Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத்பொன்சேகா 53 வீத வாக்கு பெற்று வெல்வார் என கணிப்பீடு !

Featured Replies

இலங்கை அரசின் ஏற்பாட்டின் கீழ் வெளிநாட்டு நிபுணர்களால் நடத்தப்பட்டுள்ள கருத்துக்கணிப்பொன்றின் முதற்கட்ட முடிவுகள் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 53 வீத வாக்குகளைப் பெறுவார் என்றும் பதவியிலிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ 45 வீதவாக்குகளையே பெறுவார் என்றும் தெரிவித்துள்ளன. கொழும்பிலிருந்து வெளிவரும் "இருதின" சிங்கள வார ஏடு இந்தத் தகவலைத் வெளியிட்டிருக்கிறது.

அப்பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின் விவரம் வருமாறு:

அரசினால் கோடிக்கணக்கில் செலவழிக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்களால் இக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமையே இதன் விஷேட அம்சமாகும்.

வாரந்தோறும் இவ்விதமாக மேற்கொள்ளப்படவுள்ள கருத்துக் கணிப்புகளின் அறிக்கைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. இவ்விதம் மேற்கொள்ளப்பட்ட முதலாம் கட்ட கருத்துக் கணிப்பீட்டுக்கு அமைய, ஜெனரல் சரத்பொன் சேகாவுக்கு 53 சதவீதமான வாக்குகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு 45 சதவீதமான வாக்குகளும் கிட்டியுள்ளதாக "இருதின" பத்திரிகை தகவல் கூறுகின்றது.

வடக்கு கிழக்கு உள்ளடங்கும் 25 ஆயிரம் பேர் மத்தியில் நடத்தப்பட்ட இக் கருத்துக் கணிப்பில் பங்கு பற்றிய வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களில் 75 சதவீத மானோரும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் பெருமளவிலானோர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் மேற்படிப் பத்திரிகைத் தகவல் தெரிவிக்கின்றது.

இதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜ பக்ஷவுக்குப் பெரிதும் சாதகமாக அமைந்திருந்த தெற்கின், அம்பாந் தோட்டை, மாத்தறை, காலி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான ஆதரவு சரிக்குச் சரியென்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதாகவும் மேற்படி கணிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றினுள்ளும் காலி மாவட்டத்தில் ஏறத்தாழ 5 வீதமளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட ஜெனரல் சரத் பொன்சேகா முன்னணி வகிப்பாதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இவற்றுக்கு அமைய, ஜனாதிபதித் தேர்தல் களத்தில் ஜெனரல் சரத் பொன் சேகாவே வெற்றி வாய்ப்பில் முன்னணியில் உள்ளார் எனவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. http://www.eelanatham.net/news/important

  • கருத்துக்கள உறவுகள்

-----

வடக்கு கிழக்கு உள்ளடங்கும் 25 ஆயிரம் பேர் மத்தியில் நடத்தப்பட்ட இக் கருத்துக் கணிப்பில் பங்கு பற்றிய வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களில் 75 சதவீத மானோரும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் பெருமளவிலானோர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் மேற்படிப் பத்திரிகைத் தகவல் தெரிவிக்கின்றது.

-----

சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் ...... 90 வீதமான வித்தியாசத்தில் சரத் வெல்வார்.

சிவாஜிலிங்கம் போட்டியிடுவது மகிந்தவின் வெற்றிக்கே வழி சமைக்கும்.

இன்னும் காலம் கடந்து விடவில்லை ,சிவாஜிலிங்கம் போட்டியிலிருந்து விலகி இருப்பதே ...... புத்திசாலித்தனம்.

ஓட்டு மொத்த சிறீ லங்கனும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுவினமோ இல்லையோ எண்டு ஒரு கருத்து கணிப்பும் செய்ய இல்லையே...

சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் ...... 90 வீதமான வித்தியாசத்தில் சரத் வெல்வார்.

சிவாஜிலிங்கம் போட்டியிடுவது மகிந்தவின் வெற்றிக்கே வழி சமைக்கும்.

இன்னும் காலம் கடந்து விடவில்லை ,சிவாஜிலிங்கம் போட்டியிலிருந்து விலகி இருப்பதே ...... புத்திசாலித்தனம்.

ஒருவேளை சரத் பொன்ஸ் மகிந்தவை விட நல்லவராக இருந்தால் செய்யலாம் தான்... ஆனால் உண்மை மகிந்தவை விட அதிக கொடூரமாக ஐதேக கூட்டணியில் இருக்கும் ஜெவிபி, சரத் கூட்டணி வேற மாதிரி எல்லே கதை சொல்லுது...

அக்கரைக்கு இக்கரை பச்சை எனும் கதை தமிழருக்கு தொடர்கதைதான் போல...

  • கருத்துக்கள உறவுகள்

அரசனை நம்பிப் புருஷனை ஏமாந்த மாதிரித்தான் தமிழர்கள். முன்னர் மகிந்தவை வரப்பண்ண வாக்களிக்க விடவில்லை. தற்போது மகிந்தவை வெளியேற்ற சரத்துக்கு வாக்களிக்க வேண்டுதல்.

சிவாஜிலிங்கம் தேர்தலில் நிற்பதில் என்ன பிரச்சினை? குறைந்தபட்சம் தாயகத் தமிழர்கள் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்றாவது அறியமுடியும். அதாவது அவர்கள் மகிந்த, சரத், சிவாஜி ஆகியோரில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்றாவது அறியலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டு மொத்த சிறீ லங்கனும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுவினமோ இல்லையோ எண்டு ஒரு கருத்து கணிப்பும் செய்ய இல்லையே...

ஒருவேளை சரத் பொன்ஸ் மகிந்தவை விட நல்லவராக இருந்தால் செய்யலாம் தான்... ஆனால் உண்மை மகிந்தவை விட அதிக கொடூரமாக ஐதேக கூட்டணியில் இருக்கும் ஜெவிபி, சரத் கூட்டணி வேற மாதிரி எல்லே கதை சொல்லுது...

அக்கரைக்கு இக்கரை பச்சை எனும் கதை தமிழருக்கு தொடர்கதைதான் போல...

அரசனை நம்பிப் புருஷனை ஏமாந்த மாதிரித்தான் தமிழர்கள். முன்னர் மகிந்தவை வரப்பண்ண வாக்களிக்க விடவில்லை. தற்போது மகிந்தவை வெளியேற்ற சரத்துக்கு வாக்களிக்க வேண்டுதல்.

சிவாஜிலிங்கம் தேர்தலில் நிற்பதில் என்ன பிரச்சினை? குறைந்தபட்சம் தாயகத் தமிழர்கள் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்றாவது அறியமுடியும். அதாவது அவர்கள் மகிந்த, சரத், சிவாஜி ஆகியோரில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்றாவது அறியலாம்.

சரத் பொன்சேகாவோ , ஜே.வி.பி. யோ , மகிந்தவோ தமிழனுக்கு விடிவு தரப்போவதில்லை.

இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் படி மகிந்த வென்றால்...... எம்மீது நடைபெற்ற மோசமான நிகழ்வுகள் எதுகுமே வெளியே வராமல் அமுங்கிப் போய்விடும்.

சரத் வென்றால் ...... மகிந்த, கோத்தபாயா போன்றவர்களுடன் நடக்கும் போட்டியில் பல உண்மைகள் வெளிவரும்.

அதனை தடுப்பது போல் தான் ...... சிவாஜிலிங்கம் போட்டியிடுவதை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சிவாஜிலிங்கம் போட்டியிடுவதால்தான் மகிந்த வெல்லப் போகின்றார் என்று சொல்கிறீர்கள். இது மகிந்தவின் செல்வாக்கை மலினப்படுத்தும் கூற்று!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சிவாஜிலிங்கம் போட்டியிடுவதால்தான் மகிந்த வெல்லப் போகின்றார் என்று சொல்கிறீர்கள். இது மகிந்தவின் செல்வாக்கை மலினப்படுத்தும் கூற்று!

மீண்டும் தலைப்பு செய்தியை படிக்கவும்.

இலங்கை அரசின் ஏற்பாட்டின் கீழ் வெளிநாட்டு நிபுணர்களால் நடத்தப்பட்டுள்ள கருத்துக்கணிப்பொன்றின் முதற்கட்ட முடிவுகள் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 53 வீத வாக்குகளைப் பெறுவார் என்றும் பதவியிலிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ 45 வீதவாக்குகளையே பெறுவார் என்றும் தெரிவித்துள்ளன. கொழும்பிலிருந்து வெளிவரும் "இருதின" சிங்கள வார ஏடு இந்தத் தகவலைத் வெளியிட்டிருக்கிறது.

-----

வாரந்தோறும் இவ்விதமாக மேற்கொள்ளப்படவுள்ள கருத்துக் கணிப்புகளின் அறிக்கைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. இவ்விதம் மேற்கொள்ளப்பட்ட முதலாம் கட்ட கருத்துக் கணிப்பீட்டுக்கு அமைய, ஜெனரல் சரத்பொன் சேகாவுக்கு 53 சதவீதமான வாக்குகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு 45 சதவீதமான வாக்குகளும் கிட்டியுள்ளதாக "இருதின" பத்திரிகை தகவல் கூறுகின்றது.

வடக்கு கிழக்கு உள்ளடங்கும் 25 ஆயிரம் பேர் மத்தியில் நடத்தப்பட்ட இக் கருத்துக் கணிப்பில் பங்கு பற்றிய வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களில் 75 சதவீத மானோரும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் பெருமளவிலானோர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் மேற்படிப் பத்திரிகைத் தகவல் தெரிவிக்கின்றது.

இதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜ பக்ஷவுக்குப் பெரிதும் சாதகமாக அமைந்திருந்த தெற்கின், அம்பாந் தோட்டை, மாத்தறை, காலி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான ஆதரவு சரிக்குச் சரியென்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதாகவும் மேற்படி கணிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றினுள்ளும் காலி மாவட்டத்தில் ஏறத்தாழ 5 வீதமளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட ஜெனரல் சரத் பொன்சேகா முன்னணி வகிப்பாதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இவற்றுக்கு அமைய, ஜனாதிபதித் தேர்தல் களத்தில் ஜெனரல் சரத் பொன் சேகாவே வெற்றி வாய்ப்பில் முன்னணியில் உள்ளார் எனவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. http://www.eelanatham.net/news/important

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மங்களசமரவீர கூட்டத்துக்கு வாற சனத்த பாக்க செய்தி உண்மைபோல தெரியிது.

அரசியல்வாதிகளெல்லாம் வடிவேல் சொல்வது போல் திடீரென்று “பாசக்காரப் பயலுகளாக” மாறத் தொடங்கிவிட்டார்கள்.

கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்கிறார்கள், பாஸ் இல்லாமல் போக்குவரத்துச் செய்யலாம் என்கிறார்கள், 180 நாள்கள் வேலை செய்தவர்களையெல்லாம் உத்தியோகத்தில் நிரந்தரமாக்குவோம் என்கிறார்கள்….. இப்படி நமது ஆளுந்தரப்பிலுள்ள அரசியல் வாதி களின் பாசமழை ஒருபுறம்!

மறுபக்கம், எதிரணியினர் குறிப்பாக ஜெனரல் சரத்பொன்சேகா தரப்பினர் பாச மழையில் மக்களை போதும், போதும் எனும் வகையில் தெப்பமாக்கித் தொலைக்கிறார்கள். நலன்புரி முகாம்களிலுள்ள மக்களுக்குச் சுதந்திரம் இல்லையாம், மாகாணசபை முறைமைக்கு அப்பால் சென்று சிறுபான்மையி னருக்கு தீர்வு வழங்கத் தயாராம், மக்களுக்கு இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லையாம், அதை அவர் பெற்றுத்தருவாராம்!

இந்த திடீர் பாசமெல்லாம் மக்கள் மீதுதான். ஆனால், வேட்பாளர்களோ ஒருவர் மீது ஒருவர் இனியில்லையென்ற கடுப்பில் இருக்கின்றார்கள்.

கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் “நஷனல் போஸ்ற்” என்கிற ஊடகமொன்றுக்கு கடந்த வருடம் பொன்சேகா நேர்காணலொன்றை வழங்கியிருந்தார். அதன்போது, இலங்கை நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது எனத் தாம் பலமாக நம்புகிறார் என்கிற அர்த்தப்பட அவர் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஊடகமும் அதை வெளியிட்டிருந்தது. பக்கம் சாராமல் சொல்வதென்றால், இது மிக மோசமானதோர் இனவாதக் கருத்துத்தான் என்பதில் இரண்டுபட்ட கருத்தியல் இல்லை! ஆனால், தான் அப்படிக் கூறவில்லை என்றும் தனது கருத்து பிழையாக விளங்கப்பட்டுவிட்டது என்றும் இப்போது சரத்பொன்சேகா கூறுகிறார். பொன்சேகா கூறுகின்றமை உண்மையாக இருந்தாலும் கூட, இந்த மறுப்பை அவர் பேட்டி வெளியான போதே கூறியிருக்க வேண்டும். இப்போது கூறுகின்றதில் இலாபமில்லை!

ஜெனரல் சரத்பொன்சேகா அந்தக் கருத்தைக் கூறியபோது, அவர் இலங்கை நாட்டு இராணுவத்தின் தளபதி எனும் பதவியை வகித்துக் கொண்டுதான் இருந்தார். அதாவது மஹிந்த ராஜபக்ஷவின் முழுமையானதொரு கட்டுப்பாட்டின் கீழ்தான் ஜெனரல் சரத்பொன்சேகா அப்போது கடமையாற்றினார். அப்படியானதொரு நிலையில், தனது இராணுவத் தளபதி இனவாதக் கருத்தொன்றைக் கூறும்போது, மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அவரின் அரசிலுள்ள முக்கியஸ்தர்களோ ஏன் அதை எதிர்க்கவேயில்லை? சிறுபான்மையினர் மத்தியில் அந்தக் கருத்து ஏற்படுத்திய மன உளைச்சலுக்காக ஏன் மன்னிப்புக் கோரவில்லை?

இந்தியா

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தூர வீச்சு எல்லையில் பல பிரதான தளங்களை தென்பகுதியில் நிறுவியிருக்கின்றது இந்தியா. ஆனால் தற்போது தனது பிடரிக்குள் ஆபத்து சூழ்வதைத் தடுப்பது அவர்களது முக்கிய பிரச்சனையாக மாறியிருக்கின்றது. அதற்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராகி செயற்பட்டுவருகின்றது. ஏனெனில், இலங்கை ஐனாதிபதித் தேர்தலில் இருமுனைப்போட்டிக்கான வாய்ப்புகள் பிரகாசமடையத் தொடங்கியுள்ளன. இதில் எதிரணி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் சரத்பொன்சேகா சீனா, பாகிஸ்தான் அபிமானி என அண்மையகால சம்பவங்களிலிருந்து இந்தியா ஊகிக்கின்றது. எனவே சரத்பொன்சேகா பதவிக்கு வருவதை இந்தியா முற்றுமுழுதாக விரும்பவில்லை. எப்படியாவது ராஐபக்சவை வெற்றி பெற வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவே முயல்கின்றது.

மேற்குலகம்

மேற்குலகு செல்வாக்குச் செலுத்தக்கூடிய, இந்தியா அற்ற, வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதனூடாக குறைந்த பட்சம் யுத்த களத்து மனித உரிமைகள் மீறல்களையாவது வெளிக்கொணர்ந்து, அதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதன் மூலம் ஈழத் தமிழர்கள் தமக்கான எதிர்கால பாதுகாப்பை உருவாக்கிக் கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக் கணிப்பை நம்பினால் தேர்தல் எதற்காக? கருத்துக் கணிப்பின் முடிவுகள் தலைகீழாக மாறும்வண்ணம்தான் சரத் பொன்சேகாவின் அரசியல் முதிர்ச்சியற்ற செயற்பாடுகள் உள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக் கணிப்பை நம்பினால் தேர்தல் எதற்காக? கருத்துக் கணிப்பின் முடிவுகள் தலைகீழாக மாறும்வண்ணம்தான் சரத் பொன்சேகாவின் அரசியல் முதிர்ச்சியற்ற செயற்பாடுகள் உள்ளன.

முருங்கைமரத்தில ஏத்தினாத்தானே கைகால் முறியும், மருந்துக்கு கட்டுப்போட வருவினம்.

டொக்டர்மார் அறிவரையள் இப்பியானதா தான் வருகிது இப்ப. :)

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடையாக்களும் அள்ளிப் போடுகினம் என்று கீழுள்ள தளத்தைப் பார்த்தால் தெளிவாத் தெரியுது. :)

http://sri-lanka-presidential-election-2010.blogspot.com/

சரத் பொன்சேகாவோ , ஜே.வி.பி. யோ , மகிந்தவோ தமிழனுக்கு விடிவு தரப்போவதில்லை.

இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் படி மகிந்த வென்றால்...... எம்மீது நடைபெற்ற மோசமான நிகழ்வுகள் எதுகுமே வெளியே வராமல் அமுங்கிப் போய்விடும்.

சரத் வென்றால் ...... மகிந்த, கோத்தபாயா போன்றவர்களுடன் நடக்கும் போட்டியில் பல உண்மைகள் வெளிவரும்.

அதனை தடுப்பது போல் தான் ...... சிவாஜிலிங்கம் போட்டியிடுவதை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால் உண்மை அது அல்ல... இண்டைக்கு மகிந்தவின் மீது வெறுப்பு கொண்டவர்களால் தமிழர் மீது நடத்தப்பட்ட கொடூரங்களை சொல்ல முடியும் அதை கேட்க்கும் வண்ணம் மேற்குலக சமூகம் இருக்கிறது... ஆனால் சரத் வெண்று விட்டால் நிலமை தலைகீழாக மாறிவிடும்...

தங்களுக்கு சார்பான அரசு எண்ற ஒண்று இலங்கையில் ஏற்படுமாக இருந்தால் மேற்குலக நாடுகள் தமிழர்களை முழுமையாக கைகழுவி விட்டு அந்த அரசுக்கு தேவையானவைகளை செய்யும்... இதுதான் நிதர்சனமும் கூட...

சரத் கூட தன்னை நல்லவனாக காட்டுவதோடு மகிந்தவை தண்டிப்பதின் மூலம் செய்ய எல்லாவகை சந்தர்பமும் உண்டு... அதை மறுப்பதுக்கும் இல்லை... வெறும் மகிந்தவின் கூட்டத்தை தண்டிப்பதோடு சிங்கள இனவெறி முடிந்து போய் விட்டதாக ஒரு மாயை தோற்றுவிக்க படுவது மட்டும் தமிழர்களின் பிரச்சினையை இன்னும் அதிகரிக்க செய்யுமே அண்றி எந்த வகையிலும் குறைக்க உதவாது...

இணைத்தலைமை நாடுகளின் எதிரியான மகிந்த இலங்கையில் முக்கிய பதவியில் இருக்கும் வரைக்கும் மட்டும் தான் தமிழர்களின் பிரச்சினை சர்வதேச மயப்படுத்த பட்ட நிலையில் இருக்கும்... சரத் பதவிக்கு வந்தால் இலங்கை இணைத்தலைமை நாடுகளின் நட்பு நாடு...

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் வேட்பு மனுத் தாக்கல் செய்ததற்கு ததேகூட்டமைப்பு தேர்தல் தொடர்பான முடிவு எடுக்க தடுமாறிமையே முக்கிய காரணம்.முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நேரத்தில் முக்கியத்துவமற்ற வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டது அதுவும் சிவாஜிலிங்கம் தனது நிலைப்பாட்டை அறிவித்தபிறகும் அசட்டைத்தனமாக இருந்தது மிகப் பெரிய தவறாகும். சரியோ தவறோ ஒரு நிலையான முடிவு எடுக்க வேண்டும்.2 வேட்பாளர்களில் எவர் வென்றாலும் எமக்கு விடிவு ஏற்படப் போவதில்லை.இந்தியாவின் மூக்கை உடைப்பதற்கு சரத்தை தெரிவு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மகிந்தவை வேண்டுமானால் தோற்கடிக்கலாம்.ஆனால் சரத் மகிந்தவை தனது நாட்டுக்குள் வைத்து வேறு உப்புச்சப்பில்லாத வழக்குகளைப் போட்டு அவருடைய ஆதரவாளர்களை பதவி இறக்கி அரசியலில் இருந்து அவரை ஓரம்கட்ட சில வேலைகளைச் செய்வாரே ஒழிய அனைத்துலக போர்க் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்க மாட்டார்.இது சிங்களவர்கள் தேர்தலுக்காக மட்டும் மோதிக் கொள்வார்கள். மற்றும்படி காட்டிக் கொடுக்கும் கழுத்தறுப்பு வேலைகளைச்செய்வார்கள் என்று தமிழர்கள் தங்களைப் போன்று தவறாக எண்ணக்கூடாது.சிறிலங்காவுக்கு எதிராக யார் வந்தாலும் ஒற்றுமையாக எதிர்ப்பார்கள்.சரத் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த முதலே அமெரிக்காவில் சரத்தை விசாரிக்கக்கூடாது என்று சிறிலங்கா அரசு மட்டுமல்ல ரணிலும் எதிர்த்தார்.எங்களுக்கு யார் வந்தாலும் ஒன்றுதான் என்ற நிலையில் பொதுத்தமிழ் வேட்பாளருக்கு முதலாவது தெரிவையும் 2வது தெரிவை வேண்டுமானால் மகிந்தவைப் பழிவாங்குவதற்குப் பாவிக்கலாம்.சிலவேளை இது சாதகமாவும் அமையலாம்.எப்படியெனில் தேர்தல் விதிகளின்படி50 வீதத்திற்கு குறைவான வாக்குகளைப் பெறுமிடத்து 2வது சுற்று எண்ணப்படும்போது இது வெற்றியளிக்கலாம். இது ஒருகல்லில் 2மாங்காய்களை சில வேளைகளில் விழுத்தும்.விழுத்தாவிட்டாலும் நமக்குப் பெரிய நட்டமில்லை.மீண்டும் ஒரு முறை உலகத்திற்கு தமிழர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக உணர்த்த இந்தத் தேர்தலைப் பயன்படுத்தலாம்.ஆனால் சிவாஜிலிங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் தேசியம் தாயகம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றைத் தெளிவாகப் பிரகடனப்படுத்த வேண்டும். அதை விடுத்து எந்தச் சிங்களத்தiலமையும் ஏற்றுக்கொள்ளாத நிபந்தனைகளைக் கூறுவதும் அவருக்கு பக்க பலமாக சிறிகாந்தா நிற்பதும் இது மகிந்தவை மீண்டும் அரியணை ஏற்றுவதற்காக பக்கத்து நாடு ஒன்றினால் சிவாஜிலிங்கம் பயன்படுத்தப் படுகிறார் என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் உருவாக்குவது தவிர்க முடியாதாகிறது.எது எப்படியோ சிவாஜிலிங்கத்தை ததேகூட்டமைப்பு ஒற்றுமையாக ஆதரிப்பதன் மூலம் யாரோ விதைத்த பயிரின் விளைச்சலில் கொஞ்சமாவது நாமும்; அறுவடை செய்யலாம்.உண்iமயில் தேர்தலை நாம் புறக்கணிக்க வேண்டும்.ஆனால் சிறிலங்கா போன்ற நேர்மையற்ற நாட்டில் தேர்தலைப் புறக்கணிப்பது கள்ள வாக்குகள் போடுவதற்கு வழிவகுக்கும். இது நாம் தேர்தலில் பங்குபற்றாமலேயே சிறிலங்காத் தேர்தலில் உள சுத்தியுடன் பங்கு பற்றினோம் என்ற பிரச்சாரத்திற்கு வழி வகுக்கும்.

Edited by புலவர்

அட நீங்கள் என்னும் உண்மை வெளில வரும் வந்து ஒரு நல்ல முடிவைத்தரும் என்றா எதிர்பார்கிறீர்கள்?

உண்மை வேறு வேறு காலப்பகுதியில் வெளிப்படலாம் ஆனால் நீதி கிட்டும் என்று எதிபார்க்க ஏலாது.

எமக்கு நீதி செய்வதால் யாருக்கு என்ன லாபம்? மிகிந்தவுக்கா? அல்லது சரத்துக்கா? ஓ ஒருவேளை ரணிலுக்கா?

இந்த தேர்தலால் பெருசா ஒன்றும் மாறப்போவதில்லை... சும்மா சிவாஜிலிங்கத்தை கடிஞ்சு கொட்டத்தான் முடியும். அவர் ஒருத்தர் தானே இளகின இரும்பு வெளுத்துக்கட்டுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் என்னும் உண்மை வெளில வரும் வந்து ஒரு நல்ல முடிவைத்தரும் என்றா எதிர்பார்கிறீர்கள்?

உண்மை வேறு வேறு காலப்பகுதியில் வெளிப்படலாம் ஆனால் நீதி கிட்டும் என்று எதிபார்க்க ஏலாது.

எமக்கு நீதி செய்வதால் யாருக்கு என்ன லாபம்? மிகிந்தவுக்கா? அல்லது சரத்துக்கா? ஓ ஒருவேளை ரணிலுக்கா?

இந்த தேர்தலால் பெருசா ஒன்றும் மாறப்போவதில்லை... சும்மா சிவாஜிலிங்கத்தை கடிஞ்சு கொட்டத்தான் முடியும். அவர் ஒருத்தர் தானே இளகின இரும்பு வெளுத்துக்கட்டுங்கோ.

:):blink:

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கத்தின்ட பேட்டிய பாக்கேலையோ gtv ல தெளிவா கூறி இருக்கிறாரே....

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உதயன், சுடரொளி பத்திரிகைகள் யுஎன்பி நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றன ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு - தொகுப்பு : ரி சோதிலிங்கம்

யாழ் உதயன் சுடரொளிப் பத்திரிகைகள் யுஎன்பி நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டி உள்ளார். லண்டன் மற்றும் தமிழகத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற் ஏற்பாடு செய்த கேள்விநேரம் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். டிசம்பர் 21ல் கிழக்கு லண்டன் குவேக்கர்ஸ் ஹவுஸில் இக்கேள்விநேரம் இடம்பெற்றது. நிகழ்வுக்கு சில மணி நேரங்களுக்கு முன் இடம்பெற்ற கடுமையான பனி மழையினால் லண்டன் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்த நிலையில் மூன்று மணிநேரம் தாமதமாக நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் இறுதியில் கருத்து வெளியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கோ அல்லது சரத் பொன்சேகாவுக்கொ வாக்களிப்பார்களானால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நாடுகடந்த தமிழீழத்திற்கான வாக்கெடுப்புகளிற்கு எவ்வித அர்த்தமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழனும் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கத்தின் பக்கம் தள்ளிவிடாமல் அவர்களுக்கு தம்மாலான உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

லண்டன் விஜயத்தின் போது பிரிஎப் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியதாகவும் அவர்களின் ஆதரவு கோரப்பட்டு உள்ளதாகவும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். பிரிஎப் இதுவரை உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் பிரிஎப் இல் உள்ள சிலர் தனிப்பட்ட முறையில் சிவாஜிலிங்கத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கி உள்ளதுடன் பிரிஎப் சிவாஜிலிங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். மகேந்திரன், குகன், ராசா ஆகியோர் தனிப்பட்ட முறையில் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதை வரவேற்றுள்ளனர். சிவாஜிலிங்கம் சுயேட்சையாக நிற்பது என்று எடுத்த முடிவை ஒரு பேப்பர் பத்திரிகையின் பாலா வரவேற்றுக் கருத்து வெளியிட்டார்.

ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற கேள்விநேரத்தின் தொகுப்பு கீழே:

ரி சோதிலிங்கம்: நீங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போராட்ட காலங்களில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை ஆதரித்து பல போராட்ட வடிவங்களில் புலிகளின் ஆதரவு அமைப்புக்களுடன் இணைந்து செயற்ப்பட்டவர். இன்று நீங்கள் தமிழ் தேசியத்தின் சமஸ்டிக்காகான குரலாக இந்த தேர்தலில் நிற்கிறீர்கள். புலிகளின் இவ் ஆதரவு அமைப்புக்கள் இன்று உங்களை ஆதரித்து உங்களுடன் நிற்கிறார்களா? அல்லது ஆதரவு தருவார்களா? அவர்களது நிலைப்பாடுகள் என்ன?

புலிகளின் ஆதரவாளர்களும், முன்னாள் புலிகளின் தலைவர்களும் இங்கே இருந்து கொண்டு மேற்குலகின் ஆதரவுடன் சரத்தை அதரிக்கிறார்கள் மகிந்தாவை வீழ்த்தலாம் என்று செயற்படுவதாகவும் கருத்துள்ளதுஇ மேலும் யாழ்ப்பாணத்தில் உதயன் கொழும்பில் சுடரொளி யுஎன்பியை அதரிப்பதாக அறியப்படுகிறதே. இது பற்றியும் உங்கள் கருத்து என்ன?

எம் கெ சிவாஜிலிங்கம்: புலிகளின் ஆதரவாளர்கள் என்ற ரீதியில் அவர்களிடம் நான் ஆதரவு கேட்கவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும்இ நாட்டில் யாருடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பதுவும் பின்பு உலகுக்கு தெரியவரும். நான் இந்த மூன்று நாளும் என்னால் முடிந்த அளவு புலம்பெயர் நாட்டில் பேட்டிகள்இ பேச்சுக்கள் செய்கிறேன். பின்பும் இலங்கை போன பின்பும் தொலைபேசியூடாக செய்வேன்.

உதயன் சுடரொளி பத்திரிகைகள் கட்சிப் பத்திரிகைகளை மீறிய அளவில் கடுமையாக விமர்சனங்களையம் வார்த்தைப் பிரயோகங்களையும் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கே தெரியும். யுஎன்பியின் நிகழ்ச்சி நிரலில் இருப்பவர்கள் என்று. ஒருவேளை அடுத்தமுறை வித்தியானந்தனின் மைத்துணர் சரவணபவன் கொழும்பு மாவட்ட யுஎன்பி யில் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு அமைச்சராக வர ஆசை. அதில் தவறு இல்லை. ஆனால் நாம் உயிருடன் இருக்கும் வரை உங்களுக்கு இடைஞ்சலாக இருப்போம் என்பதை இவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். யுஎன்பியுடன் சேர்ந்து விட்டால் சரி என்று நினைக்கிறார்கள். ரனில் அடுத்த Eexecutive President தான் என்ற கனவில் மிதக்கிறார்.

நாங்கள் அரச தரப்பில் இருக்க முடியாது, எதிர்த்தரப்பில்தான் இருக்க முடியும். எதாவது ஒரு அரசியல் தீர்வு எழும்பும் என்றால் தமிழ் மக்களுக்கு நன்மையான விடயம் என்றால் அது பற்றி பரிசீலிக்க நாம் தயார். வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரவில் இருப்பவர்கள் இலங்கையில் உள்ள விடயங்களில் பல தாழ்ந்துபோன விடயங்களில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக நாம் தமிழ் மக்களுக்கான உதவிகளை பெறுவதில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

பாண்டியன்: எமது மக்களை அழித்த யுத்த குற்றவாளிகளுக்கு வாக்களித்தால் செய்த குற்றத்தை ஆதரித்தாகிவிடும் என்று சொல்லுகிறீர்கள். சரி மக்கள் வாக்களித்துவிட்டால் அது யுத்த குற்றவாளிகளை எமது தலைவர்களாக ஏற்றுக்கொண்டதாகி விடுமா?

எம் கெ சிவாஜிலிங்கம்: நான் சொல்வது இந்த இரண்டு வேட்பாளர்களும் இலங்கையில் எல்லா மாகாணங்களிலும் வாக்குகள் பெறுவார்கள். கிழக்கில் சிங்கள முஸ்லீம் மக்கள் ஆதரிப்பார்கள். ஆனால் வட மாகாணத்தில் மிகப்பெரும்பான்மை தமிழர்கள். இங்கே அவர்கள் வாக்களித்தால் அவர்கள் இந்த குற்றவாளிகளை மன்னித்து விட்டதாகவே கருதப்படும். அடுத்தநாள் பத்திரிகைகளில் இப்படித்தான் எழுதப்படும்.

ஆனால் நான் போட்டியிடுவதால் வடமாகாணத்தில் இவர்களில் ஒருவர் பெரும்பான்மை வாக்குகளை பெறுவது தவிர்க்கப்படும். இதற்கு நாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். நான் ஜனாதிபதியாக வர இந்த தேர்தலில் நிற்கவில்லையே! இந்த யுத்த குற்றவாளிகளின் மத்தியில் எமது தமிழர்களின் நிலைப்பாடு என்ன? யாரை ஆதரிப்பது என்பது தான் இங்கே உள்ள நிலைமை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை நிறுத்தி பிரச்சாரங்களை செய்திருந்தால் நிலைமைகள் வித்தியாசமாக இருந்திருக்கும். எனக்கு முழு ஆதரவு உண்டு என்று நான் சொல்லவில்லை. தனித்த ஆதரவும் அந்த தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன என்ற எண்ணத்தை கொண்டவர்களின் ஆதரவும் உண்டு. இரண்டு பேருக்கும் கிடைக்கும் வாக்குகளினை குறைப்பதே நோக்கம்.

நான் இதை விக்கிரமபாகு கருனாரத்னாவின் தேர்தல் மேடையில் பேசியுள்ளேன். வடக்கு -கிழக்கிலும் மலையகத்திலும் மேலும் பேச உள்ளேன். இலங்கை வரலாற்றிலேயே இரண்டு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் ஒன்று சேர்ந்து மேடைகளில் பிரச்சாரம் செய்வது இதுதான் முதல் தடவையாக நடைபெறுகிறது. இரண்டு பேரும் ஒரே கருத்து கொண்டவர்கள். இந்த இரண்டு வேட்பாளருக்கும் வாக்களிக்காதீர்கள் வேறு யாருக்கும் வாக்களியுங்கள் என்பதே எமது செய்தி. நான் சொன்னேன் உங்களுக்கு விருப்பம் என்றால் அந்த புத்தபிக்கு வேட்பாளர்க்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். இந்த இரண்டு பேருக்கும் வாக்களிக்காதீர்கள் என்று கேட்டேன்.

தயா: ஏன் நீங்கள் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடக்கூடாது? கடந்த தேர்தலில் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடவில்லை. திரும்பவும் மக்களை சுதந்திரமாக வாக்களிக்கவிடாமல் வாக்குகளை திசை திருப்பவே இப்படி நடக்கிறதாக எதிர்பாக்கப்படுகிறதே?

எம் கெ சிவாஜிலிங்கம்: எங்களுடைய பேச்சை மிககுறைந்த சதவிகிதத்தினரே கேட்பார்கள். பெரும்பான்மையானோர் தங்கள் இஸ்டப்படியேதான் வாக்களிப்பர். இடம்பெயர்ந்த மக்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். மக்கள் மனம் நொந்து போயுள்ளனர். அவர்கள் சுதந்திரமாகவே முடிவு எடுப்பவர்கள். அவர்கள் அங்கே போய் என்ன எழுதுவார்கள் என நாங்கள் போய் பார்த்தா சொல்வது. எப்பவும் போலவே அவர்கள் சுதந்திரமாகத்தான் வாக்களிப்பார்கள்.

இந்த தேர்தல் இம் முறையும் ஒரு சிக்கலை உருவாக்குகிறது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவரின் வாக்காளர் பட்டியலை தேடவே 15 நிமிடம் எடுக்கிறது என்றால் சாதாரணமானவர்களை அதுவும் கிராமசேவகர் பிரிவுகளை பலவாறு பிரித்தும் இணைத்தும் உள்ள நிலைமையில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. அந்த மக்கள் தமது பெயரைத் தேடிப்பிடிக்க எவ்வளவு நேரம் எடுக்கும்.

முகாம்களில் உள்ள மக்களின் தேர்தல் இடாப்பு கச்சேரியில் உள்ளது. ஏன் இந்த நிர்வாகத்தை முகாமுக்கு கொண்டுவர முடியாது?. முகாமில் உள்ள மக்கள் நல்ல உடுப்புக்கள் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த ஊத்தை உடுப்புடன் எப்படி கச்சேரிக்கு போவதென எனக்கு நேரடியாகவே சொல்லியும் உள்ளனர். இப்படியானவர்கள் எது எப்படியும் நடந்து விட்டுப் போகட்டும் என்றே இருந்து விடுவர். இவர்களில் பலர் தமக்கு ஏன் பதிவு என்றாகிவிடும் நிலையில் உள்ளனர்.

தயா: மக்களை கட்டாயப்படுத்தாமல் சுயமாக வாக்களிக்கவிட வேண்டும் என்றே கருதுகிறோம். மக்களை வாக்குபோடு என்று கூட சொல்லாமல் மக்களை சுதந்திரமாக விட வேண்டும் அதாவது மக்களை தமிழ் தேசியம் என்ற சிக்கலுக்குள் கொண்டுவராமல் விரும்பியபடி வாக்களிக்க விடவேண்டும். அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

எம் கெ சிவாஜிலிங்கம்: யார் மக்களை கட்டாயப்படுத்தியது. நாங்கள் முதலாம் இடம் மகிந்தா அல்லது சரத்தான் வரப்போகிறார்கள் என்று சொல்லுகிறோமே வேறென்ன வேணும். நாங்கள் யாரைக் கட்டாயப்படுத்தினோம். கட்டாயப்படுத்துதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் தாங்களாகவே வாக்களிக்காது விட்டாலேயொழிய வேறு எதுவும் நடக்காது. கடந்த சில நாட்களாக புதிய ஜனநாயக கட்சி வாக்குகளை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என்று கோருகிறது. சிலர் இதை செய்யக் கூடும். ஆனால் பெரும்பான்மை மக்கள் வாக்களிப்பார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள் என்று தான் நாங்கள் கூறுகின்றோம்.

தயா: உங்கள் கூட்டமைப்பில் உள்ள ஒருவர் நீங்கள் மகிந்தாவிடம் காசை வேண்டிக்கொண்டே இந்த தேர்தலில் நிற்பதாக கூறியுள்ளார் அது பற்றி உங்கள் கருத்து என்ன?

எம் கெ சிவாஜிலிங்கம்: இந்த செய்தி வீரகேசரி ‘e’ பேப்பரில் வந்திருந்தது. பின்னர் இச் செய்தி எடுக்கப்பட்டு விட்டது. செய்தியை வீரகேசரி பத்திரிகையில் வெளியிடவில்லை. ஆனால் தமிழ்வின் இதை பிரசுரித்திருந்தது. அதேபோல 12ம் திகதி வலம்புரியிலும் முன்பக்கத்தில் தலைப்பு செய்தியாக பிரசுரிக்கப்பட்டடிருந்தது. தலையங்கம் “அரசாங்கத்திற்கு எதிராக விழும் வாக்குகளை தடுப்பதற்காக சிவாஜிலிங்கம் தேர்தலில் நிற்கிறார் சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு.”

யாழ்ப்பாணத்திலிருந்து அன்று இரவே நான் இந்த குற்றச்சாட்டிற்கான பதிலை கூறிவிட்டேன்.

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறியாதே. யார் உனக்குப் பின்னால் இருப்பவர்கள் என்று எனக்கு தெரியும். துணிவிருந்தால் அவர் முன்னால் வந்து என்மீது இந்த குற்றச்சாட்டை முன்வைக்கட்டும். நான் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக வழக்கு போட உள்ளதையும் குறிப்பிட்டிருந்தேன். இதைவிட 50 ஆயிரம் தமிழர்களை கொன்ற அரசாங்கத்திடம் காசுவாங்கிக் கொண்டு அரசுக்கு வாக்களி என்று நான் கேட்க முடியமா? என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

நான் எனது அறிக்கைகளை எப்பவும் துணிந்து விட்டுள்ளேன் மாசி மாதம் 10ம்திகதி தேசம் இணையத்தளத்திற்கு பேட்டி கொடுத்திருந்தேன் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக புலிகள் மூன்றாம் தரப்பிடம் ஆயுதங்களை கையளிக்க வேண்டும் என்ற கோரியவன் நான். அதற்காக புலிகள் வன்னியிலிருந்து ஒன்றரை மணித்தியாலங்கள் என்னிடம் பேசினார்கள். அன்றும் நான் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் நின்றேன். நான் கைது செய்ப்பட்டடேன். அன்று புலிகள் அப்படி ஆயுதங்களை கையளித்திருந்தால் இன்று நிலைமைகள் வேறுவிதமாக அமைந்திருக்கும் அல்லவா.

அந்தக் காலத்தில் வாய் மூடிக்கொண்டு எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமலே இருந்த பல தமிழர்கள்; இன்று எனக்கு எதிராக பேசுகிறார்கள். சிவாஜிலிங்கம் என்ன செய்தார் என்று இந்த உலகுக்குத் தெரியும். சரியோ பிழையோ எனது மனச்சாட்ச்சிக்கு தெரிந்தபடி தமிழ்நாடோ டெல்லியோ போய் பின்னர் பிரித்தானியாவுக்குத் துரத்தியடிக்கப்பட்டு இப்படி நாடுநாடாய் ஓடித்திரிந்தவன் நான். இதற்கு பிறகும் என்னை மகிந்தாவிடம் காசு வாங்கியுள்ளேன் என்றால் என்ன சொல்வது.

போல் சத்தியநேசன்: 22பேர் தேர்தலில் நிற்கவுள்ளனர் இதில் எல்லோருக்கும் பத்து இருபது வாக்குகள் என்றாலும் கிடைக்கும் நீங்கள் நிற்பதால் என்ன வித்தியாசத்தை கொண்டுவர முடியும்?

எம் கெ சிவாஜிலிங்கம்: நான் தேர்தல் மனு தாக்கல்செய்த பின்பு எதிர்க்கட்சி தரப்பில் பெரிய கலக்கம் ஏற்ப்பட்டுள்ளது இது வெற்றியே.

அதைவிட டக்ளஸ் தேவானந்தா சொல்லியுள்ளார் ‘சிறீகாந்தாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்தான் இந்த சிவாஜிலிங்கத்தின் தேர்தல் சந்திப்பு’ என்று. இதில் சிரிப்பு என்ன என்றால் நான் மகிந்தாவுக்காக நிற்கிறேன் என்றால் மகிந்தா வெற்றி பெற்றால் நன்மை அடையப்போவது டக்ளஸ்ம் ஈபிடிபியும் தான். நான் தேர்தலில் நிற்பதை டக்ளஸாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் இறங்கி வேலை செய்யப் போகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் என்ன சொல்வது.

இதைவிட வல்வெட்டித்துறையில் 10 வருடமாக இருந்த எனது அலுவலகத்தை அமைச்சர் டக்ளஸ் பலவந்தமாக கைப்பற்றியுள்ளார். நான் அங்கு போக முடியாதுள்ளது. யாழ்ப்பாணத்திலேயே இருந்து எனது வேலைகளை கவனிக்க வேண்டியுள்ளது. இப்படி நிலைமைகள் இருக்க நான் இந்த உடுப்புடன் திரிவதில் அர்த்தமில்லை என்ற நிலைமையில் நான் போய் அரசாங்கத்திடம் காசு வாங்கித்தான் தேர்தலில் நிற்கிறேன் என்றால் என்ன சொல்வது இதை.

நான் என்ன அழுத்தத்தை கொடுக்க முடியும் என்று கேட்கிறீர்களே? நான் ஒரு லட்சம் வாக்குகளை என்றாலும் பெற்றேன் என்றால் இது அந்த இரண்டுபேருக்கும் ஒரு பயத்தை உருவாக்குமல்லவா. இது பேரம் பேசும் நிலைமையை உருவாக்கியுள்ளது. சரி சம்பந்தர் ஜயா பேரம் பேசுகிறார் என்றால் சிவாஜிலிங்கம் நின்றிருந்தால் எப்படி பேரம் பேசலாம். நிற்காமல் இருந்தால் எப்படி பேரம் பேசலாம். இது பேரம் பேசும் சக்தியை கூட்டும்.

நாங்கள் எங்கள் பிரச்சிகைகளை சொல்கிறோம். எமக்கு பிரதேச சுயாட்சி மாநிலங்கள் எமது அரசியல் தீர்வு இது பற்றி எமது கருத்துக்களை சொல்லுகிறோம். இவை எல்லாம் விவாதங்களுக்குள் எடுபடும். சும்மா 13வது திருத்தம் என்று நில்லாமல் நாம் இவ்வளவு காலமும் 1.5 லட்சம் மக்களை பலி கொடுத்துள்ளோம், 40 ஆயிரம் போராளிகள், 23 ஆயிரம் படை வீரர்கள் இவ்வளவும் இழந்தபிறகும் 13வது திருத்தம் என்றால் ஏன் நாங்கள் இந்தளவு சண்டைகள் நடந்து 2009 வரை வந்திருக்க வேண்டும். இதை 1980லேயே முடித்திருக்கலாம்தானே.

பேசாமல் இருப்பது அழுத்தம் அல்ல. பேசுவது தான் அழுத்தம். இதை நீங்கள் புரிந்து கொள்வில்லை என்றால் நான் என்ன சொல்வது.

எஸ் தவராஜா: இன்றுள்ள எமது பிரச்சினைகளுக்குள்ளே பதிலை தேடுகிறோம். எமக்கென்று 3 வழிகள் உண்டு. ஒன்று மகிந்தா மற்றது சரத் மூன்றாவது உலகநாடுகளை பாவித்து அழுத்தம் கொடுத்து அரசியல் தீர்வுகளை கொண்டு வருவது. வெளிநாடுகளில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடி போராட்டங்களை செய்து எந்தப் பலனும் கிடைக்கவில்லை, இந்த உலகத்தை திருப்ப முடியவில்லை.

இப்போதுள்ள வழி அரசுடன் சேர்ந்து எமது உரிமைகளை பெறுவது தான். மற்ற உண்மை என்ன என்றால் இந்த அரசு தமிழர்க்கு ஒன்றையும் செய்யாது என்பது. இவை யாவற்றையும் பார்க்கும்போது இலங்கை அரசுடன் ஒரு உடன்பாட்டை ஏற்ப்படுத்தும் தேவை உள்ளது. எனது கேள்வி என்னவென்றால் ஏன் ரிஎன்ஏ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசுடன் ஒரு உடன்பாட்டை உருவாக்கவில்லை?

எம் கெ சிவாஜிலிங்கம்: இந்த உடன்பாட்டுக்கு வருதல் முயற்சி பண்ணுகிறோம். செய்கிறோம் எண்டு சம்பந்தர் ஜயா சொல்கிறார். இவர்களுடன் கனவான் ஒப்பந்தம் என்று சொல்லுகிறார்கள். எனது அபிப்பிராயம் என்னவென்றால் இந்த அரசுடன் இந்த அரசியல்வாதிகளுடன் கனவான் ஒப்பந்தம் செய்ய முடியாது. யாராவது ஒரு வெளிநாட்டின் உயர் ஸ்தானிகர் அலவலகத்தில் நான்கு சுவருக்குள் செய்யும் ஒப்பந்தங்களால் எந்த பிரயோசனமும் வராது. காரணம் சர்வதேச ஒப்பந்தம் இந்திய - இலங்கை ஒப்பந்தம் இதையே நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது. வட-கிழக்கு இணைவை ஒரு உயர்நீதிமன்ற தீர்ப்பினால் உடைத்துவிட்ட இந்த அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள். இந்த வட - கிழக்கு துண்டிப்பும் இந்தியாவும் சேர்ந்து தான் செய்துள்ளது எனது கருத்து. இரு மாகாணங்களும் இணைந்தால் இவர்கள் தனிநாடு என்கிறார்கள். உடைத்து விட்டுப் பார்ப்போம் என்பது தான் இந்தியாவின் பரிசோதனை. சிலவேளை தேவை ஏற்பட்டால் திரும்பவும் இணைப்பார்கள்.

இன்றுள்ள சர்வதேச அரசியல் நிலைமைகளில் வெளிநாட்டு தூதுவர்கள் நித்திரையில்லாமல் இருக்கிறார்கள். இதுதான் எமக்கும் சந்தர்ப்பம். எங்கே எந்த தலைவர் சரி சொல்லட்டும் தமிழ் மக்களுக்கு சமஸ்டி ஆட்சி என்று வட – கிழக்கு தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ளட்டும். இதை சிங்கள மக்கள் மத்தியில் சொல்ல பயப்பிடுகிறார்கள். முன்பு சொன்னார்கள் நாட்டை துண்ணடாட பார்க்கிறார்கள் என்று. இப்ப அது எல்லாமே முடிந்து விட்டதே? ஏன் சமஸ்டி பற்றிபேசக் கூடாது? இப்ப ஒரு நாடுதானே இருக்கிறது ஏன் பிரச்சினைகளை தீர்க்கக் கூடாது?

இவர்கள் எங்களின் வாக்குகளால் வெல்ல மட்டும் வராமல் நீங்களே உங்களின் war heroகள் யார் என்று தீர்மானியுங்கள். நாங்கள் விலத்தி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் உங்களால் அடிபட்டு உதைபட்டு நொந்து இருக்கிறோம். நாங்கள் உங்களைப் பார்த்து நீதான் நீதிபதி, நீதான் குற்றவாளி என்று சொல்ல முடியாது. எங்களைப் பொறுத்த வரையில் நீங்கள் இரண்டு பேரும் சண்டியர்கள். நீங்களே அடிபட்டு முடியுங்கள். சிங்கள மக்கள் தீர்மானிக்கட்டும் யார் champion என்று நாங்கள் அல்ல. இதுதான் எங்களின் நிலைப்பாடு.

பாரி: மகிந்தாவை ஆட்சி மாற்றம் செய்யவே உலக நாடுகள் சரத்தை இங்கே களம் இறக்கியுள்ளனர். மகிந்தாவை போர்க்குற்றவாளியாக்க வல்லரசுகள் முயற்ச்சிக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

எம் கெ சிவாஜிலிங்கம்: இது சர்வதேசங்களின் விளையாட்டுக்கள் தான். அதில் நாங்களும் இழுபடுகிறோம். 50 ஆயிரம் மக்கள் சாகும்போது வராத இந்த சர்வதேசம் இன்று வருவது எண்டால் நாங்கள் ஏன் பின்னால போக வேணும் என்பதுதான் எனது கேள்வி.

புலிகளை விடுவோம் சண்டைபிடித்து சாவதே என்றவர்கள். ஆனால் மக்கள் சாகும் போது எந்த உதவிக்கும் வராத சர்வதேசம். எங்கே சர்வதேச மனிதாபிமானம். நாங்களே எங்கள் தலைவிதியை தீர்மானிக்க வேண்டும். இன்று அமெரிக்கா சொல்லும்இ இந்தியா சொல்லும்இ பிறகு புதிய ஜனாதிபதி வந்ததும் புதிய தலைவர்இ புதிய தொடர்பு என்று போய்விடுவார்கள். அடுத்த பிரச்சினை வரும்வரைக்கும் நாங்கள் இப்டியே இருக்க வேண்டியதுதானா?

ஒருவர் தோற்கடிக்க மற்றவர் எங்களை மீண்டும் பழிவாங்க விடமுடியுமா? நாம் நொந்துபோயுள்ளவர்கள் எம்மை ஒருபக்கத்தில் விடுங்க.

ரி சோதிலிங்கம்: தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்வைக்கும்படி மகிந்தா ராஜபக்சவையும் சரத் பொன்சேகாவையும் நீங்கள் நேரடியாக கேட்டுள்ளீர்களா?

எம் கெ சிவாஜிலிங்கம்: பல தடவைகள் நாட்டில் கேட்டுள்ளேன். சர்வகட்சி மாநாடு என்று 126 தடவைகள் கூட்டங்கள் நடாத்திவிட்டு எதுவுமே இல்லாமல் போனது. தேர்தலின் பின்பு பார்ப்போம் என்று சொல்வதை நம்பமுடியாது. ஜனவரி 26ம் திகதி மாலையின் பின்னர் இந்த அரசியல்தீர்வு என்ற கதை முடிந்துவிடும். முன்பு சொன்னார்கள் புலி அழிப்பில் அரசியல்தீர்வு என்று. புலி முடிந்தது எங்கே அரசியல்த்தீர்வு? அதேபோல் 26ம் திகதிக்கு பின்பும் இதே கதைதான் இருந்து பாருங்கள்.

புலிகளை அழிக்க அரசியல்தீர்வே வழி என்று பல தடவைகள் நாம் கேட்டுள்ளோம். அரசியல்தீர்வு என்பது இவர்கள் சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் விடும் ரீல் தான்இ வேறு எதுவுமல்ல.

அண்மையில் டில்லி போய் இதைத்தான் இவர்கள் இந்தியாவிற்கு சொல்லி விட்டு வந்துள்ளனர். இந்த விடயங்களில் இரண்டு பேருமே இதைதான் செய்கிறார்கள் சரத் டில்லி போய் ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்கிறார், 13வது திருத்தச்சட்ட மூலம் என்கிறார்இ இவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை எங்கே கிடைக்கப்போகிறது? இன்றுள்ள சூழ்நிலையில் என்ன கிடைக்கும் இந்த ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க இவை யாவும் பேய்க்காட்டல்களே.

அப்படி இல்லை என்றால் 1970களில் சிறிமாவோ செய்தது போன்று புதிய அரசியலமைப்பை கொண்டுவரத் தயாரா? இதற்காக தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லிவிட்டு செய்யுங்கோ நாங்களும் ஆதரவு தருகிறோம். ஒரு கொன்ஸ்ரிற் ரியூசன் அசம்பிளியை உருவாக்கி சாதாரண பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேற்றி விட்டு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள். பழைய குப்பைகளை கீழே போடுங்கள். புதிய யாப்பை கொண்டு வருவோம். இதை விட்டுவிட்டு பௌத்தர்களின் நாடு, அவர்களுக்கு முதலிடம் இப்படியான சேட்டைகள். இலங்கையை ஒரு செக்குலர் நாடாக்குவதே சிறந்தது. இதை நாங்கள் சிங்கள மக்களுக்கு சொல்லியுள்ளோம்.

இனப்பிரச்சனையின் நேரடி வெளிப்பாடுதான் புலி. அது இன்று இல்லாமல் போய்விட்டது. ஆனால் அதற்கான கிருமி உள்ளே இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது மீண்டும் எழுலாம். இதே போலத்தான் ஜேவிபி யினரை அழித்தார்கள். ஆனால் மீண்டும் ஜேவிபி எழுந்து நிற்கிறது. இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு வைக்கப்படாவிட்டால் மீண்டும் பிரச்சினைகள் எழும். இப்ப உள்ளது ஒரு இடைவேளையே தான்.

http://thesamnet.co.uk/?p=18362

இந்நிகழ்வின் இறுதியில் கருத்து வெளியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கோ அல்லது சரத் பொன்சேகாவுக்கொ வாக்களிப்பார்களானால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நாடுகடந்த தமிழீழத்திற்கான வாக்கெடுப்புகளிற்கு எவ்வித அர்த்தமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

உண்மையான கூற்று...

சிங்களவன் ஒருவனுக்கு வாகளிப்பதின் மூலம் தமிழர்கள் தங்களை சிங்களவனை தலைவனாக கொண்ட தமிழ் அடிமைகளாக பிரகடனப்படுத்தி கொள்வார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ..... என் தமிழ் இனம், வெல்லும் குதிரைக்கு காசை கட்டாமல் .

கூழ் .... பானைக்குள் விழுந்து சாகும் பல்லி போல இருப்பது ஆச்சரியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜிலிங்கம் வந்தபோது அவரை வரவேற்று நல்லமுறையாக கதைத்த ஊடகவியளாளர் இன்று அவர் விலைபோன ஒருவர் நம்பமுடியாது என்று செல்லி ஜனவரி 4 வரை பொறுத்திருக்குமாறு வேண்டியுள்ளாரே! ஒரே மேடையில் பிரச்சாரம்செய்யப்போகும் கருணாரட்ண சிவாஜிலிங்கத்துடன் போட்ட ஒப்பந்தம் என்ன?

இந்த செய்திவந்த இணையம் மங்கள சமரவீர சார்பானது, புள்ளிவிபரங்களும் கூடுதலாக காலிமாவட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. மங்கள சமரவீரவின் இடம்கூட காலிமாவட்டம் என்றாகிறது. இந்தக் கருத்துக்கணிப்பின் நம்பகத்தன்மை என்ன?

முக்கியமாக புலம்பெயர்ந்து வாழும் நாங்கள் இந்த பௌத்த சிங்கள ஜனாதிபதித்தேர்தலுக்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை வளங்குகிறோம்? :)

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் வந்தபோது அவரை வரவேற்று நல்லமுறையாக கதைத்த ஊடகவியளாளர் இன்று அவர் விலைபோன ஒருவர் நம்பமுடியாது என்று செல்லி ஜனவரி 4 வரை பொறுத்திருக்குமாறு வேண்டியுள்ளாரே! ஒரே மேடையில் பிரச்சாரம்செய்யப்போகும் கருணாரட்ண சிவாஜிலிங்கத்துடன் போட்ட ஒப்பந்தம் என்ன?

இந்த செய்திவந்த இணையம் மங்கள சமரவீர சார்பானது, புள்ளிவிபரங்களும் கூடுதலாக காலிமாவட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. மங்கள சமரவீரவின் இடம்கூட காலிமாவட்டம் என்றாகிறது. இந்தக் கருத்துக்கணிப்பின் நம்பகத்தன்மை என்ன?

முக்கியமாக புலம்பெயர்ந்து வாழும் நாங்கள் இந்த பௌத்த சிங்கள ஜனாதிபதித்தேர்தலுக்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை வளங்குகிறோம்? :(

தமிழர் ஒருவரின் வாக்கு இனவாத, கொலைகாரர்களுக்கு போகாமல் தமது எதிர்ப்பை உலகுக்கு காட்ட வேண்டும்.மற்றும்படி வேறென்னதை எதிர்பார்கிறீர்கள்? மகிந்த்தவுக்கோ, சரத்துக்கோ கழுவினால் ஏதாவது அமைச்சர் பதவி கிடைக்கும். அதற்கே கருணா,டக்ளஸ், சித்தார்தன் என்று ஒரு வானர கூட்டமே உள்ளது. :):blink:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ..... என் தமிழ் இனம், வெல்லும் குதிரைக்கு காசை கட்டாமல் .

கூழ் .... பானைக்குள் விழுந்து சாகும் பல்லி போல இருப்பது ஆச்சரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ..... என் தமிழ் இனம், வெல்லும் குதிரைக்கு காசை கட்டாமல் .

கூழ் .... பானைக்குள் விழுந்து சாகும் பல்லி போல இருப்பது ஆச்சரியம்.

கூழ்ப் பானைக்குள் அமிழ்ந்து இருப்பதனால்தான் மகிந்தவும், சரத்தும் இரட்சகர்களாகத் தெரிகின்றார்கள். இருவருமே தமிழர்களின் குருதியைக் குடித்து தமது குரூரமான வெறியைத் தணித்தவர்கள். மீண்டும் வெறி வரும்மோது தாயகத்தில் வாழும் நம்மவர்களைத்தான் குதறுவார்கள். அப்போதும் நாங்கள் திகில்படம் பார்த்தமாதிரித்தான் முழித்துக்கொண்டு இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்து கணிப்புகள் உளவியல் சார்ந்தது. இணையதளங்களின் கருத்து கணிப்புகள் வியாபராம் சார்ந்தது.

இவரே வெல்ல போகிறார் என்று மக்கள் மனதில் ஒரு பாதிப்பை உண்டுபண்ணுவதற்காகவே இப்படியான கருத்து கணிப்பு முடிவுகள் பிரச்சாரமாகின்றன.

எனக்கென்னவோ......... மகிந்த வெல்வதுதான் தமிழர்களுக்கு உத்தமம். இந்த உலகம் எவ்வளவு பொய்யானது என்பதை அவர்களே வந்து தமிழர்களுகக்கு சொல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

தவிர சரத் வென்றால் இந்தியா உட்பட எல்லோரும் ஏதோ வெள்ளையன் பிள்ளைபோல் வேசமிட்டு அபிவிருத்தி அது இது என்று கலாச்சார சீரழிவை திட்டமிட்டு அரங்கேற்றுவார்கள். அது போராட்த்தின் பால் இளைஞரை சிந்திக்க தூண்டாது என்று அவர்கள் நம்புகின்றார்கள். புலிகளை அப்படியே ஓரம் கடடிவிடலாம் என்று நம்புவார்கள்.

மகிந்த வென்றால் இவர்கள் முடிவை பாhத்துவிட்டு....................... புலிகள் பயங்கரவாதிகள் ஆனாலே அது நியாயமானதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.