Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாய் துர்நாற்றம் – சரி செய்வது எப்படி?

Featured Replies

வாய் துர்நாற்றம் – சரி செய்வது எப்படி?

சிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர்நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் துளைக்கும். அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும்.

நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன. இவைகள் Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன.

வாயிலிருக்கும் நுண்கிருமிகளால் வெளியேறும் இன்னும் வேறு பல கழிவுகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

Cadaverine – இறந்த உடலிலிருந்து வெளியேறும் நாற்றம்,

Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்து ஏற்படும் நாற்றம்.

Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படும் நாற்றம்.

Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும் நாற்றம்.

கிருமிகள் பெருகுவதற்கு தேவையான உணவு நாம் உண்ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற புரத உணவிலிருந்தும், உமிழ் நீர், வாயின் உட்புறத்தில் கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கிறது. வாயை, சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் நன்றாக கொப்பளிக்காததால் உணவுப் பொருட்கள் வெண்மையான காரையாக பற்களின் இடுக்குகளில், பற்களின் மேல், ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற்பகுதியில் மாவு போன்ற வெண் படலமாக படிந்து விடுகிறது. வெண்படிமம் 0.1 – 0.2 மி.மீ அளவில் இருந்தாலும் கிருமிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பெருகி கழிவுகளை வெளியேற்றுகின்றன.

பற்கள் கட்டியிருந்தால், அதற்கும், வாய்க்கு இடையிலும் உணவுப் பொருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏதுவாகிறது. வாயிலும், நாக்கிலும், பற்களின் இடுக்குகளிலும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும், பிற கிருமிகளுக்கும் நிரந்தர போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. இக்கிருமிகளும், அதன் கழிவுகளும் எல்லோரின் வாயிலும் இருக்கின்றன. வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் பலருக்கு நாற்றம் இல்லாமல் இருக்கிறது. வாயையும், பற்களையும் சரியாக பராமரிக்காதவர்களுக்கு நாற்றம் மிகுந்து இருக்கிறது.

அடுத்து, வாயின் உட்பகுதியில் ஈறு நோய் (Gum disease – Chronic Periodontitis) பாதிப்புள்ளவர்களுக்கும் வாயில் துர் நாற்றம் ஏற்படலாம். குறிப்பாக நாக்கின் பின் புறத்திற்கு அருகிலுள்ள பற்கள் மற்றும் ஈற்றின் இடைவெளிகளில் உணவுப் பொருட்களின் படிமம் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நுண் கிருமிகள் தங்கி பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து, பற்களில் குழியை (Periodontal pockets) ஏற்படுத்துகிறது. இந்த குழிகளிலும் மேலும் உணவுப் பொருட்களும், கிருமிகளும் தங்கி, கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்து வாய் துர் நாற்றத்தை அதிகரிக்கிறது.

வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?

1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை. வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.

3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்

4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து, தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும். வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர் நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுகளையும் அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.

5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து 1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது, 2.

வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செய்வது என இரண்டு வகைப்படும். Listerine, Cetylpyridinium Chloride mouth wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. Zinc ions உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. இரண்டு தன்மையும் உடைய Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம் உபயோகிக்கலாம்.

சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல் செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி யை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற்றினால்தான் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம்.

http://www.alaikal.com/news/?p=97191

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி அகூதா, சிலர் கதைத்தால் ஓடனும் போல இருக்கும், ஸ்பிறய் அடிப்பான்கள்.

நல்ல முறை படுக்க முன் வாயை உப்பு நீரால் கொப்பளித்துவிட்டு படுத்தால் இந்த மணம் வராது, ஆனா விடிய பல்லும் மினுக்கனும்

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பகிர்வு ..சிறுவயதிலே நல்ல பழக்கங்களை பழக்கணும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் பயனுள்ள ஒரு விடயம். அத்துடன் வாய்துர்நாற்றம் உள்ளவர்களுடன் பழகி அனுபவத்தால் இதை இல்லவாது செய்யவேண்டும் என்ற ஒரு பொது எண்ணப்பாடு தோன்றியு;ளது என்று நினைக்கின்றேன். எது எப்படி இருப்பினும் எல்லோருக்கும் பணனுள்ள விடயம். இணைப்புக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள இணைப்பு நன்றி.

நிறைய பேர் தனது வாய் நாற்றத்தைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.அடுத்தவர வாயைத் தான் கிண்டுவார்கள்.

  • தொடங்கியவர்

- ஊரில் இருந்த வேப்பம் குச்சி மகத்தானது

- காத்திரமான பல்லுகள் ஆயுளை அதிகரிக்கும்

- மேலை நாடுகளில் பொதுவாக வாயசைவியை (gum) வாயில் போட்டு மென்னுவார்கள், அதுவும் நல்லது என எண்ணுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

வெத்திலை, பாக்கு போடுற பழக்கம் உள்ள ஆக்களுக்கு, வாய் மணக்காது என்று கேள்விப்பட்டன். உண்மையோ தெரியாது. :lol:smilie_iek_071.gif

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வகை உண்டென்று நினைக்கிறேன்..!

  1. வாய் சுகாதாரம்
  2. வயிற்றுச் சுகாதாரம்

முதலாவதற்கு காலையிலும் இரவும் பல் துலக்க வேண்டும்..! தினமும் ஒருமுறை Flossing செய்வதும், Mouth washing செய்வதும் அவசியம்..!

இரண்டாவதுக்கு வயிற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்..! கண்ட நேரத்திலும் கண்டதையும் உள்ளே போட்டுக்கொண்டிருக்கக் கூடாது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

<p>

மேலை நாடுகளில் பொதுவாக வாயசைவியை (gum) வாயில் போட்டு மென்னுவார்கள், அதுவும் நல்லது என எண்ணுகிறேன்
அவர்கள் காலையில் பல்லு விளக்காமல் அதற்குப் பதிலாக கம்மை போட்டு சப்பிக் கொண்டு இருப்பார்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெத்திலை, பாக்கு போடுற பழக்கம் உள்ள ஆக்களுக்கு, வாய் மணக்காது என்று கேள்விப்பட்டன். உண்மையோ தெரியாது. :lol:smilie_iek_071.gif

விடிய எழும்பினவுடனை விஸ்கியாலை வாயை கொப்புளிச்சாலும் உள்ளமணத்தையெல்லாம் அந்தமாதிரி வெட்டித்தள்ளீடும்.........கொப்புளிக்கோணுமெண்டில்லை மிண்டியும் விழுங்கலாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வகை உண்டென்று நினைக்கிறேன்..!

  1. வாய் சுகாதாரம்
  2. வயிற்றுச் சுகாதாரம்

முதலாவதற்கு காலையிலும் இரவும் பல் துலக்க வேண்டும்..! தினமும் ஒருமுறை Flossing செய்வதும், Mouth washing செய்வதும் அவசியம்..!

இரண்டாவதுக்கு வயிற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்..! கண்ட நேரத்திலும் கண்டதையும் உள்ளே போட்டுக்கொண்டிருக்கக் கூடாது..! :D

வயிற்று சுகாதரம் ஓக்கே தோழர் இசைகலிஞ்சன்... உண்மையில் வயிற்றில் புண் இருந்தால் நாக்கு சிவந்து விடும் காரத்தை ஏற்று கொள்ளாது... கண்களில் கண்ணீர் வரும் அச்சரம் என்று அதற்கு சொல்வர்கள்... ஆனால் சிலது பல் விளக்காமலே பக்கத்தில் வந்து பேசி கொண்டிருக்கும் .. அதோட அலர்ஜி நமக்கும் வர வாய்ப்புள்ளது என அதை பத்தடி தள்ளி வைப்பதே ரொம்ப நல்லது :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பல்லுப் போனாச் சொல்லுப் போச்சுது என்பார்கள்.

பற்களைச் சுத்தமாக வைத்திருக்கவும்

வாயால் வரும் துர்நாற்றத்தைப் போக்கவும்

இன்றிலிருந்து நாள் தோறும் முன்று முறை பற்களைத் தீட்டுங்கள்

அடிக்கடி நீங்கள் பாவிக்கும் பற்பசையை மாற்றுங்கள்.

பற்களைக் குச்சிகளால் குற்றும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

பழவகைகளை அதிகம் உட்கொள்ளுங்கள்

இணைப்பிற்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.