Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழிபற்றி விதையாகி...

Featured Replies

முற்குறிப்பு

- வழக்கம் போல் ஓரளவு நீண்ட கவிதை, பொறுமை உள்ளவர்களுக்கு மட்டும்..

- இது போன்ற தொனிப்பொருளில் நான் எழுதுவது குறைவு போட்டி காரணமாக எழுத விழைந்தேன்

.(ஏனென்றால் உணர்வு பற்றிய கவிதைகள் பாதிப்பது அதிகம் என உணர்ந்ததால், பற்றும பழைய கசப்புகள் )

விழிபற்றி விதையாகி... (வழங்கப்பட்ட கருப்பொருள் விழியதன் வழியினிலே)

எழுதியவர்: மதுரகன் செல்வராஜா

துடிக்கின்ற விரல்களிலிருந்து கண்களைப்பற்றி ஆயிரம்

கவிதைகள் எழுதவேண்டும் - காதல் மயக்கத்தில் அல்ல...

கண்ணீர் பற்றியெரியும் கதைகளையும்

வற்றிப்போன விழிகளையும் கொண்டு

இன்னும் சிலிர்க்கின்ற மயிர்களும் புடைக்கின்ற நரம்புகளும்

கொஞ்சம் மீதமிருப்பதை எதிரிக்குப்புலப்படுத்த

வலிக்கின்ற இதயங்களுடன் விடிகின்ற இரவுகளுக்கு

வரியாக செலுத்தப்பட்ட விழிநீர்க்கனல்கள் விதையாகி வீழ்ந்து

விண்ணையும் சுட்டு விண்மீன்களாகி

மிளிர்கின்ற வரலாறுகளைப் புரட்டிப்போட...

பழையதன் பழையதன் பழைய காலத்தில் என் பாட்டனொருத்தன்

வாழ்ந்துபோன வாழ்க்கைப்படி

விழியும் விழியும் உரசிப்போக வினாடிகளுக்குள்

காதல் விதையாகிப்போம் - விழிகளின் புலத்திலே

காட்சிகள் மறந்துபோய்க் கனவுகள் பெருகிப்போம்

காலைப்பிரிதலில் கரைதலும் மாலைச்சுகந்தத்தில் கலத்தலும்

தினம் கட்டாய தொழிலாக மாறும்.

வாழ்ந்ததன் தடமும் வாழ்க்கையின் தடமும் அழிந்துபோக

ஒரு மனித வாழ்க்கையின் சான்றாக அவன்

வமிசம் மாத்திரம் மிஞ்சிக்கிடக்கும்

கால ஓட்டத்தில் எனது பாட்டனின் பாட்டனை விட

உனது பாட்டனின் பாட்டன் பெரியவன் என

உனது உறவினர்கள் பேசிக்கொண்டதால்

எனது பாட்டனின் ஆடைகளை உனது பாட்டன்

பிடுங்கிக்கொண்டான்

சும்மா இருப்பானா எனது பாட்டன்

அழுது குழறிக் கூப்பாடு போட்டான்

அண்ணன் தம்பிகளை அழைத்துக்கொண்டு

ஐந்தாறு தரம் உன் பாட்டனுடன் பேசிப்பார்த்தான்

உன் அப்பன் கொடுத்த அரைமுழம் துண்டுக்கு

எம்மவர் அரைவாசிப்பேர் அவ்வப்போது விலையாகிப் போயினர்

காற்சட்டை தருகிறோம் மேலாடை தருகிறோம் என

பாசாங்கு செய்தே நிர்வாணமாக எம்மை

அலையவிட்டீர்கள் காலம் காலமாய்

கால்நூறு வருடங்கள் கழிந்ததும்

கையைவிரித்து தங்கள் கையாலாகாத்தனத்தை

என் அப்பன்மார் காட்டி, களைத்து

கடவுளே துணையினி உமக்கென

சோர்ந்து சரிந்துவிட்டார்

பொறுமையிழந்து எமதண்ணன்மாரும்

பொருதிப்பார்த்திட முனைந்தனர்

வெறிகொண்டு வேங்கைகளாயினர்

இடிபோல துயர்கூட வெடிபாய்ந்தது,

உயிர்வலி தீர்ந்தது

தீர்ந்து விழுகின்ற ஒரு தோட்டாவின் மதிப்பிற்கு

ஒரு மனித உயிரின் மதிப்பு நிகரான காலம் வந்தது

ஒரு கணம் அந்தச் சத்தமும் ஓய்ந்தது

இன்னமும் நிர்வாணமாய் எமது மக்கள்

அன்று உடைகள் மட்டும்தான் கேட்டோம்

இன்று அனைத்துமே இரந்து பிழைக்கவேண்டிய நிலையில்

உலகப்பழம் இனமொன்று

மானத்தை மறைப்பதற்கே இரண்டு கைகள்

போதாத நிலையில் இரந்துகேட்பதற்கு

என்ன செய்ய எனத்தவிக்கின்ற தாய்மார்

சுரணை கெட்டு சோர்ந்துபோன தனயன்கள்

கண்ணீர் வழிந்து வழிந்து காய்ந்துபோன வழிகள்

வார்த்தைகள் சிறைப்பட்டு வாய்க்குள்போக

விம்மல்கள் சிறைப்பட்டு வாய்க்குள்போக

விம்மல்களுக்குள் புதைந்துபோன வாழ்க்கை

இன்னமும் இன்னமும் இது கூடும்

இனியெமது விழிகள் உரசிக் காதல் விதையாவதில்லை

கண்ணீர் வற்ற வற்ற விழிகள் பற்றி விழிநீர் விதையாக

வீளும் - இன்னுமொரு சந்ததிக்கும் இதையே

எடுத்துச்செல்லும் இழிவுபட்ட யதார்த்தம்

எம்மை நீங்கும்.

'விழி பற்றி விதையாகி...'

-மதுரகன்-

(நீண்ட காலத்தின் பின் என்னைப் பாதித்த கவிதை.)

Edited by sOliyAn

நன்றிகள்!

இந்த வரிகள் இன்றைய தாயக மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள்/ தலைவர்களுக்கும் பொருந்தும்.

உன் அப்பன் கொடுத்த அரைமுழம் துண்டுக்கு

எம்மவர் அரைவாசிப்பேர் அவ்வப்போது விலையாகிப் போயினர்

காற்சட்டை தருகிறோம் மேலாடை தருகிறோம் என

பாசாங்கு செய்தே நிர்வாணமாக எம்மை

அலையவிட்டீர்கள் காலம் காலமாய்

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தமான கவிதை. இறுதியில் இல்லாத ஒன்றில் நம்பிக்கைகொள்ளத் தூண்டுகின்றது.

மானத்தை மறைப்பதற்கே இரண்டு கைகள்

போதாத நிலையில் இரந்துகேட்பதற்கு

என்ன செய்ய எனத்தவிக்கின்ற தாய்மார்

சுரணை கெட்டு சோர்ந்துபோன தனயன்கள்

இந்த இழிநிலை மாறுமோ அல்லது காலங்கள் கரையப் பழகிவிடுமோ தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனைப்பிற்கு Soliyan, நல்லதொரு நிஐத்தை சொல்லும் கவிதை, சும்மா பேச்சு நடையில்ல சொன்னலே விளங்காத "....அரைமுழம் துண்டுக்கு எம்மவர் அரைவாசிப்பேர் அவ்வப்போது விலையாகிப் போயினர்..." இந்த கவிதையை வாசித்தா திருத்த போகிறார்கள், என்னென்னவோ பழ மொழி எல்லாம் தொண்டைவரை வருகிறது இவர்களை பற்றி

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தமான கவிதை.ஆத்திரம் வருகிறது. யார் மீது ஆத்திரம் கொள்வது என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கால்நூறு வருடங்கள் கழிந்ததும்

கையைவிரித்து தங்கள் கையாலாகாத்தனத்தை

என் அப்பன்மார் காட்டி, களைத்து

கடவுளே துணையினி உமக்கென

சோர்ந்து சரிந்துவிட்டார்

ஆள் மனதைத் தொட்டு விட்ட அழகிய கவிதை!

இணைப்புக்கு நன்றிகள், சோழியன்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அன்று உடைகள் மட்டும்தான் கேட்டோம்

இன்று அனைத்துமே இரந்து பிழைக்கவேண்டிய நிலையில்

உலகப்பழம் இனமொன்று....

மனதைப் பிழியும் கவிதை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சோழியன் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

மானத்தை மறைப்பதற்கே இரண்டு கைகள்

போதாத நிலையில் இரந்துகேட்பதற்கு

என்ன செய்ய எனத்தவிக்கின்ற தாய்மார்

சுரணை கெட்டு சோர்ந்துபோன தனயன்கள்

இப்பிடி அப்பப்ப வந்திட்டு போறது சோழியன்

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின் உங்க ள் கவிதை கண்டு மகிழ்ச்சி வரலாற்றுச் சோகம் சொல்லிச் செல்கிறது கவிதை.

அடிக்கடி நேரம் ஒதுக்கி கவி மழை வந்தால் நனைவதற்கு காத்திருக்கிறோம்.

  • தொடங்கியவர்

இப்பிடி அப்பப்ப வந்திட்டு போறது சோழியன்

வந்து கொண்டுதானே இருக்கிறன்! :)

நீண்ட நாட்களின் பின் உங்க ள் கவிதை கண்டு மகிழ்ச்சி வரலாற்றுச் சோகம் சொல்லிச் செல்கிறது கவிதை.

அடிக்கடி நேரம் ஒதுக்கி கவி மழை வந்தால் நனைவதற்கு காத்திருக்கிறோம்.

நிலாமதிக்கு பகிடி கூடிப்போச்சுது!! இது கொழும்பு பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவர் ஒருவரது கவிதை.

உங்களை நனைக்குறதுக்காகவாவது ஏதாலும் எழுதத்தான் வேணும்.. முயற்சிக்கிறன்! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.