Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

வணக்கம் உறவுகளே:

திறவு கோல் திறக்காமையால் ஏழு நாட்கள் கதவுகளைத் தொடர்ந்து தட்டி இன்று உள்ளே வந்தேன். கள உறவுகளின் உதவிக்கு நன்றி. தோல்வி நிலையென நினைத்தால்... எப்படி? தட்டுங்கள் திறக்கப்படும் என்ற உண்மையை இன்றுதான் கண்டுகொண்டேன். திடுதிடுப்பென்று திறந்த கதவால் உள்ளே வர ஒரு திகைப்பு, ஒரு தடுமாற்றம். நிச்சயமாய் என்ன சொல்ல என்று ஒரு குழப்பம்.

யார் இந்த அறிமுகமில்லா மல்லையூரான்? என்னை அதிகம் பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். எது இந்த மல்லையூர்?. யரோ சிலர் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

மதுவைத் தேன் என்று சொல்லி அறிமுகம் செய்யவேண்டிச் சில சமயம் வருவதுண்டு. அது போல் நான் உங்களுக்கு மலரென்றால் பூ என்று சொல்லி அறிமுகம் செய்துகொண்டு ஆரம்பிக்கிறேன். கமம் என்றால் பயிரிடு நிலம் தானெ. எனது ஊரின் மூலப்பெயர் மலர்க்கமம். ஆனால் நான் சிறுவனாய் இருந்த போது இதை மாற்றி சிங்கள மல்கம தான் மல்லாகம் என வந்தது என்று சொல்லித்தந்தனர். உண்மையை உணர்ந்தபோது அந்த தமிழ் மணம் கமழும் நறுமலர்பெயரை எனது பெயராய் சூடிக்கொண்டேன்.

இங்கே சிலவற்றைப் பாருங்கள்.

ஊர் என்று தென்கிழக்காசியாவெல்லாம் நிறைந்திருக்கும் சொல் பூர் ஆகி, புற வாகி, புரமாகி தமிழிக்கு கடன் சொல்லாய் வந்தது.

பெரிய என்ற தமிழ்ச்சொல் ப்ரம்மம் என்றாகி பிரம்மம் என்று திரும்பி வந்தது.

இப்படி உடமையைத் தானம் கொடுத்து திரும்ப கடனாய் வாங்கி கொண்ட தயாள மானப்பான்மை தமிழ் ஆய்வாளர்களிடம் நிறைய இருந்திருக்கு போலிருக்கு.

சிங்களவர் தமிழீழத்திற்கு வர முன்பே தமிழீழம் பொன்னிறத்தில் பொலியும் சென்நெற் செய்கையில் தன்னிறைவு காண முன்னேறியிருந்திருக்கவேண்டும். மாடு கட்டிப் போர் அடித்தால் மாளாது சென்நெல் என்று ஆனை கட்டிப் போர் அடிக்கும் அழகான தென்மதுரை என்ற பழந்தமிழர் அலங்காரம் தமிழகத்திற்கு மட்டுமின்றி தமிழீழத்திற்கும் பொருந்தும். கம்மம், தோட்டம், வயல், வெளி, குளம் என்று தான் ஊர்கள் எல்லவற்றிக்கும் பெயரிட்டிருந்தார்கள். வந்தேறு குடிகள் அவற்றை கம, தோட்ட,வல, வில்,கொட என்று புனைந்தார்கள். பழைய கதிரேசன்கமம் கத்துறுகம ஆகமாறியது. தமிழீழத்தை கைப்பற்றிக் கொண்டவுடனேயே சிங்கள அரசர்கள் குளங்கள் வெட்டியதாயும் அணைகள் கட்டியதாயும் கதைகள் எழுதி வைதுள்ளார்கள். அவர்கள் வந்தபோது எந்தத் தொழில் நுட்பத்தையும் கொண்டுவரவில்லை. அவையெல்லாம் நமதே என்பது கண்கூடு. ஆனால் நாம் பழம் பெருமை பேசாது எமது நாட்டை நாம் வென்றேடுக்கும்போது போன பெருமை தானே வரும். கண்ணீர்த்துளி போன்ற மணித்தீவை ரவுடிகள் தேடி வர துணை போனதே சென்நெல் தாங்க்கிச் சென்று திரும்பிய தோணிகளின் பாதைகளே.

பாணன், அடித்துப் பறித்த நிலத்தை, பாடித் தானமாக திரும்பப் பெற்றுக்கொண்டான். நாமும் எமது நிலத்தை இன்னும் ஒரு தடவை திரும்ப மீட்டெடுப்போம். அப்போது கானமான பெயர் யாழை யாழ்-உம் மதுரமான பெயர் மல்லை-யை நானும் சூடிக்கொள்வதில் பெருமைகொள்வோம் என்ற கனவுடன் நானும் வந்து களத்தில் குதிக்கிறேன்.

வணக்கம் இன்னொருதடவை களவுறவுகளே.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எனது தாழ்மையான வணக்கங்களுடன் உங்களை களத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்!

மலர்+ கமம்=மல்+ கம=மல்க்கம-மல்லாகம்

கொடிகாமத்தையும் சிங்களப் பெயர் என்று தான் சொல்கின்றார்கள்!

சுன்னாகத்தையும் சிங்களப் பெயர் என்று தான் சொல்கின்றார்கள்!

கிராமம் என்பது கிரம ஆகித் கம என்று சிங்களத்தில் வந்தது என்று எனது கருத்து!

தமிழுடன் விளையாடுவது எனக்குப் பிடிக்கும்!

எனது தாழ்மையான வணக்கங்களுடன் உங்களை களத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்!

மலர்+ கமம்=மல்+ கம=மல்க்கம-மல்லாகம்

கொடிகாமத்தையும் சிங்களப் பெயர் என்று தான் சொல்கின்றார்கள்!

சுன்னாகத்தையும் சிங்களப் பெயர் என்று தான் சொல்கின்றார்கள்!

கிராமம் என்பது கிரம ஆகித் கம என்று சிங்களத்தில் வந்தது என்று எனது கருத்து!

தமிழுடன் விளையாடுவது எனக்குப் பிடிக்கும்!

இருக்கலாம். ஆனால் எமது நிலைமைக்கு காரணம் என்னெவென்றால் ஆதாரம் இல்லாமல் போனதே.

வருக மல்லையூரான் . நல்ல கருத்துகள் பதிக.

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது வாங்கோ வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை யூரானுக்கு இனிய வணக்கம். வாருங்கள். உங்கள் தமிழ் புலமை கண்டு , மிகவும் மகிழ்ச்சி.

தொடர்ந்து இணைந்து இருந்து களம் சிறக்க வேண்டும் வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

வாங்கோ மல்லை வரும்போதே வாசமுல்லை,தொடங்கட்டும் உங்கள் பரணி

  • கருத்துக்கள உறவுகள்

banner11.jpg

nalvaravu_01.gifvaruka_01.gif

வணக்கம். வாருங்கள் மல்லையூரான். ஆரம்பமே.... அட்டகாசமாக உள்ளது.

அறிமுகத்துடன் நின்று விடாது, தொடர்ந்து எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

வரவேற்கும் எல்லோருக்கும் வணக்கமும் நன்றியும். நிறைய ஜஸ் வைச்ச யாழ் உறைஞ்சிடும். தமிழில் கன்னா பின்னா என்று நிறைய எழுத எப்போதுமே ஆசை. ஆனால் அது மலை வயிறு நொந்து சுண்டெலியை பெற்ற கதையாய் இருக்கு ஒவ்வொரு தடவையும் எழுதும் போது.

இன்றைய Channel4 ஒளிபரப்பு வெளிவரும்போது நங்கள் அதை பரப்புதல் செய்தலிலும் அதைப்பற்றி தொடர் முயற்சிகள் எடுப்பதுடனும் நின்று விடாமல் இன்று அரசாங்கம் அவிழ்த்துவிடப்போகும் போலி பிரசாரங்களையும் முறியடிக்க முயல வேண்டும். அதற்கும் தேவையான கருத்துகளையும் எழுதுவோம்.

பிழைகளுக்கு மன்னிகவும்.

நன்றி.

வணக்கம்,

வாருங்கள். ஒரு வித்தியாசமான வரவாக உள்ளது.

உங்களால் இந்த களம் சிறக்கட்டும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மல்லை தந்த தமிழே!

வாருங்கள் உங்கள் தமிழின் பொழிவால் வரவேற்கும் பகுதிக்கு அழைத்து வந்துள்ளீர்கள். வரவேற்கின்றோம் வாருங்கள்.

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுறக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Edited by ஆராவமுதன்

வணக்கம் வாங்கோ

எனது ஊரின் மூலப்பெயர் மலர்க்கமம். ஆனால் நான் சிறுவனாய் இருந்த போது இதை மாற்றி சிங்கள மல்கம தான் மல்லாகம் என வந்தது என்று சொல்லித்தந்தனர்

தவறான தகவல்களை மறுபடி மறபடி எழுதாதீர்கள் இதை ஆதாரத்துக்கு

இழுக்க இங்கே பல பேர்வழிகள் இருக்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.