Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் ஆயுதங்களைப் போடுவதே ஒரே தீர்வு - ஜோன் ஹொம்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15/04/2009, 03:06 [ செய்தியாளர் சத்தியன்]

புலிகள் ஆயுதங்களைப் போடுவதே ஒரே தீர்வு - ஜோன் ஹொம்ஸ்

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைப் போடுவதுதான் ஒரே ஒரு தீர்வு என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான துணைச் செயலாளரும், சிறீலங்காவுக்கான ஐ.நா விடேச பிரதிநிதியுமான ஜோன் ஹொம்ஸ் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி ஆங்கிலச் செய்திச் சேவைக்க வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய படைத்துறை சூழலில் பொதுமக்களே விடுதலைப் புலிகள் இருக்கும் கடைசி மனிதக் கேடயம். நான் ஒரு படைத்துறை ஆய்வாளர் இல்லை. எனிவும் அங்கு நிலவும் சூழலில் புலிகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவு

நாம் பலமில்லை என்று சொல்கின்றார்

தேசத்தின் விடுதலைக்காக ஏந்திய ஆயுதங்களை கைவிடச் சொல்லுவதென்பது நம்மை அடிமைகளாவே இருக்கச் சொல்லுவதற்கு சமனானது.

நமது பக்கமுள்ள நியாயத்தினையும் நியாயமான உரிமைப்போராட்டத்தினையும் ஏன்தான் புரிந்துகொள்ள மறுக்கின்றார்களோ???

ஆண்ட குடியை அடிமையாக்குவதிலேயே குறியாய் இருக்கின்றது இந்த பாழாய்ப்போன உலகம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பலமில்லை என்று சொல்கின்றார்

இதை நாங்க சொன்னா தப்பா நினைப்பாங்க. ஆனால்.. வெள்ளைத் தோல் சொன்னா செய்தியாக்கிப் போடுவாங்க..! :lol: :lol: :lol:

தலைவர் ஏதோ ஒரு பேட்டியில் சொன்னார் ஆயுத பலத்தின் மூலமே பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள் என்று.

அன்று ஆயுதத்தின் மூலம் இனபிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது என்ற சொன்ன வெள்ளைபன்னிகள் இன்று மக்களை கொல்ல அனுமதி வழங்கியிருக்கின்றானுகள் இன்னும் 1000 பின்லாடனுகள் உருவானாலும் திருந்த மாட்டானுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிறிலங்கா அரசு ஆயுதத்தை கீழே போடுவது தான் ஒரே தீர்வு என்று சொல்லக் கூடாது. சிறிலங்காவைப் பணிய வைக்க முடியவில்லை.வந்திட்டார் எங்களுக்குப் புத்தி சொல்ல. ஏன் சிறிலங்கா இராணுவத்தால் புலிகளிடமிருந்து ஆயுதங்களை முற்றாக களைய முடியாது என்று தெரிந்து விட்டுதா?புலி;கள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என்று சொல்லியிருக்கிறார்கள்.சிறில

பலமிழந்தால் இதுதான் தீர்வு.

நெடுக்காலபோவான், சூறாவெளி போன்றவர்கள் கூறுவதைப் பார்த்தால், புலிகள் ஏதோ கவலையீனமாகவும் , வெற்றி மமதையிலும் சும்மா இருந்ததைப் போல் அல்லவா கதைக்கிறார்கள். அமேரிக்கா, இந்தியா,பாக்கிஸ்த்தான்,சீனா,

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு , ஏன் இணங்கினோம் என்று விரக்தியாக உள்ளது .

மக்கள் அவலத்துக்குள் இருக்கிறார்கள்... அவர்களை எப்போதும் காக்க கூடிய ஒரே சக்தி விடுதலைப்புலிகள் தான்... இதனால் தான் இண்று உலகளவில் தமிழர்கள் போராட்டங்களை நடாத்துகிறார்கள்... சிங்களவனோடு சேர்ந்து வாழ்வதாக இருந்தால் இண்றைய எமது போராட்டங்கள் வீணானவை...

இந்த மக்கள் கேட்ப்பது எல்லாம் எங்களுக்கான அங்கீகாரம்... எங்களது தேசத்தின் போரை நிறுத்து.. எங்களை அங்கீகரி என்பதாக தான் இருக்கிறது... ஆனால் அதை கொடுக்க அவர்கள் தயங்குகிறார்கள்...

புலிகளை இன்னும் பலமடைய செய்யும் வண்ணம் புலம்பெயர்ந்தவர்கள் கிளர்ந்து விட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டு தான் புலிகளின் ஆயுதங்கள் போடும் கற்பனைகளை உலகுக்கு சொல்கிறார்கள் என்பதை சிறிய காலத்தில் எம்மவர்கள் தெரிந்து கொள்ள முடியும்...

இந்த புலம்பெயர் நாடுகளில் தொடர் போராட்டங்களை நாங்கள் இன்னும் கொஞ்ச காலம் தொடருவோமாக இருந்தால் எமக்கு தேவையாதை தரும் காலத்தை விரைவில் கனிய வைக்கும்...

அதுக்கும் முன்னம் இவைகளை ஒடுக்க இலங்கைக்கு முன்னர் ஆதரவு வழங்கியவர்கள் முயலுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்....

புலிகள் பலமிளந்து விட்டார்கள் என்பது எல்லாம் சும்மா பம்மாத்து... இதை தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் பொறுமையாக விளக்கி உள்ளார்... 60 000 இராணுவம் வன்னீக்குள் படை எடுத்து வந்ததாக சொன்னவர்கள் இண்று 30 000 பேர் புலிகளை முற்றுகை இட்டு இருப்பதாக சொல்வதில் இருந்து உண்மையை புரிந்து கொள்ள முயலலாம்... ( மிகுதி இராணுவத்தினர் தென்பகுதிக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்ப பட்டு உள்ளனர் எண்று நீங்கள் சொல்வதாக இருந்தால் அது உங்களின் விருப்பம்)

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் உள்ள மக்கள் தான் மிக பெரும் சக்தி. அவர்களை இழப்பது வி.புலிகளுக்கு பேரிழப்பு. உலகமே சேர்ந்து எம்மை அழிக்க கங்கணம் கட்டி நிற்கிறார்கள். அது மறைமுகமாக பலரும் , நேரடியாக சிலரும் பங்கேற்றுள்ளார்கள். அவர்களின் ஒரே நோக்கம் வி.புலிகளை மக்களிடம் இருந்து பிரித்து தனிமை படுத்தி அழிப்பதே. இவ்வளவு ஊர்வலங்கள், போராட்டங்களுக்கு பின்னும் இவர்களின் அமைதியே இதற்கு சான்று.

Edited by nunavilan

நெடுக்காலபோவான், சூறாவெளி போன்றவர்கள் கூறுவதைப் பார்த்தால், புலிகள் ஏதோ கவலையீனமாகவும் , வெற்றி மமதையிலும் சும்மா இருந்ததைப் போல் அல்லவா கதைக்கிறார்கள். அமேரிக்கா, இந்தியா,பாக்கிஸ்த்தான்,சீனா,
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'நமக்கு அவலத்தை தந்தவனுக்கு அதையே திருப்பிக்கொடு" தலைவா, அதைச்செய்யுங்கள் அப்போதுதான் பொதுமக்களின் பலம் தெரிய வரும்!..

இல்லாவிட்டால் ஆளாளுக்கு அல்வா கிண்டித்தந்திட்டுப்போவார்க

  • கருத்துக்கள உறவுகள்

பழைய சாத்தான்களின் புதிய வேதமல்ல இது. சொல்லிய முகம்தான் வேறு. ஆனால் தளம் ஒன்றே. முன்பு ஐ.ஒ, இணைத்தலைமைகள், இந்தியா என்ற தொடரில் உலகின் ஏகாதிபத்திய நாடுகளின் அடிவருடி நிறுவனங்களான ஐநா முதல் உலக உணவு திட்ட நிறுவனம் வரையுள்ள மேற்குலகின் சட்டைப் பைக்குள்ளிருக்கும் அட்டைக் கூட்டங்களின் ஏவலாளர்களான இவர் போன்றவர்கள் இப்படித்தான் கதைப்பார்கள். கேட்பார்கள். இவர்களின் முகத்திரை மெதுவாகக் கிழியத் தொடங்குகிறது தமிழிளையோரினதும் மாணவ சமுதாயத்தினதும் எழுச்சியின் பயனாக. எனவே இவர்களிடம் நீதியைக் கேட்பதைவிட இந்த நாட்டு மக்களிடம் நாம் கேட்பதனூடாக இவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழினப்படுகொலைக்கான இவர்களது ஒத்தாசை வெளித்தெரிய வேண்டும். அதுவரை இவர்கள் வாய்ப்பாடு மாறாது. மாற்ற வேண்டுமேயன்றி, வேறெதுவும் இவர்கள் செய்யப் போவதில்லை.

போராடும் இனங்களை அல்லது மக்களை ஒடுக்குதல் என்பது ஏகாதிபத்திய நாடுகளின் முதலாவது நடவடிக்கை. அதனை ஈழத் தீவிலே சிறிலங்கா அரசைக் கொண்டு நடைமுறைப்படுத்தகின்றனர். பிரிக்கப்படாத சந்தைகளே இவர்களின் இலக்கு. பிரிக்கப்படுமாயின் சந்தை தமது பூரண கட்டுப்பாட்டில் இருக்குமாயின் பிரிவினை ஏற்க்கப்படும். (எ-டு: கொசொவோ, மொன்ரினோகுறோ) இதில் மனித உரிமையென்பதோ, மனித அழிவென்பதோ வெற்று நாடகமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா அரசிடம் வேண்டிய லஞ்ச பணத்தை ஜோன் ஹொம்ஸ் சுவிஸ் வங்கியில் போடுவதே சரியான தீர்வு.

வேறு நாட்டு வங்கிகளில் போடுவதால் சில சட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். ஸ்ரீலங்காலிவில் போடவது என்பதும் இவரின் பதவி காலம் மட்டுமே சாத்தியம் பின்பு மகிந்த போடா நீயொரு கோமாளி என்றுதான் விரட்டிவிடுவார். ஆகவே இவர் சுவிஸ் வங்கியில் போடுவதே சிறந்தது. தவிர இந்தியாவால் உறுதி அளிக்கபட்ட அழகிளை இந்திய தேர்தல் முடியுமுன்பே போய் அனுபவிப்பதே நல்லது. தேர்தல் முடிவுகள் ஆட்சியை மாற்ற கூடியது என்பதால் இப்போதே போய் படுப்பதே நல்லது. நாளைய ஆட்சியாளர் விரட்டியடித்தால் எங்கேயும் வாய்திறந்து பேச முடியாத சமாச்சாரம். ஆகவே ஜோன் ஜொம்ஸ் இது குறித்து உடனடியாக செயலாற்றுவது நல்லது.

ஐநா லஞ்ச ஒழிப்பு சங்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.