Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதம் தலைகாட்டும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mullivaikkal.jpg

மவுனித்துப் போன குரலில்,

மனிதம் புன்னகைக்கின்றது!

மண்ணுள் புதைந்த மனிதத்தின்,

கீறல்கள் விழுந்த உடலில்,

கோரப் பற்கள் கீறிய கோடுகள்!

சீரற்ற மூச்சுக் காற்றுச்,

சேடமாய் இழுக்கையில்.

கோரைப் புற்கள் அசைகின்றன!

பேரழிவின் பெரும் பசியில்.

ஆவிகள் கரைந்து போய்.

ஆயிரம் நாட்களாகி விட்டன!

பறக்கும் பருந்துகள் மட்டுமா,

பக்கத்திலிருந்த புறாக்கள் கூட.

பங்கு கேட்கின்றன!

பாவமென்ற வார்த்தைகளால் மட்டும்,

பசியாறிக் கொண்டிருக்கிறது மனிதம்!

கோவில்கள் நிமிர்கையில், ,

கோபுரங்கள் வளர்கையில்,

காவியுடை தரித்தவர் கண்களில்,

கனலாய் எரிகிறது நெருப்பு!

கழிந்து போகும் நாட்களில்,

அழிந்து போகின்றன தடயங்கள்!

ஆனாலும் மனிதம் சிரிக்கின்றது.

ஆழ்ந்த இருட்டின் கருமையிலும்,

ஆங்கோர் சிறு வெளிச்சம்!

வேதனைக்கு வடிகால் தேடி,

விரைந்து மறைகின்றன நினைவுகள்,

விந்தை நிறைந்த உலகத்தின்,

விசித்திரமான நீதிமன்றங்களில்,

முக்காட்டால் தலை மூடி,

மவுனம் காக்கிறது மனிதம்!

மனிதர்களின் அடிமனத்தில்,

மவுனமாக அழுகின்றது!

மனச்சாட்சியின் திரை விலக்கி,

மனிதம் தலை காட்டும்!

துரோணரின் வாரிசுகள்,

தூர விலகட்டும்!

தூக்கிக் கொடுப்பதற்குக்,

கட்டைவிரல்கள் இல்லை,

கண்ணீர்க் கதைகளுடன்,

காய்ந்து போன காயங்களுடன்,

கனவுகளைச் சுமந்தபடி,,

காவலிருக்கின்றது மனிதம்!

உள்ளேயிருந்து உயிர் குடிக்கும்,

ஓநாய்கள் கூட்டத்தின்,

ஓசை அடங்குகையில்,

மனிதம் தலை காட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

விசித்திரமான நீதிமன்றங்களில்,

முக்காட்டால் தலை மூடி,

மவுனம் காக்கிறது மனிதம்!............. நிஜமான நிஜம். மிக நன்று

  • கருத்துக்கள உறவுகள்

ஓநாய்கள் கூட்டத்தின்,

ஓசை அடங்குகையில்,

மனிதம் தலை காட்டும்!

இது ஒரு நாள் இப்பூமிப்பந்தில் நடைபெற வேண்டும்.

புங்கையூரான் கவிதைக்கு நன்றி.

நீங்கள் செதுக்கியிருக்கும் ஒவ்வொரு வரிகளும் நமதினத்தின் நிலையை மிக நன்றாக உணர்த்தி நிற்கின்றது. பாவியர் இருக்கும் வரை மனிதம் தலைகாட்டாது என்பதும், ஆயினும் அது எவ்வாறெல்லாம் மறைந்தும் மறையாமலும் இருக்கின்றது என்பதை உண்மையாகக் கூறியிருக்கிறீர்கள்.

ஓநாய்களின் ஓசை என்று அடங்கும் என்பது தெரியாமலே நமது வாழ்வு அஸ்தமித்து விடுமா? .....

புங்கையூரான் உங்கள் நல்லதொரு கவிதைக்கு பாராட்டுக்களும் , நன்றிகளும்.

கோவில்கள் நிமிர்கையில், ,

கோபுரங்கள் வளர்கையில்,

காவியுடை தரித்தவர் கண்களில்,

கனலாய் எரிகிறது நெருப்பு!

கழிந்து போகும் நாட்களில்,

அழிந்து போகின்றன தடயங்கள்!

ஆனாலும் மனிதம் சிரிக்கின்றது.

ஆழ்ந்த இருட்டின் கருமையிலும்,

ஆங்கோர் சிறு வெளிச்சம்!

கையறு நிலையிலும்

பெரு வெளிச்சம்

நோக்கிய பயணம் ஒன்றே

எமதிலக்காய்

அடம்பன் கொடியின்

திரண்ட முறுக்குடன் :):):) + 5 .

  • கருத்துக்கள உறவுகள்

அருமை புங்கையூரன், வாழ்த்துகள், மனிதம் தனக்கேன் சோழி என்று, ஒதுங்கி நிற்கின்றது, எங்கள் அவலம் மற்றவர்களின் கையில் விளையாட்டு பொம்மை ஆகிவிட்டது, இதுதான் எங்கள் விதி, சிரியாவும் இப்ப. பூனைகள் விளையாடுகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதாபிமானம் என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காயாகிப்போன இடத்தில் மனிதம் மட்டும்

மரணத்தறுவாயில், பிணங்களை வைத்து அரசியல் சுயலாபம் தேடும் உலகில் நீதி, நேர்மை எல்லாம்

ஓட்டை விழுந்த நாணயக்குற்றிகள் போல் தான்..

நன்றி அண்ணா கவிதைக்கு ஒவ்வொரு வரிகளும் நீறுபூத்த நெருப்பாய் உண்மைகளை,வேதனைகளை,இயலாமையை சொல்லிச்செல்கின்றன..

வாழ்த்துக்கள் அண்ணா தொடர்ந்து எழுதுங்கள். :)+7

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் அருவெறுப்பானது என்றாலும் உண்மையான செய்தி.

கடந்த ஜி 8 மாநாட்டில் (அவர்களது எல்லமாநாட்டிலும் தமது பணத்தை பொருளாதாரத்தை எப்படி பாதுகாப்பது என்றே பேசுவார்கள். மூன்றாம் உலகை எப்படி சுரண்டுவது) அவர்களது ஆய்வு குழு அவர்களுக்கு சொன்ன அறிவுரைகளில் ஒன்று சனத்தொகை உலகில் கூடிவிட்டது என்றும் அதை குறைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்றும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசித்திரமான நீதிமன்றங்களில்,

முக்காட்டால் தலை மூடி,

மவுனம் காக்கிறது மனிதம்!............. நிஜமான நிஜம். மிக நன்று

விழி மூடித் தூங்கும் மனிதம்,

வீறு கொண்டு, சீறிச் சினக்கையில்,

கூண்டோடு அழிந்து விடும்,

கொடுங்கோலர் கூட்டங்கள்!

நன்றிகள், நிலாமதி அக்கா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நாள் இப்பூமிப்பந்தில் நடைபெற வேண்டும்.

புங்கையூரான் கவிதைக்கு நன்றி.

ஓநாய்களின் குரல்வளைகள்,

உடைக்கப் படும் நாட்கள்,

ஓடோடி வருகின்றன!

கருதிட்டமைக்கு நன்றிகள், நுணா!

நீங்கள் செதுக்கியிருக்கும் ஒவ்வொரு வரிகளும் நமதினத்தின் நிலையை மிக நன்றாக உணர்த்தி நிற்கின்றது. பாவியர் இருக்கும் வரை மனிதம் தலைகாட்டாது என்பதும், ஆயினும் அது எவ்வாறெல்லாம் மறைந்தும் மறையாமலும் இருக்கின்றது என்பதை உண்மையாகக் கூறியிருக்கிறீர்கள்.

ஓநாய்களின் ஓசை என்று அடங்கும் என்பது தெரியாமலே நமது வாழ்வு அஸ்தமித்து விடுமா? .....

புங்கையூரான் உங்கள் நல்லதொரு கவிதைக்கு பாராட்டுக்களும் , நன்றிகளும்.

அஸ்தமனத்தின் அடுத்த பக்கம், உதயமே!

உண்மைகள் நீண்ட காலங்களுக்கு உறங்குவதில்லை, கல்கி!

கருத்துக்கு நன்றிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவில்கள் நிமிர்கையில், ,

கோபுரங்கள் வளர்கையில்,

காவியுடை தரித்தவர் கண்களில்,

கனலாய் எரிகிறது நெருப்பு!

கழிந்து போகும் நாட்களில்,

அழிந்து போகின்றன தடயங்கள்!

ஆனாலும் மனிதம் சிரிக்கின்றது.

ஆழ்ந்த இருட்டின் கருமையிலும்,

ஆங்கோர் சிறு வெளிச்சம்!

கையறு நிலையிலும்

பெரு வெளிச்சம்

நோக்கிய பயணம் ஒன்றே

எமதிலக்காய்

அடம்பன் கொடியின்

திரண்ட முறுக்குடன் :):):) + 5 .

கவிதையில் கருத்திட்ட கோமகனே,

கண்ணீரில் கரைகிறது நம்மினம்!

கண் கட்டு வித்தை காட்டுகின்றது சிங்களம்!

காலங்கள் கனிந்து வரும் வேளையில்,,

எங்கள் கல்லறைகளிலும் பூக்கள் மலரும்!

நன்றிகள்!

அருமை புங்கையூரன், வாழ்த்துகள், மனிதம் தனக்கேன் சோழி என்று, ஒதுங்கி நிற்கின்றது, எங்கள் அவலம் மற்றவர்களின் கையில் விளையாட்டு பொம்மை ஆகிவிட்டது, இதுதான் எங்கள் விதி, சிரியாவும் இப்ப. பூனைகள் விளையாடுகின்றது

மனிதம் என்றும் ஒதுங்குவதில்லை உடையார்!

மமதை கொண்டவர்களால் ஒதுக்கப் படுகின்றது!

கருத்துக்கு நன்றிகள், உடையார்!

மனிதாபிமானம் என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காயாகிப்போன இடத்தில் மனிதம் மட்டும்

மரணத்தறுவாயில், பிணங்களை வைத்து அரசியல் சுயலாபம் தேடும் உலகில் நீதி, நேர்மை எல்லாம்

ஓட்டை விழுந்த நாணயக்குற்றிகள் போல் தான்..

நன்றி அண்ணா கவிதைக்கு ஒவ்வொரு வரிகளும் நீறுபூத்த நெருப்பாய் உண்மைகளை,வேதனைகளை,இயலாமையை சொல்லிச்செல்கின்றன..

வாழ்த்துக்கள் அண்ணா தொடர்ந்து எழுதுங்கள். :)+7

நம்பிக்கையை இன்னும் இழந்துவிடவில்லை, ஜீவா!

வெறுமையுடன் மரணத்தைத் தழுவதை விட, நம்பிக்கையுடன் மரணத்தைத் தழுவுவதில் கூட ஒரு சுகம் உண்டு!

கருத்துக்கு நன்றிகள், தம்பி!

கொஞ்சம் அருவெறுப்பானது என்றாலும் உண்மையான செய்தி.

கடந்த ஜி 8 மாநாட்டில் (அவர்களது எல்லமாநாட்டிலும் தமது பணத்தை பொருளாதாரத்தை எப்படி பாதுகாப்பது என்றே பேசுவார்கள். மூன்றாம் உலகை எப்படி சுரண்டுவது) அவர்களது ஆய்வு குழு அவர்களுக்கு சொன்ன அறிவுரைகளில் ஒன்று சனத்தொகை உலகில் கூடிவிட்டது என்றும் அதை குறைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்றும்.

அப்படியானால், சனத்தொகை கூடிய நாடுகாளியல்லவா, அவர்கள் தேடியிருக்க வேண்டும்!

நாங்களென்ன பாவம் செய்தோம், மருது?

தமிழனாகப் பிறந்ததைத் தவிர!

நன்றிகள், மருது!!!

  • கருத்துக்கள உறவுகள்

அடி தூள் பின்னீட்டீங்க புங்கையண்ணா...அருமையான கவிதை எதுகை மோனையுடன்... புங்கையண்ணா..!யாழில் கவிதை எழுதுவதில் உங்கள் பாணி தனிப்பாணி..

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகள் கக்கும் நிகழ்கால வரிகளில் கனத்துப் போனது மனது நன்றி புன்கையூறான் கவிதைக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.