கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
ஜனனி அக்கா உங்க ஈழத்தம்பி பேசுறன்.. ஊரில சிவனேன்னு சும்மா கிடந்த ஜனனி அக்கா ஐ பி சி ஜனனி அக்கா ஆச்சு இப்ப கடல் கடந்து பிக் பாஸ் போயாச்சு. அதுக்கு என்ன ஆச்சு பேச்சு வேணாம்.. நாம ஈழத் தமிழங்களாச்சே பாவப்பட்ட ஜென்மமாச்சே உங்க அக்கா அண்ணா ஊருக்காய் மடிஞ்சப்போ இந்த பிக் பாஸெல்லாம் கிக் பாஸா அடிச்சாங்க.. இப்ப மட்டும் என்னே பாசம் கூப்பிட்டு வைச்சு - உங்க தமிழை கலாய்க்கிறாய்ங்க ஏன்... உங்களையே கலாய்க்கிறாய்ங்க.. கூடவே.. ஈழத்தை அசிங்கம் பண்ணுறாய்ங்க.. தேவையாக்கா இந்த பிழைப்பு நமக்கு..!! ஏதோ போயிட்டீங்க கடைசி வரைக்கும் காசுக…
-
- 6 replies
- 3.4k views
-
-
என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் “மாருதி”அவர்களின் ஓவியம் சிறுவயதிலிருந்தே எனக்குப் பிடிக்கும். அவர்களின் இந்த உயிர்ப்போடிருக்கும் ஓவியநாயகிக்கு! படம் சொல்லும் கவிதை..! ********************** கொஞ்சிடும் கெஞ்சிடும் பொன்னழகே கொவ்வையின் பழந்தந்த மென்னுதடே மிஞ்சிடும் மேனியின் இருகனி ரசமே மிஞ்சாத இனிமையின் கொடியிடையே! கொத்தி இழுக்கின்ற மூக்குத்தி பூவே குறும்புகள் செய்கின்ற கண் இரு விழியே கருமேகச் சுருள் தந்த காதோர முடியே காலோடு கவிபாடும் கொலிசின்ரஒலியே! கரைதொட்டு பின் திரும்பும் கனிவான அலைபோல்-கால் தொடை பட்டு மேல்படரும் கரை போட்ட உடையே! கலகலக்கும்…
-
- 5 replies
- 3.4k views
-
-
தூரத்து கானல்போல தெரிகிறது ஒரு முகம் நெருங்க நெருங்க கானலும் காணாமல்ப் போக வெறுமைகள் தொடர்கிறது சிறுகச் சிறுக சேர்த்துவந்த துளிரெல்லாம் கருகிச் சருகாக மனம் வெதும்பித் தணிகிறது சொன்னவையும் கேட்டவையும் ஆழ்கடல் தூரத்தில் எதிரொலிக்க நியாயங்கள் கேட்டுக் கொல்வதோடு மட்டுமே இப்போது நாட்கள் கடக்கிறது பதிலில்லாக் கேள்விகள் கேட்பதால் வெறுமையே பதிலாக - ஒரு மனதில் கோபம் கொப்பளிக்கிறது விதி பிய்த்தெறிந்து புதிதாக எழுது கதையொன்று உலகத் தவறெலாம் சுரண்டியெடு - அதைத் தலைமேல் கொட்டிக்கொண்டு ஆர்ப்பரி கூடவே இரு தளிர் கொண்டு போ - உன் துயர் சேர்த்துகரைத்து ஊற்று அது அவற்றின் விதியென்று பறை ! விடியா விடியலாய் உதிக்கும் ஒரு உலகு - உனக்கு !
-
- 2 replies
- 3.4k views
-
-
என்... கருத்துக்கள்.....!!! சிறுபிள்ளைத்தனமாகவோ ..... குழந்தைத்தனமாகவோ ..... !!! செத்ததாகவோ...... இத்ததாகவோ........ இருக்கலாம்..... !!! என்றாலும் ஒருமுறை பாருங்கள்......! அதிலிருந்து உங்களுக்கு.... புதிய கருத்துக்கள்.. தோன்றலாம்..... !!! @ கவிப்புயல் இனியவன்
-
- 20 replies
- 3.2k views
- 1 follower
-
-
மஹாகவி உருத்திரமூர்த்தியின் சாதியம் தொடர்பான கவிதை எனது குரலில் https://youtu.be/no-2WHQ7ti0
-
- 10 replies
- 3k views
-
-
போன்சாய் என்பது ஜப்பான் மற்றும் சீனாவில் மரம் வளர்க்கும் முறையாகும். பெரிய மரங்களை சிறிய தொட்டிக்குள் வளர்க்கும் முறையாகும். ஆலமரம் கூட அப்படி வளர்க்கப்படுகிறது. அந்த எண்ணக்கருவை கொண்டு அமைக்கப்படும் ஒருவகை ஹைக்கூவே போன்சாய் கவிதை ஆகும். எனினும் ஹைக்கூவுக்கும் போன்சாய் ஹைக்கூவுக்கும் அடியேன் கூறும் வேறுபாடுகள். 1) ஹைக்கூவிற்கு ஒரு மரபு உண்டு. ஓரடி ஈரடி, ஈற்றடி, என்ற மரபு உண்டு. ஆனால் போன்சாய்க்கு அப்படி இல்லை. ஆனால் முடிவு திருப்பமாக அமையும். 2) ஹைக்கூவில் நகைச்சுவையாக அமைந்தால் அது சென்றியு ஆகிவிடும். இங்கு சமூக விழிப்புணர்வு, நகைச்சுவை எல்லாம். ஒன்றாகவே கருதப்படும். 3) ஹைக்கூவில் மொழிக்கலப்பு ஏற்பதில்லை. இங்கு அது தவறில்லை. இவை தவிர வே…
-
- 2 replies
- 2.9k views
-
-
தோற்றுப் போனவர்களின் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உள்ளன. உரு மறைந்த போராளிகள் போன்ற எங்கள் பாடல்களை வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம். காவிய பிரதிக்கிணைகள் பல புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும்…
-
- 0 replies
- 2.9k views
-
-
நேற்று(25.06.20) எங்கள் வீட்டில் இருந்து (நெதர்லாந்து) 20 கிலோமீற்றர் தூரத்தில்அமைந்துள்ள கெர்சன்பழமரத்தோட்டம் (நெதர்லாந்து மொழியில் Kers ஆங்கிலத்தில்Cherry) போய் நாங்களே புடுங்கி பழத்துக்கான பணம் கொடுத்து வந்தோம். வரும்போது ஊரின் பழய நினைவுகள் வந்து என்னை வாட்டியது… கெர்சன்பழமே?எனிக்கிடைக்குமா எங்கள் பழம்..! கைப்பான வேம்பதிலும் கனி மஞ்சல் பழம் இனிக்கும் வெய்யில் எரிகையிலும் வேம்பேறிப் பழம் தின்ற.. அக்கால நினைவு வந்து அழுகிறேன் இவ்வேளை. கரும்பனையின் பனம் பழத்தை “காடி”யினில் குளைத் தெடுத்து விரல் இடுக்கில் தேன் வடிய விரும்பி உண்ட.. அக்கால நினைவு வந்து …
-
- 18 replies
- 2.7k views
-
-
ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்அன்று நீ காணாமற் போனாய்..சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்ததுநீ இறந்திருக்கலாமெனபலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்காலமும் ஓடிப்போயிற்றுவழமை போலவே தியாகங்களும்நினைவுகளும் எமக்குள்மங்கிப்போயின..சுரணை அற்ற வாழ்வுக்காகதொலை தேசத்திற்கு நான்வந்திருந்தபோதுபனிப் பொழிவினிடையேஉன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!அது நிச்சயமாக நீதான்அதே கூர் மூக்கு,தெத்திப்பல்ஆயின்..நீ இறக்கவில்லை..!ஆனால் இறந்திருந்தாய்நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்காலைச் சவட்டியபடி,கல்லூரிக் காலங்களில்எப்படி எல்லாம் கலகலப்பாய்இருந்தாய்..! இப்போதோபேச்சுக் கொடுத்தாலும்பெரும் மெளனம் காக்கின்றாய்..முட்கம…
-
- 13 replies
- 2.7k views
-
-
வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது. வாய்கள் பல இருந்தும் மௌனத்தில் நோகின்றன. எரிக்கும் நெருப்படக்கி இனமொன்று வேகிறது எதுவரைக்கும் தான் முடியும்? எழும்போது உலகம் தெளியும். வளவுக் குயில்கள் குரலிழந்து போயுளன. வாசக் காற்றும் கந்தகத்துள் தோய்ந்துளது. உப்புக்கடல் எழுந்த ஒப்பாரிப் பேரலைகள் கொட்டிய மனித சாம்பலுடன் கரைந்துளன. முற்றத்து மலர்களை முட்செடிகள் கிழித்துளன. மூசிய பேய்க்காற்றில் ஊர்களெலாம் தீய்ந்துளன. செத்தகூடுகள், சிதைந்த உறுப்புகள் நச்சுக் காற்றினால் வீழ்த்திய மெய்களென வல்லரக்கத் தனத்திற்கு வெள்ளோட்டம் முடிந்துளது. எண்ணிப் பார்க்குமுன்னே ஏதேதோ நடந்துளன. சொந்தமண் இப்போது சோகத்தில் தவித்துளது. ஆறாப் பெருந்துயரில் அள்ளுண்ட …
-
- 15 replies
- 2.7k views
-
-
சில நேரங்களில் சில மனிதர்கள் இருக்கும் போது போற்றுவதும் இல்லாதபோது தூற்றுவதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். இருக்கும் போது வருவதும் இல்லாதபோது மறப்பதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். நல்லவர் போல் நடித்து நம்மை கீழே போட கதைப்பதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். பழைய கோத்திரம் பாடி பகிடியாய் ஏதோ சொல்லி எமை மிதிப்பர் சில நேரங்களில் சில மனிதர்கள். அவர்களை தெரியும் எமக்கு அவர்கள் அந்த இடத்து ஆட்கள் என்பர் சில நேரங்களில் சில மனிதர்கள் வாழும் போது தூற்றி விட்டு வாழ்வு போன பின் வந்து வையத்தில் வாழ் வாங்கு வாழ்ந்தார் என்று பொய் உரைத்து போற்றுவார்கள் சில நேரங்களில் சில மனிதர்கள் எல்லோருக்கும் உபதேசம் …
-
- 4 replies
- 2.6k views
-
-
நெருப்பு. எரிக்கிறதுதான் நெருப்பு நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும் ஆலயத்தில் எரிந்தால் தீபம் அடுப்புக்குள் எரிந்தால் சமையல் அகல்விளக்கில் எரிந்தால் வெளிச்சம் யாகத்தில் எரிந்தால் அக்நி சிதையில் எரிந்தால் சாம்பல் அடிவயிற்றில் எரிந்தால் பசி ஆகாயத்தில் எரிந்தால் மின்னல் அடர்வனத்தில் எரிந்தால் கோரம் மூச்சில் எரிந்தால் ஏக்கம் சுருட்டில் எரிந்தால் போதை தொடரும் இருட்டில் எரிந்தால் பாதை தெரியும் விழியில் எரிந்தால் காதல் இடையில் எரிந்தால் காமம் மனசில் எரிந்தால் பாசம் ஈருடலில் எரிந்தால் பரவசம் எரிக்கிறதுதான் நெருப்பு நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும்......! …
-
- 7 replies
- 2.6k views
-
-
அன்று.. புட்டுக்கும் தேங்காய் பூவுக்கும் கொழுவல்.. பரிகாரம் சொந்த மொழி பேசிய சொந்தவனை எதிரி என்று வரிந்து பொது எதிரியை நண்பனாக்கி காட்டிக் கொடுத்தோம் வெட்டிக் கொன்றோம் துரத்தி அடித்ததோம் கள்ளமாய் காணி பிடித்தோம்.. கிழக்கின் பூர்வகுடிகளை அகதியாக்கினோம் வடக்கில் பள்ளிவாசல்களில் ஆயுதங்கள் குவித்து ஆயத்தமானோம். அதற்குள்.. வரிகளுக்கு விளங்கிவிட கூட்டோடு காலி பண்ணி விட்டது அசைவது அசையாதது இழந்து புத்தளத்தை அடைந்தோம். அல்லாவின் நவீன தூதன் அஷ்ரப்பின் உதவியுடன் அடிப்படைவாத வெறிக்குள் மூழ்கினோம்.. ஹிஸ்புல்லாவின் வழியில் ஊர்காவல் படை அமைத்தோம்... ம…
-
- 7 replies
- 2.6k views
-
-
13 டிசம்பர் இடம்பெற்ற என் பிறந்த தினத்தில் ”பல்லாண்டு ஜெயபாலன்” எனக் கூறி என்னை வாழ்த்தியபடி யாழ் நேயர்களுக்கு. ”உங்க வயசென்ன அங்கிள்” ”எத்தனை தடவைதான் சொலித் தொலைப்பது என்வயசை. கேழ்” . நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் * தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். * ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றா…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஓட்டுப் போட்ட உரிமையில் கேட்டால் என்ன தப்போ..! (05.08.2020) தேர்தல் திருவிழா முடிந்து தேசம் அமைதியாகிறது உங்கள் கட்சி “தேர்களை” ஊர் ஊராய் கொண்டு சென்று வெண்றும், தோற்றும் விழா முடிவாயிற்று. ஒன்றாக நிற்க்காமைல் ஒவ்வொன்றாய் நின்றாலும் வெண்றவர்கள் நீங்கள் நாங்கள்… வேறு வேறு தமிழர் இல்லை தனிப்பட்ட குரோதங்கள் தலை தூக்கி ஆடாமல்-புல் பனிகாய பகலவனின் கதிர் போலே நீங்கள்-நெல் மணியாக அனைவருக்கும் நிதம் சோறு படைப் பீர். உள்ளக் குமுறலினால் உடைபட்டுப் போனாலும் மக்களை.. அள்ளக் குறையாத அன்போடு பாருங்கள். தெள்ளத் தெளிவாக-எம் …
-
- 14 replies
- 2.5k views
-
-
விழி விரித்தாய் பார்த்ததுமே பரவசத்தில் உடல் சிலிர்த்தாய் மோகமானாய் - பெரும் தாகத்தடன் கட்டுடைத்து என்னங்கம் மேய்ந்தாய் ஆசையோடு அழுத்தினாய் தழுவலிலே தளர்வறிந்தாய் தீண்டியும், நிமிண்டியும் – எனைத் திரள வைத்தாய். உன் விரல்களிடை என் இதழ் குவித்தாய் விதவிதமாய் இரசித்து உன்னுதடழுத்திக் கவ்வினாய் உரசலிலே தீ மூட்டி – எனை உன்மத்தம் கொள்ள வைத்தாய் என் தகிப்பில் தணல் வைத்தாய் உறிஞ்சினாய் , உள்ளிழுத்தாய் மினிக்கி ஆடும் எனை இழுத்து - உன் சுவாசத்துள் சிறைப்பிடித்தாய் தெரிந்தும்….. எனைச் சரணடைந்தாய் கணம் பிரிய மறுத்தபடி யாசகம் கேட்கிறா…
-
- 10 replies
- 2.5k views
-
-
பனியும் மழையும் இல்லா குளிர் கால இரவொன்றை கடும் காற்று நிரப்பிச் செல்கின்றது ... காற்றின் முனைகளில் பெரும் வாள்கள் முளைத்து தொங்குகின்றன எதிர்படும் எல்லாக் கனவுகளையும் வெட்டிச் சாய்கின்றன திசைகள் இல்லா பெரும் வெளி ஒன்றில் சூறைக் காற்று சன்னதம் கொண்டு ஆடுகின்றது புல்வெளிகளும் நீரோடைகளும் பற்றி எரிகின்றன தீ சூழும் உலகொன்றில் பெரும் காடுகள் உதிர்கின்றன காலக் கிழவன் அரட்டுகின்றான் ஆலகால பைரவன் வெறி கொண்டு ஆடுகின்றான் சுடலைமாடன் ஊழித் தாண்டவத்தின் இறுதி நடனத்தை ஆரம்பிக்கின்றான் அறம் பொய்த்த உலகில் அழிவுகள் ஒரு பெரும் யானையை போல் நடந…
-
- 11 replies
- 2.4k views
-
-
மண்டும் இருள் கலைந்து செங்கொண்டைச் சேவல் சிலிர்த்தெழுந்து கொக்கரக்கோவென்று தொண்டை கிழியத் துயிலெழுப்பும்! தோட்டத்தே கறவை மாடும் மடி நிரம்பி அம்மா என்றழைக்கும்! காக்கை கரையும் கருவானம் வெளுக்கும் பறவையினங்கள் சிறகடிக்கும் வண்டினங்கள் ரீங்காரமடிக்கும் குயிலினங்கள் பாட்டிசைக்கும்! மேற்கில் மதி மறையும்... கீழ்க் கதிரும் மேலெழும்பும் விளக்குமாற்றோசை தெருவெல்லாம் இரையும் கேணிக் கரையில் வளைக் குடங்கள் கிண்கிணிக்கும் அதிகாலைத் துயிலெழுந்து தையலும் கெண்டைக்கால் தெரிய கண்டாங்கி சேலை கட்டி துளசிமாடம் வலம் வரும்! விண்ணும் மண்ணும் உறவென வாழ்ந்து மண்ணின் சுவாசமே உயிர் சுவாசமாய் நேசித்து கதிரெழு முன் இருளுடையில் நீர் குடைந்திட முத்து மணிகளைப் போல் நெல்மணிகளை விதைத்திட பல …
-
- 7 replies
- 2.4k views
-
-
மரம் சொன்ன குறள் நன்றி மறப்பது நன்றன்று.. *********************** நான் பெரிய மரமாய் இருந்தாலும் என்னில் கூடு கட்டி குடி வாழும் பறவையினத்தை துரத்தாமல் மதிக்கிறேன். என்னை இதே இடத்தில் வாழவைத்தது ஒரு பறவை. அதன் எச்சத்தில் இருந்தே நான் மரமானேன். மனிதர்களே நீங்களும் யோசியுங்கள் ஏதோ ஒரு வளியில் யாரோ ஒருவரின் உதவி கிடைத்திருக்கும். அதை மறக்காதே என இந்தத் திருக்குறளை சொல்லி சிலுப்பியது மரம் …
-
- 6 replies
- 2.4k views
-
-
-
- 5 replies
- 2.4k views
-
-
நாய் ஒடுக்கி வைத்தாலும் நியாயம் பேசும் வல்லமைகள்... பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே! இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம். ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்? மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது? மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும் கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்? கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும், கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்? கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம் செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே! அன்னை திருவாசல் அகலத்திறந்து நீ முன்னை குதித்தநிலம் உன் மூத்த தாய் அல்லவா? அவள் வண்ணத் திருமேனி வலியேந்தி நல…
-
- 6 replies
- 2.2k views
-
-
TRIBUTE TO KALAIGNARகலைஞர் அஞ்சலி- வ.ஐ.ச.ஜெயபாலன்.எங்கள் போர்கால நெருடல்களை மறந்து. காலமெல்லாம் ஈழத் தமிழருக்கு அரணாய் அவர் நின்றதை நினைந்து அஞ்சலிக்கிறேன், கலைஞரின் புகழ்பூத்த காலத்து இயல் இசை நாடக செம்மொழியாய் தமிழ்கூறும் நல்லுலகமெல்லாம் தமிழ் வளர தமிழகத்தில் அரசு இயற்றிய ஆற்றலை வியந்து கலங்குகிறேன்.குமரியில் காலமெல்லாம் தமிழகத்தை தின்ற கடற்கோளும் தலைபணிய வள்ளுவனை எல்லைக் காவலாய் வைத்த மாண்புகளைப் போற்றி மனது நெகிழ்கிறதேஉன்னை வழியனுப்ப வந்து நீலமலையெங்கும் தேன்சிந்தி அழுகின்ற குறிஞ்சிமலர்களுடன் கண்சிந்தும் கவிஞன் நான். ஏற்கனவே உலகத் தமிழர் மனங்களிலே புதைதுவிட்டான். இனி அவனை எங்கே இடுவதென ஏங்குவதேன்? செம்மொழிப் பூங்கா அவனது நினைவிடமாய் என்றும் இருக்குமே. அண்ணா நூலகத்தைவி…
-
- 12 replies
- 2.2k views
-
-
ஒரு சோடி அணுக்கவிதை 💙💙💙 உன் சிரிப்பில் கருகாமல்..... நெருப்பில் கருகியிருக்கலாம்.... காயம் தான் இருந்திருக்கும்.... வலி காலத்தால் இறந்திருக்கும்.... 💚💚💚 நீ பிரிந்து விட்டாய்... என்று பலமுறை.... சொல்லிவிட்டேன்.... சொறனை.... கெட்ட என் இதயம்... நீ வருவாய்யென..... கதவை திறந்துவைத்து... காத்துக்கொண்டு இருக்கிறது......! 💙💙💙 இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இலங்கை யாழ்ப்பணம்
-
- 15 replies
- 2.2k views
-
-
"எதைத் தேடி என்ன பயன் ?" "அறிவைத் தேடி பள்ளிக்கூடம் போனேன் பட்டம் வாங்க பல்கலைக்கழகம் சென்றேன் வேலை செய்ய நிறுவனம் நுழைந்தேன் எதைத் தேடி என்ன பயன் ?" "அழகை ரசிக்க ஆசை வேண்டாமா? அன்பைப் பகிர நண்பி வேண்டாமா? இன்பம் கொள்ளக் காதல் வேண்டாமா? கணவன் மனைவி உறவு வேண்டாமா?" "உறவு கொள்ள காமம் தேடினேன் உள்ளம் பறிக்க காதல் கொட்டினேன் வாழ்வு முழுமையாக மழலை வேண்டினேன் எதைத் தேடி என்ன பயன்?" "வயது போக முதியோர் இல்லம் தேடிய சொத்துக்கு பிள்ளைகள் சண்டை மகிழ்ச்சி தந்த வனப்பும் போச்சு மஞ்சத்தில் படுத்தும் நித்திரை இல்லை?" …
-
- 0 replies
- 2.2k views
-
-
கோடை (காலம்) இங்கு -------------------- கோடை கால இரவுகள் அழகானவை பகலில் உருகிய வெயிலை இருட்டின் போது கசிய விடுபவை நிலவு எறிக்கும் கோடை இரவொன்றில் சாலை கடக்கும் ஒரு பூனையை போல கவனமாக மழையும் வந்து போகும் மழை வந்த சுவடுகளில் புல்கள் முழைக்கும் புல் வந்த வேர்களை பற்றி மண் புழுக்கள் மேலே வரும் பின் அதை உண்ண மைனாக்கள் அலைந்து திரியும் அதை பிடிக்க வரும் பிறாந்துகளால் வானம் அதிரும் குருவிகள் கூடு கட்டும் குலவும் மழைக் குளிரில் ஒன்றை ஒன்று கூடும் முத்தமிடும் முட்டையிடும் குஞ்சு பொரிக்கும் அவற்றின் கீச்சிடலில் என் காலை உதிக்கும் பின் வளவில் எப்பவோ நட்டு வைத்த …
-
- 14 replies
- 2.2k views
-