Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடும்குளிர், எதிர்காற்றின் மத்தியில் 3வது நாளாக தொடரும் நீதிக்கான நடைப்பயணம்.

Featured Replies

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிக்கான நடை பயணம் மேற்கொண்டுள்ள மூவரும், இன்று (07-02-2012) 3வது நாளாக வெட்டவெளிப் பிரதேசங்கள் ஊடாக கடும் குளிர் மற்றும் எதிர்காற்றுக்கு மத்தியில் 60 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளனர்.

08022012%20002.jpg

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் குளிரான காலநிலையை தமிழ் மக்கள் நன்கு அறிந்துள்ள பின்புலத்தில், தமிழீழ மக்களின் விடிவுக்காக, ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்கள், மக்கள், மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இந்த உறவுகளுக்கு புலம்பெயர்ந்த மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை நல்கி வருகின்றனர்.

08022012%20003.JPG

இவர்கள் மூவரும் கடும் சிரமத்தின் மத்தியிலும், மனம் தளராது உறுதிநடை மேற்கொள்ளும் ஏக காலத்தில் அனைத்துலக போர்க்குற்ற விசாணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற செய்தி தாங்கிய அஞ்சல் அட்டைகள் ஊடகவும், துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் தமிழீழ உணர்வாளர்களால் வழிப்புணர்வுப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

08022012%20004.JPG

ஈழத்தமிழ் மக்களின் இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் நீதிக்கான நடை பயணத்தின் நோக்கத்தையும், தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இன அழிப்பு, அதன்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துவதன் மூலமே வெளிநாடுகளின் ஆதரவையும், வெளிநாட்டு மக்களின் ஆதரவையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும் என நடை பயணத்தை மேற்கொள்ளும் உறவுகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

08022012%20005.jpg

எனவே, கடும் குளிர், மற்றும் காற்றின் மத்தியில் இடம்பெறும் நடைபெறும் நடை பயணம், மற்றும் அஞ்சல் வழிப் வழிப்புணர்வுப் போராட்டங்களிற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது ஆதரவைக் கொடுத்து, தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கம் மீதான போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி, இன அழிப்பை அம்பலப்படுத்த துணை நிற்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புகுழு அலுவலகங்கள், அல்லது பிராந்தியப் பணியாளர்கள் ஊடாக இந்த அஞ்சல் அட்டைகளைப் பெற்று, தாம்வாழும் நாடுகளில் உள்ள வேற்று நாட்டு மக்களுக்கும் அவற்றைக் கொடுக்குமாறு நடை பயணத்தை மேற்கொள்ளும் உணர்வாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.

அஞ்சல் அட்டைகள், மற்றும் துண்டுப்பிரசுரங்களை www.walk-for-justice.org என்ற இணையம் ஊடகாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை ஏற்ப்பாட்டாளர்கள் அறியத்தருகின்றார்கள்.

மனம் தளாராமல் தொடரும் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மே 5 ஜநானா முற்றத்தை நிரப்புவதே நாம் இவர்களுக்கு செய்ய கூடிய உதவி.

  • கருத்துக்கள உறவுகள்

முடியவில்லை

இதற்கு எழுத முடியவில்லை.

வெட்கமாக இருக்கிறது இவர்கள் படும் வேதனையை இங்கிருந்து கொண்டு எழுதுவதற்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடியவில்லை

இதற்கு எழுத முடியவில்லை.

வெட்கமாக இருக்கிறது இவர்கள் படும் வேதனையை இங்கிருந்து கொண்டு எழுதுவதற்கு.

உண்மையில் இந்த குளிரில் எங்களால் செய்ய முடியாததை அவர்கள் செய்கிறார்கள், அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.போற்றுதலோடு நின்றுவிடாது நிகழ்வு முடியும் இடத்தில் ஜநான முற்றத்தை நிரப்பி உங்களோடு எப்போது நாம் இருப்போம் என்று உற்சாகத்தை கொடுக்க வேண்டும், அவர்கள் நடந்து வவருகிறார்கள் நாம் பஸ்ஸில்தான் போக போகிறோம் அது கூட குளிர், என்றும் வேலை என்றும் உறவுகள் ஒதுங்கிவிடாது இருத்தல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் நானிருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் நடைப்பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்.

இலக்கை அடையும் வரை தேக ஆரோக்கியத்துடன் நலமாக

இருக்க கடவுளை வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நடைப்பயணம் வெற்றி பெற வாழ்த்து(க்)கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் நடைப்பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்.இலக்கை அடையும் வரை தேக ஆரோக்கியத்துடன் நலமாக இருக்க கடவுளை வேண்டுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நடைப்பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும்..! இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடைப்பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் நடைப்பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளைஞர்கள், ஐரோப்பாவில் வீசும்... சைபீரியக் குளிரில், எமது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொள்ளும் நடைப்பயணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. வெள்ளைக்காரனே... குளிரில் முடங்கிக்கிடக்கிறான். எம்மவர்களுக்கு இது, எவ்வளவு தூரம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று சந்தேகமாக உள்ளது. இப்படியான கால நிலையில், இந்த ஆபத்தான நடைப்பயணம் தேவையா? எனினும்.. அவ் இளைஞர்களின் முயற்சிக்கு தலைவணங்குகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நடைப்பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

காரைக்காலம்மையாரின், கயிலைமலை யாத்திரை மாதிரித் தான் இது!

அவள் ஒரு பெண்ணாக இருந்ததால், சிவபெருமான் கடும் சோதனைக்கு உள்ளாக்கினாராம்!

கடைசியில், பெண்வடிவத்தை உதறி விட்டுப் பேய் வடிவம் எடுத்தே, நாயனராக முடிந்தது!

நாங்கள் தமிழராக இருப்பதால் தான், இந்தக் கடுமையான குளிர் யாத்திரை செய்யவேண்டியுள்ளது!

தமிழனுக்கு எல்லாமே சோதனை தான்!

வெற்றியோடு திரும்ப வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளத்தில் எரியும் விடுதலை என்னும் அக்கினிகுஞ்சு இவர்களுக்கு இந்த உறுதியை கொடுத்து இருக்கிறது, ஆனால் பயனத்தின் பின் ஏற்பட போகும் உடல் ஊபாதைகள் அவர்களுடன் கூடவே தொடரப்போகிறது.இவர்களது விடுதலை நெருப்புதான் எதிர்கால தமிழ்சந்ததியின் சீரிய இருப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.