Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!

திருவட்டார்: தனது முதல் மனைவியும், 2வது மனைவியும் அடுத்தடுத்து வீட்டை விட்டு வெளியேறியதால் கணவர் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். இதுகுறித்துப் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரைச் சேர்ந்தவர் ஷியாம் ராஜ். இவருக்கு வயது 33 ஆகிறது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்தார். ஆனால் அந்தப் பெண், ஏற்கனவே தனது உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதனால் ஷியாமுடன் குடும்பம் நடத்த மனம் இல்லாமல், கல்யாணமாகி 10 நாளிலேயே வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

இதனால் மனம் உடைந்த ஷியாம் ராஜ், மனதை தேற்றிக் கொண்டு தனது ஊரைச் சேர்ந்த ஜெனீபா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார். ஆனால் ஷியாம் ராஜின் நேரமோ என்னவோ இந்தப் பெண்ணும் தனது உறவினர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

அந்த வாலிபர் வெளிநாடு போயிருந்த சமயம் பார்த்து ஜெனீபாவின் குடும்பத்தினர், ஷியாமுக்கு மணம் முடித்து வைத்து விட்டனர்.

இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து திரும்பினார் ஜெனீபாவின் காதலர். அதன் பின்னர் ஜெனீபா வீட்டை விட்டு வெளியேறி அந்த வாலிபருடன் போய் விட்டார். திருமணம் நடந்த ஒரே மாதத்தில் ஜெனீபா வீட்டை விட்டு ஓடி விட்டார்.

இப்படி அடுத்தடுத்து தனது 2 மனைவிகளும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததால் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார் ஷியாம் ராஜ்.

தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் ஷியாம் ராஜ். அதில், ஜெனீபா வீட்டை விட்டு ஓடியது மட்டுமல்லாமல் எனது தங்கையின் வளையல்களையும், எனது பாஸ்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு போயுள்ளார். அவற்றை மீட்டுத் தர வேண்டும். அதேபோல ஜெனீபாவையும் மீட்டுத் தர வேண்டும். அவரை மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஷியாம் ராஜ்.

நன்றி தற்ஸ்தமிழ்.

' திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது ' , ஷியாம் ராஜ் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் Nedukkalapoovan னிடம் அறிவுரையை கேட்டு இருக்கலாம், அல்லது பாதம் (Almond) சாப்பிட்டு அத்திவரத்தை உறுதியாக போட்டிருக்கனும் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து என்ன தெரியுது.. பெண்களுக்கு பெற்றோரிடம் இல்லாத சுதந்திரம்.. கணவரிடம் இருக்கிறது என்று... அதையிட்டு அந்த ஆண் மகன் பெருமைப்பட வேண்டும். அதைவிட்டிட்டு.. கண்ணீர் வடிக்கிறாராமில்ல. :lol:

அண்ண.. ஓடிற மாட்டையும் காட்டாக்காலி ஆட்டையும் பட்டியில கட்டி வைக்க முடியாது. கட்டி வைச்சாலும் அது அறுத்துக்கிட்டு தான் ஓடும். அந்த வகையில.. ஓடி அடங்க விட வேண்டியது தான். எத்தின நாளைக்கு இந்தக் கூத்து. ஆட்டம் முடியும் வேளை எல்லாம் தானா அடங்கும்..! :lol::D

ஒழுக்கமும் நீதியும் சொல்லிக் கொடுக்கலாம்.. மற்றவைக்காக அதை நாமளே கடைப்பிடிக்க முடியாது. அவை தான் அதைக் கடைப்பிடிக்கனும். மற்றவைக்கு பசியெடுத்தா.. நாங்க சாப்பிட முடியுமா என்ன... நாங்க சாப்பிட்டா அவையிட பசி அடங்குமா என்ன. நாம நமக்கு சரியெண்டு படுறதை செய்துகிட்டு இருக்க வேண்டியது தான். இந்த உலகம் ரெம்ப கெட்டுப்போய் கிடக்கு. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

போங்கையா

மூன்றாவதை பார்க்கும் வேலையை அவர் தற்பேபாது ஆரம்பித்திருப்பார் :lol::D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஷியாம் ராஜ், கொடுத்து வைத்தவர்!!!

ஒரு மனநல மருத்துவரை அணுகுவது நல்லது!!! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் ஷியாம் ராஜ். அதில், ஜெனீபா வீட்டை விட்டு ஓடியது மட்டுமல்லாமல் எனது தங்கையின் வளையல்களையும், எனது பாஸ்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு போயுள்ளார். அவற்றை மீட்டுத் தர வேண்டும். அதேபோல ஜெனீபாவையும் மீட்டுத் தர வேண்டும். அவரை மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஷியாம் ராஜ்.

ஷியாம் ராஜ் எவ்வளவு நல்லரப்பா....

அவருக்கு ஏன்.... இவ்வளவு சோதனைகள்.

பெஸ்ட் லக், நெக்ஸ்ட் ரைம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கத்துக்கு என்னபிரச்சனையோ ஆருக்குத்தெரியும்????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்துக்கு என்னபிரச்சனையோ ஆருக்குத்தெரியும்????

சிங்கம் சிலுப்பினாலும் பிரச்சினை, சிலுப்பாட்டிலும் பிரச்சினை. பாவம் ஆண்கள்.

யாழ் களத்தில் Nedukkalapoovan னிடம் அறிவுரையை கேட்டு இருக்கலாம், அல்லது பாதம் (Almond) சாப்பிட்டு அத்திவரத்தை உறுதியாக போட்டிருக்கனும் :lol::lol:

உடையார்:

பாதாம் பருப்பு சாப்பிட முன் இடுப்பிலை கட்டினதையும் ஒருகையால் இறுக்கி பிடிச்சு கொள்ளுங்கோ. முன்னைய அவத்தம் இனி வேண்டாம்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடையார்:

பாதாம் பருப்பு சாப்பிட முன் இடுப்பிலை கட்டினதையும் ஒருகையால் இறுக்கி பிடிச்சு கொள்ளுங்கோ. முன்னைய அவத்தம் இனி வேண்டாம்.

பாதாம் பருப்பிலை, அப்பிடி என்ன மகிமை இருக்குது? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பாதாம் பருப்பிலை, அப்பிடி என்ன மகிமை இருக்குது? :unsure:

என்ன ஸ்ரீ அண்ணை இது கூட தெரியாமல்

சிங்கத்துக்கு என்னபிரச்சனையோ ஆருக்குத்தெரியும்????

:D:D

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்:

பாதாம் பருப்பு சாப்பிட முன் இடுப்பிலை கட்டினதையும் ஒருகையால் இறுக்கி பிடிச்சு கொள்ளுங்கோ. முன்னைய அவத்தம் இனி வேண்டாம்.

கட்டாயம், இப்ப நாய் சங்கிலியில் கோர்ந்து பூட்டு போட்டுவிட்டேன், :):)

" தமிழ் சிறி - பாதம் பருப்பிலை, அப்பிடி என்ன மகிமை இருக்குது?"

தண்ணீரில் ஊறப்ப போட்டு விடிய சப்பிட்டு பாருங்க விடயத்தை ரண்டு or மூன்று நாளுக்கு, அப்புறம் உங்கட மனைவியே ஊறப் போட்டுவா (உங்களை இல்ல) ஒவ்வொரு நாளும், பிறகு வந்து யாழில் எழுதுங்க. :wub::wub: இதுதான் இதுதான்

இன்னும் ஒரு கேள்வி உடையார்.

"பீட்சா டோ" மாதிரி உங்களின்ரை முகம் இழுபடுகிறத்திற்கு என்னத்தை தண்ணீலை ஊறவிட்டனீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு கேள்வி உடையார்.

"பீட்சா டோ" மாதிரி உங்களின்ரை முகம் இழுபடுகிறத்திற்கு என்னத்தை தண்ணீலை ஊறவிட்டனீங்கள்?

அதைதான் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதைதான் :lol::lol::lol:

உடையார்! உங்கட அவதார் நாளுக்கு நாள் மாறுவதைப் பார்க்க, ஊரில் சூரன் போர் பார்த்தது நினைவுக்கு வருகின்றது.

யானைத்தலை, சிங்கத்தலை, சூரன் தலை என்று களத்தை ஒரே கல கலப்பாக வைத்திருக்கின்றீர்கள்! :D

உடையார்! உங்கட அவதார் நாளுக்கு நாள் மாறுவதைப் பார்க்க, ஊரில் சூரன் போர் பார்த்தது நினைவுக்கு வருகின்றது.

யானைத்தலை, சிங்கத்தலை, சூரன் தலை என்று களத்தை ஒரே கல கலப்பாக வைத்திருக்கின்றீர்கள்! :D

பாதாம் பருப்பு செய்யிற வேலை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாதாம் பருப்பு செய்யிற வேலை :lol:

இந்த தமிழ் சிறியெல்லே ஆப்படிச்சிட்டார் என்ர புள்ள Beab க்கு :rolleyes:

உடையார்! உங்கட அவதார் நாளுக்கு நாள் மாறுவதைப் பார்க்க, ஊரில் சூரன் போர் பார்த்தது நினைவுக்கு வருகின்றது.

யானைத்தலை, சிங்கத்தலை, சூரன் தலை என்று களத்தை ஒரே கல கலப்பாக வைத்திருக்கின்றீர்கள்! :D

:lol::D

post-8644-0-01909900-1312550164_thumb.gi

Edited by Udaiyar

சியாம் ராஜ்! மனதை தளர விடாதீர்கள்..மீண்டும் ஒன்றிற்கு முயற்சி செய்யுங்கள்...விடா முயற்சி வெற்றி தரும்...இங்குள்ள பட்டை அனுபவசாலிகளின் கருத்தையும் செவிமடும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.