செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற 'பாசக்கார' கணவன்! ஜூன் 21, 2007 ஈரோடு: வரதட்சணை தர மனைவி வீட்டார் தாமதம் செய்து வந்ததால், கோபமடைந்த கணவன், மனைவியின் சிறுநீரகத்தை எடுத்து ரூ. 80 ஆயிரத்திற்கு விற்று விட்டார். அந்த கொடூர கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள கருப்பண்ணார் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 1 மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். வரதராஜன் தறி வேலைக்குச் செல்கிறார். செல்வராணி நூல் போடும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் செல்வராணி வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த வரதராஜன், கத்தியால் குத்த முயன்றார். …
-
- 4 replies
- 2.1k views
-
-
வன்னிப் போர்க்களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்!!! இந்த ஆக்கத்தை முன் அனுமதியின்றிப் பயன்படுத்துவோர் திருடர்களாகவே கருதப்படுவர். இவை ஒரு அதிசயமான விடயமாகும். அதனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் எனத் தெரியும் அதற்கு நான் என்ன செய்யலாம். உண்மைகள் என்பது மூடி மறைக்கப்பட்டாலும் ஒரு நாள் வெளிவருவது தானே. இங்கு நான் குறிப்பிடுவது வன்னியின் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் பொருட்கள் இருந்தாலும் வாங்கவோ விற்கவோ முடியாத நிலையில் இருந்த சராசரி விலைப் பட்டியலாகும். இந்த அட்டவணையில் தற்போதுள்ள விலையையும் அங்கே இருந்த விலையும் போடப்பட்டுள்ளது. பொருட்கள் தற்போதை விலை ---வன்னி விலை (சராசரி) அரிசி ---60 ரூபாய் ---5500 ரூபாய் மா ---75 ரூபாய்…
-
- 4 replies
- 886 views
-
-
சென்னை அருகே அம்மன் சிலைகள் பால் குடித்ததாக பரபரப்பு சனிக்கிழமை, ஆகஸ்ட் 14, 2010, 9:40[iST] சென்னை : சென்னை அருகே கோவில்களில் இருந்த அம்மன் சிலைகள் பால் குடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரண்டு வந்த பெண்களும், ஆண்களும், சிறுமிகளும் அம்மன் சிலைகளுக்குப் பால் கொடுத்து பரவசமடைந்தனர். இது ஆடி மாதம். தமிழகம் முழுவதும், சென்னையிலிருந்து குமரிவரை அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக் கோலம் பூண்டுள்ளது. கூழ் காய்ச்சுவது, தீ மிதிப்பது என விசேஷமாக உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பூந்தமல்லி பகுதியி…
-
- 4 replies
- 772 views
-
-
யாழில் வீதியில் நெல் விதைத்துப் போராட்டம்! வீதியில் நெல் விதைத்து யாழில் இன்று விநோத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.- மானிப்பாய் – காரைநகர் வீதியை புனரமைப்புச் செய்துதருமாறு கோரியே மூளாயில் மக்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது போராட்டக்காரர்கள் வீதியில் வெள்ளம் தேங்கி நிற்கும் பெரும் பள்ளங்களில் ஏர் பூட்டியும், உழவியந்திரங்களைக் கொண்டும் வயல் உழுவது போன்று பாசாங்கு செய்து நெல் விதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களும் மூளாய், பொன்னாலை பிரதேச மக்களும் அதிக அளவில் பங்குபற்றினர். https://athavannews.com/2023/1358212
-
- 4 replies
- 643 views
- 1 follower
-
-
குறுந்தூர ஓட்ட வீரங்கனை சுசந்திகா ஜயசிங்க வேறு நபருடன் இரவு வீட்டில் இருந்து சிக்கிக்கொண்டதால், தான் அவரை தாக்கியதாக சுசந்திகாவின் கணவர் தம்மிக்க தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னரும் ஆண் ஒருவருடன் இருந்தது, பொரல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, பின்னர் இருவரும் சமாதானத்திற்கு வந்திருந்தோம். நேற்றிரவு இன்னுமொரு ஆணுடன் வீட்டில் தனியாக இருந்தார். அந்த நபர் பின்புற மதில் சுவரில் ஏறி குதித்து தப்பிச் சென்றார். சுசந்திகா வீட்டின் முன் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து என்னை திட்டிவிட்டு, முன்பக்க மதில் சுவரில் ஏறி வெளியில் குதித்து விழுந்து நேராக பொலிஸ் நிலையத்திற்கு ஓடிச் சென்றார். தப்பியோடிய நபரின் உடைகள் இருந்த பொதியையும் அடையாள அட்டைய…
-
- 4 replies
- 731 views
-
-
112 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்! 2014-12-24 11:09:55 யாழில் 112 வயதினை கடந்த ஒருவர் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றார். நவாலி தெற்கு மானிப்பாயை சேர்ந்த கணபதி காத்தி என்பவர் கடந்த 1902 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பிறந்தார். இதன்படி கடந்த மாதம் தனது 112 ஆவது பிறந்த தினத்தினையும் கொண்டாடினார். எவருடைய உதவியும் இன்றி தனது தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொண்டும் இன்றும் தடுமாறாத உடலுடனும் உளத்துடனும் சாதாரணமாக நடமாடித் திரிகின்றார். எந்தவொரு போதைப் பொருளுக்கும் அடிமையாகாமல் இருப்பதுடன் சிறந்த உணவுப் பழக்கமும் தளராத உழைப்புமே தனது நீண்ட ஆயுளுக்கு காரணம் என அவர் தெரிவித்து இருந்தார். - See more at: http://www.met…
-
- 4 replies
- 486 views
-
-
அமெரிக்காவின் நியூ யார்க்கை சேர்ந்த பெண் லியானா கிறிஸ்டியானா பேரியன்டாஸ். இவர் ஒரு திருமண பிரியர். அவர் கண்ணில்பட்டு மனதுக்கு பிடித்த ஆண்களை அதிரடி யாக திருமணம் செய்தார். அது போன்று 10 ஆண்களை ஊரறிய திருமணம் செய்து இருக்கிறார். அதில் ஒரு விசேஷம் என்ன வென்றால் ஒருவரை கூட அவர் விவாகரத்து செய்ய வில்லை. இவர் தனது முதல் திருமணத்தை கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கினார். ஆனால் அவருக்கு 2002-ம் ஆண்டு பிசியான ஆண்டாக அமைந்தது. காதலர் தினத்தன்று லாஸ்ஐலேண்டு பகுதியை சேர்ந்த நபரை முதலாவதாக திருமணம் செய்தார். அதன் பின்னர் 15 நாட்களுக்கு பிறகு ராக் ஐலேண்டு பகுதியை சேர்ந்த வரையும், அதையடுத்து 13 நாட்களுக்கு பின் 2 பேரையும் திருமணம் செய்தார். தொடர்ந்து இது போன்று 10 திருமணங்கள் செய்தார். அந்…
-
- 4 replies
- 449 views
-
-
அடிக்கிறது கொள்ளை.. இதுல கோவம் வேறயா கோவம்.. வீட்டு பொருட்களை அடித்து நொறுக்கிய திருடர்கள்! அடிக்கிறதே கொள்ளை.. இதில் ஆத்திரம் பொங்கி வழியுது ஒரு வீட்டில் ஆட்டைய போட நினைத்த களவாணிகளுக்கு. ஈஞ்சம்பாக்கம் பகுதியில் குடியிருப்பவர் பிரபாகர். இவர் பெருங்குடியில் உள்ள கார் கம்பெனியில் மேனேஜர் ஆவார். இவர் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், தனது மனைவி கல்பனா மற்றும் 3 குழந்தைகளை அழைத்து கொண்டு கொடைக்கானலுக்கு சென்றிருந்தார்.இன்று காலை ஊர் திரும்பி பிரபாகர், தனது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, விலை உயர்ந்த பொருட்களாக பெரிய டி.வி., கண்ணாடிகளாலேயே ஜன்னல்கள், அலங்கார பெட்டிகள் ஆகியவை எல்லாம் சுக்…
-
- 4 replies
- 858 views
-
-
Spectrum Raja's House ....in Tamil Nadu http://www.youtube.com/watch?v=a5tbcDjocWs
-
- 4 replies
- 1k views
-
-
விலாசத்தைக் கூறி எஜமானியை வந்தடைந்த பறவை தனது எஜமானியின் வீட்டிலிருந்து பறந்து சென்ற வேளை வழி தவறிய பறவையொன்று, தனது எஜமானியின் வீட்டு விலாசத்தைப் பொலிஸாரிடம் தெரிவித்து மீளவும் எஜமானியுடன் இணைந்து கொண்ட விசித்திர சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. டோக்கியோ நகருக்கு மேற்கேயுள்ள சகமிஹரா நகரிலுள்ள தனது எஜமானியின் வீட்டிலிருந்து பறந்து சென்ற மேற்படி பறவை வழி தவறி ஹோட்டலொன்றை சென்றடைந்துள்ளது. இதன்போது அப்பறவை, ஹோட்டலுக்கு வந்த விருந்தினரின் தோளில் அமர்ந்து கொண்டது. இந்நிலையில் அவர் அப்பறவையை பொலிஸாடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து மூன்று நாட்களாக மௌனமாக இருந்த அப்பறவை, நான்காம் நாள் தனது பெயரையும் எஜமானியின் வீட்டு விலாசத்தையும் கூறியுள்ளது. 'பிகோசான்' எ…
-
- 4 replies
- 894 views
-
-
ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு - குடல் வெடித்து உயிரிழந்த ஊழியர் Vhg மார்ச் 30, 2024 தென்னிலங்கை தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விளையாட்டு வினையானது கடந்த திங்கட்கிழமை (25-03-2024) பிற்பகல், அதே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், உயிரிழந்…
-
-
- 4 replies
- 422 views
-
-
ஜெர்மனியில் மலைப்பாம்பு மூலம் கழுத்து மசாஜ்: வாடிக்கையாளர்கள் பரவசம் ஜெர்மனியில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலையத்தில் வாடிக்கையாளர்களின் கழுத்தில் ஏற்படும் தசை பிடிப்பை மலைப்பாம்பு மசாஜ் மூலம் சீரமைக்கின்றனர். பெர்லின்: முடி திருத்தும் கடைகளில் சிகை அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் ஜெர்மனியில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடையில் வாடிக்கையாளர்களின் கழுத்தில் ஏற்படும் தசை பிடிப்பை மசாஜ் மூலம் சீரமைக்கின்றனர். அதுவும் மலைப்பாம்பை கழுத்தில் சுற்ற வைத்து மசாஜ் செய்கின்றனர். இந்த முடி திருத்தும் சலூன…
-
- 4 replies
- 506 views
- 1 follower
-
-
உலகின் உயர்ந்த மனிதரும், குட்டை மனிதரும் லண்டனில் சந்தித்துக் கொண்டனர் உலகின் மிக உயர்ந்த மனிதரும், மிகக் குட்டையான மனிதரும் முதற்தடவையாக சந்தித்துக் கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு லண்டனில் இடம்பெற்றுள்ளது. உலக கின்னஸ் சாதனை தினத்தை முன்னிட்டு லண்டனில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக உலகின் மிக உயர்ந்த மனிதரும், மிகக் குட்டையான மனிதரும் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளனர். இதற்கிடையிலேயே இருவரும் சந்தித்துள்ளனர். நேபாள நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய சந்திரா பஹாடுர் டாங்கி (Chandra Bahadur Dangi) உலகிலேயே மிகவும் குட்டையான நபராக கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ளார். இவரது உயரம் 54.6 சென்றி மீற்றராகும். இவரது எடை 15 கிலோ கிரா…
-
- 4 replies
- 774 views
-
-
முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மல்லிகைதீவு பகுதியில் உள்ள ஆட்டு மந்தையொன்றில் இருந்து 35 ஆடுகளை கும்பலொன்று திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினமான நேற்று குறித்த ஆட்டு மந்தையில் பாதுகாப்புப் பணியில் இருந்த இருவரைத் தாக்கிவிட்டு கும்பலொன்று சுமார் 9 லட்சத்து முப்பத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான 35 ஆடுகளைத் திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான இருவரில் ஒருவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் வற்றாப்பளை பகுதியை சேர்ந்த குடும்பஸ…
-
-
- 4 replies
- 487 views
-
-
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன்போது சகாதேவன் அர்ச்சுனாவை பார்த்து, பாராளுமன்ற உறுப்பினர் போல இல்லாமல் நீங்கள் ஏன் பைத்தியக்காரத்தனமாக பேசுகின்றீர்கள் என்று கூறினார். அதற்கு shut up (வாயை மூடுங்கள்) என்று அர்ச்சுனா கூறினார். இதன்போது குறிக்கிட்ட தம்பிராசா, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். Shut up என்று எல்லாம் கூற முடியாது. இங்கே அதிகாரிகள் தான் உள்ளார்கள் என்றார். இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கதைக்கும் போது, கதைப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்க…
-
- 4 replies
- 461 views
- 3 followers
-
-
வங்கிக் கடனை அறவிடுவதற்கு சென்ற முகவரை விளக்குமாறினால் அடித்து பல்லை உடைத்த பெண்! (ரெ.கிறிஷ்ணகாந்) மாவனல்ல நகரிலுள்ள வங்கி ஒன்றில் கடனை பெற்றுக் கொண்டு ஒரு வருட காலமாக அதனை மீளச்செலுத்தாமல் இருந்த பெண் ஒருவரை வங்கி முகவர் தேடிச்சென்ற போது அந்தப் பெண் குறித்த வங்கி முகவர் மீது விளக்குமாறினால் தாக்கி காயமடையச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஒன்றிலிருந்து கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் இருந்த பெண் ஒருவரை தேடி வங்கி முகவரொருவர் தனது உதவியாளரொருவருடன் அரனாயக்க, வெலிமன்ன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அவரிடம் கடன் தவணைப்பணம் செலுத்த தவறி…
-
- 4 replies
- 504 views
-
-
20 ஆண்டுகளாக பஞ்சுகளை மட்டுமே உண்டு வாழும் வினோத பெண் (வீடியோ) சமையலறையில் பயன்படுத்தும் பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பழக்கத்துக்கு பெண் ஒருவர் அடிமையாக உள்ளார். இங்கிலாந்தின் வால்சென்ட் பகுதியில் குடியிருந்து வரும் 23 வயதான எம்மா தாம்சன் என்ற இளம்பெள் நாள் ஒன்றுக்கு 20 பஞ்சுகளை சுவைத்து சாப்பிடுகிறார். தனது 3-வது வயதில் குளியலறை பஞ்சை முதன் முறையாக சுவைத்து பார்த்த எம்மா, அதைத் தொடர்ந்து சமையலறையில் பயன்படுத்தும் பஞ்சை சாப்பிடத் துவங்கியுள்ளார். பீகா (Pica) எனப்படும் ஒருவித நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதுபோன்று சத்துக்கள் எதுவும் இல்லாத பொருட்களை உணவாக உட்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாத்திரம் துலக்கும் திரவத்தில் ஏற்கெனவே ஊறப்போட்டு வைத்திருந்த…
-
- 4 replies
- 1.1k views
-
-
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மின்சாரம் செத்துப் போய் விட்டதாகவும், அதற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது சில மணி நேரங்களாக இரு்நத மின்தடை தற்போதைய அதிமுகஆட்சியில் பல மணி நேரமாக மாறியுள்ளது. சில பகுதிகளில் காலவரையின்றி மின் தடையும் இருந்து வருகிறது. மக்களின் உயிரைக் குடித்து வரும் இந்த மின்தடையால் மக்கள் படும் அவதியை சொல்லில் வடிக்க முடியாது. சட்னி அரைக்க முடியவில்லை, ஜூஸ் போட்டுக் குடிக்க முடியவில்லை. டிவி பார்க்க முடியவில்லை. பேனில் காற்று வாங்க முடியவில்லை, அட ஒரு டிவி சீரியலைக் கூட ஒழுங்காக பார்க்க முடிவதில்லை. எங்கு பார்த்தாலும் மின் வெட்டு மின்வெட்டு மின…
-
- 4 replies
- 795 views
-
-
நியூயார்க்: அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஆஷ்டான் கார்டர், மனைவி ஸ்டீபனி கார்டரின் தலைமுடியை அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் முகர்ந்து பார்த்தது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு துறை செயலாளராக ஆஷ்டான் கார்டர் கடந்த 17ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் கலந்து கொண்டார். பதவியேற்ற பின்னர் ஆஷ்டான் கார்டர் உரையாற்றினார். அப்போது, அவரது மனைவி ஸ்டீபனி கார்டர் மற்றும் துணை அதிபர் ஜோ பிடேன் ஆகியோர் நின்றனர். ஆஷ்டான் கார்டர் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவியின் தோள்பட்டையின் மீது கையை வைத்த ஜோ ப…
-
- 4 replies
- 680 views
-
-
மகாத்மா காந்திக்கு ’தேச தந்தை’ என்று பெயர் வைத்தது யார்..? - பதில் தெரியாமல் விழிக்கும் அரசு மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் யாரால் எப்போது வழங்கப்பட்டது என்பதை அறிய ஆறாவது படிக்கும் மாணவி கேட்ட கேள்விக்கு சரியான தகவல் இல்லை என்ற பதிலை மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பரஷ்ஹார் என்ற 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் வழக்கப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்தியாவின் தேசத்தந்தை என மகாத்மா காந்திக்கு வழங்கப்பட்டது எப்போது, அதற்குரிய ஆவணங்கள் உள்ளனவா? என விவரம் தருமாறு கோரியிருந்தார். இந்த மன…
-
- 4 replies
- 3.2k views
-
-
வேலூர்: வாலாஜாபேட்டை அடுத்த வடகடப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த கிணறு வெட்டும் தொழிலாளர்கள் 8 பேர் சென்ற ஆட்டோ கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செல்வராஜ் (வயது50) என்பவர் தலைமையில் தகரகுப்பம் கிராமத்திற்கு இந்த எட்டுபேரும் கிணறு வெட்ட ஆட்டோவில் சென்றனர். தலங்கை ரோட்டில் விநாயகபுரம் என்ற இடத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அங்கு ரோட்டு ஓரத்தில் இருந்த கிணற்றில் தலைகுப்புற பாய்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த செல்வராஜ், குமார்(16), சித்ரா(30), ராணி, அபத், மற்றொரு சித்ரா ஆகிய தண்ணீரில் மூழ்கி பிணமானார்கள். சாமிக்கண்ணு என்பவர் நீச்சல் தெரிந்ததால் அவர் உயிர் தப்பினார். ஆட்டோ டிரைவர் பெர…
-
- 4 replies
- 455 views
-
-
நூலகத்தில் பெற்ற புத்தகத்தை 49 வருடங்களின் பின் ஒப்படைத்த நபர் 2016-03-24 12:11:22 அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் நூலகமொன்றில் இரவல் வாங்கிய புத்தகமொன்றை 49 வருடங்களின் பின்னர் திருப்பிக் கொடுத்துள்ளார். ஜேம்ஸ் பிலிப்ஸ் எனும் இவர், ஒஹையோ மாநிலத்திலுள்ள டேய்ட்டன் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து 1967 ஆம் ஆண்டு இப் புத்தகத்தை இரவல் வாங்கியிருந்தார். அப்போது மேற்படி பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவராக அவர் இருந்தார். இப் புத்தகம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய நாள் கடந்து, வருடங்களும் கடந்து கொண்டிருந்தபோதிலும் அதை ஜேம்ஸ் பிலிப்ஸ…
-
- 4 replies
- 423 views
-
-
[size=3][size=4]திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று காலையில், சூரியனைச் சுற்றி வண்ணமிகு ஒளிவட்டம் தென்பட்டது. இதை உள்ளூர் மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து, புகைப்படம்' எடுத்தனர். அதேசமயம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]ஆனால் இது வழக்கமான இயற்கை நிகழ்வுதான் என்றும் பீதி அடைய்த தேவையில்லை என்றும் வானியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள விஞ்ஞானிகள் கூறுகையில்,[/size][/size] [size=4] [/size] [size=3][size=4]பூமியில் இருந்து 5 கி.மீ., உயரத்தில் உள்ள மேகங்களின் வெப்பநிலை குறையும் போது, அதில் உள்ள நீர், சிறிய, …
-
- 4 replies
- 1k views
-
-
சாகித் அப்ரிடியுடன் காதல்; மீடியாக்கள் மீது பாயும் இந்திய மாடல்! "யாருடன் நான் உறங்க வேண்டுமென்பதை இந்திய மீடியாக்கள் முடிவு செய்யக் கூடாது!" என சாகித் அப்ரிடியுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக ஓபனாக அறிவித்துள்ள இந்திய மாடல் ஆர்ஷி கான் தெரிவித்துள்ளார். துபாயில் சாகித் அப்ரிடியுடன், போபாலை சேர்ந்த இந்திய மாடல் அழகி ஆர்ஷி கான் சுற்றித் திரிவதாக மீடியாக்களில் செய்தி கசிந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஆர்ஷி கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி தனக்கு நல்ல நண்பர் என்றும், இருவருக்கிடையே காதல் எல்லாம் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் இன்று ஆர்ஷிகான் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் '' ஆம்! சாகித் அப்ரிடியுடன் நான் …
-
- 4 replies
- 825 views
-
-
அறிவியல் அதிசயம்: 24,000 ஆண்டுகள் பிறகு உயிர்த்தெழுந்த உயிரினம் 11 Views சைபீரியாவில் 24 ஆயிரம்ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த ஒரு நுண்ணிய பல செல் உயிரினம் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் உள்ள அலீஸா ஆற்றில் இருந்து டெலாய்டு ரோட்டிஃபர் (Bdelloid Rotifer) என்கிற உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டெடுத்தனர். கிரிட்டோபயோசிஸ் என்கிற உறைந்த நிலையில் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின், இப்போது உருகிய பிறகு, எந்த வித பாலியல் ரீதியிலான உறவுகளுமின்றி, அந்த உயிரினத்தால் இனப்பெருக்கம் செய்து கொள்ள முடிந்தது. இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் அந்த உயிரினம் 10 ஆண்டுகள் வரை…
-
- 4 replies
- 650 views
-