Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெற்றவர்கள் பட்ட் கடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தொடர் மாடிக்கட்டத்தின் நான்காம் மாடியில் அமைந்து இருந்தது அவர்களது குடியிருப்பு. தாய் மாலதி .தந்தை வாகீசன் மகன்கள் சுபன் .சுதாகரன் ஆகிய நால்வரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் நாட்டுப்பிரச்சினை காரணமாக் தந்தை வாகீசன் தான் குடிபெயர்ந்து இருந்தார். மனைவி மாலதி அவனது தூரத்து உறவு தான் . அப்போது சவூதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் . திருமணமாகி இரு குழந்தைகள் பிறக்கும் வரை ஒழுங்காக் தான் இருந்தான். ஒரு தடவை விடுப்பில் வந்தவன் நாட்டு பிரச்சினை காரணமாக மீண்டும் போக முடியாது போனது. மதுவகை பாவிக்க் தொடங்கினான். மாலதி இருந்த நகை நட்டு எல்லாம் விற்று சகோதரர்களிடமும் கடன் வாங்கி ஒரு பாடசாலை வாகனம் எடுத்து கொடுத்தாள் பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றி வரும் பணியில் இருந்தான். கையில் காசு புரளவே மீண்டும் குடிக்க தொடங்கினான் முன்பு நட்புகளோடு சேர்ந்து குடித்தவன் இப்பொது தானே வீடில் வைத்து குடிக்க தொடங்கினான். ஒரு நாள் போதையில் வாகனத்தை ஓட்டிசெல்கையில் ..திடீரென வாகனம் பற்றி எரிந்தது . அதிக வெப்பமாகி விட்டது முறையாக கவனிக்கப்படவில்லை.

மாலதி குடும்பத்தை கொண்டு செல்ல மிகவும் கஷ்ட பட்டாள். தன் பிரச்சினைகள் எதுவுமே தன் சகோதரர்களிடம் சொல்வதில்லி. ஒரு நாள் வெளி நாடில் இருக்குமஇளைய சகோதரனுக்கு செய்தி எட்டவே நீண்ட கடிதம் ஒன்று எழுதினார். கொழும்புக்கு வந்து நிற்கும் படியும் அவரை தங்களிடம் கூப்பிடுவதாகவும் ஆறுதல் சொன்னார் சகோதரன் மனைவியின் பிராத்தனையோ தெரியாது வசீகரன் கனடா நாடுக்கு வந்து சேர்ந்தார். ஒருவாறு மிகுந்த சிரமமப்ட்டு ...காலக்கிரமத்தில் மனைவி பிள்ளைகளை குடும்ப இணைவில் அழைத்துக்கொண்டார். அவர்களும் வந்து பாடசாலயில் சேர்ந்து ....நனறாக் கல்வி கற்றார்கள் . மாலதி வசீகரன் வாழ்வில் கடன்கள் தீர்ந்து வசந்தம் வீசியது.

ஒரு நாள் பால்ய நண்பன் ஒருவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார் . அவரது சிநேகம் தொடரவே மீண்டும் குடிவகை தொடங்கினார் . இத்துடன் புகைத்தலும் சேர்ந்து கொண்டது மீண்டும் மாலதி வாழ்வு சீர்குலைந்த்து . குடித்துவிட்டு பணியிடம் ( வேலைக்கு )செல்ல தொடங்கினார் . பொய் புளுகு ...அவரை ஆட்கொண்டது மனைவிக்கு உண்மை சொல்ல மாட்டார். மனைவியை அடித்து துன்புறுத்த தொடங்கினார். இதனால் பணியிடத்தில் வேலையில் இருந்து விலக்கப்பட்டார் . மாலதியின் சகோதரன் வேலைபார்க்கும் பணிஇடத்தில் தான் இவரது வேலை . மாலதியின் சகோதரனுக்கும் இதனால் மிகவும் மதிப்பின்மை ஏற்பட்டது. வேலையுமில்லை .ஒரு நாள் மதுபோதையில் வாகனம் செலுத்தி .அகப்ப்டார் .. சாரதி அனுமதி தடை செய்யப்பட்டது எச்ச்ரிக்கையுடன் மீண்டும் கொடுத்தார்கள். ஒரு தடவை வாகனத்தில் திறந்த மதுப்போத்தல் இருக்க பிடிபட்டார் .. இதனால் ஆறு வருடங்கள் வாகன சாரதி பத்திரம் ரத்து செய்யப் பட்டது.

கடுங்குளிரில் மாலதி மிகவும் போக்கு வரத்துக்கு கஷ்ட பட்டாள். இதற்கிடையில் அவர்களது மூத்த புதல்வன் வாகன சாரதி .ஓட்டுனர் பத்திரம் .பெற்றுக்கொண்டான். தந்தையின் அனுமதி ரத்து செய்ய பட்ட் நிலையில் ..அவன் வாகனம் செலுத்தத் பெருந்தொகை காப்புறுதிப்பணம் மாதம் கட்ட் வேண்டியுள்ளது . தந்தைக்கு அனுமதியிருப்பின் அவரது உதவி ஓட்டுனர் என குறைந்த காப்புறுதியில் வாகனம் செலுத்தத் அனுமதி கிடைக்கும். புதல்வனுக்கு பயிற்சிக் காலம் அதிகமாகும். அனுமதிப் பத்திரம் காலம் செல்லச்செல்ல பெறுமதி கூடும் சிறந்த ஒரு அடையாளமாக் ( identification ) வெளி நாட்டில் கணிப்பர் . மகன் சுபன் வாகனம் ஓட்டுவதானால் காப்புறுதிப்ப் பணமாக பெருந்தொகை கட்ட் வேண்டியிருக்கும் .மகனுக்கு தடையாக் இருப்பது தந்தையின் பொறுப்பற்ற செயல். புதல்வன் இப்பொது வாகனம் செலுத்தி பயிற்சி பெற்றுக் கொண்டால் இன்னும் இரு வருடங்களில்

பெருந் தெருக்களுக்கான அனுமதி கிடைக்கும். மகனின் எதிர்காலம் தந்தையின் செயலில்..

இப்படிப்பட்ட தந்தை மீது எப்படி அன்பு வரும் ..............

வாழுகின்ற மக்களுக்கு,வாழ்ந்தவர்கள் பாடமடி

பெற்றவர்கள் பட்ட் கடன், பிள்ளைகளை சேருமடி

சேர்த்து வைச்ச புண்ணியந்தான், சந்ததியை காக்குமடி..

என்னை இப்பதிவு எழுத தூண்டியது உண்மைச்சம்பவம்.

.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் இவ்வகையான போக்கை நினைத்தால் மனம் கலங்கி பின் எரிச்சல்தான் மிஞ்சுகிறது. :lol:

பதிவுக்கு நன்றி அக்கா..!

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பிலாத தந்தைகளால் தான் குடும்பத்தில் சிக்கல்.சிலர் (மனைவிமார்) தற்கொலை கூட செய்துள்ளார்கள்.

மேற்படி தந்தை குடிக்கு அடிமையாகி இருக்கலாம். அதற்கான மருத்துவ சிகிச்சையை பெறுவதன் மூலம் அவர் தமது வாழ்வை வளமாக்கலாம்.எல்லாம் அவரில் தான் தங்கியுள்ளது.

நன்றி நிலாமதி இணைப்புக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை அழகு. வாழ்த்துகள்.

குடி குடியை கெடுக்கும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பில்லாத குடிகாரர்களால் என்பதுதான் சரி! இங்கு பிள்ளைகளின் குடியாலும், மற்றும் பெண்களின் குடியாலும் சிதிலமான குடும்பங்கள் கூட நிறைய உண்டு! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குடி குடியை கெடுக்கும் என்பது உண்மை ஆனால் எல்லாம் மனக்கட்டுப்பாட்டில் தான் இருக்கு.ஆரும் குடியை விடவேணும் எண்டு மனசார நினைச்சால் அதை விட முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் வாழ்க்கை முறை புரியவில்லை ஆனாலும் ..நல்ல தொரு பதிவு சகோதரி...

நிலா அக்கா உங்கள் பதிவுக்கு நன்றி....................

இன்றய கலியுக உலகத்தில் குடியை மனிதர்கள் குடிக்கவில்லை.............மனிதர்களை தான் குடி குடிக்கிறது!!!!

அதனால் தான் குடும்ப வறுமை வன்முறை எல்லாம் அதிகமாகி கொண்டு போவது மட்டுமல்லாமல் ஒன்றும் அறியா

குழந்தைகளும் துன்பப்படுகிறார்கள்............

  • கருத்துக்கள உறவுகள்

அளவுடன் குடித்தால் விசமும் மருந்தாகும்

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும்

நன்றி நிலாமதி அக்கா

வாத்தியார்

*********

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கதைக்கு கருத்துப் பகிர்ந்த ..இசைகலைஞன் ....நுனாவிலார் ...கறுப்பி ...சுவி....வாதவூரான் ...

.புரட்சி....தமிழ் மாறன் ...வாத்தியார் ..மற்றும் வாசகர்களுக்கும் என் . நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

உற்சாக பாணத்தை உற்சாகமாக இருக்கத்தான் பாவிக்க வேண்டும் .....குடியை கெடுக்க வல்ல....இணப்புக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.