Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மக்களை காப்பாற்ற எம்மால் எதுவும் செய்ய முடியாது: நெதர்லாந்து கைவிரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அரசானது போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளதால் வன்னி மக்களைக் காப்பாற்ற எங்களால் எதுவுமே செய்யமுடியாது - நெதர்லாந்தின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

திகதி: 05.03.2009 // தமிழீழம் // [பாண்டியன்]

நெதர்லாந்தில் வெளிநாட்டமைச்சின் உறுப்பினரும் ஆளும் கூட்டணி அரசின் கிறீஸ்தவ ஜனநாயக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு. மார்த்தன் காபர் காம்ப் அவர்களுடன் நெதர்லாந்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிலர் திடீர் சந்திப்பு ஒன்றை 04.03.2009 புதனன்று, மதியம் 2 மணியிலிருந்து 3 மணிவரை நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின்போது இம்மாணவர்களால் வன்னி மக்களின் இன்றைய அவலநிலைபற்றி கூறப்பட்ட விடயங்கள் பலவற்றையும் அவதானமாக கேட்டறிந்துகொண்ட திரு. மார்த்தன் காபர் காம்ப் அவர்கள், நெதர்லாந்து அரசானது ஐரோப்பிய ஒன்றித்தினூடாக உடனடிப் போர் நிறுத்தத்தை மகிந்த அரசிடம் சிலநாட்களின் முன்பு வலியுறுத்தியதாகவும் ஆனால் அதை மகிந்த அரசு நிராகரித்துவிட்டதாகவும் இதனால், நெதர்லாந்து அரசானது எதுவுமே செய்யமுடியாத நிலையில் இருப்பதாக தமிழ் மாணவர்களிடம் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

மேலும், மகிந்த அரசானது உணவையும் மருந்தையும் வன்னி மக்களிற்கு செல்லவிடாமல் தடுத்துள்ளதையும் இதனால், வன்னியிலுள்ள மக்கள் பலர் பட்டினியால் இறந்துள்ளதாகவும் பலர் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளதால், அவசர மனிதாபிமான உதவிகளான உணவு, மருந்துகளை இம்மக்களிற்கு உடன் அனுப்புவதற்கு உதவிபுரியுமாறும் இம்மாணவர்களால் கேட்கப்பட்டபொழுது,

மகிந்த அரசு ஒத்துழைக்க மறுப்பதாகவும் உணவுகளைக் கொண்டுசெல்லும் தங்கள் உறுப்பினர்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்பதால் தங்களால் தற்போதைய நிலையில் எதுவும் செய்யமுடியாதெனவும் திரு.காபர் காம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையை 138 வருடங்களாக ஆட்சிபுரிந்த நெதர்லாந்து அரசிற்கு (டச்சுக்காரர்) தற்போதைய போரை நிறுத்தி தமிழின அழிப்பை நிறுத்தும் தார்மீகப்பொறுப்பு உண்டெனவும் இச்சந்திப்பில் இம்மாணவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால். மகிந்த அரசை பணியவைக்க முடியாத நிலையில் நெதர்லாந்து அரசு உள்ளதால், தாயகத்திலுள்ள மக்களுடன் புலம்பெயர்வாழ் தமிழ்மக்களும் இணைந்து தமது சொந்தக்காலில் இப்போரை வென்றெடுத்து தமிழர்களிற்காக தனியரசைநிறுவினால் மட்டுமே தமிழ்மக்கள் பாதுகாப்பாகவாழலாம் எனவும் இதுதவிர வேறுவழியெதுவும் தங்களிக்குத் தெரியவில்லயென இச்சந்திப்பை மேற்கொண்ட பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

எமது இயலாமைதான்.. ஆண்டாண்டு கால எதிரியிடம் போய் உயிர்ப்பிச்சை கேட்க வைக்கிறது. இன்றைய தமிழர்களின் நிலைக்கு மகிந்தவோ சிங்களவர்களோ காரணமல்ல. சிங்களவனோடு ஒன்றாக வாழ முடியும் என்று கருதிச் செயற்பட்ட தமிழர்களே காரணம்..! எமது தேச அடையாளத்தை சிங்களவனுக்கு விட்டுக் கொடுக்க முன் வந்த தமிழர்களே காரணம்..! எமது தேச விடுதலைக்காகப் போராட மறுத்த தமிழர்களே காரணம். தமக்கு விடிவு கிடைக்கும் என்று இன்னும் சிங்களவனை நம்பிக் கொண்டிருக்கும் தமிழர்களுமே காரணம்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவை மீறிச் செய்யமுடியாது என்றால், ஏன் மகிந்தா சொல் கேட்டு ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை செய்தது?

போர் நிறுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதால் வன்னி மக்களை காப்பாற்ற நெதர்லாந்து அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியவில்லை என்று அந்நாட்டின் வெளிவிவாகரத்துறை அமைச்சின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மார்த்தன் காபர் காம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

தமிழர்களைக் காப்பதற்கு ஒரேஒரு வழிதானுள்ளது. அது தமிழீழத்தை அங்கீகரிப்பது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி உங்களால மக்களை தான் காப்பாற்ற முடியல,புலிகளுக்கு ஏதாவது பறக்கிறதுகளை தவண்டு திரியிரதுகளை (டாங்கி) குடுத்தால் நாங்களே எம் மக்களை காப்பாற்றுவம் என்ன சொல்லுறிங்கள் :) ?

சரி உங்களால மக்களை தான் காப்பாற்ற முடியல,புலிகளுக்கு ஏதாவது பறக்கிறதுகளை தவண்டு திரியிரதுகளை (டாங்கி) குடுத்தால் நாங்களே எம் மக்களை காப்பாற்றுவம் என்ன சொல்லுறிங்கள் :) ?

நெதர்லாந்த் அமெரிக்காவின் செல்ல குழந்தை என்று சொல்லாம், அமெரிக்கரை இவர்கள் ஹிட்லரிடம் இருந்து மீட்ட கதாநாயகர்கள் என்று போற்றுவார்கள் இன்னும் ஜேர்மனியரை இவர்கள் மதிப்பது இல்லை தங்களின் எதிரியாக( விளையாட்டுக்களிலும்) பார்ப்பார்கள் இவர்கள் செய்வார்கள் என்று காத்திருப்பதை விட பல லட்ட்சம் வாழும் இங்கிலாந்த், கண்டா வுக்கு மனமாற்றத்தை கொண்டுவருவருவது நல்லது.

ஜரோப்பாவில் இங்கிலாந்த், ப்ரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் தான் பவர் பூல் இவர்கள் நினைத்தால் தான் தடை நீக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரது ஈமெய்ல் முகவரி யாரவது வைத்து இருக்கிறீங்களா? அனைத்து தமிழர்களும் அவருக்கு கடிதம் அல்லது ஈமெய்ல் போடவேண்டிய அவசியம் உண்டு. அதில் பல கேள்விகளையும் கோரிக்கைகளையும் எழுத வேண்டும்.

1. வெளிநாடுகளால் போர் நிறுத்தம் கொண்டு வரயேலது, இலங்கை அரசாங்கத்தின் இனபடுகொலையை அரசியல் மூலமாக உங்களால் தீர்க்க முடியட்டி. த.வி.பு களின் ஆயுதபோரட்டத்த அங்கீகரீங்கள்.

2. தமிழீழத்தை அங்கீகரீயுங்கள்

3. த.வி.பு களின் தடையை நீக்க வேண்டும்.

இதை நீங்கள் செய்தலே எமது மக்களை உங்களால் (தமிழர்களால்) காப்பாற்ற முடியும் என்று எழுத வேண்டும்.

இதை இவருக்கு மட்டுமல்ல எங்களால் ஒன்றும் செய்ய முடியாது உன்ற சொல்லுர நாடுகள், எம்பீக்களுக்கு எழுத வேண்டும்.

அவரது ஈமெய்ல் முகவரி M.Haverkamp@tweedekamer.nl

Enke parkkavum avatei pati http://www.tweedekamer.nl/kamerleden/alle_...nelis/index.jsp

Ethu avatudaja website www.maartenhaverkamp.nl

Edited by Eelamboy

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்து பரவாயில்லை தங்கள் கருத்தை வெளிப்படையாய் சொல்லிட்டுது.

சரியாச்சொன்னிங்க ரதி

அவங்கள் தங்களால் முடியாதெண்டதை தெளிவாச்சொன்னார்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.