செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
சென்னையில் அரசு மருத்துவமனையில், மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இளைஞர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். தங்கள் தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரை கத்தியால் குத்தியுள்ளனர். கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் குத்திய இளைஞர்கள்…
-
- 2 replies
- 240 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 352 views
-
-
இஸ்லாமிய நாடான.. ஜோடானின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விவாத அரங்கில் இருந்த இரு தரப்பு அரசியல்வாதிகள்.. விவாதம் முற்றி நடுவரையும் மேசை கதிரைகளையும்.. இடித்துத் தள்ளிக் கொண்டு.. "சூ" தாக்குதல் நடத்திக் கொண்டதோடு.. துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடும் அளவிற்கு.. போனதை இங்கு காணலாம். Gun brandished during live Jordanian TV debate http://www.bbc.co.uk...e-east-18756726 அண்மையில் மேற்குலக (ஐரோப்பா) தமிழர் புலம்பெயர் நாடுகளில் ஒளிபரப்பாகும்.. ஈழத்தமிழர்கள் நடத்தும்.. தீபம் தொலைக்காட்சியிலும் ஒரு ஒட்டுக்குழு சார்ப்பு.. சிறீலங்கா சிங்கள அரசு சார்ப்பு.. லண்டன் வாழ் ரமிழ் பெண்மணி (சோத்து ஆன்ரி ) ஒருவர் விவாத அரங்கில்.. இவ்வாறு மிக மோசமாக நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்க…
-
- 4 replies
- 650 views
-
-
ரோமானியாவில்.... அறுவை சிகிச்சையின் போது, நோயாளி மீது பற்றி ஏரிந்த.. தீ! ரோமானியாவில் மருத்துவமனை ஒன்றில், புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது நோயாளி மீது தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புளோரியாஸ்கா அவசர சிகிச்சை மருத்துவமனையில், கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 66 வயதான பெண்னொருவருக்கு, அறுவை சிகிச்சையின் போது அல்கஹால் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின் அவருக்கு மின்சார கத்தியை மருத்துவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன்போது மின்சாரமும் அல்கஹாலும் வினையாற்றியதால் நோயாளி மீது தீ பற்றியது. இதன் காரணமாக அவருக்கு 40 சதவீத காயம் ஏற்பட்டு பின்னர், அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்…
-
- 1 reply
- 332 views
-
-
கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி முதல் முக்கிய சேவைகள் மற்றும் ஊரக பகுதிகளில் சிறு குறு தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் அல்லாத வாகன போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை, மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால், ஆட்டோவை வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊரடங்கு விதிமுறைகள் காரண…
-
- 0 replies
- 290 views
-
-
இந்தக் கொடுமை நிஜம் தானா? நான் கேள்விப்பட்ட இந்த தகவல் சரிதானா என்பதை விவரம் அறிந்தவர்கள் யாராவது விளக்கிச் சொல்லுங்களேன்: சிதம்பரம் கோவிலுக்கு பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளையும் கோவிலின் சொத்து வழி வருமானங்களையும் அங்குள்ள தீட்சித தர்மகர்த்தாக்களும் அர்ச்சகர்களும் தான் பங்கிட்டுக் கொள்கின்றனராம். கோவிலின் சம்பிரதாயப்படி திருமணமான தீட்சிதர் தான் கோவிலில் அர்ச்சகராக முடியுமாம். அர்ச்சகரானால் தான் வரும்படியில் பங்கு என்பதால் அந்தக் குடும்பங்களில் - திருமணமானவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வருமானம் உயரும் என்பதால் - பால்ய விவாகங்கள் இன்றும் நடைபெறுகின்றனவாம். பல தீட்சித குடும்பங்களில் பெண்ணுக்கு ஏழு எட்டு வயது முடியும் முன்பே திருமணம் செய்து விடுகிறார்களாம்.பிள்ளைகள் …
-
- 2 replies
- 1.1k views
-
-
http://youtu.be/2lkcsQZ-_tc 12 மணி நேர ஆய்வுக்குப் பின்னர் இந்த காணொளி சில கனடிய கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட அனிமேசன் காணொளி என்று இனங்காணப்பட்டுள்ளது. இதே போல் நானும் நேற்று சற்று ஏமாந்தன். நான் மிகவும் பிடித்து விளையாடும் strategic game age of empire (இதன் மூலமே மாயன் வரலாற்றையும் முதலில் விரிவாகத் தெரிந்து கொண்டேன்) . இது மைகுராசாவ்டின் ஒரு வெளியீடு. இதன் 1,2 மற்றும் 3 வெளியீடுகள் பூராவும் விளையாடி 4 இன் வரவுக்காக சில வருடங்களாக காத்திருக்கிறேன். இந்த நிலையில்.. நேற்று இணையத்தில் age of empire 4 இன் முன்னோட்டக் காணொளி என்ற பெயரில் ஒன்றிருக்க பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன். இருந்தாலும்.. உள்ளூர ஒரு நம்பிக்கையீனம் பிறக்க மேலும் தகவலைப் பார்…
-
- 2 replies
- 673 views
-
-
சென்னை விமான நிலையத்தில் எல்டிடிஇ போராளி கைது வெள்ளிக்கிழமை, ஜனவரி 30, 2009, 17:27 [iST] சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு விடுதலை புலி இயக்கத்தைச் சேர்ந்த போராளி கைது செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு கொழும்பில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த வாலிபர் ஒருவர் பற்றி உளவுத்துறை பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடியுரிமை துறை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் அவருக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர் www.thatst…
-
- 1 reply
- 833 views
-
-
பெண்ணொருவரிடம்.. பாலியல் இலஞ்சம் கேட்ட, முத்தரிப்பு துறை மேற்கு கிராம சேவகர் கைது மன்னார்- முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய, கிராம சேவகர் ஒருவர் சிலாபத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முத்தரிப்பு துறை மேற்கு கிராம அலுவலராக கடமையாற்றும் கிராம அலுவலகரே இவ்வாறு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை, கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முத்தரிப்பு துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், ஆவணம் ஒன்றை கிராம சேவகரிடம் கோரியிருந்த நிலையில் அவர், பிரதேச செயலகத்தில் நாளைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்ணை கஸ்டப்படுத்த கூடாது என்பத…
-
- 18 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணம், தென்மராட்சி நுணாவில் A - 9 வீதியில் கார் ஒன்றின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு,மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த கார் ஒன்றின் டயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவநேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஐவர் காரில் பயணித்துள்ளனர். அவர்களில் நான்கு வயதுடைய சிறுவன், 35 வயதுடைய பெண் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் மூவரும் படு…
-
- 3 replies
- 592 views
-
-
கொழும்பு, தும்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலக வாசலில் இன்று (22) காலை பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=11894
-
- 0 replies
- 447 views
-
-
யாழில்... கொரோனா தொற்றுக்கு, உள்ளான பெண் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்! யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார். இந்த நிலையில் தாய்க்கு தொடர்ந்து வைத்தியர்களின் விசேட கண்காணிப்புடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதேநேரம், பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் தாய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ள நிலையில், நேற்றைய தினம் தனது இரட்டை குழந்தைகளுடன் அவர் வீடு தி…
-
- 0 replies
- 376 views
-
-
தனியாக வசிக்கும் வயதான பெண்ணொருவரின் வீடொன்றின் கூரையினுள் அடுத்தடுத்து இரு மாடுகள் வீழ்ந்து அதிர்ச்சியடையச் செய்த சம்பவமொன்று இங்கிலாந்தின் லமோர்னா எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. 77 வயதான ஸு மார்ஷெல் எனும் பெண்ணின் வீட்டிலேயே இவ்வாறு மாடுகள் வீழ்ந்துள்ளது. இதனால் வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதன்போது அதிர்ஷ்டவசமாக எவருக்கும் உயிராபத்துக்களோ காயங்களோஏற்படவில்லை. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்மணி சமலறையில் வேலை செய்து கொண்டிருக்கையில் அவரது நெசவு செய்யும் தறிக்கு அண்மையில் இரு மாடுகள் ஒரு நிமிட இடைவெளியில் வீழ்ந்துள்ளன. இது குறித்து மார்ஷெல் கூறுகையில், 'பாரிய சத்தம் கேட்டது. மரம் வீழ்ந்ததாக நினைத்தேன். ஆனால் இரு மாடுகள் வீழ்ந்தன…
-
- 0 replies
- 424 views
-
-
வீதியில் மாம்பழம் விற்கும் எம்.பி யின் மகள்.. நம்புவீர்களா? நாட்டில் நிலவும் அரசியல் சூழலில், அந்த அரசியல்வாதியையும் நிச்சயமாக அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அவர்தான் கரியமுண்டா. ஒருமுறை எம்.பி-யாக இருந்தாலே மகனுக்கு பெட்ரோல் பங்க் வைத்துக் கொடுத்து, நான்கு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்து விடுபவர்களுக்கு மத்தியில், கரியமுண்டாவின் மகள், தெருவில் மாம்பழம் விற்கிறார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கரியமுண்டா, 1977-ம் ஆண்டு முதல் குந்தி (தற்போது ஜார்ஹன்ட்) தொகுதியிலிருந்து ஏழு முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1977-ம் ஆண்டில் மொரார்ஜி தேசாயின் அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். தேர்தலுக்குத் தேர்தல் தொகுதி மாறும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், ஒரே…
-
- 2 replies
- 1.5k views
-
-
பேருந்தில் இறங்க விடாது சித்திரவதை காணாமல் ஆக்க படடோரின் உறவுகள் , பேரூந்தில் இருந்து இறங்க விடாமல் காவல் துறை கட்டுப்படுத்தினர்.
-
- 1 reply
- 382 views
- 1 follower
-
-
இலங்கை முழுவதும் தற்போது அறியப்பட்ட பெயரான ஞானாக்காவின் புகைப்பட தொகுப்பு இது. அனுராதபுரத்தை சேர்ந்த ஞானாக்கா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சோதிடருமாவார். ஆளும், எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் பலர் ஞானாக்காவின் ‘வாக்கை’ நம்பியிருப்பதால், அனுராதபுரத்தில் ஞானாக்கா தனி சாம்ராஜ்ஜியமே கட்டியெழுப்பியுள்ளார். முறைகேடாக சொத்துக்கள் சேகரித்தல், அரச நிலத்தை அபகரித்து ஹொட்டல் கட்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளாக சிங்கள ஊடகங்களும் வெளிப்படுத்தி வருகிறது. உள்ளூர் மக்கள் அவரை பெரிதாக நம்பாத போதும், அரசியல்வாதிகள் அவரை தீவிரமாக நம்புகிறார்கள். பிரமுகர் ஒருவர் பிரதமர் பதவியை பெற ஞானாக்காவின் உதவியை நாடிச் சென்றதாக…
-
- 4 replies
- 619 views
-
-
தென் இலங்கையில் இதுவரை கண்டிராத அபூர்வ விலங்கு! அச்சத்தில் மக்கள் மாத்தறை, மிதிகம பிரதேசத்தில் இனந்தெரியாத மிருகம் ஒன்று நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மிதிகமவில் பல கிராமங்களில் சுற்றித்திரிந்த விலங்கினால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் இளைஞர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் முதல் இந்த விலங்கை தேடி வந்தனர். அதற்கமைய, நேற்று மிதிகம ஜெயவிஜய கிராமத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த மிருகம் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், மிருகம் ஆக்ரோஷமாக செயற்பட ஆரம்பித்தமையினால் கிராம மக்கள் அதனை கயிற்றினால் கட்டி வைத்துள்ளனர். நான்கு கால் மற்றும் நீண்ட வால் கொண்ட இந்த உயிரினத்தை இதுவரை பார்த்ததில்லை என கிராம மக்கள் …
-
- 8 replies
- 619 views
-
-
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா ரஞ்சிதாவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா. இவர் சாமியார் நித்யானந்தாவுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டது. நித்யானந்தாவின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டன. கர்நாடக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே தனக்கும், நித்யானந்தாவுக்கும் இடையே குரு- பக்தை உறவு மட்டுமே இருப்பதாகவும், சிலர் தேவையில்லாமல் அவதூறு கிளப்பி வருவதாகவு…
-
- 10 replies
- 3.2k views
-
-
வீதித்தடுப்பில் மோதி வானில் பறந்து மாடிக் கட்டிடத்தில் பாய்ந்து சொருகி நின்ற கார்! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதித் தடுப்பில் மோதி வானில் பறந்து அருகிலிருந்த கட்டிடத்தின் மாடியில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதியின் வீதியில் அதிகாலை வேளையில் வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த வௌ்ளை நிற சொகுசுக் கார், கட்டுப்பாட்டை இழந்து வீதியின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் சுமார் 20 அடி உயரத்திற்கு வானில் பறந்து எகிறிய கார், அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மாடி ஜன்னலுக்குள் பாய்ந்…
-
- 12 replies
- 703 views
-
-
திருடப் போனால் திருட்டோடு நிற்க வேண்டும், அங்கு பேஸ்புக் எல்லாம் பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டவேண்டியதுதான் ! அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் திருடன் ஒருவன் , திருடிய வீட்டில், கணினியை உபயோகித்து, தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்திவிட்டு, பின்னர், ஃபேஸ்புக் கணக்கை ‘லாக் அவுட்’ செய்ய மறந்ததை அடுத்து காவல் துறையிடம் சிக்கியுள்ளான். திருடிய வீட்டின் உரிமையாளரின் கணினியில் தனது ஃபேஸ்புக் கணக்கை திறந்து பார்த்த அந்த நபர் பின் கணக்கை மூட செய்ய மறந்துள்ளான். அந்த திருடிய நபரான நிகோலஸ் விக் என்பவரின் ஃபேஸ்புக் கணக்கில் இருக்கும் ‘ப்ரோஃபைல் பிக்சர்’ அதாவது அவரது புகைப்படத்தை வைத்து அந்த வீட்டின் உரிமையாளர் வீதியில் அந்த நபரை அடையாளம் கண்டுள்ளார். அந்…
-
- 8 replies
- 1.1k views
-
-
Giant sinkholes 2009 ம் வருடத்தில் இருந்து தீடீரென வீதிகளிலும், மக்கள் வாழும் குடியிருப்புகளிலும் உண்டாகும் பாரிய குழிகளால் பெரும் அதிர்வலைகள் உண்டாகி உள்ளன, இது எவ்வாறு உண்டாகின்றன என சூழலளியலாளரும், விஞ்ஞானிகளும், மண்டையை உடைந்துக் கொண்டு ஆராய்கினம். அனேகமா, கீழால, உந்த நிலக்கக்கரிக்கு, கனிமப் பொருட்கள் எடுக்க கிண்டினது, பொறியுது போல தான் எனக்கு படுகுது. உதைச் சொன்னால், சனம் குழம்பிடும் எண்டு கமுக்கமா இருக்கினம் போல தான் படுகுது. அமெரிக்காவில், புளோரிடாவில், கடந்த வாரம் மட்டும் இரண்டு குழிகள் உண்டாகி உள்ளன. இதில் ஒருவர் உயிர் இழந்து உள்ளார். இந்த இணைப்பினைப் பார்த்து விபரீதத்தினப் புரிந்து கொள்ளுங்கள். This week, a Florida neighborhood fell victim to it…
-
- 16 replies
- 2k views
-
-
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் பென்னட் ரூபசிங்க இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடுவல நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு 3 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும், 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். மாலபேயிலுள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் சகோதரரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் வாக்குமூலம் அளிக்குமாறு பென்னட் ரூபசிங்கவுக்கு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் போது இடையூறு விளைவிக்கக் கூடாது எனவும் கடுவல நீதிமன்ற நீதவான் இவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்குவி…
-
- 0 replies
- 550 views
-
-
அமெரிக்காவின் கென்டக்கியைச் சேர்ந்த 62 வயதான மிக்கி நில்சன் என்ற முதியவரொருவர் மதுபானத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி ஓடக்கூடிய கார் ஒன்றினை உருவாக்கியுள்ளார். இக்காரானது பழைய தேவையற்ற கழிவுப் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 6 மாத உழைப்பின் பின்னர் இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது வெள்ளை மாளிகையின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள ஒபாமா இத்தகைய முயற்சிகள் நாட்டினரை பெருமிதம் கொள்ளச் செய்வதாகவும், இதனால் எதிர்காலங்களில் எரிபொருட்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய தேவை குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31236
-
- 2 replies
- 554 views
-
-
நடிகை திவ்வியாவுக்கு நடந்தது என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள் வெங்கடேஷ் இயக்கத்தில் குத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா. இவர் அதனைத் தொடர்ந்து கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாது ஏராளமான கன்னட படங்களில் நடித்துவரும் திவ்வியா, தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டுவருகின்றார். இந்நிலையில் அண்மையில் அவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துவிட்டார் என இணையத்தில் போலி செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ” தான் உயிரி…
-
- 2 replies
- 362 views
-
-
இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்கள் அழிந்துவிடும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கணினி தரவுகளின் அடிப்படையில் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மேற்கொண்ட கணக்கீடுகளின்படி, அந்த நேரத்தில் அனைத்து பாலூட்டிகளையும் அழிக்கும் ஒரு பாரிய அழிவை பூமி எதிர்கொள்ளும் என்று தெரியவந்துள்ளது. தொடர்புடைய காலகட்டத்தில், பூமியில் உள்ள எந்த உயிரினமும் 40 முதல் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எதிர்கொள்ள வேண்டும். பூமியின் அனைத்துக் கண்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து வெப்பமான, வறண்ட மற்றும் பெரும்பாலும் வாழத் தகுதியற்ற “பாங்கேயா அல்டிமா” என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டத்தை உருவாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிமிடத்தில் இருந்து படிம எரிபொருட்களை எரிப்பதை ந…
-
- 3 replies
- 537 views
- 1 follower
-