Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்றுவரும் வசந்தம் என் வாழ்வில் மீண்டும்...

Featured Replies

post-6046-001911900 1288284175_thumb.jpg

என் இனிய தேசமே என்று உன்னை காண்பேனோ

தெரியவில்லை எனக்கு உன்னைப் பிரிவதென்றால்

உயிர்விட்டுப் போவதுபோல் வலியொன்று உணர்கின்றேன்

என் செய்வேன் நான் ஏனிந்த நிலையெனக்கு

என் வீட்டு முற்றத்தில் தினந்தோறும் எழுந்து வந்து

ஆனந்தமாய் அனுபவிக்கும் இளங்காலை இனிமை

மஞ்சள் இளவெயிலின் தகதகக்கும் மோகனத்தில்

உணர்வழிந்து உறைந்துவிடும் மாலை மயக்கங்கள்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

அழகான காலையிலே அவசரமாய் உணவு தேடி

பரபரப்பாய் பறந்து வந்து பாட்டிசைக்கும் புள்ளினங்கள்

பச்சை இலைகளிலே பதுங்கி ஒழிந்திருந்து

கதிரவன் வெளிப்படவே ஒளிவீசும் பனித்துளிகள்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

கொத்து கொத்தாய் காய்காய்க்கும் முற்றத்து மாமரங்கள்

பழுத்து மணம் வீசும் பக்கத்து பலா மரங்கள்

மனதுக்கு மகிழ்வு தரும் தோட்டத்து பூஞ்செடிகள்

வேலியோரமானாலும் நட்டுவைத்த பனைமரங்கள்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

காற்றுக்கு கதை சொல்லும் உயர்ந்த தென்னை மரம்

உச்சி வெயில் என்றாலும் குளிர்ச்சி தரும் வேப்ப மரம்

ஒல்லிக்குச்சி கிளையின் மீதே ஊஞ்சலாட புளிய மரம்

எக் காலம் என்றாலும் வற்றாத வாழை மரம்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

மாளிகை இல்லைதான் ஆனாலும் மனசுக்குள்

ஆர்ப்பரிக்க வைக்கின்ற அன்பால் நிறைந்த வீடு

நிலத்தில் பாய் விரித்து நீண்டதொரு கதை சொல்லி

நிம்மதியாய் உறங்குகின்ற நிஜமான வாழ்க்கை

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

அடுத்த வீட்டில் போய் ஆசையாய் கதைத்து வர

மூடிவைத்த வேலியிலே விரித்து வைத்த சிறுபொட்டு

அள்ள அள்ள ஊற்றெடுக்கும் அகலமான கிணற்றுக்குள்ளே

பளிங்கு போல் ஜொலித்திடும் சுவையான தண்ணீர்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

கச்சிதமாய் வரப்பு வெட்டி மொத்தமாய் விரித்துவிட்ட

பச்சை வண்ண கம்பளங்கள் பச்சைபசும் வயல் வெளிகள்

செடி நட்டு நீரூற்றி வெருளி கட்டி காவல் வைத்து

பக்குவமாய் பராமரித்த காய்கறி தோட்டங்கள்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

பாதையோரம் படர்ந்து பல வகை பூ பூத்து

விழி விரிய வைக்கும் அழகான பூங்கொடிகள்

ஆளில்லா வளவுக்குள் அதிசயமாய் வளர்ந்து

எச்சில் ஊற வைக்கும் இனிய கனி மரங்கள்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

வரப்பு மேல் வழுக்காமல் வரிசையாய் வந்தமர்ந்து

வெட்டிக்கதை பல பேசி பறக்கவிட்ட பட்டங்கள்

நூலறுந்து போனதென்று வயலுக்குள் விழுந்தோடி

வாங்கிக்கட்டிக்கொண்டு திரும்பி வந்த பொழுதுகள்

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

விளையாட்டாய் நினைத்து வித்தைகள் பல காட்டி

சுறுசுறுப்பாய் பாய்ந்து வரும் சுட்டி நாய்க்குட்டி

காலைச்சுற்றி வந்து தலை தூக்கி முகம் பார்த்து

கொஞ்சி விளையாடும் கொள்ளை கொள்ளும் பூனைக்குட்டி

என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

வளமான வாழ்க்கையை தொலைத்து விட்டோம் நாங்கள்

பரதேசி போலவே அலைகின்றோம் தேசமெல்லாம்

என் இனிய தேசமே என்று உன்னை காண்பேனோ

தெரியவில்லை எனக்கு ஆனாலும் ஒருநாள் நிச்சயமாய் வருவேன்

அன்று தான் என் வாழ்வில் மீண்டும் வரும் வசந்தம்.

மிகவும் பிடித்த வரிகள்:

"மாளிகை இல்லைதான் ஆனாலும் மனசுக்குள்

ஆர்ப்பரிக்க வைக்கின்ற அன்பால் நிறைந்த வீடு"

"அடுத்த வீட்டில் போய் ஆசையாய் கதைத்து வர

மூடிவைத்த வேலியிலே விரித்து வைத்த சிறுபொட்டு"

இவை புலம் பெயர் நாடுகளில் இல்லாதவை!

தொடர்ந்து எழுதுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை அழகாய் இருக்கிறது வாழ்வில் வசந்தம் வர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

இவை புலம் பெயர் நாடுகளில் இல்லாதவை!

எங்கள் மண்ணுக்கே உரிய தனித்துவங்கள் அவை..

உங்கள் கவிதை அழகாய் இருக்கிறது வாழ்வில் வசந்தம் வர வாழ்த்துக்கள்.

நன்றி அக்கா..

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை தோழர் தமிழ்பிரியன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துகள்

  • தொடங்கியவர்

நல்ல கவிதை தோழர் தமிழ்பிரியன் :lol:

நன்றி தமிழ்தேசியன்..

உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துகள்

நன்றி ரதி..

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையால் நம்மை ஈழத்திற்கு அழைத்துச் சென்ற தமிழ்பிரியனுக்கு வாழ்த்துகள்

வாத்தியார்

*********

ஏக்கத்தைத் தேக்கு

தாக்கத்தின் ஊக்கத்தில் தன்னாலே வழி திறக்கும் தமிழ்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் பனித்தன

நன்றி ஐயா

நிச்சயம் வழி பிறக்கும்

வேலிக்குள் பொட்டு வைத்து

சுகம் வினாவிடும் காலம் வரும்

அதுவரை.....

  • தொடங்கியவர்

கவிதையால் நம்மை ஈழத்திற்கு அழைத்துச் சென்ற தமிழ்பிரியனுக்கு வாழ்த்துகள்

நன்றி ஐயா..

ஏக்கத்தைத் தேக்கு, தாக்கத்தின் ஊக்கத்தில் தன்னாலே வழி திறக்கும் தமிழ்பிரியன்

அது வாஸ்தவம்தான்..

வினாவிடும் காலம் வரும், அதுவரை.....

காத்திருக்கத்தான் வேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.