Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்துக் குடும்பங்களில் அதிகரிக்கும் குறூப் சண்டைகள்!

Featured Replies

யாழ்ப்பாணத்துக் கலாசாரம் காலாவதியாகி விட்டது. எமது சமூகம் தற்போது மாற்றமடைந்து வருகின்றது. நெருக்கமாக இருந்த சமூகக் கட்டமைப்பு உடைக்கப்பட்டதனாலேயே இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகப் பலராலும் கருத்துக் கூறப்பட்டு வருகின்றது.

அதாவது இளவயதுக் கர்ப்பம், இளைஞர்களின் மதுபானப் பாவனை, ரவுடித்தனம் என்பன யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில் அதிஉச்ச நிலை கண்டுள்ளது.

அதேநேரம் இளவயதுத் திருமணங்கள். இத் திருமணங்களினால் குழந்தைகளுடன் நடுத்தெருவில் விடப்படும் இளம் குடும்பப் பெண்கள் என நீண்டு செல்கின்றது எமது கலாசாரத்தின் சோகம்.

தடுப்பதற்கும், தவிர்ப்பதற்கும் நாதியற்றவர்களாக நடுவீதியில் இருக்கின்றது தமிழினம்.

இவ்வாறான சம்பவங்களை விட யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய கலாசாரம் உருப்பெற்று வருகின்றது. இதற்குக் காரணம் பெண்கள் மீது வலுக்கட்டாயமாகப் பிரயோகிக்கப்படும் பாலியல் அழுத்தங்கள், வன்முறைகள், குடும்பத்தில் அடக்கி ஆளப்படும் பெண்கள் என்பவையே காரணமாக அமைகின்றது.

அது என்னவெனில், குடும்பங்களில் கணவன், மனைவி பிரிந்து சென்று குறூப் சண்டையில் ஈடுபடுவதுதான். கணவனை ஆள் வைத்து அடிக்கும் மனைவி, மனைவியை ஆள் வைத்து அடிக்கும் கணவன் என சில யாழ்ப்பாணத்துக் குடும்பங்கள் இரண்டாம் உலக யுத்தம் போல் காட்சியளிக்கின்றது.

அதேநேரம் கலாசாரப் பிறழ்வு காரணமாக குடும்பங்களில் சந்தேகம் என்ற பேய் தொற்றிக் கொள்வதால், நீதியின் வாசலில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர் இளம் குடும்பங்கள்.

பக்குவப்படாத வயதில் திருமணம் செய்து, குழந்தை பிறந்தவுடன் அவர்களின் குடும்ப வாழ்க்கை கசப்பாகி விட, குடும்பம் என்ற கூட்டை விட்டுக் கலைந்து செல்கின்றனர் தம்பதிகள்.

இதனால் தங்களின் சுயநலத்துக்காக, அற்ப ஆசைக்காக தங்களது ஒளிமயமான வாழ்க்கையை இள வயதில் இருளாக்கி நிற்கின்றனர் இவர்கள்.

சமூகம் எனும் கட்டமைப்புக்கள் இருந்து விலகி, தங்களது வாழ்க்கையை நிம்மதியற்ற ஒன்றாக, சந்தோஷமற்ற ஒன்றாக மாற்றி இளமையில் முதுமையை அனுபவித்து இறுதியில் தற்கொலைக்குத் தயாராகும் ஒரு மனோநிலையை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

இதுதான் இன்றைய காலத்தில் யாழ்ப்பாணத்திலும் சரி, மனித சமுதாயம் வாழக் கூடிய அனைத்துப் பாகங்களிலும் நடந்தேறுகின்ற நிஜமான ஒன்று.

எனவே சமூகக் கட்டமைப்புக்கள் நின்று வாழ்வதே சிறந்ததொரு வாழ்க்கையை, நீண்ட கால வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இல்லையேல் தற்கொலையும், மரணங்களும்தான் மலியும்.

thx

http://newjaffna.com

new-jaffna.jpg

Edited by புறோக்கர்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் ஒருவன் பார்த்துக்கொண்டான்.

இனி....................?????????????????

இந் நிலைகள் யாழ்ப்பாணத்தில் மட்டும்தானா?

நாங்கள் 2012ல் வாழ்கின்றோம். மறந்து விடாதீர்கள்.

உங்களுக்கு ஒரு பச்சை... சிப்பி..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சழூகத்தில நடக்கிற முழு பிரச்சனையும் இந்த பொண்ணுங்களால தான் வாறது.........எப்ப தான் திருந்தபோயினமோ தெரியாது.......

  • கருத்துக்கள உறவுகள்

புறோக்கர்! உங்களிடம் ஒரு வேண்டுகோள்!

நீங்கள் இணைக்கும் இந்த 'new jaffna' தளமானது ஒரு குப்பை போலுள்ளது!

இது ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் செயல்படுகின்றது!

எப்ப பார்த்தாலும், யாழ்ப்பாணத்தில் குடியும், சீர்கேடும் மலிந்திருப்பதாகவே இந்தத் தளம் உலகிற்குத் தம்பட்டம் அடித்துகொண்டிருக்கின்றது!

ஒரு கோகிலாம்பாள், கணவனைக் கொன்றதற்காக, முழு உருத்திரபுரத்துப் பெண்களும், கணவனைக் கொல்பவர்கள் என்று கருத்துப் பட வைக்கின்றது இந்தத் தளம்!

ஒரு போர்க்காலச் சந்ததி ஒன்று திரும்பி நிமிர்ந்து நிற்க முயல்கையில், அதனை மீண்டும் விழுத்தும் முயற்சியாகவே இதை நான் பார்க்கின்றேன்!

நீங்கள் கூறுவது போல சீரழிந்து போன யாழ்ப்பாணத்தை, அண்மையில் இரு தடவைகள் சென்ற போதும் என்னால் காண முடியவில்லை!

மற்றும்படி நீங்கள் கூறும் சோடா மூடிகள், யாழ்ப்பாணத்திற்கு ஒன்றும் புதியதும் அல்ல!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுததாம்...ஆமா அதென்னது யாழ்ப்பாணத்துக் கலாச்சாரம்..? கலாச்சாரத்திற்க்கு என்ன வரைவிலக்கணம்..?

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுததாம்...ஆமா அதென்னது யாழ்ப்பாணத்துக் கலாச்சாரம்..? கலாச்சாரத்திற்க்கு என்ன வரைவிலக்கணம்..?

ஆம்பிளைப் பிள்ளயளக் கண்டால், தாவணியால இழுத்து மறைக்கிறதாக்கும்! :D

புறோக்கர்! உங்களிடம் ஒரு வேண்டுகோள்!

நீங்கள் இணைக்கும் இந்த 'new jaffna' தளமானது ஒரு குப்பை போலுள்ளது!

...போலுள்ளது அல்ல...குப்பையே தான். மஞ்சள் பத்திரிகை போல் ஊரில் அங்கொன்று இங்கொன்றாக நடக்கும் செய்திகளுக்கு ஒளிவட்டம் கொடுத்து கிளுகிளுப்பை உருவாக்கும் நாலாம் தர செய்தித் தளம் என்றதை அதன் முதல் 5 செய்தி தலைப்புகளை பார்த்தவுடனேயே புரிந்து கொள்ள முடிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

, அண்மையில் இரு தடவைகள் சென்ற போதும் என்னால் காண முடியவில்லை!

மற்றும்படி நீங்கள் கூறும் சோடா மூடிகள், யாழ்ப்பாணத்திற்கு ஒன்றும் புதியதும் அல்ல!

30 வருடத்துக்கு முதலே உந்த சோடாமூடி பிரச்சனை இருந்தது

எங்கட சழூகத்தில நடக்கிற முழு பிரச்சனையும் இந்த பொண்ணுங்களால தான் வாறது.........எப்ப தான் திருந்தபோயினமோ தெரியாது.......

:rolleyes:

எல்லாவற்றையும் ஒருவன் பார்த்துக்கொண்டான்.

இனி....................?????????????????

ஏன் தலைவர் காலத்தில் இவை நடக்கவில்லையா...எப்ப தலைவர் சாவார் எப்ப வேலி பாய்வம் என்றா சனம் இருந்திச்சினம்...

புலிகளின் காவல் துறைக்கு வந்த வழக்குகளில் 30 சத வீதத்துக்கும் அதிகமானவை இப்படியானவைகளே. அதனால் தான் வன்னிச் சனம் 'காவல் துறைக்கு', 'காதல் துறை' என்றும் ஒரு பட்டப் பெயர் வழங்கி இருந்தனர். எல்லாக் காலத்திலும் அந்தந்த காலத்துக்குரிய தொழில் நுட்பங்களையும் மதி நுட்பங்களையும் பயன்படுத்தி இப்படியானவை நடந்து கொண்டுதான் இருந்தன. ஒரு சமூகம் என்ற அளவில் மற்ற எல்லாச் சமூகங்களிலும் இருக்கும் அதே பிரச்சனைகள் வேறு வடிவங்களில் இருக்கத்தான் செய்யும். அதுவும் பாலியல் தொடர்பான செயல்களை ஒரு களவாகவே செய்து பழகிய எம் சமூகத்திலும் எம்மைப் போன்ற சமூகங்களிலும் இவை தொடர்பான மீறல்கள் அதிகமாகவே இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சழூகத்தில நடக்கிற முழு பிரச்சனையும் இந்த பொண்ணுங்களால தான் வாறது.........எப்ப தான் திருந்தபோயினமோ தெரியாது.......

என்ன சுண்டல் சவுண்ட் கொஞ்சம் ஒவராக இருக்கு நெடுக்ஸ் இருக்கிற துணிவு போலகிடக்குது.....

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தலைவர் காலத்தில் இவை நடக்கவில்லையா...எப்ப தலைவர் சாவார் எப்ப வேலி பாய்வம் என்றா சனம் இருந்திச்சினம்...

புலிகளின் காவல் துறைக்கு வந்த வழக்குகளில் 30 சத வீதத்துக்கும் அதிகமானவை இப்படியானவைகளே. அதனால் தான் வன்னிச் சனம் 'காவல் துறைக்கு', 'காதல் துறை' என்றும் ஒரு பட்டப் பெயர் வழங்கி இருந்தனர். எல்லாக் காலத்திலும் அந்தந்த காலத்துக்குரிய தொழில் நுட்பங்களையும் மதி நுட்பங்களையும் பயன்படுத்தி இப்படியானவை நடந்து கொண்டுதான் இருந்தன. ஒரு சமூகம் என்ற அளவில் மற்ற எல்லாச் சமூகங்களிலும் இருக்கும் அதே பிரச்சனைகள் வேறு வடிவங்களில் இருக்கத்தான் செய்யும். அதுவும் பாலியல் தொடர்பான செயல்களை ஒரு களவாகவே செய்து பழகிய எம் சமூகத்திலும் எம்மைப் போன்ற சமூகங்களிலும் இவை தொடர்பான மீறல்கள் அதிகமாகவே இருக்கும்

புலத்தில் எங்கன்ட ஆட்கள் கொஞ்சம் வெளிப்படையாக( இளையவர்கள்,கிழடுகளும்) செய்யத் தொடங்கிட்டினம் வெகு விரைவில் உலகத்தமிழர்கள் அந்த நிலையை அடைவார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடத்துக்கு முதலே உந்த சோடாமூடி பிரச்சனை இருந்தது

ஏன் 'சோடாமூடி' என்று பேர் வந்தது என்று புத்தன் 'அறியுமா'? :icon_mrgreen:

மலையாளத்திற்கு மன்னிக்கவும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் 'சோடாமூடி' என்று பேர் வந்தது என்று புத்தன் 'அறியுமா'? :icon_mrgreen:

மலையாளத்திற்கு மன்னிக்கவும்!

டாக்டர் பட்டம் கிடைக்கும் என்றால் ஞான் ஆராச்சிக்கட்டுரை வரையுமாக்கும்....

ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுததாம்...ஆமா அதென்னது யாழ்ப்பாணத்துக் கலாச்சாரம்..? கலாச்சாரத்திற்க்கு என்ன வரைவிலக்கணம்..?

அதொண்ணும் பெரிசா மேட்டர் இல்ல பங்காளி.,

ஜஸ்ட்......சப்பை ... !

யாழ்ப்பாண கலாச்சாரம்னா..........

நாங்க அவுத்து போட்டு நடு ரோட்டில வேணும்னாலும் ஓடலாம்.......

எங்களுக்கு வாறவளுக ,,,அவுத்துபோட்டு பாத் ரூமில கூட குளிக்க கூடாது எங்கிற.......

புரட்சிகர சிந்தனை! :)

எல்லாவற்றையும் ஒருவன் பார்த்துக்கொண்டான்.

இனி....................?????????????????

மீண்டும் வருவார் ஆனால் வராது.............

இந் நிலைகள் யாழ்ப்பாணத்தில் மட்டும்தானா?

இல்லை ஆனால் யாழ்ப்பாணத்தில் தான் கலாச்சாரம் சுட்டு மின் கம்பத்தில் தொங்கடவிடப்பட்டு வளக்கப்பட்டது,.

  • கருத்துக்கள உறவுகள்

அதொண்ணும் பெரிசா மேட்டர் இல்ல பங்காளி.,

ஜஸ்ட்......சப்பை ... !

யாழ்ப்பாண கலாச்சாரம்னா..........

நாங்க அவுத்து போட்டு நடு ரோட்டில வேணும்னாலும் ஓடலாம்.......

எங்களுக்கு வாறவளுக ,,,அவுத்துபோட்டு பாத் ரூமில கூட குளிக்க கூடாது எங்கிற.......

புரட்சிகர சிந்தனை! :)

:lol: அது...

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தலைவர் காலத்தில் இவை நடக்கவில்லையா...எப்ப தலைவர் சாவார் எப்ப வேலி பாய்வம் என்றா சனம் இருந்திச்சினம்...

புலிகளின் காவல் துறைக்கு வந்த வழக்குகளில் 30 சத வீதத்துக்கும் அதிகமானவை இப்படியானவைகளே. அதனால் தான் வன்னிச் சனம் 'காவல் துறைக்கு', 'காதல் துறை' என்றும் ஒரு பட்டப் பெயர் வழங்கி இருந்தனர். எல்லாக் காலத்திலும் அந்தந்த காலத்துக்குரிய தொழில் நுட்பங்களையும் மதி நுட்பங்களையும் பயன்படுத்தி இப்படியானவை நடந்து கொண்டுதான் இருந்தன. ஒரு சமூகம் என்ற அளவில் மற்ற எல்லாச் சமூகங்களிலும் இருக்கும் அதே பிரச்சனைகள் வேறு வடிவங்களில் இருக்கத்தான் செய்யும். அதுவும் பாலியல் தொடர்பான செயல்களை ஒரு களவாகவே செய்து பழகிய எம் சமூகத்திலும் எம்மைப் போன்ற சமூகங்களிலும் இவை தொடர்பான மீறல்கள் அதிகமாகவே இருக்கும்

நல்ல கருத்து நிழலி

ஆனால் நான் குறிப்பிட்டது இதற்கு மட்டுமே

அதாவது இளவயதுக் கர்ப்பம், இளைஞர்களின் மதுபானப் பாவனை, ரவுடித்தனம் என்பன யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில் அதிஉச்ச நிலை கண்டுள்ளது.

ஏன் 'சோடாமூடி' என்று பேர் வந்தது என்று புத்தன் 'அறியுமா'? :icon_mrgreen:

மலையாளத்திற்கு மன்னிக்கவும்!

http://mithuvin.blogspot.com/2010/02/blog-post.html

Edited by matharasi

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி புத்ஸ் அணணா இப்பிடிலாம் பப்ளிக்கா கேக்கலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இத் தளத்தின் செய்திகளை யாழில் இருந்து நீக்க வேண்டும். குறித்த இணையம், குப்பை மட்டுமல்ல, ஒரு பாலியல் தளம் போன்ற செயற்பாட்டையே கொண்டிருக்கின்றது. பெரும்பாலான செய்திகள், பாலியல் சம்பந்தப்பட்டவை மட்டுமல்ல, அதையே முகமூடிக்குள் இருந்து எழுதுவது போல இருக்கின்றது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.