Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பச் சண்டை-அமெரிக்காவில் 6 தமிழர்கள் சுட்டுக் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சான்டா கிளாரா (கலிபோர்னியா): நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடும்பச் சண்டை காரணமாக இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

நீலகிரி மாவட்டம் அய்யன்கோலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். இவரது குடும்பத்தினர் கலிபோர்னியாவின் சான்டா கிளாரா நகரில் வசித்து வருகின்றனர்.

தேவராஜன் குடும்பத்தினருக்கும், அவரது உறவினரான அசோகன் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. அசோகனும் குடும்பத்துடன் சான்டா கிளாராவில்தான் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தேவராஜனின் வீட்டில் வைத்து மோதல் வெடித்துள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த தேவராஜன் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார்.

இதில் சுசித்ரா, அகில், அசோகன், நேஹா, அஹானா ஆகியோர் உயிரிழந்தனர். தேவராஜனின் மனைவி அபா படுகாயமடைந்தார். அனைவரையும் சுட்டுத் தள்ளிய பின்னர் தேவராஜன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ரத்தம் கொட்டிய நிலையி்ல் அபா வீட்டுக்கு வெளியே வந்து உதவி கோர முயன்றார். ஆனால் முடியாமல் அப்படியே விழுந்து விட்டார்.

படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்த அவரைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீஸார் அபாவை உடனடியாக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்குள் பிணமாகக் கிடந்த ஆறு பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்ஸ் தமிழ்

:lol::mellow:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆஆஆ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இ இ இ இ இ இ இ இ இ இ ...

  • கருத்துக்கள உறவுகள்

வாட் நெக்ஸ்ட்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாட் நெக்ஸ்ட்!

துவக்கு வைத்திருக்கும் உறவினர்கள் இல்லாத ஊராக பார்த்து குடியேற வேண்டியது தான் சுவி .

  • கருத்துக்கள உறவுகள்

வாட் நெக்ஸ்ட்!

இறுதி அஞ்சலி!

ஒரு தனிமனித கோபம் ஆறு உயிர்களை குடித்திருக்கின்றது. நன்பர்களே உங்கள் கோபங்களையும் குறைக்க பழகி கொள்ளுங்கள் இதனால் நன்மை அடைவது நீங்கள்தான். அவர் தன்னையுமு; சுட்டு கொன்றார் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த சொந்தங்களை இப்படி போட்டுத் தள்ளுமளவுக்கு என்ன ஆத்திரமோ? அனைவரும் படித்தறிவு பெற்ற குடும்பத்தினராகவே இருக்க முடியும்..இவர்களே நம்மூரிலுள்ள காட்டான்கள் மாதிரி அடித்துக்கொண்டால்...இதில் அமெரிக்கா சென்று சாகவேண்டுமா?

என்ன பொழைப்புடா இது?

ஆஆஆஆ என்ன கொடுமை இது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழக்கமாக இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் என விழிக்கும் பார்ப்பனிய ஏடுகள் இந்தத் துப்பாக்கிச்சூட்டு மரணச் செய்தியில் தமிழர்கள் என வழித்துருப்பது கவனங்கொள்ளத் தக்கது!

:D

இந்த செய்தியை வேற ஒரு இடமும் காண இல்லையே. முட்டாள்தின செய்தியோ

இந்த செய்தியை வேற ஒரு இடமும் காண இல்லையே. முட்டாள்தின செய்தியோ

மாப்பிளை eeladesam.com போட்டு இருக்குறார்கள் இந்த செய்தி போய் பாருங்கள்..

நான் கேட்டது ஆங்கில ஊடகங்கள். எங்கட ஆக்கள் ஆளையாள் பார்த்து வெட்டி ஒட்டுறது தெரிஞ்ச விசயம் தானே.

வழக்கமாக இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் என விழிக்கும் பார்ப்பனிய ஏடுகள் இந்தத் துப்பாக்கிச்சூட்டு மரணச் செய்தியில் தமிழர்கள் என வழித்துருப்பது கவனங்கொள்ளத் தக்கது!

:D

நமக்குத் தேவைப்பட்டால் தமிழர்கள் : தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக் கொள்வோம்.

தேவையில்லையென்றால் இலங்கையர் : இந்தியர் என்று ஒதுங்கும் மனநிலை நம்வரிடையே அன்று தொட்டு இன்று வரை உள்ளதை காட்டுகிறது சுழியனின் கருத்து.

நீலகிரி என்பது ஊட்டி பகுதியாகும். இது தமிழ் நாட்டுக்குச் சொந்தமானது.

இங்கு தமிழர்களே வாழ்கிறார்கள்.

அடுத்து படகாஸ் எனும் இனமும் இருக்கிறது.

உலகத் தமிழர்களில் இவர்களும் அடக்கம்.

தமிழர்கள் என்றால் ஈழத் தமிழர் மட்டுமல்லவே?

அது ஒரு குடும்ப தகராறு.

அமெரிக்க சமுதாயத்தில் கூட பாடசாலைகளில் கொலைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

சம்பந்தப்பட்டவர்களை அவர்கள் அமெரிக்கர்கள் இல்லை என்று சொல்வதில்லை.

நம் நாட்டில் நடக்கும் கொலைகளுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை என்று ஒருநாள் என்ன இப்ப கூட சொன்னாலும் சொல்வீர்கள்?

ஒரு சில இலங்கை தமிழர்கள் தம்மை வேறுநாடு என்று சொன்னதை நானே கேட்டு உள்ளேன்.

ஆதாயம் கிடைத்தால் அது நாங்கள்.

பாதிப்பு வருமானால் அது நாங்கள் இல்லை.

நல்ல குணம்? எப்ப மாறுமோ?

அண்மையில்

சுவிஸில் வாழும் இத்தாலிய நண்பனோடு பேசிக் கொண்டிருந்தேன்.

அவன் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னான்

தன்னோடு முன்னர் வேலை செய்த ஒரு சிறீலங்கன் தமிழன்

அரச பரமபரையைச் சேர்தவராம்.

அவரது தந்தை ஒரு அரசராம். அவர் அரச குமாரனாம்.

இலங்கைப் பிரச்சனை காரணமாக இங்கு வந்துவிட்டாராம் என்று சொன்னதாக.............. :D

அடுத்த அரண்மனை விவகாரங்கள் தேவையில்லைதானே?...................... :D

என்னால் தாங்க முடியவில்லை.

இருந்தாலும் அப்படியா என்று கேட்டுவிட்டு இருந்துவிட்டேன்.

அவனை பொய்யன் என்று சொல்லப் போக அனைத்து தமிழரும் பொய்யர் என ஆகிவிடும் என்பதால்

மெளனமாக இருந்துவிட்டேன்? :D கொடுமைடா சாமி :lol:

Edited by AJeevan

அரச பரமபரையைச் சேர்தவராம்

அரச பரம்பரை என்பது உண்மையாக இருக்கலாம்,ஆனால் அரசகுமாரன் என்பது, கொஞ்சம் ஒவர்தான்.....

தமிழன்

அரச பரமபரையைச் சேர்தவராம்.

அவரது தந்தை ஒரு அரசராம். அவர் அரச குமாரனாம்.

இலங்கைப் பிரச்சனை காரணமாக இங்கு வந்துவிட்டாராம் என்று சொன்னதாக.............. :(

அடுத்த அரண்மனை விவகாரங்கள் தேவையில்லைதானே?...................... :lol:

என்னால் தாங்க முடியவில்லை.

இருந்தாலும் அப்படியா என்று கேட்டுவிட்டு இருந்துவிட்டேன்.

அவனை பொய்யன் என்று சொல்லப் போக அனைத்து தமிழரும் பொய்யர் என ஆகிவிடும் என்பதால்

மெளனமாக இருந்துவிட்டேன்? :) கொடுமைடா சாமி :D

என்ன அரச குடும்பமா.. ஆமாம் நம் நாட்டில் அரசர்களும் வாழ்த்தார்களா? எந்த காலத்தில்... கொடுமை...சாமி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் நம்பக் கூடிய செய்தியா இது தெரியேல்ல. ஆறு பேர் இப்பிடிச் செத்தா சி.என்.என்னில பி.பி.சி யில வருமே? போன வருஷம் இரண்டு ஆந்திர மாணவர்கள் கொள்ளைச் சம்பவத்தில் கொல்லப் பட்ட போது கூட பெரிய செய்தியாக வந்தது. யாரோ எல்லாரையும் வைச்சு "கொமெடி" பண்ணிப் போட்டாங்கள் நல்லா! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் உண்மை சம்பவம்.

http://www.mercurynewsphoto.com/2009/04/santaclara/

http://www.mercurynews.com/ci_12056857?source=most_viewed

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.