Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சோபாசக்தி வர்றார்; சொம்பைத் தூக்கி உள்ள வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோபாசக்தி வர்றார்; சொம்பைத் தூக்கி உள்ள வை

இந்திய பொதுவுடமை இயக்கத்தின் விடிவெள்ளி அன்புத்தோழர் சாரு மசூம்தார் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டு ஆவணங்களில் அதிலும் 1965ஆம் ஆண்டு 28 ஜனவரியில் “தற்போதைய சூழலில் நமது கடமைகள்“ என்ற தலைப்பில் எழுதப்பட்ட முதல் ஆவணத்தில் ஒரு பொதுவுடமை கட்சி கமுக்க (ரகசியம் அல்லது தலைமறைவு) கட்சியாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் அப்பொதுவுடமைக்கட்சியின் உறுப்பினர்கள் தலைமறைவு ஊழியர்களாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் குறித்து விளக்குவார். அதிலும் அவர் அதை “நமது அமைப்பின் முழக்கங்கள்“ என்ற தலைப்பின்கீழ் ஏழு முக்கிய குறிப்புகளாக வலியுறுத்துவார். நீண்டகால மக்கள் யுத்தமே இனிமேல் இந்த இருபது மற்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கு பலனளிக்கும் என்று பேராசான் மாவோ நடைமுறையால் விளக்கிய பிறகு கமுக்க கட்சியின் தேவையும் அதன் உறுப்பினர்கள் தலைமறைவாக இருக்கவேண்டியதன் அவசியமும் உலகிலுள்ள அனைத்து பொதுவுடமைவாதிகளுக்கும் அரசெதிர்ப்பு போராளிகளுக்கும் புரிய ஆரம்பித்தது. முக்கியமாக இந்தியாவில் இந்திய பொதுவுடமைக்கட்சி (மாவோவியர்) மற்றும் ஈழத்தில் விடுதலைப்புலிகளும் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் ஒருசில பொதுவுடமைக்கட்சிகளும் தேசிய விடுதலைக்கான அமைப்புகளும் அக்கம் பக்கமான ஆயுதப்போராட்டத்தை நீண்டகால நோக்கில் கைக்கொள்வதால் அந்த அமைப்பிற்கும் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் கமுக்கம் அல்லது ரகசியத்தை காக்க வேண்டியதன் அவசியங்களும் அப்படி காப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகளும் நன்கு தூலம்.

அசந்தால் அரசப்படைகள் நமது மீது பாயும், ரகசியங்களை காப்பதில் சிறிது கோட்டைவிட்டாலும் கைக்கூலிகள்மூலம் கைதுசெய்து போட்டுத்தள்ளி மோதலில் (என்கவுண்டர்) போட்டதாக கதைகட்டி அவார்டை வாங்கி நெஞ்சில் குத்திக்கொள்வார்கள் உளவுத்துறையினர். உலகின் வெள்ளையரசப்படைகள் இப்படி இருக்கிறது என்பதால் இருபத்திநான்கு மணிநேரமும் வடிவேலு சொல்வதுபோல் விளையாட்டாக இருந்தாலும் அலர்ட்டாக இருக்கவேண்டிய தேவை புரட்சியாளர்களுக்கு இருக்கிறது. இல்லையேல் “தோழா தியாகியானாய், உன் தியாகம் பற்பல தோழராய் உருப்பெறும்” என்று வீரமரணமடைய வேண்டியதுதான், சுவரொட்டி போடவேண்டியதுதான். அதுபோக தலைமறைவுதோழர்களுக்கு இந்த ரகசிய செயல்பாடுகள் மீன்குஞ்சு நீந்த கற்றுக்கொள்வதுபோல் மிக இயல்பாக வரும்.

இதுபோன்ற தலைமறைவு ஊழியர்களை மேலும் தலைமறைவாக இருந்து கைது செய்யும் காவல்துறை எவ்வளவு கெட்டிக்காரனாக கொடாக்கண்டனுக்கு விடாக்கண்டனாக இருப்பார்கள் என்பதும் அதுபோக அந்த மக்கள்எதிரிகள் தகவல் தொழில் நுட்பரீதியில் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளார்கள் (தோழர் பிரபாகரனுக்கு மட்டும் தனி உளவு செயற்கைக்கோள்) என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. உதாரணமாக இந்திய மாவோவியக்கட்சியின் மாபெரும் தலைவர்களான சியாம், மகேசு, முரளி போன்றவர்கள் போலி மோதலில் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய உளவுத்துறையின் கடுமையான உழைப்பு நமது கண்களுக்கு நன்கு தெரியும். அதிலும் இந்த மாபெரும் தோழர்களை கைதுசெய்வதற்காக பெங்களூரில் காவல்துறையினர் பால்விற்பவனாகவும், செய்தித்தாள் போடுபவனாகவும் வேலைபார்த்து அவர்கள் தங்கியிருந்த வீட்டைப்பற்றி உளவு அறிந்து பின்பு அவர்களை இவர்கள்தான் மாவோவியக்கட்சியின், இந்தியப்புரட்சியின் முக்கிய தூண்கள் என்பதைக் கண்டறிந்து, குடிக்கும் பாலில் மயக்கமருந்தை கலந்து கொடுத்து அந்த மாபெரும் வீரர்களை கோழைத்தனமாக சித்திரவதை செய்து கொன்றது இந்திய உளவுத்துறை. இதிலிருந்து நாம் ஓர் அரசின் உளவுத்துறையின் பாரதூரமான வலிமையைத் தெரிந்து கொள்ளலாம்.

அதுபோக பேராசான் லெனின் பொதுவுடமைவாதிகள் ஒரு முதலாளித்துவாதியின் மூளையையும் பொதுவுடமைவாதியின் இதயத்தையும் கொண்டிருக்கவேண்டும் என்று பொருள்பட உரைப்பார் (இதன்மீது பிற்காலங்களில் விமர்சனங்கள் எழுந்தாலும்). உதாரணமாக அமெரிக்க உளவுத்துறையின் உளவாளிகள் மக்கள் பணியில் நின்ற சோவியத் பொதுவுடமைவாதிகளை விட பல மடங்கு ரகசியத்தில் கரைதேர்ந்தவர்கள் என்பதை நாம் மனதில் இருத்தவேண்டும். உளவுத்துறையில் வலிமையான புலிகள் வாழ்ந்த ஈழத்தில் பிறந்தவர் இந்த சோபாசக்தி (ஈழத்தில் இருப்பவர்கள் இருந்தவர்கள் அனைவருக்கும் தங்களை அறியாமலேயே இந்த ரகசியத்தன்மை தானாவே வரும். ஏனெனில் அங்கு இரு அரசாங்கங்கள் சமநிலையில் மோதிக்கொண்டிருந்த காலம் அது). அதுபோக உப்புக்குச் சப்பாணியாக புலிகள் இயக்கத்தில் கொஞ்சகாலம் தின்று கோயில்காளையாக அலைந்து அடிவாங்கி ஓடிவந்தவர். அதன்பின்பாக இந்த உதிரி இலங்கை பேரினவாத அரசின் கையாளாக திரிந்துபோனது ஊரறிந்த உண்மை.

shobasakthi_351.jpg

வாசகர்களே, மேற்சொன்ன பின்னணியில் இப்போது சோபாசக்தியின்மீது தோழர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்களை கவனியுங்கள். இலங்கை அரசாங்கத்திடம் கையூட்டு பெற்ற விவகாரம் என்பது போன்று மேலும் பல குற்றச்சாட்டுக்கள் அவர்மீது வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் முக்கியமாக இந்த பணம் பெற்ற குற்றச்சாட்டை நிரூபிக்கச் சொல்கிறார் சோபாசக்தி, அதிலும் குற்றஞ்சாட்டியவர்களுக்குத்தான் அதை நிரூபிக்கவேண்டிய கடமை இருக்கிறது என்று மகஇகவின் வினவு தளம் சொன்னதை வழிமொழிந்து, தோழர்களை மேற்சொன்ன குற்றச்சாட்டுகளை நிரூபிக்கச் சொல்கிறார். ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம், அவராக சுயவிமர்சனம் செய்து தான் செய்த தப்புக்களை ஒத்துக்கொண்டாலன்றி உறுதியாக நம் தோழர்களால் சோபாசக்தியின் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது. ஏனெனில் அவர் உப்புக்கு சப்பாணியாக புலிகள் இயக்கத்தில் இருந்திருந்தாலும்கூட, அந்த மாபெரும் இயக்கம் அவருக்கு தலைமறைவு உத்திகளையும் ரகசிய செயல்பாட்டின் அடிப்படைகளையும் சொல்லித்தந்திருக்கும். தலைமறைவு உத்திகளைப் பின்பற்றுதலில் தெற்காசிய பிராந்தியத்தின் தலையாய இயக்கமான விடுதலைப்புலிகளிடம் உப்புக்குச் சப்பாணியாக காலந்தள்ளிய சோபாசக்தியும், அப்பேர்ப்பட்ட விடுதலைப்புலிகளையே சில விடயங்களில் மிஞ்சிய இலங்கை பேரினவாத சக்திகளும் (உதாரணம் தோழர் தமிழ்ச்செல்வன் படுகொலை) கூட்டுச்சேர்ந்து ஒரு சதிவேலையைச் செய்யும்போது, சோபாசக்திக்கு கையூட்டு அளிக்கும்போது அதை கீற்று இணையதளமும் வினவு இணையதளமும், தனிநபர்களும் எப்படி கண்டறிய முடியும்?.

இங்கு வாசகர்கள் ஒன்றை நன்றாக நினைவில் வைக்கவேண்டும். இவரின் செலவுகளுக்கு கொடுக்கல் வாங்கல் போன்ற வேலைகளைச் செய்து வருவது இலங்கைப் பேரினவாதத்தை அண்டிப் பிழைக்கும் கைக்கூலிகளே. (புலிகள் இயக்கத்தின் ராணுவத் துறையையே தோற்கடித்த இந்த சக்திகள் அதன் கைக்கூலிக்கு எப்படி கள்ளக்கணக்கு வைக்கவேண்டும் என்று சொல்லித் தந்திருக்காதா என்ன?)

ஆனால் மக்கள் சோபாவின் மீதான குற்றச்சாட்டுக்களை சோபா எழுதும் எழுத்துக்களின் மூலம் ஊகித்து அதன்பின்பாக அவரின் நடைமுறைகளின் மூலம் உறுதிப்படுத்த முடியுமே தவிர உறுதியாக கண்டறிந்து அவர் ஒரு கைக்கூலிதான் என்று அய்யந்திருபுற முதலாளித்துவ நீதிமன்றங்களின் நடைமுறைகளின் வழியாக நிரூபிக்க முடியாது. ஆனால் இன்னொரு விடயம் இங்கு முக்கியம். இந்த கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கமுக்க செயல்பாடுகள் இயல்பாக (அது மக்கள் இயக்கமாக இருந்தாலும் சரி, அரசு ஒடுக்குமுறை நிறுவனமாகயிருந்தாலும் சரி) பாட்டாளிவர்க்கத்திற்கும் குட்டிமுதலாளி வர்க்கத்திற்கும் வரும், ஆனால் என்னதான் உதிரி வர்க்கம் (வர்க்கம் என்று அவர்களை அழைப்பதில் எனக்குத் தயக்கமுண்டு) தலைமறைவுக் கட்சியிலேயோ அல்லது அரசு நிறுவனத்திலோயோ வீரதீரசாகசவாதிகளாக திகழ்ந்தாலும் ஒப்பீட்டளவில் அவர்களால் கடுமையான கமுக்க செயல்பாடுகளை பின்பற்ற இயலாது. அப்படிப்பட்ட உதிரிகள் முக்கியமாக காவல்துறையின் கைக்கூலியாக மாறும்போது என்னதான் கமுக்க நடைமுறைகளை செயல்பாடுகளை கடைப்பிடித்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கி விடுவார்கள் (மன்னார் அன் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றுவது, பின்பு அதற்கென்று ஒரு திறமை வேண்டுமென்று தம்பட்டம் அடித்துக்கொள்வது). அப்படி சறுக்கி விழுந்தாலும் ஆய் பூய் என்று சவுண்டு விட்டு தப்பிவிடுவார்கள் (சோபாவின் முகப்புத்தகச்சண்டைகள்). ஏனென்றால் உதிரியின் தன்மை அப்படி.

அதுபோக இந்த உதிரி வர்க்கம் காவல்துறையின் கைக்கூலியாக ஆனபிறகு அந்தப் பணத்தில் ஒரு குட்டிமுதலாளித்துவ வாழ்க்கையை அமைத்துக்கொண்டபிறகு முன்பு தாம் செய்த வீரசாகசங்களை (சோபாசக்திபோல் ஒன்றுமே உருப்படியாக செய்யவில்லையென்றாலும்கூட) வைத்துக்கொண்டே காலத்தை ஓட்டுவார்கள். அதுபோக பணம் என்று வந்தால் எந்தப் பக்கமும் சாயத் தயாராக இருப்பார்கள். என்ன சோபாசக்தியின் வாழ்க்கை குறிப்புபோல் இருக்கிறதா? நான் அவரின் வாழ்க்கைக் குறிப்பை ஒன்றும் எழுதிக்கொண்டிருக்கவில்லை, மாறாக உதிரிகளின் குணாம்சங்களை பற்றிப் பேசுகிறேன். அப்படி இந்த உதிரி + இலங்கை அரசின் நண்பர் சோபாசக்தி சறுக்கி வழுக்கி விழுந்து புட்டாணியை உடைத்துக்கொண்ட இடம் அவரின் கைக்கூலித்தனம். நிற்க.

சமீபத்தில் சோபா சக்தி தனது முகப்புத்தகத்தில் கீழ்க்காணும் நிலைச்செய்தியை வெளியிட்டிருந்தார்.

கீற்று ஆசிரியர்களான ரமேஷ், ப்ரியா தம்பி மற்றும் இவ்விவாதம் குறித்து கருத்துரைத்த தோழர் சார்ள்ஸ் ஆன்டனி மற்றும் தோழர்களுக்கும்... கீற்றுவில் பிரசுரித்த ஆசாத்தின் இந்த பதிவை //சோபாசக்தி இப்படி செலவுசெய்வதற்கு பணம் எப்படி கிடைக்கிறது என்று கணக்கு கேக்கலாம். உண்மையிலேயே அவர் சரியான கணக்குவழக்கை ஒப்படைத்தால் அவருக்கு கடன் இருந்தால் உங்கள் தலைமையிலேயே பணம் வசூலித்துக் கொடுக்கலாம்.// நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். எதிர்வரும் 24ம் தேதியிலிருந்து 28ம் தேதிவரை சென்னையிலிருப்பேன். நீங்கள் எங்கு இதுகுறித்து உரையாட அழைத்தாலும் நான் வருகிறேன். இப்போது உங்கள் சவாலை நீங்கள் நிறைவேற்றவேண்டிய தருணம். நேரில் சந்திப்போம் ஆசாத், ரமேஸ், பிரியா தம்பி, சார்லஸ் ஆன்டனி.. இடத்தை ஒழுங்கு செய்துவிட்டு எனக்கு அறிவியுங்கள். நான் அங்கிருப்பேன்.Shobasakthi@hotmail.com (https://www.facebook.com/permalink.php?story_fbid=2606896573196&id=1278388099)

இதனையடுத்து எழுந்த சோபாவின் சல்லியடிப்புகளுக்கு விரிவான பதிலாக – முகப்புத்தக நண்பர்களைத் தாண்டி – பொதுவாசகர்களுக்காகவும் இதை எழுத வேண்டியிருக்கிறது. எவ்வளவு அடித்தாலும் ஒருவர் தாங்குவதை வேடிக்கை பார்க்கும் நல்வாய்ப்பைத் தவிர இந்தக்கட்டுரையை வாசிப்பதில் வேறொன்றும் உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்ற என் முன்னெச்சரிக்கையை மனதில் நிறுத்திக்கொண்டு இதை வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கண்ட சோபாவின் அறைகூவலுக்கு கீழ்க்காணும் பதில் எழுதியிருந்தேன்.

தோழர் சந்திரசேகர ஆசாத் அன்புத்தோழர் அ.மார்க்சுக்கு,,, அரசியலை ஆணையில் வைப்போம்.. (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13577%3A2011-03-15-15-13-38&catid=1%3Aarticles&Itemid=264) என்ற கீற்றுவில் வெளியான கட்டுரையில் தம்பி சோபாசக்தி வெளியிட்ட அந்த வரிகளை எழுதியிருந்தார். அந்தக்கட்டுரை மார்ச் 16 அன்று எழுதப்பட்டது. அதன்பின்பாக நான் ஏப்ரல் 28ந்தேதி அன்று சோபாசக்தி 'குறித்து கருத்துரைத்திருந்'தேன். (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14355&Itemid=139). அதில் நான் எழுதியது இதுதான்.

“சரி இப்போது கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு வருவோம். தோழர் ஆசாத் இவரிடம் கணக்கு கேட்கிறார். அந்தக் கணக்கை மக்கள் மன்றத்தில் வைக்கவேண்டும் என்கிறார். அதற்கு சோபாசக்தியின் பதில் என்னவென்றால் மக்கள் மன்றத்தை கூட்ட வேண்டுமாம். அதன்பின்னால் வருவாராம். வந்து கணக்கு ஒப்படைப்பாராம். எதுக்கு இந்த பஞ்சாயத்து? தோழர் ஆசாத் மக்கள் மன்றத்தை கூட்டுவதாக சொன்னதும் அல்லது அவர் கூட்டுவதும் இருக்கட்டும். சோதாசக்தி உங்களிடம் காண்டம் வாங்கியது வரை கணக்கிருக்கிறது. அதனால என்ன பண்ணுங்க. அத்தனை கணக்கையும் உங்க இணையத்தளத்தில போட்டுருங்க. ஒரு கட்டுரையில எக்கச்சக்க புத்தகம் வைத்திருப்பதாகச் சொன்னீர்கள். அந்தக் கணக்கையும் மறந்து விடவேண்டாம். அப்படியே கடவுச்சீட்டு (அது இல்லையென்றால் அதுக்குண்டான டாக்குமெண்டு) உங்களுக்கு இருந்தால் அதை ஸ்கேன் செய்து போட்டுவிடவும், எந்தெந்த நாட்டுக்கு போனீர்கள் என்பது மக்களுக்கு தெரிய வேண்டுமல்லவா.

rajapakse_karuna1.jpg

வரவு என்ன, செலவு என்ன, கடன் எவ்வளவு, கடன் கொடுத்த வங்கி எது, வேலையில்லாத ஒருவருக்கு எவ்வளவு வங்கிக் கடன் கிடைத்தது, கடனுக்கு வெளிநாட்டுப் பயணச்சீட்டு கொடுத்த நிறுவனம் எது, அங்கு எவ்வளவு கடன் உள்ளது, காண்டம் கணக்கு எவ்வளவு எல்லாத்தையும் இணையதளத்தில் போட்டுவிடலாமே? எதுக்கு தோழர் ஆசாத், தோழர் நந்தன்? சட்டுப்புட்டுன்னு செய்யுங்கப்பு... வழக்கு, விசாரணை, மக்கள் மன்றம் எல்லாம் அப்பால பாத்துக்கலாம். நம்ம கருணாநிதியே கணக்கை செய்தித்தாளில் வெளியிடும்போது, சோதா சக்தி வெளியிடுவதில் என்ன சிக்கல் இருக்கமுடியும்? ஆனால் ஒண்ணு, எல்லாத்தையும் தெளிவாக ஸ்கேன் செய்து கொடுத்துப்புடணும். வெறுமனே வங்கிப் பெயர் தரக்கூடாது. எந்தக் கிளை, கிளை முகவரி, வங்கிக் கணக்கு விவரம், டிராவல்ஸ் ஏஜென்சியின் முகவரி எல்லாம் சாப்ஜாடா கொடுத்துவிட வேண்டும். அவதூறுகளுக்கு உடனடியா பதில் போடும் நம் சோதாசக்தி இதையும் வேகமா செய்தால் நலம்.”

மேலே நான் எழுதிய கட்டுரையின்படி அவரின் கணக்குவழக்குகளை இணையதளத்தில் போடுமாறு கேட்டுருந்தேன் என்பது இங்கு மிக முக்கியம். ஏனென்றால் கடைசிநேரத்தில் இவர் ஒப்படைக்கும் கணக்குவழக்கு, ஏமாத்துவேலையாக இருந்துவிடுமோ, அதனால் சோபாவின் பெயர் கெட்டுவிடுமோ என்ற அச்சம்தான் காரணம் (அதுபோக கைக்கூலிக்கு கள்ளக்கணக்குக்கு பஞ்சமா என்ன?).

மார்ச் 16ல் எழுதப்பட்ட தோழர் ஆசாத்தின் கட்டுரையை தனக்கு வசதியாக வைத்துக்கொண்டு, பின்பு ஏப்ரல் 28ல் கணக்கு வழக்குகளை இணையதளத்தில் போடச்சொல்லி நான் கேட்ட கட்டுரையை வசதியாக மறைத்துவிட்டு பேசுவதற்குப் பெயர் மருத்துவ மொழியில் செலக்டிவ் அம்னீசியா என்றும் மார்க்சிய மொழியில் குறுக்கல்வாதம் அல்லது வெட்டல்வாதம் (எம் முன்னாள் தோழர் தற்போதைய உங்கள் குரு(டி) நாதரிடம் கேளுங்கள், விளக்குவார்) என்றும் சென்னைமொழியில் மொள்ளமாரித்தனம் என்றும் அறியப்படும்.

வருவதற்கு இன்னும் இரண்டுநாட்கள் இருக்கிறது. இதுவரை கணக்குவழக்கை இணையதளத்தில் போடுவார் என்று காத்திருந்தோம். தம்பி போடாததால் இந்த நினைவூட்டுக்கடிதம். கணக்குவழக்கை தனது இணையதளத்தில் போடுவார் என்று நம்புவோமாக.

பின்குறிப்பு. அதுபோக என்ன அடிச்சாலும் (அய்யய்யோ வன்முறை என்று கத்துவார் பாருங்க…) திரும்ப திரும்ப யாரிடமாவது (போனவாரம் சேனன்) அடிவாங்கிவிட்டு அதுபோனமாசம் என்ற ரேஞ்சில் பேசும் எழுதும் சோபா ரொம்ப நல்லவருதான். இதுதான் முகப்புத்தகத்தில் நான் எழுதிய பதில்.

ஆனால் சோபாசக்தி கடைசிவரைக்கும் கணக்கை வெளியிடவில்லை. அதோடு தனது பதிலில் ஏதோ தோழர் ஆசாத் தன்னையே அழைத்ததுபோல் துள்ளுகிறார் சோபா. ஆனால் அது உண்மையல்ல. ஆசாத் அழைத்தது அ.மார்க்சை. அ.மார்க்சு வேண்டாம், நானே வருகிறேன் என்று சொல்வதன்மூலம் இரண்டு விடயங்களை சாதிக்க நினைக்கிறார் சோபா. ஒன்று ஒரு புரட்சிகரமான வாழ்வை வாழ்ந்து இன்று சறுக்கி விழுந்து நிற்கும் அ.மார்க்சு இடத்தை மிகவும் எளிதாக இவரே பூர்த்தி செய்ய முயல்கிறார். இரண்டாவதாக தன்னை நாடறிந்த துரோகி என்ற நிலையிலிருந்து ‘துரோகியா? இல்லையா?’ என்ற நிலைக்கு உயர்த்திக்கொள்கிறார்.

நான் தோழர் ஆசாத்தை இன்னாரென்று அறியேன் என்றாலும், அவரே சொல்லியிருப்பதிலிருந்து நல்ல மார்க்சிய லெனினிய அமைப்பில் பயிற்சி பெற்றவர் என்ற முறையில் அன்புத்தோழர் அ.மார்க்சுக்கு’ என்ற கட்டுரையை தோழர் ஆசாத் எழுதியிருக்கிறார் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக அந்தக்கட்டுரையைக் கூர்ந்து கவனித்தால் சோபா தோழரா அல்லது கைக்கூலியா என்ற அய்யப்பாட்டில் எழுதப்பட்டதல்ல, மாறாக அவர் துரோகிதான் அதை அ.மார்க்சு உணர்ந்து கொள்ளவேண்டும், இல்லையென்றால் அ.மார்க்சு அம்பலப்பட்டு நிற்கவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டது அந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரை சோபாசக்திக்கான பரீட்சையல்ல... (ஏற்கனவே மக்களால் பெயிலாக்கப்பட்டு, அம்பலப்பட்டு அம்மணக்குண்டியாக நிற்பவருக்கு மீண்டும் பரீட்சையெல்லாம் வைக்க தோழர் ஆசாத் என்ன டுடோரியல் சென்டரா நடத்துகிறார்?)

இப்போது துரோகிகளின் கைப்பாவையாக மாறிப் போனாலும், முன்னாள் தோழர் என்ற மரியாதையில் அ.மார்க்சிடம் சோபாவின் கணக்குவழக்குகளை சரிபார்க்குமாறு ஆசாத் எழுதியிருக்கலாம். ஆனால் அந்த இடத்தை சோபா பிடிப்பதை என்னவென்று சொல்வது? எதால் சிரிப்பது? கேட்டால் என்னைத்தான் குற்றஞ்சாட்டினீர்கள், அதனால் என்னைத்தான் நேரில் சந்திக்க வேண்டுமென்று அடம் வேறு. ஏதோ ராசபக்சே தமிழ்நாட்டிற்கு வந்து அத்தனை தமிழர்களையும் சந்தித்து நான் இனப்படுகொலையாளன் இல்லை என்று நிரூபிக்க வருவதுபோல் இருக்கிறது இந்தக்கதை.

அதுபோக சோபா அறைகூவலொன்றை விடுத்திருந்தார். அதில் என் பெயரையும் போட்டு (அதுவும் தோழர் என்ற பட்டம் வேறு, துரோகிகளின் வாயினால் தோழர் என்று அழைக்கப்படுவதைக்கூட நான் அவமானகரமானதாக உணர்கிறேன்.) விசாரணைக்கு வரத்தயார், எப்போது என்று சொல்லுங்கள் என்று கொக்கரிப்பு வேறு. வாசகர்களிடம் நான் இங்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அ.மார்க்சைச் சொல்லி மக்கள் மன்றத்தை கூட்டவேண்டும், பெருக்கவேண்டும் என்பதெல்லாம் தோழர் ஆசாத் அவர்களின் கருத்துக்களே. சார்லசு அன்ரனியான நான் எப்போது இந்த சோபாசக்தியை மக்கள் மன்றத்திற்கோ, நீதிவிசாரணைக்கோ வரச்சொன்னேன்? ஒரு காலத்திலேயும் இல்லையே…? ஓரளவிற்கு அ.மார்க்சின் மீது தோழர் ஆசாத்திற்கு நம்பிக்கை இருந்திருக்கிறது (இன்றைய நிலையில் அது இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமிருக்கிறது). ஆனால் முன்னாள் தோழர் அ.மார்க்சின் மீதே எமக்கு நம்பிக்கையில்லை என்றபோது கைக்கூலியோடு பேச்சுவார்த்தையாவது, வெங்காயமாவது?

சோபாவுக்காக ஒரு கூட்டம் நடத்த வேண்டுமாம்; அதில் வந்து கணக்கு வழக்குகளைத் தருவாராம்; அதை நமது இணையதளங்களில் போடவேண்டுமாம்; அவர் இணையதளத்தில் போட்டால் வாசகர்கள் வருத்தத்தில் நாண்டுக்கிடுவார்களாம். கடன் உறுதியானதும் அதை நாம் அடைக்க வேண்டுமாம்.

a_marx_shobasakthi_600.jpg

சோபாசக்தி சொல்கிற வேலைகளை எல்லாம் தலைமேல் போட்டுக்கொண்டு செய்வதற்கு, அவர் ஊற்றிக்கொடுக்கும் சீமை சரக்கிற்காகவும், தூக்கி எறியும் வெள்ளிப்பணத்துக்காகவும் அலைபவர்கள் வேண்டுமானால் தயாராக இருக்கலாம். எங்களைப் பொருத்தவரை சோபா ஒரு திட்டவட்டமான துரோகி. மக்கள் கருத்தியலுக்கு, மக்கள் விடுதலைக்கு எதிரான துரோகியான உதிரி. இந்த துரோகியை மக்கள் முன் அம்பலப்படுத்துவது எங்கள் வேலை. இல்லை என்று நிரூபித்துக் கொள்வதும், காப்பாற்றிக் கொள்வதும் துரோகி அல்லது துரோகியைத் தூக்கி வைத்துத் திரிபவர்களின் வேலை. அ.மார்க்சை தோழர் ஆசாத் ஏன் அழைத்தார் என்பதை இங்கே பொருத்திப் பார்த்தால் வாசகர்களுக்கு இது நன்கு புரியும்.

சோபாசக்தி கடன் வாங்கித்தான் இத்தனை ஆடம்பரங்களும் செய்கிறார் என்பது உறுதியானால், உண்டியல் ஏந்தி அவரது கடனை அடைக்கலாம் என்று தோழர் ஆசாத் சொன்னதிலும் எனக்கு உடன்பாடில்லை (அதுபோக அவர் அப்படிச் சொன்னதே ஒரு நக்கல்தான் என்பதை அந்தக் கட்டுரையை நன்றாக வாசிப்பவர்களுக்குத் தெரியும்). சோபாசக்தி அல்லல்பட்டு, கடன்பட்டு திரிவது வர்க்கப் புரட்சிக்காகவோ, மக்களின் மீட்சிக்காகவோ அல்ல. துரோகியாகிப்போன வாழ்க்கைமுறை, ‘மார்க்சிய வெளிச்சத்தில் பெற்ற ஆய்வில்‘ பொம்பளைகளை பொறுக்குவது, (இதை நாம் பாலியல் சுரண்டல் என்கிறோம்), பாலியல் விடுதிகளில் கும்மாளமடிப்பது, தலித்வேடம் போட்டு ஊரை ஏய்ப்பது (பார்க்க: சோபாசக்தியின் கலைந்து போன தலித் வேடம்), நாடுநாடாக பறந்து ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது – இவைதான் கடன்வாங்கி சோபாசக்தி ஆற்றுகிற வர்க்கப் போராட்டங்கள். சொந்த உழைப்பில் ஒருவன் இந்த பொறுக்கித்தனங்களை செய்தாலே ஊரில் கட்டிவைத்து அடிப்பார்கள். சோபாசக்தி கெட்ட கேட்டுக்கு, இதை கடன் வாங்கி செய்திருக்கிறாராம். அந்தக் கடனை நாம் அடைக்க வேண்டுமாம். அண்ணாத்தே!! சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டி பகையாளியை பங்காளியாக்குகிற இந்த பிசினசு வேண்டாம்.

சோபாசக்தி கடன் வாங்கி இதைச் செய்தார் என்றால், அவர் கைக்கூலி இல்லை என்பதை வேண்டுமானால் ஒத்துக்கொள்ள முடியும். மற்றபடி, குடி, கூத்து எனத் திரிந்து சொத்து சுகங்களை இழந்து ஒரு வர்க்க எதிரி/ஜமீன்தார் கடனில் தவிக்கிறான் என்றால், அது பாட்டாளி வர்க்கத்துக்கு மகிழ்ச்சியான செய்தியே. ஏன் விசய் மல்லய்யா கடனாளி ஆனதற்கு நம்மால் வருத்தப்படமுடியுமா, என்ன?

வாசகர்களின் மனம் புண்படும் என்ற ‘உட்டாலக்கடி’ டயலாக்கு எல்லாம் வேண்டாம். இவரின் படைப்பிலக்கிய அறுவைக்கே பயப்படாத, அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு புலி எதிர்ப்பு மற்றும் பாலியல் கதைகளுக்கே பதறாத இவரது வாசகர்கள் காண்டம் வாங்கியது உட்பட இவ்வளவு கடன் வச்சிருக்கிறார் என்று தெரிந்தால், கிளுகிளுப்பில் மூழ்கிப்போவார்கள், சும்மா இணையதளத்துக்கு hits கூடாதா என்ன?. அதனால் சோபாசக்தி கைக்கூலியில்லையென்றால், அவர் தூய்மையானவர் என்று நிரூபிக்கவேண்டுமென்று அவருக்கு ஆசையிருந்தால் ஒன்று அவரின் இணையதளத்தில் கணக்குவழக்குகளை போடவேண்டும், அல்லது ‘வேலையில்லாத வெட்டிநாயி‘க்கு (நான் சொல்லவில்லை, அவரே அவரைச் சொல்கிறார்) எப்படி இவ்வளவு பணம் குவிகிறது என்று தானே ஒரு பிளாக் ஒன்று ஆரம்பித்து போடட்டும். அடிப்பொடிகளிடம் சொன்னால் தனியே பிளாக்கோ, இணையதளமோ தொடங்கித் தருவார்கள். (அ.மார்க்சு நொந்து நொம்பலமானபோது லும்பினி தொடங்கித் தரவில்லையா?). அதைவிட இந்தக் கணக்குவழக்குகளையும் உங்களது நல்லமனம் படைத்த பதிப்பாளர் மூலம் புத்தகமாக வெளியிட்டால், விற்பனை பிய்த்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ‘எம்ஜிஆர் கொலை வழக்கு’ போல் ‘சோபாசக்தியின் பாலியல் கணக்குவழக்கு’ என்று தலைப்பு வைத்தால் விற்பனை பிய்ச்சுக்கும்; கடனும் அடைய வாய்ப்பிருக்கிறது. எவ்வளவோ பண்றீங்கே, இதை பண்ணமாட்டீங்களா பாஸ்?

அதுவுமில்லாமல் இத்தனையும் பொதுவில் நடந்த விவாதங்கள்தான். பொதுவில் வைப்பதுதான் முறை. ‘open accountability’ குறித்து உலகமே பேசிக்கொண்டிருக்கும் நேரமிது. எல்லா கணக்குவழக்குகளையும் எல்லார் முன்னிலையிலும் வைப்பதும், திறந்த விவாதம் நடத்துவதும்தான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அதைவிடுத்து, தனியாக சந்திக்கலாம் என்று சொல்வது; பிறகு நான் கொடுத்ததில் அதைக் காணவில்லை, இதைத் தொலைத்துவிட்டார்கள் என்று சொல்கிற கதையே வேண்டாம்.

கேள்வி கேட்பவர்களை எல்லாம் முகப்புத்தகத்தில் இருந்து நீக்கிவிட்டு, அடிப்பொடிகள் மத்தியில் சோபாசக்தி இப்படி அறைகூவல் விடுப்பதைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. அடிப்பொடிகள் வேண்டுமானால் அதில் சமாதானமடையலாம். பொதுவாசகர்கள் முன்பு சோபா என்றோ அம்மணமாகிவிட்டார். இணையதளங்களில் சகட்டுமேனிக்கு அடிவாங்குகிறார். முகப்புத்தகத்தில்கூட சனநாயகவெளியை அனுமதிக்காத இந்த கைக்கூலியோடு நாங்கள் சனநாயகமாக சந்தித்து சனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி இவர் நல்லவரா கெட்டவரா என்று தீர்ப்பளிக்க வேண்டுமாம். கழுதை கனாக்காணுமாம் கத்தலும் கதக்கலுமா என்றொரு பழமொழிதான் ஞாபகம் வருகிறது.

eelam_hospital_350.jpg

அதுபோக சோபாசக்தி, ‘சரி நான் கைக்கூலியாகவே இருந்துவிட்டு போகிறேன். என்னோடு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்’ என்றுகூட நம்மை அழைக்கலாம். அதற்கு பேராசான் மாவோ சொன்ன மேற்கோள் ஒன்றை அவர் துணைக்கு கூட்டி வரலாம். அது என்னவெனில் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற மேற்கோள்தான். அதில் பேராசான் மாவோ எல்லாருக்கும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை வழங்கியிருப்பதுபோல் தோன்றும். ஆனால் நடைமுறையில் நடந்தது வேறு. ஒளிந்திருந்த துரோகிகளை வெளியில் வரவைத்து போட்டுத் தள்ளுவதற்கான போர்த்தந்திர யுக்தியே அது. மேலும் இன்னொன்று தோழர் ஸ்டாலின் எதிரிகளைவிட துரோகிகளே நமது முதல் எதிரிகள் என்கிறார். எதிரிகளோடுகூட சிலநேரங்களில் மக்கள் இயக்கங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்லும், ஆனால் அம்பலப்பட்ட துரோகிகளோடு எந்த மக்கள் இயக்கங்களோ அல்லது மக்களுக்கு உண்மையாக உழைப்பவர்களோ அல்லது உழைக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களோ எந்தப் பேச்சுவார்த்தைக்கும் செல்லமாட்டார்கள். துரோகிகள் தமது செயல்களுக்கு சுயவிமர்சனம் ஏற்றுக்கொண்டால் ஒழிய அவர்களோடு நமக்கு எந்த உறவும் இல்லை. நியுயார்க்கில் வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம் என்ற போராட்டத்தில் துண்டறிக்கையொன்றில் அரசு ஒடுக்குமுறை நிறுவனங்களின் எந்த ஊழியரோடும் பேச்சுவார்த்தை வைக்காதீர்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. அதுதான் நாம் பின்பற்ற விரும்புவதும், பின்பற்றுவதும்.

சோபா இப்படி தனது முகப்புத்தகத்தில் அறைகூவல் விடுத்திருக்கிறார் என்று தோழர்கள் கூறியதுடன் எனக்கு சோபாவின் மீது பச்சாதாபம்தான் ஏற்பட்டது. ஏனென்றால் முந்தைய கட்டுரையில் நாம் எழுதியிருந்தபடி அவருக்கு பயம் அல்லையைப் பிடிக்கிறது. அதுவும் உப்புக்கண்டம் போட்டுவிடலாம் என்றெல்லாம் மிரட்டினால் பச்சைப்புள்ள பயப்படாமலா இருக்கும்? அதனால்தான் இந்த கொலைமுயற்சி புகார்மனு. ‘யப்பா நான் சென்னை வருகிறேன், எனக்கு ஏதாவது என்றால் தோழர்கள் ஆசாத், கீற்று நந்தன், பிரியா தம்பி, சார்லசு அன்ரனி போன்றவர்கள்தான் காரணம்’ என்று அவர் கொடுத்த கொலைமுயற்சி புகார்மனுதான் இந்த முகப்புத்தக அறைகூவல். ஆனால் என் தரப்பிலிருந்து சோபாசக்திக்கு ஓர் உறுதிமொழியை அளிக்கமுடியும். நாங்கள் மரணதண்டனையை நம்புவதில்லை. ஏனெனில் மரணதண்டனைக்கெதிரான மக்கள் இயக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். எனவே நீங்கள் முன்பு வாசித்த காந்தியாரின் புத்தகங்களில் கூறியுள்ள அகிம்சாவாதம் எங்களிடம் இல்லையென்றாலும் தோழர் வினோத் மிஸ்ரா மாலெ குழு பாணியிலான வன்முறையில் எமக்கு நம்பிக்கையில்லை. அதேநேரத்தில் எம்போன்ற பொறுமையும், அன்பும், கருத்துப்போராட்டமும் எல்லா பொதுவுடமைவாதிகளும் துரோகிகளுக்கு காட்டுவார்கள் என்று நம்பிவிடாதீர்கள். ஏனெனில் இந்த பாழாய்ப்போன தோழர் சாருமசூம்தார் வர்க்க எதிரியின் ரத்தத்தில் கைநனைக்காதவன் பொதுவுடமைவாதியல்ல என்று வேறு சொல்லித்தொலைத்திருக்கிறார்.

- சார்லசு அன்ரனி ( charlesantony2010@gmail.com)

Comments (5)


  • |2011-11-28 09:27:46veerachozhan

    குஜாலா கீது... ஒருத்தர் அடிபடும்போது பார்க்கறப்போ என்னமா குஷியாயிருது... ஆனா நம்ம பிரண்டு சோபா ஒரு ஷோக்காளி... தண்ணியைப் போட்டு எல்லாத்தையும் மறந்துறுவாரு.. அத்த நினச்சாத்தான் பேஜராக்கீது.. என்ன பண்ண... தெளிய வச்சு அடிப்போம்..


  • |2011-11-28 16:12:58கீழக்கரை முருகன்

    ஷோபாசக்தியின் சென்னை வருகையை முன்னிட்டு, பெண்கள் எல்லோரும் மாலைவேளைகளில் வீட்டுக்குள் கதவை தாளிட்டு, பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிளாட்பாரவாசிகள் கணவன் காவலிருக்க வைத்துவிட்டு, தூங்க வேண்டும். பெண் நாய்கள் தனியே தெருவில் திரிவது அவ்வளவு உசிதமல்ல என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இப்புயல் கரையைக் கடக்கும்வரை, பெண்கள் எல்லோரும் விடுப்பு எடுத்து வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


  • |2011-11-29 18:49:04Narayanan

    ஷோபாசக்தியின் வாழ்க்கை முறை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.. அவர் ஒரு பெரியாரிஸ்ட் என்று சொல்ல முடியாது. பெண்களை பாலியல் பண்டமாக பார்க்கும் ஒரு ஆனாதிக்க்கவாதியால் மட்டுமே பாலியல் விடுதிக்குச் செல்ல முடியும்.. பெண்களை பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கி அடிவாங்குவது ஒரு பொறுக்கி செய்யும் வேலை.. அதேபோல் சோபாசக்தி ஒரு மார்க்சியவாதியுமல்ல.. ஷோபாசக்தியின் வாழ்கைமுறை ஒரு மார்க்சிஸ்ட் வாழும் முறை அல்ல... கடன்வாங்கி ஆடம்பர வாழ்க்கை நடத்துவது, பாலியல் தொழிலாளிகளுடன் கூத்தடிப்பது, குடிப்பது எல்லாம் ஒரு நிலப்பிரத்துவத்தின் தொடர்ச்சிகளே... அப்படியென்றால் சோபா சக்தி யார்? எந்த வேலையும் செய்யாமல், ஊர் முழுக்க கடன் வாங்கி, குடி, கூத்து, கும்மாளம், பித்தலாட்டம் செய்பவனுக்கு தமிழ்ச்சமூகத்தில் என்ன பெயர் கொடுப்பார்கள்? பொறுக்கி, அயோக்கியப் பயல், மொள்ளமாரி... இதில் அனைத்துக்கும் பொருத்தமான ஒரு நபருக்குத்தான் அ.மார்க்ஸ் போன்றவர்கள் நற்சான்று தருகிறார்கள் என்றால் அவர்கல் மீதும் சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை..

    <a href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17565:2011-11-27-18-14-07&catid=1:articles&Itemid=264">http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17565:2011-11-27-18-14-07&catid=1:articles&Itemid=264

அப்போ யுத்த நிறுத்த ஆரம்பகால்ம் ... இங்கோ இருக்கும் பூசாரிகள் ஒன்றும் செய்கிறார்களில்லை ... சனமும் சிந்தனை இல்லாமல் போய் கொண்டிருக்கிறார்கள் ... ஏதாவது செய்ய வேண்டும் .. சிலர் யோசித்து கொண்டிருக்க ... ஒருவர், இதை செய்வோம், அதற்கு உரியவர் இவர் தானென்று!! ஏனையவர்களோ குழம்பி, இவன்பாவி ஒத்துக் கொள்வானா??? என்தற்கு, அவர் சொன்ன பதில் ... இவன்பாவி பப்ளிசிட்டி என்றால், உரிந்து விட்டுட்டும் பெரிந்தெருக்களில் ஓடுவான் ... என்று!

... அவ்வாறேதான் உந்த சோபாசக்தியும்! ... பப்ளிசிட்டி விரும்பி! அதற்காக எதையும் செய்யக்கூடியவன்! ... இக்கட்டுரை எல்லாம் ....???????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!

yarl களத்தில சோபாசக்திக்கு (வாளி வைக்கிற) வக்காலத்து வாங்கிற கிருபன் அர்ஜுன் சுகன் .. எங்க போய்ட்டீங்க வாங்க உங்களின் பொன்னான கருத்துகளை உங்களின் அபிமான உலக புகழ் பெற்ற எழுத்தாளருக்காக அள்ளி வழங்குங்கள்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரசன், உங்கள் கருத்து மூலம் நீங்கள் உங்களைத் தான் கேவலப்படுத்தியுள்ளீர்கள்!

சோபா சக்தியின் எழுத்துக்களை களவாகப் படிப்பதில்லை. சோபா சக்தியின் ஈழத்தமிரில் முக்கியமான எழுத்தாளர் என்பதை அவரது எழுத்துக்கள் எத்தனை வருடங்கள் தமிழர்களால் பேசப்படும் என்பதில் இருந்துதான் தெரிந்துகொள்ள முடியும்!

மேலும் சோபா சக்தியின் கொள்கைகள்தான் எனதும் என்று நான் என்றுமே சொன்னதில்லை. செம்மறியாக இல்லாமல் சுயசிந்தனையுடன் இருக்க முயன்றால் தெளிவு நிச்சயம் கிடைக்கும்.. :icon_idea:

பிரசன், உங்கள் கருத்து மூலம் நீங்கள் உங்களைத் தான் கேவலப்படுத்தியுள்ளீர்கள்!

சோபா சக்தியின் எழுத்துக்களை களவாகப் படிப்பதில்லை. சோபா சக்தியின் ஈழத்தமிரில் முக்கியமான எழுத்தாளர் என்பதை அவரது எழுத்துக்கள் எத்தனை வருடங்கள் தமிழர்களால் பேசப்படும் என்பதில் இருந்துதான் தெரிந்துகொள்ள முடியும்!

மேலும் சோபா சக்தியின் கொள்கைகள்தான் எனதும் என்று நான் என்றுமே சொன்னதில்லை. செம்மறியாக இல்லாமல் சுயசிந்தனையுடன் இருக்க முயன்றால் தெளிவு நிச்சயம் கிடைக்கும்.. :icon_idea:

நான் எந்தளவில் என்னை கேவலபடுத்தி இருக்கிறன் .. 90 %தமிழ் தேசிய சார்பு கொண்டவாசகர்கள் வந்து போகும் ஒரு களத்தில மாற்று கருத்து என்ற பேர்ல சோபா சக்தி மற்றும்

கர்ணன் போன்றவர்களின் ஆக்கங்களை தேடி தேடி கொண்டு வந்து இணைக்கும் உங்களை விட நான் என்னை கேவலபடுத்தி கொண்டேனா..?

சோபா சக்தி கர்ணன் போன்றவர்களை பற்றி படிச்சு தான் எனக்கு சுய சிந்தனை வர வேண்டும் என்றால் அந்த சுய சிந்தனை இல்லாமல் நான் செம்மறி ஆகவே இருந்துவிட்டு போகிறேன்

Edited by pirasan

  • கருத்துக்கள உறவுகள்

நான் எந்தளவில் என்னை கேவலபடுத்தி இருக்கிறன் .. 90 %தமிழ் தேசிய சார்பு கொண்டவாசகர்கள் வந்து போகும் ஒரு களத்தில மாற்று கருத்து என்ற பேர்ல சோபா சக்தி மற்றும்

கர்ணன் போன்றவர்களின் ஆக்கங்களை தேடி தேடி கொண்டு வந்து இணைக்கும் உங்களை விட நான் நான் என்னை கேவலபடுத்தி கொண்டேனா..?

சோபா சக்தி கர்ணன் போன்றவர்களை பற்றி படிச்சு தான் எனக்கு சுய சிந்தனை வர வேண்டும் என்றால் அந்த சுய சிந்தனை இல்லாமல் நான் செம்மறி ஆகவே இருந்துவிட்டு போகிறேன்

சோபா சக்தியும், கர்ணனும் தாமாகவே தமிழ்த் தேசியத்திலும், தமிழீழத்திலும் நம்பிக்கை கொண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள். புலிகள் இயக்கத்தில் பல ஆண்டுகளாக இருந்ததனால் அவர்களின் சிந்தனைமுறைகளை அறிந்தவர்கள். அப்படியானவர்களின் எழுத்துக்கள் எமக்குத் தெரியாத புலிகளின் பக்கத்தைக் கொண்டுவருகின்றன. அவற்றை மறைத்து போலியான நம்பிக்கைகளில் தமிழ்த் தேசியத்தை முன்னகர்த்தமுடியாது. எனவேதான் அவர்களின் எழுத்துக்களை இணைக்கின்றேன். எனினும் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக அவர்களின் கதைகளின் உள்ள செய்திகளைப் பற்றி ஆரோக்கியமாக விவாதிப்பதைவிட அவர்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி விவாதித்து நேரத்தை விரயமாக்குகின்றோம்!

மேலும் இவர்களின் கதைகளைப் படிக்கும்போது, தமிழ்த் தேசியத்தின் முன்னால் உள்ள சவால்கள் நாம் எண்ணுவதைவிட அதிகம் என்றுதான் நான் உணர்கின்றேன். ஆனால் தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றை அவர்களது எழுத்துக்கள் குறைத்துவிடவில்லை. சரியான தெளிவு இருந்தால் அவர்களின் எழுத்துக்களால் பயம் வராது!

சோபா சக்தியும், கர்ணனும் தாமாகவே தமிழ்த் தேசியத்திலும், தமிழீழத்திலும் நம்பிக்கை கொண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள். புலிகள் இயக்கத்தில் பல ஆண்டுகளாக இருந்ததனால் அவர்களின் சிந்தனைமுறைகளை அறிந்தவர்கள். அப்படியானவர்களின் எழுத்துக்கள் எமக்குத் தெரியாத புலிகளின் பக்கத்தைக் கொண்டுவருகின்றன. அவற்றை மறைத்து போலியான நம்பிக்கைகளில் தமிழ்த் தேசியத்தை முன்னகர்த்தமுடியாது. எனவேதான் அவர்களின் எழுத்துக்களை இணைக்கின்றேன். எனினும் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக அவர்களின் கதைகளின் உள்ள செய்திகளைப் பற்றி ஆரோக்கியமாக விவாதிப்பதைவிட அவர்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி விவாதித்து நேரத்தை விரயமாக்குகின்றோம்!

மேலும் இவர்களின் கதைகளைப் படிக்கும்போது, தமிழ்த் தேசியத்தின் முன்னால் உள்ள சவால்கள் நாம் எண்ணுவதைவிட அதிகம் என்றுதான் நான் உணர்கின்றேன். ஆனால் தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றை அவர்களது எழுத்துக்கள் குறைத்துவிடவில்லை. சரியான தெளிவு இருந்தால் அவர்களின் எழுத்துக்களால் பயம் வராது!

சோபா சக்தி கர்ணன் போன்றவர்களின் எழுத்துகள் உங்களுக்கு எனக்கு தெரியாத புலிகளின் பக்கத்தை கொண்டு

வருகின்றனவா ? புலிகள் மீதான காழ்ப்புணர்வை வெறுப்பை காவி வருகின்றனவா..?.எமது மக்களுக்கு (புலம், களம்) சரியாக தெரியும் எமது முதலாவது எதிரி சிங்கள ராணுவம் தான் என்பது இவர்களின் எழுத்துகள் ஏதோ புலிகள் தான் ராணுவத்தினை காட்டிலும் மக்களை கொடுமை படுத்தினார்கள் என்னும் விம்பத்தினை காவி கொண்டு வருகின்றன புலிகளை தான் மக்களின் எதிரிகளாக காவி கொண்டிருக்கின்றன இவர்களின் எழுத்துகள் எம் போராட்டம் பற்றிய போராளிகள் பற்றிய எதிர்மறை கருத்தினை தான் எம் போராட்டம் பற்றி குறைந்தளவே அறிந்திருக்கும் மக்களிடம் குறிப்பாக தமிழக மக்களிடம் எடுத்து செல்கின்றன

நீங்க இன்னோரிடத்தில் சொன்னீர்கள்

"தமிழ் மக்களின் விடியலை 25 - 30 வருடங்களாக பல வழிகளிலும் வீச்சுடன் முன்னெடுத்த புலிகளின் அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் துக்ககரமாக முடிந்துவிட்டது" முடிந்து விட்ட ஒன்றை பற்றி அவர்கள் மீதான விமர்சனம்களுக்கு பதில் கூற யாரும் இல்லை என்ற இடத்தில் அவர்கள் மீதான காழ்ப்பு உணர்வுகளை இன்னும் இவர்கள் ஏன் கொட்டி கொண்டு இருக்க வேண்டும் இதற்க்கு பதிலாக சிங்கள அரசின் இப்போதையதான அடக்குமுறைகள் சிங்கள குடியேற்றங்கள் பற்றி ஏன் இவர்களின் எழுத்துகள் மௌனமாக இருக்கின்றன அது பற்றி இவர்களின் கண்களுக்கு தெரிவது இல்லையா....என்னை பொறுத்தளவில் புலிகள் இப்போது இல்லாமல் இருக்கலாம்

எங்களுக்காக அவர்கள் இரத்தம் வியர்வை கடைசியாக உயிரையும் கொடுத்துள்ளார்கள்.. அவர்கள் பிழை விட்டு இருக்கலாம் அவர்களின் தியாகம்கள் இவர்கள் போன்றவர்கள் மதிக்காமல் இருக்கலாம் ஆனால் கொச்சை படுத்த கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தி கர்ணன் போன்றவர்களின் எழுத்துகள் உங்களுக்கு எனக்கு தெரியாத புலிகளின் பக்கத்தை கொண்டு

வருகின்றனவா ? புலிகள் மீதான காழ்ப்புணர்வை வெறுப்பை காவி வருகின்றனவா..?.எமது மக்களுக்கு (புலம், களம்) சரியாக தெரியும் எமது முதலாவது எதிரி சிங்கள ராணுவம் தான் என்பது இவர்களின் எழுத்துகள் ஏதோ புலிகள் தான் ராணுவத்தினை காட்டிலும் மக்களை கொடுமை படுத்தினார்கள் என்னும் விம்பத்தினை காவி கொண்டு வருகின்றன புலிகளை தான் மக்களின் எதிரிகளாக காவி கொண்டிருக்கின்றன இவர்களின் எழுத்துகள் எம் போராட்டம் பற்றிய போராளிகள் பற்றிய எதிர்மறை கருத்தினை தான் எம் போராட்டம் பற்றி குறைந்தளவே அறிந்திருக்கும் மக்களிடம் குறிப்பாக தமிழக மக்களிடம் எடுத்து செல்கின்றன

உங்கள் குற்றச்சாட்டு தமிழக மக்களின் ஆதரவை இவர்களின் எழுத்துக்கள் குறைத்துவிடும் என்ற ரீதியில் உள்ளது (ஈழத் தமிழர்கள் தெளிவாக உள்ளதால் பயம் தேவையில்லை!).

எனக்கும் பல தமிழ்நாட்டு நண்பர்கள் உள்ளார்கள். அவர்களுடனான உரையாடல்களில் மூலம் அறிய வந்தது என்னவெனில், தமிழ்நாட்டில் ஆதரவு குன்றியமைக்கு முக்கிய காரணம் 90 களில் புலிகளின் தாக்குதல்கள் தமிழ்நாட்டிலும் நடாத்தப்பட்டமைதான். மற்றையவர்களின் எதிர்ப்பிரச்சாரம் அல்ல.

மேலும், சோபாசக்தி, கர்ணன் போன்றோரைப் பற்றி அறிந்திருப்பவர்கள் இணைய உலகில் இலக்கியம் படிப்போரும், சிறு பத்திரிகை உலகத்தினரும்தான். அவர்களின் பொதுப்புத்தியை குறைத்து மதிப்பிட்டு அவர்கள் எதிர்மறையான கருத்துக்களுக்கு இழுபட்டுப் போவார்கள் என்ற பயந்து சோபா சக்தி, கர்ணன் போன்றவர்கள் மீது தனிப்பட ரீதியில் சேறு, சகதியடிப்பது (உ+ம்: வாளி வைப்பது) வெறும் பலவீனத்தைத்தான் காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரசன் சுருக்கமாக சொல்லப் போனால் நல்லது,கெட்டது தெரிந்தவர்களால்,எதையும் பகுத்தறியும் திறன் கொண்டவர்களால் சோ.சக்தி,கர்ணன் என்ன எழுதியிருக்கிறார் என்பதையும் அது உண்மையா? பொய்யா என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும் என கிருபன் சொல்கிறார்

அண்மையில் இன்னுமொருவன் சிலாகித்த சோபா சக்த்தியின் கதையை பா. ராகவன் எழுத்து என்றால் இது என்று சொல்லி twitter இல் பகிர்ந்து இருந்தார் மாமல்லனும் face book இல் பகிர்ந்து அவற்றின் மீதான விமர்சனம்களிற்கு இன்னுமொரு விளக்க கட்டுரையும் எழுதி இருந்தார் இவர்கள் எல்லோரும் வெளியில் இருந்து பார்ப்போர்கள் பார்க்கும் போது இவ்வளவு தூரம் மக்களை கொடுமை படுத்தி இருக்கார்கள்..என்ற எண்ணம் தான் அவர்களுக்கு வரும்

அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கு என்றதை ஆராய மாட்டார்கள் காரணம் சோபா சக்தி முன்னாள் புலி

அவர் எழுதினால் சரியாக தான் இருக்கும் முன்னாள் புலி என்ற முக மூடி அவர் எழுதுபவற்றை எல்லாம் நம்பலாம் என்கிற அளவுக்கு அவர் எழுதுற எல்லாம் கட்டாயம் நடந்தது தான் என்று அவர்களை நம்ப வைக்கும் இதில் மற்றவர்களின் எதிர் கருத்துகள் அடிபட்டு போகலாம்.

எங்கள் இனத்தில் இருந்தும் நாங்கள் பட்ட துன்பங்கள் துயரம்கள் இழப்புகளை சொல்லுவதற்கான நல்லதொரு

இலக்கியவாதியோ (schindler 's list)போன்ற திரைப்படமோ வந்து இவர்கள் முகமூடிகளை கிழிக்கும் வரைக்கும் இவர்கள் போன்றோர் முன்னணியில்

இருப்பார்கள் .

கடைசியாக வாளி வைப்பது என்பது வக்காலத்து வாங்குவதை நக்கலாக சொல்லும் ஒரு வார்த்தையே தவிர இதில் ஏதும் தப்பு அர்த்தம்கள் கிடையாது

பிரசன் சுருக்கமாக சொல்லப் போனால் நல்லது,கெட்டது தெரிந்தவர்களால்,எதையும் பகுத்தறியும் திறன் கொண்டவர்களால் சோ.சக்தி,கர்ணன் என்ன எழுதியிருக்கிறார் என்பதையும் அது உண்மையா? பொய்யா என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும் என கிருபன் சொல்கிறார்

ஓம் அக்கா எனக்கு தான் விளங்கேல்ல போல.இருக்கு அவர் சொன்னது...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தாயகப் போராட்டம் தோற்றுப் போய், போராட்டத்தில் ஈடுபட்டு மரணித்தவர்களின் கல்லறைகள் கூட அழிக்கப்பட்டு, தப்பி எஞ்சியவர்கள் ஒன்றில் சிங்கள அரசுடன் இணைந்து வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு அல்லது இரகசியச் சிறைகளில் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் தமிழ் மக்கள்மேல் அதிகாரம் செலுத்த தமக்குள் சண்டைபிடிக்கும் நிலையில், தேசியத்தின் மீதும் தமிழீழத்தின் மீதும் நம்பிக்கை இழந்து சலிப்புற்று மக்கள் இருக்கும் வேளையில் சோபா சக்தி, கர்ணன் போன்றவர்கள் இலக்கியங்கள் மீது நாட்டம் உள்ள மக்களை மேலும் சலிப்புற்று ஒதுங்க வைக்கும் வகையில் எழுதுவது விரக்தியின் விளிம்பில் நிற்பவர்களுக்கு கோபத்தை உண்டாக்குவதில் உள்ள நியாயத்தை எனது புரிதல்கள் மூலம் விளங்கிக்கொள்ள முடிகின்றது. எனினும் கோபங்களினாலும், ஆத்திரங்களினாலும் தூண்டப்பட்டு, வெறும் மலிவு உத்தியான அவதூறு அரசியலைச் செய்து எமது நியாயங்களை முன்னிறுத்தமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை.

சில இடங்களில் அர்ஜுன் போன்றோர் அரசியல் பேசுவதை நிறுத்திக் கதை எழுதுவது நல்லது என்பது போன்ற கருத்துக்கள், கருத்துச் சுதந்திரத்தை மதிக்காத, பாஸிசத்தின் ஒரு அங்கமான வாய்ப்பூட்டு அரசியலில் இருந்து வெளிவர எம்மால் முடியவில்லை என்றுதான் கோடிட்டுக் காட்டுகின்றது.

ஜனநாயகப் பண்புகளையும், பன்மைத்துவத்தின் பண்புகளையும் கற்றுக்கொள்ள அதிககாலம் தேவைப்படும் என்பதையும், தமிழர்களின் விடியலுக்கான தூரம் இன்னும் அதிகமாகவே இருக்கின்றது என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தியும், கர்ணனும் தாமாகவே தமிழ்த் தேசியத்திலும், தமிழீழத்திலும் நம்பிக்கை கொண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள். புலிகள் இயக்கத்தில் பல ஆண்டுகளாக இருந்ததனால் அவர்களின் சிந்தனைமுறைகளை அறிந்தவர்கள். அப்படியானவர்களின் எழுத்துக்கள் எமக்குத் தெரியாத புலிகளின் பக்கத்தைக் கொண்டுவருகின்றன. அவற்றை மறைத்து போலியான நம்பிக்கைகளில் தமிழ்த் தேசியத்தை முன்னகர்த்தமுடியாது. எனவேதான் அவர்களின் எழுத்துக்களை இணைக்கின்றேன். எனினும் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக அவர்களின் கதைகளின் உள்ள செய்திகளைப் பற்றி ஆரோக்கியமாக விவாதிப்பதைவிட அவர்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி விவாதித்து நேரத்தை விரயமாக்குகின்றோம்!

மேலும் இவர்களின் கதைகளைப் படிக்கும்போது, தமிழ்த் தேசியத்தின் முன்னால் உள்ள சவால்கள் நாம் எண்ணுவதைவிட அதிகம் என்றுதான் நான் உணர்கின்றேன். ஆனால் தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றை அவர்களது எழுத்துக்கள் குறைத்துவிடவில்லை. சரியான தெளிவு இருந்தால் அவர்களின் எழுத்துக்களால் பயம் வராது!

1990 ஆண்டு புலிகள் ஆட்லறி அடித்து கோட்டை மதில் சுவர்களில் துளை போட்டு கொண்டிருந்தார்கள். என்கிற பரம ரகசியங்களையெல்லாம் முன்பு புலிகளில் இருந்து ஆட்லறி அடித்த இந்த சிந்தனை ஆளர்களின் எழுத்துகளில் இருந்தே நாம் படித்தறிகிறோம். சோபா சுத்தி அதை எழுதாது போயிருந்தால் அந்த ரகசியமும் வெளியில் தெரிய வாய்ப்பில்லை. (1986 இல் இருந்தே ஆமி ஆட்லறி அடித்து தமிழனை கொல்ல தொடங்கிவிட்டான் லிபெரசன் ஒபெறேசனுக்க இந்த ஆட்லறிய தெரியாத தமிழனே ஈழத்தில் இல்லை எனலாம். உண்மை அது என்றால் புலிகள் ஆட்லறி அடித்து கோட்டை மதிலில் துளை போட்டார்கள் என்று ஒருவன் எழுதுகிறான் என்றால்)

தனது வாசகர் கூட்டம் யார் என்பதை அவன் தெளிவாகவே தெரிந்து வைத்துள்ளான். போரையும் புலியையும் பேப்பரில் படித்த தமிழ் விரோதிகளான தமிழ் தெரிந்த பார்பான கூட்டமும். ஈழத்தில் இருந்து வெளியேறி புலிவாந்தி குடித்து வளர்ந்து கற்பனையில் மட்டுமே ஈழபோராட்டத்தை பார்த்து அதை பற்றி தாமும் ஒரு கற்பனையை கட்டி அதில் வாழும் கூட்டமுமே என்பதை தெளிவாக புரிந்துள்ளான். இது தவிர கிந்தியம் ஆனந்த சங்கரிக்கு சமாதான விருத்து கொடுத்து (அந்த விருதையே நாறடித்தது வேறு கதை) தமுக்குள் தாமே சந்தொசபட்டதுபோல். இந்த புலிவாந்திகளுக்கும் ஒரு இலக்கிய விருதை கிந்தியம் தரும் என்ற எண்ணத்திலும் தான் இந்த வாந்திகள் எடுக்கபடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தாயகப் போராட்டம் தோற்றுப் போய், போராட்டத்தில் ஈடுபட்டு மரணித்தவர்களின் கல்லறைகள் கூட அழிக்கப்பட்டு, தப்பி எஞ்சியவர்கள் ஒன்றில் சிங்கள அரசுடன் இணைந்து வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு அல்லது இரகசியச் சிறைகளில் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் தமிழ் மக்கள்மேல் அதிகாரம் செலுத்த தமக்குள் சண்டைபிடிக்கும் நிலையில், தேசியத்தின் மீதும் தமிழீழத்தின் மீதும் நம்பிக்கை இழந்து சலிப்புற்று மக்கள் இருக்கும் வேளையில் சோபா சக்தி, கர்ணன் போன்றவர்கள் இலக்கியங்கள் மீது நாட்டம் உள்ள மக்களை மேலும் சலிப்புற்று ஒதுங்க வைக்கும் வகையில் எழுதுவது விரக்தியின் விளிம்பில் நிற்பவர்களுக்கு கோபத்தை உண்டாக்குவதில் உள்ள நியாயத்தை எனது புரிதல்கள் மூலம் விளங்கிக்கொள்ள முடிகின்றது. எனினும் கோபங்களினாலும், ஆத்திரங்களினாலும் தூண்டப்பட்டு, வெறும் மலிவு உத்தியான அவதூறு அரசியலைச் செய்து எமது நியாயங்களை முன்னிறுத்தமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை.

சில இடங்களில் அர்ஜுன் போன்றோர் அரசியல் பேசுவதை நிறுத்திக் கதை எழுதுவது நல்லது என்பது போன்ற கருத்துக்கள், கருத்துச் சுதந்திரத்தை மதிக்காத, பாஸிசத்தின் ஒரு அங்கமான வாய்ப்பூட்டு அரசியலில் இருந்து வெளிவர எம்மால் முடியவில்லை என்றுதான் கோடிட்டுக் காட்டுகின்றது.

ஜனநாயகப் பண்புகளையும், பன்மைத்துவத்தின் பண்புகளையும் கற்றுக்கொள்ள அதிககாலம் தேவைப்படும் என்பதையும், தமிழர்களின் விடியலுக்கான தூரம் இன்னும் அதிகமாகவே இருக்கின்றது என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

அரசியல் வேறு.............

சுதந்திர போராட்டம் வேறு.............

கற்பனை வேறு.............

என்பதால்தான் கற்பனையில் போராட்டத்தை எழுதுபவர்களுக்கு அன்பாக அவர்கள் சொல்கிறார்கள். உங்களுக்கு கற்பனை திறன் நன்றாக உள்ளது ஏன் நல்ல கற்பனை கதைகளை எழுதமுடியாதா? என்று.

இதில் அந்த கற்பனை வாதிகள் எழுதுவதுதான் சரி என்று மருந்து தந்து எங்களுக்குள் அந்த கற்பனைகளை உண்மைபோல் ஊத்த துடிப்பதை நாமும் பாசியத்தின் உச்சமாகத்தான் பார்க்கிறோம்.

"நாங்கள் ஊரில் இருந்து ஜெயகாந்தனையும் ,சுஜாதாவையும்,எஸ்.போ.வையும்,செங்கைஆழியானையும் வாசிக்கும் போது அவர்கள் என்னகட்சி,என்னகுலம்,சமூகத்திற்கு என செய்தார்கள் என்று எதுவும் தெரியாது.கதைகளை வாசித்தோம் பிடித்தது.எனக்கு பத்தாம் வகுப்பில் எஸ்.போ வி...ன் சடங்கு பாடசாலையில் பரிசாக கிடைத்தது.அப்போ எஸ்.போ.என்றால் யாரென்றே தெரியாது .இயக்க அரசியல் வந்து தம்மை பற்றி பதிகம் பாடாதவர்களை துரோகியாகி பார்பனன்,தலித், என்று நதிமூலம் ரிசிமூலம்அறிந்து கைக்கூலி,ஏஜென்ட் என்று அவர் அரசியல் இருப்பும் பார்த்து அவர்கள் எழுத்துக்களை எடை போடும் ஒரு முன்றாம்தர அரசியல் பார்வையை உருவாக்கி விட்டார்கள்.தேவாரம் பாட ஆயிரம் நாயன்மார் இருக்கினம் தயவு செய்து ஒரு சிலரையாவது இலக்கியம் படைக்க விடுங்கள்."

இது முகப்புத்தகத்தில் ஒரு நண்பருக்கு சோபா சக்தி பற்றிய விமர்சனத்திற்கு நான் எழுதியது .அது இங்கும் பொருந்தும் என்பதால் ஒட்டி விடுகின்றேன்.

அதைவிட சிங்களவன் செய்த வெலிக்கடை சிறை குரூரம் பற்றி சோபாவை விட வேறு எவரும் வாசகர்களை உறைய வைக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

"நாங்கள் ஊரில் இருந்து ஜெயகாந்தனையும் ,சுஜாதாவையும்,எஸ்.போ.வையும்,செங்கைஆழியானையும் வாசிக்கும் போது அவர்கள் என்னகட்சி,என்னகுலம்,சமூகத்திற்கு என செய்தார்கள் என்று எதுவும் தெரியாது.கதைகளை வாசித்தோம் பிடித்தது.எனக்கு பத்தாம் வகுப்பில் எஸ்.போ வி...ன் சடங்கு பாடசாலையில் பரிசாக கிடைத்தது.அப்போ எஸ்.போ.என்றால் யாரென்றே தெரியாது .இயக்க அரசியல் வந்து தம்மை பற்றி பதிகம் பாடாதவர்களை துரோகியாகி பார்பனன்,தலித், என்று நதிமூலம் ரிசிமூலம்அறிந்து கைக்கூலி,ஏஜென்ட் என்று அவர் அரசியல் இருப்பும் பார்த்து அவர்கள் எழுத்துக்களை எடை போடும் ஒரு முன்றாம்தர அரசியல் பார்வையை உருவாக்கி விட்டார்கள்.தேவாரம் பாட ஆயிரம் நாயன்மார் இருக்கினம் தயவு செய்து ஒரு சிலரையாவது இலக்கியம் படைக்க விடுங்கள்."

இது முகப்புத்தகத்தில் ஒரு நண்பருக்கு சோபா சக்தி பற்றிய விமர்சனத்திற்கு நான் எழுதியது .அது இங்கும் பொருந்தும் என்பதால் ஒட்டி விடுகின்றேன்.

அதைவிட சிங்களவன் செய்த வெலிக்கடை சிறை குரூரம் பற்றி சோபாவை விட வேறு எவரும் வாசகர்களை உறைய வைக்கவில்லை

சோபா சுத்தி எங்களின் ரூம் மேட் அதனாலேதான் எங்களுக்கு சுத்தியின் சுத்துமாத்தும் புராண புரட்டும் தெரியும்.

அவரை யார் என்று எமக்கு அவருடைய எழுத்துகளே அறிமுகம் செய்தது.

அதற்கான காரணங்களும் அவருடைய புத்தகத்திலேயே இருக்கின்றது.

அப்போது ஒரே ஒரு வெலிக்கடை இப்போ ஊரே வெலிக்கடை............ இந்த நேரத்திலும் வாந்தி எடுத்து வாழ்வு நடாத்திக்கொண்டு. முன்பு எப்போ எழுதிய வெலிகடையை வைத்து வாந்தியை விற்பனை செய்வதுக்கு எங்களால் வக்காளத்து வாங்க நாங்கள் பூச்சி புழு இல்லையே?

ஒரு பெண் குளிக்கும் போது ஜன்னலால் எட்டி பார்த்துவிட்டு ................. அந்த பெண் அதை கண்டவுடன் பதறியடிப்பதை பார்த்து. ஏன் இப்படி பதறுகிறீர்கள்? இதற்கு முன்பு ஆட்கள் ஜன்னலை துடைப்பதை பார்த்ததே இல்லையா? என்ற வேதாந்தம் போல் வேதாந்தங்கள் எழுதி.............. வாந்திகளை விற்க முடியாது.

எஸ் போ சுஜாத்த வோடு நின்றது மகிழ்ச்சி............... திருவள்ளுவர் இளங்கோ அடிகள் என்று நீங்கள் போகாதது ஆச்சரியமாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சோபாசுத்தி போன்ற..------.. ஒரு சமூக அங்கீகாரம் தேவைப்படுகுது. அதற்கு அவர்களிடம் உள்ள உக்தி..

1. ஈழத்து வாசகர்களை உசுப்ப.. புலி எதிர்ப்பை கையாள்வது (அதுதாங்க.. மீனுக்கு தலையும்.. பாம்புக்கு வாலும் காட்டிற விலாங்கு... உக்தி..! :icon_mrgreen: )

2. இந்திய.. வாசகர்களை உசுப்ப.. ஈழத்தில் சாதியம் பற்றி வெட்டி விழுத்துவது... (ஏன்னா இந்தியாவில சாதியம் பற்றி பேசுறவன் எல்லாம்.. புரட்சியாளனுன்னு ஒரு மாயைத் தோற்றம் உள்ளது. அதை வைச்சே கருணாநிதி கூட ஆட்சியைப் பிடிச்சிருக்காருன்னா பாருங்களேன். அதே கருணாநிதிதான்.. அப்புறம்.. பதவிக்கு வந்து..சாதிச் சான்றிதழும் கொடுத்து.. சாதிக் கட்சிகளும்.. வளர்த்த உத்தமர். :D )

3. முளைச்ச தாடிய வழிக்க பஞ்சி என்பதால.. முதலாளித்துவ உலகில் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும் மாக்சியம்.. கம்னியூசத்தை தூக்கி வைச்சு தூசி தட்டுவது..! :rolleyes:

4. வெள்ளம் தலைக்கு மேல போயிட்டென்னா.. பெரியார் வாரிசுகளுன்னு சொல்லி... பெரியாரை தூக்கி வைச்சு... காவடி எடுக்கிறது. குளிக்காம இருக்கிற... ஊத்தை தெரியாம இருக்க அப்பப்ப கறுப்பு சட்டையை தூக்கி மாட்டிக்கிறது. :(

5. வாலிபத் தேவைகளுக்கு ஏற்ப.. போற வாற இணைய வெளி காவாலிப் பெட்டையள.. கலியாணம் ஆன.. ஆன்ரிகளை..மடக்க...தங்களால் தான் உலகப் பெண்களே பாதுகாப்பாக சுதந்திரத்தோட வாழினம் என்று கதையளக்கிறது. :o

6. கடைசியில எல்லா வேசமும் கலைஞ்சு.... சனத்தட்ட அடிவாங்கிற கட்டத்தில.. எங்களுக்கும் கொஞ்சோண்டு மனிதாபிமானம் இருக்கு என்று காட்ட.. வன்னியை.. முள்ளிவாய்க்காலை.. வைச்சு கட்டுரை வரையிறது..! :lol: :lol:

இதெல்லாம்.. இப்ப இணையத்தில மொக்கைப் பதிவு போட்டு.. ஊரைக் கூட்டுற கலையில சகஜம் அப்பா..! :lol:

என்ன போற போக்கில.. சோபா சுத்திக்காக யாழ் இணையத்தை விலைக்கு வாங்கி எல்லா தலைப்பிலும் அந்த ---- துதிபாட ஒரு பக்த கூட்டமே உருவாகி இருக்கிறது தான்.. அந்தாளின் மொக்கைக்குள்ள விசேசம்..! இதில மட்டும் கொஞ்சப் பேர் ரெம்ப ஒற்றுமையா.. நண்பேண்டா என்று தோளில கையப் போட்டிட்டு ஆளையாள் ஆரத்தழுவிக்கிட்டு திரியுறாங்க. அது முன்னாள் புளொட் என்றாலும் சரி.. இன்னாள் ஈபிடிபி என்றாலும் சரி. அதில தெரியுது எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைகள் தான் என்று. :lol:

Edited by நிழலி

தனிப்பட்ட முறையில் ஷோபா சக்தி ஒரு ideal இல்லாத ஆளாக இருக்கலாம். அத்தோடு அவரின் அரசியல் செயல்பாடுகள் எங்கள் பார்வையில் அநாகரிகமாக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நல்ல எழுத்தாளர். எல்லா எழுத்தாளர்களும் தி.ஜானகிராமன் மாதிரி தனிப்பட்ட முறையில் நல்லவர்களாக இருந்தால் நல்லதுதான். ஆனால் அண்மைய உதாரணம் ஜெயக்காந்தன்தான் அகப்படுகிறார். நல்ல எழுத்தாளர், தனிப்பட்ட முறையில் தரங்கெட்ட சுயநலமி, கொள்கைகள் இல்லாதவர். (நான் இங்கு ஷோபா சக்தியையும் ஜெயக்காந்தனையும் ஒப்பிட வரவில்லை. எழுத்தாளர்கள் நல்ல எழுத்தாளர்களாக இருந்துகொண்டு தனிப்பட்ட வாழ்க்கையில் வேறு வேறு மாதிரி உள்ளார்கள் என்று சொல்ல வந்தேன்)

Edited by கறுவல்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் குறிப்பிடும் "தெளிவு" எனக்கு இருப்பதாக நம்புகிறேன்: ஒரு செய்தியை நேரடியாக வசனத்தில் சொல்லா விட்டாலும் ஒரு கதாசிரியரின் புனைவு என்பது வாசகனுக்கான செய்தி தான். சோ.ச வே இதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார். என் தெளிவான அபிப்பிராயம் என்னவெனில், சமூகத்திற்கோ வாசகனுக்கோ எந்தச் செய்தியும் சொல்லும் தகுதி சோ.ச வுக்கு இல்லை. "உரிமை" இல்லையென்று நான் சொல்லவில்லை-தகுதி எதுவுமே இல்லை. அதனாலேயே சோ.ச எதை எழுதினாலும், வரைந்தாலும் செதுக்கினாலும் அதன் "சிறப்பு" என்பதைத் தாண்டி விமர்சிக்க வேண்டியும் முரண்பட வேண்டியும் வருகிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.