Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா.விஜயின் கவிதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பா.விஜயின் கவிதை

நிழல் தேடாதே

உன் நிழலில் ஒரு

ஊரையே நிற்கவை !

முட்களில் மோதிக்

கிழியாதவனுக்குப்

பூக்களைத் தடவும்

தகுதி கிடையாது !

மகிழ்ச்சியாய்ச் சிரி

கவலைகளைப் பிய்த்துக்

காற்று மண்டலத்திற்கு

அப்பால் வீசு !

எதைக் கண்டும்

பிரமிக்காதே

பிரமிப்பைப்போல் ஒரு

பின்னடைவே கிடையாது !

தோல்வி என்பது

சிந்திக்கத் தெரியாதவனின்

சித்தாந்தம் !

நிலாவைத் தொட்டது

மூன்று தோல்விகளுக்குப்

பிறகுதான் !

நீ எழுந்தால் ஒரு

எட்டு வந்து பார்க்காதவன்

நீ விழுந்தால் விழுந்து

விழுந்து விசாரிப்பான் கவனி !

இளைஞனே

இரைப்பையையும்

நம்பிக்கையையும்

காலியாக விடாதே !

நடக்குமா என்ற

கேள்வி-

உன் நம்பிக்கைக் கோபுரத்தின்

அத்திவாரத்தில்

விழுந்த கடப்பாறை !

உலகை உலுக்கி உலுக்கி

எடுத்தவனெல்லாம்

துவக்கத்தில் ஒரு

தூசுப்படலமாக இருந்தவன்தான் !

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதையை இணைத்த நுணாவிலானுக்கு நன்றிகள். அதிக பிரசங்கித்தனமில்லாமல் சொல்ல வந்த கருத்தை கவிஞர் வார்த்தைகளைச் சுருக்கி ஆனால் தெளிவாக சொல்லியிருக்கிறார். எவரையும் இலகுவில் சென்றடையக் கூடிய வகையில் கவிதைகள் அமைதல் வேண்டும், அந்த வகையில் பா. விஜய் பாராட்டுக்குரியவராகிறார்.

முட்களில் மோதிக்

கிழியாதவனுக்குப்

பூக்களைத் தடவும்

தகுதி கிடையாது !

என்ற வரிகள் கவிஞரின் அருமையான சிந்தனை.

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கவிஞன் பா. விஜய் அண்மையில் எனது சிநேகிதி இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை பா. விஜய் இன்றைய இளையவர்களுக்கு ஏற்ற மாதிரி தனது பாணியில் எழுதியிருந்த நூல் ஒன்றின் பல பக்கங்களை தொலைபேசி வாயிலாக எனக்கு வாசித்துக் காட்டினார். அப்பப்பா என்ன கற்பனை வளம் பா. விஜயஜன் கவிதைத்தமிழ் மிக அற்புதப் புதையல். இன்றைய காலத்தில் கவிச் சக்கரவர்த்தியாக தமிழில் வலம் வரக்கூடிய அத்தனை சிறப்பையும் பா. விஜயின் எழுத்துக்களில் பார்க்க முடிகிறது.

........

நீ எழுந்தால் ஒரு

எட்டு வந்து பார்க்காதவன்

நீ விழுந்தால் விழுந்து

விழுந்து விசாரிப்பான் கவனி !

......

  • கருத்துக்கள உறவுகள்

எளிமையான வரிகளில் கருத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.கவிதையை இணைத்தமைக்குப் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான கவிதை. சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்று இதைத் தான் கூறுவார்கள்.இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பா.விஜயின் கவிதை

தோல்வி என்பது சிந்திக்கத் தெரியாதவனின் சித்தாந்தம் !

நிலாவைத் தொட்டது மூன்று தோல்விகளுக்குப் பிறகுதான் !

நீ எழுந்தால் ஒருஎட்டு வந்து பார்க்காதவன்

நீ விழுந்தால் விழுந்து விழுந்து விசாரிப்பான் கவனி ! !

அருமையான கவிதை. இவை எனக்கு பிடித்த வரிகள். நுணாவிலான் இணைத்தமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பா.விஜியின் கவிதை மிகவும் அற்புதம்.நுணாவிலானுக்கு நன்றிகள்.

காற்சிலம்பின் ஓசையிலே என்ற கவிதைத் தொகுதியிலிருந்து படித்ததில் பிடித்த சில வரிகள்.

விதி என்பது

தன்னம்பிக்கை அற்றவனின்

தாய்மொழி

அது

இறந்து போய்

நடனமாடிக்கொண்டிருக்கும்

வாழத் தெரியாதவனின்

வாய்ப்பாடு

அது

தன் எச்சிலைக்கூட

அடுத்தவன் வாய்மூலமாய்த்

துப்பிவிட முடியுமாஎன

சோம்பிக் கிடப்பவனின்

ஒப்பாரி

விதியை நம்பி

முகந்தொங்க மாட்டான்

மூலிகைத் தமிழன்

எந்த எறும்பு

விதியை நம்புகிறது?

எந்தப் பறவை

விதியை நம்பி

விழிநீர் உகுக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை இணைப்பிறகு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்

புறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு

கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை

நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே

நம்பிக்கையை நம்புபவனே நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு

நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு

நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்

நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்

உன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை

உன்னை நீயே நம்பாவிட்டால் யார்? உன்னை நம்புவார்கள்

நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால்

அதைத் துப்பி விடாதே

நம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும் ஆயுள்

காப்பீட்டுத் திட்டம் மறுதலிக்காதே

ஒருவனுடைய புகழின் அளவு என்பது அவன் இதயத்தில்

உள்ள நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே ஏறும் குறையும்

இன்னும் சொன்னால் நம்பிக்கையில் மரணத்தை

ஜெயிக்க முடியும் ஏது உயிர்த்தெழுந்தது இப்படித்தான்

சிறந்த வியாபாரிகளை உருவாக்குவது அவர்கள் அடைந்த

நம்பிக்கைத் துரோக நஷ்டங்கள்

சிறந்த வெற்றியாளர்களை உருவாக்குவது அவர்களை நசுக்கிய

அசுரத்தமான தோல்விகள்

நம்பிக்கையே இல்லாமல் யார் வாழக் கூடும்

நம்பிக்கையால் வாழ்ந்தால் அட யார் வாழ்க்கை வாடும்

சந்தேகம்தான் தீயை வைக்கும்

நம்பிக்கைதான் தீபம் வைக்கும்

ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்

ஒவ்வொரு இரவிலும் நம்பிக்கையோடு உறங்கப்போ

மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன

நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது

ஓட்டைப்படகு ஓடிந்த துடிப்பு கரை சேரலாம்

கடல் போல் நம்பிக்கை இருந்தால்

நீ அடுத்தவர் மீது கொண்ட நம்பிக்கை என்பது காசோலை

நீ உன் மீதே கொண்ட நம்பிக்கை என்பது ஏ.டி.எம் அட்டை

நம்பிக்கைகளை எண்ண அலைகளாக மாற்று அதில்

புதிய லட்சியங்களை ஏவுகணைகளாய் ஏற்று

காந்தத்திலிருந்து மின்சக்தி வருவது மாதிரி

நம்பிக்கையிலிருந்து முன்னோர்க்கும் எண்ண அலைகள் வரும்

போராட்டமே வாழ்க்கை நம்பிக்கையே வெற்றி

நம்பிக்கை சிறு நூல்தான் ஆனால் அந்த நூலில் கட்டி

காற்றாடியை அல்ல கற்பாறையையும் பறக்கவிடலாம்

இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையும் காலியாகவிடாதே

ஒரு நாளும் சோர்ந்து விடாதே கடைசிச் சொட்டு ஈரப்பசை வரை மரம் ப+க்கிறது

இழப்பு என்பது எதுவுமேயில்லை உன் நம்பிக்கை உன்னிடம் உள்ளவரை

கர்வம் வை கிராம் கணக்கில் நம்பிக்கை வை கிலோ கணக்கில்

நம்பிக்கை இல்லாத இடம் ஒன்றே ஒன்றுதான் கல்லறை

தண்ணீருக்கு அடியில் சென்று

ஓவியம் வரைய முடியாது

தன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது

உங்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை இருந்தால்

உங்கள் கீரிடங்களை யாராலும் பறிக்க முடியாது

நம்பிக்கை ஒன்று போதுமே

எதிர்காலம் ஒன்றைப் பார்க்கச் செய்யலாம்

நம்பிக்கை இருக்கும் போதிலே

எதிர்நீச்சல் போட்டு வாழ்வை வெல்லலாம்

என்னமுடியும் எதைச் செய்ய முடியும்

என்ற எண்ணமெல்லாம் அவநம்பிக்கை

எல்லாம் முடியும் எதுவும் என்னால் முடியும்

என்ற கொள்கைகள் தான் தன்னம்பிக்கை

ரோஜா தோட்டங்களில் பூத்தாலும்

மல்லிகைப்பூ மணம் மாறாது

நீ எங்கே பணி புரிந்தாலும்

உன் சுயம் கெடாது.

நன்றி:wtrfm.com

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்

நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்

.....................

.....................

.....................

.....................

சிறந்த வெற்றியாளர்களை உருவாக்குவது அவர்களை நசுக்கிய

அசுரத்தமான தோல்விகள்

-பா.விஜய்-

இன்னுமொரு கவியரசனாக சத்தமில்லாமல் உருவாகிக்கொண்டிருக்கின்றான் இந்த இளைய கவிஞன்.

Edited by காவாலி

நம்பிக்கை ஒன்று போதுமே

எதிர்காலம் ஒன்றைப் பார்க்கச் செய்யலாம்

நம்பிக்கை இருக்கும் போதிலே

எதிர்நீச்சல் போட்டு வாழ்வை வெல்லலாம்

என்னமுடியும் எதைச் செய்ய முடியும்

என்ற எண்ணமெல்லாம் அவநம்பிக்கை

எல்லாம் முடியும் எதுவும் என்னால் முடியும்

என்ற கொள்கைகள் தான் தன்னம்பிக்கை

அற்புதமான வரிகள்....

கவியை இணைத்த நூணாவிலனுக்கு நன்றிகள்...!

Edited by ஈழமகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.