Jump to content

பேரீச்சை பூக்களின் மத்தியில் ஒரு ஆண்டி...(Adults only): நிழலி


Recommended Posts

முன்னுரை

....இது ஒரு பயணக் கட்டுரை அல்ல.

..ஏனெனில் பயணம் என்றால் ஒரு வாரம் அல்லது இரு வாரம் மட்டும் ஒரு ஊருக்கு அல்லது நாட்டிற்கு போய் அது பற்றி எழுதுவார்கள். ஆனால் நான் 5 வருடங்களுக்கும் மேலாக வசித்த நாடு ஐக்கிய அரபு இராச்சியம். அதில் டுபாய் எனும் மற்றவர்களால் சொர்க்கபுரி என கருதப் பட்டு என்னால் பாதி நரகமாகவும் பாதி சொர்க்கமாகவும் உணரப் பட்ட ஒரு ஊரிலும் பக்கத்தில் உள்ள சார்ஜா ஊரிலும் (உண்மையில் இவை மாநிலங்கள்: UAE: Semi federal country ) நான் வாழ்ந்த கதை.

சின்ன புள்ளைகள் இதனை வாசித்தால் கெட்டுப் போயிடும் என நினைக்கும் அப்பாமார், அம்மாமார் இந்த தொடரை இரவில் யாருக்கும் தெரியாமல் வாசிக்கவும் (செம build up அப்பு)

இதனை வாசிக்க முன் உங்களுக்கு நிச்சயம் தெரிய வேண்டிய மூன்று சொலவடைகள் / பழமொழிகள்

1. காஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி

2. அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியிலும் (Dubai யில்) குடை பிடிப்பான்

3. பல நாள் திருடன் ஒரு நாளும் மாட்டுப் பட மாட்டான்

இனி அனுபவங்கள்

ஒரு மனுசன் எத்தனை தரம் தான் மற்றவர்களை வெளி நாட்டுக்கு போவதற்காய் air port வரை சென்று வழியனுப்பி விட்டு வருவது? ஒரு முறையேனும் வாழ்க்கையில் plane இல் ஏற மாட்டமா... இது தான் என் 27 வயது வரையான வாழ் நாள் ஏக்கம். வெளி நாட்டுக்கு போக முன் உன்னைத் தான் கட்டுவன் என்று சத்தியம் செய்த மச்சாளும், போனவுடன் கூப்பிடுறன் என்று சொன்ன மாமன் மாரும் கைவிட்ட. ஏஜென்சிக்கு காசு கட்ட முடியாத ஒருவனுக்கு இந்த எண்ணமே கஷ்டமான எண்ணம்.

ஆகக் குறைந்தது யாழ்ப்பாணத்திற்கு plane இல் போக காசில்லாத ஒருவனுக்கு திடீரென காசும் தந்து, டிக்கெட்டும் தந்து, ஒரு மாதம் முழுதும் செலவழிக்க காசும் தந்தால் என்ன செய்வான்?

அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்................... நான் Dubai இல் பிடித்தேன்

(தொடரும்)

தொடரின் அத்தியாயங்களின் இணைப்புகள்

அங்கம் இரண்டு: நாளை இரவு நீ டுபாய் போகிறாய்

அங்கம் 3: தரை இறங்கும் விமானம்

அங்கம் 4: எரிக்காத வெயில்

அங்கம் 5: சிதைவுற்ற ஆளுமைகள்

அங்கம் 6: இந்தியர்கள் Vs நாம்

அங்கம் 7: ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் நீங்கள் தானே?

அங்கம் 8: டுபாய் வீதிகளில் 'அந்த CD' வேட்டை

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

பேரீட்சை பூக்களின் மத்தியில் ஒரு ஆண்டி...(Adults only)
^_^:o

நிலழி அண்ணா, இது உங்கட சொந்த அனுபவமோ...? உங்களுக்கு எழுத்தாற்றல் இருக்கு, நல்ல எழுதுவியல் என்று நினைக்கிறன்... எழுதுங்கோ.... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவலை தூண்டி விடீர்கள் ...இன்னும்கொஞ்சம் எழுதுங்கள். நீளமாக ..............ஒவ்வொரு நாளும் வாசிக்க கிடைக்குமா,,,,,,,

பொறுத்த இடத்தில் தொடரும் .........போட்டு விடீங்க்களே.

Link to comment
Share on other sites

அங்கம் 2 (no இரட்டை அர்த்தம்)]: "நாளை இரவு நீ டுபாய் போகிறாய்"

ஒரு நாள் ஒரு call....

மச்சான் உண்ட CV யை அனுப்பு

ஏண்டா

இங்க ஒரு Project இருக்கு....ஆனால் Dubai போய் செய்ய வேண்டும்... உனக்கு விருப்பம் இருந்ததல் CV அனுப்பு

அனுப்புறன்

=================

டுபாயில் இருந்து Call வரும்....பார்த்து கவனமாக பதில் சொல்லு (சொன்னது முஸ்லிம் முகாமையாளர்)

Call வந்தது

ஒரு பெண் பேசினார்

உன் பெயர்

என் பெயரை (உண்மை பெயர்) சொன்னன்

----

----

இது வரை 7 பேரை interview பண்ணி இருக்கிறன்....உன்னை மாதிரி ஒருவனை (ஒரு Stupid) ஐ பார்க்கவில்லை

ஆனால் நீ சொன்ன சில விடயங்கள் சரி...ஆகவே நீ OK

=============

அலுவலகத்தில் முகாமையாளர் "நாளை இரவு நீ டுபாய் போகிறாய்"

உண்மையா...........................................???

யாராவது ஒரு சாத்திரகாரன் வந்து நீ இன்னும் 4 நாளில் டுபாய் போவாய் என்று சொல்லி இருந்தால் அவனின் மூக்கில் இரத்தம் வரும் வரைக்கும் குத்தி இருப்பன்

ஆனால்,

சில வேளைகளில் வாழ்க்கை ஒரு சாத்திரகாரனின் உளரலை விட சுவாரசியமானது

=============

சரியாக 48 மணி நேரத்தில் நான் டுபாய் மண்ணில் இறங்கினேன்

ஆனால்...............

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கம் 3 ஐ, இரட்டை அர்த்தத்துடன் எதிர் பார்க்கிறேன் . அப்படி வந்தால் தான் வாசிக்கும் போது ..... கொடுப்புக்குள் சிரிக்கலாம். ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கம் 3 ஐ, இரட்டை அர்த்தத்துடன் எதிர் பார்க்கிறேன் . அப்படி வந்தால் தான் வாசிக்கும் போது ..... கொடுப்புக்குள் சிரிக்கலாம். :lol:

அது உங்களுக்கு ஓகே.. ஆனால் என்னை மாதிரி சின்ன பசங்கள் என்ன செய்யிறது? நிழலி அண்ணா பிறகு வாசிக்க விடமாட்டார். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது உங்களுக்கு ஓகே.. ஆனால் என்னை மாதிரி சின்ன பசங்கள் என்ன செய்யிறது? நிழலி அண்ணா பிறகு வாசிக்க விடமாட்டார். :(

" பேரீட்சை பூக்களின் மத்தியில் ஒரு ஆண்டி...(Adults only) "

சபேஷ் , தலைப்பே அடல்ற்ஸ் ஒன்லி என்று இருக்கும் போது நீங்கள் இதுக்குள்ளை ஏன் வந்தனீங்கள் . நிழலி அண்ணா கண்டால் பேசப் போறார் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கம் 3 ஐ, இரட்டை அர்த்தத்துடன் எதிர் பார்க்கிறேன் . அப்படி வந்தால் தான் வாசிக்கும் போது ..... கொடுப்புக்குள் சிரிக்கலாம். :lol:

மேல் அங்கம் ரெட்டையாகத்தான (அர்த்தம்) இருக்குது மச்சான்

Link to comment
Share on other sites

நாம இருக்கிற நிலைமைக்கு இப்ப ரெட்டை அர்த்தம் உள்ள கதை ரொம்ப தேவை இதுங்க எப்பவும் உருபடாதுங்க,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா Adults only என்றுசொல்லி எழுதியிருக்கிறியள்.குழந்தைக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அடுல்ஸ் ஒன்லி என்று போட்டிருக்கிறீர்கள். இந்தத் தலைப்பிற்காகவே பேரீச்சம் பூக்களோடு நிற்கிற ஆண்டி உச்சத்திற்குப் போயிடுவார். கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போல்.... பார்த்து வீட்டுக்காரி வாசித்தால் நீங்கள் என்ன ஆகுவீர்களோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நிழலி ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

அங்கம் 3: தரை இறங்கும் விமானம்

விமானம் தரை இறங்க தொடங்கின்றது. பயணிகள் அனைவரையிம் பட்டியை இறுக்குமாறு விமானப் பணிப் பெண்கள் வேண்டுகின்றனர். என்னுடன் பயணித்த என் முகாமையாளர் மீண்டும் ஐந்தாவது தடவையாக விமான இருக்கை பட்டியை எனக்கு இறுக்கி விடுகின்றார். அவர் முகத்தில் ஆயிரம் நக்கல் பார்வைகள் தோன்றின போல் எனக்கு இருந்தது. ஒழுங்காக விமான இருக்கை பட்டி அணிய பழக முடியாதவன் எல்லாம் டுபாய் போய் என்னத்தை கிழிக்க போறான் என்ற மாதிரி அவரின் பார்வை இருந்தது. நானோ மனதுக்குள் 'இந்தாள் வந்திருக்காட்டி விமானப் பணிப்பெண் அருகில் வந்து குனிந்து நின்று உதவியிருப்பாள்.. " என்று குமைந்து கொண்டிருந்தன்.

டுபாய் விமான நிலையம் போனவர்களுக்கு அதன் விஸ்தீரனம் புரியும். விமான நிலையத்துக்குள் இரண்டு பெரிய ஊர்களை அடுக்கி விடலாம் போல இருக்கும். உலகின் அதி நவீன வசதிகள் கொண்ட பரந்த விமான நிலையம் அது. ஒரு வாரத்திற்கு 130 விமான நிறுவனங்களின் 5600 விமானங்களை 200 நகரங்களுக்கு இயக்கும் விமான நிலையம் அது. கடந்தத ஆண்டு மட்டும் 3 கோடி 70 இலட்சம் பயணிகள் இந்த விமான நிலலயத்தினூடாக பயணித்துள்ளனர். மொத்தமாக 3 Terminals உம் 2 விமான ஓடு பாதைகளையும் கொண்டது.

dubaiairport1.jpg

dubaiairport.jpg

அப்படிப் பட்ட ஒரு விமான நிலையத்துக்குள் போய் சரியாக 3 ஆவது நிமிடம் என்னுடன் வந்த முகாமையாளரை தவற விட்டு விட்டு இடம் வலம் புரியாமல் நின்று கொண்டு இருந்தேன். ஒரு வழியாக எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சமாளித்து கொண்டு (என் ஆங்கில வாத்தி சிரிக்கும் சத்தம் கேட்டது போல் இருந்தது) பாஸ்போர்ட்டில் விசாவை குத்தி வெளியே வரும் போது என்னை அழைத்து கொண்டு போக என் அலுவலகத்தில் இருந்து வந்து நின்ற வாகன சாரதி கையில் என் பெயர் தாங்கிய அட்டையை தாங்கியவாறு வாழ்க்கை வெறுத்து போய் நின்று கொண்டு இருந்தார்

சாரதி என்னை வலப் பக்கமாக ஏறு என்றார். அதற்கு முதல் ஒரு நாளும் இடப் பக்க வாகன செலுத்தும் (Left hand side driving) முறையை காணாமையால் 'இதென்னடா கூத்து என்னை வலப் பக்கமாக ஏறச் சொல்கின்றார், எனக்கு வாகனம் செலுத்த தெரியாதே' என்று குழம்பியவாறு நின்று கொண்டிருந்தேன். வாகனத்தினை உள்ளே எட்டிப் பார்த்த பின் தான் நிலமை புரிந்தது'

UAE ஒரு அரபு தேசம் என்பதால் எல்லாரும் போத்தி மூடிக்கொண்டு திரிவார்கள் என நினைத்து வந்த எனக்கு அன்று இரவே என் நினைப்பு எந்தளவுக்கு தவறு என புரிந்தது. எனக்கு தங்குமிடம் வசதி செய்து தரப்பட்டிருந்தது ஒரு மூன்று நட்சத்திர விடுதியில். அதற்கு முன் தான் மத்திய கிழக்கு நாடுகளில் மிக புகழ் பெற்ற imperial எனப் படும் இரவு விடுதி இருந்தது, அது பற்றி பிறகு பார்க்கலாம்

(தொடரும்)

Link to comment
Share on other sites

கதை சுவாரசியமாய் நல்லாய் போகிது நிழலி. பேரீட்சை பூக்கள் எண்டுறது டுபாயில இருக்கிற டுபாக்கு பெண்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேல் அங்கம் ரெட்டையாகத்தான (அர்த்தம்) இருக்குது மச்சான்

அங்கம் 2 (no இரட்டை அர்த்தம்) என்றவுடன் தொடர்ந்து வாசிக்கவில்லை மச்சான் . ஹிஹீஹீ ..... :huh:

UAE ஒரு அரபு தேசம் என்பதால் எல்லாரும் போத்தி மூடிக்கொண்டு திரிவார்கள் என நினைத்து வந்த எனக்கு அன்று இரவே என் நினைப்பு எந்தளவுக்கு தவறு என புரிந்தது.

உடனே ........ ஆயிரம் கலர் பல்ப்புகள் மனதுக்குள் மின்னி , மின்னி எரிஞ்சிருக்குமே ......... :lol::(:huh:<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கம் 3

விமானம் தரை இறங்க தொடங்கின்றது. பயணிகள் அனைவரையிம் பட்டியை இறுக்குமாறு விமானப் பணிப் பெண்கள் வேண்டுகின்றனர். என்னுடன் பயணித்த என் முகாமையாளர் மீண்டும் ஐந்தாவது தடவையாக விமான இருக்கை பட்டியை எனக்கு இறுக்கி விடுகின்றார். அவர் முகத்தில் ஆயிரம் நக்கல் பார்வைகள் தோன்றின போல் எனக்கு இருந்தது. ஒழுங்காக விமான இருக்கை பட்டி அணிய பழக முடியாதவன் எல்லாம் டுபாய் போய் என்னத்தை கிழிக்க போறான் என்ற மாதிரி அவரின் பார்வை இருந்தது. நானோ மனதுக்குள் 'இந்தாள் வந்திருக்காட்டி விமானப் பணிப்பெண் அருகில் வந்து குனிந்து நின்று உதவியிருப்பாள்.. " என்று குமைந்து கொண்டிருந்தன்.

டுபாய் விமான நிலையம் போனவர்களுக்கு அதன் விஸ்தீரனம் புரியும். விமான நிலையத்துக்குள் இரண்டு பெரிய ஊர்களை அடுக்கி விடலாம் போல இருக்கும். உலகின் அதி நவீன வசதிகள் கொண்ட பரந்த விமான நிலையம் அது. ஒரு வாரத்திற்கு 130 விமான நிறுவனங்களின் 5600 விமானங்களை 200 நகரங்களுக்கு இயக்கும் விமான நிலையம் அது. கடந்தத ஆண்டு மட்டும் 3 கோடி 70 இலட்சம் பயணிகள் இந்த விமான நிலலயத்தினூடாக பயணித்துள்ளனர். மொத்தமாக 3 Terminals உம் 2 விமான ஓடு பாதைகளையும் கொண்டது.

dubaiairport1.jpg

dubaiairport.jpg

அப்படிப் பட்ட ஒரு விமான நிலையத்துக்குள் போய் சரியாக 3 ஆவது நிமிடம் என்னுடன் வந்த முகாமையாளரை தவற விட்டு விட்டு இடம் வலம் புரியாமல் நின்று கொண்டு இருந்தேன். ஒரு வழியாக எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சமாளித்து கொண்டு (என் ஆங்கில வாத்தி சிரிக்கும் சத்தம் கேட்டது போல் இருந்தது) பாஸ்போர்ட்டில் விசாவை குத்தி வெளியே வரும் போது என்னை அழைத்து கொண்டு போக என் அலுவலகத்தில் இருந்து வந்து நின்ற வாகன சாரதி கையில் என் பெயர் தாங்கிய அட்டையை தாங்கியவாறு வாழ்க்கை வெறுத்து போய் நின்று கொண்டு இருந்தார்

சாரதி என்னை வலப் பக்கமாக ஏறு என்றார். அதற்கு முதல் ஒரு நாளும் இடப் பக்க வாகன செலுத்தும் (Left hand side driving) முறையை காணாமையால் 'இதென்னடா கூத்து என்னை வலப் பக்கமாக ஏறச் சொல்கின்றார், எனக்கு வாகனம் செலுத்த தெரியாதே' என்று குழம்பியவாறு நின்று கொண்டிருந்தேன். வாகனத்தினை உள்ளே எட்டிப் பார்த்த பின் தான் நிலமை புரிந்தது'

UAE ஒரு அரபு தேசம் என்பதால் எல்லாரும் போத்தி மூடிக்கொண்டு திரிவார்கள் என நினைத்து வந்த எனக்கு அன்று இரவே என் நினைப்பு எந்தளவுக்கு தவறு என புரிந்தது. எனக்கு தங்குமிடம் வசதி செய்து தரப்பட்டிருந்தது ஒரு மூன்று நட்சத்திர விடுதியில். அதற்கு முன் தான் மத்திய கிழக்கு நாடுகளில் மிக புகழ் பெற்ற imperial எனப் படும் இரவு விடுதி இருந்தது, அது பற்றி பிறகு பார்க்கலாம்

(தொடரும்)

:):) மாஷால்லா.....மாஷால்லா.....!!! :lol::rolleyes:

நல்லாய் போகுது இதுவரைக்கும்....மேலறிய ஆவலாய் உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கம் 2 (no இரட்டை அர்த்தம்) என்றவுடன் தொடர்ந்து வாசிக்கவில்லை மச்சான் . ஹிஹீஹீ ..... :lol:

உடனே ........ ஆயிரம் கலர் பல்ப்புகள் மனதுக்குள் மின்னி , மின்னி எரிஞ்சிருக்குமே ......... :lol::):):D

உருவங்கள் எல்லாம் பெரிய மண் அரண்கள் மாதிரி இருக்கும்....கண்ட உடனே ல்ய்ட் பல்ப் எல்லாம் fuse அடிக்காம இருந்தாலே பெரிய விஷயம் சிறி அண்ணா!!

:rolleyes::lol:

Link to comment
Share on other sites

என் ஆங்கில வாத்தி சிரிக்கும் சத்தம் கேட்டது போல் இருந்தது
:rolleyes:

நகைசுவையோடான வரிகள் உங்கள் எழுத்தில் இழையோடுகிறது. தொடருங்கள் நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருவங்கள் எல்லாம் பெரிய மண் அரண்கள் மாதிரி இருக்கும்....கண்ட உடனே ல்ய்ட் பல்ப் எல்லாம் fuse அடிக்காம இருந்தாலே பெரிய விஷயம் சிறி அண்ணா!!

:rolleyes::lol:

அங்கம் 3

------

dubaiairport1.jpg

dubaiairport.jpg

அப்படிப் பட்ட ஒரு விமான நிலையத்துக்குள் போய் சரியாக 3 ஆவது நிமிடம் என்னுடன் வந்த முகாமையாளரை தவற விட்டு விட்டு இடம் வலம் புரியாமல் நின்று கொண்டு இருந்தேன்.

------

(தொடரும்)

அதுதானே ......... இளையபிள்ளை ,

சிலவேளை நிழலி காஞ்ச மாடு கம்பிலை விழுந்தமாதிரி ரொம்ப அவசரப்பட்டுப் போனாரோ ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்மனத்தின் அழியாத சுவடுகள் தொடர் கதையாய் ..நடை போடுகின்றன . உள்ளத்தின் பதிவுகளும் ... சிரிப்புமாய் ......

.தொடருங்கள். காத்திருந்து வாசிக்கிறோம். .

Link to comment
Share on other sites

ஐயா நிழலி

ஒரே தடவையில் 5 வசனங்களுக்கு மேல் எழுதுவதில்லை என்று யாருக்காவது சத்தியம் செய்து கொடுத்திருக்கிறீர்களா?

பொறுமையைச் சோதிக்கத் தான் வேண்டும் அதற்காக இப்படியா........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை சுவாரசியமாய் நல்லாய் போகிது நிழலி. பேரீட்சை பூக்கள் எண்டுறது டுபாயில இருக்கிற டுபாக்கு பெண்களோ?

கலைஞனுக்கு வந்த சந்தேகம் எனக்கும் வருகுது ,

அது என்ன டுபாக்கு ......... கற்பு உள்ளவர்களையா குறிப்பது . :lol::):rolleyes:

Link to comment
Share on other sites

அங்கம் 4: எரிக்காத வெயில்

நான் வந்திறங்கிய காலப் பகுதி கடும் வெயில் காலம். வெயில் என்றால் சும்மா வெயில் அல்ல...கிட்டத் தட்ட 55 பாகை செல்சியஸ் வெப்ப நிலை இருக்கும் ஜூன் மாத நடுப் பகுதி. கொடிய Summer காலம். நான் ஏதோ யாழ்ப்பாணத்தில வரும் வெயில் போல இருக்கும் என்ற நினைப்பில் தான் போய் இறங்கினன். போய் இறன்கிய நேரம் ஒரு காலை நேரம் என்பதால் பெரிய அளவில் உணரவில்லை

மதியம் வந்தது...பசியும் வந்தது. 3 நட்சத்திர விடுதியில் உணவு வாங்கி உண்ணும் அளவுக்கு நிதி நிலை இருக்கவில்லை என்பதால் ஷேர்ட்டை மாட்டிக் கொண்டு வெளியே போகத் தொடங்கினேன்.

ஒரு மூன்று நிமிடம் நடந்து இருப்பன். போறணைக்கு பக்கத்தில் நின்றால் உடம்பு சூடாகுவது போல் உடல் முழுக்க சூடு ஏறத் தொடங்கியது. நடு மண்டையில் நச் சென்று சூரியன் வந்து குந்தி இருந்து எகத்தாளமாக சிரிப்பது போல ஒரு உணர்வு. மூன்று நிமிடத்தில் கடந்த தூரத்தை முப்பது செக்கனில் ஓடிக் கடந்து மீண்டும் விடுதிக்கே வந்து விட்டேன்.

UAE வெக்கை இலங்கையில் இருக்கும் வெக்கை போன்றோ அல்லது கனடா summer வெக்கை போன்றோ இல்லை. எவ்வளவு வெயில் வந்தாலும் வியர்க்காது. கச கச என்று இருக்காது. அடுப்புக்கு பக்கத்தில் நிற்பது போல் உஷ்ணக் காற்று அடிக்கும். என்னைப் போன்ற நல்ல தங்க நிறமான ஆக்கள் (யாழ் களத்தில் உள்ள அனேகம் பேரை நிச்சயம் சந்திக்க மாட்டன் என்ற துணிவு இருக்கு...என்னை நேரில் பார்த்தவர்கள் தம் திருவாயை மூடிக் கொள்ளவும்) எவ்வளவு வெயில் அடித்தாலும் கறுக்க மாட்டினம். கையில் முட்டையுடன் போனால், நடு வீதியில் வைத்து பொரியள் செய்து சாப்பிடலாம். 10 நிமிடம் தலையில் தொப்பி அல்லது துண்டு போடாமல் போனால், உச்சம் தலை வெடித்து சாவு வருவது நிச்சயம். தொப்பி போட்டு நடந்தால் 30 நிமிடத்தில் உடலில் உள்ள நீர் முடிவடைந்து dehydrate ஆகி இறக்க நேரிடும். ஆனால் அந்த வெயிலிலும் தலையில் பெரிய துண்டு போட்டுக் கொண்டு கட்டிடங்களின் மீது ஏறி நின்று வேலை செய்யும் கூலித் தொழிலாளிகளை காண முடியும். அவர்களில் அநேகமானோர் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற தென்னாசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான். தொழிலாளிகளின் இரத்ததினை உறிஞ்சி எந்தவிதமான அடிப்படை உரிமையும் கொடுக்காத இரக்கமற்றா நாடுகளில் UAE யும் ஒன்று.

திரும்பி விடுதிக்கு வந்தபின், ஒருவாறு அருகில் உள்ள இலங்கை உணவு விடுதியில் தொலைபேசி இலக்கம் பெற்று ஓர்டர் செய்து சாப்பிட்டேன். நான் தங்கி இருந்த விடுதியில் கிட்டத் தட்ட என் சக அலுவலக ஆட்கள் 30 பேர் வரையில் தங்கி இருந்தனர். அவர்களில் அநேகமானோர் சிங்களவர்கள். ஒரு சிலர் தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள். ஆனால் முதல் நாள் என்பதால் என் முஸ்லிம் நண்பன் ஒருவனைத் தவிர வேறு எவரையும் தெரியாது. எனக்கு தெரிந்த இந்த நண்பன் மூலம் தான் இந்த (கொழும்பு) கம்பனியில் வேலை கிடைத்தது. நாம் இருவரும் ஏற்கனவே வேறு ஒரு கணினி மென் பொருள் தயாரிக்கும் கம்பனியிலும் ஒன்றாக வேலை பார்து இருந்தோம். அவனும் டுபாய் வந்து ஒரு வாரம் தான் ஆகி இருந்தது

நானும் அவனும் சேர்ந்தால் ஒரு பெரிய வங்கியை கூட சத்தமில்லாமல் கொள்ளை அடிக்க கூடியவர்கள் என்பது பலருக்கு தெரியாத விடயம். அப்பாவி முகத்துடன் திரியும் படுபாவிகள் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அந்த ஒரு சிலரில் பலர் பெண்கள் என்ற உண்மையை உங்களுக்கு நான் சொல்லப் போவதில்லை.

அன்றிரவு அந்த நண்பன்..அவனை 'ஷான்' என்றே இனி அழைக்கின்றேன்...என் அறைக்கு வந்து, மச்சான் Balcony க்கு போய் வெளியே பார் என்றான்.

வெளியே அற்புதமான விளக்கு வெளிச்சத்தில் 'இம்பீரியல்' இரவு விடுதியும் அதனை சுற்றி தேவலோகத்தில் இருந்து நேராக வந்து உதித்த போன்ற அழகு மங்கையரும் நின்று கொண்டு இருந்தனர்.

போவோமா என்று கேட்டான்

நான் அதற்கு...

(தொடரும்...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா அங்கம் 3 அசத்திட்டு.மிகுதி எப்போ.....? சின்ன ஒரு கவலை அண்ணா உங்கட பேயருக்கு பக்கதில் இருப்பவரைக்காணத்தான் கொஞ்சம் கண் கூசுது . :rolleyes::) அண்ணா.ஆதிகால மனிதரின்ட நினைப்பு வருகிறது.ம்ம்ம்.... :lol::)

யாயினி.

Link to comment
Share on other sites

போவோமா என்று கேட்டான்

:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   02 JUN, 2024 | 11:30 AM ஆர்.ராம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உள்ளகப் பொறிமுறையிலேயே தீர்வுகள் காணப்பட வேண்டும். வெளியகத் தலையீடுகள் காணப்படும் பட்சத்தில் இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தல் அதிகரிக்கும் நிலைமைகளே ஏற்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்கள் 15 ஆண்டுகளாக ஐக்கிய இலங்கைக்குள்ளே கௌரவமாக வாழ்வதற்கு விரும்புகின்ற நிலையில் அவர்களின் பிரச்சினைகளையும்,  கோரிக்கைகளையும் உள்நாட்டுக்குள்ளேயே தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் விரைந்து எடுத்து வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றின் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும் ஸ்தாபிப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். போர் நிறைவடைந்து 15 ஆண்டுகளாகின்ற போதும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக நீதிக்கோரிக்கையை முன்வைத்து வருகின்றதோடு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அதற்கான அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்கும் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும்  கட்டியெழுப்புவதிலும் நாம் அதிகளவான கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளார். குறிப்பாக, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றை வினைத்திறனுடன் செயற்படுவத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதுநேரம் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்த நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையும் தற்போது கிடைக்கபெற்றுள்ளது. அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படவுள்ளன. இவ்வாறான நிலையில்ரூபவ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தினை வழங்குவதில் நாம் கரிசனைகளைக் கொண்டுள்ளோம். அத்துடன் இன முரண்பாடுகளுக்கு முழுமையான தீர்வினை எட்டுவதிலும் கரினைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் நடைமுறைச்சாத்தியமான வகையிலேயே பிரச்சினைகளை கையாள்வதற்கு முனைகின்றோம். குறிப்பாக உள்ளகப் பொறிமுறைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்ட முடியும். வெளியகப் பொறிமுறைகள் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கப்போவதில்லை. ஆகவே சர்வதேசத்தினை மையப்படுத்திய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால் பிரச்சினைகளே மேலும் அதிகரிக்கும். குறிப்பாக வெளியகத்தாரின் தலையீடுகள் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலையே அதிகமாக்கும். எனவேதான், இனங்களுக்கு இடையிலான பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் உள்ள ரீதியிலான தேசியப் பொறிமுறை ஊடாக பயணிப்பது தான் பொருத்தமானதாக இருக்கும். இந்த விடயத்தில் தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை மக்களும் நியாயனதொரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற அழைப்பினை நான் பகிரங்கமாக விடுகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/185096
    • 02 JUN, 2024 | 11:24 AM   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 43வது ஆண்டு நினைவேந்தல் நேற்று சனிக்கிழமை (01) மாலை நூலக முன்றலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்துகொண்டு  நினைவேந்தலுக்கான முதல் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து, ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் இதில் பங்கெடுத்து தமது ஆழ்ந்த இரங்கலினை வெளிப்படுத்தினர்.  https://www.virakesari.lk/article/185089
    • 01 JUN, 2024 | 11:27 PM   யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக  சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர். யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ் குருநகர் பகுதியில் உள்ள சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண், பெண் மீது தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார். பெண் தீயில்  எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185082
    • 01 JUN, 2024 | 11:22 PM யாழ்ப்பாணம்,  ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள குட்டை போன்ற சிறிய நீர்நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் இன்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன. 11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுவர்களுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவர்கள் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றிருந்தனர். கடைக்கு சென்ற சிறுவர்களை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்கள் இருவரது சடலங்களையும் அவதானித்துள்ளனர்.  இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக குட்டையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185081
    • Published By: DIGITAL DESK 7   02 JUN, 2024 | 09:58 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் 5ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுவதுடன், அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முதலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. அந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார். இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை உறுதியாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுஜன பெரமுன உட்பட அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தரப்பினரை ஒன்றிணைத்து அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மறுபுறம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்க உத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபகஷ ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் வரும் புதன்கிழமை ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மறுபுறம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர். இந்த கூட்டத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்பாடு செய்கின்றார். அத்துடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185092
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.