Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் தடவையாக தேசிய கீதத்திற்கு மதிப்பளித்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி முதல் தடவையாக தேசிய கீதம் ஒலிக்கும் போது அதற்கு கௌரவமளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நடாத்தப்படும் நிகழ்வுகளில் தேசிய கீதம் ஒலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், முதல் தடவையாக வவுனியா உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வுகளின் போது தேசிய கீதம் ஒலித்ததாகவும், கட்சி உறுப்பினர்கள் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் எழுந்து நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசியப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினைத் தேட ஈ.பி.டி.பி மற்றும் புளொட் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1...14611&cat=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காற்று அடிக்கிற பக்கம் சாயிறது என்று இதைத்தான் சொல்லுறது ஜீவா

காற்று அடிக்கிற பக்கம் சாயிறது என்று இதைத்தான் சொல்லுறது ஜீவா

அவர்களை குறை சொல்லாதீர்கள் தற்போது அவர்களின் நடவடிக்கையும் அகதிமுகாமில் இருக்கும் மக்களின் நலன் கருதியே.

கூட்டமைப்பும் வேற என்னத்தைத்தான் செய்யவேண்டும்?

இப்ப இருக்கிற நிலமையில் ஈழத்தைத் தா என்டு கொடுக்கை வரிஞ்சு கட்டலாமா?

அதுதான் சிங்களவன் எங்களின்ர கோமணத்தையும் உருவிட்டானே?

இப்ப உங்களுக்கு கூட்டமைப்புத்தான் கிடைச்சதா?

இன்று அங்கிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் அதை சொல்லுங்கள் முதலில்!

  • கருத்துக்கள உறவுகள்

காற்று அடிக்கிற பக்கம் சாயிறது என்று இதைத்தான் சொல்லுறது ஜீவா

வேறுவழி ஏதாவது.......???

கூட்டமைப்பும் வேற என்னத்தைத்தான் செய்யவேண்டும்?

இப்ப இருக்கிற நிலமையில் ஈழத்தைத் தா என்டு கொடுக்கை வரிஞ்சு கட்டலாமா?

அதுதான் சிங்களவன் எங்களின்ர கோமணத்தையும் உருவிட்டானே?

இப்ப உங்களுக்கு கூட்டமைப்புத்தான் கிடைச்சதா?

இன்று அங்கிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் அதை சொல்லுங்கள் முதலில்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகள் அனைவரிடமும் சந்தேகம்.

நான் என்னுடைய கடவுச் சீட்டைப் புதிப்பிப்பதற்கோ அல்லது வேறு தேவையாகவோ

ஜெர்மனிலுள்ள இலங்கைத் தூதராலயத்திற்குப் போகிறேன் என வைத்துக்கொள்வோம். அல்லது நீங்கள் உங்கள் உங்கள் நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்குப் போகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அங்கே ஏதோ ஒரு காரணத்திற்காக தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். உங்களில் எத்தனை பேர் நான் தமிழீழ தேசிய கீதத்திற்கு மட்டுமே மதிப்பளிப்பேன் . சிறிலங்கா கீதத்தை அவமரியாதை செய்வேன் என்று கூறி ஆசனத்திலேயே அமர்ந்திருப்பீர்கள்?

(நான் எழுந்து நிற்பேன். )

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எழுந்து நிற்பேன்

அது எவரது தேசியகீதமானாலும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலகுவாக கொடுக்கக்கூடியது துரோகிப்பட்டம் ஒன்றுதான், முன்பு கொடுத்திருந்தாலும் பறவாயில்லை, கொடுத்துவிடுங்கள். :(:)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இவர்களும் தமிழர்கள் தாணே. எமக்கு உள்ள குணம் இருக்கும்தாணே.

நானும் எழுந்து நிற்பேன்

அது எவரது தேசியகீதமானாலும்

  • கருத்துக்கள உறவுகள்

இலகுவாக கொடுக்கக்கூடியது துரோகிப்பட்டம் ஒன்றுதான், முன்பு கொடுத்திருந்தாலும் பறவாயில்லை, கொடுத்துவிடுங்கள். :(:)

தமிழர்கள் எல்லோரும் துரோகிகள்தானே.. என்ன உங்களுடன் சேர்ந்துவிட்டோமே என்று சற்று மனவருத்தம்.. எனினும் நீங்கள் எங்களை நயமாகவும் நாகரிகமாகவும் கவனிப்பீர்கள் என்பதாலும் கிடைப்பதில் பங்கு தருவீர்கள் என்பதாலும் சற்று மனமகிழ்ச்சியும் உண்டு, தாத்தா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசியப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினைத் தேட ஈ.பி.டி.பி மற்றும் புளொட் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

திமிழ் தேசிய கூட்டமைப்பு தானே அவர்கள் அப்போ இது என்ன {தேசியப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினைத் தேட ஈ.பி.டி.பி மற்றும் புளொட் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பதவிப் பிரமாண.... }

எல்லாம் பதவியும் தங்கட உயிரை காப்பாத்தாவும் தான்.

Edited by jhansirany

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசியப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினைத் தேட ஈ.பி.டி.பி மற்றும் புளொட் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

திமிழ் தேசிய கூட்டமைப்பு தானே அவர்கள் அப்போ இது என்ன {தேசியப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினைத் தேட ஈ.பி.டி.பி மற்றும் புளொட் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பதவிப் பிரமாண.... }

எல்லாம் பதவியும் தங்கட உயிரை காப்பாத்தாவும் தான்.

எனக்குப்புரியவில்லை

நாம் என்ன சொல்லவருகின்றோம் என்று....

எங்கு செல்கின்றோம் என்று....

எதை எதிர்பார்க்கின்றோம் என்று....

பிரபாகரன் சாதுர்யமாக காய் நகர்த்தவில்லை என்று எம்மிடையே உள்ளோர் கேள்வி எழுப்பும் இந்த வேளையில்

தற்போது அதே சாதுர்யத்தை இவர்கள் செய்யும்போது ....

அதற்கும் எதிர்ப்பு என்றால்...???

எனக்குப்புரியவில்லை

நாம் என்ன சொல்லவருகின்றோம் என்று....

எங்கு செல்கின்றோம் என்று....

எதை எதிர்பார்க்கின்றோம் என்று....

அவர்களும் அந்த நாட்டுக்குள் தான் இருக்கிறார்கள்.. அப்ப அரசு சொல்வதை செய்ய தானே வேண்டும். சும்மா பேப்பரில கிறுக்கினவனுக்கே 20 வருசம்.

இவை எம்மாத்திரம்.

அந்த எ.ம்.பி சிறையில . யாராவது விடுவிக்க சொன்னார்களா?

சரி இங்க புலம் பெயர் நாடுகளில் அரசியல் வாதிகளின் செல்வாக்குகள் தமிழருக்கு இருந்தும் இங்கிருக்கும் எ.ம்.பி மாரால் சிங்களவனுக்கு அவரை விடுவிக்க அழுத்தம் கொடுக்க முடியவில்லை.

தேசியத்தை வென்றெடுக்க எந்த மொள்ளமாரி வேலை பார்த்தாலும் தகும் அதில் இதுவும் ஒரு தந்திரம் என எண்ணுவோம். அவங்கட தேசிய பாடல் ஒலிக்கயில் மனதில் தமிழீழ தேசிய (ஏறுது பார்... கொடி ஏறுது பார்...) பாடல் தான் என் மனதில் ஒலிக்கும். மேலும் கம்பி வேலிக்கு பின் உள்ள உறவுகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரவாத தடைச்சட்டம் பல புதிய மின்னணு திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்த உள்ளது.

எல்லோரும் சுதந்திரமாக பேச உரிமை உள்ள இடங்களில் இருந்து தவளைக்கத்தல் கத்தலாம்.

ஆனால் அங்கு இருப்பு கொள்ள சில செய்ய வேண்டும்.

தேசிய கீதம் பாட எழுந்து நிற்காவிடில் அவர்கள் 22/ அல்லது 14 பேரும் உலகில் பெருமை வாய்ந்த நீதிச்சட்ட்த்தின்படி மரண தண்டை விதித்துவிடுவார்கள்.

பின் தமிழர் அல்லாத சிங்கள பிராமிகள்தான்.......................

50/50

40/60

0/100 இல் வந்து நிற்கிறோம்

அவர்களும் அந்த நாட்டுக்குள் தான் இருக்கிறார்கள்.. அப்ப அரசு சொல்வதை செய்ய தானே வேண்டும். சும்மா பேப்பரில கிறுக்கினவனுக்கே 20 வருசம்.

இவை எம்மாத்திரம்.

அந்த எ.ம்.பி சிறையில . யாராவது விடுவிக்க சொன்னார்களா?

சரி இங்க புலம் பெயர் நாடுகளில் அரசியல் வாதிகளின் செல்வாக்குகள் தமிழருக்கு இருந்தும் இங்கிருக்கும் எ.ம்.பி மாரால் சிங்களவனுக்கு அவரை விடுவிக்க அழுத்தம் கொடுக்க முடியவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டம் பல புதிய மின்னணு திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்த உள்ளது.

எல்லோரும் சுதந்திரமாக பேச உரிமை உள்ள இடங்களில் இருந்து தவளைக்கத்தல் கத்தலாம்.

ஆனால் அங்கு இருப்பு கொள்ள சில செய்ய வேண்டும்.

தேசிய கீதம் பாட எழுந்து நிற்காவிடில் அவர்கள் 22/ அல்லது 14 பேரும் உலகில் பெருமை வாய்ந்த நீதிச்சட்ட்த்தின்படி மரண தண்டை விதித்துவிடுவார்கள்.

பின் தமிழர் அல்லாத சிங்கள பிராமிகள்தான்.......................

50/50

40/60

0/100 இல் வந்து நிற்கிறோம்

50/50

40/60

0/100 இல் வந்து நிற்கிறோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கு கிழக்கில் ஓர் பரந்து பட்ட ஒருங்கிணைந்த கூட்டமைப்பினை உருவாக்க முஸ்லிம் கட்சிகள் முன்வரவேண்டும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இற்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த இரா சம்பந்தன். அவர் மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. தற்போதய சூழலில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சிறுபான்மை மக்களிற்கு உள்ள உரிமைகளை பெறுவதற்கு இது இன்றியமையாதது.

முன்பு தமிழர் விடுதலை கூட்டணியின் இலட்சினையில் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து தேர்தலில் பங்குபற்றியுள்ளன. ஆனால் தற்போது ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரே எம்மில் உள்ளார். விடுதலைப்புலிகள் இருக்கும் போது தான் அதன் ஆதரவாளர்கள் எதிராளிகள் என இருபிரிவாக கட்சிகள் இருந்தன. ஆனால் தற்போதுதான் விடுதலைப்புலிகள் இல்லையே எனவே நாம் அனைவரும் ஒன்றிணைய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

வன்முறைகளாலும்இபோரினாலும்இ பிரிவினை பேசுவதாலும் எதனையும் நாம் பெறப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.parantan.com/

Edited by jhansirany

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கிருப்பது ஒரு மின் தட்டச்சு

அதில் எல்லாம் செய்யாலாம், இருந்த இடத்தில் இருந்து

மிச்சமாக இருக்கும் தமிழ் மக்களின் இரத்ததையும் உறிஞ்சலாம்

புலிகளிலும் தலைவனின்லும் குற்றம் கண்டு பிடித்து, மாற்றி யோசிப்பாளராக காட்டலாம்

இது இரண்டையும் செய்பவர்கள் தான் இப்ப இருக்கின்றோம்

அங்கு தினம் தினம் குரூர சித்திரவதைக்கு உள்ளாகும் எம் மக்களின் துயர் தீர்க்க என்ன செய்தோம் (தட்டச்சு வீரன் பிழம்பு உட்பட?)

நாம் புலிகொடி ஏந்தி போராட்ட தலைமையை காப்பாற்ற ஊர்வலம் போன காலத்தை விட இன்று எமக்கான அரசியல் களமும், மனிதாபிமானப் எனும் பெயரில் மேற்குலகின் கறுப்பு செயல்களும் இலங்கையில் அதிகரித்துள்ளன. ஒரு கொலை வீடியோவைக் கூட வெளிநாட்டுக்காரனின் தயவில்தான் வெளியிட வேண்டிய கேவலமான நிலையில் இருந்து கொண்டு மின் தட்டச்சு வீரராக மட்டும்தாம் வேடம் போட முடிகின்றது

ஒரு வேளை, இலங்கைக்கு எதிராக எல்லா நாடுகளும் ஒன்று திரண்டாலும், எம் பலவீனத்தை கண்டு பின் வாங்குவார்கள்...அது தான் நிஜம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.