Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு பட விழா அழைப்பு – ஷாக் ஆன ரஜினி – கொந்தளித்த கமல்

Featured Replies

கொழும்பு பட விழா அழைப்பு – ஷாக் ஆன ரஜினி – கொந்தளித்த கமல்

புதன்கிழமை, ஏப்ரல் 21, 2010, 18:02[iST]

ஒரு அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும் உலகநாயகனும்.

இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக நெருக்கமான அமிதாப் பச்சன். அப்படியென்ன அழைப்பு அது?

இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான்.

கொழும்பில் அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது [^] விழாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா [^] என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்புவிருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும் திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் என்றும் கூறப்பட்டதாம்.

விஷயம் ரஜினியின் காதுக்குப் போனதும் கடுப்பாகிவிட்ட அவர், இதுகுறித்து பதில் சொல்லக்கூட விரும்பவில்லை என்று கூறி, அழைப்பிதழைத் தூக்கித் தூரப் போட்டுவிட்டாராம்.

கமல்ஹாஸனோ அழைப்பிதழைக் கண்டு கொள்ளவே இல்லையாம். இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள் என்றும் கோபத்தைக் கொட்டினாராம்.

விஜய் உள்ளிட்ட சில நடிகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதாவது மொத்த முன்னணித் தமிழ்த் திரையுலக நடிகர்களும் இந்த அழைப்பை புறக்கணித்து விட்டனர்.

ஆனால் இலங்கை [^]யும் தமிழ் சினிமாவும் எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக்குழுவினர், இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.

இன்னொரு முக்கியமான விஷயம் -

இந்த விழாவின் தலைவரான அமிதாப் பச்சனின் மகனும் மருமகளும் ஜோடியாக இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ராவணன் படத்தின் சிறப்புக் காட்சியை இந்த விழாவில் திரையிடப் போகிறார்க்களாம்.

இதற்காக மணிரத்னத்தை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைத்துள்ளனர். ஆனால் இலங்கைக்குப் போனால், இங்கு தன் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ள தமிழ் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டி வருமே என்ன செய்வது என இரண்டும்கெட்டான் மனதுடன் தவிக்கிறாராம் மணி ரத்னம்.

ராவணன் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளதே என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்துள்ளார் மணி.

சரி... இலங்கை போவீங்களா மாட்டீங்களா..? உங்க ஸ்டைல்ல, ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்க மணி சார்...!

http://thatstamil.oneindia.in/movies/news/2010/04/iifa-colombo-rajinikanth-kamahassan.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அழைப்பை இவைக்கு கொடுத்தற்குப் பதில்.. கலைஞர் கருணாநிதியிடம் கொடுத்திருந்தால்.. "நல்லெண்ணை" விஜயமாக ஒரு போத்தல் நல்லெண்ணை சகிதம் கனிமொழியை அனுப்பி வைச்சிருப்பார். ராஜபக்சவுக்கும் கூடிக் குத்தாட்டம் போட நல்ல இருந்திருக்கும்..! கெடுத்திட்டாய்யா.. இந்த வடக்கு ஹிந்திக்காரன். :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதை வைத்து பொந்தியா இலங்கையை மிரட்ட கூடிய வாய்ப்புகளே அதிகமே ஒழிய அரசியல் தீர்வு திட்டத்திற்கானது அல்ல.... சான்ஸ் இது போல கிடைக்கும் போது கேப்பிள் ஆட்டோ ஓட்டுவதில் இந்தியத்தின் கைத்தடிகள் கில்லாடிகள்...அதே போல இந்த புறக்கணிப்பு நிகழ்வை சாக்காக வைத்து இன்னுமோர் அரசியல் கட்சி தலைவர் தமிழர்களே தமிழர்களே என்று .... கிளம்புவார்கள்... இந்த தமிங்கிலுசு திரை துறையில் இருந்து ...அதனால் இவர்களுடைய அஜால் குஜால் வேலைகளுக்கெலாம் ஈழத்தவர் மயங்கிவிடக்கூடாது... ஈழத்தவர் அளவிற்கு தமிழநாட்டவர் போராட வில்லை எனினும்... முன்னாள் ஓட்டல் சப்ளயர் சென்னை பிரச்சாரத்திற்கு வரும் போது செருப்பு ஒரு மனிதனின் கை எறி அளவு எவ்வளவு தூரம் வரைக்கும் வரும் என ...அளந்து அளந்து தள்ளி தள்ளி மேடை அமைத்தார்களாம்... மானமுள்ள ஈழதோழர்கள் யாராவது கழற்றி இந்திய கைத்தடிகள் மீது வீசினால் நன்று... அவருக்கு பொன் பொருள் ... இன்னும் பல இலவசமாக அறிவித்திட ஈழ தோழர்கள் முன்னறிவிப்பு செய்யவேண்டும்....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு பட விழா அழைப்பு – ஷாக் ஆன ரஜினி – கொந்தளித்த கமல்

புதன்கிழமை, ஏப்ரல் 21, 2010, 18:02[iST]

ஒரு அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும் உலகநாயகனும்.

விஷயம் ரஜினியின் காதுக்குப் போனதும் கடுப்பாகிவிட்ட அவர், இதுகுறித்து பதில் சொல்லக்கூட விரும்பவில்லை என்று கூறி, அழைப்பிதழைத் தூக்கித் தூரப் போட்டுவிட்டாராம்.

கமல்ஹாஸனோ அழைப்பிதழைக் கண்டு கொள்ளவே இல்லையாம். இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள் என்றும் கோபத்தைக் கொட்டினாராம்.

விஜய் உள்ளிட்ட சில நடிகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதாவது மொத்த முன்னணித் தமிழ்த் திரையுலக நடிகர்களும் இந்த அழைப்பை புறக்கணித்து விட்டனர்.

ஆனால் இலங்கை [^]யும் தமிழ் சினிமாவும் எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக்குழுவினர், இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.

http://thatstamil.oneindia.in/movies/news/2010/04/iifa-colombo-rajinikanth-kamahassan.html

அப்ப இனி படம் பார்க்கலாம் தானே...இனி "நோ மோ புறக்கணிப்பு"..

துப்பரவிற்கு அ,ஆ தெரியாத பயலுபிள்ளகளாக இருக்கிறாங்க.அமிதாப் பச்சன் ஏன் இவர்களை அழைக்கின்றார்.கேட்க முதல் ஓடிப்போகும் கோஸ்டிகள் இவர்கள்.சும்மா அற்ப சந்தோசத்திற்கு யாரோ கிளப்பிவிட்டுடாங்கள் போல.

க்ருணாநிதியோடு கட்டிப் பிடிப்பதைவிட கொழும்பு போவது பரவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இலங்கை [^]யும் தமிழ் சினிமாவும் எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக்குழுவினர், இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.

அதை விட ஈழத்தமிழர்கள் இழிச்சவாய்கள் என்று நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள். தமிழினப் படுகொலைக்கு துணைபோன சோனியா காந்தியின் இந்தியா அரசுக்கு ஆதரவளித்துவரும் 2 மணித்தியாலம் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த கலைஞரின் சன், கலைஞர் தொலைக்காட்சியை புலம் பெயர்ந்து வாழ் மானம்கேட்ட சூடு சுறணையற்ற ஈழத்தமிழர்களில் சிலர் காசு கொடுத்து ஆதரவு அளித்து வருகிறார்கள். வன்னி தமிழினப் படுகொலையை வேணுமென்றே மறைத்து சிங்களத்தின் பொய்ச் செய்திகளை வழங்கிய இத்தொலைக்காட்சிகளைப் புறக்கணிக்காத இத்தமிழர்கள் மகிந்தாவுடன் யார் சென்றாலும் கவலைப்படாமல் சூடு சுறணையற்று அவர்களுக்கு இத்தமிழர்கள் ஆதரவு கொடுப்பார்கள்.

அதை விட ஈழத்தமிழர்கள் இழிச்சவாய்கள் என்று நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள். தமிழினப் படுகொலைக்கு துணைபோன சோனியா காந்தியின் இந்தியா அரசுக்கு ஆதரவளித்துவரும் 2 மணித்தியாலம் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த கலைஞரின் சன், கலைஞர் தொலைக்காட்சியை புலம் பெயர்ந்து வாழ் மானம்கேட்ட சூடு சுறணையற்ற ஈழத்தமிழர்களில் சிலர் காசு கொடுத்து ஆதரவு அளித்து வருகிறார்கள். வன்னி தமிழினப் படுகொலையை வேணுமென்றே மறைத்து சிங்களத்தின் பொய்ச் செய்திகளை வழங்கிய இத்தொலைக்காட்சிகளைப் புறக்கணிக்காத இத்தமிழர்கள் மகிந்தாவுடன் யார் சென்றாலும் கவலைப்படாமல் சூடு சுறணையற்று அவர்களுக்கு இத்தமிழர்கள் ஆதரவு கொடுப்பார்கள்.

அப்பு இனியும் நாங்கள் ரோசம் ,சூடு சுரணை என்று கொண்டு இருக்காமல்,மகிந்தாவுக்கு எதிராக செயல் படும் சிங்களவரை சுப்பேத்தி விட வேண்டும்.மகிந்தா சிறிலன்காவை இந்தியாவுக்கு வித்துப்போட்டான் என்று பிரச்சாரம் செய்ய வேணும் . :lol:

அமிதாப் பச்சனை தமிழின படுகொலையாளிகளின் எடுபிடியாக உழைப்பதுக்கு தூண்டியது எதுவாக இருக்கும்?

அப்பு இனியும் நாங்கள் ரோசம் ,சூடு சுரணை என்று கொண்டு இருக்காமல்,மகிந்தாவுக்கு எதிராக செயல் படும் சிங்களவரை சுப்பேத்தி விட வேண்டும்.மகிந்தா சிறிலன்காவை இந்தியாவுக்கு வித்துப்போட்டான் என்று பிரச்சாரம் செய்ய வேணும் . :lol:

உங்கள் நோக்கமும் இந்திய தமிழின படுகொலையாளர்களின் நோக்கமும் ஒன்றாக இருப்பதாக எடுக்கலாமா ஜில்?

உங்கள் நோக்கமும் இந்திய தமிழின படுகொலையாளர்களின் நோக்கமும் ஒன்றாக இருப்பதாக எடுக்கலாமா ஜில்?

விரும்பினமாதிரி எடுக்கலாம்,தமிழன் என்றகாரணத்திற்காக நான் தமிழனை கொலை செய்யவில்லை என்று மட்டும் சொல்வேன்.

விரும்பினமாதிரி எடுக்கலாம்,தமிழன் என்றகாரணத்திற்காக நான் தமிழனை கொலை செய்யவில்லை என்று மட்டும் சொல்வேன்.

அப்ப எதற்காக தமிழனை கொலை செய்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எதற்காக தமிழனை கொலை செய்தீர்கள்?

பாகிஸ்தான் சீனாவிற்கு எதிராக எல்லாம் போராட முடியாது மத்திய அமைச்சரை விட்டு சென்னை குப்பம் அருகே ஒரு கூட்டத்தை கூட்டி இனியும் பொறுக்க முடியாது என்று ஒரு அறிக்கையைதான் விடகூடியதாக இருக்கின்றது.

எமக்கு சரிசமமான எதிரியாக புலிகள்தான் அதுதான் தமிழர்...

ஆசை யாரைவிட்டது தெற்காசிய ரவுடியாகலாம் என்ற ஆசைதான்!

அமிதாப்பும் அமைதியானார் : கோவிந்தாவாகும் கொழும்பு விழா

[ Tuesday, 27 April 2010, 12:50.12 PM GMT +05:30 ]

ஜுன் மாதம் கொழும்பில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவுக்கு குள்ளமணி, வையாபுரி கூட போக மாட்டார்கள் போலிருக்கிறது.

அப்படி ஒரு எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள் இங்குள்ள தமிழ் இன உணர்வாளர்கள். வைகோ, திருமா, சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த திரைப்பட விழாவுக்கு தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.

ரஜினி, கமல் மட்டுமல்ல, விஜய், அஜீத், பிரகாஷ்ராஜ் ஆகியோர் இந்த அழைப்பிதழை கையால் கூட வாங்க முன்வரவில்லையாம். கொத்து கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று கொழும்புக்கு எந்த கலைஞர்களும் செல்லக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்த அரசியல் தலைவர்களுக்கு பெரும் வெற்றி. அதே நேரத்தில் மும்பையில் இருக்கும் அமிதாப் என்ன செய்வார்?

ராஜபக்சேவிடம் இந்த விழா குறித்து நேரில் விவாதித்துவிட்டு வந்திருக்கும் அவர், கடைசி நேரத்தில் கழன்று கொள்ள இயலுமா? ஆனால் அதற்கெல்லாம் யோசனை வைக்காமல் தனது தொண்டர்களை மும்பைக்கே அனுப்பி முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் சீமான். இவரது நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த தொண்டர்கள் அமிதாப் வீட்டின் முன் கூடி கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். போகாதே... போகாதே இலங்கைக்கு போகாதே என்பதுதான் அங்கே எழுப்பப்பட்ட முக்கிய கோஷம். அவர்களை உள்ளே அழைத்த அமிதாப் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தாகவும் தகவல்.

போகிற போக்கை பார்த்தால் இலங்கையில் விழா நடக்குமா என்பதே கேள்விக்குறியாக கிடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு இந்தி கோஸ்டிகள் வந்தால் "சிறப்பு பாதணி எறி பூசை" செய்ய யாராவது முன்வருவார்களா?

ஜூன் 3 ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் மக்கிந்த தொடக்கி வைக்க மூன்று நாள் நடக்க இருப்பதாக ஒரு அரச அதிகாரி கூறினார். இந்தியா செய்த இனப்படுகொலைகளுக்கு நன்றியாக சிங்கள அரசு 50 கோடி ரூபாவை இந்த நிகழ்வுக்கு ஒதுக்கியுள்ளதாக கூறினார். சிங்கள அரசால் தமிழ் மக்கள் வீடு வாசல்களை இழந்து நிற்க, 50 கோடியில் 1000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்திருக்கலாம்.

தமிழரின் எதிர்ப்பை புறக்கணித்து, இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் எப்பிடியாவது நடத்திவிட வேண்டும் என்று சிங்கள - இந்திய இனப்படுகொலை அரசுகள் மும்மரமாக உள்ளனவாம். கொலைஞர் கருணாநிதியையும் அழைக்கும் திட்டம் உண்டாம்.

பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொன்ற இனப்படுகொலை நாட்டில் நடாத்தப்பட இருக்கும் இவ்விழாவை புறக்கணிக்கும்படி ஏனைய தென்னிந்திய (கன்னட, ஆந்திர, மராட்டி, மலையாள), வங்க மொழி கலைஞர்களையும் கோரவேண்டும்.

ஜூன் 3 ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் மக்கிந்த தொடக்கி வைக்க மூன்று நாள் நடக்க இருப்பதாக ஒரு அரச அதிகாரி கூறினார்.

இந்தியா செய்த இனப்படுகொலைகளுக்கு நன்றியாக சிங்கள அரசு 50 கோடி ரூபாவை இந்த நிகழ்வுக்கு ஒதுக்கியுள்ளதாக கூறினார். சிங்கள அரசால் தமிழ் மக்கள் வீடு வாசல்களை இழந்து நிற்க, 50 கோடியில் 1000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்திருக்கலாம்.

தமிழரின் எதிர்ப்பை புறக்கணித்து, இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் எப்பிடியாவது நடத்திவிட வேண்டும் என்று சிங்கள - இந்திய இனப்படுகொலை அரசுகள் மும்மரமாக உள்ளனவாம். கொலைஞர் கருணாநிதியையும் அழைக்கும் திட்டம் உண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.