Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோறா? சுதந்திரமா?

Featured Replies

சோறா? சுதந்திரமா? மனந்திறந்து பேசுவோமே

சோறா? சுதந்திரமா? என்ற தலைப்பில் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ஒரு சிறிய கவிதை வடிவிலான நூலை 70 களின் முற்பகுதியில் படித்த ஞாபகம் உண்டு. இங்கு சோறு என்பது அபிவிருத்தி அல்லது மேம்பாடு என்பதன் குறியீடாகிறது. சுதந்திரம் என்பது அரசியல் அதிகாரத்தின் குறியீடாகிறது.

1970 களின் ஆரம்பத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஆட்சிக்காலத்தில் தமிழர் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்வது அவசியம் என்ற கருத்தும் சில தமிழர்களால் பலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பா இந்த அபிவிருத்திப்பாதையில் பயணம் செய்தவர்களில் முக்கியமானவர்.

இந்தக் காலகட்டத்தில்தான் யாழ்ப்பாணத்துக்கும் பல்கலைக்கழக வளாகம் வந்து சேர்ந்தது. இதே காலகட்டத்தில்தான் தமிழ் மாணவர்களுக்கெதிரான உயர்கல்வி வாய்ப்பில் தரப்படுத்தல் நடைமுறை கொண்டுவரப்பட்டது. 1972ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டு, இலங்கை சிறிலங்கா ஆக மாற்றமடைந்தது.1974 ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிஸ் வன்முறையும் தமிழர் உயிர்ப்பலியும் நிகழ்ந்தன.தமிழ் இளைஞர்களின் தேசிய எழுச்சி திரட்சி அடையத் தொடங்கியதும் இக்கால கட்டத்தில்தான். ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கான விதைகள் தூவப்பட்டதும் இதே காலகட்டத்தில்தான்.

இக் காலகட்டத்தில், எனது சிறுபராயத்தில் சோறா? சுதந்திரமா? என்ற கவிஞர் காசி ஆனந்தனின் இந்த நூலை நான் படித்திருக்கிறேன். சிறிய கவிதை வடிவில் உணர்ச்சியைப் பிழிந்து கொடுத்து இந் நூல் ஆக்கப்பட்டிருந்ததாகவும் ஞாபகம். அதில் இருந்த கவிதை வரிகள் எதுவும் எனக்கு இப்போது நினைவில் இல்லை. படிக்கும்போது உணர்ச்சி முறுக்கேறியது நினைவில் வருகிறது.

எனது நினைவில் இருக்கும் பதிவின்படி சோறு முக்கியம் அல்ல – சுதந்திரம்தான் முக்கியம் என்ற கருத்தை இந்நூல் ஆணித்தரமாக இடித்துரைத்தது.

இன்று ஏறத்தாழ 40 வருடங்களுக்குப் பின் நாம் மீண்டும் சோறா? சுதந்திரமா? என்ற வகையிலான வாதப்பிரதிவாதங்களைக் கேட்கிறோம். வரலாறு மீண்டும் சுற்றிச் சுற்றி வரும் (History repeats itself) எனக் கூறப்படுவதற்கு இதுவும் நல்லதொரு உதாரணம் போல்தான் இருக்கிறது.

  • தொடங்கியவர்

உண்மையில் இங்கு எது முக்கியம்? சோறா? சுதந்திரமா?

சோறு இல்லாது மனிதன் மிகக் கீழ்நிலையை அடைந்து சீரழிந்த பின்னர் சுதந்திரம் வந்துதான் என்ன பயன்? இதனால் சோறுதான் முக்கியம் என்கிறது சோறுக்காக வாதாடுபவர்களின் வாதம்.

சுதந்திரம் வருவதற்கு மிகக்கூடிய காலம் எடுக்கலாம். அல்லது வராமல் கூடப் போகலாம். இதனால் சுதந்திரத்துக்காகக் காத்திருந்து சோற்றை இழந்து இழிநிலையை நாம் எட்டத்தான் வேண்டுமா? இதனால் சுதந்திரம் கிடைக்கும் நேரம் கிடைக்கட்டும். நாம் முதலில் சோற்றைக் கவனித்துக் கொள்வோம் எனப் போகிறது இவ் வாதம்.

இதனை மறுத்துரைக்கிறது சுதந்திரத்தை முதன்மைப்படுத்தும் மறுவாதம்.

சுதந்திரம் இல்லாவிட்டால் நாம் எமக்கு ஏற்ற வகையில் சோற்றை நாம் ஆக்க முடியாது. இதனால் சுதந்திரம்தான் முக்கியம் என்கிறது இவ்வாதம். சுதந்திரம் இல்லாது சோற்றுக்கு அலைந்தால் மற்றவர் கிள்ளிப்போடும் பிச்சைச் சோற்றில் காலத்தை ஓட்டவேண்டி வரும் என எச்சரிக்கிறது சுதந்திரம்தான் முக்கியமானது எனக் கூறும் இவ் வாதம்.

இதனை இன்னொரு வகையில் கூறப்போனால் சுதந்திரம் குதிரை போன்றது. சோறு இக் குதிரையில் கட்டப்பட்டிருக்கும் வண்டி போன்றது. சுதந்திரம் என்ற குதிரை எமது கையில் இருந்தால்தான் சோறு என்ற வண்டியினை நாம் விரும்பும் திசையில் நம்மால் இழுத்துச் செல்ல முடியும். வண்டியை குதிரைக்கு முன்னால் கட்டுவதில் பயன் ஏதும் இல்லை என எடுத்துரைக்கும் இவ்வாதம் மேம்மாட்டுக்கு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்ட அறிஞர் அமார்தயா சென்னின் (Amartya Sen) இன் Development as Freedom என்ற கருதுகோளையும் துணைக்கழைத்துக் கொள்கிறது.

இப் பத்தியைப் பொறுத்தவகையில் மேம்பாட்டைத் தீர்மானிப்பதில் அரசியலின் - அரசியல் அதிகாரத்தின் முதன்மைப் பாத்திரத்தைப் புரிந்து கொள்கிறது. ஏற்றுக் கொள்கிறது. மேம்பாட்டின் அரசியல் (Politics of development) குறித்த அக்கறையும் இப் பத்திக்கு உண்டு. ஒரு தேசம் - ஒரு மக்கள் கூட்டம் - தனது கைகளில் அரசியல் அதிகாரத்தை எடுக்கும்போது மட்டும்தான் மேம்பாடு உட்பட்ட அனைத்து விடயங்களையும் தனது தேவைக்கும் விருப்புக்கும் ஏற்ற வகையில் நடைமுறைப்படுத்த முடியும். இதனால் சுதந்திரம் இல்லாத சோறு நிலைத்து நிற்கக்கூடியதொன்றல்ல. ஈழத் தமிழர் தேசத்துக்கு ஆரோக்கியமான அடித்தளத்தை இடுவதற்கு உதவக்கூடியதல்ல. அதிலும் சோற்றுக்காகச் சுதந்திரத்தைக் கைவிடுவோமானால் அது நமது தேசத்தின் தலைமேல் நாமே கொள்ளிக்கட்டையினை தூக்கிப் போட்டது போலத்தான் ஆகிவிடும்.

இந்த அடிப்படையான அரசியல் புரிதலில் இருந்து நாம் தற்போதய யதார்த்தத்தை நோக்குவோம். தற்போதய சூழலில் சிறிலங்கா அரசு ஈழத் தமிழர் தேசத்தின் இறைமையினை ஏற்றுக் கொள்ளவோ – ஏன் குறைந்த பட்சம் தன்னிடம் குவிந்திருக்கும் அதிகாரங்களை மிகக் குறைந்த அளவில்கூட ஈழத் தமிழ் தேசத்துடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை. இதனால் அரசியல் அதிகாரத்துக்காக – சுதந்திரத்துக்காகத் தொடர்ச்சியாகப் போராட வேண்டிய நிலையில் ஈழத் தமிழர் தேசம் உள்ளது. இது நீண்டதொரு போராட்டமாக வளர்வதற்கான நிலைமைகள் நிறையவே உள்ளன.

  • தொடங்கியவர்

இத்தகையதொரு சூழலில் சுதந்திரம் வரும் வரை நாம் சோற்றுக்காகக் காத்திருக்க முடியுமா?

இவ்வாறு காத்திருப்பது நமது மக்களுக்கு நன்மை தரக்கூடியதா?

தொடர்ச்சியான போர்க்காலத்திலும் இறுதிப் போர் நேரத்திலும் தம்மிடம் இருந்த வளங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு, தமது வாழ்வின் மிக விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பார்த்து சோறு இப்போது முக்கியம் அல்ல சுதந்திரம்தான் முக்கியம். அதுவரை காத்திருங்கள் என்று கூறுவது சாத்தியமா? இவ்வாறு கூறுவது நியாயம்தானா?

இவ்வாறு கூறுவோமாயின் அதனை அம் மக்கள் ஏற்றுக்கொண்டுதான் விடுவார்களா?

நமது மக்கள் மேலும் நலிந்து விடுவார்களாயின் நமது சுதந்திரத்துக்கான போராட்டமும் நலிவடைந்துவிடும் என்ற வாதமும் புறந்தள்ளக்கூடியதொன்றல்ல. இதனால் நமது சிந்தனை முறையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. சோறா? சுதந்திரமா? எனச் சிந்திப்பதற்குப் பதிலாக நாம் சோறும் சுதந்திரமும் எனச் சிந்திக்க வேண்டும்.

இச் சிந்தனை முறையானது சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை மறுதலிக்காது. அதேவேளை சுதந்திரத்தின் பின் சோறு என்பதற்குப் பதிலாக சுதந்திரத்துக்கும் சோற்றுக்காகவும் ஒரே நேரத்தில் போராட வேண்டும் எனக் கோருகிறது.

சுதந்திரத்துக்கான பயணத்தை பாதையினை எவ்வகையிலும் தடைப்படுத்தாது சோற்றை ஆக்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும் என இச்சிந்தனை முறை பரிந்துரைக்கிறது.

சிங்கள தேசமோ ஈழத் தமிழ் தேசத்தின் தனித்தவத்தை மறுத்து, அதன் தேசம் என்ற தகைமையினை சிதைத்து, ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளை இல்லாதொழிக்க முயல்கிறது என்பதனை இச் சிந்தனை முறை கவனத்துக்கு எடுக்கிறது. சிறிலங்கா அரசு ஈழத் தமிர் தேசத்தின் மீது அனைத்து வகையிலான அடக்குமுறையினைப் பிரயோகிப்பதுடன், மேம்பாடு என்பதனை தனது ஆதிக்கத்தை ஈழத் தமிழர் தேசம்மீது நிலைநிறுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்த முயல்கிறது என்பதனை புரிந்து கொள்கிறது. சிங்களத்தின் நோக்கத்துக்கு பலியாகி விடாமல் - அதேவேளை ஈழத் தமிழர் தேசத்தின் சுதந்திரத்திற்கான விருப்பினை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் எவ்வாறு சோற்றை ஆக்க முடியும் எனச் இச் சிந்தனைமுறை சிந்திக்கிறது.

இதற்கு ஏற்ற வகையிலான செயற்திட்டங்களை வடிவமைக்குமாறு தமிழர் அமைப்புக்களையும் ஈழத் தமிழர் தேசத்தையும் கோருகிறது.

இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவதுடன் தனது தேவைக்கேற்ற மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என்று இச் சிந்தனைமுறை கோருகிறது. ஈழத் தமிழர் தேசம் தனக்கென முன்னெடுக்கும் மேம்பாட்டுத் திட்டம் சிறிலங்கா அரசின் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒரு மாற்றீடாக அமைய வேண்டும். சிறிலங்கா அரசு முன்னெடுக்கும் மேம்பாட்டுத் திட்டங்கள் தமிழர் தேசத்தைப் பலவீனப்படுத்தி சிங்கள தேசத்தைப் பலப்படுத்தும் ஒரு அரசியல் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் ஈழத் தமிழர் தேசம் முன்னெடுக்கும் மேம்பாட்டுத் திட்டம் ஈழத் தமிழ் தேசத்தைப் பலப்படுத்துவதாக அமைய வேண்டும்.

எந்த வகையிலும் சிறிலங்கா அரசினைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை நலிவடையச் செய்யக் கூடியதாகவும் அமையக்கூடாது.

ஈழத் தமிழர் தேசம் சிறிலங்கா அரசின் பிடியிலும் இராணுவ ஆக்கிரமிப்பிலும் உள்ள சூழலில் அதனை எவ்வாறு செய்வது? இதனை சிறிலங்கா அரசு அனுமதிக்குமா? இது எல்லோர் மனதிலும் முக்கியமாக எழக்கூடிய ஒரு கேள்வி.

ஈழத் தமிழர் தேசத்தின் கழுத்தை சிங்களம் திருகி வைத்திருக்கும் ஒரு சூழலில் இது இலகுவாக இருக்காது என்பது உண்மைதான். ஆனால் சரியான முறையில் திட்டமிட்டு உரிய புரிந்துணர்வுடன் களமும் புலமும் இணைந்து செயற்பட்டால் நாம் சோற்றுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் ஒரே நேரத்தில் போராட முடியும். உலகமயமாக்கல், நாடு கடந்த உறவுமுறை, சந்தைப் பொருளாதாரம் போன்றவை தரக்கூடிய வெளிகளை நாம் இம் முயற்சியில் பயன்படுத்த வேண்டும். மக்கள், மக்களில் தங்கியிருந்து மேம்பாட்டு முயற்சிகளை மேற்கோள்ளும் சமூக பொருளாதார சிந்தனையின் அடிப்படையில் நமது சோறு ஆக்கும் முயற்சிகளில் நாம் ஈடுபடலாம். இம் முயற்சிகள் கீழிருந்து மேற்கிளம்புவையாக அமைய வேண்டும்.

சிறு கைத்தொழில் முயற்சிகைள உருவாக்கல், இதன் ஊடாகப் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், தாயகத்தில் நமது பொருளாதார முயற்சிகளின் அடிப்படையில் உருவாகும் பொருட்களுக்கு புலத்தில் சந்தை வாய்ப்புக்களை உருவாக்கல், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், மக்களின் சுகாதார நலத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல் - இவை போன்ற பல விடயங்கள் நமது சோறு ஆக்கும் முயற்சியில் முக்கியம் பெறலாம்இவை அடிப்படையில் மனிதவளத்தை வளப்படுத்தும் நடவடிக்ககைளின் பாற்பட்டவையாக அமையக்கூடியவை. இவற்றை எவ்வாறு செய்வது குறித்த மூலோபாயம், தந்திரோயாயம் குறித்து ஈழத் தமிழர் தேசம் ஆழமாக தனக்குள் விவாதித்துக் கொள்ள வேண்டும். இவ் விவாதங்கள் பகிரங்கத் தளத்தில் நடக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவற்றைச் செய்பவர்கள் தெளிந்த அரசியல் உடையவர்களாக இருத்தல் முக்கியமானது. இதேவேளை இவர்கள் வெளிப்படையாக அரசியல் பேச வேண்டிய அவசியம்கூடக் கிடையாது. நோய்த் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டவர்கள் நோயில் இருந்து பாதுகாக்கப்படுவது போல, தெளிந்த அரசியல் என்ற கவசத்தை அணிந்து இம் முயற்சியினை எடுப்பவர்கள் தடம் மாறாமல் பயணிப்பார்கள். இவர்கள் ஆக்கும் சோறு நமது சுதந்திரத்துக்கும் வலுச்சேர்க்கும்.

- தாமரை காருண்யன்

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=be7d6fc1-d98f-4405-a1cb-cd08a0552603

  • கருத்துக்கள உறவுகள்

சோற்றுக்காகப் போராட வேண்டிய நிலையில் தமிழன்

ஒருபோதும் இருந்ததில்லை.

சுதந்திரத்திற்காகப் போராடியிருந்தால்

சோற்றுக்காகப் போராடத் தேவை இருக்காது

சோறு இல்லை என்று கண்டது சுதந்திரத்தை இழந்தினால். இலங்கையை 1956 வரைக்கும் தென்கொறியாவுக்கு சரியாக வைத்திருந்தது நாம். நாமேதான் தேயிலையை, றப்பரை ஏற்றி நாட்டிற்கு பணத்தைத் தேடித்தந்தவர்கள். வாளைச் சேனை, பரந்தன், ஆனையிறவு, காங்கேசந்துறை, கந்தளாய் எல்லாம் நமது திறமையின் ஆக்கங்களே. பெற்றோலியம் காப்பறேசனே நாம் நிர்வகித்தபோது அது இப்படி அல்லாடவில்லை. சிங்களம் மட்டும் சட்டம் வரும் வரை 65% தொழிகளையும் நாம் வைத்திருந்தவர்கள். இப்போது நாம், மொழியை, மதத்தை, கல்வியை, பண்பாட்டினை, நிலத்தை, நம்மவர்களின் எண்ணிக்கை எல்லவற்றையுமே இழந்து போகும் போது இந்த சோற்றுக் கதை மட்டும் ஏன் பெரிதாகக் கேட்கிறது.

.மாறி வரும் உலகில், அனைத்து அதிகாரங்களுக்கான மையமும் பொருளாதார பலத்தை வைத்தே குவிக்கப்படும். அதே நேரம் ஒரு இனத்தை, ஒரு சமூகத்தை சிதைக்க வேண்டும் எனில் நேரடியாக குண்டு போட்டு அழிக்காமல் பொருளாதார ரீதியில் முன்னேற விடாமல் தடுத்தாலே அந்த சமூகம் பிற பொருளாதார வளம் கூடிய சமூகத்தால் ஆளுகைக்குட்படுத்தப்படக் கூடியவாறு அமைந்து விடும்

ஈழத்தில், இலங்கை பேரினவாத அரசு வெடிகுண்டுகளால் அழிக்கக் கூடிய அதி உச்ச தொகை தமிழ் மக்களை போரைக் காரணம் காட்டி அனைத்து மனித விழுமியங்களையும் மீறி அழித்தொழித்து விட்டது. அதே நேரத்தில் பொருளாதார ரீதியில் வளமான இடங்களை, தொழில் துறைகளை (எம் மக்களின் வாழ்வாதார அடிப்படையான விவசாயம் மற்றும் மீன்பிடி) மக்களை அழிக்கும் போதே முற்றிலுமாக சிதைத்து விட்டது. பேரினவாதத்தின் பல்முனை அழித்தொழிப்பின் மூலம் எம்சமூகத்தின் முக்கிய இரு சக்திகளான மனித வலு மற்றும் பொருளாதார வலு ஆகியவற்றை அதி கூடிய உச்ச அளவில் பலகீனப்படுத்தி விட்டது

இந்த நிலையில் எம் மக்களின் வாழ்வை மீண்டும் கட்டி எழுப்ப பொருளாதார பலத்தினை வளர்த்தெடுக்க உதவுவதே நடைமுறைக்கு சாத்தியமான (பல சவால்கள் இருப்பினும்) ஒரு விடயமாகும். சோறா சுதந்திரமா எனும் போது, முதலில் தமக்கான சோற்றை தாமே தேடிக்கொள்ளத் தேவையான அளவுக்கேனும் சகல வழிகளிலும் பலகீனப்பட்டு இருக்கும் எம் மக்களுக்கு நாம் (புலம்பெயர் மக்கள்) உதவுதல் வேண்டும்

எந்த விதமான அரசுகளின் நேரிடையான உதவிகள் இன்றி, கடும் சவால்களுக்கு மத்தியிலும் உலகின் பலம் வாய்ந்த ஒரு இராணுவ அமைப்பை கட்டமைக்க உதவி செய்த எமக்கு, மீண்டும் எம் மக்களின் பொருளாதார வளத்தை தூக்கி நிறுத்த முடியும்

என் தெரிவு முதலில் சோறுதான்.............

Edited by நிழலி

  • தொடங்கியவர்

இந்த ஆக்கத்தை எழுதியவருக்கு நன்றிகள்.

சிறு கைத்தொழில் முயற்சிகைள உருவாக்கல், இதன் ஊடாகப் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், தாயகத்தில் நமது பொருளாதார முயற்சிகளின் அடிப்படையில் உருவாகும் பொருட்களுக்கு புலத்தில் சந்தை வாய்ப்புக்களை உருவாக்கல், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், மக்களின் சுகாதார நலத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல் - இவை போன்ற பல விடயங்கள் நமது சோறு ஆக்கும் முயற்சியில் முக்கியம் பெறலாம்இவை அடிப்படையில் மனிதவளத்தை வளப்படுத்தும் நடவடிக்ககைளின் பாற்பட்டவையாக அமையக்கூடியவை. இவற்றை எவ்வாறு செய்வது குறித்த மூலோபாயம், தந்திரோயாயம் குறித்து ஈழத் தமிழர் தேசம் ஆழமாக தனக்குள் விவாதித்துக் கொள்ள வேண்டும். இவ் விவாதங்கள் பகிரங்கத் தளத்தில் நடக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவற்றைச் செய்பவர்கள் தெளிந்த அரசியல் உடையவர்களாக இருத்தல் முக்கியமானது. இதேவேளை இவர்கள் வெளிப்படையாக அரசியல் பேச வேண்டிய அவசியம்கூடக் கிடையாது. நோய்த் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டவர்கள் நோயில் இருந்து பாதுகாக்கப்படுவது போல, தெளிந்த அரசியல் என்ற கவசத்தை அணிந்து இம் முயற்சியினை எடுப்பவர்கள் தடம் மாறாமல் பயணிப்பார்கள். இவர்கள் ஆக்கும் சோறு நமது சுதந்திரத்துக்கும் வலுச்சேர்க்கும்.

காரணம், நிகழ்காலத்தை வைத்து எதிர்காலம் எப்படி அமையவேண்டும் என ஒரு சமூக சிந்தனையுடன் தனது சமூகத்தை மேம்படுத்த எழுதுவது. இப்படியான எழுத்துக்கள் சிந்தனையை கூட்டும், எமது மக்களுக்கான தீர்வுகளுக்கு வழி சமைக்கும்.

அவரேதானே சொல்கிறார் அகுதா, நிகழ்காலக் குதிரையின் முன் வருங்கால வண்டி வந்து நின்று வழிமறிக்க கூடாது என்றும். நிச்சயமாக தமிழர்களின் புலத்துப்பொருளாதாரமும், தாயகப்பொருளாதாரமும் இணைக்கப் படவேண்டும். ஆனால் அது மட்டும் போதாது. நாம் இப்போது கேட்கும் தீர்வுப்பொதி, தீர்வின் பின் சர்வதேசம் வந்து தாயகத்தில் முதலிட்டு வியாபரம் செய்யதக்க உரிமையுடனும் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பொழுதும் எமக்கு சோறு கஸ்டமாகத்தான் இருந்தது இருந்தும் எம்மவர்கள் சுதந்திரம் வேண்டி வாக்களித்தார்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதையநிலையில்

தாயகத்தில் சோறு

புலத்தில் சுதந்திரம்

  • தொடங்கியவர்

தற்போதையநிலையில்

தாயகத்தில் சோறு

புலத்தில் சுதந்திரம்

இந்த அணுகுமுறை இன்றைய நிலையில் சாத்தியமானதாகவும் தேவையானாதாகவும் தெரிகின்றது. அதேவேளை புலம்பெயர் மக்கள் தாயக மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும் உதவி வருகிறார்கள் / தொடர்ந்தும் உதவவேண்டும்.

தற்போதையநிலையில்

தாயகத்தில் சோறு

புலத்தில் சுதந்திரம்

விசுகு அண்ணை வர வர மோசமாக போகிறது?

:lol: :lol:

சோறு நிகழ்காலத் தேவை. சுதந்திரம் எதிர்காலத் தேவை! நிகழ்காலத்துக்காக எதிர்காலத்தை அழிக்க முடியாது.. எதிர்காலத்துக்காக நிகழ்காலத்தை..?! எனக்கு ஒரு மண்ணும் புரியல..!! :)

தற்போதையநிலையில்

தாயகத்தில் சோறு

புலத்தில் சுதந்திரம்

மூன்று வரிகளில் அருமையாக எழுதி விட்டீர்கள் விசுகு... மூன்றாவது பச்சை என்னுடையது

தற்போதையநிலையில்

தாயகத்தில் சோறு

புலத்தில் சுதந்திரம்

இதை விட அபத்தம் வேறு எதுவுமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட அபத்தம் வேறு எதுவுமில்லை .

இதுதான்

உங்களுக்கும் எமக்கும் இடையிலுள்ள இடைவெளி

இதுதான்

உங்களுக்கும் எமக்கும் இடையிலுள்ள இடைவெளி

நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள் என்று சற்று விபரமாக எழுதமுடியுமா?நடைமுறையில் அதற்காக எப்படி வேலை செய்யவேண்டும் என்பதையும் எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் விசுகுவைத்துரத்தாமல் திரியை வாசித்து அதற்கு எழுதியிருந்தால் இதற்கு அர்த்தம் புரியும். புரிந்திருக்கும்.

சோறுதானபா

இன்கே மாறுகருது இல்ல

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள் என்று சற்று விபரமாக எழுதமுடியுமா?நடைமுறையில் அதற்காக எப்படி வேலை செய்யவேண்டும் என்பதையும் எதிர்பார்க்கின்றேன்.

தாயகத்தில் சோறு: பாதிக்கப் பட்ட போராளிகள் மக்களை பொருளாதார ரீதியாகத் தூக்கி விட நேசக்கரம் போன்ற அமைப்புகளூடும் தனிப்பட்டும் உதவுதல்

புலத்தில் சுதந்திரம்: (இங்க விஸ்கி, சோறு, சிக்கன், வாயை மெல்ல இலக்கியச் சந்திப்புகள் எல்லாம் நிறைய இருக்குத் தானே?) அதனால், எங்கள் நேரத்தை தமிழருக்கு ஏன் சுய நிர்ணயம் வேணும் எண்டு பலமுள்ள நாடுகளுக்கும் மக்களுக்கும் எடுத்துச் சொல்லப் பயன் படுத்த வேண்டும். இதன் ஒரு பகுதி சிறி லங்காவின் போர்க்குற்றங்களை முன்னிறுத்த உழைத்தலாகும்.

இது தான் விசுகு பிரேரிக்கும் செயல் பாட்டின் சுருக்கம். இதில ஏதாவது பிழை இருந்தால் உங்கள் மாற்றுக் கருத்து/ஆலோசனையையும் திறந்த மனதுடன் எதிர்பார்க்கிறோம்.

ஜெஸ்ரின் சொன்ன அர்த்தம் தான் யதார்த்தம்............ புலத்தில் பிழைப்புக்காக தான் சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.

"இங்கு சோறு என்பது அபிவிருத்தி அல்லது மேம்பாடு என்பதன் குறியீடாகிறது. சுதந்திரம் என்பது அரசியல் அதிகாரத்தின் குறியீடாகிறது."

கட்டுரையின் மையப்பொருளே இதுதான்.(முதலில் கட்டுரையை ஒழுங்காக வாசிக்கவும் )

சோறை சோறாகவும் சுதந்திரத்தை இங்கிருந்து கொடுக்க நினைப்பதையும் தான் அபத்தம் என்று எழுதினேன்.நேசக்கரம் மூலம் அல்லது தனிநபர்களுக்கூடாக சோறு தான் கொடுக்க முடியும் .

அபிவிருத்தி பற்றியும் மேம்பாடு பற்றியும் இப்போ கதைப்பவர் டக்கிளஸ் மட்டுமே,முன்னர் துரையப்பா இப்படி சொன்னதற்காகத்தான் துரோகியாக்கி சுடப்பட்டார் .இப்போ டக்கிளஸ் எதிரியாக பார்க்கப்படுவதும் அதனால் தான்.

அபிவிருத்தியும் மேம்பாடும் வேண்டுமெனில் இணைக்க அரசியல் இல்லாமல் அது எக்காலமும் சாத்தியமில்லை.

தமிழ் தலைமைகள் இணக்க அரசியலுக்கு போகாதற்கு காரணமே அபிவிருத்தி,மேம்பாட்டை விட எமக்கான அரசியல் தீர்வே முக்கியம் என்பதால்தான்,அதைவிட்டு அரசுடன் அபிவிருத்தி என்று போனவர்கள் தான் துரோகியானார்கள்.

பொது தேர்தலுக்கு இதே தலைப்பை கவிதையாக்கிய காசி ஆனந்தன் கூட பின்னர் மாவட்ட சபை தேர்தலில் கூட்டணி பங்கு பற்றும் போது அதை நியாயப்படுத்தி "சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் "என அதற்கொரு விளக்கம் கொடுத்தார் ,ஆனால் இயக்கங்கள் முதன் முதன் அந்த தேர்தலை பகஸ்கரிக்க சொல்லி வெற்றியும் பெற்றனர் .

நாட்டில் சோறு என்பவர்கள் டக்கிளசிடம் போவதுதான் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

"நாட்டில் சோறு என்பவர்கள் டக்கிளசிடம் போவதுதான் நல்லது .

டக்லசிடம் போகலாம்தான்

ஆனால் அவர் பத்தில் ஒன்பதை தனக்கு எடுத்துவிடுகிறாரே?

ஆனால் தற்போதுதான் புரிந்தது

சோறு என்ற பதத்தைக்கேட்டதும் ஏன் இப்படி நீங்கள் பதட்டப்படுகின்றீர்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

"இங்கு சோறு என்பது அபிவிருத்தி அல்லது மேம்பாடு என்பதன் குறியீடாகிறது. சுதந்திரம் என்பது அரசியல் அதிகாரத்தின் குறியீடாகிறது."

கட்டுரையின் மையப்பொருளே இதுதான்.(முதலில் கட்டுரையை ஒழுங்காக வாசிக்கவும் )

சோறை சோறாகவும் சுதந்திரத்தை இங்கிருந்து கொடுக்க நினைப்பதையும் தான் அபத்தம் என்று எழுதினேன்.நேசக்கரம் மூலம் அல்லது தனிநபர்களுக்கூடாக சோறு தான் கொடுக்க முடியும் .

அபிவிருத்தி பற்றியும் மேம்பாடு பற்றியும் இப்போ கதைப்பவர் டக்கிளஸ் மட்டுமே,முன்னர் துரையப்பா இப்படி சொன்னதற்காகத்தான் துரோகியாக்கி சுடப்பட்டார் .இப்போ டக்கிளஸ் எதிரியாக பார்க்கப்படுவதும் அதனால் தான்.

அபிவிருத்தியும் மேம்பாடும் வேண்டுமெனில் இணைக்க அரசியல் இல்லாமல் அது எக்காலமும் சாத்தியமில்லை.

தமிழ் தலைமைகள் இணக்க அரசியலுக்கு போகாதற்கு காரணமே அபிவிருத்தி,மேம்பாட்டை விட எமக்கான அரசியல் தீர்வே முக்கியம் என்பதால்தான்,அதைவிட்டு அரசுடன் அபிவிருத்தி என்று போனவர்கள் தான் துரோகியானார்கள்.

பொது தேர்தலுக்கு இதே தலைப்பை கவிதையாக்கிய காசி ஆனந்தன் கூட பின்னர் மாவட்ட சபை தேர்தலில் கூட்டணி பங்கு பற்றும் போது அதை நியாயப்படுத்தி "சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் "என அதற்கொரு விளக்கம் கொடுத்தார் ,ஆனால் இயக்கங்கள் முதன் முதன் அந்த தேர்தலை பகஸ்கரிக்க சொல்லி வெற்றியும் பெற்றனர் .

நாட்டில் சோறு என்பவர்கள் டக்கிளசிடம் போவதுதான் நல்லது .

(பானையில் காய்ச்சும் சோற்றுக்கும் கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கும் "சோற்றுக்கும்" வித்தியாசம் தெரியாமல் நான் இல்லை-இந்த நடிப்பில் இருந்து முதலில் வெளியே வாங்கோ!)

1. டக்கியின் அபிவிருத்தி பற்றின பேச்சு போர் முடிவுக்கு முதலே இருந்தது தான். அப்ப புலிகள் அபிவிருத்தி செய்ய விடவில்லை என்றார்கள். இப்ப புலிகள் போய் 3 வருஷம் ஆச்சு. ஆனால் இன்னும் அபிவிருத்தியெதுவும் டக்கியூடாக நடந்திருப்பதாகத் தெரியவில்லை.இதன் அர்த்தம் என்னவெண்டு நீங்கள் விளங்கப் படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன். (அல்லது அபிவிருத்தி பற்றிப் "பேசுபவர்" போதும், செயல் பற்றி அக்கறையில்லை என்றால் நாங்கள் பசிலுக்குப் பின்னாலேயே போகலாம், ஒட்டுக் குழு டக்கி எதுக்கு நடுவில?)

2. நேசக்கரமும் பல தமிழரால் நடத்தப் படாத அமைப்புகளும் அன்றாடச் சோற்றுக்கல்ல உதவி செய்கின்றன. தொழில்கள் ஆரம்பிக்கப் படுகின்றன, குடும்பங்கள் கரையேற்றப் படுகின்றன. தனிப்பட்ட வருமான அதிகரிப்பு, அதன் மூலம் அந்தப் பிரதேசத்தின் GDP அதிகரிப்பு என்பன அபிவிருத்தி தான். நீங்கள் அமெரிக்கா கனடா போல பாரிய தொழில் நிறுவனங்கள் திறந்து CEO க்கள் கட்டுக் கட்டாய் பணம் உழைப்பது மட்டுமே அபிவிருத்தி என்று நினைத்திருந்தால் அது கொஞ்சம் தவறான புரிதல் என்று நினைக்கிறேன்.

3. இணக்க அரசியல்:மீண்டும் டக்கி தான் உதாரணம். வருடக் கணக்கான இணக்க அரசியல் தமிழர்களுக்குக் கொண்டு வந்த பொருளாதார அபிவிருத்தியையும் (எத்தனை தொழில் சாலைகள் அரசின் ஆதரவுடன் திறக்கப் பட்டன , எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு வட-கிழக்கில் கிடைத்தது போன்ற தகவல்களுடன் வந்தால் இன்னும் நல்லம்!) அரசியல் ரீதியான தீர்வையும் பட்டியலிடுங்கள் இங்கே. அதை வைத்துக் கொண்டு மேலே பேசுவோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.