Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்னந்தனியே...!

Featured Replies

silhouette_at_sunset-sad.117120037_std.jpg.scaled1000.jpg

நான் நடந்த திசைகளின் பாதைகளில்...

துணையில்லாத.... என் தனித்த பயணங்கள்!

கண்ணுக்கெட்டிய தூரம்வரை... வெறுமை மட்டுமே,

என்னை வரவேற்கத் தயாராய் இருந்தது!!

தோல்விகளை மட்டுமே பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்ற

காலங்கள்கூட... என்நிலை பார்த்துக் கலங்கியிருக்கும்!

கலங்கிய கண்களுடன் உறங்கிய என் விழிகளுக்கு...

கடினமான அதிகாலைகள்தான் இன்னொரு பொழுதினையும்...

உயிருடன் பார்க்க வாய்ப்பளித்துப் போயின!!

சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பு தாங்கொணாது,

என் நிழலில் அமர முயன்று... தோற்றுப்போனேன்!

கொதிக்கும் சூழலில் வெந்துபோனது... என் பிஞ்சு மனமுந்தான்!

என் உடலினை... என் கால்களே சுமந்தாலும்,

மனதின் சுமைகள் காற்தட வழியோரமாய்...

கண் வழி நீரூற்றி... ஆறுதல் சொல்லின!!

பணமும் குணமும்.... வெகுதூரத்திலுள்ள எதிரிகளாய்த் தெரிய,

உறவுகள் எல்லோரும் என்னருகே.... அன்பாய் இருப்பதுபோல்,

வழியனுப்பிய பயணங்களின் இடைவழியில்...

'அநாதை' என்றொரு சொற்பதம் தாண்டிய வலிகளோடு...

உண்மையான ஒரு அன்புக்காய் மட்டும்..... யாசிக்கின்றேன்!!

இது கவிதை சொல்லும் கவிதையல்ல...!

கற்பனைகளின் கதையுமல்ல...!!

தனிமை எனும் கொடுமைக்குள்...

எல்லைதாண்டிய சிறைவாசம்!!!

ஒவ்வொரு நாளாய்.... எண்ணிக்கொண்டிருக்கின்றது,

தனிமையின் வரிகள்.... விடுதலைக் கவியெழுத!!!

**************************************************************************

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை எனும் கொடுமைக்குள்...

எல்லைதாண்டிய சிறைவாசம்!!!

ஒவ்வொரு நாளாய்.... எண்ணிக்கொண்டிருக்கின்றது,

தனிமையின் வரிகள்.... விடுதலைக் கவியெழுத!!!.....................ஒரு நாள் விடியும்.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

நான் நடந்த திசைகளின் பாதைகளில்...

துணையில்லாத.... என் தனித்த பயணங்கள்!

கண்ணுக்கெட்டிய தூரம்வரை... வெறுமை மட்டுமே,

என்னை வரவேற்கத் தயாராய் இருந்தது!!

ஒரு காலத்தில் எனது மட்டுமல்ல இன்னும் பலரின் நிலையும்

இப்படித்தான். அருமையான கவிதை நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தனிமையை அனுபவித்து உள்ளேன் ...தனிமை கொடுமை தான் ஆனால் அதுவே சில நேர‌த்தில் சந்தோச‌த்தைக் கொடுக்கும்...ஒரு பிக்கல்.பிடுங்கல் இல்லாமல் நிம்மதியாய் இருக்கலாம்...ஊரில் இருப்பவர்கள் இங்குள்ளவர்களது வேதனையை,தனிமையை புரிவதில்லை அவர்களைப் பொறுத்த வரை இங்குள்ள‌வர்கள் பணம் காய்ச்சி மர‌ங்கள்

< பணமும் குணமும்.... வெகுதூரத்திலுள்ள எதிரிகளாய்த் தெரிய,

உறவுகள் எல்லோரும் என்னருகே.... அன்பாய் இருப்பதுபோல்,

வழியனுப்பிய பயணங்களின் இடைவழியில்...

'அநாதை' என்றொரு சொற்பதம் தாண்டிய வலிகளோடு...

உண்மையான ஒரு அன்புக்காய் மட்டும்..... யாசிக்கின்றேன்!! >

தொடக்கம் என்ற ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் இருக்கவண்டும் . ஆனால் , முடிவுகளை அருகே வைத்திருப்பதா ? அல்லது நீட்டி வைத்திருப்பதா ? என்பது எமது கைகளிலேயே உள்ளது . ஒருவரை வருத்தி அதனால் வரும் கவியின்பத்தை அனுபவிக்க என்மனம் மறுக்கின்றது . தொடருங்கள் கவிதை மகிழ்சியாக........ 3 .

Edited by கோமகன்

"தோல்விகளை மட்டுமே பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்ற

காலங்கள்கூட... என்நிலை பார்த்துக் கலங்கியிருக்கும்!

கலங்கிய கண்களுடன் உறங்கிய என் விழிகளுக்கு...

கடினமான அதிகாலைகள்தான் இன்னொரு பொழுதினையும்...

உயிருடன் பார்க்க வாய்ப்பளித்துப் போயின!!"

வேதனையின் சுவடுகள் ஒவ்வொரு வரிகளிலும்....

ஆனாலும் தோல்விகளே வெற்றியின் படிக்கட்டுக்களாய் மாறும்.

வேதனையில் வெதும்பிய காலங்கள் விரைவிலேயே கருகி விடும் . இப்படி நம்பிக்கை கொண்டு வாழுங்கள்... வெகு விரைவில் உங்கள் வாழ்வு மலரும் .

அருமையான வரிகள் கவிதை! கவலை வேண்டாம், விரைவில் மகிழ்ச்சி கிடைக்கும் கவி!

கவிக்கொரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை, தரும் ஏகாந்தத்தில்,

தத்துவங்கள் பிறக்கும்!

சிறகு விரிக்கும் மனப்பறவை,

சிந்தனைகளுக்கு வழி சமைக்கும்!

கரைந்து போகும் மனவுறுதி,

கருங்காலி மரமாகி,

வைரம் பாயும்!

விரைவில் வீசட்டும்,,

விடுதலை எனும் தென்றல்!

ஏக்கமிகு கவிதைக்கு,நன்றிகள் கவிதை!!!>>>>>

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கடந்துபோகும் கவிதை...தனிமைகளில் இருக்கும்போதுதான் நான் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறேன்...தனிமை ஒரு வரம் எல்லோராலும் கண்டறியமுடியாத பலவற்றை கண்டறிய தனிமை அருமையான வரம்..தனிமை பலவற்றுக்கு எங்களைத் தயார்ப்படுத்துகிறது...கவிதைக்குப் பாராட்டுக்கள் கவிதை...

அருமையான வரிகள். நன்றி

  • தொடங்கியவர்

தனிமை எனும் கொடுமைக்குள்...

எல்லைதாண்டிய சிறைவாசம்!!!

ஒவ்வொரு நாளாய்.... எண்ணிக்கொண்டிருக்கின்றது,

தனிமையின் வரிகள்.... விடுதலைக் கவியெழுத!!!.....................ஒரு நாள் விடியும்.

நன்றி நிலா அக்கா! என்றேனும் ஒருநாள் விடியும் என்ற நம்பிக்கையில்தான் இன்றைய நாட்களை கரைக்கின்றோம்!

நிச்சயமாக ஒருநாள் விடியும்!!! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணமும் குணமும்.... வெகுதூரத்திலுள்ள எதிரிகளாய்த் தெரிய,

உறவுகள் எல்லோரும் என்னருகே.... அன்பாய் இருப்பதுபோல்,

வழியனுப்பிய பயணங்களின் இடைவழியில்...

'அநாதை' என்றொரு சொற்பதம் தாண்டிய வலிகளோடு...

உண்மையான ஒரு அன்புக்காய் மட்டும்..... யாசிக்கின்றேன்!!

வலிகள் நிரம்பிய வரிகள்

  • தொடங்கியவர்

நான் நடந்த திசைகளின் பாதைகளில்...

துணையில்லாத.... என் தனித்த பயணங்கள்!

கண்ணுக்கெட்டிய தூரம்வரை... வெறுமை மட்டுமே,

என்னை வரவேற்கத் தயாராய் இருந்தது!!

ஒரு காலத்தில் எனது மட்டுமல்ல இன்னும் பலரின் நிலையும்

இப்படித்தான். அருமையான கவிதை நன்றி

ஊரை விட்டு விலகும் போதே எம்மை ஆட்கொள்வது "தனிமை" என்ற சூனியம்தான் . பிரிவின் வலிகளை ஆழமாக உணரவைப்பதுவும் அதுவே!

மிக்க நன்றி வாத்தியார்!

  • தொடங்கியவர்

நானும் தனிமையை அனுபவித்து உள்ளேன் ...தனிமை கொடுமை தான் ஆனால் அதுவே சில நேர‌த்தில் சந்தோச‌த்தைக் கொடுக்கும்...ஒரு பிக்கல்.பிடுங்கல் இல்லாமல் நிம்மதியாய் இருக்கலாம்...ஊரில் இருப்பவர்கள் இங்குள்ளவர்களது வேதனையை,தனிமையை புரிவதில்லை அவர்களைப் பொறுத்த வரை இங்குள்ள‌வர்கள் பணம் காய்ச்சி மர‌ங்கள்

ஒரு வகையில் இதுவும் உண்மைதான் ரதி அக்கா..!

என்ன செய்யிறது ...?

வாழ்க்கை என்பது பல சமயங்களில் ஒரு வட்டத்துக்குள்ளேயே அமைந்துவிடுகின்றது! :(

கருத்துக்கு மிக்க நன்றி ரதி அக்கா! :)

  • தொடங்கியவர்

தொடக்கம் என்ற ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் இருக்கவண்டும் . ஆனால் , முடிவுகளை அருகே வைத்திருப்பதா ? அல்லது நீட்டி வைத்திருப்பதா ? என்பது எமது கைகளிலேயே உள்ளது . ஒருவரை வருத்தி அதனால் வரும் கவியின்பத்தை அனுபவிக்க என்மனம் மறுக்கின்றது . தொடருங்கள் கவிதை மகிழ்சியாக........ 3 .

எல்லாமே எம் கைகளிலேயே தங்கியுள்ளது என்ற நிலை இருந்தாலும்.... சில அசாதாரணமான சூழ்நிலைகள் என்பது, எல்லாவற்றையும் தலைகீழாய் மாற்றிவிடுகின்றது!

அங்குதான் 'கஷ்டகாலம்' என்ற நிலைமை ஆரம்பிக்கின்றதோ என்னவோ? :unsure:

ஆனால் எல்லாமே மாறும்.

இன்பமும் துன்பமும் என்றைக்கும் நிலையில்லாதது!

கருத்துக்கு நன்றி கோ....! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.