Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன எச்சரிக்கையை மீறி இந்தியாவுக்கு வியட்நாம் அழைப்பு

Featured Replies

ஹனோய்:அக்டோபர் 09,2011,19:55 IST

"வியட்நாம் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதிகளில் இந்தியா மற்றும் பிற வெளிநாடுகள், எண்ணெய் மற்றும் வாயு வளத்தைக் கண்டறிய வியட்நாம் அரசு அழைக்கிறது' என, அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார்.

வியட்நாம் எல்லைக்குட்பட்ட தென் சீனக் கடலில், இந்தியா, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே, தென் சீனக் கடல் முழுவதையும் சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இந்தியா தனது பணிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்தது. ஆனால், இந்தியாவும், வியட்நாமும், சீனாவின் எச்சரிக்கையை புறக்கணித்து விட்டன.

இந்நிலையில், நாளை மறுநாள் முதன் முறையாக இந்தியா வர உள்ள வியட்நாம் அதிபர் ட்ரூவாங் டன் சங், இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும் விதத்தில் நடவடிக்கைகள் எடுக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "வியட்நாம் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இந்தியா மற்றும் வெளிநாடுகள், எண்ணெய் வளத்தைக் கண்டறிய வர வேண்டும். இது வியட்நாமின் இறையாண்மைக்கு உட்பட்டது. மேலும், 1982ம் ஆண்டு ஐ.நா., கடல் சட்டத்தின்படி இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.வியட்நாம் அதிபரின் இந்தியப் பயணத்தின் போது இருதரப்பு பொருளாதாரம், வர்த்தகம், கலாசாரம் மேம்படும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=328388

  • Replies 81
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்.. சரியான போட்டி..! :wub:

சபாஷ்.. சரியான போட்டி..! :wub:

சமாந்தரமாக நீண்ட காலம் பயணிக்க முடியுமா:

வியட்னாம் அருகே உள்ள சீனாவையும் தாண்டி இந்தியாவை அழைக்கின்றார்கள்;

சிங்களம் அருகே உள்ள இந்தியாவை தாண்டி சீனாவை அழைக்கின்றார்கள்;

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானை மீறி அந்த நாடு இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்;

ஆபிரிக்காவில் சீனாவுடன் ஒப்பிடமுடியாவிட்டாலும் இந்தியா இந்த வருடம் 5B USD முதலீடு;

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நிலையில் உள்ள குதிரையான சீனாவுடன் நொண்டிக்குதிரையான இந்தியாவும் தாண்டி தாண்டி ஓட வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. :)

நொண்டிக்குதிரை ?????????????????????? இந்த வருடத்தின் மிகப்பெரிய சிரிப்பு

சீனாவை மீறி இந்தியாவிற்கு அழைப்பு. அழைத்தது எங்கேயோ இருக்கும் நாடு . இந்தியா நொண்டி குதிரை என்பது வியட்நாம் நாட்டுக்கே தெரியாது . ஆனா யாழ் களத்தில் இருக்கும் நம்மவர்களுக்கு தெரிந்து இருக்கிறது .

இந்திய விரோத போக்கு இன்னும் இருப்பது ஈழ விடுதலைக்கு இழப்பு. ஈழ விடுதலை பற்றி பேசி நாலு காசு பார்க்கலாம் என்று இருப்பவர் மட்டுமே இந்திய எதிப்பு பற்றி கூறுவார்கள் .

ஒரே வார்த்தை . சூரியனை பார்த்து எதோ குறைத்தால் எதற்கு நட்டம் ?????

இப்போது தமிழ் நாட்டை ஆளும் அம்மணி இந்திய விரோத போக்கை முற்றிலும் விரும்பாதவர் . இப்படியே நீங்கள் இருந்தால் நாளை அம்மா அபௌட் டர்ன் அடித்து விடுவார் . ஜாக்கிரதை .

ஈழத்திற்காக ஈழ தமிழர் போராடி மாண்டனர் . இந்திய தமிழர் தீக்குளித்து மாண்டனர் . இங்கே சிலர் இந்திய வெறுப்பை சொல்லியே காலம் ஓட்டுகின்றனர் .

இந்தியாவை பற்றி சொல்லிகிட்டே இருங்கள் . இந்தியாவும் உயர்ந்து கொண்டே இருக்கும் . அப்புறம் நீங்கள் நினைத்தாலும் பிடிக்க முடியாத உயரத்தில் இந்தியா சென்று விடும் . இந்தியா என்றால் தமிழ் நாடும் அதில் அடங்கும் . அப்புறம் ஈழத்திற்கு குரல் கொடுக்க இந்தியாவில் யாரும் தயாராக மாட்டார்கள் . இப்போதே இந்தியாவுடன் நகருங்கள் . அதுதான் உங்களுக்கும் நல்லது .

மேலும் ஒரு வார்த்தை . இந்தியா மீது சேறு இறைக்கும் போது உங்களுக்கு தெரியாமல் தமிழன் மீதும் சேறு படுகிறது என்பதை நினைவில் நிறுத்தவும்

சிகப்பு புள்ளிகள் கிடைத்து ரொம்ப நாளாகி விட்டது . தயவு செய்து எவ்வளவு சிகப்பு குத்த முடியுமோ அவ்வளவு குத்தவும் . ஏனெனில் நான் மீன் போன்றவன் . நீரை சுத்தபடுத்துவது போல உங்களிடம் உள்ள குறைகளை சுத்த படுத்தும் பொறுப்பு தமிழனாகிய எனக்கும் உண்டு .

இந்தியா மீது இவ்வளவு நடந்த பின்னரும் இது வரை புலிகள் கூட வெறுப்பு நிலை எடுக்கவில்லை. முள்ளி வாய்க்கால் வரை சென்ற பிறகும் இந்தியா எங்களின் தொப்புள் கோடி என அறிக்கை வந்தது . அவர்தான் உண்மையான தமிழர்கள் தமிழ் ஈழ வீர்கள் . எதுவுமே செய்யாமல் கணினியை வைத்து கொண்டு இந்தியா மீது வெறுப்பை உமிலுபவர்கள் ஒன்றும் உண்மையான தமிழர்கள் அல்ல . எதிரி ராஜபக்ஷே கூட எள்ளி நகையாடும் நிலையில் தமிழினத்தை தள்ளியது கணினி வீரர்களே. ( புலம்பெயர் தமிழருக்கு தமிழே தெரியாது - ராஜபக்ஷே )

உணர்வால் இந்தியா இன்றும் என்றும் ஒன்று தான் . இன்று அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதை அமோதிக்கிறேன் . ஆளானப்பட்ட இந்திரா காந்தி அம்மையாரையே மண்ணை கவ்வ வைத்தவர்கள் நாங்கள் . சோனியாவோ சூநியாவோ அது யாராக இருந்தாலும் சரி இந்தியா மக்கள் மன்றத்தில் வெகு காலம் இருக்க நிறைய தேவை . இலங்கை மாதிரி இங்கு இல்லை . தெற்கு பக்கம் தமிழர் விரோதம் இருந்தால் வெல்லலாம் . வடக்கு பக்கம் சிங்கள விரோதம் இருந்தால் வெல்லலாம் என்பது போல இங்கு இல்லை . ஒரு நாள் காலம் வரும் . ஈழ பிரச்சினையை அவர்கள் கையாண்ட தவறான அணுகுமுறை மற்றும் ஈழ படுகொலைகள் இந்தியா மக்களுக்கு தெளிவாக தெரியும் . அப்போது இந்திய மக்கள் நியாயம் கேட்பார்கள் . அப்போது பிறக்கும் தமிழீழம் . தடுப்பவன் தவிடு போடி ஆவான் . ஏனெனில் அது நூறு கோடி மக்களின் சக்தியாக மாறி இருக்கும் .

வங்க தேசத்தின் தாய் இந்தியா . அதே போல ஈழத்தின் தாயும் இந்தியாவே . இப்போது சிலர் நெஞ்சில் ( தமிழர்கள் ) வளர்ந்து கொண்டு இருக்கும் ஈழம் எனும் சிசு இந்தியா தாயின் வளர்ந்து இந்திய தாய் பிரசவிக்கும் போது அந்த ஈழத்திற்கு முப்பத்தி இரண்டு உடன்பிறப்புகள் ( இந்தியா மாநிலங்கள் ) இருப்பார்கள் . அதுவரை பொறுமை வேண்டும் . இல்லையேல் கருவே களையும் அபாயம் உள்ளது .

தமிழ் பைத்தியத்துக்கு ஒரு பச்சை போடு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப்பைத்தியம் சார்.. நீங்க தப்பா புரிஞ்சிண்டேள்..! :(

இங்கே யாரும் இந்தியாவுக்கு எதிரி அல்லர்..! இந்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிரிகளே இங்கே உள்ளார்கள்..! :huh: அதுவும் எங்களுக்குள்ளேதான் பேசிக் கொள்வோம்..! :(

டிஸ்கி: ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கே எதிரி சிங்களவன்..! அவனுக்கு இந்திய ஏகாதிபத்தியம் பல்லக்குத் தூக்கலையா? ஏன் எங்களை மட்டும் மன்னிக்க மாட்டேங்கிறேள்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சண்டியன் ஒரு ஊருக்குள் இருக்கமுடியாது

இந்துமா சமுத்திரத்தில் இரண்டு வல்லரசுகள் இருக்கமுடியாது ஆகவே !?

தமிழ்ப்பைத்தியம் சார்.. நீங்க தப்பா புரிஞ்சிண்டேள்..! :(

இங்கே யாரும் இந்தியாவுக்கு எதிரி அல்லர்..! இந்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிரிகளே இங்கே உள்ளார்கள்..! :huh: அதுவும் எங்களுக்குள்ளேதான் பேசிக் கொள்வோம்..! :(

டிஸ்கி: ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கே எதிரி சிங்களவன்..! அவனுக்கு இந்திய ஏகாதிபத்தியம் பல்லக்குத் தூக்கலையா? ஏன் எங்களை மட்டும் மன்னிக்க மாட்டேங்கிறேள்? :wub:

நீங்கள் தான் திரும்ப திரும்ப இந்திய ஏகாதிபத்யம் என கூறிக்கொண்டே போகிறீர் . ஏதோ ஒரு குடும்ப ஏகதிபத்யம் இந்தியாவில் மேலோங்கி இருப்பதால் அவர்கள் செய்வதை எல்லாம் நீங்கள் அதை இந்திய ஏகதிபத்யம் என எப்படி கூறுவீர்கள் ???

அது சரி ஏதோ என்னையும் அவாள் கணக்குல சேர்த்து விட்டாப்ல தெரியுதூன்னா உங்க பாஷைய பார்த்தா ??? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே இந்த பிள்ளையாண்டான் மனசுல பட்டத சொல்லனும்னு தோணிடுத்து அதுக்கு இவ்ளோவ் பெரிய பணிஷ்மேண்டுன்னா என்னால தாங்க முடியளையன்னா உங்க பேச்சை . நான் சொல்றது நோக்கு புரியளையோன்னோ

சரி பரவாயில்ல இப்ப அவாள்தான் தமிழீழத்திற்கு எதிரானவர்களுக்கு ஆப்பு வைக்க கிளம்பியிருக்கா . ஏற்கனவே தமிழ் நாடுல வச்சி முடிச்சிட்டாள் ( சோ ) இப்ப இந்திய அளவில ஆப்பு வைக்க ஒருத்தர் ட்ரை பண்ணிண்டு இருக்கா ( சு சாமி ). ஏதோ எதிரிக்கு எதிரி நண்பன் கணக்குல இவருக்கும் ஏதோ ஒரு பட்டம் கொடுத்துட்டா நம்ம வேலை ஈசியா முடிஞ்சிடும் ( அதான் ஏற்கனவே அம்மாவுக்கு யாரோ ஏதோ பட்டம் கொடுத்தது போல இருக்கு ???)

இரண்டு சண்டியன் ஒரு ஊருக்குள் இருக்கமுடியாது

இந்துமா சமுத்திரத்தில் இரண்டு வல்லரசுகள் இருக்கமுடியாது ஆகவே !?

ஆகவே நம்மால் நட்பு பாராட்டவே முடியாத வெகு தூரத்தில் உள்ள சீனாவை கை கழுவிட்டு இந்தியாவுக்கு பல்லக்கு தூக்குவதே உத்தமம்.

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தான் திரும்ப திரும்ப இந்திய ஏகாதிபத்யம் என கூறிக்கொண்டே போகிறீர் . ஏதோ ஒரு குடும்ப ஏகதிபத்யம் இந்தியாவில் மேலோங்கி இருப்பதால் அவர்கள் செய்வதை எல்லாம் நீங்கள் அதை இந்திய ஏகதிபத்யம் என எப்படி கூறுவீர்கள் ???

அது சரி ஏதோ என்னையும் அவாள் கணக்குல சேர்த்து விட்டாப்ல தெரியுதூன்னா உங்க பாஷைய பார்த்தா ??? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே இந்த பிள்ளையாண்டான் மனசுல பட்டத சொல்லனும்னு தோணிடுத்து அதுக்கு இவ்ளோவ் பெரிய பணிஷ்மேண்டுன்னா என்னால தாங்க முடியளையன்னா உங்க பேச்சை . நான் சொல்றது நோக்கு புரியளையோன்னோ

சரி பரவாயில்ல இப்ப அவாள்தான் தமிழீழத்திற்கு எதிரானவர்களுக்கு ஆப்பு வைக்க கிளம்பியிருக்கா . ஏற்கனவே தமிழ் நாடுல வச்சி முடிச்சிட்டாள் ( சோ ) இப்ப இந்திய அளவில ஆப்பு வைக்க ஒருத்தர் ட்ரை பண்ணிண்டு இருக்கா ( சு சாமி ). ஏதோ எதிரிக்கு எதிரி நண்பன் கணக்குல இவருக்கும் ஏதோ ஒரு பட்டம் கொடுத்துட்டா நம்ம வேலை ஈசியா முடிஞ்சிடும் ( அதான் ஏற்கனவே அம்மாவுக்கு யாரோ ஏதோ பட்டம் கொடுத்தது போல இருக்கு ???)

ஆகவே நம்மால் நட்பு பாராட்டவே முடியாத வெகு தூரத்தில் உள்ள சீனாவை கை கழுவிட்டு இந்தியாவுக்கு பல்லக்கு தூக்குவதே உத்தமம்.

ஏன் .......... இந்தியா எங்களுக்காக என்ன செய்தது மொத்தத்தில் எமது இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்ச்சி கொடுத்து ஒருவருடன் ஒருவரை மோதவிட்டு எமது இனம் அழிவதற்கு காரணமாக இருந்தற்கா அல்லது அமைதி படை என்ற பேரில் வந்து எமது மக்களை கொன்று பாலியல் வதை செய்தற்கா அல்லது முள்ளிவாக்காளில் எமது இனத்தை சிங்களவனுடன் சேந்து கொத்து கொத்தாக குழந்தைகள் பெரியவர் பெண்கள் என்ற பாகுபாடின்றி அழித்ததற்கா நாம் பல்லாக்கு தூக்கவேண்டும்.

பல படைகளை தலைமை கொண்டு பலரை சீரழித்து படு பாதக செயல்களை செய்த சரத் பொன்சேகாவுக்கு இறந்த மக்களின் குருதி ஈரம் காயும் முன்னரே எப்படி ஜனாதிபதி தேர்தலில் எப்படி எதை வைத்து நீங்களும் நீங்கள் நம்பும் தமிழ் ஈழ கட்சிகளும் பல்லக்கு தூக்கியதோ அதே மாதிரி தூக்குங்கள் .

அமைதி பேச்சு என கூறி புலிகளை நம்ப வைத்து பின் வாசல் வழியாக ரணில் ஆயுதம் கொள்முதல் செய்ததற்கு உதவி செய்த மேற்குலகிற்கு எப்படி பல்லக்கு தூக்குகிறீர்களோ அப்படி தூக்குங்கள்

வெளி நாடு செல்வதற்கு தான் வாழ்ந்த இனத்தையே பிடிக்காதது போல நடித்து சிங்களனுக்கு பல்லக்கு தூக்கி வெளி நாடு செல்வீர்களோ அப்படி தூக்குங்கள்.

இன்னும் நிறைய சொல்வேன் . ஆனால் உள்ளுக்குள் சண்டையை ஆரம்பித்து குளிர் காய நினைக்கும் மனிதன் நானல்ல

Edited by tamil paithiyam

ஆகவே நம்மால் நட்பு பாராட்டவே முடியாத வெகு தூரத்தில் உள்ள சீனாவை கை கழுவிட்டு இந்தியாவுக்கு பல்லக்கு தூக்குவதே உத்தமம்.

2009/5 க்குப்பிறகு எம்மை பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டமைப்பு வெளிப்படையாக புது டெல்லியை பாராட்டி அதற்கு அமைய பல்லக்கு தூக்கியே நடந்துவருகின்றது. ஆனால் உள்ளூர கூட்டமைப்பு வேதனை அடைந்துவருகின்றது. காரணம்:

- தொடரும் குடியேற்றம்
-மறுக்கப்படும் கடல் வாழ்வியல்
-அழிக்கப்பட்டும் கலாச்சாரம்

என நீண்ட பட்டியல்.

இத்தனை மனக்கசப்புக்களுக்கும் தோல்விகளுக்கும் மத்தியில் எல்லோரையும் பல்லக்கு தூக்கு என்று கேட்பது கடினமானது. விரைவில் ஏதோ ஒரு அரசியல் தீர்வை பெறாவிட்டால் அங்கே தமிழர்களும், கூட்டமைப்பும் இந்திய செல்வாக்கும் கூட அருகிப்போகலாம்.

எனவே பல்லக்கு தூக்கும் கூட்டமைப்பு அதை உணரும் புதுடெல்லி சில முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நேரம் இன்று.

  • கருத்துக்கள உறவுகள்

வந்துட்டாருப்பா வாஜ்பாயி ..கோணவாய்கால் பாளையத்திற்கு நேர் வழி காட்டுவார் இவரதான்.. ஒரே டமாஸ்தான்... :lol: :lol:

சபாஷ்.. சரியான போட்டி..! :wub:

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே வாங்கி கொடுக்க வைப்பீர்களா?

சீனா அடிக்க வந்தால் வியட்டனாம் காலில் விழுந்து தப்பிவிடுவார்கள் ஆனால் வாங்க போறது இந்தியா எல்லோ?

உணர்வால் இந்தியா இன்றும் என்றும் ஒன்று தான் . இன்று அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதை அமோதிக்கிறேன் . ஆளானப்பட்ட இந்திரா காந்தி அம்மையாரையே மண்ணை கவ்வ வைத்தவர்கள் நாங்கள் . சோனியாவோ சூநியாவோ அது யாராக இருந்தாலும் சரி இந்தியா மக்கள் மன்றத்தில் வெகு காலம் இருக்க நிறைய தேவை . இலங்கை மாதிரி இங்கு இல்லை . தெற்கு பக்கம் தமிழர் விரோதம் இருந்தால் வெல்லலாம் . வடக்கு பக்கம் சிங்கள விரோதம் இருந்தால் வெல்லலாம் என்பது போல இங்கு இல்லை . ஒரு நாள் காலம் வரும் . ஈழ பிரச்சினையை அவர்கள் கையாண்ட தவறான அணுகுமுறை மற்றும் ஈழ படுகொலைகள் இந்தியா மக்களுக்கு தெளிவாக தெரியும் . அப்போது இந்திய மக்கள் நியாயம் கேட்பார்கள் . அப்போது பிறக்கும் தமிழீழம் . தடுப்பவன் தவிடு போடி ஆவான் . ஏனெனில் அது நூறு கோடி மக்களின் சக்தியாக மாறி இருக்கும் .

வங்க தேசத்தின் தாய் இந்தியா . அதே போல ஈழத்தின் தாயும் இந்தியாவே . இப்போது சிலர் நெஞ்சில் ( தமிழர்கள் ) வளர்ந்து கொண்டு இருக்கும் ஈழம் எனும் சிசு இந்தியா தாயின் வளர்ந்து இந்திய தாய் பிரசவிக்கும் போது அந்த ஈழத்திற்கு முப்பத்தி இரண்டு உடன்பிறப்புகள் ( இந்தியா மாநிலங்கள் ) இருப்பார்கள் . அதுவரை பொறுமை வேண்டும் . இல்லையேல் கருவே களையும் அபாயம் உள்ளது .

வந்துட்டாரு பீட்டர் பழைய மேட்டர தூக்கி கொண்டு..

இந்தியாவுக்கு எல்லாம் தெரியுமாம் இந்தியா சனத்துக்கு எல்லாம் தெரியுதாம்.....

என்ன சிங்களவன் திறந்து காட்டினவனோ? அவன் இந்தியாவுக்கு வாலையும் சீனாவுக்கு தலையையும் காட்டி காலத்தை கொண்டு போறான் இவை ஆமையும் இல்லை முயலும் இல்லாத ஒரு அதிசய ஓட்டம் ஓடினம்.............

தமிழரின் கொலைகளுக்கு காரணமாக இருவருமே இருந்துள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ சிக்கல் இல்லை உள்ளூர் ஏரியில் மீன் பிடிக்கும் மீனவர்களை தாக்கும் வல்லரசு (கிலங்கை) மீது புல்லரசு(கிந்தியா) என்ன நடவடிக்கை எடுத்தது என தெரியபடுத்தவேணும்.. ஏண்டா எங்க இன்ன அரிப்பெடுத்து பெத்து போட்டு விட்டார்களா(மீன்வர்கள்) அல்லது வேண்டா வெறுப்பா பெத்து போட்டுட்டார்களா? ஒரு குடும்ப ஆட்சி என்றால் அவா என்ன ரெட்ட கோலுக்கு பெத்து போட்டாலா? கடைசி வரைக்கும் 40 எம்பி சீட்டை வைத்து கொண்டு சொறிந்து சோப்பு போட வேண்டுமா? அவாளுக்கும் மட்டும் தங்கத்துல செய்திருக்கா ?நம்மவருக்கு தகரத்துல செய்து இருக்கா?

டிஸ்கி:

வடக்கான் குஜாராத்தில் யாரோ உதவி செய்து போட்டார்கள் என்பதற்காக இங்க வந்து கிந்தியா கிந்தியா சவுண்டு கொடுக்க படாது ...கிளைமேக்ஸ் வந்தால்தான் இருக்கு.. :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஆஹா ரூம் போட்டு யோசிச்சு வந்து வம்பிழுக்கிறார் போல இருக்கு . ஆனால் ஏற்கனவே இதுபோல ஒருமுறை நாம் இங்கே எழுதியபோது ஒரு ஈழ உறவு எங்களின் துன்பம் உங்களுக்கு எல்லாம் பட்டிமன்றம் போல ஆயிற்றா என எழுதியிருந்தார் . அன்றுடன் கொஞ்சம் மனம் வேதனையோடு இங்கே எழுதுவதை குறைத்து கொண்டேன் . ஏனெனில் எதுவாயினும் பிறர் மனம் வலிக்கும் என்றால் அந்த செயலை செய்யாதிருப்பதே மேல் .

எனினும்...... எனினும்...... நல்ல பேரை வைத்து கொண்டு தொடர்ந்து மக்களை திசை திருப்பி மீண்டும் மீண்டும் உசுப்பேற்றி விட்டு படுகுழியில் தள்ள நினைக்கும் உங்களை போன்றவர்கள் எமது உறவுகளை கொண்டு போய் மீண்டும் ஒரு பேராபத்தில் தள்ளி விடுவார்களோ என்ற பயம் என்னை மீண்டும் ஆட்கொண்டு விட்டதால் மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன் .

ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒன்றையும் காணோமே என முழிக்க வேண்டாம் . வருகிறேன் .

டிஸ்கி

நாங்களும் ரூம் போட்டு யோசிப்போம்ல

ஈழ சிக்கல் இல்லை உள்ளூர் ஏரியில் மீன் பிடிக்கும் மீனவர்களை தாக்கும் வல்லரசு (கிலங்கை) மீது புல்லரசு(கிந்தியா) என்ன நடவடிக்கை எடுத்தது என தெரியபடுத்தவேணும்.. ஏண்டா எங்க இன்ன அரிப்பெடுத்து பெத்து போட்டு விட்டார்களா(மீன்வர்கள்) அல்லது வேண்டா வெறுப்பா பெத்து போட்டுட்டார்களா? ஒரு குடும்ப ஆட்சி என்றால் அவா என்ன ரெட்ட கோலுக்கு பெத்து போட்டாலா? கடைசி வரைக்கும் 40 எம்பி சீட்டை வைத்து கொண்டு சொறிந்து சோப்பு போட வேண்டுமா? அவாளுக்கும் மட்டும் தங்கத்துல செய்திருக்கா ?நம்மவருக்கு தகரத்துல செய்து இருக்கா?

டிஸ்கி:

வடக்கான் குஜாராத்தில் யாரோ உதவி செய்து போட்டார்கள் என்பதற்காக இங்க வந்து கிந்தியா கிந்தியா சவுண்டு கொடுக்க படாது ...கிளைமேக்ஸ் வந்தால்தான் இருக்கு.. :) :)

வடக்கன் என்று இல்லை பிற இன / மொழி மக்கள் செய்த பல உதவிகளையும் மதிக்காமல் வசதியாய் மறந்து விட்டு நன்றி கெட்ட பிறவிகளாய் நாம் மாறிக்கொண்டு இருப்பதால் தான் நமக்கு இந்த சோதனை . உலகில் பிறந்த அனைவருக்கும் சுய மரியாதை, உணர்வுகள், தன மொழி பற்றி மேலோங்கி தனம் இருக்கும் . சும்மா குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டாம மொழி மதம் இனம் அனைத்தையும் தூர தூக்கி வீசி விட்டு நியாயத்தை மதி, நல்லவர்களுக்கு ஆதரவு கொடு, நன்றி மறவாதே, நாம் தன்னால் முன்னேறுவோம் . நமது பிரச்சினைகள் தானாக தீரும்.

தம்பி பு க த தே. உங்கள் எழுத்துகளை பார்த்தால் தமிழின வரலாறு படித்த / தெரிஞ்ச ஆளு போல தெரியலையே . ஏதோ கூட்டதில கோவிந்தா போடற ஆளு மாதிரியில்ல தெரியுது ??? கொஞ்சம் கூர்மையா குறைந்த பட்சம் கடைசி ஐநூறு வருட வரலாறு மட்டுமாவது படிங்க சார் .

உணர்வை வெளிப்படுத்த வரலாறு தெரிந்து இருக்க தேவை இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து . எனினும் அப்பப்ப வரலாறும் தேவைப்படும் . ஏனெனில் தமிழனை தலை நிமிர செய்ததில் மிகப்பெரிய பங்கு மற்றும் தமிழனுக்கு உதவியதில் மாபெரும் பங்கு பிற மொழி / இன மக்களுக்கும் இருக்கிறது . சும்மா தமிழ் தமிழ்னு கூவி இரண்டு லட்சம் பேரை அநியாயமா பறிகொடுத்தும் இன்னும் நமக்கு அறிவு வரலைன்னா நம்மள விட அறிவிலிகள் உலகில் யாரும் இருக்க முடியாது

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எமது அயல்நாடு என்று கேட்கும்போது , இதயம் பெருமிதத்தால் விம்முகின்றது!

அவர்கள் நடத்திக் காட்டிய பொதுநலவாய நாட்டு விளையாட்டுப் போட்டிகளைக் கண்ட கண்கள் இன்னம் இமைக்க மறுக்கின்றன! அவர்கள் கணக்கை முடித்த விதம இருக்கின்றதே! இந்தியனைத் தவிர எவனாலுமே அதைச் செய்ய முடியாது என்பது மட்டும் உண்மை! நாற்பதினாயிரம் தமிழர்களைக் கொன்று புதைத்து விட்டு, இந்தப் பூனையும் பால் குடிக்குமா, என்ற மாதிரி இருக்க யாரால் முடியும்! ஐக்கிய நாடுகள் சபை கூட, நம்பியாரின் திறமை கண்டு வாயடைத்துப் போய் இருக்கின்றது! சுவிஸ் வங்கிகள் இந்திய அரசியல் வாதிகளின் பணத்தால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றன! அவுஸ்திரேலியாவில், டாக்டர் பட்டேல் குடித்த பதினைந்து உயிர்களின் உறவினர்களும், அவரது பெருமையைத் தினமும் பாடுகின்றார்கள்!இந்திடாவில் மட்டும், ஆகக் குறைந்தது ஆயிரம் பெண் குழந்தைகள் ஒரு வாரத்தில் பிறந்தவுடன் கொலை செய்யப் படுகின்றன! மாடுகளை வழிபடும் நாட்டில், பொலித்தீன் பைகளைச் சாப்பிட்டு மாடுகள் மரணமடைகின்றன.காசியில், கங்கையில் நீராடும் போது,தண்ணீருக்குள் மூழ்கி வெளியே வரும்போது, தலையில் தட்டுகின்றது, பாதி மட்டும் எரிந்த மனித உடல்! சீதனம் தர முடியாத பெண்களின் எரி வாயு அடுப்புக்கள் மட்டுமே வெடித்துச் சிதறுகின்றன!

யாழ் களத்தில் உள்ள மிகபெரிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று . திரி ஆரம்பமாகும் போது ஒரு விஷயத்திற்காக ஆரம்பிக்க பட்டிருக்கும் . ஆனால் போக போக தாறு மாறாகி எங்கெங்கோ திரி சென்று திரியின் ஆரம்ப கருத்தையே ஒன்றும் இல்லாது ஆக்கி விடும் .

மேலும் கேட்கும் கேள்விகளில் ஒன்று இரண்டிற்கு ஒழுங்காக நேராக பதில் கூறினால் அந்த பதிலுக்கு நேர் எதிர் கேள்வி யாருமே எழுப்ப மாட்டார்கள் . தேவையின்றி எங்கெங்கோ எதை எதையோ இழுப்பார்கள் . இதோ இந்த திரியை முழுதும் படித்தால் விளங்கும்

தனி மனித தூற்றல் கூடாது என்பது கள விதிகளில் ஒன்று . என்னிடம் தனி மடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நட்பு பாராட்டி நான் அளித்த பதிலையே எனக்கு எதிராக எழுதியுள்ளார் ஒரு நண்பர் . கள விதி முறைகள் ?????????????????????????????????????????

ஈழ சிக்கல் இல்லை உள்ளூர் ஏரியில் மீன் பிடிக்கும் மீனவர்களை தாக்கும் வல்லரசு (கிலங்கை) மீது புல்லரசு(கிந்தியா) என்ன நடவடிக்கை எடுத்தது என தெரியபடுத்தவேணும்.. ஏண்டா எங்க இன்ன அரிப்பெடுத்து பெத்து போட்டு விட்டார்களா(மீன்வர்கள்) அல்லது வேண்டா வெறுப்பா பெத்து போட்டுட்டார்களா? ஒரு குடும்ப ஆட்சி என்றால் அவா என்ன ரெட்ட கோலுக்கு பெத்து போட்டாலா? கடைசி வரைக்கும் 40 எம்பி சீட்டை வைத்து கொண்டு சொறிந்து சோப்பு போட வேண்டுமா? அவாளுக்கும் மட்டும் தங்கத்துல செய்திருக்கா ?நம்மவருக்கு தகரத்துல செய்து இருக்கா?

டிஸ்கி:

கருத்துகளில் நாகரீகம் வேண்டும் மற்றும் ஆபாசம் கூடாது எனவும் கள விதி முறைகள் கூறுகிறது . ( இளைப்பாறும் களம் தவிர்த்து )

ஆனால் மேற்கூறிய கருத்துகளை கூர்ந்து கவனியுங்கள் . எப்பேர்பட்ட கீழ்த்தரமான ஆபாசம் உள்ளது என்று ???? இந்த களம் தனியார் நடத்தும் களம் என்பது தெரிந்ததே .கள விதிகள் என்பது சிலருக்கு மட்டுமே வகுக்கப்பட்டு இருக்கிறதா ???????????????????????

யாழ் களத்தில் உள்ள மிகபெரிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று . திரி ஆரம்பமாகும் போது ஒரு விஷயத்திற்காக ஆரம்பிக்க பட்டிருக்கும் . ஆனால் போக போக தாறு மாறாகி எங்கெங்கோ திரி சென்று திரியின் ஆரம்ப கருத்தையே ஒன்றும் இல்லாது ஆக்கி விடும் .

இதெல்லாம் கருத்து உரிமையில் சகஜம்.

என்னசெய்வது நாம் தான் ஓடுகிற மாட்டை நாணக்கயிறால் இழுத்து விடவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.