Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு இறுதி கெடு விதிக்க கருணாநிதி கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இறுதிக் கெடு விதிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி மறுபடியும் ஒரு தந்தி அனுப்பியுள்ளார்.

இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாவிட்டால் அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் பிரதமர் உள்ளிட்டோருக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அடித்தார்.

இந்த நிலையில் இன்று இன்னொரு தந்தி அடித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது...

இலங்கையில் போர் நிலைமை மிக கொடூரமாக உள்ளது. தமிழர்கள் மோசமான நிலையில் சிக்கி உள்ளனர். இது பெரும் கவலை அளிக்கிறது.

ஐக்கிய நாட்டு சபையும்,அனைத்து நாடுகளும், இலங்கை அரசை உடனே போரை நிறுத்தும்படி வற்புறுத்தி உள்ளனர்.

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தும்படியும், நிரந்தர போர் நிறுத்தம் செய்யும்படியும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இலங்கை அரசுக்கு இறுதி கெடு விதிக்க வேண்டும்.

லட்சக்கணக்கான தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக அவர் விடுத்துள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை..

கேள்வி: பெண்கள் அமைப்பு ஒன்றின் சார்பில் மதிமுக அலுவலகத்திற்குள் சிலர் உண்ணாவிரதம் இருப்பதைப்பற்றி டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கையில் திமுக அரசு இரக்கமின்றி அசைந்து கொடுக்காமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: தோழமைக்கட்சியாக அவர் இருந்தபோதே அன்றாடம் திமுக அரசு மீது குறை கூறுவதில் அலாதி இன்பம் கண்டு வந்தார். இப்போது கேட்கவா வேண்டும். ஒருநாள் உண்ணாவிரதம் முடிந்த நிலையில் காவல் துறையினர் அவர்களிடம் சென்று தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டாம் என்று கூறினார்கள். அதன்பிறகு அவர்களது உண்ணாவிரத போராட்டம் மதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குள் மாற்றிக்கொள்ளப்பட்டது.

உண்ணாவிரதம் இருக்கும் அமைப்பினர் தங்கபாலுவை சந்திக்க விரும்பியபோது, அவர் பிரசாரப் பணிகளையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு அலுவலகத்திலே காத்துக் கொண்டிருந்த போதிலும், அவர்கள் வரவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்றதாகவும், அப்போது அவரது பேச்சுக்கள் காங்கிரஸ் கட்சியின் நிலையை எடுத்துரைக்கும் வகையில் இருந்ததால், அவரை திருப்பி அனுப்பி விட்டதாகவும் "தினமணி'' நாளிதழிலே கூறப்பட்டுள்ளது.

நான் மாநிலங்களவை உறுப்பினர், கனிமொழியை பெண்கள் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு அனுப்பி- உண்ணாவிரதத்தை அவர்கள் கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளச் செய்தேன். அதற்கு உண்ணாவிரதம் இருந்த பெண்கள், முதல்வர் அறிவித்ததைப் போல இலங்கையில் உள்ள தூதரக தொடர்புகளை இந்திய அரசு ரத்து செய்வதாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடமிருந்து உறுதிமொழி வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள்.

அதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவி, சோனியா காந்தியிடம் பேசுவதாகவும், போர் நிறுத்தம் பற்றி உரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் நான் தெரிவித்து, என் வேண்டுகோளுக்கு இணங்கி உண்ணாவிரதம் இருக்கின்ற சகோதரிகள் உடனடியாக அதை கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

நன்றி தற்ஸ் தமிழ்

122699423c12c4ab4b5.jpg

படம் : வர்ஷா , தமிழ்நாடு ரோக் . கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு வாயில் நன்றாக வருகிறது, ஏற்கெனவே கிழடு என மு.க வை குறிப்பிட்டதால் செய்தியையே தூக்கிவிட்டது யாழ் இணையம்

ஈழத்தமிழன் மனிதாபிமானமே எம்மை இந்நிலைக்கு இட்டு சென்றுவிட்டது. பெரும்பான்மை இனத்தை வேட்டையாடியிருந்தால்

தமிழன் மரியாதை நன்கு பேணப்பட்டிருக்கும்

இப்படியே சினிமா காட்டி காலத்தைகடத்தி மக்கள் முழுவதும் நச்சு வாயுக்களால் அழியும் மட்டும் கதை சொல்லும் கருணை இல்லாத ஆனால் பெயரில் பெயரளவில் உள்ளவ்ரே..

தமிழினம் வரலாற்றில் மன்னிக்காது....

நான் பேசிகிறமாதிரி பேசுகிறன் நீ கேட்கிறமாதிரி கேள்.. அதற்குள் எல்லாம் அழிந்து முடியும்.. நாங்கள் பழிவாங்கியதாகும்...

கண்ணை மூடி நச்சு பால் குடிக்கும் நடோடி தெலுங்கனே.. நாடகம் நடத்தியது போதும். திரையை மூடு...

ஒவ்வொரு தமிழ் உயிரும் படும் வேதனைக்கும் பதில் சொல்லியாகவேண்டும்....

தமிழர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்..

விருந்தோம்பல், எல்லோருடனும் அன்பு பாரட்டுவது தமிழன்பண்பு...

அதனையே பலயீனமாக நினைத்து...தமிழரை நன்கு ஏமாற்றும் தந்திரம்.. அறம் பிழைத்தவர்கள்..

லூசு நீ பேசமால் இருந்தால் எங்களுக்கு காணும்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இலங்கை மக்களுக்காக உயிரையும் கொடுப்போம்"

"இலங்கை அரசே இனப்படுகொலையை நிறுத்து..."

"இலங்கை அரசை கண்டித்து ஊர்ல கீற எல்லா போராட்டமும்..."

"மத்திய அரசே... உன்னை கண்டிக்கிறோம்"...

"அய்யோ... உள்ளம் பதறுதே... கண்ணீர் உதிருதே..."

-தமிழ் அரசியல் தலைவர்கள் அறிக்கைகள்

இலங்கையில்...

இலங்கை இராணுவத் தளபதி பொன்சேகா அதிபர் ராஜபக்ஷேவிடம்..

"இவிங்க எப்பவுமே இப்படி தான் பாஸ்... கத்திக்கிட்டே இருப்பாய்ங்க... இதுக்கெல்லாம் பயந்தா தொழில் நடத்த முடியுமா? அவிங்க பாட்டுக்கு கத்திக்கிடு கெடக்கட்டும்.. நாம பாட்டுக்கு அழிச்சிட்டிருப்போம்... அட வாங்க பாஸ்"

நன்றி : மாயன் பார்வை.

Edited by லோயர்

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறவன் கேனை பையன்னா இருந்தால் எருமை மாடு ஏரோ பிலேன் ஓடுமாம் :mellow::blink:

எங்கட சாவம் உண்னை சும்மா விடாது..குள்ள நரி :icon_idea:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பவும் பொறுமையை சோதிக்கிகுது...முடியல...

  • கருத்துக்கள உறவுகள்

மூதேசி

anniyan017rd.jpg

anniyan026gq.jpg

anniyan032is.jpg

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடியல விருவிளையாட நினைச்சால்

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி பையன் கற்பனை நல்லாயிருக்கு ..........

  • கருத்துக்கள உறவுகள்

எவன் எமது உரிமைக்கு எதிரிாக வந்தாலும் எமக்கு எதிரி தான்.அதில இந்த கேடு கெட்ட நாய் பரம எதிரி.இந்த நாயின்ர செத்த வீட்டடை நாங்கள் இனிப்பு கொடுத்து மகிழ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறவன் கேனை பையன்னா இருந்தால் எருமை மாடு ஏரோ பிலேன் ஓடுமாம்

  • கருத்துக்கள உறவுகள்

அறளை நல்லா பேந்து போயிட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கைக்கு இறுதி கெடு விதிக்க கருணாநிதி கோரிக்கைஇ இன்று மீண்டும் தந்தி"

எல்லோம் இறுதி கெடுவை எதிர்பார்த்துதான் நிற்கின்றார்கள். இதன் பின்பாவது புலிகளையும் தமிழர்களையும் பற்றி தெரிந்து கொண்டால் நன்று. குறைந்தபட்சம் தர்மத்தை பற்றியாவது தெரிவது நன்று. மிக கேவலமான நிலைக்கு இறங்கி நச்சு குண்டுகளை கூட கொடுத்துவிட்டு காங்கிரஸ் இறுதி இறுதி....செய்தி என்றால் ஸ்ரீலங்கா இராணுவம் தனது இறுதி நாள் ஆகிவடுமோ என்று முன்னணி காவலரனில் இருந்து யோசிப்பது இதுகளுக்க தெரிய வாய்ப்பில்லை. இவர்கள் திட்டம் தீட்டிய இறுதி நாள் காலம் கட்ந்துவிட்டது போல் உள்ளது.

அந்த தந்தி அடிக்கிற இயந்திரத்தை இந்த கருநா மூதேசியின்ட தலையில யாராவது தூக்கிப் போடுவார்களா???....அவர்களுக்கு புண்ணியமா போகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தி அடிக்கிறேன் தந்தி அடிக்கிறேன் என்று சொல்லியே எங்களுக்கு ஆப்பு அடித்தது பத்தாதா? ஒரு தமிழ் தலைவர் எங்களுக்கு ஏதாவது செய்வார் என்று நினைத்திருந்த தமிழினத்துக்கு துரோகம் செய்த துரோகி.... ராஜபக்ஸ கண்ணுக்கு தெரியும் எதிரி அவனுக்குரிய வியூகங்களை வகுத்துப் போராட முடியும், துரோகியை என்ன செய்வது ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.