Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜரோப்பாவில் பலமடைந்து வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Europe-140x140.jpg

ஐரோப்பிய வலயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் பலமடைந்து வருவதாக அங்கு வாழும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் த பேர்னிச்சர் என்ற ஐரோப்பியப் பத்திரிகைக்கு விசேட செவ்வி ஒன்றை வழங்கியுள்ளனர்.

இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் ஒழிக்கப்பட்ட தீவிரவாதச் சக்திகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்பட்டு வருவதாக குறித்த இலங்கையர்கள் குறிப்பிட்டுள்ளதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணாமாக தங்களுக்கு அச்சுறுத்தல் வரும் சந்தர்ப்பங்களும் காணப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், ஐரோப்பிய வலயத்திற்குள் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல், கொள்ளை, உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு இவர்களே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தி வருவதாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கையர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.vanakkamn...om/ltte-europe/

நாம் தொடர்ந்தும் அரசியல் ரீதியில் பலமடைந்து, சர்வதேச ஆதரவு ஊடாக ஒரு அரசியல் தீர்வை பெறுவோம். நாம் எல்லோரும் அதற்கு உரிய விலைகளை ஏற்கனவே கொடுத்துள்ளோம்.

மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒடுக்க பட்டு உரிமை மறுக்க பட்டு இன ஒழிப்புக்கு ஆளாக்க படும் மக்கள் தமது உரிமையை பெற நாடாத்தும் போராடங்களை 'பயங்கரவாத' முத்திரை குத்தி இலங்கை வெற்றியும் பெறுகிறது. இதை முறியடிக்க உலக தமிழர் ஒற்றுமை பட வேண்டும். தமிழருக்கு எதிரான இலங்கையின் பரப்புரையை முறியடிக்க வேண்டும். ஒற்றுமை அவசியம்.

"பயங்கரவாதத்திற்கு எதிராக சார்க் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்- ஜீ.எல்.பீரிஸ்"

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை படித்து விட்டுதான் தமிழ் அரசுஇங்கு இனைத்தாரா என்பதே சந்தேகமாய் உள்ளது.

எவ்வளவு விஷமத்தனமாய் செய்தி புனையப்பட்டுள்ளது என்பதை கவனிக்கதவறுகிறோம்

இதைத்தான் காலகாலமாக சிறிலங்கா அரசு பிரச்சாரம் செய்து வருகின்றது நாமும் இதை முறியடிக்க பல போராட்டத்தை நடத்துகின்றோம் இதை கவனத்தில் எடுக்காத உலக நாடுகள் என்னதான் செய்யமுடியும் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை படித்து விட்டுதான் தமிழ் அரசுஇங்கு இனைத்தாரா என்பதே சந்தேகமாய் உள்ளது.

எவ்வளவு விஷமத்தனமாய் செய்தி புனையப்பட்டுள்ளது என்பதை கவனிக்கதவறுகிறோம்

பெருமாள் நான் இணைக்கும் செய்திகள் எனது கருத்தாகாது, தயவு செய்து என்னை தவறாக புரியவேண்டாம். சில செய்தியில் எனக்கு உடன்பாடு இருக்கும் சிலதில் இருக்காது இருந்தும் இணைப்பேன் இதில் நல்லது கேட்டது இரண்டும் இருக்கும் அதில் நாம் எதை எடுக்கின்றோம் என்பதே முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளும் அமெரிக்கா, இந்திய,பாகிஸ்தான்,சீனா,இரஸ்சியா என்று உலகம் முளுவது ஆயுதம்,தொழில்னுட்ப உதவி என்று செய்து இலங்கையை ஊக்கப்படுத்தி அமைதி பேச்சிலிருந்து திசை திருப்பி போரை உருவாக்கி அப்பாவி பொது மக்களைக்கொன்று ஊனமாக்கி நடுத்தெருவிற்கு கொண்டு வந்து அடுத்தவேளை உணவிற்கே மற்றவர்களிடம் கை ஏந்தும் நிலைக்கு மக்களை கொண்டு வந்து போராட்டத்தினாலேயே இவ்வாறு ஏற்பட்டது என்பதுடன் நின்றுவிடாது மக்களின் கவச்சமான புலிகளை அழித்துவிட்டு அதன் பின்னணியில் இருந்து மக்களை இந்த பூதங்களிடம் இருந்து காக்க உதவி செய்த புலம்பெயர் தமிழர்களையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியுள்ளது

இந்த உலகம் தான் செய்த தவறுக்கு புலம் பெயர் தமிழர்களிடமே நட்ட ஈடு கோருகிறது, நம்மிக்கையின் தளத்தில் உருவாக்கப்படுகின்ற அரசியல் கட்சிகளாக நமது அரசியல் கட்சிகளாக உருப்பெறாமையால் அதன் தளம்பல் கொள்கைகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது.

இந்த அரசியல் கட்சிகளின் குழப்பனிலையால் ஏற்படுகின்ற இடைவெளியை புலம்பெயர் தமிழர்கல் நிரப்ப முற்பட முடியாது என்பதை சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு யாரும் வலியுறுத்த தயாராக இல்லை இன்றைய போருக்கு பின்னான காலத்தில் சரியான அரசியல் முன்னெடுப்பில்லாத நிலையே மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை மீழ் முடியாத இருளிற்கு இளுத்து செல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் வியாதிகளில் இரண்டு வகையுண்டு தோழரே ..

வெற்றி பெறுவதற்காக பொதுவான வாக்குறுதியை திணிப்பவர்..

வெற்றி பெற்ற பின் சூழ்நிலையை காரணம் காட்டி தமது கொள்கைகளை "இதான் இப்போதைக்கு எங்களால் முடியும் என " மக்களை தம் வழிக்கு கெஞ்சி கூத்தாடியாவது கொண்டு வருபவர்கள் ஆக எரியும் கொள்ளில் நல்ல கொள்ளியை எடுத்து சொறிந்து கொள்ள வேண்டியதுதான்.,.,. ^_^ ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிலுக்கு நாமும், சிங்களவரின் மாகவம்சதில் தமிழர் கீழானவர்கள் என்று சொல்லபட்டிருபதையும், அதை சிங்களவர் தமது பிள்ளைகளுக்கு படிப்பதையும், சிங்கள தலைவர்களும் அரசியல் வாதிகளும் தமிழருக்கு எதிரான இனவாத கருத்துகளை காலம் காலமாக சொல்லி வருவதையும் உலக நாட்டு தலைவர்களுக்கு எடுத்து கூறி, சிங்கள அரசு தலிபான்களை விட மோசமானவர்கள் என்ற செய்தியை பரப்ப வேண்டும்.

தமிழ் மக்கள் சொத்துகள தமிழர் நிலம் சொத்து தமிழர் என்கிற அடையாளம் எல்லாமே மிக வேகமாக பறிக்கபட்டுகொண்டு உள்ளது.

எமக்கு சுயாட்சி வேண்டாம், என்று கீழ இறங்கி வருகிற அளவுக்கு இந்தியா கூடமைப்பை தள்ளுவது போல தெரிகிறது.

தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம், மதம், மொழி அனைத்துமே அழியும் நிலைக்கு ஸ்ரீ லங்கா தமிழரை சிங்கள மத, மொழி பண்பாட்டுகளால் சூழ்ந்துள்ளது.

என்ன ... ஐரொப்பாவில் புலிகள் பலமடைந்து வருகிறார்களோ????????

ம்ம்ம்ம்ம்ம்..... கூறு போட்டு விற்க முண்டியடித்துக் கூட்டங்கள் ...

* தலைவரோடை இறுதிவரை இருந்து விடு வந்தவர்கள்!

* நீண்டகால குத்தைகைக்கு எடுத்தவர்கள்!

* தேசிய தலைவராகும் கனவுகளுடன் உலாவுபவர்கள்!

* மாவீரர் நாளை, வசூல்நாளாகும் கனவுகளுடன் ஓயாது செயற்படுபவர்கள்!

* இந்திய புலனாய்வுத்துறையினர்!

* சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள்!

*

*

...

... நிச்சயம் பலம் பெறும்???????????

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பின்குறிப்பு எழுத பல்வேறு கருத்துகள் உள்ளன..ஆனால் ஒரு வாரட்த்துக்குள் இரண்டு தடவைகள் நீங்கள் எனக்கு ததெரிவிக்காமல் என் பின்குறிப்புகளை நீக்கி இருக்கிறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

பலம் பலவீனம் புலம்பெயர்ந்த தமிழன் ஈழத்தமிழன்எல்லாம் நன்மைக்கேபி.கு.

எனக்கு பின்குறிப்பு எழுத பல்வேறு கருத்துகள் உள்ளன..ஆனால் ஒரு வாரட்த்துக்குள் இரண்டு தடவைகள் நீங்கள் எனக்கு ததெரிவிக்காமல் என் பின்குறிப்புகளை நீக்கி இருக்கிறீங்க.

கவிஞர் ஐயா வ செ ஐ இன் பிரச்சனையை யாராவது தீர்த்து வையுங்கள்.ஐயா முறைப்பாடு செய்யும் முறை இதுவல்ல  Report

அத்துடன், ஐரோப்பிய வலயத்திற்குள் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல், கொள்ளை, உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு இவர்களே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதை விடுகிறார்கள். பணம் போனால் உழைத்து கொள்ளட்டும். ஆனால் ஐரோப்பிய உறவுகளே உங்கள், சொந்தங்கள், சிநேகிதங்களை இடை இடை ஒரு கோல் போட்டு சேம்மாக இருகிறார்களா என்று பார்த்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் தமிழர்களை பயங்கரவாதிகளாக காட்டவே மேற்படி கட்டுரை முனைகிறது.

யார் அந்த இலங்கையர்கள்?

சிறிலங்கா அரசு தனது நாசகார வேலையில் சிறிது வெற்றி பெற்று உள்ளதா என நினைக்க வேண்டியுள்ளது புலம்பெயர் தேசங்களில் நாம் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் இருப்போம் என பேசிப்பேசி பிளவு பட்டுள்ளோம் எதிர்காலத்தை நினைத்தால் பயமாகவுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.