புலம்பியபடியே மாரடைப்பால் இறந்தார்.

சென்னை பம்மல் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நா.வை. சொக்கலிங்கம். இவர், யாதும் ஊரே என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார். இவரின் மகன் திருவள்ளுவர் (எ) அறிவழகன் (41). இவர் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை, ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்ததைக் கண்டிக்கும் வகையில் இளைஞர் சிலர், சென்னை கத்திப்பாராவில் உள்ள நேரு சிலையைத் தகர்க்க முயன்றனர். இதில் கைது செய்யப்பட்டவர்களில் அறிவழகன், குணத்தொகை ஈசுவரன், தமிழ்முகிலன், பொழிலன், இளங்கோ உள்ளிட்டோரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டுகள் சிறையில் இருந்த இவர்களில் பொழிலனுக்கும், இளங்கோவுக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அறிவழகன், குணத்தொகை ஈசுவரசன், தமிழ் முகிலன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

அதன் பின்னரும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வந்த அறிவழகன், இப்போது இலங்கையில் நாள்தோறும் நடக்கும் போர்க்கொடுமையில் ஈழத்தமிழர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருவதை நினைத்து நினைத்து புலம்பிக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் நேற்றுக்காலையில் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் இவர் இறந்தார். இவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

- தென் செய்தி

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதோடு

குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிவழகன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாருக்கு அஞ்சலிகள். தானாடாவிட்டாலும் தன் தசை ஆடுமல்லவா...

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது கண்ணீர் அஞ்சலிகள்.

அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் நீண்டகாலம் பயனிப்பதில்லையென்பது தமிழினத்தின் நிலையானதோ !

அன்னாரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறோம்.

வெல்லும் தமிழினம் இதைக் காணும் இவ்வுலகு !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறோம்.. எப்போது தமிழன் இன்னல் விடுபடுமோ தெரியாது?. ஓரு எல்லை இல்லாமல் தமிழர்கள் உயிர்கள் பறிபட்டு கொண்டு இருக்கிறது..

எங்கும் சதிக்கும்பல் இனத்தையே சங்கார செய்து தமிழின உணர்வை இல்லாமல் ஆக்க புறப்பட்டு இருக்கிறது..

காக்க தமிழன் ஆட்சியுள்ள எந்த நாடும் இல்லாத நாதியில்லாத இனம் நிலைமாறுமா?

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் வணக்கங்கள்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாரின் ஆத்மா சாந்தியடையவும், குடும்பத்தினரின் துயரிலும் பங்கு கொள்கின்றோம்!!!

ஈழத்தமிழருக்காய் சிறை சென்ற மாமனிதனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் அறிவழகனின் மறைவு மிகவும் வருந்தத் தக்கதாக இருந்தது. அவர் உணர்வுகளோடு ஒன்றிக் கலந்திருந்தவன் என்ற வகையில் எனக்கு இச்சாவு அதிர்ச்சி அளித்தது என்றே சொல்லலாம். எதிர் வரும் 20.3.2009 அன்று வேலூர் ஓட்டேரி பேருந்து நிறுத்தம் அருகில் தமிழர் கழகத்தின் சார்பில் தோழர் அறிவழகனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருக்கின்றோம். அப்போது தோழருடன் சிறையிருந்த தோழர் குணத்தொகையன் அவர் படத்தைத் திறந்து வைக்க உள்ளார்.

தங்களின் செய்தியில் சில விடுபாடுகள். 1988 ஏப்பிரல் 10, 11 ஆகிய நாள்களில் நடைபெற்ற கத்திப்பாரா நேருசிலை தகர்ப்பு முயற்சியும், கொடைக்கானல் தொலைக்காட்சி நிலையத் தகர்ப்பு முயற்சியும் அரசினரால் வழக்காக்கப் பட்டு திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில் 1997ஆம் ஆண்டு பிப்பிரவரி 17ஆம் நாள் அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் தோழர்கள் பொழிலன், இளங்கோ, தமிழ்.முகிலன், அறிவழகன் ஆகிய நால்வருக்கும் வாழ்நாள் தண்டனையும், குணத்தொகையன், தெய்வமணி, குண்டலகேசி, ஈகையரசன் ஆகிய நால்வருக்கு இரண்டாண்டு தண்டனையும் வழங்கப் பட்டது. இரண்டாண்டு தண்டனைப் பெற்ற நால்வரும் பிணையலில் விடுவிக்கப் பட்டனர். பொழிலன், இளங்கோ, தமிழ்.முகிலன், அறிவழகன் ஆகிய நால்வரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பொழிலனும் இளங்கோவும் இரண்டரை மாதம் சிறையிருந்த நிலையில் பிணையலில் விடுவிக்கப் பட்டனர். தமிழ்.முகிலனும், அறிவழகனும் தொடர்ந்து சிறையிருந்தனர். இந்திய விடுதலைப் பொன்விழா கொண்டாட்டத்தின் போது பொருளற்ற விடுதலை விழாவைக் கண்டித்து உண்ணாநிலையில் இருந்ததற்காக தமிழ். முகிலனும் அறிவழகனும் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கிருந்து 2000 நவம்பரில் தமிழ்.முகிலன் கோவை சிறைக்கு மாற்றப்பட்டு 2001 ஆம் ஆண்டு சனவரியில் பிணையலில் விடுவிக்கப்பட்டார். 2001 பிப்பிரவரியில் அறிவழகன் பாளையங்கோட்டை சிறையிலிருந்தவாறே பிணையலில் விடுவிக்கப்பட்டார். 2007 செப்டம்பர் 9ஆம் நாள் மதுரை உயர்நீதிமன்றக் கிளை நான்காண்டுகள் சிறையில் இருந்த தமிழ். முகிலனையும் அறிவழகனையும் இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்தது. தோழர் பொழிலனும் இளங்கோவும் பத்தாண்டு தண்டனையளிக்கப்பட்டனர். தோழர்கள் குணத்தொகையன், தெய்வமணி, ஈகவரசன், குண்டலகேசி ஆகியோரின் தண்டனை உறுதி செய்யப்பட்டனது. இவர்களில் தோழர்கள் குணத்தொகையன், தெய்வமணி, ஈகவரசன் ஆகியோர் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தோழர்கள் பொழிலனும் இளங்கோவும் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.