Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல போராளி என்பது அக்கா.. கொண்ட கொள்கையோடு இருப்பவன்... என்பதாகும். இருக்க முடியல்லையோ.. போராளி என்ற அடைமொழியை தூக்கிப் போட்டிட்டு.. உதவி கேளுங்கோ. முன்னாள் போராளி இன்னால் கூலி என்று தலைப்பு போட்டு போராளிகளை கொச்சைப்படுத்தாதேங்கோ..!

போராளி என்ற அந்த பதத்துக்கு உயிர்பிக்க உயிர் கொடுத்த 30,000 மாவீரர்களை நினைச்சுப் பாருங்கோ..! இவருக்காவது பிள்ளை குட்டி மனிசி என்று ஒரு சாதாரண மனித வாழ்க்கை ஓட்டம் இருக்குது. அது கூட இல்லாமல் இலட்சியத்திற்காக இட்ட கட்டளை ஏற்று உயிர் திறந்த போராளிகள் தான் என்றும் போராளிகள்..!

முன்னாள் போராளிகளாக இருந்து காட்டிக் கொடுத்தவர்கள்.. காட்டிக்கொடுத்தவர்கள் தான். அவர்களை போராளிகள் என்று மீண்டும் வரையறுப்பது கொஞ்சம் கடினமானது. அதற்காக அவர்களை தண்டிக்கனும் என்றில்லை. போராளி என்ற அடைமொழி அவர்களுக்கு தேவையில்லை என்பதுதான் உண்மை. :lol:

ஓம் உங்கள் விளக்கத்தை இனி போராளிகள் என்பவர்கள் பின்பற்றும்படி மொழிகிறேன்.

ஆனாலும் விசைப்பலகை வீரம் றெம்பவே வெளிவருகிறது.

தன்னினத்துக்காக போராளியான எவனும் என்றும் போராளியென்ற அடைமொழிக்கு உரித்துடையவன். அதை உங்கள் வார்த்தைகளால் கட்டிப்போடவோ மாற்றவோ முடியாது. 30ஆயிரம் மட்டுமில்லை போராடினது கடைசியில கட்டாயமாக பிடிபட்டுச் செத்ததுகள் காணாமல் போனதுகள் கண்காணாமல் வாழ்ந்த அதுகளும் போராளிகள் மாவீரர்கள் தான்.

மற்றும் உங்கள் கற்பனைக்கேற்ப கருத்து எழுதுவதுபோல இவனது கதையை நான் எழுதவில்லை. அவன் துயரை அவன் உரைத்தபடி எழுதியுள்ளேன். மிகைப்பு நகைப்பு துவைப்பு எதுவும் செய்யாமல் விடயத்தை எழுதியுள்ளேன். எனது விருப்பங்களை திணிப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்வது உங்கள் பணியானால் அது உங்கள் கற்பனை.

நீட்டி விளாசி ஒரு இனத்திற்காக போராடி அழிந்த சிறைப்பட்டுள்ள ஒருவனின் வலிகளை புரிந்து கொள்ளாத உங்கள் மனிதாபிமானம் அவன் மீதான கூலி காட்டிக்கொடுப்பென்ற பட்டங்கள் யாவும் அருமையாக உள்ளது.

உங்களுக்கு இப்படி வீரம்பேசவே முடியும். எங்களால் அவர்களுக்காக ஒரு நேரக்கஞ்சியைக் கொடுக்கவே பிச்சை கேட்க முடியும்.

நன்றி வணக்கம்.

  • Replies 123
  • Views 7.7k
  • Created
  • Last Reply

திரும்பவும் ... சாத்திரி/சாந்தி .... உங்கள் நேசக்கரத்தின் செயற்பாடுகளில் அதிருப்ப்தி தெரிவித்தோ, அல்லது குற்றம் பிடிக்க வேண்டும் என்றோ இத்திரியில் இத்தனை வசனங்களும்!!!! உங்கள் செயற்பாடுகள் பாராட்டுதல்களுக்குரியவை, அவைகளை கொச்சைப்படுத்த வரவில்லை!!! ஆனால் இத்திரியில் நீங்கள் வைத்த கோரிக்கை/வேண்டுதல் இதுவரை உங்கள் வேண்டுதல்களுக்கு முற்றிலும் வித்த்யாசமானது!! சட்டம் சம்பந்தமானது!! இலங்கையின் சிங்கள சட்டத்தை தெரிந்தவர்கள் இவ்வழக்கு சம்பந்தமாக என்ன கூறுவார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்!!!

இப்போராளி தியாகங்கள் புரிந்தவனாக இருக்கலாம்!! ஆனால் அத்தியாகங்கள் புரிந்தவை இந்த 25லட்சம் காப்பாற்ற மாட்டாது என்பதுதான், ... வாதம்!!! மாறாக இந்த 25லட்சத்தை 25 பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வில சில மாற்றங்களையாவது ஏற்படுத்தலாம்!!!

மீண்டும் கூறுவது ... சிங்களவன் பார்வையில் ... புலம்பெயர் எம்மவர்கள் அவனுக்கு பொன் முட்டையிடும் வாத்துக்கள்!!! .... உணர்ச்சிகளுக்கு அப்பால விவேக செயற்பாடும் தேவை!!!!!

2008..

விநாயமூர்த்தி முரளீதரன்.. புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். வன்னி மக்களின் இழப்புக்களை இட்டு அதனை செய்ய முடியாது இருக்க முடியாது.

டக்கிளஸ் தேவானந்தா.. புலிகள் அழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இலங்கைத் தீவில் அமைதி நிலைக்கும்.

2009..

விநாயகமூர்த்தி முரளீதரன்.. வன்னிக்கு போய் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டுகிறார். மாவீரர்களின் அடையாளங்கள் இன ஐக்கியத்திற்கு பெரும் இடையூறு.

டக்கிளஸ் தேவானந்தா.. அரசு உடனடியாக வடக்கில் தேர்தலைகளை நடத்த வேண்டும்.

2010..

விநாயகமூர்த்தி முரளீதரன்.. வன்னி மக்களின் மீட்பர்.

டக்கிளஸ் தேவானந்தா.. வடக்கின் வசந்தத்தின் அதிபதி.

வன்னி மக்களின் மீட்பர்கள் வந்துவிட்டார்கள்.. எனி யாரும் அவர்களுக்கு உதவி செய்யத் தேவையில்லை..! இதனை இத்தாழ் அறிவிக்கின்றோம்.

நாடு கடந்த அரசு.. புலம்பெயர் மக்களின் போராட்டத்தை முடக்கியதே செய்த சாதனை..!

சிறீலங்கா அரசு.. நவம்பர் 2010.. ஒபாமாவின் இந்திய வருகைக்கு முதல் நாள்.. அமெரிக்க அரசு நாடு கடந்த அரசின் செயற்பாடுகளை தடுக்காமல் விட்டது சிறீலங்காவிற்கு விசனமளிக்கிறது.

இவற்றில் இருந்து நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.. யாழ் கள கொள்கை வகுப்பாளர்களின் கொள்கை வகுப்புக்களை..!

வன்னியின் வறிய மக்களை பலியிட்டு தமிழீழம் பெற்றுவிடத்துடித்த மையவாதக் கருத்தியலுக்கு எந்தவித அடிப்படைக் கொள்கைகளும் கிடையாது. அதற்கான தகுதியும் கிடையாது. இன்று வன்னியின் வாழ்வைப் பறித்த மையவாத குறுந்தேசியமே நா கா அரசுவாகவோ அவைகள் செயற் புடுங்கிகளாக உருவெடுத்துள்ளது. இவற்றுக்கு வறிய மக்கள் இனியும் பலியாக முடியாது. இன்றய காலத்தில் இரண்டாவது பெரும்பான்மையாக உருவாகிக்கொண்டிருக்கும் இஸ்லாமியத்தமிழர்கள் மலையகத் தமிழ் மக்கள் மற்றும் உழைக்கும் மக்கள் ஒருங்கிணைந்த ஒரு புதிய அரசியல் மார்க்கமே தேவை தவிர பழய மையவாத அரசியல் சிந்தனை முறையில்லை. இனிவரும் அரசியலும் தலமைகளும் யாழ் மையவாதக் கருவில் இருந்து உருவாகவும் முடியாது அதற்கு மக்கள் என்னுமொரு முறை பலியாகவும் முடியாது. வன்னியை கருவறுத்ததில் கருணா டக்ளசை விட அப்பனான துரோகிகளும் துரோகச் சிந்தனை முறையும் நிறையவே இருக்கின்றது.

தன்னினத்துக்காக போராளியான எவனும் என்றும் போராளியென்ற அடைமொழிக்கு உரித்துடையவன். அதை உங்கள் வார்த்தைகளால் கட்டிப்போடவோ மாற்றவோ முடியாது. 30ஆயிரம் மட்டுமில்லை போராடினது கடைசியில கட்டாயமாக பிடிபட்டுச் செத்ததுகள் காணாமல் போனதுகள் கண்காணாமல் வாழ்ந்த அதுகளும் போராளிகள் மாவீரர்கள் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கடகம்.. நாலு கதிரை.. மூன்று கோழிக்குஞ்சு.. ஒரு மாடு.. ஒரு தையல் இயந்திரம்.. இதை வைச்சு மக்கள் முன்னேற முடியும் என்று 1960ம் ஆண்டுகள் கால நிலையை தான் நீங்கள் சிலர் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறதில திருப்திப்படுறீங்க போல.

இந்த நிலையில்.. வெறும் சில பத்தாயிரங்களையும் கோழிக்குஞ்சுகளையும் தையல் இயந்திரங்களையும் வைத்து எப்படி பிழைப்பை ஓட்டுவது.

அதோ ஆகாயத்தை அறுத்து அலரிமாளிகையை அடித்து நொருக்கிக் கொண்டு விண்கலங்கள் வந்து கொண்டிருக்கின்றன....கோழிக்குஞ்சுகளையும் தையல் மெசின்களையும் ஆட்லறிகளால் அடித்து நொருக்குங்கள் அன்பான மக்களே நாங்கள் உங்களுக்கு வெளிச்சம் தாறமெண்டு மிஞ்சிய உங்கள் கோவணத்தையும் உருவீட்டு உலகில் சனநாயகம் பேசிச்சாகடிக்கிறதைவிட்டால் வேறு வேலையெமக்கு இல்லை. :lol::):D:blink::huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் உங்கள் விளக்கத்தை இனி போராளிகள் என்பவர்கள் பின்பற்றும்படி மொழிகிறேன்.

ஆனாலும் விசைப்பலகை வீரம் றெம்பவே வெளிவருகிறது.

தன்னினத்துக்காக போராளியான எவனும் என்றும் போராளியென்ற அடைமொழிக்கு உரித்துடையவன். அதை உங்கள் வார்த்தைகளால் கட்டிப்போடவோ மாற்றவோ முடியாது. 30ஆயிரம் மட்டுமில்லை போராடினது கடைசியில கட்டாயமாக பிடிபட்டுச் செத்ததுகள் காணாமல் போனதுகள் கண்காணாமல் வாழ்ந்த அதுகளும் போராளிகள் மாவீரர்கள் தான்.

மற்றும் உங்கள் கற்பனைக்கேற்ப கருத்து எழுதுவதுபோல இவனது கதையை நான் எழுதவில்லை. அவன் துயரை அவன் உரைத்தபடி எழுதியுள்ளேன். மிகைப்பு நகைப்பு துவைப்பு எதுவும் செய்யாமல் விடயத்தை எழுதியுள்ளேன். எனது விருப்பங்களை திணிப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்வது உங்கள் பணியானால் அது உங்கள் கற்பனை.

நீட்டி விளாசி ஒரு இனத்திற்காக போராடி அழிந்த சிறைப்பட்டுள்ள ஒருவனின் வலிகளை புரிந்து கொள்ளாத உங்கள் மனிதாபிமானம் அவன் மீதான கூலி காட்டிக்கொடுப்பென்ற பட்டங்கள் யாவும் அருமையாக உள்ளது.

உங்களுக்கு இப்படி வீரம்பேசவே முடியும். எங்களால் அவர்களுக்காக ஒரு நேரக்கஞ்சியைக் கொடுக்கவே பிச்சை கேட்க முடியும்.

நன்றி வணக்கம்.

புலம்பெயர் தேசங்களில் இருந்து கொண்டு தலைவருக்கு போரை ஆரம்பியுங்கோ என்று கடிதம் எழுதினவையை முதலில கூட்டிக் கொண்டு வாங்கோ.

ஏன்.. முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் வீரம் கொப்பளிக்க நீங்கள் எழுதிய கவிதைகள்.. பாடிய கவிதைகளை கொஞ்சம் வாசிச்சுப் பாருங்கோக்கா.

உசுப்பேத்தி அனுப்பினது நீங்க.. போரை எதிர்கொள்ள வைச்சது நீங்க.. கடைசியில.. பிடிச்சுக் கொண்டு போனது.. பறிச்சுக் கொண்டு போனது.. காசு கொடுத்து காணி கொடுத்து கூட்டிக் கொண்டு போனது.. ஏன் பிரபாகரன் தான் வாழவோ.. அந்தாளே மாவீரனாகி.. மண்ணோடு மண்ணாகி போய் விட்டதாக சொல்லி இரங்கலும் பாடிப்போட்டு.. இப்ப வசை பாடல்கள் வேற.

உவை கொஞ்சைப் பேர் முன்னாள் போராளிகள் என்ற பதத்தை வைச்சு தங்கட குடும்ப வாழ்க்கையை ஓட்ட நினைக்கிறது என்ற பார்வையிலும் நாங்க உதுகளை உங்களுக்கு திருப்பி மாத்திப் போட்டு வசை பாடலாம். ஆனால் உண்மை அதுவல்லாமல் கூட இருக்கலாம்.

போராளி என்ற பதத்தை போர் களத்துக்கு வெளியில்.. போராட்ட களத்துக்கு வெளியில் தூக்கிப் பிடிக்க வேண்டியதில்லை. சிங்கள அரசு பயங்கரவாதிகள் என்ற பதத்தை எப்படி பயன்படுத்துகிறதோ அதேபோல் தான் நீங்கள் போராளிகள் என்ற பதத்தை இன்று பயன்படுத்துகிறீர்கள்.

அந்தப் பதத்திற்கான உண்மையான அடையாளம் கூட இல்லாதவர்கள் எல்லாம் இன்று போராளிகளாக காட்டப்படும் நிலையும் மிகுந்து கிடக்கும் சூழலில்.. செவ்விகள்.. கதைகள்.. உண்மையில் போராளிகளை தான் பிரதிநிதிப்படுத்துகின்றனவா என்ற கேள்வி தங்களின் மேற்படி பதிலை அடுத்து எழுகிறது அக்கா..??!

ஏன் இந்தப் பச்சோந்தித்தனம் உங்களுக்குள்ள..???! ஏன் இந்த குழப்பம்...???! 2003/4/5/6/7/8 களில் எழுதிய சாந்தியா இது என்று கேட்கத் தோன்றுகிறது...???! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியின் வறிய மக்களை பலியிட்டு தமிழீழம் பெற்றுவிடத்துடித்த மையவாதக் கருத்தியலுக்கு எந்தவித அடிப்படைக் கொள்கைகளும் கிடையாது. அதற்கான தகுதியும் கிடையாது. இன்று வன்னியின் வாழ்வைப் பறித்த மையவாத குறுந்தேசியமே நா கா அரசுவாகவோ அவைகள் செயற் புடுங்கிகளாக உருவெடுத்துள்ளது. இவற்றுக்கு வறிய மக்கள் இனியும் பலியாக முடியாது. இன்றய காலத்தில் இரண்டாவது பெரும்பான்மையாக உருவாகிக்கொண்டிருக்கும் இஸ்லாமியத்தமிழர்கள் மலையகத் தமிழ் மக்கள் மற்றும் உழைக்கும் மக்கள் ஒருங்கிணைந்த ஒரு புதிய அரசியல் மார்க்கமே தேவை தவிர பழய மையவாத அரசியல் சிந்தனை முறையில்லை. இனிவரும் அரசியலும் தலமைகளும் யாழ் மையவாதக் கருவில் இருந்து உருவாகவும் முடியாது அதற்கு மக்கள் என்னுமொரு முறை பலியாகவும் முடியாது. வன்னியை கருவறுத்ததில் கருணா டக்ளசை விட அப்பனான துரோகிகளும் துரோகச் சிந்தனை முறையும் நிறையவே இருக்கின்றது.

வன்னியின் குடித்தொகையில் வறிய மக்கள் என்போர் 50,000 க்கும் குறைவு. 2009ல் வன்னியின் குடித்தொகை 3,00,000. அதிலும் யாழ்ப்பாணம்.. மற்றும் கிழக்கில் இருந்து புலம்பெயர்ந்த மக்களே அதிகம். வன்னி மக்கள் அடிப்படையில் கல்வி அறிவில் பிந்தங்கி இருந்தாலும் விவசாயப் பொருண்மியத்தில் உறுதியாக வாழ்ந்தவர்கள்.

மாவீரர் பட்டியலின் படி.. வன்னிக் களத்தில் வீரமரணம் அடைந்தவர்களில் அதிகமானோர் யாழ்ப்பாணம்.. மட்டக்களப்பு திருமலையை சேர்ந்தவர்கள். வன்னியை சேர்ந்தவர்கள் ஒப்பிட்டளவில் குறைவு.

உங்கள் கருத்தின் அடிப்படை வாதம் தான் எங்கிருந்து கருக்கொள்கிறது என்று புரியவில்லை. ஒருவேளை மகிந்த சிந்தனையின் அடிப்படையில் டக்கிளஸ் தேவானந்தாவின் சூளை மேட்டு கொள்கைகளை உள்வாங்கி எழுந்திருக்குமோ..??! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதோ ஆகாயத்தை அறுத்து அலரிமாளிகையை அடித்து நொருக்கிக் கொண்டு விண்கலங்கள் வந்து கொண்டிருக்கின்றன....கோழிக்குஞ்சுகளையும் தையல் மெசின்களையும் ஆட்லறிகளால் அடித்து நொருக்குங்கள் அன்பான மக்களே நாங்கள் உங்களுக்கு வெளிச்சம் தாறமெண்டு மிஞ்சிய உங்கள் கோவணத்தையும் உருவீட்டு உலகில் சனநாயகம் பேசிச்சாகடிக்கிறதைவிட்டால் வேறு வேலையெமக்கு இல்லை. :D:blink::huh: :huh: :o

இதோ எங்கள் சூரியன் வருகிறார்... அவர் தமிழீழம் அமைப்பார்.. எங்கள் பிள்ளைகள் ஜேர்மனியில் பூங்காவில்.. குதூகலிக்குங்கள்.. வன்னியில் பிள்ளைகள் பயிற்சி எடுத்து சண்டைக்குப் போங்கள்.. இப்படியும் வீரம் வளர்த்தது தாங்கள் தானே அக்கோய். அதுகளையும் கொஞ்சம் மீட்டுப்பார்த்திட்டு கவுண்டு கிடந்து கொண்டு.. வெளவால் போல.. வாயால கக்குங்கோ அக்கா. :lol:

எங்களுக்கு கடைக்கும் போகவும் கார் வேணும்.. வன்னி மக்களுக்கு கோழிக்குஞ்சும் ஜமுனா பாறியும் போதும். அப்பதான் கொலிடே போகேக்க வேண்டிக் கொண்டு போற லிடில் சாமான்களுக்கு கிராக்கி இருக்கும்..! :):o

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பதத்திற்கான உண்மையான அடையாளம் கூட இல்லாதவர்கள் எல்லாம் இன்று போராளிகளாக காட்டப்படும் நிலையும் மிகுந்து கிடக்கும் சூழலில்.. செவ்விகள்.. கதைகள்.. உண்மையில் போராளிகளை தான் பிரதிநிதிப்படுத்துகின்றனவா என்ற கேள்வி தங்களின் மேற்படி பதிலை அடுத்து எழுகிறது அக்கா..??!

ஏன் இந்தப் பச்சோந்தித்தனம் உங்களுக்குள்ள..???! ஏன் இந்த குழப்பம்...???! 2003/4/5/6/7/8 களில் எழுதிய சாந்தியா இது என்று கேட்கத் தோன்றுகிறது...???! :lol:

உண்மையான போராளி பொய்யான போராளியென்று எந்தப் பேதத்தையும் தலைவர் பிரபாகரன் பிரிச்சுக்காட்டீ ஒருவரையும் வளர்க்கவில்லை. தனது இலட்சியத்தை நிறைவேற்ற துரோகிக வாழ்ந்து செத்துப்போன ஆயிரமாயிரம் ஆத்மாக்களும் பிரபாகரன் என்ற மனிதனால் வளர்த்து அனுப்பப்பட்டவர்கள் தான். ஆக போராளிகள் என்றும் போராளிகள் தான்.

இது பச்சோந்தித்தனமென்று நீங்கள் புரிந்தால் அதில் எந்தவித மாற்றுமில்லை. இங்கு குழப்பமில்லை என்னிடம் தெளிவாகவே இருக்கிறேன் இயங்குகிறேன். 2003 - 2008வரை எழுதிய அதே சாந்தியென்ற மனிசிதான் நான். அன்று நாங்கள் கனவுகள் கண்டோம் அப்போது அவர்கள் தமிழர் என்ற இனத்துக்காக அவர்களின் விடிவுக்காக கனவுகண்டார்கள். அவர்களது வெற்றிகளையும் வீரங்களையுமே காட்டினார்கள். இன்று (2009இன்பின்) தங்கள் வேதனைகளை இயலாமைகளை நெஞ்சில் ஆணியேற்றுவது போல் இடைவிடாமல் தெரிவிக்கிறார்கள்.

இப்போ கனவு கலைந்து நிசத்தைக் காண்பதால் இனிமேல் போராளிகள் போரால் பாதிக்கப்பட்டோர் பாழாய்ப்போவதை இப்படித்தான் சொல்லமுடியும். சொல்லிக் கொண்டிருப்பேன். இன்னும் கனவுகாட்டி அவர்களை புதைகுழிக்கு அனுப்புவதை அனுமதிக்கமாட்டேன். நானும் தமிழ் இனத்தில் பிறந்த உரிமைகளுடன்....

இத்தோடு நெடுக்கு பார்த்த படம் நிறைவுபெறுகிறது. இன்று உங்களுடன் கருத்தாடியதில் செய்ய வேண்டிய வேலைகள் யாவும் கிடப்பில் கிடக்கிறது. ஆக திரும்பத்திரும்ப யதார்த்தம் புரியாது கனவு காணும் காட்டும் உங்களுக்கு கருத்தெழுதுவதை நிறுத்துகிறேன். ஆனால் நான் எழுத நினைப்பதை என்னால் சொல்லப்பட வேண்டியதை இப்போதைய சாந்தியாக சொல்லிக் கொண்டேயிருப்பேன்.

அப்ப இனி நன்றி வணக்கம் சொல்லுவம். :)

அதோ ஆகாயத்தை அறுத்து அலரிமாளிகையை அடித்து நொருக்கிக் கொண்டு விண்கலங்கள் வந்து கொண்டிருக்கின்றன....கோழிக்குஞ்சுகளையும் தையல் மெசின்களையும் ஆட்லறிகளால் அடித்து நொருக்குங்கள் அன்பான மக்களே நாங்கள் உங்களுக்கு வெளிச்சம் தாறமெண்டு மிஞ்சிய உங்கள் கோவணத்தையும் உருவீட்டு உலகில் சனநாயகம் பேசிச்சாகடிக்கிறதைவிட்டால் வேறு வேலையெமக்கு இல்லை. :D:blink::huh: :huh: :o
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான போராளி பொய்யான போராளியென்று எந்தப் பேதத்தையும் தலைவர் பிரபாகரன் பிரிச்சுக்காட்டீ ஒருவரையும் வளர்க்கவில்லை. தனது இலட்சியத்தை நிறைவேற்ற துரோகிக வாழ்ந்து செத்துப்போன ஆயிரமாயிரம் ஆத்மாக்களும் பிரபாகரன் என்ற மனிதனால் வளர்த்து அனுப்பப்பட்டவர்கள் தான். ஆக போராளிகள் என்றும் போராளிகள் தான்.

இது பச்சோந்தித்தனமென்று நீங்கள் புரிந்தால் அதில் எந்தவித மாற்றுமில்லை. இங்கு குழப்பமில்லை என்னிடம் தெளிவாகவே இருக்கிறேன் இயங்குகிறேன். 2003 - 2008வரை எழுதிய அதே சாந்தியென்ற மனிசிதான் நான். அன்று நாங்கள் கனவுகள் கண்டோம் அப்போது அவர்கள் தமிழர் என்ற இனத்துக்காக அவர்களின் விடிவுக்காக கனவுகண்டார்கள். அவர்களது வெற்றிகளையும் வீரங்களையுமே காட்டினார்கள். இன்று (2009இன்பின்) தங்கள் வேதனைகளை இயலாமைகளை நெஞ்சில் ஆணியேற்றுவது போல் இடைவிடாமல் தெரிவிக்கிறார்கள்.

இப்போ கனவு கலைந்து நிசத்தைக் காண்பதால் இனிமேல் போராளிகள் போரால் பாதிக்கப்பட்டோர் பாழாய்ப்போவதை இப்படித்தான் சொல்லமுடியும். சொல்லிக் கொண்டிருப்பேன். இன்னும் கனவுகாட்டி அவர்களை புதைகுழிக்கு அனுப்புவதை அனுமதிக்கமாட்டேன். நானும் தமிழ் இனத்தில் பிறந்த உரிமைகளுடன்....

இத்தோடு நெடுக்கு பார்த்த படம் நிறைவுபெறுகிறது. இன்று உங்களுடன் கருத்தாடியதில் செய்ய வேண்டிய வேலைகள் யாவும் கிடப்பில் கிடக்கிறது. ஆக திரும்பத்திரும்ப யதார்த்தம் புரியாது கனவு காணும் காட்டும் உங்களுக்கு கருத்தெழுதுவதை நிறுத்துகிறேன். ஆனால் நான் எழுத நினைப்பதை என்னால் சொல்லப்பட வேண்டியதை இப்போதைய சாந்தியாக சொல்லிக் கொண்டேயிருப்பேன்.

அப்ப இனி நன்றி வணக்கம் சொல்லுவம். :lol:

அக்கோய் தோல்விக்கு முன்னர் ஒன்றும் தோல்விக்கு பின்னர் இன்னொன்றும் என்றிருந்தால்.. எத்தனையோ போராட்டங்களை கைவிட்டுவிட்டு தலைவர் எப்பவோ சரணடைந்து தன் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு போயிருக்கலாம். நீங்களும் ஜேர்மனியில் வாழ முடியாமல் போயிருக்கலாம். வன்னியில் மாடு மேய்த்துக் கொண்டும் இருந்திருக்கலாம்.

ஆனால் விடுதலை என்பது உங்கள் போன்றோரின் பசிக்கு போடும் உணவு போன்றதல்ல. இழப்புக்கள் நீண்ட போராட்டங்கள் இன்றி விடுதலை என்பது சாத்தியமில்லை. அதற்காக எனியும் ஆயுதத்தால் அழிவுகளை தேடிக்கொள்ள வேண்டும் என்பது அல்ல அர்த்தம். ஆனால்.. தோல்விகளுக்காக விடுதலை என்ற மாவீரர்களின் மக்களின் இலட்சியக்கனவுகளை ஒரு நொடியில் புதைத்து விடும் துரோகத்தை செய்யவும்.. அதை வைச்சு எங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளவும் நாம் அனுமதிக்கமாட்டோம்.

நிச்சயம்.. மாவீரர்களின் கனவு வெல்லும் வரை அவர்களின் பெயரை போராட்ட இலட்சியத்தை பாதையை பயணிப்பை காட்டி மற்றவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை என்ற இழி நிலை ஓட்டத்தை ஓட்ட அனுமதிக்க முடியாது. அவர் முன்னாள் போராளியாக இருக்கலாம் விடலாம். இன்னாளில் அவர் போராளி அல்ல. இலட்சியத்தை கைவிட்டவர் போராளியாக இருக்க முடியாது. அதை எதிரியிடம் சொல்லி பொதுமன்னிப்பு பெற்றுக் கொண்டு வாழட்டும். அது பிரச்சனை அல்ல. ஆனால் உண்மைப் போராளிகளின் மாவீரர்களின் இலட்சியத்தை குறை பேசவும் அதை வைச்சு சொந்த வாழ்க்கையை பாதுகாக்கவும் எவருக்கும் அருகதை கிடையாது. அதற்கு நாங்களும் கருத்தியல் ரீதியில் கூட அனுமதிக்க மாட்டோம். :)

Edited by nedukkalapoovan

வன்னியின் குடித்தொகையில் வறிய மக்கள் என்போர் 50,000 க்கும் குறைவு. 2009ல் வன்னியின் குடித்தொகை 3,00,000. அதிலும் யாழ்ப்பாணம்.. மற்றும் கிழக்கில் இருந்து புலம்பெயர்ந்த மக்களே அதிகம். வன்னி மக்கள் அடிப்படையில் கல்வி அறிவில் பிந்தங்கி இருந்தாலும் விவசாயப் பொருண்மியத்தில் உறுதியாக வாழ்ந்தவர்கள்.

மாவீரர் பட்டியலின் படி.. வன்னிக் களத்தில் வீரமரணம் அடைந்தவர்களில் அதிகமானோர் யாழ்ப்பாணம்.. மட்டக்களப்பு திருமலையை சேர்ந்தவர்கள். வன்னியை சேர்ந்தவர்கள் ஒப்பிட்டளவில் குறைவு.

உங்கள் கருத்தின் அடிப்படை வாதம் தான் எங்கிருந்து கருக்கொள்கிறது என்று புரியவில்லை. ஒருவேளை மகிந்த சிந்தனையின் அடிப்படையில் டக்கிளஸ் தேவானந்தாவின் சூளை மேட்டு கொள்கைகளை உள்வாங்கி எழுந்திருக்குமோ..??!

இடம்பெயர்ந்தவர்கள் எல்லாம் திரும்ப சிங்கள இராணுவத்தையே அனுசரித்து வாழலாம் என்று திரும்பிபோன மனநிலை வன்னியில் சனம் சாக தேரிழுத்து திருவிழாக்கொண்டாடிய மனநிலை வன்னிச் சனம் இராணுவத்திடம் சரணடையாமல் சாவதே மானம் என்று வெளிநாட்டிலும் இராணுவக்கட்டுப்பாட்டிலும் இருந்து சிந்தித்த மனநிலை எதிர்த்தவன் கேள்வி கேட்டவன் எல்லாரையும் போட்டுத் தள்ளலாம் என்ற மனநிலை தமிழரை மதவாரிய பிரித்த மனநிலை வன்னி மக்களை நிர்ப்பந்தித்து இறுதியில் ஆயிரக்கணக்கில் சுட்டுத்தள்ளுமளவுக்கு வந்த மனநிலை தமழீழம் என்றால் நல்லூரடி என்கிற பன்னாடை மனநிலை இவைகளை எங்கிருந்து வருகின்றதோ அதற்கு எதிர்ப்புறம் இருந்து தான் இந்த மனநிலை வருகின்றது. மேலும் மையவாதச் சிந்தனை முறையை விட மகிந்த சிந்தனை ஒன்றும் மோசமானதில்லை.

ஏதோ டக்ளஸ் மட்டும் தான் பிழைவிட்டான் என்ற நினைப்பு. டக்ளஸ் ஒரு தமிழன் வாழ்வைப் பறிக்கக் காரணம் என்றால் ஓராயிரம் தமிழனின் வாழ்வழித்தவர்களும் இருக்கின்றார்கள். டக்களஸ் முதலில் கையை தூக்கிக்கொண்டு சிங்களவனிடம் போனான் கருணா பிறகு போனான் கடசியில் எல்லாரும் தான் கையை தூக்கிச்சினம். எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகளாக இருப்பதற்கு காரணம் என்னவென்பது வெளிப்படையானது. சிங்களவனை அல்லது எவனையும் விட மோசமான மனநிலை எமக்கிருக்கின்றது அங்கிருந்துதான் உங்கள் மனநிலையும் சரி எனதும் சரி வருகின்றது. இந்த மனநிலையை வைத்து ஒரு பத்திரிகை வானொலிச்சேவையை கூட இனத்துக்காக ஒன்றுபட்டு நடத்த முடியாது. அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும் நாலுபேர் ஒன்றுபட்டு இரண்டு பாதிக்கப்பட்ட சனத்துக்கு கூட உதவமுடியாது. இந்தக் கேவலத்தில நாடுகடந்த அரசு ஒரு கேடு? இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் கருணா அம்மான் டக்ளஸ் அம்மான் கே பி போன்றவர்கள் மீது அவதுறு பேச என்ன யோக்கியததை இருக்கின்றது? நீங்கள் இங்கிருந்து சிறையில் இருக்கும் மக்களை விடுவிப்பதற்கும் புனர்வாழ்வுக்கும் முன்னுரிமை கொடுத்தீர்கள்? பிறகென்ன யோக்கியதை?

ஏதோ டக்ளஸ் மட்டும் தான் பிழைவிட்டான் என்ற நினைப்பு. டக்ளஸ் ஒரு தமிழன் வாழ்வைப் பறிக்கக் காரணம் என்றால் ஓராயிரம் தமிழனின் வாழ்வழித்தவர்களும் இருக்கின்றார்கள். டக்களஸ் முதலில் கையை தூக்கிக்கொண்டு சிங்களவனிடம் போனான் கருணா பிறகு போனான் கடசியில் எல்லாரும் தான் கையை தூக்கிச்சினம். எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகளாக இருப்பதற்கு காரணம் என்னவென்பது வெளிப்படையானது. சிங்களவனை அல்லது எவனையும் விட மோசமான மனநிலை எமக்கிருக்கின்றது அங்கிருந்துதான் உங்கள் மனநிலையும் சரி எனதும் சரி வருகின்றது. இந்த மனநிலையை வைத்து ஒரு பத்திரிகை வானொலிச்சேவையை கூட இனத்துக்காக ஒன்றுபட்டு நடத்த முடியாது. அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும் நாலுபேர் ஒன்றுபட்டு இரண்டு பாதிக்கப்பட்ட சனத்துக்கு கூட உதவமுடியாது. இந்தக் கேவலத்தில நாடுகடந்த அரசு ஒரு கேடு? இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் கருணா அம்மான் டக்ளஸ் அம்மான் கே பி போன்றவர்கள் மீது அவதுறு பேச என்ன யோக்கியததை இருக்கின்றது? நீங்கள் இங்கிருந்து சிறையில் இருக்கும் மக்களை விடுவிப்பதற்கும் புனர்வாழ்வுக்கும் முன்னுரிமை கொடுத்தீர்கள்? பிறகென்ன யோக்கியதை?

அய்யய்யோ ... புல்லரிக்குது அண்ணை, உங்கடை வசனங்கள்!!! .... சரி நீங்கள் எல்லோரும் சேர்த்து புலியலை அழித்துப் போட்டியள் .... இன்று என்ன?? அம்மக்களுக்கு சரியான வாழ்வு கொடுத்தனீங்களோ??? இல்லை அம்மக்களையாவது இன்று வாழ வைத்து இருக்கிறீங்களோ????? ... நீங்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க திரியும் சாக்கடைகள்!!! புலி அழைப்பிற்கே ஒட்டியிருக்கிறம் எண்டனீங்கள், இப்ப புலி முடிந்துது ஒட்டை கழட்டுறீங்கள் இல்லை!!! உங்கை இன்னொரு அவிட்டு விட்டான்களில் ஒரு சிங்களத்துடன் ஒட்டியிருந்து தற்போது, சிங்களம் ஒன்றுமே தரப்போவதில்லை என்று கழண்டு வந்த ஒரு இஸ்லாமியர் எழுதுகிறார், அதையாவது பார்த்து உங்கள் பெருந்தலைகளை கழரச்சொல்லுங்கள்!! கழருவதென்ன நீங்களே கழர விட மாட்டீங்கள்!! ... இப்ப சாந்தி/சாத்திரிக்கு வக்காலத்து வாங்குவது என்ற பெயரில் உங்கள் வசனங்களை அள்ளி எறியாதீர்கள் ... உந்த டக்கிலசு/சித்தார்த்தன்/வரதராசு/கருணா கொள்கைக்குன்றங்களைப்பற்றி ... பற்றி வேறொரு திரியில் வேறொரு திரியில் ... இங்கு வேண்டாம்!!!

Edited by Nellaiyan

சிங்களவனை அல்லது எவனையும் விட மோசமான மனநிலை எமக்கிருக்கின்றது அங்கிருந்துதான் உங்கள் மனநிலையும் சரி எனதும் சரி வருகின்றது. இந்த மனநிலையை வைத்து ஒரு பத்திரிகை வானொலிச்சேவையை கூட இனத்துக்காக ஒன்றுபட்டு நடத்த முடியாது. அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும்

அடடாஆஆஆஆ...... அப்பு உந்த மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் எல்லாம் கட்டிப்பிடித்து ஒன்றாக படுக்குமளவிற்கு ஒற்றுமையானவர்கள்!! ... விட்டால் அதுக்குள்ளையும் ... ஒற்றுமை என எழுதுவீர்கள்!! .... உந்த சாக்கடைகள் எல்லாம் சேர்ந்து தானே எம்மினத்தின் விடிவிற்கு எல்லாம் செய்கிறார்கள்???????? சும்மா வசனங்களை அள்ளி எறிகிறதென்றால் ... விளங்காமல் இருக்க ... பன்னாடைக்கூட்டங்கள் என்று நினைத்து விடாதீர்கள்!!!

. இந்தக் கேவலத்தில நாடுகடந்த அரசு ஒரு கேடு? ..... நீங்கள் இங்கிருந்து சிறையில் இருக்கும் மக்களை விடுவிப்பதற்கும் புனர்வாழ்வுக்கும் முன்னுரிமை கொடுத்தீர்கள்? பிறகென்ன யோக்கியதை?

மாற்றுக்கருத்து மாணிக்கம், ..... அங்கு ஒட்டி இருக்கும் ... டக்கிலசு/சித்தார்த்தன்/வரதராசு/ .... போன்றவர்களிடம் முதலில் இக்கேள்வியை கேளுங்கள்!!!!! அந்த பரதேசிகளினால் ஒட்டியிருந்து செய்ய முடியாததை நாம் இங்கிருந்து செய்ய சிங்களவன் விட்டுடுவன்???????????? அங்கு செய்கிரதென்ன ... ஏதாவது உந்த பரதேசிகளினால் கதைக்க கூட முடிகிறதோ?????????????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ டக்ளஸ் மட்டும் தான் பிழைவிட்டான் என்ற நினைப்பு. டக்ளஸ் ஒரு தமிழன் வாழ்வைப் பறிக்கக் காரணம் என்றால் ஓராயிரம் தமிழனின் வாழ்வழித்தவர்களும் இருக்கின்றார்கள். டக்களஸ் முதலில் கையை தூக்கிக்கொண்டு சிங்களவனிடம் போனான் கருணா பிறகு போனான் கடசியில் எல்லாரும் தான் கையை தூக்கிச்சினம்.

நன்றி நன்றி நன்றி

பிரபாகரனும் இதைத்தான் செய்திருக்கணும் என்று சொன்னதிற்கு...............

இடையில் காட்டிக்கொடுத்து எல்லாவற்றையும் கெடுத்தவனையும்

கடைசிவரை தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடி தலைமையின் வேண்டுகோளில் சரணடைந்தவனையும் ஒன்றாக கணித்ததற்கு......................

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இறுதியாகவும் உறுதியாகவும் ஒரு விடயத்தின முன்வைக்க விரும்புகின்றேன் இது எமது புலமையை கட்டுகின்ற இடமாகவோ எமது வாதத் திறமைகைளை காட்டுகின்ற இடமாகவோ அல்லமு எமது முக குறிகளை போட்டு எமது நகைப்பினை காட்டுகின்ற இடமாகவோ நான் கருதவில்லை யாழ்களத்தில் நீண்ட காலத்தின் பின்னர் நான் நீண்ட நேரம் கருத்து எழுதிய பகுதி இதுவாகத்தனிருக்கும்..அதற்கு காரணம் யாரோ ஒரு முகம் தெரியாத ஒரு உறவின் கதறல் அவனி;ன் ஆதங்கம்.அதனை கேட்டதிலிருந்து அவனிற்கு ஏதாவது உதவவேண்டும் என்கிற ஒரு மன உழைச்சல் அதுதான் எனனை இத்தனை துரம் எழுதத்துண்டியது. அவனது கரலை வேண்டுமானாலும்; இங்கு கொண்டு வருகின்றேன்..ஆனால் இங்கு அனைவரிடமும் கேட்பது நான் உங்களிற்க விரோதியானால் என்னிடம் ஏதாவது தனிப்பட்ட கேபங்கள் இருக்குமானால் உங்கள் எச்சிலை என்மீது காறி உமிழுங்கள் அது எனக்கானதாக ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் அந்த உறவிற்காக ஏதாவது செய்யுங்கள். அதுதான் எனது இறுதி வேண்டுகோள்..அதையும் தவிர்த்து எனக்கு இரண்டு அடி அடித்தால்தான் உங்கள் கோபம் ஆத்திரம்.தீரந்து உங்கள் ஆண்மை வெளிப்படுமானால் அதற்கும் நான் தயார் உங்கள் விலாசத்தை கூறுங்கள் வந்து அடிவாங்கிவிட்டு போகிறேன்நேரடியாக அழைப்பவர்களிற்கு எனது தொ.பே இலக்கம்.0033611149470 நன்றி வணக்கம்.

அண்ணா குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் உங்கள் தொலைபேசிக்கு அடித்தால் எடுப்பீங்களோ இல்லா விட்டால் Answering machine க்குப் போகுமோ?

மாற்றுக்கருத்து மாணிக்கம், ..... அங்கு ஒட்டி இருக்கும் ... டக்கிலசு/சித்தார்த்தன்/வரதராசு/ .... போன்றவர்களிடம் முதலில் இக்கேள்வியை கேளுங்கள்!!!!! அந்த பரதேசிகளினால் ஒட்டியிருந்து செய்ய முடியாததை நாம் இங்கிருந்து செய்ய சிங்களவன் விட்டுடுவன்???????????? அங்கு செய்கிரதென்ன ... ஏதாவது உந்த பரதேசிகளினால் கதைக்க கூட முடிகிறதோ?????????????

முதலில் மேன்மைதங்கிய அமைச்சர்களை பரதேசிகள் என்று அழைப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பரதேசிகள் என்பது புலம்பெயர்ந்த எமக்கே பொருத்தமானது என்பதை அனைவரும் அறிவார். அந்தவகையில் நா க அரசு அவைகள் செயற்குழுக்களே பரதேசிகள் அமைப்புக்கள் என்பதை சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. மேலும் அமைச்சர்கள் இன்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்துகொண்டிருக்கின்றார்கள். அது பற்றிய எந்தவித சிந்தனையும் இன்றி ஆகாயக் கோட்டைபோல் நா க அரசு அவை குழுக்கள் எல்லாம் மக்கள் எக்கேடு கெட்டால் என்ன மக்களுடனான தொடர்பு அவசியம் இல்லை என்றெண்ணி நிலமும் மக்களும் இல்லாமல் அரசு அமைத்து அடயாளப்போட்டி நடத்துவதற்கு விசிலடிப்பது முக்கியமா இல்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுபவர்களை ஆதரிப்பது முக்கியமா?

சும்மா கொள்கை கோட்பாடு இப்படி எல்லாததையும் பற்றி போசாதீர்கள். உதெல்லாம் எமக்கு சரிவராது. ஐக்கிய இலங்கைக்குள் சிங்களவர்கள் இஸ்லாமியர்கள் அனைவருடனும் சேர்ந்து இலங்கையர்களாக வாழ்வது ஒன்றுதான் தாயகத்தில் வாழும் மக்களுக்கு ஏதுவானது. பிரிவினைவாதம் தனிநாடு தனி அரசு என்று மக்களை காடாத்தியது போதும் திரும்ப கெள்கை கோமணம் என்று இங்கிருந்து உசுப்பேத்தி அங்கிருப்பவனை காவுகொடுக்கமுடியாது. அதற்கு அவர்களும் தயாராக இல்லை. கொள்கையும் கோட்பாடும் ஒற்றுமை உள்ள இனங்களுக்கே அதன் வளர்ச்சிக்கு உதவும் எம்மைப்போன்ற கிலிசைகெட்ட இனத்துக்கு அழிவாகவே முடியும் என்பதை அனுபவத்தில் கண்டிருக்கின்றோம். உங்கட இனக்கொள்கைகளை முதலில் சாதி மதம் பிரதேசவாதம் அனைத்தையும் களைந்து இனமாக ஐக்கியப்பட்டு அதிலிருந்து உருவாக்குங்கள். கொள்கை கோட்பாட்டை உருவாக்கும் தகுதியை முதலில் உருவாக்குங்கள் அதன்பிறகு அதைப்பற்றி பேசலாம்.

நன்றி நன்றி நன்றி

பிரபாகரனும் இதைத்தான் செய்திருக்கணும் என்று சொன்னதிற்கு...............

இடையில் காட்டிக்கொடுத்து எல்லாவற்றையும் கெடுத்தவனையும்

கடைசிவரை தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடி தலைமையின் வேண்டுகோளில் சரணடைந்தவனையும் ஒன்றாக கணித்ததற்கு......................

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. இந்த இனத்துக்குள் தியாகத்தையும் துரோகத்தையும் பிரித்து இனம்காணமுடியாது. நேற்று கருணா தலமையில் சிங்கள இராணுவத்திற்கெதிரான போரில் சண்டைபிடித்து தமது உயிரை அர்பணித்த போராளிகள் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றார்கள் ஆனால் கருணா இன்று துரோகி அதைப்போல் கடசியில் கைய தூக்கிய வழிநடத்துனர்கள் பலரும் இருக்கின்றார்கள். நான் பலமுறை முன்பு குறிப்பிட்டது தான் புலப்பெயர்வுகூட ஒரு துரோகம்தான். இந்த இனத்தில் துரோகம் இயல்பானது. துரோகம் அற்தமற்றது. டக்ளஸ் கருணாவுக்கு போராட்ட அமைப்புகள் சம்மந்தப்பட்டு பின் அரசுடன் இணைந்ததால் அதை துரோகம் என்கின்றோம். ஆனால் அரச உத்தியோகங்களை அனுசரித்து அரசுடன் ஒட்டியவர்களே இந்த சமூகத்தை வழிநடத்திய பெரும்பான்மை புத்திஜீவிகள். தியாகி துரோகி என்பதைக் கடந்து மதவாதம் பிரதேசவாதம் என்பதைக் கடந்து நாமெல்லாம் தமிழர்கள் என்ற நிலையை நோக்கியே நகரவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கோய் தோல்விக்கு முன்னர் ஒன்றும் தோல்விக்கு பின்னர் இன்னொன்றும் என்றிருந்தால்.. எத்தனையோ போராட்டங்களை கைவிட்டுவிட்டு தலைவர் எப்பவோ சரணடைந்து தன் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு போயிருக்கலாம். நீங்களும் ஜேர்மனியில் வாழ முடியாமல் போயிருக்கலாம். வன்னியில் மாடு மேய்த்துக் கொண்டும் இருந்திருக்கலாம்.

ஆனால் விடுதலை என்பது உங்கள் போன்றோரின் பசிக்கு போடும் உணவு போன்றதல்ல. இழப்புக்கள் நீண்ட போராட்டங்கள் இன்றி விடுதலை என்பது சாத்தியமில்லை. அதற்காக எனியும் ஆயுதத்தால் அழிவுகளை தேடிக்கொள்ள வேண்டும் என்பது அல்ல அர்த்தம். ஆனால்.. தோல்விகளுக்காக விடுதலை என்ற மாவீரர்களின் மக்களின் இலட்சியக்கனவுகளை ஒரு நொடியில் புதைத்து விடும் துரோகத்தை செய்யவும்.. அதை வைச்சு எங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளவும் நாம் அனுமதிக்கமாட்டோம்.

நிச்சயம்.. மாவீரர்களின் கனவு வெல்லும் வரை அவர்களின் பெயரை போராட்ட இலட்சியத்தை பாதையை பயணிப்பை காட்டி மற்றவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை என்ற இழி நிலை ஓட்டத்தை ஓட்ட அனுமதிக்க முடியாது. அவர் முன்னாள் போராளியாக இருக்கலாம் விடலாம். இன்னாளில் அவர் போராளி அல்ல. இலட்சியத்தை கைவிட்டவர் போராளியாக இருக்க முடியாது. அதை எதிரியிடம் சொல்லி பொதுமன்னிப்பு பெற்றுக் கொண்டு வாழட்டும். அது பிரச்சனை அல்ல. ஆனால் உண்மைப் போராளிகளின் மாவீரர்களின் இலட்சியத்தை குறை பேசவும் அதை வைச்சு சொந்த வாழ்க்கையை பாதுகாக்கவும் எவருக்கும் அருகதை கிடையாது. அதற்கு நாங்களும் கருத்தியல் ரீதியில் கூட அனுமதிக்க மாட்டோம். :lol:

தம்மை வளர்த்துக்கொள்ள போராட்டம் எல்லாருக்கும் தேள்வையாக இருக்கிறது, போராட்டத்தை காட்டி வயிறு வளர்பவர்களை கட்டி வைத்து உதைக்க வேணும். இறுதியில் எரிந்து போக்காகூடிய வயிறை வளர்க்க ஆயிரம் ஆயிரம் போராளிகளை காரணம்காட்டுவது கேவலமானது.

  • கருத்துக்கள உறவுகள்

தம்மை வளர்த்துக்கொள்ள போராட்டம் எல்லாருக்கும் தேள்வையாக இருக்கிறது, போராட்டத்தை காட்டி வயிறு வளர்பவர்களை கட்டி வைத்து உதைக்க வேணும். இறுதியில் எரிந்து போக்காகூடிய வயிறை வளர்க்க ஆயிரம் ஆயிரம் போராளிகளை காரணம்காட்டுவது கேவலமானது.

சந்தடி சாக்கல் சவுக்கெடுத்து விளாசுகின்றீர்கள்.

அதுசரி இப்பவும் போராட்டம் இருக்கின்றதா. போராட்டம் என்ற சொல்லைக் கேட்டுப் "போர்" அடித்துவிட்டது. ஏதாவது வேறு சொல்லைக் கண்டுபிடித்தால் நல்லது.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?
:lol:

ம்ம் இப்படி ஏதும் தலைப்பு போட்டால் தான் நாமும் சேர்ந்து நாறுவம் என்று போட்டிங்களோ?

மேலும் அமைச்சர்கள் இன்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்துகொண்டிருக்கின்றார்கள். அது பற்றிய எந்தவித சிந்தனையும் இன்றி ஆகாயக் கோட்டைபோல் நா க அரசு அவை குழுக்கள் எல்லாம் மக்கள் எக்கேடு கெட்டால் என்ன மக்களுடனான தொடர்பு அவசியம் இல்லை என்றெண்ணி நிலமும் மக்களும் இல்லாமல் அரசு அமைத்து அடயாளப்போட்டி நடத்துவதற்கு விசிலடிப்பது முக்கியமா இல்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுபவர்களை ஆதரிப்பது முக்கியமா?

அச்சச்சோ ... முடியல ... அவயல் அங்கை மக்களை சேர்ந்து கட்டிப் பிடித்து அரவணைக்கினமாம்???? முடிந்த உதவிகளை செய்கினமாம்?????? ......... அண்ணை உந்த செய்யினமோ/இல்லையோ, அவையளுக்கு சொல்லுங்கோ, ... மத்தியில் கூட்டாட்சி/மாநிலத்தில் சுயாட்சியோ???? இன்னும் கொஞ்சப்பேர் அங்கை தனிநாடும் பிரகடனப்படுத்தினவையள்???? இன்னும் கொஞ்சம் சமஸ்டியாம்???? ... அதுகளை செய்ய/கேட்க சொல்லுங்கோ!!!!! உந்த இண்டையான் இந்த கட்டிப்பிடித்து அரவணைப்புகள் தற்காலிகமானவை!!! நாளை சிங்களவன் உதை பிடுங்கி எறிய நாளிகைகள் செல்லாது!!!! அப்போ உந்த கட்டிப்பிடுத்து அரவணைக்கிறவைகளால் அதுகளை நிற்பாட்டச் சொல்ல முடியுமோ????? இல்லை தடுக்க முடியுமோ???? ... சில தினங்களுக்கு முன்னுக்கும் யாழில் டக்கிலசு அட்காசமாக படத்துக்கு போஸ் கொடுத்து நடத்தப்பட்ட மீள் குடியேற்றம் ஒன்று திரும்ப அடித்து துரத்தப்பட்டு விட்ட செய்தி பார்க்கேலையோ?????

... உந்த கட்டிப்பிடிக்கிறவைகளைப் பற்றி இன்னொரு கதை ... லண்டன் கேபியின் பிரமுகர் பாண்டர் சொன்னது ... உவங்கள் டக்கிலசுகளும், பிள்ளையான்களும் என்னத்தைச் செய்தாலும், அதிலை நல்லதுகள் இருந்தாலும், சனம்ங்கள் அவங்களை நாய்க்கு கூட மதிக்குதுகளில்லை .... அண்ணை, உது உண்மையான வசனம்!!! ஏன்????????? ...... உவர்கள் செய்தவைகளை மறங்குங்களா?????????

சும்மா கொள்கை கோட்பாடு இப்படி எல்லாததையும் பற்றி போசாதீர்கள். உதெல்லாம் எமக்கு சரிவராது. ஐக்கிய இலங்கைக்குள் சிங்களவர்கள் இஸ்லாமியர்கள் அனைவருடனும் சேர்ந்து இலங்கையர்களாக வாழ்வது ஒன்றுதான் தாயகத்தில் வாழும் மக்களுக்கு ஏதுவானது. பிரிவினைவாதம் தனிநாடு தனி அரசு என்று மக்களை காடாத்தியது போதும் திரும்ப கெள்கை கோமணம் என்று இங்கிருந்து உசுப்பேத்தி அங்கிருப்பவனை காவுகொடுக்கமுடியாது. அதற்கு அவர்களும் தயாராக இல்லை. கொள்கையும் கோட்பாடும் ஒற்றுமை உள்ள இனங்களுக்கே அதன் வளர்ச்சிக்கு உதவும் எம்மைப்போன்ற கிலிசைகெட்ட இனத்துக்கு அழிவாகவே முடியும் என்பதை அனுபவத்தில் கண்டிருக்கின்றோம். உங்கட இனக்கொள்கைகளை முதலில் சாதி மதம் பிரதேசவாதம் அனைத்தையும் களைந்து இனமாக ஐக்கியப்பட்டு அதிலிருந்து உருவாக்குங்கள். கொள்கை கோட்பாட்டை உருவாக்கும் தகுதியை முதலில் உருவாக்குங்கள் அதன்பிறகு அதைப்பற்றி பேசலாம்.

அண்ணை, நீங்கள் என்ன மேலேயிருந்து திடீரென பூமியிலை சஞ்சரித்திருக்கிறீங்கள் போல கிடக்குது??????? ... சேர்ந்து வாழப்போகிறீர்க|ளோ???? ... வாழ விடுவான், கட்டிப்பாக?????? அண்ணை அப்படி உங்களுக்கு ஏதும் தந்து மரியாதையாக வாழ விட்டால் நானும் வருகிறேன், இங்கைத்தையான் வாழ்க்கைக்கு மூட்டை கட்டி விட்டு!!!!!! ... ஆனால் உங்கடை கோவணத்தையும் கழட்டி உரிந்தெடுத்துப் போட்டுத்தான் சிங்களவன் நிற்பான்!!!

... அண்ணா, உங்கட உசுப்பேத்துகிறது!!! விளங்கவில்லையண்ணா???? ... நாங்கள் 48இலிருந்து தொடங்கி 78க்கு பிந்தானன்னா, உந்த ஆயுத போராட்டம் எண்டதை கண்டனாங்கள்!! அதுக்கு முன்னுக்கு உந்த உசுப்பேத்தலுகளை தொடங்கியது தளபதி அமிரும், ஆனந்தசங்கரிகளும் தானன்னா!! ... பின்னுக்கு ஆயுதப்போராட்டம் தொடங்கினாப்பிரகும் எல்லோரும் நல்லாக, இங்கிருந்தல்ல அங்கிருந்து ஏற்றியவர்கள்!! அது பின் இயக்க அழிப்புகளில் முடிய .. அதுவும் எல்லோரும் எல்லாரையும் அழிக்க முற்பட்டவைகள்தான், அதுக்கு மேலுக்கு உள்ளுகளுக்கே ஆயிரக்கணக்கில் போட்டுத்தள்ளினார்கள், ... ஆனால் புலி முந்தீட்டுது!!! இப்ப புலியை மட்டும் உசுப்ப்த்துகிறதென்று முடித்துப் போட்டீங்கள்???!!!

முதலில் எமக்கிடையே எப்போ மதப்பிரிவினைகள், பிரதேச பிரிவினைகள் தோன்றியதென்பதை அறிந்து விட்டு எழுதுங்கோண்ணா!!!!!

அண்ணா குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் உங்கள் தொலைபேசிக்கு அடித்தால் எடுப்பீங்களோ இல்லா விட்டால் Answering machine க்குப் போகுமோ?

சின்னப்புள்ளைத்தனமான கேள்வியாய் உள்ளது. ஒருக்கால் இந்த இலக்கத்திற்கு அடித்து அதை தெரிந்து கொள்வது..! :rolleyes: நான் பல தடவைகள் இந்த இலக்கத்தில் தொடர்புகொண்டு சாத்திரி அண்ணாவுடன் கதைத்துள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்மை வளர்த்துக்கொள்ள போராட்டம் எல்லாருக்கும் தேள்வையாக இருக்கிறது, போராட்டத்தை காட்டி வயிறு வளர்பவர்களை கட்டி வைத்து உதைக்க வேணும். இறுதியில் எரிந்து போக்காகூடிய வயிறை வளர்க்க ஆயிரம் ஆயிரம் போராளிகளை காரணம்காட்டுவது கேவலமானது.

அதெண்டா மெத்தச்சரி. போராட்டம் ??????? ஒரு புனிதமான வார்த்தையை நம்பி அழிஞ்ச ஒருதனுக்கு கொடுக்கும் கவுரவம் நன்றாயேயுள்ளது.

இறுதியில் எரிந்து போற வயிற்றுக்கு நீங்கள் சாப்பிடாமல்தானே இருக்கிறியள். இல்லது எரிஞ்சு போற வயிற்றுக்காக நீங்கள் வேளை தப்பாமல் எல்லாம் குடுக்க வேணும். ஆனால் தன்னையே இிழந்து தாயகத்தை நேசித்தவனெல்லாம் எரியிற வயிற்றுக்காக வாழவேகூடாது. வாழ்க உங்கள் போராட்டமும் கொள்கையும்.

சொந்தச் சகோதரர்கள் துனப்பத்தில் சாதல் கண்டு சிந்தையிரங்காரடி கிளியே....எனப்பாடிய மீசைக்கவிஞா எல்லாம் தெரிஞ்சுதானோ எழுதிவைத்தாய் இப்படி??!!!!

சந்தடி சாக்கல் சவுக்கெடுத்து விளாசுகின்றீர்கள்.

அதுசரி இப்பவும் போராட்டம் இருக்கின்றதா. போராட்டம் என்ற சொல்லைக் கேட்டுப் "போர்" அடித்துவிட்டது. ஏதாவது வேறு சொல்லைக் கண்டுபிடித்தால் நல்லது.

இதென்ன கதை போர் ஆடிக் களைத்துப் போயுள்ளோம் நீங்கள் இதுக்கை எங்கடை போராட்டம் பற்றி கொமன்ற் அடிக்கிறியள்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் உங்கள் தொலைபேசிக்கு அடித்தால் எடுப்பீங்களோ இல்லா விட்டால் Answering machine க்குப் போகுமோ?

14 வருசமாய் இதுதான் என்னுடைய இலக்கம் தாராளமாய் அடிக்கலாம்..சிலநேரம் தகவல் பெட்டிக்கு போனாலும் உங்கள் பெயர் மீண்டும் தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கத்தினை பதிவு செய்தால் நான் மீண்டும் தொடர்பு கொள்வேன்.. எதற்கும் முதலில் ஒரு தடைவை அழைத்துப்பார்த்துவிட்டு இங்கு வந்து இந்தக் கேள்வியை கேட்டிருக்கலாம்.காரணம் நான் ஒழித்திருந்து கருத்து எழுதுபவன் அல்ல. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.