சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா தமிழர்களை கடத்தி முதலைக்கு இரையாக்கினார் என்ற குற்றச்சாட்டு உண்டு. கோத்தபாயாவின் உத்தரவுப்படி தமிழர்களை கடத்திய உண்மையை வெளி உலகிற்கு கூறியவரையே இப்போது கடத்தி விட்டார்கள். தமிழருக்கு எப்போது எப்படி நீதி கிடைக்கும்? தோழர் பாலன்
-
- 2 replies
- 660 views
-
-
என் அப்பாவிற்கு வயதாகிவிட்டது. நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவரது கைரேகைகள் சுவர்களில் பதிந்தன. என் மனைவி இதை வெறுத்தார், சுவர்கள் அழுக்காகி வருவதாக அடிக்கடி புகார் கூறுவார்.. ஒரு நாள், என் அப்பாவுக்கு தலைவலி இருந்தது, அதனால் அவர் தலையில் சிறிது எண்ணெய் தடவினார்.. அதனால், நடந்து செல்லும்போது சுவர்களில் எண்ணெய் கறைகள் உருவாகின. இதைப் பார்த்து என் மனைவி என்னைப் பார்த்து கத்தினாள்.. நான் என் அப்பாவைக் கத்தினேன், அவரிடம் முரட்டுத்தனமாகப் பேசினேன், நடக்கும்போது சுவர்களைத் தொடாதே என்று அறிவுறுத்தினேன்.. அவர் காயமடைந்ததாகத் தோன்றியது.. என் நடத்தையைப் பார்த்து நானும் வெட்கப்பட்டேன், ஆனால் அவரிடம் எது…
-
-
- 2 replies
- 398 views
-
-
"அலரி மாளிகையைவிட்டு வெளியேறமாட்டேன்" என்று அடம்பிடித்துக்கொண்டு பிரதமர் பதவியை தனது கழுத்துப்பட்டியைப்போல கொழுவியவாறு கடந்த ஒக்டோபர் மாதம் ஜனநாயகம் பேசிய ரணிலை - இன்று, அதே ஜனநாயகத்தை சாட்டைபோல வீசி அந்த அலரி மாளிகையிலிருந்து கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள் ராஜபக்ச சகோதரர்கள். விடுதலைப்புலிகள் உட்பட தன்னோடு உறவாடிய எல்லாத்தரப்பிற்குள்ளேயும் வெடி வைத்து தனது பிரித்தாளும் சூட்சுமங்களை அரங்கேற்றி விளையாடிய ரணிலுக்கு "பதிலுபகாரமாக" அவரது ஐக்கிய தேசிய கட்சியை சல்லி சல்லியாக உடைத்து பொறுக்கி எடுத்துக்கொண்டு போகச்சொல்லியிருக்கிறார்கள் ராஜபக்ஷக்கள். "ஒட்டுமொத்த கிரிமினல்களும் கிரீடம் சூடிக்கொண்டு நின்று இந்த நாட்டை ஆளப்போவதாக அறைகூவுகிறார்களே" - என்ற…
-
- 2 replies
- 1.9k views
-
-
மரணத்தை வெல்லுதல் பற்றிய உரையாடல். CONQUERING DEATH - A CONVERSATION * * Ranjakumar Somapala S* * மச்சான் உனக்கும் எனக்கும் என்ன பயம். பதினாறு தானே இப்ப. அப்ப. எப்பவும். ** ஜெயபாலன். Jaya Palan * Jaya Palan Ranjakumar Somapala S மச்சான், உனக்கு என்னை தெரியும்தானே. சாவுக்கு அஞ்சினவங்களா நாங்க? என்ன ஒரு மக்கள் பிரச்சினையில போராடி சாகிற விருப்பம் நிறைவேற இன்னும் வாய்ப்பில்லாம போச்சு. மரணத்தை வெல்லுதல் என்பது அஞ்சாமல் மரணத்தோடு விளையாடுவதுதான். * கொழும்பில் இராணுவத்தோடும் தலைவர்களோடும் சரி, வன்னியில் போராளிகளோடுசரி சுட்டா சுடுங்க என்றுதான் நியாயம் பேசின…
-
- 2 replies
- 1k views
-
-
தமிழினப்படுகொலை நினைவகத் திறப்பு நிகழ்வு https://www.facebook.com/uthayan.s.pillai/videos/1053096896714981
-
-
- 2 replies
- 352 views
-
-
#பதிவிட்டவருக்கு_நன்றி: அருள்நிலா (புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அவர்கள் இளைய மகள்) 17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டு சூரியன் மட்டும் தன் கதிர் பரப்பி எழுந்து வந்தான். இரத்தமும், பிய்ந்து போன தசைத் துண்டுகளாகவும், வெடித்துச் சிதறுகின்ற இரும்புத் துண்டுகளாகவும் அழுது கொண்டிருந்தது நந்திக்கடல் விரிந்து கிடந்த அந்த பிரதேசம். திரும்பும் இடமெங்கும் அழுகுரல்கள். விட்டுப் பிரிய மாட்டோம் என்ற உறுதிகள், எங்களோடு நீங்களும் வாங்கோ என்று கெஞ்சல்கள், எங்களால் வர முடியாது நாங்கள் சரணடைய மாட்டோம் ந…
-
- 2 replies
- 1.7k views
-
-
நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் November 16, 2025 1 Minute அண்மைய காலங்களில் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் “மாவா” பாக்கு பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மாவா பாக்கு என்றால் என்ன?, அது எவ்வாறு உடலில் போதையினை ஏற்படுத்துகின்றது?, மாவா பாக்கு உடலில் ஏற்படுத்தும் தீங்கான விளைவுகள் என்ன? மற்றும் அது எவ்வாறு மனிதனை அடிமையாக்குகின்றது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது. 1. மாவா பாக்கில் என்ன இருக்கின்றது? மாவா பாக்கின் முக்கிய உள்ளடக்கம் மூன்று பொருட்கள்தான்: பாக்கு (Areca Nut): கொட்டைப் பாக்கை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது சீவி பயன்படுத்துகின்றனர். புகையிலை (Tobacco): உலர்ந்த புகையிலை இலைகள். சுண்ணாம்பு (Slaked Li…
-
-
- 2 replies
- 338 views
- 2 followers
-
-
இலங்கையில் 2009 யுத்தம் முடிந்தபின் விடுதலைப்புலிகளை கண்களால் பார்த்தறியாத தலைமுறைகள் மெதுவாக இளைஞர்களாகும் இந்த காலப்பகுதியில் அவர்களின் சிந்தனை எங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.. இது இதற்கு அடுத்த தலைமுறை இன்னும் சில வருடங்களில் இளைஞர்கள் ஆகும்போது இன்னும் மாற்றமடையப்போகுது.. ஆனால் யாழில் எழுதும் நாம் எல்லாம் பெரும்பாலும் புலிகள் இருந்த காலத்தில் சேமித்த ஞபகங்களை சுமந்து கொண்டு அலைபவர்கள்.. எங்களுக்கு இவை அந்நியமாகப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.. ஆனால் வயதாகும்போது ஊரில் மைனராக இருந்தவர்கள் ஒதுங்கி புது இளைஞர்கள் மைனர்கள் ஆவதுபோல் நாமும் மெல்ல மெல்ல வயதாவதால் ஒதுங்கும் காலமோ எண்டு சிந்திக்க தோன்றுது.. இது இவர் வயதை ஒத்த பெரும்பாலானவர்கள் சிந்தனைகள் எழுத்து…
-
- 2 replies
- 736 views
-
-
புத்தர் சிலையும் நினைவுத் தூபியும் ============================ யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இடித்து அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இருந்த இடத்தில் மீண்டும் இடித்த கைகளே அடிக்கல் நாட்டப்பட்ட நாளில் இருந்தே இன்னமும் அது கட்டப்படுமா? இல்லையா? என்ற விவாதம் ஒருபுறமும் அது நினைவுத் தூபியாகக் கட்டப்படாது. மாறாக அது சமாதானத் தூபியாக கட்டப்படும்; அதன் மூலம் தூபி எதற்காகக் கட்டப்பட்டதோ அந்த நோக்கம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு விடும் என்ற இன்னொரு விவாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கிளிநொச்சியில் யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட செய்தி வேறு வேறு அனுமானங்களையும் சந்தேகங்களையும் …
-
- 2 replies
- 976 views
-
-
மேகநாதன் முனுசாமி · உண்மை நிகழ்வு.. தமிழரை திருமணம் செய்த நியுசிலாந்து வெள்ளைகார பெண் தன் தமிழ் கணவர் மற்றும் குடும்பத்துடன் இரயிலில் திருச்சிக்கு பயணம் செய்துகொண்டிருந்தார்..அவரிடத்தில் அவரின் கணவர் மூலம் அறிமுகமான நான் பேசிகொண்டிருந்தபோது.. அவர் சொன்னார் தான் முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு வருவதாகவும் தன் கணவர்மூலம் தனக்கு தமிழ் நன்றாக பேச தெரியும் என்றும்..தன் கனவரின் சொந்த ஊருக்கு போய் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.. பேச்சுவாக்கில் தமிழ் திரைபடங்கள் மற்றும் தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் அதி…
-
-
- 2 replies
- 861 views
-
-
அமைச்சர் விஜித ஹேரத்தின் கவனத்துக்கு--- ”இன அழிப்பு“ என்று கூறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேர்காணல் ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். சரி- ஏற்கிறோம்-- A) ஆனால், யாழ்ப்பாணம் -நகதீவ எனவும் திருகோணமலை -பெற்றிக்கோட்டை என்றும் தமிழ் வரலாற்று பாடநூலில் சிங்களப் பெயர்களாக ஏன் மாற்றினீர்கள்? B) சிங்கள இனவாதம் பாடநூலில் ஆரம்பிக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? C) வரலாற்று பாடநூலை பௌத்த தேரர்கள்தான் எழுதுகின்றனரே! தமிழ் வரலாற்று பாடநூலுக்கும் அது மொழி பெயர்க்கப்படுகிறதே! D) இன அழிப்பு என்பது மக்களை கொல்வது மாத்திரமல்ல. அந்த மக்களின் மரபுரிமைகளை அழித்தல், இன விகிதாசாரத்தை மாற்றும் திட்டமிட்ட குடியேற்றங்கள், வரலாற்றுத் திரிபுகள், சமயத்தை வரலாற்று பாடநூலில்…
-
-
- 2 replies
- 326 views
-
-
தண்டனையே குற்றம் “மனித உரிமை மீறல் இனப்படுகொலை என்ற தீர்மானத்தை ஐநா சபையில் நிறைவேற்றுவோம்” என்ற தலையங்கத்தைப் பத்தாவது வருசமா திருப்பியும் சலிக்காம வாசிக்க, “ நான் ஒரு பெட்டிசன் அனுப்பிறன் அதில ஒரு கையெழுத்துப் போட்டு அனுப்பிவிடும்” எண்டு எனக்குப் பெரிய பள்ளிக்கூடத்தில படிப்பிச்சவர் ஒருத்தர் கோல் எடுத்தார். சஜித் பிரேமதாசான்டை இங்கிலீசில இருந்ததை வாசிக்க சிரமப்பட்டிட்டு பேசாமக் கையெழுத்துப் போடுவம் எண்டிருக்கத் திருப்பி கோல் எடுத்து, “ அவர் மகனுக்கு சும்மா அடிச்சுப் போட்டார், இதை விடேலாது நான் கோட்டுக்குப் போப்போறன், மனித உரிமை மீறல் ” எண்டு கடுமையாச் சொன்னார். இருக்கிறதில எது உரிமை எது மீறல் எண்டு முடிவெடுக்கேலாமல் யோசிச்சபடி ஆசுபத்தரீல நடந்து போக, பக்கத்தில வந்த இன்ன…
-
-
- 2 replies
- 566 views
- 1 follower
-
-
இரண்டும் முரண்பட்டுக் கொண்டன. கடுமையாக முட்டி மோதிக் கொண்டன. முடிவில் இரண்டுமே செத்து மடிந்து விட்டன. நடந்த சண்டையில் இரண்டில் ஒன்றும் வெற்றிபெறவில்லை. மாறாக ஓநாய்க்கு எவ்வித சிரமமுமின்றி இரண்டும் உணவாகி விட்டன. இதற்கு இரண்டுமே ஒரே பரம்பரை, ஒரே இனம்; ஒரே வீட்டைச் சேர்ந்தவை. இது போன்றுதான் சிலவேளை நமது குடும்பத்தினுள் நிகழும்சண்டைகளும் கூட! நமக்கு மத்தியில் பிரிவையும் பகையையும் தவிர வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை. நமது சகோதரனுடன் நாம் சண்டையிட்டு வெற்றியீட்டினால் அதன்மூலம் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தமல்ல. மாறாக நமது சண்டையினால் மூன்றாம் நபரான எதிரியின் சந்தோஷத்திற்கு நாம் இரையாகி விடுவதோடு பேரிழப்புகளுக்கும் ஆளாகி விடுகின்றோம். உலகில் குறைகள், பிரச்சினைகள் இ…
-
-
- 2 replies
- 344 views
-
-
-
-
- 2 replies
- 259 views
- 1 follower
-
-
ஃபேஸ்புக், வாட்சப் சேவைகள் உலகம் முழுவதிலும் செயலிழந்தது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் தளம் செயல்படவில்லை என்று ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளும் செயலிழந்திருந்தன. …
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: Doctor Ramanathan Archchuna முன்னிறுத்தியிருக்கிற குழுவில 3 பேர தான் எனக்கு தெரியும்…. ஆனால் அந்த மூண்டு பேரிலும் எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்குது…. ஆனால் என்ட இந்த அபிப்பிராயம் vote ஆ மாறாது…. Because என்ட சொந்த இடம் யாழ்ப்பாணமா இருந்தாலும் கூட, என்ட வாக்காளர் தொகுதி திருகோணமலை….. ஆகவே உண்மையாவே கள நிலவரம் என்ன எண்டு தெரிஞ்சுகொள்ள ஒரு சாவகச்சேரி தங்கச்சியோட கதைச்சன்….. தன்னுடைய வீட்டில எல்லா வோட்டும் அர்ச்சுனாவுக்குத்தான்…. அதோட, Kowshalya Naren அக்காவும் தெரிவில இருக்கிறா எண்டு சொல்லிச்சுது…. அப்ப நான் கேட்ட கேள்வி…. அர்ச்சுனா அண்ணா இவ்வளவு கதைச்ச பிறகும் கூட உங்கட ஊரில ஆதரவு கனக்க இருக்குதா???? அ…
-
-
- 2 replies
- 847 views
-
-
வாழ்க்கை மட்டுமல்ல, இந்த உலக இயங்கியலும் ஒரு வட்டமாகத் தான் சுழல்கிறது. சிறீலங்கா என உங்களால் அழைக்கப்பட்ட தேசமொன்றில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, ஈழம் எனும் தனிநாட்டு அவாவுடன், நாங்கள் முற்பது ஆண்டுகளாக போரிட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் போர்க்காலத்தில் நாம் செய்த தியாகங்கள் / அர்ப்பணிப்புகள் / உறுதிகள் / நம்பிக்கைகள் / துரோகங்கள் எல்லாம், இன்றுவரை உலகறியா ஏராளம் ஏராளம். இன்று இந்த உலகம் சந்திக்கின்ற அத்தனையும், இதனையும் விட அதிகமாக நாம் எதிர்கொண்டோம். ஆம்...! எம்மீது நீண்ட பொருளாதார தடை போட்டார்கள். வாயை கட்டி வயித்தைக்கட்டி உள்ளூர் உற்பத்திகளை நம்பித் தாக்குப் பிடித்தோம். நிலத்திலும் கடலிலும் பாதைகளை துண்டித்து, எல்லைகளை கைப்பற்றி எம்மை கு…
-
- 2 replies
- 988 views
-
-
நாங்கள் சிங்களப்புலிகளாக மாறுவோம். தியாகி திலீபனின் நினைவுநிகழ்வை தடுத்த கமால் குணரத்தினவுக்கு சிங்கள மாணவி எச்சரிக்கை..! சிங்களப்புலி !!! https://www.facebook.com/100053472219030/videos/146270510498689
-
- 2 replies
- 1.6k views
-
-
தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் . மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். வருடங்கள் கடந்தன. ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள். “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “ இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். இங…
-
-
- 2 replies
- 627 views
- 1 follower
-
-
போராட்ட (அரகல) குழுவினர் நடத்திய கலந்துரையாடலில் கலந்து உரையாற்றிய போது... அரசியல் கைதிகள் விடுதலை என்ற கோஷத்தில் தமிழ் கைதிகளுக்கு முதலிடம் இருக்க வேண்டும் – காலிமுக போராட்டக்காரர்கள் கூட்டத்தில் மனோ கணேசன் காலிமுக போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம், அரசியல் கைதிகள் விடுதலை, மனித உரிமை பேணல், மக்களுக்கு நிவாரணம் ஆகியவற்றை நாம் ஏற்கிறோம். இவை எங்களதும் நீண்டகால கோரிக்கைகள்தான். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல…
-
- 2 replies
- 537 views
-
-
THE PSYCHOLOGY OF MONEY MORGAN HOUSEL அவர்கள் எழுதிய புத்தகம் உலகம் முழுவதும் பேசும் பொருளாக இருந்தும் அண்மையில் நடிகர் அரவிந்தசாமி கோபிநாத்க்கு அளித்த யூரூயுப் பேட்டியின் பின் தான் இப்பொழுது தமிழ் சூழலிலும் அதிகமானோர்களால் இந்த புத்தகம் பேசும் பொருளாக மாறியுள்ளது _________________________________________________________________________________ **பணம் சார்ந்த உளவியல்** (The Psychology of Money) என்ற மோர்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய புத்தகம், பொருளாதார நிதி, முதலீடு, செல்வம் மற்றும் பணம் பற்றிய உளவியல் மனநிலைகளின் உண்மைகளை ஆராயும் தன்மை கொண்டது. அதில், பணம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எவ்வாறு மிகுந்த அறிவியல் தரவுகளினால் மட்டுமே இல்லை, நமது மனநிலைகளாலும்…
-
-
- 2 replies
- 668 views
-
-
இப்போ மார்க்கெட்ல புதுவிதமான இன்னொரு ஏமாற்று வியாபார யுக்திய தொடங்கி இருக்காங்க மக்களே. அது என்ன வியாபாரம்னா டிஷ்யூ பேப்பர் மேக்கிங் அப்படிங்குற புதிய விதமான வியாபாரம். இதுக்கு முன்னாடி பாக்கு மட்ட பிளேட், பேப்பர் கப்பு தயாரிப்பு, பேப்பர் பிளேட் தயாரிப்பு அப்படின்னு சொல்லி ஒன்னுக்குமே ஆகாத ஒரு இரும்பு சாமான நம்ம தலையில கட்டிக்கிட்டு 10 லட்ச ரூபா வாங்கிக்கிட்டு போயிருவாங்க. மாசம் நீங்க 5 லட்ச ரூபாய் வரைக்கும் பேப்பர் கப்பு தயாரிச்சு நீங்க வெளியே கொடுக்கலாம் அப்படின்னு சொல்லி நம்ம தலையில வச்சு கட்டிருவாங்க. ஆனா நடந்தது என்னன்னா நீங்க பேப்பர் கப், தட்டம் எல்லாம் தயாரிச்சிகிட்டு அதை நீங்களே வச்சிக்க வேண்டியது எவனும் வாங்க இருக்க மாட்டான். ஆனால் இவங்க மிஷின் தலையில் வைத்து க…
-
-
- 2 replies
- 583 views
- 1 follower
-
-
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். சென்னை பூவிருந்தவல்லியில் பார்வைத் திறன் குறைபாடு உடையோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த மார்ச் 3ஆம் தேதியன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை கணினி உதவியுடன் ஆனந்த் எழுதியுள்ளார். மாநில பாடத் திட்டத்தில் பார்வை மாற்றுத் திறனாளி ஒருவர் கணினி உதவியுடன் எழுதுவது இதுவே முதல்முறை. இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக செயலியின் உதவியுடன் அவர் தேர்வு எழுதியுள்ளார். கேள்விகளை ஒருவர் வாசித்தால் மட்டும் போதும். அதற்கான பதில்களை விரைவாக கணினியில் தட்டச்சு செய்கிறார் மாணவர் ஆனந்த். முன்னதாக தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இரு மாணவிகள் இதே முறையில் தேர்வு எழுதியுள்ளனர். வரும் ஆண்டில் தன்னைப் போலவே 10க்கும் மேற…
-
-
- 2 replies
- 231 views
- 1 follower
-
-
தமிழ் வளர்த்த மதுரையில் "திலீபன் தெரு" - வந்தது எப்படி? 1987ஆம் ஆண்டு திலீபனின் மரணம் நிகழ்ந்த வேளையில் எனக்கு வயது 18. பனிரெண்டாம் வகுப்பு முடித்த கால கட்டத்தில் தி.மு.க.வில் அடியெடுத்து வைத்தேன். திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நான் மதிக்கும் அண்ணன் பாண்டியன் அவர்கள் தான் எனது முதல் அரசியல் வழிகாட்டி. மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவில் உள்ள ஒரு தேனீர் கடையில் அமர்ந்து அரசியல் பாடம் நடத்துவார். என்னைப் போன்ற தி.மு.க. தோழர்கள் குறிப்பாக விருமாண்டி, இராசபாண்டி, பார்த்திபன், தனுசு கோடி ஆகியோர் அன்றைய அரசியல் நிலவரங்களை அவரிடம் கேட்டறிந்து தெளிவு பெறுவோம். ஒவ்வொரு நாளும் இரவு பனிரெண்டு மணிக்குத்தான் வீட்டிற்கே தூங்கச் செல்வோம். அப்…
-
- 2 replies
- 1.4k views
-
-
எழுத்தாளர் கருணாரன் 'NPP புரியாத புதிர் புரிந்தும் புரியாத பதில்' என்றொரு முகநூற் பதிவிட்டிருக்கின்றார். அதில் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார். 1. NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா? 2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்? 3. NPP யின் ஆதரவாளர்கள் இதைக்குறித்தெல்லாம் இன்னும் பேசாதிருப்பது ஏன்? 4. இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா? 5. NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட …
-
-
- 2 replies
- 317 views
-