Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைக்கோற் போருக்குள் ஒளித்துவைத்த வீரம்!

Featured Replies

முள்ளிவாய்க்காலும், கொல்லிஅலைக் காலரும் ...

அள்ளிய உயிர்கள் கொஞ்ச நஞ்சமல்ல!!!

கடவுளரும் கண்மூடிப் பார்த்திருக்க ...

கடலன்னைகூட இரக்கமற்றுப் போனாளே!!!

போற்றித் துதித்த மரியன்னை கூட ...

வேடிக்கைதான் பார்த்திருந்தாராம்!

கடவுளர் மேல் நம்பிக்கை போய்....

ஏழு வயசாச்சு எனக்கு! - ஆனாலும்,

மீண்டும் சோதிச்சு ... மூன்று வருசமாகுது! !

முள் முடி தரித்த யேசு கூட....

செல்லடிக்கு பயந்து ஒளிந்து போனாரோ?! - இல்லை,

புத்தரிடம் சரணடைந்து....

முள்வேலிக்குள்.... சிலுவை சுமந்தாரோ?!

வைக்கோற் போருக்குள் பாலகன் பிறந்து மகிழ்ந்திருக்க...

நம் பாலகர்களை ...பனை வட்டுக்குள்ளும் முள்வேலிக்குள்ளும் அல்லோ,

பொறுக்கியெடுத்து... பொங்கியழுது ...பின் பொறுத்துக்கொண்டோம்!!!

மீட்பர்கள் உயிர்த்தெழுந்தது போதும்!

விண்ணோக்கி மறைந்ததும் போதும்!!

நம்பிக்கொண்டே காத்திருக்க வேண்டாமே!!!

மீட்பர் மீண்டும் வருவார்.. மீட்டுத் தருவார்.. என்பதெல்லாம்

தன்-நம்பிக்கை இல்லாதோர் சொல்லும் வீராப்பு வசனம்!

சேர்ந்து நில்... இல்லையெனில் விட்டுத் தொலை!

பிரிந்து பிரிந்து நின்று... கழுத்தறுக்காதே!!!

"சிலுவைகளில் அறையப்பட்டு... கல்வாரி வலி சுமக்க ,

நாம் தயாரென "ஒரு 'பரலோக' மந்திரம் கூட....

இன்னும் கேட்கவில்லை காதுகளில் ! - அப்படியிருக்க,

இனியும் வேண்டாம் பாலகன் பிறப்புக்கள்!!

பாகரன்கள் விட்டுச்சென்ற பாதை இருக்கு...!

மாவரன்களாய் நம் மாவீரர் கல்லறை இருக்கு...!

திருவசனங்களை விட ஒரு வசனம் இருக்கு... - அது

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

இஸ்ரேலுக்கு மோயீசன்... தமிழருக்கு பிரபாகரன்!

பயணங்கள் மட்டும் தளராது ...

விட்ட இடத்திலிருந்தே.... தொடரட்டும்!!!

மீட்பர்கள் இருந்தால் மீண்டு வரட்டும்!

அதற்கு முன் ... நம் நிலத்தை நாமே மீட்போமே!!!

*****************************************************************************************************************************************

2012 புத்தாண்டின் உறுதிமொழியாக இதை சொல்லிக் கொள்ளுங்கள்!

நம் நிலத்தை நாமே மீட்போம் ! நம் உரிமையை நாமே எடுப்போம்!!

நான் "பாதி" கிறிஸ்தவனாக (அப்பா கிறிஸ்தவர், அம்மா இந்து - இரண்டையும் படித்திருக்கின்றேன்... இரண்டிலும் வாழ்ந்திருக்கின்றேன்) இருக்கின்ற போதிலும்... சுனாமி அழிவுகளின் பின், நான் நத்தார் கொண்டாடுவதில்லை!

வன்னி அவலம் நடந்தேறி மூன்று வருசமாகுது! முள்ளிவாய்க்காலின் பின், இருந்த கொஞ்சநஞ்ச கடவுள் நம்பிக்கையும் போய்விட்டது. ஆனாலும் இன்னும் கோயிலுக்குப் போவேன். அது எனது இயலாமையின் அடையாளம். :( நான் நம்பாத ஒருவனுக்காய் மனிதர் கட்டிய கட்டிடங்கள் கூட அமைதியாய் இருக்கிறது. அமைதி தேடி அலையும் எனக்கு அந்த இடமும் நிழல்தான் எனும் வகையில் அங்கு கொஞ்சம் அட்டணக்கால் போட்டு உரிமையுடன் உட்காருவேன்!:)

"ஒற்றுமை" என்பது மட்டும்தான் தமிழர்க்கு.... தற்போதுவரைக்கும் கண்முன் தோன்றாத..... கடவுளாய் இருக்க முடியும் என எண்ணுகின்றேன்! பார்க்கலாம்!

இருந்தாலும்.....

இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் உறவுகளே! :)

முள்ளிவாய்க்காலும், கொல்லிஅலைக் காலரும் ...

அள்ளிய உயிர்கள் கொஞ்ச நஞ்சமல்ல!!!

கடவுளரும் கண்மூடிப் பார்த்திருக்க ...

கடலன்னைகூட இரக்கமற்றுப் போனாளே!!!

போற்றித் துதித்த மரியன்னை கூட ...

வேடிக்கைதான் பார்த்திருந்தாராம்!

கடவுளர் மேல் நம்பிக்கை போய்....

ஏழு வயசாச்சு எனக்கு! - ஆனாலும்,

மீண்டும் சோதிச்சு ... மூன்று வருசமாகுது! !

முள் முடி தரித்த யேசு கூட....

செல்லடிக்கு பயந்து ஒளிந்து போனாரோ?! - இல்லை,

புத்தரிடம் சரணடைந்து....

முள்வேலிக்குள்.... சிலுவை சுமந்தாரோ?!

வைக்கோற் போருக்குள் பாலகன் பிறந்து மகிழ்ந்திருக்க...

நம் பாலகர்களை ...பனை வட்டுக்குள்ளும் முள்வேலிக்குள்ளும் அல்லோ,

பொறுக்கியெடுத்து... பொங்கியழுது ...பின் பொறுத்துக்கொண்டோம்!!!

மீட்பர்கள் உயிர்த்தெழுந்தது போதும்!

விண்ணோக்கி மறைந்ததும் போதும்!!

நம்பிக்கொண்டே காத்திருக்க வேண்டாமே!!!

மீட்பர் மீண்டும் வருவார்.. மீட்டுத் தருவார்.. என்பதெல்லாம்

தன்-நம்பிக்கை இல்லாதோர் சொல்லும் வீராப்பு வசனம்!

சேர்ந்து நில்... இல்லையெனில் விட்டுத் தொலை!

பிரிந்து பிரிந்து நின்று... கழுத்தறுக்காதே!!!

"சிலுவைகளில் அறையப்பட்டு... கல்வாரி வலி சுமக்க ,

நாம் தயாரென "ஒரு 'பரலோக' மந்திரம் கூட....

இன்னும் கேட்கவில்லை காதுகளில் ! - அப்படியிருக்க,

இனியும் வேண்டாம் பாலகன் பிறப்புக்கள்!!

பாகரன்கள் விட்டுச்சென்ற பாதை இருக்கு...!

மாவரன்களாய் நம் மாவீரர் கல்லறை இருக்கு...!

திருவசனங்களை விட ஒரு வசனம் இருக்கு... - அது

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

இஸ்ரேலுக்கு மோயீசன்... தமிழருக்கு பிரபாகரன்!

பயணங்கள் மட்டும் தளராது ...

விட்ட இடத்திலிருந்தே.... தொடரட்டும்!!!

மீட்பர்கள் இருந்தால் மீண்டு வரட்டும்!

அதற்கு முன் ... நம் நிலத்தை நாமே மீட்போமே!!!

*****************************************************************************************************************************************

2012 புத்தாண்டின் உறுதிமொழியாக இதை சொல்லிக் கொள்ளுங்கள்!

நம் நிலத்தை நாமே மீட்போம் ! நம் உரிமையை நாமே எடுப்போம்!!

நான் "பாதி" கிறிஸ்தவனாக (அப்பா கிறிஸ்தவர், அம்மா இந்து - இரண்டையும் படித்திருக்கின்றேன்... இரண்டிலும் வாழ்ந்திருக்கின்றேன்) இருக்கின்ற போதிலும்... சுனாமி அழிவுகளின் பின், நான் நத்தார் கொண்டாடுவதில்லை!

வன்னி அவலம் நடந்தேறி மூன்று வருசமாகுது! முள்ளிவாய்க்காலின் பின், இருந்த கொஞ்சநஞ்ச கடவுள் நம்பிக்கையும் போய்விட்டது. ஆனாலும் இன்னும் கோயிலுக்குப் போவேன். அது எனது இயலாமையின் அடையாளம். நான் நம்பாத ஒருவனுக்காய் மனிதர் கட்டிய கட்டிடங்கள் கூட அமைதியாய் இருக்கிறது. அமைதி தேடி அலையும் எனக்கு அந்த இடமும் நிழல்தான் எனும் வகையில் அங்கு கொஞ்சம் அட்டணக்கால் போட்டு உரிமையுடன் உட்காருவேன்!

"ஒற்றுமை" என்பது மட்டும்தான் தமிழர்க்கு.... தற்போதுவரைக்கும் கண்முன் தோன்றாத..... கடவுளாய் இருக்க முடியும் என எண்ணுகின்றேன்! பார்க்கலாம்!

இருந்தாலும்.....

இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் உறவுகளே! :)

உறைக்க அடித்த கவிக்கு ஐய்யாயிரம் பச்சை :):):) 1.

  • கருத்துக்கள உறவுகள்

நத்தார் வரும் முன் சுனாமியை ஞாபகப்படுத்தி விட்டீர்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்

மீட்பர்கள் உயிர்த்தெழுந்தது போதும்!

விண்ணோக்கி மறைந்ததும் போதும்!!

நம்பிக்கொண்டே காத்திருக்க வேண்டாமே!!!

மீட்பர் மீண்டும் வருவார்.. மீட்டுத் தருவார்.. என்பதெல்லாம்

தன்-நம்பிக்கை இல்லாதோர் சொல்லும் வீராப்பு வசனம்!

காலத்துக்கேற்ற வரிகள்..அருமை..பாராட்டுக்கள் கவிதை...சுனாமியின் சோக நினைவுகளை கண்முன் கொண்டுவந்தது உங்கள் கவிதை..இருமலுக்கு வைத்தியசாலைக்கு மருந்தெடுக்கப் போனபோது பஸ்களிலும் வான்களிலும் ஏற்றி இறக்கப்பட்ட சனத்தைப் பாத்திட்டு வந்த வானிலை ஏறி முல்லைத்தீவுக்குப் போனபோது கண்ட அளிவுகளை நினைத்தால் இப்பொழுதும் கண்ணீர் வருகிறது...

பாகரன்கள் விட்டுச்சென்ற பாதை இருக்கு...!

மாவரன்களாய் நம் மாவீரர் கல்லறை இருக்கு...!

திருவசனங்களை விட ஒரு வசனம் இருக்கு... - அது

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

இஸ்ரேலுக்கு மோயீசன்... தமிழருக்கு பிரபாகரன்!

பயணங்கள் மட்டும் தளராது ...

விட்ட இடத்திலிருந்தே.... தொடரட்டும்!!!

மீட்பர்கள் இருந்தால் மீண்டு வரட்டும்!

அதற்கு முன் ... நம் நிலத்தை நாமே மீட்போமே!!!

எவ்வளவு அருமையான வரிகள்.

மீட்பர்கள் நிச்சயம் இருக்கிறார்கள்.

மீளாத நம் வலி தீர்க்க

மீளவும் வருவார்கள்.!!!

பிறக்கும் புது வருடம்

பிரளயத்தை நிறுத்தி - புது

பிரபஞ்சத்தை அளித்திடும் அது

பிரபாகரன் தடம் தொடர்ந்திடும்!!

எனது பாராட்டுக்கள் கவிதையின் வரிகளிற்கு!!!

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளர் மேல் நம்பிக்கை போய்....

ஏழு வயசாச்சு எனக்கு! - ஆனாலும்,

மீண்டும் சோதிச்சு ... மூன்று வருசமாகுது! !

முள் முடி தரித்த யேசு கூட....

செல்லடிக்கு பயந்து ஒளிந்து போனாரோ?! - இல்லை,

புத்தரிடம் சரணடைந்து....

முள்வேலிக்குள்.... சிலுவை சுமந்தாரோ?

உலகத்தின் நவீன வாழ்க்கையில், கடவுளின் பங்கு மிகவும் குறைந்து வருகின்றது!

ஆனால் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் கடவுளின் பெயரால், அரங்கேறும் அலங்கோலங்கள் ஏராளம்!

சனிப்பெயர்வின் பலாபலன்களை, நாங்கள் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்!

இந்த மதமென்னும், மாயையுள் இருந்து வெளிவரும் வரை, விடிவு எமக்கு இல்லை. அது வரை, ஆதங்கங்களும், ஏக்கங்களும் மட்டுமே எமது வாழ்க்கையாகும்!!!>>>>

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யதார்த்தமான வார்த்தைகள்.

பாராட்டுக்கள்

நண்பரே.

  • தொடங்கியவர்

உறைக்க அடித்த கவிக்கு ஐய்யாயிரம் பச்சை :):):) 1.

நன்றி கோ!

நத்தார் வரும் முன் சுனாமியை ஞாபகப்படுத்தி விட்டீர்கள் :(

இல்லை ரதி அக்கா! 2004ஆம் ஆண்டு நத்தார் தினத்தின் மறுநாள் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவுகள் என்பது என் மனதுக்குள் கடவுள் நம்பிக்கையினை கொஞ்சம் குறைத்து விட்டிருந்தது.

அதனால்தான் அப்படி.

இது என்னுடைய எண்ணக்கருத்து மட்டுமே.

நன்றி அக்கா! :)

Edited by கவிதை

  • தொடங்கியவர்

காலத்துக்கேற்ற வரிகள்..அருமை..பாராட்டுக்கள் கவிதை...சுனாமியின் சோக நினைவுகளை கண்முன் கொண்டுவந்தது உங்கள் கவிதை..இருமலுக்கு வைத்தியசாலைக்கு மருந்தெடுக்கப் போனபோது பஸ்களிலும் வான்களிலும் ஏற்றி இறக்கப்பட்ட சனத்தைப் பாத்திட்டு வந்த வானிலை ஏறி முல்லைத்தீவுக்குப் போனபோது கண்ட அளிவுகளை நினைத்தால் இப்பொழுதும் கண்ணீர் வருகிறது...

மிக்க நன்றி சுபேஸ்.

நானும் அந்த நேரம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டேன். அந்த நினைவுகள் கொடியது. :(

  • தொடங்கியவர்

பாகரன்கள் விட்டுச்சென்ற பாதை இருக்கு...!

மாவரன்களாய் நம் மாவீரர் கல்லறை இருக்கு...!

திருவசனங்களை விட ஒரு வசனம் இருக்கு... - அது

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

இஸ்ரேலுக்கு மோயீசன்... தமிழருக்கு பிரபாகரன்!

பயணங்கள் மட்டும் தளராது ...

விட்ட இடத்திலிருந்தே.... தொடரட்டும்!!!

மீட்பர்கள் இருந்தால் மீண்டு வரட்டும்!

அதற்கு முன் ... நம் நிலத்தை நாமே மீட்போமே!!!

எவ்வளவு அருமையான வரிகள்.

மீட்பர்கள் நிச்சயம் இருக்கிறார்கள்.

மீளாத நம் வலி தீர்க்க

மீளவும் வருவார்கள்.!!!

பிறக்கும் புது வருடம்

பிரளயத்தை நிறுத்தி - புது

பிரபஞ்சத்தை அளித்திடும் அது

பிரபாகரன் தடம் தொடர்ந்திடும்!!

எனது பாராட்டுக்கள் கவிதையின் வரிகளிற்கு!!!

நிச்சயமாக...! மிக்க நன்றி கல்கி தங்கள் கருத்துப் பகிர்விற்கு! தங்களுடைய கவிதைகளையும் கதைகளையும் தவறாது வாசித்து வருகின்றேன். எல்லாமே என் எண்ணங்களுடன் ஒத்திசைகின்றன.

மகிழ்ச்சி!

நன்றி! :)

Edited by கவிதை

  • தொடங்கியவர்

கடவுளர் மேல் நம்பிக்கை போய்....

ஏழு வயசாச்சு எனக்கு! - ஆனாலும்,

மீண்டும் சோதிச்சு ... மூன்று வருசமாகுது! !

முள் முடி தரித்த யேசு கூட....

செல்லடிக்கு பயந்து ஒளிந்து போனாரோ?! - இல்லை,

புத்தரிடம் சரணடைந்து....

முள்வேலிக்குள்.... சிலுவை சுமந்தாரோ?

உலகத்தின் நவீன வாழ்க்கையில், கடவுளின் பங்கு மிகவும் குறைந்து வருகின்றது!

ஆனால் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் கடவுளின் பெயரால், அரங்கேறும் அலங்கோலங்கள் ஏராளம்!

சனிப்பெயர்வின் பலாபலன்களை, நாங்கள் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்!

இந்த மதமென்னும், மாயையுள் இருந்து வெளிவரும் வரை, விடிவு எமக்கு இல்லை. அது வரை, ஆதங்கங்களும், ஏக்கங்களும் மட்டுமே எமது வாழ்க்கையாகும்!!!>>>>

மிக்க நன்றி புங்கையூரன்!:)

ஏக்கங்களும் ஏமாற்றங்களும்தான் பலவிதமான போராட்டங்களின் தோற்றங்களுக்கான ஆதங்கமாகவும் ஆரம்பமாகவும் அமைந்திருப்பது என்பது வரலாறுகள் சொல்லும் பாடம்.

மாற்றங்கள் என்பது மட்டும் இப்போது அவசியமாகின்றது!

  • தொடங்கியவர்

யதார்த்தமான வார்த்தைகள்.

பாராட்டுக்கள்

நண்பரே.

மிக்க நன்றி யாழிவன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை மீண்டும் பச்சை குத்த வைத்த கவிதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேர்ந்து நில்... இல்லையெனில் விட்டுத் தொலை!

பிரிந்து பிரிந்து நின்று... கழுத்தறுக்காதே!!!

"சிலுவைகளில் அறையப்பட்டு... கல்வாரி வலி சுமக்க ,

நாம் தயாரென "ஒரு 'பரலோக' மந்திரம் கூட....

இன்னும் கேட்கவில்லை காதுகளில் ! - அப்படியிருக்க,

இனியும் வேண்டாம் பாலகன் பிறப்புக்கள்!!

பாகரன்கள் விட்டுச்சென்ற பாதை இருக்கு...!

மாவரன்களாய் நம் மாவீரர் கல்லறை இருக்கு...!

திருவசனங்களை விட ஒரு வசனம் இருக்கு... - அது

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

கவிதைக்கு பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

கவிதை மீண்டும் பச்சை குத்த வைத்த கவிதை

மிக்க நன்றி சாத்ஸ் அண்ணை! :) ( உங்களிட்ட ஒரு கவிதை சொல்லி, பச்சை வாங்கிறது எவ்வளவு கஷ்டம்! :D )

சேர்ந்து நில்... இல்லையெனில் விட்டுத் தொலை!

பிரிந்து பிரிந்து நின்று... கழுத்தறுக்காதே!!!

"சிலுவைகளில் அறையப்பட்டு... கல்வாரி வலி சுமக்க ,

நாம் தயாரென "ஒரு 'பரலோக' மந்திரம் கூட....

இன்னும் கேட்கவில்லை காதுகளில் ! - அப்படியிருக்க,

இனியும் வேண்டாம் பாலகன் பிறப்புக்கள்!!

பாகரன்கள் விட்டுச்சென்ற பாதை இருக்கு...!

மாவரன்களாய் நம் மாவீரர் கல்லறை இருக்கு...!

திருவசனங்களை விட ஒரு வசனம் இருக்கு... - அது

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

கவிதைக்கு பாராட்டுக்கள்

தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி பகீ! :)

  • கருத்துக்கள உறவுகள்

மீட்பர்கள் உயிர்த்தெழுந்தது போதும்!

விண்ணோக்கி மறைந்ததும் போதும்!!

நம்பிக்கொண்டே காத்திருக்க வேண்டாமே!!!

மீட்பர் மீண்டும் வருவார்.. மீட்டுத் தருவார்.. என்பதெல்லாம்

தன்-நம்பிக்கை இல்லாதோர் சொல்லும் வீராப்பு வசனம்!

சேர்ந்து நில்... இல்லையெனில் விட்டுத் தொலை!

பிரிந்து பிரிந்து நின்று... கழுத்தறுக்காதே!!!

"சிலுவைகளில் அறையப்பட்டு... கல்வாரி வலி சுமக்க ,

நாம் தயாரென "ஒரு 'பரலோக' மந்திரம் கூட....

இன்னும் கேட்கவில்லை காதுகளில் ! - அப்படியிருக்க,

இனியும் வேண்டாம் பாலகன் பிறப்புக்கள்!!

சிலுவைகளில் அறையப்பட்டு கல்வாரி வலி சுமக்க

நாம் தயாரென ஒரு பரலோக மந்திரம்கூட

இன்னும் கேட்கவில்லை காதுகளில்....

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தமான வரிகள் கவிதை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.