Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்காக தன்னை உயிராயுதமாகிய வீரத்தமிழன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்

Featured Replies

தன் இனம் படும் துயரை பொறுக்காமல் ..இன மானம் வேண்டி தன்னுயிரை ஆயுதமாகிய ..வீர தமிழன் முத்துக்குமாருக்கு என் வீர வணக்கங்கள் ..

அவரது முதலாவது ஆண்டு நினைவில் ..எம் இனம் விடிவு பெற தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியெடுப்போம் ..

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

ஈழத்தமிழர் மீதான இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி தீக்குளித்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று (29.01.2010) தமிழகம் எங்கும் கடைபிடிக்கப்படுகின்றது.

இதனையொட்டி தமிழ்நாடெங்கும் பல்வேறு அமைப்புகள் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஈரோட்டில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு திறந்தவெளி கருத்தரங்கம் நேற்று (28.01.2010) ) மாலை நடத்தப்பட்டது.

தஞ்சையில் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் ஈகி முத்துக்குமாரின் முதலாமாண்டு நினைவாக, தெருமுனைக் கூட்டம் சுடரோட்டம் கருத்தரங்கம் ஆகியவை இன்று (29.01.2010) நடத்தப்படுகின்றது.

கருத்தரங்கை ஒட்டி இன்று காலை தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில், தெருமுனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணியளவில், பள்ளியக்கிரகாரத்திலிருந்து, முத்துக்குமார் நினைவுச் சுடரோட்டம நடத்தப்படுகின்றது.

மாலை 6 மணியளவில் ஆப்ரகாம் சாலையில், கருத்தரங்கம் நடைபெறுகின்றது. கருத்தரங்கிற்கு, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை தலைமை தாங்குகிறார்.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நகர அமைப்பாளர் புலவர் கோ.நாகேந்திரன் பாவீச்சு நிகழ்த்துகிறார். ”ஈழத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும், ”ஈகி முத்துக்குமாரின் இறுதி அறிக்கையும் தமிழ்த்தேசியமும்” என்ற தலைப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் அவர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.

பரமக்குடியில் இன்று கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

முத்துக்குமார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் கருத்தரங்கம் நடத்தப்படுகின்றது.

01.02.2010 அன்று மாலை ஆத்தூர் கடைத்தெருவில் நடக்கும் கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினது ச.தமிழ்மணி தலைமை தாங்குகிறார். கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

சென்னை தாம்பரத்தில் 13.02.2010 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழக இளைஞர் முன்னணி அமைப்புகள் சார்பில் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்படுகின்றது.

இந்நிகழ்விற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். கவிஞர் கவிபாஸ்கர் பாவீச்சு நிகழ்த்துகிறார்.

கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=25667

முத்துக்குமார் நினைவு நாள் அஞ்சலி கூட்டம்:நெடுமாறன்,ராமதாஸ், தா.பா. பேசுகிறார்கள்

முத்துக்குமார் நினைவு நாளையொட்டி மாலை 6 மணிக்கு பெரவள்ளூர் சதுக்கத்தில் அஞ்சலி கூட்டம் நடக்கிறது. பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் பேசுகிறார்கள்.

தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் கூட்ட ஏற்பாடுகளை செய்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் சார்பில் தங்கசாலையில் இன்று இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் பேசுகிறார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=25676

Edited by அன்புச்செல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கங்கள்..!

தியாகி முத்துக்குமாரன் உட்பட அனைத்து தியாகிகளுக்கும் என் வீர வணக்கம்.

தியாகங்கள் மட்டுமே விடுதலையை வென்றுதரும் - வெட்டிப் பேச்சுக்களும் விதண்டாவாதங்களும்

ஒருபோதும் வெற்றி தராது.

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி முத்துக்குமாரன் உட்பட அனைத்து தியாகிகளுக்கும் என் வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காக உயிராயுதம் ஏந்தியவனே உன்னை தமிழ்மண் ஒருபோதும் மறந்துவிடாது.

சாவு ஒருமுறைதான் வரும் அந்த சாவையே உன் இனத்துக்காய் தூக்கி எறிந்தவனே வீரவணக்கங்கள்!

தியாகி முத்துக்குமாரன் உட்பட அனைத்து தியாகிகளுக்கும் என் வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடக்கவிருந்த வெறியாட்டத்தை தைமாதமே உணர்ந்தவன் நீ.

உன்னை அழித்தாவது தடுக்கலாம் என்று உன்னையே தீ மூட்டினாய்.

தமிழக தமிழரின் மனசாட்சியை தட்ட முடிந்தது. சேற்றுக்குள் வீழ்ந்த அரசியல்வாதிகளால் இதை கூட உணர முடியவில்லை.

மனிதவடிவில் பிறந்த மிருகங்களை அரசியல்வாதிகளாக அங்கிகரித்துவிட்டோம்.

பலனை அனுபவிப்போம்.

துன்பம் வரும் நேரம் எல்லாம் உன் நினைவும் வரும்.

தமிழராக பிறந்துவிட்டோம் அதுதானே திரும்ப திரும்ப வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் முத்துக்குமார் உட்பட அனைத்து தியாகிகளுக்கும் வீர வணக்கங்கள்

eelam-2.jpg

Edited by கிறுக்குபையன்26

எமக்காக தன்உயிரை கொடுத்த முத்துக்குமாருக்கு....வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரவணக்கம் தியாகி முத்துக்குமாரா!

வேதனை என்னவென்றால் நீ மூட்டிய உணர்வு தீயை மு.க என்ற காவாலி பணத்தால் அணைத்துவிட்டான் என்பதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'உன்னில் எரியூட்டி உணர்வை எமக்கூட்டினாய்!!...

அன்புத்தம்பியே உனக்கெம் அக வணக்கம்!

அனைத்து தியாகிகளுக்கும் என் வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தியாகத் தீயையே உருவாக்கி -தன்

தேகத்தையே அதில் விறகாக்கி

விடுதலைத் தீயை மூட்;டிய முத்துக் குமாரனுக்கும்

அவன் வழி தொடர்ந்த ஏனைய தோழர்களுக்கும்

எனது வீர வணக்கங்கள்!!!!!!

தன் தமிழினம் கப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக தன்னுயிரை தியாகம் பண்ணிய முத்துகுமாரிற்கும் ஏனைய தியாகிகளுக்கும் எமது வீரவணக்கங்கள்.

தியாகங்களினை மனதில் நினைந்து... நம் விடுதலை உணர்வினை வெளிப்படுத்துவோம்!

நமக்குள் உள்ள வேற்றுமைகளைக் களைந்து... நம் இன விடுதலைக்காக ஓரணியில் திரண்டு போராடுவோம்!

இதுவே நாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

-தியாகங்கள் என்றும் வீண் போனதில்லை-

தியாகி முத்துக்குமார் உட்பட அனைத்து தியாகிகளுக்கும் வீர வணக்கங்கள்!

candle.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்காக, எமது தாயக உறவுகளின் விடிவுக்காக தங்களையே தீ மூட்டி தங்களையே அழித்த உன்னதமான உயிர்களுக்காக எனது மனமார்ந்த வீர வணக்கத்தை காணிக்கையாக்குறேன், எனது உயிர் உள்ளவரை நீங்கள் எங்களுக்காக செய்த தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம்.

தியாக செம்மல் முத்துக்குமார் உட்பட அனைத்து தியாகிகளுக்கும் எனது வீர வணக்கங்கள்..!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் அஞ்சலிகள் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக தம் உயிர்களை ஆகுதியாக்கிய அனைவருக்கும்...என் கண்ணீர் அஞ்சலிகள்!!!

முத்துகுமாருக்கு வீரவணக்கம்!

வீரவணக்கம் வீரவணக்கம் சகோதரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்..!

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கம்.

முதுக்குமரனுக்கும் ஏனைய தியாகிகளுக்கும் வீரவணக்கங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.