Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதினான்கு வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன், 7 வருடக் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதினான்கு வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன், 7 வருடக் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையாகிய இரத்தினசிங்கம் சிவநாதன் என்பவரே நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அவரது மகளாகிய சிறுமிக்கு 30 ஆயிரம் ரூபா நஷ்டஈடாக வழங்குவதுடன், தண்டப் பணமாக 10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரியாகிய தங்கவேலு செல்வகுமார் என்பவரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் சாட்சியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

தனது தந்தையார் குடித்துவிட்டு வந்து தன்மீது பாலியல் குற்றம் புரிந்ததாகப் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனையின் முன்பு வைத்தியரிடம் தெரிவித்திருந்தார்.

குற்றச் சம்பவம் இடம்பெற்றபோது சிறுமி பருவமெய்தியிருந்ததாகவும், வைத்திய பரிசோதனையின்போது சிறுமி பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்ததாகவும் சட்ட வைத்திய அதிகாரி தமது சாட்சியத்தின்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் தனக்கு நேர்ந்ததைத் தெரிவிக்கையில், ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு வரும் தனது தந்தையார் தன்மீது பாலியல் குற்றம் புரிந்ததாகவும் இவ்வாறான குற்றச்செயல் ஒரு மாதம் வரையில் இடம்பெற்றதாகவும், தனது தாயாரையும் தனது சகோதரிகள் மற்றும் சகோதரனையும் அடித்து வெளியில் துரத்திவிட்டு தன்னைப் பயமுறுத்தி, தனிமையில் தன்மீது குற்றம் புரிந்ததாகவும் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரி, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததன் பின்னர் எதிரியைக் கைது செய்த பெண் பொலிஸ் அதிகாரி, மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் ஜயசேன ஆகியோரின் சாட்சியங்களை அரச தரப்பு சட்டத்தரணி செல்வி. நளினி கந்தசாமி நெறிப்படுத்தினார்.

விசாரணைகளின் முடிவில் பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது அவரது தந்தையார் பாரதூரமான பாலியல் குற்றம் புரிந்துள்ளார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியிருப்பதாகத் தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விசுவநாதன், எதிரிக்கு 7 வருட கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

globaltamilnews

Edited by பிழம்பு

என்ன கொடுமை இது... தன் மகளின் வாழ்வையே சின்னாபின்னமாக்கிய ஒருவருக்கு வெறும் 7 வருட சிறைத்தண்டனையும், 30 ஆயிரம் நட்ட ஈடுமா? இப்படியானவர்களை, ஆகக் குறைந்தது 30 வருடமாவது கடூழிய சிறைத்தண்டனை கொடுத்து சிறிது சிறிதாக சித்திரவதை செய்து கொல்ல வேண்டும்

என்னைப்பொறுத்தவரை 30 ஆயிரமும் 7 வருடமும் போதாது....மரத்தில் கட்டி வைத்து போட்டுத்தள்ளனும்....இப்படியானவர்கள் உயிருடன் இருப்பதைவிட இல்லாதிருப்பது எவ்வளவோ மேல்..!

Edited by ஈழமகள்

இதெல்லாம் வெளி நாடுகளில்தான் நடக்கின்ற விடயம். யுத்தத்தின் காரணமாக புத்தி பேதலித்து திரிகின்றார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

கடுங்காவல் எண்டால் என்ன?

இதெல்லாம் வெளி நாடுகளில்தான் நடக்கின்ற விடயம். யுத்தத்தின் காரணமாக புத்தி பேதலித்து திரிகின்றார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

உலகில் நடக்கின்ற விடயம் எண்டு சொல்லுங்கோ... இதுக்குகாரணம் மண்டைப்பிழை.

பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஆயுள்தண்டனை கொடுத்தால் சரியாயிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எல்லாம் பாசிச கருத்துக்கள், சட்டத்தை நாம் கைகளில் எடுத்து பழகி விட்டவர்கள், இப்படித்தான் தோன்றும் , சட்டம் தனது கடமையை செய்யும், அவர் மது போதையில் வேறு இருந்திருகிறார், மது மனைவிக்கும் மகளுக்கும் உரிய வேறுபாட்டை கூட மறக்கடித்து விடும், மதுவருந்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள். :)

இந்தச் சம்பவத்தில் ஒரு நல்ல விசயம் எனில் குற்றம் நான்கு சுவர்களை தாண்டி வெளியே வந்திருக்கின்றது. இவ்வாறான குற்றங்கள் பெருமளவு நடக்கின்றபோதும் அவைகள் எமது கலாச்சார இறுக்கம் நிமிர்த்தம் மூடி மறைக்கப்படுவதே அதிகம். திரைமறைவில் அதிக பாலியல் குற்றங்கள் நடப்பது உண்மையே. எம்மவருள் பல உறவுநிலை வரைமுறைகளை தாண்டிய பாலியல் நடைமுறைகள் நடந்தவண்ணம் தான் உள்ளது இருந்தும் அவைகள் மூடி மறைக்கப்படுகின்றது. இதனால் மன அழுத்தம் நிரந்தரமாகின்றது. குற்றங்கள் வெளிப்படையாக பேசப்படும் போதே அதற்கான தீர்வுகள் குறித்து நகரமுடியும். சிறைத்தண்டனையோ கொல்வதோ உண்மையில் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகது மாறாக ஒரு பயம் நிமிர்த்தம் குற்றங்களை கணிசமானளவு கட்டுப்படுத்தலாம் அதே நேரம் தண்டனைகள் குற்றங்களை மறைப்பதற்கான வழியையும் ஊக்குவிக்கும். பாலியல் வன்முறை உளவியல் ரீதியில் ஒரு குற்றமாகாது என்பார்கள். போலிக் கலாச்சார உணர்ச்சி வசத்தால் இந்தப் பிரச்சனைகளை அணுகுவதை தவிர்த்து உளவியல் சமூக இறுக்கம் சார்ந்து இதற்கான அடிப்படையை சீர்படுத்துவதே நல்லது. இலங்கையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். உல்லாசப் பிரயாணிகளின் வருவாய்க்காக அரசு இதை கண்டும் காணமலும் விட்டுள்ளது. உல்லாசப்பயணிகளின் சிறுவர் சிறுமியர் மீதான பாலியல் ஈடுபாட்டை இலங்கையில் வாழ்பவர்கள் பார்க்கத்தான் செய்கின்றனர். அவர்கள் மனதிலும் இது குறித்த சலனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றது. போர்ச் சூழல் இதன் நிமிர்த்தமான வறுமை உறவுகளை இழந்த சிறுவர் சிறுமியர் அதிகமான பாதிப்புக்குள்ளாகின்றனர். சிறுவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வெளிப்படையான பாலியல் கல்வியும் குறைபாடாய் உள்ளது.

அவர் மது போதையில் வேறு இருந்திருகிறார், மது மனைவிக்கும் மகளுக்கும் உரிய வேறுபாட்டை கூட மறக்கடித்து விடும், மதுவருந்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள். :)

என்னது மது அருந்தினா, மனைவிக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாதா? தமிழ்தான் எண்டு காட்டுறீங்களே.... :)

உங்கள மாதிரி பித்தர்கள்தான், பியர் அடிச்சிட்டு கிளப்புக்கு போனா குத்தம், ஆனா கள்ளு குடிச்சிட்டு திருவிழாவில பாலியல் துஷ்பிரயோகம் செய்ய சம்மதம் எண்டு எங்கட எடுப்பர் கைபுள்ளே தமிழ் சனத்துக்கு பழக்கி வைத்திருக்கிறீங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா!

நான் நினைக்கிறேன் அவருக்கு அதிலை தான் ஏதும் பிழையோ? அதுதானய்யா மண்டையிலை.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை கேட்டா இதிலை சம்பந்தப்பட்ட பலபேருக்கு தண்டனை கொடுக்கவேணும் எண்டு சொல்லுவன். குற்றவாளியை தண்டிப்பது போக இந்த செய்தியை சம்பந்தப்பட்டவர்களின் பெயர்போட்டு வெளியிட்ட குற்றத்துக்காக அவருக்கு கடுழியச் சிறை கொடுக்கவேணும். இவ்வாறான வழக்குகளை பூட்டிய கதவுக்குள் விசாரிக்கவேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் விபரம் வெளியிடக்கூடாது என்றும் எதுவித சட்டமும் சிரிலங்காவில் இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டி எறிய வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது மது அருந்தினா, மனைவிக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாதா? தமிழ்தான் எண்டு காட்டுறீங்களே.... :o

அதற்காக சட்டத்தை நாம் கையில் எடுக்கலாமா? வன்முறையை இளம்சமுதாயத்திற்குள் புகுத்துவது முறையா? மது அருந்தாத ஒரு சமுதாயத்தை உருவாக்க முயற்சிக்க கூடாதா? :D

//-//-//-

Edited by Panangkai

இது எல்லாம் பாசிச கருத்துக்கள், சட்டத்தை நாம் கைகளில் எடுத்து பழகி விட்டவர்கள், இப்படித்தான் தோன்றும் , சட்டம் தனது கடமையை செய்யும், அவர் மது போதையில் வேறு இருந்திருகிறார், மது மனைவிக்கும் மகளுக்கும் உரிய வேறுபாட்டை கூட மறக்கடித்து விடும், மதுவருந்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள். :o

மது அருந்தினால் அம்மாவுக்கும் மனைவிக்கும் வித்தியாசம் தெரியாதா? சகோதரிக்குமா?

வெட்டி எறிய வேண்டும்.

என்னத்தை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மது அருந்தினால் அம்மாவுக்கும் மனைவிக்கும் வித்தியாசம் தெரியாதா? சகோதரிக்குமா?

அவருக்கு தெரியவில்லை அதானால்தானே செய்து இருகிறார், சுயநினைவு உள்ள ஒருவன் செய்யும் செயலா இது?

உங்கள மாதிரி பித்தர்கள்தான், பியர் அடிச்சிட்டு கிளப்புக்கு போனா குத்தம், ஆனா கள்ளு குடிச்சிட்டு திருவிழாவில பாலியல் துஷ்பிரயோகம் செய்ய சம்மதம் எண்டு எங்கட எடுப்பர் கைபுள்ளே தமிழ் சனத்துக்கு பழக்கி வைத்திருக்கிறீங்கள்...

ஒது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் அவமதிக்கும் செயல். இதற்கான எனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தாயும் குற்றவாளி தான் ஒரு மாதம் வரைக்கும் மகளை கணவன் பாலியல் வதைக்கு உட்படுத்த பார்த்து கொண்டு இருந்திருக்கிறார் அப்படி அவரால் தடுக்க முடியவில்லையா...இது போன வருடம் நடந்தது எல்லவா...இதனை பற்றி யாழில் முன்பு விவாதித்து உள்ளோம்...இல்லாவிடின் இது வேறா...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ நீதிமன்றில் என்றால் குற்றம் சரிவர நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும். உண்மையில் அவர் சுயநினைவில் இல்லாத போது தவறாக நடந்து கொண்டிருந்தால் அதற்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்காது. ஆனால் இவர் திரும்பத் திரும்ப ஒரே குற்றத்தை இழைத்திருக்கிறார். அந்த வகையில் இவர் கடும் தண்டனைக்குரிய குற்றவாளியே.

தான் பெற்ற பெண் குழந்தைகளையே விபச்சாரிகளாக்கி பிழைப்பு நடத்தும் தாய்மார்களும் இருந்திருக்கின்றனர் எமது சமூகத்தில். அப்படிப்பட்ட பலருக்கு மண்டையில் போடப்பட்டிருக்கிறது. இருந்தும்.. திருந்திச்சா இந்தச் சமூகம்.

வெளிநாடுகளில்.. உள்ளது போன்று கடுமையான சிறுவர் உரிமைச் சட்டங்கள் இயற்றப்பட்டால் அன்றி சிறுவர்களை சிறுமிகளை வக்கிரமான வளர்ந்தவர்களிடம் இருந்து.. அது ஆண் பெண் இருபாலாரிடத்திலும் இருக்கின்றனர்.. பாதுகாப்பது சிரமமாகவே இருக்கும். :o

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.