Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் என்னை இன்னும் அச்சுறுத்துகின்றனர் யாழ்.அரச அதிபர் இமெல்டா ஹத்துருசிங்க தெரிவிப்பு

Featured Replies

twofi.jpg

எனது சேவையை அன்று செய்ய முடியாமல் விடுதலைப் புலிகள் அச்சுறுத்தினர். அதேபோல் இன்றும் அச்சுறுத்துகின்றனர் என யாழ்.அரச அதிபர் இமெல்டா ஹத்துருசிங்க தெரிவித்தார்.

பயங்கரவாதத்தினை தோற்கடித்தமை மூலமாக இராணுவத்தினர் கற்றுக்கொண்ட அனுபவங்களை சர்வதேசத்துடன் பகிர்ந்துகொண்ட மூன்று நாள் கருத்தரங்கு நேற்றுமுன்தினம் முடிபடைந்துள்ளது. இறுதிநாள் கருத்தரங்கில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டபோதே யாழ். மாவட்ட அரச அதிபர் மேற்படி தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

உண்மைகளை உள்ளபடி உலகிற்கு எடுத்துக் கூறுவதால் பல பிரச்சினைகளுக்கு நான் முகம் கொடுக்கிறேன். இப்போதும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் மத்தியிலே நாள் வாழ்கிறேன். இருந்த போதிலும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பின் மத்தியில் மக்கள் சேவை செய்யக் கிடைக்கின்றமையால் மகிழ்ச்சியடைகிறேன். 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டுவரை முல்லைத்தீவு அரச அதிபராக நான் கடமையாற்றியிருக்கிறேன். இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் நான் அங்கு தான் கடமையாற்றினேன். புலிகளின் பிடிக்குள் மக்கள் சிக்கித் தவித்த காலத்திலும் மக்களின் நலனில் அரசு கவனம் செலுத்தி வந்தது.

குறிப்பாக எங்களுக்கு உயர்மட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. குறைந்தது மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டோம். அது மட்டுமல்லாமல் ஆறு மாதங்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களையும் சேமித்து வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தோம். யுத்தம் நடைபெற்ற காலத்திலும் மக்களின் நலனில் அரச அதிகாரிகளும் படைகளும் அக்கறை செலுத்தினார்கள் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு.

இறுதி யுத்தகால கட்டத்தில் மக்களை வெளியேற்றுமாறு படை அதிகாரிகள் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் என்னால் அதனைச் செய்யமுடியவில்லை. காரணம் விடுதலைப்புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாகப் பிடித்து வைத்திருந்தமையே. வெளியேற துடித்த அப்பாவிப் பொதுமக்களை விடுதலைப் புலிகள் வெளியேறாமல் தடுத்தனர்.

மக்களின் பயன்பாட்டுக்காக மனிதாபிமான அடிப்படையில் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட சீமெந்துகளையும் ஜெனரெற்றர்களையும் புலிகளே அதிகளவில் பயன்படுத்தினர். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சீமெந்து பைக்கற்றுக்களில் தங்களின் பாதுகாப்புக்காக பதுங்கு குழிகளை புலிகள் அமைத்தனர். அதேபோல் ஜெனரேற்றர்களையும் அவர்களே பயன்படுத்தினார்கள்.

இருந்தபோதிலும் அமைதியாக இருந்து மக்கள் சேவையினை நாங்கள் செய்துவந்தோம். இதற்காக படையினருக்கு நான் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன். இராணுவத்தினர் மிகவும் மனிதாபிமானத்துடனும் ஒழுக்கமாகவும் நடந்து கொண்டனர்.

புலிகளின் மறைந்த தலைவர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வன் என்னை பலமுறை பயமுறுத்தியிருக்கிறார். எக்காரணம் கொண்டும் அபிவிருத்தி பற்றிய அறிக்கைகளை யாருக்கும் வழங்கவேண்டாம் என்று அவர் என்னை அச்சுறுத்தினார். அரசு செய்கின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்தால் தங்களின் இயக்கத்திற்கு அவப்பெயர் வருமென அவர்கள் அஞ்சினார்கள்.

அன்றும் எனது சேவையினை சரிவர செய்யவிடாமல் அச்சுறுத்தினார்கள். இன்றும் என்னை அச்சுறுத்துகிறார்கள். ஆனால் படையினரின் உதவியுடன் இன்றும் என்னால் மக்கள் சேவையினை செய்யக் கூடியதாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் மக்கள் சேவகர்கள். ஆகையினால் எங்களால் முடிந்தளவு மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம்.

இப்பொழுதும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறோம். கல்வி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி வருகிறோம். இப்பொழுது சுமுகமான நிலை காணப்படுவதற்கு உதவிய படையினருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்று அவர் தனது உரையில் மேலும் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹய்யோ....இந்த கொசு தொல்ல தாங்க முடியல..

அது சரி இவா ஆங்கிலத்தில இவாக்கு எழுதி குடுத்தத வாசிக்கேக்க காத்து தான் அதிகமா வருது..ஏன் இப்பிடலாம் கஸ்டப்படுறிங்க மேடம்? பேசமா தமிழ்ழையே வாசிச்சு இருக்கலாமே?

அதாங்க நீங்க கொழும்பில இராணுவ அணுபவப்பகிர்வில பேசினத சொல்றன்...

அடப் பாவிகளே!

நீங்கள் இன்னும் அவர்களை அழிக்கவில்லையா?2009 லிருந்து புலுடாவா விடுகிறீர்கள்?

சிலவேளைகளில் மாவிரர்களினதும் உங்களால் பாதிக்கபட்டு இறந்தவர்களினதும் ஆவியாகக்கூடவிருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இமெல்டா சுகுமார் என்று படித்ததாகத்தான் ஞாபகம்?? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இமெல்டா சுகுமார் என்று படித்ததாகத்தான் ஞாபகம்?? :unsure:

என்னமோ ஒன்று. :) இப்படியானவர் சுகுமாரை கைவிட்டு ஹத்துருசிங்கவை கைப்பிடிக்க எவ்வளவு நேரமாகும்.

புலிகளை பற்றி இப்படிச்சொல்பவர் அரசுக்கு நிச்சயமாக தகவல்களை (முல்லைத்தீவில்) வழங்கி இருப்பார்.

என்னமோ ஒன்று. :) இப்படியானவர் சுகுமாரை கைவிட்டு ஹத்துருசிங்கவை கைப்பிடிக்க எவ்வளவு நேரமாகும்.

புலிகளை பற்றி இப்படிச்சொல்பவர் அரசுக்கு நிச்சயமாக தகவல்களை (முல்லைத்தீவில்) வழங்கி இருப்பார்.

அதுதான் யாழ்ப்பாணத்தில எவ்வளவோ பேர் அரசுக்கு வால் பிடித்தும் ஒருத்தருக்கும் பதவி கொடுக்காம இவவுக்கு மாத்திரம் எப்படி யாழ் அரச அதிபர் பதவி கிடைத்தது? வன்னியில வேலை செய்த பலர் சிறையில்

டக்கிளஸ்ம் எதிர்க்க இல்லை.

அப்ப அரசுக்கு நல்லா பூசி இருக்கிறா?

ஒன்டு செய்யலாம்

இவா வன்னியில இருந்து கொடுத்த பேட்டி யளை தொகுத்து மகிந்த அண்ணைக்கு அனுப்பனும்.

நல்லா தடவி விடுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ப வளைவதையும்,சூழ்நிளைகளுக்கேற்ப குழைவதையும் ஏற்றுக் கொள்ளலாம்!

ஆனால் காலில் விழுவதும், அந்நிய ஆடவர் ஒருவரின் கையை அந்த மாதிரிப் பிடிப்பதும் அடிமைத்தனம்!

எதிரி கூட இவவை, இழிவாகத் தான் தனக்குள் நினைப்பான்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உல்டா (இமல்டா அல்ல) சுகுமார்.. சிங்களவன்.. ஈபிடிபி எழுதிக் கொடுக்கிறதை வாசிக்கிற ஆள்.

வன்னி உட்பட வடக்கிற்கு பொருளாதாரத் தடைவிதித்து.. எரிபொருள் சீமெந்து கட்டிடப் பொருட்கள் கொண்டு வர தடை இருந்தது. அப்போதும் விடுதலைப்புலிகள் கடல் வழியாக அப்பொருட்களை கொண்டு வந்து.. அன்றைய காலக்கட்டத்தில் முக்கியமாக தேவைப்பட்ட தமது தேவைக்கும்.. மட்டுப்படுத்திய அளவில் பொதுமக்களின் தேவைக்கும் தந்தனர்.

இதனை எல்லாம் இந்த உல்டா மறந்திருக்கலாம்.. மக்கள் மறக்க மாட்டார்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ப வளைவதையும்,சூழ்நிளைகளுக்கேற்ப குழைவதையும் ஏற்றுக் கொள்ளலாம்!

ஆனால் காலில் விழுவதும், அந்நிய ஆடவர் ஒருவரின் கையை அந்த மாதிரிப் பிடிப்பதும் அடிமைத்தனம்!

எதிரி கூட இவவை, இழிவாகத் தான் தனக்குள் நினைப்பான்!!!

இதுதான் எனது கருத்தும், அதாவது வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழ் பெண் அரசியல்வாதிகள் மற்ற அதாவது தாங்கள் வாழும் நாட்டு அரசியல் வாதிகளை சந்திக்கும்போதுகூட இரண்டு கை எடுத்து கும்பிட்டுத்தான் வரவேற்கிறார்கள், இவ என்னவென்றால்....

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் வல்வை

புலம்பெயர் மக்களும் ஒரு புதிய வரலாற்றையும் புரட்சியையும் பண்பாட்டையும் எழுதவேண்டும். எழுதும்.

எனது சேவையை அன்று செய்ய முடியாமல் விடுதலைப் புலிகள் அச்சுறுத்தினர். அதேபோல் இன்றும் அச்சுறுத்துகின்றனர் என யாழ்.அரச அதிபர் இமெல்டா ஹத்துருசிங்க தெரிவித்தார்.
ஐயோ.......ஐயோ....... என்னத்தத்தான் எழுதுறது......................என் மனதில் இவவைப்பற்றி உள்ளதை எழுதினால் ..........................அ நாகரிகமாய் இருக்கும் அதனால்த்தான் ஒன்றும் எழுதவைல்லை....மன்னிக்கவும்.

அரசாங்க அதிபர் என்பவர் அரசாங்கத்தின் முகவரேயொழிய ஊதுகுழலல்ல! - இமெல்டா சுகுமாருக்கு சிவாஜிலிங்கம் கண்டனம்!!

அரசாங்க அதிபர் என்பவர் அரசாங்கத்தின் முகவராக மட்டும் இருக்க வேண்டுமேயன்றி சிறிலங்கா அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்கக்கூடாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாருக்கு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

'தோற்கடிக்கப்பட்ட தீவிரவாதம் - சிறிலங்காவின் அனுபவங்கள்' என்ற தொனிப்பொருளில் சிறிலங்கா படைத்தரப்பு அண்மையில் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கலந்து கொண்டு ஆற்றிய உரை தொடர்பாகவே தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கம் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'யுத்தத்தின் போது 80 ஆயிரம் பேரே யுத்தத்தின் பிடியில் சிக்குண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.பார்த்தீபன் மூன்று இலட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட 70 ஆயிரம் குடும்பங்கள் சிக்குண்டிருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் அரசாங்க அதிபராகவிருந்த இமெல்டா சுகுமார் மௌனம் காத்து வந்தார்.

அந்த மௌனத்தின் அர்த்தத்தை இப்போது புரிந்து கொள்ள முடிகிகின்றது. எழுபதாயிரம் மக்களுக்கு மட்டுமான உணவு விநியோகத்தை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவே அவர் இவ்வாறு மௌனம் காத்திருந்தார் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. மூன்று இலட்சத்திற்கு அதிகமான மக்கள் சிக்குண்டிருந்த நிலையில் பதினான்காயிரம் மக்கள் படுகாயமடைந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பல் மூலம் திருகோணமலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

இதேவேளை ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இயற்கைச் சீற்றத்தாலோ அல்லது இயற்கை மரணத்தாலோ உயிரிழந்திருக்கவில்லை. இவர்கள் அனைவரும் அப்பட்டமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட வன்னி மக்களுடனேயே நீண்டகாலம் வாழ்ந்து வந்த இமெல்டா சுகுமாரால் எவ்வாறு இப்படி உண்மைகளை மூடி மறைக்க முடிகின்றது.

சர்வதேச மட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எழுகின்ற குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கவே இவர் முற்படுகின்றார். இனப்படுகொலை செய்பவர்களை விட அதனை மூடி மறைப்பவர்களையும், அதனை நியாயப்படுத்துபவர்களையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இமெல்டா சுகுமார் சிறிலங்கா படைத்தரப்பினர் ஏவிய எறிகணை வீச்சில் காயமடைந்ததை ஏன் இவ்விடத்தில் பகிர்ந்து கொள்ள மறந்தார். மறந்தாரா அல்லது மறைத்தாரா?

சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சராக இருப்பவர்கள் அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்கலாம். ஆனால் ஒரு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் என்பவர் அரசாங்கத்தின் முகவராக மட்டும் இருக்க வேண்டுமே தவிர அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்கக்கூடாது.

இனியும் இமெல்டா சுகுமார் இவ்வாறு உண்மைக்குப் புறம்பாக கதைக்காமல் இருப்பதுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்காது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்' என சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைத்தரப்பால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட போர் வெற்றி தொடர்பான சர்வதேசக் கருத்தங்கில் உரையாற்றிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் விடுதலைப் புலிகள் மீது கடும் குற்றசாட்டுக்களை முன்வைத்திருந்தார். சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் இவர் சாட்சியம் அளித்த போதும், சிறிலங்காப் படைத்தரப்பினர் போர்க்குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை எனக் கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={7BC5C216-6DD1-4AC0-8767-5F8F74E72ABC}

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=iqCVn2rAApo

யாருக்காவது வாய்கட்டு மந்திரம் தெரிந்து இருந்தா உல்டா சுகுமாருக்கு போட்டு தாக்குங்கப்பா.. :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.