Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா?

Featured Replies

உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்.நான் களத்திற்கு புதிய உறுப்பினர் ,இந்த திரியை தொடர உங்கள் கருத்துக்கள் வலுச்சேர்க்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்.நான் களத்திற்கு புதிய உறுப்பினர் ,இந்த திரியை தொடர உங்கள் கருத்துக்கள் வலுச்சேர்க்கும்....

வணக்கம். வருக. நல்வரவாகுக.

சிறிலிங்கம் அவர்களே.வாருங்கள் தேசிய்த்திற்கு வலுச் சேர்ப்போம்.

ஐக்கியநாடுகள் சபையை விடுவோம். முதலில் எம்மில் எத்தனைபேர் முழுமையாக இணைந்துள்ளோம்?

வணக்கம் வாருங்கள். ஐ. நா . என்றால் யார் என்பதைப் புரிந்து கொண்டால், உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.

Edited by sitpi

  • தொடங்கியவர்

ஈழ சுதந்திரப் போர் ஆரம்பமான காலந் தொட்டு இன்று வரை, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டிலான சமாதானத்தை அங்கலாய்ப்போடு எதிர்பார்க்கும் பலர் உள்ளனர். ஐ.நா. சபையின் அரசியல் பின்னணி பற்றி தெளிவான அறிவிருந்தால், தாமே ஏமாந்து தலைவிதியை நொந்து கொள்ள வேண்டியிருக்காது. ஐ.நா.சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கை தொடர்பாக வருடாவருடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கின்றது. இலங்கை அகதிகள் சம்பந்தமான தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நாடுகள், அந்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டுகின்றன. "இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து நடப்பதாகவும், நாடு திரும்பும் அகதிகளை எந்த தீங்கும் அணுகாது பாதுகாப்பதாகவும்..." ஐ.நா. அறிக்கை கூறிச் செல்கின்றது.

வணக்கம் ஸ்ரீலிங்கம்! யாழ் களத்துக்கு வாருங்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

.

nalvaravu3.gif

வணக்கம் ஸ்ரீலிங்கம்.உங்களை வருக, வருக என்று வரவேற்கின்றோம்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நல்வரவு. வணக்கம் சிறிலிங்கம் அவர்களே.

VanakkamRight.gif

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா?

"சொங்கி மூன்" இருக்கும்வரை நிச்சயம் ஆதரவழிக்கும். :rolleyes::rolleyes:

பாண் கு எண்ட பண்ணாடைக்கும் பரதேசிக்கும் பிறந்த பன்னி தானே அது தானே அங்கை செயலாளர் ஓம் அப்ப கட்டாயம் ஆதரவு தரும்

ஐயா சிவலிங்கத்தார் வணக்கம் நலமோ ????

  • தொடங்கியவர்

எப்போதும் அரசாங்கங்களை குறை கூறும் மக்கள், ஒரு போதும் பெரு மதிப்புக்குரிய ஐ.நா.சபையை குறை சொல்லத் தயங்குவார்கள். பொது மக்களின் "தயக்கத்தை" மேற்குலக அரசுகள் தமக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. இரண்டாவது உலகப்போரினால் பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் சிதைவடைந்தது. மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. 19 ம் நூற்றாண்டில் மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை அமைத்த பிரித்தானியா, 20 ம் நூற்றாண்டில் தள்ளாடியது. ஒரு காலத்தில் லாபங்களை அள்ளிக் குவித்த காலனிகள், தற்போது நஷ்டங்களை கொடுத்தன. இதனால் பிரித்தானியா, தனது காலனிகளுக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்தது. அவற்றில் இஸ்ரேலின் சுதந்திரம் முக்கியமானது.

அப்போது தான் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையில், இஸ்ரேலுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கான பிரேரணை அமெரிக்காவால் முன்மொழியப்பட்டது. இதற்கு இன்னொரு வல்லரசான சோவியத் யூனியனின் சம்மதம் கிடைக்கவே, பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரதேசமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவானது. யூதர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் (இஸ்ரேல்) 51 % அரபுக்கள் வாழ்ந்தார்கள். இதனை பொறுக்க மாட்டாத சியோனிச அரசு, அந்த மக்கள் மீது வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டது. அரபுக் கிராமங்களை சுற்றி வளைத்த ஆயுதபாணிக் குழுக்கள், நூற்றுக் கணக்கான மக்களை படுகொலை செய்தனர். இதைக் கேள்விப்பட்ட லட்சக்கணக்கான அரபுக்கள் இடம்பெயர்ந்து அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

இஸ்ரேலிய இனச் சுத்திகரிப்பில் தப்பிய பாலஸ்தீன அகதிகள், மேற்கு ஐரோப்பாவுக்கோ, அல்லது அமெரிக்காவுக்கோ அகதிகளாக வரலாம் என்ற "அச்சம்" நிலவியது. பாலஸ்தீன அகதிகள் தமது நாடுகளுக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காக, ஐ.நா. சபையின் உதவியை நாடின. அதன்படி ஜோர்டானிலும், லெபனானிலும் ஐ.நா. மேற்பார்வையின் கீழ் பல அகதி முகாம்கள் கட்டப்பட்டன. கடந்த அறுபது வருடங்களாக அந்த அகதி முகாம்களே, பாலஸ்தீனர்களின் நிரந்தர வதிவிடமாகி விட்டன. இன்று ஐ.நா. மன்றம் மட்டுமல்ல, எந்த ஒரு மேற்குலக நாடும் அகதிகளின் மீள்குடியேற்றம் பற்றி பேசுவதில்லை. இஸ்ரேலை பகைத்துக் கொள்ளக் கொட்டாது என்பதில் அவதானமாக உள்ளன.

ஒரு போதும் ஆதரவளிக்காது,இந்தியா இருக்கும் வரை...

ஐயா இப்ப என்ன சொல்லறீங்கள் ஐ நா ஓகேயா

இல்லை நோ ஓகேயா சரி இருக்கட்டும் ஐ நா வில 2 3 மலையாள மாந்திரீகள் குப்பை கொட்டுதுவள் அவையள் எப்பிடி :lol::D :D

ஐயா இப்ப என்ன சொல்லறீங்கள் ஐ நா ஓகேயா

இல்லை நோ ஓகேயா சரி இருக்கட்டும் ஐ நா வில 2 3 மலையாள மாந்திரீகள் குப்பை கொட்டுதுவள் அவையள் எப்பிடி :huh: :huh: :huh:

சின்னப்பு பெசாவர் எப்படியுள்லது .நான் பாக்கிஸ்தானுக்கு வந்தால் உங்களை வந்து பாக்கிறன்..

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போதும் ஆதரவளிக்காது,இந்தியா இருக்கும் வரை...

கிந்தியாவை இப்படியாக்கினால்..............

ஆந்திரப்பிரதேஸ்லாந்து, அருணாசலலாந்து, அஸாமியலாந்து, பீகாரியலாந்து, சண்டிஸ்கரலாந்து, கோவாலாந்து, குஜராத்தியா, கரியானாந்து, கிமாச்சலாந்து, காஸ்மீரிலாந்து, யார்க்கண்ட்லாந்து, கர்னாடகலாந்து, கேரளலாந்து, மத்தியலாந்து, மகராஸ்ட்டிராலாந்து, மணிபுரா, மேகலயாந்து, மிசோரலாந்து, நாகலாந்து, ஒரிஸ்ஸியா, பஞ்சாபியாந்து, சிக்கிம்லாந்து, ராயஸ்லாந்து, திரிப்புராந்து, உத்தரபிரதேஸலாந்து, உத்தரகாண்ட்லாந்து,மேற்குவங்கலாந்து, தமிழ்லாந்து. என்றாகிவிட்டால் தமிழீழமும் அமைவது சாத்தியமாகலாம் அல்லவா?

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிந்தியாவை இப்படியாக்கினால்..............

ஆந்திரப்பிரதேஸ்லாந்து, அருணாசலலாந்து, அஸாமியலாந்து, பீகாரியலாந்து, சண்டிஸ்கரலாந்து, கோவாலாந்து, குஜராத்தியா, கரியானாந்து, கிமாச்சலாந்து, காஸ்மீரிலாந்து, யார்க்கண்ட்லாந்து, கர்னாடகலாந்து, கேரளலாந்து, மத்தியலாந்து, மகராஸ்ட்டிராலாந்து, மணிபுரா, மேகலயாந்து, மிசோரலாந்து, நாகலாந்து, ஒரிஸ்ஸியா, பஞ்சாபியாந்து, சிக்கிம்லாந்து, ராயஸ்லாந்து, திரிப்புராந்து, உத்தரபிரதேஸலாந்து, உத்தரகாண்ட்லாந்து,மேற்குவங்கலாந்து, தமிழ்லாந்து. என்றாகிவிட்டால் தமிழீழமும் அமைவது சாத்தியமாகலாம் அல்லவா?

நீங்கள் இந்தியர்களது கோபத்தைக் கிளறுவதுபோல் உள்ளது. அவர்கள் தமது நாடுகள் பிரிந்துவிடுமென்றே எமது விடுதலையை நிராகரித்தவர்கள்.

  • தொடங்கியவர்

முன்பெல்லாம் கடவுளின் பெயரால், அல்லது மதத்தின் பெயரால் யுத்தங்கள் நடத்தப்பட்டன. 20 ம் நூற்றாண்டில், ஐ.நா. சபை என்ற சர்வதேச நிறுவனத்தின் பெயரால் யுத்தங்கள் நடத்தப்பட்டன. அவ்வாறான தொடர் யுத்தங்களில் முதலாவது "கொரியாப் போர்." இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஆசியாவில் புதிய போர் முனையை தொடங்கிய சோவியத் செஞ்சேனை கொரியாவை மீட்டு, ஜப்பானை கைப்பற்ற திட்டமிட்டது. இதற்குள் முந்திக் கொண்ட அமெரிக்கா ஜப்பானில் அணு குண்டு போட்டு தடாலடியாக போரை முடிவுக்கு கொண்டு வந்தது. ஹிரோஷீமா, நாகசாகி நகரங்களில் பெரும் நாசத்தை விளைவித்த அணு குண்டு தாக்குதல், அமெரிக்கா தன்னை வல்லரசு ஆதிக்கத்தை நிலைநாட்டியது. தொடர்ந்து அமெரிக்கப் படைகள் ஜப்பானிலும், கொரியாவிலும் தரையிறங்கின.

இதற்கிடையே சோவியத் படைகள் வட கொரியாவை ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து விட்டிருந்தன. உலகப்போர் முடிவுற்ற உடனே, கொரியாவில் பொதுத் தேர்தல் நடத்தப் பட்டது. சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த வட கொரியாவிலும், அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்த தென் கொரியாவிலும் ஒரே சமயத்தில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றனர். தேர்தல் முடிவுகள், அமெரிக்க எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அமைந்து விட்டதால், கொரிய இணைப்பு பின் போடப்பட்டது. தென் கொரியாவில் அமெரிக்க ஆசீர்வாதத்துடன் ஒரு இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றது. சதியில் பங்குபற்றிய அதிகாரிகள் முன்னர் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளரின் கைக்கூலிகளாக இருந்தவர்கள். தற்போது அமெரிக்க விசுவாசிகளாக மாறி விட்டனர். இதே நேரம், வட கொரியாவில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த கிம் இல் சுங் புதிதாக உழைப்பாளர் கட்சி ஆரம்பித்தார். சோவியத் செஞ்சேனை உதவியுடன் கெரில்லாக் குழுக்களை அமைத்தார். "ஒருங்கிணைந்த கம்யூனிச கொரியா", கிம் இல் சுங்கின் லட்சியமாக இருந்தது. கிம் இல் சுங் தலைமையிலான கெரில்லாக்கள் கொரியா சுதந்திரப் போரை ஆரம்பித்தனர். ஆரம்பித்த சில மாதங்களிலேயே 90 % கொரியப் பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம். ஐக்கிய நாடுகள் எண்டால் யார்.?

  • கருத்துக்கள உறவுகள்

முதலிலை உள்ளை நுளைகிற உருப்படியான வழியைப் பாருங்கோவன் சகோதரம்.

அப்புறமாக உந்த அறிவுக்கு எட்டமானதைப்பற்றி சிந்திப்போம்.

வணக்கம். ஐக்கிய நாடுகள் எண்டால் யார்.?

ஐ. நா.=அமெரிக்கா மற்றும் அடிவருடிகள் ( நேச நாடுகள்)

  • 2 weeks later...

நாங்கள் உரத்து சொன்னால் ஐ.நா. ஆதரிக்க வேண்டி வரும் சிறி லிங்கம் அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.