Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றும் அன்றே தீக்குளிப்பேன் : கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றும் அன்றே தீக்குளிப்பேன் : கருணாநிதி

karunanithi%2520sankaran%2520kovil.jpg

சென்னை அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றினால், மாற்றப்படும் அன்றைய தினமே

தான் தீக்குளிக்கும் நாளாக இருக்கும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவிலில் நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்; தமிழக முதல்வராக நான் இருந்த போது, சென்னையில் அண்ணா பெயரால் அமைத்த நூற்றாண்டு நூலகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என்று பிரிட்டிஷ், ரஷிய நாட்டினர்களும் கூறுகிறார்கள்.

அண்ணா வாழ்ந்ததை எதிர்காலத்தினர் மத்தியில் பதிவு செய்வதற்காகதான் இந்த நூலகத்தை அமைத்தேன். ஆனால், அதை மருத்துவமனையாக மாற்றுவேன் என்று கூறுபவர்கள், அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா? மருத்துவமனை கூடாது என்று கூறுபவன் அல்ல நான். ஆனால், வேண்டும் என்றே நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

இது தொடர்பான வழக்கு தற்போது நடைபெறுகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரைக்கும் போகலாம். நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என அடம்பிடித்தால், அவ்வாறு மாற்றப்படும் நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும். எங்களை ஆளாக்கியவர் அண்ணா. இளைஞர்களை அறிவாளியாக்கியவர் அவர். உலகம் என்றும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறது. அவர் பெயரால் அமைத்த நூலகத்தை எடுத்தே தீருவேன் என்று ஒரு பெண்மணி ஆக்ரோஷமாக கூறிவருகிறார்.

தேர்தல் மட்டும் எங்களுக்கு முக்கியம் அல்ல. அண்ணாவும் முக்கியம். அவரை உருவாக்கிய பெரியாரும் முக்கியம். அவர்களால் உருவாக்கப்பட்ட நாங்கள் தந்தைக்கும், தனயனுக்கும் செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன. என்னை யாரும் தடுத்துவிட முடியாது. எங்கள் குறிக்கோளை நிறைவேற்றியே தீருவோம். அந்த குறிக்கோள் வலுப்பெற திமுகவுக்கு ஆதரவு தாருங்கள். எனது சூளுரைக்கு பலம் சேர்க்க திமுகவை ஆதரியுங்கள் என்றார் கருணாநிதி.

http://www.4tamilmedia.com/newses/india/3974-2012-03-15-22-49-16?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+4tamilmedia-feeds+%284tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29

'செண்டிமெண்டை' வைத்து அரசியல் செய்யும் இந்த 'தலைவனை' அதே 'செண்டிமெண்டை' வைத்து அரசியல்செய்யவேண்டும் (பெயரை மாற்றவேண்டும்)

:D :D

இயற்கை மரணம் தான் வருதில்லை இப்படியாவது போய்தொலையட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றும் அன்றே தீக்குளிப்பேன் : கருணாநிதி

என்ரை ராசா தீக்குளிக்காதை பெற்ரோல் விலை எக்கச்சக்கம்.....வயது பொனநேரத்திலையும் உனக்கு ஒருமுழம் கயிறுகூட கிடைக்கேல்லையே என்ரை ராசா???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமண்யம் சுவாமியுடன் இவர் போட்டி போடுகிறார் என நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ, தமிழனுக்கு எல்லா நல்ல காரியமும், ஒரே நேரத்தில நடக்கும் போல இருக்கே! :D

  • கருத்துக்கள உறவுகள்

தீக் குழிப்பேன், அரசியலை விட்டே விலகுவேன், அமைச்சரவையை ராஜினாமாச் செய்வேன்.... என்ற வசனங்கள் கருணாநிதி அரசியலில் சேர்ந்த காலத்திலிருந்து... அடிக்கடி உச்சரிக்கும் வசனங்கள். இதை.. நம்புவதற்கும் ஆக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கத்தான் கவலையாயிருக்கு. :lol:

Edited by தமிழ் சிறி

இந்த செய்"தீ"யை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

அண்ணன் "டீ" குடிப்பேன் என்று சொன்னதை எமது ஊடகங்கள் வியாபாரத்திற்காக "தீ" குளிப்பேன் என்று மாற்றி சதி வேலை செய்கின்றன.

ஜயோ இவன் தீக்குளிக்கனும் நாங்க பார்க்கனும் என்டதுக்காக வாதல் யெயா அக்கா அந்த நூலகத்தை மாத்தனும்.

ஒன்னு முத்துகுமாருக்கு பக்கத்தில சிலை வைக்ககூடாது. தள்ளிதான் வைக்கனும்

இது நடக்குமா அதுக்கு முதல்,கலைஞர் ரி.வி, யெயா ரி.வி ,ராஜ் ரி.வி, எல்லாம் எடுத்து வைச்சிட்டு ரெடியா இருக்கனும், அப்ப தான் விபரமா பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

"எனக்கு தீயும் குளிக்க தெரியும், உண்ணா விரதம் இருக்கவும் தெரியும்."

  • கருத்துக்கள உறவுகள்

http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/s320x320/428265_2831675837362_1423116401_32313640_349067266_n.jpg

THANKS-FACEBOOK

அண்ணா நூலகத்தை மாற்றினால் தீக்குளிப்பேன் - கருணா

# ஹிஹி.. இப்படி ஒரு நல்ல விசயத்துக்காகவே ஜெயலலிதா நூலகத்தை மாத்தி தொலைச்சுரப்போகுது.. உசுப்பி விடாதீங்க..

Cartoonist Bala's

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் மகாநடிகன் உண்ணாவிரத்தையே புதுமையான முறையில் செய்து காட்டினவர்

இதற்கும் ஏதாவது புதிய முறைகளை கையாள்வார் கலைஞன் என்றால் ........ சும்மாவா ?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையரசை ஆதரிக்கப்போகும் மத்திய அரசின் விடாப்பிடியான நிலைப்பாட்டினால் மத்திய அரசிலிருந்து விலகவேண்டியிருப்பதைத் தவிர்ப்பதற்காக மக்களை வேறு திசையில் திருப்புவதற்காகக் கலைஞர் இப்படியான ஸ்ரண்ட் வேலைகளைச் செய்யலாமென எண்ணுகிறாரோ தெரியவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.